Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனி சென்னையில் நம்மால் வீடு மனை வாங்க முடியுமா? - உண்மையில் ரியல் எஸ்டேட் துறை வளர்கிறதா அல்லது தேய்கிறதா?
+3
சதாசிவம்
பூவன்
ராஜு சரவணன்
7 posters
Page 1 of 1
இனி சென்னையில் நம்மால் வீடு மனை வாங்க முடியுமா? - உண்மையில் ரியல் எஸ்டேட் துறை வளர்கிறதா அல்லது தேய்கிறதா?
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தகவல் நுட்ப துறையின் அசுர வளர்ச்சியை பயன்படுத்தி, வர்த்தக நிறுவனங்கள், தொழில் துறை நிறுவனங்கள், சந்தைகள் போன்றவை வளர்ந்தாலும் குறிப்பாக ரியல் எஸ்டேட் துறை தான் பெரிய அளவில் வளர்ச்சியும் கண்டது நல்ல பணமும் புரண்டது.ஆனால் தற்பொழுது ரியல் எஸ்டேட் விலைவாசியை பார்க்கும் போது சென்னையில் நடுத்தர சம்பள மக்கள் தங்களுக்கென ஒரு மனையோ அல்லது இடங்களோ வாங்குவது என்பது முடியாத காரியமாகி விட்டது. அதேபோல் வங்கிகள் மூலம் கடன் பெற்றோ, வெளியில் கடன் வாங்கியோ இடத்தில் முதலீடு செய்து பிற்காலத்தில் நல்ல விலைக்கு விற்கலாம் என்ற ஒரு சாராரின் கனவும் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி வருகிறது என்று தான் கூறவேண்டும்.
சென்னையில் சொத்துக்களை வாங்குவதாக இருந்தால் இந்த பதிவை படித்துவிட்டு பின்பு முடிவு செய்யுங்கள். சென்னை ரியல் எஸ்டேட் துறை உண்மையில் வளர்கிறதா அல்லது தேய்கிறதா?
சற்று சிந்தித்து பாருங்கள் - வங்கியில் லட்ச கணக்கில் கடன்வாங்கி அதை பல ஆண்டுகளாக உத்திரவாதம் இல்லாத வேலையை வைத்து கொண்டு வங்கி கடனை திரும்ப அடைக்க முடியுமா? - இதற்கு உங்களால் என்ன சொல்லமுடியுமா?
1) தற்போதுள்ள சூழ்நிலையில் மனைகளின் சந்தை விலைப்படி, நடுத்தர சம்பளம் வாங்கும் வகுப்பினர் சொத்துகளையோ, நிலம் அல்லது வீடுகளோ வாங்க முடியும் என்றால் அது சென்னையின் புறநகர்களில் மற்றும் எல்லைகளில் மட்டுமே. அவ்வாறு வாங்கினாலும் அங்கிருந்து வேலை நிமிர்தமாகவோ,அன்றாட தேவைகளுக்காகவோ அல்லது பொருள்கள் வாங்குவதற்காகவோ நீங்கள் கடிப்பாக சென்னையின் மைய பகுதிக்கு போக்குவரத்து கெடுபிடிகளை கடந்து நேரத்தை விரயமாக்கி தான் வரவேண்டும். அதனால் ஏற்படும் கால விரயம் மற்றும் ஆற்றல் விரயத்தை சற்று எண்ணி பார்க்க வேண்டும்.
2) பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தனி மனைகளை விற்று கிடக்கும் லாபத்தைவிட, அடுக்கு மாடி குடியிருப்புகளை விற்று அதன் மூலம் கிடைக்கும் லாபம் அதிகம் என்பதால் அவர்கள் அவற்றை மட்டுமே கட்டி விற்க விரும்புகின்றனர் - ஏற்கனவே சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு நடுவில் உங்கள் குடியிருப்பின் தண்ணீர் தேவைக்காக மாதம் மாதம் செலவு செய்ய முடியுமா ?
3) சரி நீங்கள் குடியிருக்கவோ, வாடகைக்கோ விடவோ மனைகளை/இடங்களை வாங்கவில்லை, ஒரு முதலீடு போல் வாங்கிபோட்டு பின்பு நல்ல விலைக்கு விற்கலாம் என்று வாங்குகிறீர்கள் என்று வைத்துகொள்வோம். - சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் சொத்து வாங்கியவர்கள் வேண்டுமென்றால் சொத்தின் சந்தை மதிப்பு ஏறக்ககுறைய 20 இருந்து 300 % இருக்கும் போது விற்கலாம்.
ஆனால் வங்கிகளில் கடன் பெற்று சொத்துக்களை வாங்குவோர், தற்போதுள்ள வங்கிகளின் வட்டி விகிதபடி கடனை திருப்பி அடைக்கும் போது வருடம் ஒன்றுக்கு ஏறத்தாழ 10-12% பணத்தை கூடுதலாக கட்டி தொலைய வேண்டும். ஒருவேளை வருங்காலங்களில் சொத்தின் ஆண்டு மதிப்பு 10% கீழ் குறைந்தால் கடன் கட்டிய பணத்தின் மதிப்பு வாங்கிய சொத்தின் மதிப்பு விட அதிகமாக இருக்கும். அது உங்களுக்கு மேலும் நட்டத்தையே ஏற்படுத்தும்.
4) நாள்தோறும் அதிகரித்து வரும் ரியல் எஸ்டேட் மோசடி புகார்கள்/வழக்குகள் - எவ்வளவு புகார்களுக்கு/வழக்குகளுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டது? சொல்லுங்கள் பார்ப்போம்.
5) தகவல் நுட்ப துறையின் அசுர வளர்ச்சி காரணமாக தமிழ்நாட்டின் பல ஊர்களில் இருந்தும், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு (சென்னை) வேலை தேடி/செய்து வரும் இளைஞர்களுக்கு வீட்டை கட்டி வாடகை விடுவதின் மூலம் அதிகமாக சம்பாதிக்கலாம் என்று பலர் சொத்துக்களை வாங்குகின்றனர். இது முற்றிலும் தவறு - எவ்வளவு த.நு (IT) நிறுவனங்கள் தாங்கள் வேலைக்காக எடுத்த நபர்களுக்கு 6 மாதங்கள்/ஒரு வருடங்கள் ஆகியும் இன்னமும் நியமன ஆணை(Appointment Order) வழங்காமல் இருப்பது உங்களுக்கு தெரியுமா?, பல நிறுவனகள் இதற்கு மேல் ஆட்கள் தேவை இல்லை என்று ஆட்கள் எடுப்பதை நிறுத்தி வைத்துள்ளது தெரியுமா?, அமெரிக்காவை மட்டுமே பெரும்பாலும் நம்பி இருக்கும் த.நு (IT) துறையில் தற்போது நிலவும் ஆணைகளின்(Order) மந்த நிலை காரணமாக தினமும் பலரும் வேலை இழப்பதும், நீக்கபடுவதும் தொடர்ந்துகொண்டிருப்பது உங்களுக்கு தெரியுமா? , கூடிய விரைவில் இந்த துறை சார்ந்த வேலையில்லா/வேலையிழந்த பணியாளர்கள் அல்லது பட்டதாரிகள் எண்ணிக்கை அதிகரிக்க போவது தெரியுமா?
6) புதிதாக வேலையில் சேர்பவர்கள் கூட வங்கியில் கடன் வாங்கி சென்னையில் வீடு மனைகளை வாங்கலாம் என்று சொல்கிறார்கள்(தினமும் பல விளம்பரங்களை தொலைகாட்சிகளிலும், சாலைகளிலும் பார்க்கலாம்) - சென்னையின் நிலவும் வாழ்க்கை செலவீனத்தில் மாதம் சராசரியாக Rs 20000 வருமானம் வாங்கும் புதியவர்கள் எப்படி வாழ்கையை சமாளித்து கொண்டு மாதமாதம் Rs 10000 வங்கி கடன் தவணை கட்டமுடியும். அப்படியே வாங்கலாம் என்று நினைத்தாலும் நாம் விருப்பத்திற்கு ஏற்ப வாங்க முடியுமா என்றால் முடியாது. மாத தவணை என்ற பெயரில் வரும் பூதம் மாதமாதம் உங்களை கதற வைத்துவிடும்.
சரி இனிவரும் காலங்களில் ரியல் எஸ்டேட் துறையில் என்ன நடக்கும், விலைகள் குறையுமா?
சொல்ல முடியாது. இந்தியாவில் இந்த துறை சரியான முறையில் சீற்படுத்தபடவில்லை. இந்த துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு எந்த படிப்போ, அனுபவமோ, அறிவோ தேவை இல்லை, அரசியல் பலம் மட்டும் இருந்தால் போது எதையும் செய்யலாம். இப்போது சென்னையில் சில சாதாரண வீடுகளே மாளிகைகள்(Villa) என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் இந்த துறையில் ஈடுபட்டிருக்கும் பேர்வழிகள் பெரும்பாலும் கணக்கில் வராத கள்ள பணத்தை இந்த தொழில் முதலீடு செய்வதாலும், சாதரணமாகவே வசதி படைத்தவர்களாக இருப்பதாலும், நாம் சொல்லும் விலைக்கு வேறுவழியில்லை என்று மக்கள் வாங்க முற்படும் வரை காத்திருக்கலாம் என்ற எண்ணத்தில் கூட இருக்கலாம்.
அதிகரித்து வரும் வாழ்க்கை செலவீனங்கள், மோசமான வாழ்க்கை நிலை, அதிகரித்து வரும் வெப்பம், தண்ணீர் பற்றாகுறை, மின்சார பற்றாகுறை, அடிப்படை வசதிகள் செய்து தருவதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் தடைகள், ரியல் எஸ்டேட் அதிபர்களின் பேராசை, அரசியல் தலைகளின் தலையீடு போன்ற காரணங்களால் வீடோ, மனைகளோ,சொத்துக்களோ இப்போதைக்கு சென்னையில் வாங்குவது என்பது நல்லதல்ல.
Re: இனி சென்னையில் நம்மால் வீடு மனை வாங்க முடியுமா? - உண்மையில் ரியல் எஸ்டேட் துறை வளர்கிறதா அல்லது தேய்கிறதா?
இது தான் அண்ணா இன்றைய உண்மை நிலை , பணம் உள்ளவர் கிடைக்கும் நிலங்களை கையகபடுத்தி கொண்டு தங்களால் எவ்வளவு முடிந்த வரை விலை ஏற்றி விற்க்கமுடியுமோ அவ்வளவு விலை வைத்து விற்கிறார்கள் ...இந்த துறையில் ஈடுபட்டிருக்கும் பேர்வழிகள் பெரும்பாலும் கணக்கில் வராத கள்ள பணத்தை இந்த தொழில் முதலீடு செய்வதாலும், சாதரணமாகவே வசதி படைத்தவர்களாக இருப்பதாலும், நாம் சொல்லும் விலைக்கு வேறுவழியில்லை என்று மக்கள் வாங்க முற்படும் வரை காத்திருக்கலாம் என்ற எண்ணத்தில் கூட இருக்கலாம்.
சென்னையில் மட்டும் இல்லை எங்கும் வாங்கும் நிலமை இல்லை , அதே போல வாடகை வீடும் இதுபோல தான் மாதம் மாதம் வாடகை உயர்த்துவது , தண்ணீர் கட்டணம் , மின்சார கட்டணம் , பராமரிப்பு கட்டணம் , பெயிண்ட் அடிக்க கட்டணம் என வசூலித்து கொண்டே போகிறார்கள் , இந்த நிலையே நீடித்தால் வாடகை வீடும் அதே நிலைமை தான் ....அதிகரித்து வரும் வாழ்க்கை செலவீனங்கள், மோசமான வாழ்க்கை நிலை, அதிகரித்து வரும் வெப்பம், தண்ணீர் பற்றாகுறை, மின்சார பற்றாகுறை, அடிப்படை வசதிகள் செய்து தருவதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் தடைகள், ரியல் எஸ்டேட் அதிபர்களின் பேராசை, அரசியல் தலைகளின் தலையீடு போன்ற காரணங்களால் வீடோ, மனைகளோ,சொத்துக்களோ இப்போதைக்கு சென்னையில் வாங்குவது என்பது நல்லதல்ல
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இனி சென்னையில் நம்மால் வீடு மனை வாங்க முடியுமா? - உண்மையில் ரியல் எஸ்டேட் துறை வளர்கிறதா அல்லது தேய்கிறதா?
படிப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது, பல லக்ஷம் கொடுத்து வாங்குபனை அலைக்கழித்த ஒன்றுக்கும் உதவாத புரோக்கர்கள் இப்போது வேறு வேலை பார்க்கத் தொடங்கி விட்டனர்....எத்தனை நாளைக்கு கொள்ளை லாபம் அடிப்பது
உண்மையைச் சொல்லப்போனால், இப்பொழுது இத்துறை படு பாதாளத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டு எங்க ஏரியாவில் 1.5 கோடி என்று சொன்ன இடம் தற்பொழுது 90-95 லக்ஷத்துக்கு போராடுகிறது...வாங்குபவர்கள் சற்றுப் பொறுத்தால் , இது மேலும் சரிவடையும்...
உண்மையைச் சொல்லப்போனால், இப்பொழுது இத்துறை படு பாதாளத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டு எங்க ஏரியாவில் 1.5 கோடி என்று சொன்ன இடம் தற்பொழுது 90-95 லக்ஷத்துக்கு போராடுகிறது...வாங்குபவர்கள் சற்றுப் பொறுத்தால் , இது மேலும் சரிவடையும்...
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: இனி சென்னையில் நம்மால் வீடு மனை வாங்க முடியுமா? - உண்மையில் ரியல் எஸ்டேட் துறை வளர்கிறதா அல்லது தேய்கிறதா?
புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வூடு கட்டிக்குவோம் என்று வட்டம் மாவட்டம் எல்லாம் கவலை இல்லாம இருக்காங்க - நமக்குத்தான் இந்தக் கவலை எல்லாம்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இனி சென்னையில் நம்மால் வீடு மனை வாங்க முடியுமா? - உண்மையில் ரியல் எஸ்டேட் துறை வளர்கிறதா அல்லது தேய்கிறதா?
நல்ல பதிவு ....பகிர்வுக்கு நன்றி ராஜீ
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இனி சென்னையில் நம்மால் வீடு மனை வாங்க முடியுமா? - உண்மையில் ரியல் எஸ்டேட் துறை வளர்கிறதா அல்லது தேய்கிறதா?
நல்ல பதிவு ....பகிர்வுக்கு நன்றி ராஜீ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இனி சென்னையில் நம்மால் வீடு மனை வாங்க முடியுமா? - உண்மையில் ரியல் எஸ்டேட் துறை வளர்கிறதா அல்லது தேய்கிறதா?
வாங்க, எங்க நாட்டுக்கு வாங்க, நல்ல வீடுகள் நியாயமான விலையில் வாங்கலாம். ஆனா எதுக்கும் கொஞ்சம் காசு கூடவே எடுத்து வாங்க.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Similar topics
» சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல்
» சென்னையில் நிலம் வாங்கி புலம்பும் சிங்கப்பூர் தமிழர்கள்: ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது புகார்
» கோட்டு சூட்டு போட்ட ரியல் எஸ்டேட் அதிபாராயிட்டேன் -
» ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்!
» 1962 இந்திய-சீனா போரின் 60 ஆண்டுகள்: இந்தியா எப்போதாவது சீனாவை மன்னிக்கவோ அல்லது நம்பவோ முடியுமா?
» சென்னையில் நிலம் வாங்கி புலம்பும் சிங்கப்பூர் தமிழர்கள்: ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது புகார்
» கோட்டு சூட்டு போட்ட ரியல் எஸ்டேட் அதிபாராயிட்டேன் -
» ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்!
» 1962 இந்திய-சீனா போரின் 60 ஆண்டுகள்: இந்தியா எப்போதாவது சீனாவை மன்னிக்கவோ அல்லது நம்பவோ முடியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|