ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு!

Go down

இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு! Empty இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு!

Post by Mohan Pandiyan Mon Aug 19, 2013 10:44 am

இந்தக் கட்டுரை காமலோகமும், தமிழ் மன்றமும் ஒரே நபராலேயே நடத்தப்படுகிறது என்ற ஆதாரத்தை வெளியிட்ட தளத்தில் இடம்பெற்றிருந்தது. ஆனால், அதில் சில அருவருக்கத்தக்க தலைப்புகள் கொண்ட செய்திகள் இருப்பதால் அந்தத் தளத்தின் இணைப்பை இங்கே கொடுக்கவில்லை. மிக முக்கியமாக நமது ஈகரையைப் பற்றிய அவதூறான செய்திகளும் அடகியிருக்கிறது. கூகுளில் "ஈகரை தமிழ் களஞ்சியம்" என்று தேடினால் அந்தத் தளத்தின் பதிவுகளும் முதல் பக்கத்தில் காட்டப்படுகிறது. இதற்காகவே அத்தகைய தலைப்புகளை வைத்துள்ளார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால், ஒட்டுமொத்தமாக அந்தத் தளத்தின் தகவல்களை மறுக்கும் மனநிலையின் நான் தற்போது இல்லை. இந்தக் கட்டுரை அர்த்தங்கள் நிறைந்ததாக இருப்பதனால் இங்கே பதிவு செய்கின்றேன்.

அன்பு நண்பர்களே,

இன்றைய நிலையில் இணையம் என்பது மக்களின் வாழ்க்கையில் ஒன்றிப்போன ஒரு தொலைதொடர்பாகும். இணைய வசதியைப் பயன்படுத்துவது ஒரு பேசனாகவும் ஆகிவிட்டது. பல துறை சார்ந்த பெண்களும், மாணவ மாணவிகளும் மிகவும் சாதாரணமாக இணையத்தில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதனால் ஆக்கம் அதிகமாக இருந்தாலும், ஆக்கத்தினை மழுங்கச்செய்யும் ஆபத்தும் அதைவிட அதிகமாகவே நிரைந்திருக்கிறது.

ஆபாசம், மற்றும் கீழ்த்தரமான செய்திகளும், கதைகளும் அடங்கிய தளங்கள் இணையத்தில் மிகவும் அதிகமாக பரவிக் கிடக்கிறது. குறிப்பாக தமிழில் உள்ள கீழ்த்தரமான தளங்கள் அனைத்தும் 2000 ஆவது ஆண்டிற்கு ஒட்டியதாகவே தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

கீழ்த்தரமான செய்திகள் அடங்கிய தளத்தினை கையாளும் அனைவருமே தமிழுக்காக பாடுபடுவதாகவும், தமிழைக் காப்பாற்றப் போவதாகவுமே தங்களை விளம்பரம் செய்து கொள்வார்கள். இதற்காகவே தூய்மையான தமிழ் செய்திகளும், கட்டுரைகளும் அடங்கிய பதிவுகளை பிற தளங்களில் இருந்து காப்பி பேஸ்ட் செய்து கொள்வார்கள். இது மிகவும் முக்கியமான தகவல் என்பதை நன்றாக கவனித்து அறிந்து, புரிந்து கொள்ளுங்கள். அதாவது தமிழைக் காப்பாற்றப் போவதாக புலம்பும் அனைவரும் பிற தளங்களில் உள்ள செய்திகளை காப்பி பேஸ்ட் மட்டுமே செய்து கொண்டிருப்பார்கள்! அதாவது "தமிழ்மன்றம்" (www.tamilmantram.com ) என்ற தளத்தினைப் போல.

ஏன் இப்படி செய்கிறார்கள்? கீழ்த்தரமான செய்திகளை வெளியிடும் நபர்கள் ஏன் தூய்மையான தமிழ் தளத்தினையும் நடத்த வேண்டும்? தங்களது கீழ்த்தரமான தளத்திற்கு வந்து செய்திகளை படிப்பது யார்? அவர்களின் விருப்பம் என்ன? என்று இணையத்தில் உலவும் பெண்களின் மனநிலையை புரிந்து கொள்வதற்காகவே அவ்வாறு செய்கிறார்கள்.

அதாவது கீழ்த்தரமான கதைகள் அடங்கிய தளங்கள் அனைத்துமே பாரம் எனப்படும் கருத்துக்களமாகவே இருக்கும். இதுபோன்ற தளங்களில் வருகையாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் IP முகவரி காட்டப்படும். இந்த IP முகவரிதான் நீங்கள் யார் என்பதை அவர்களுக்கு அடையாளம் காட்டும்.

உதாரணமாக ஒருவர் கீழ்த்தரமான செய்திகள் கொண்ட தளத்தினையும், சாதாரண தமிழ் தளத்தினையும் நிர்வகித்து வந்தால். கேவலமான தளத்தினைப் பற்றி யாரோ செய்திகள் வெளியிடுவதைப்போல தானே ஒரு செய்தியை வெளியிடுவார். பிறகு அவரே அதை கண்டித்தும், எச்சரித்தும் பிரச்சினையை பெரிதாக்கி அனைவருக்கும் தெரியப்படுத்துவார். நாம் என்ன செய்வோம், உடனே அந்தக் கேவலமான தளத்திற்கு செல்லும் இணைப்பை அழுத்தி அந்த தளத்திற்கு சென்று பார்ப்போம். அப்படிப் போகும்போது நமது IP முகவரி இரண்டு தளத்திலும் காட்டப்படும். நாம் உடனே அங்குள்ள செய்திகளைப் பார்த்து வெளியேறிவிட்டால் பிரச்சினை இல்லை. ஆனால், அங்குள்ள செய்திகளை வரிசையாக திறந்து படித்துக் கொண்டிருந்தால்  நாம் எந்தெந்த பகுதிகளில் உள்ள கதைகளை எவ்வளவு நேரம் படிக்கின்றோம் என்பதை அந்தத் தளத்தின் நிர்வாகியால் அறிந்து கொள்ள முடியும். பிறகு நமக்கு இது போன்ற செய்திகள் அடங்கிய தகவல்கள் பிடிக்கிறது என்பதை அறிந்து கொள்வார்கள்.

அதன் பிறகு தமிழ் என்ற போர்வையில் இருக்கும் தளத்தில் இணைந்திருக்கும் பெண் உறுப்பினர்களிடம் அவர்கள் சாதாரணமாக இரட்டை அர்த்தங்களில் உரையாடுவார்கள். நாளடைவில் நெருங்கிப் பழகுவார்கள். பிறகு ஆசை வார்த்தைகள் கூறி நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு பெண்களை நிர்வாணப் புகைப்படங்கள் எடுப்பதும், வீடியோ காட்சிகள் தயாரிப்பதும் போன்ற பல செயல்களுக்கு அப்பாவிப் பெண்களை பயன்படுத்தி அவர்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கி சீரழிக்கத் தொடங்குவார்கள். பிளாக்மெயில் செய்து மிரட்டி தங்களின் காரியங்களை சாதித்துக் கொள்வார்கள்.

இப்படிப் பட்டவர்கள் தங்களது அந்தரங்கத் தோழியாக ஒரு சில பெண்களையும் வசியம் செய்து வைத்திருப்பார்கள். வழிக்கு வராத பெண்களிடம் அவர்களைக் காட்டி அல்லது அவர்கள் மூலம் பேச்சுக் கொடுத்து வழிக்கு கொண்டுவருவார்கள்.

எனவே தமிழ் கருத்துக்களங்களில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். நீங்கள் இணைந்திருக்கும் தளங்களில் இருந்து காரணம் இல்லாமலோ, அல்லது சம்மந்தம் இல்லாமலோ யாராவது பெண்கள் உங்களிடம் தொடர்புகொள்ள முயற்சித்தால் அதை தவிர்த்து விடுங்கள். குடும்பப் பெண்களுக்கு கருத்துக்களத்தில் வேலை இல்லை என்பதே எனது கருத்து.

நாம் இணைந்திருக்கிறோம் என்பதற்காக முட்டாள்தனமாக பிறருக்கு வக்காலத்து வாங்காதீர்கள். "தமிழ் மன்றம்" என்ற தளம் புனிதமானது என்று என்னிடம் வாதாடியவர்கள் இன்று ஆதாரம் காட்டியதும் நம்பமுடியவில்லை என்று பின்வாங்குகின்றனர். ஒரு தளத்தின் தலைமை நடத்துனரை விமர்சனம் செய்தபோது, அவர்மீது அவதூறு பரப்புகிறேன் என்று என் மீது பழி சுமத்தியவர்கள் இப்போது அவருக்கும் தங்களுக்கும் தொடர்பே இல்லை என்று சித்தரிக்க முயற்சி செய்கின்றனர். இன்னும் பயங்கரமான ஆதாரங்களை எல்லாம் நான் இங்கே தொடர்ந்து வெளியிடப் போகிறேன். அப்போது அவர்கள் என்ன பேசப் போகிறார்கள். எப்படி மறுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

எனவே நண்பர்களே, உங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகள், அல்லது குடும்ப உறுப்பினர்கள் இங்கே சொல்லப் பட்டிருக்கும் கருத்துக்களங்களில் உறுப்பினராக இருந்தால் அவர்களை எச்சரியுங்கள். அவர்களின் தனிமடல்களை பார்வையிடுங்கள். பதிவுகளையும், பின்னூட்டங்களையும், நடவடிக்கைகளையும் கவனியுங்கள். பெண்கள் எளிதில் ஏமாறக் கூடியவர்கள். கவனம் தேவை.

சில கருத்துக்களங்களில் நிர்வாகிகளைத்தவிர வேறு உறுப்பினர்களே இல்லை என்பதை உணருங்கள். நிர்வாகிகள் என்று சொல்லப்படும் கயவர்கள் மட்டுமே தினம் தினம் உறுப்பினர்களை உருவாக்கி உங்களுடன் பல்வேறு நபர்களைப் போல உங்களோடு உரையாடிக் கொண்டும், உங்களைப் பாராட்டிக்கொண்டும் இருக்கிறார்கள் என்பதை உணருங்கள்.

ஒரு நேர்மையான செய்தித்தளம், அல்லது கருத்துக்களம் என்றால் சொந்தமாக தகவல்களை சேகரித்து வெளியிடவேண்டும். ஆனால், இணையத்தில் இருக்கும் பல முன்னணி தளங்கள் எல்லாம் பிற தளங்களில் உள்ள தகவல்களை மட்டுமே பரிமாறிக் கொண்டிருப்பார்கள். இவ்வாறு இயங்கும் தளங்களில் மிகவும் கவனமாக இருங்கள். பல முன்னணி பிரபலமான சில பெண் உறுப்பினர்களைக் காட்டி உங்களை ஈர்க்கப் பார்க்கலாம். பல பெண் உறுப்பினர்கள் இருப்பது போல சூழ்ச்சிகள் செய்து உங்களை அங்கே இணைந்திருக்க முயற்சி செய்யலாம்.

பதிவர்கள் சந்திப்பு, பரிசுப்போட்டி விழா என்றெல்லாம் நம்மை பிரபலப்படுத்துவதாக நாடகம் நடத்தலாம். பத்திரிகையில் தங்கள் தளத்தின் செய்தியை இடம்பெறச்செய்து அதை மிகைப்படுத்தி நம்மை ஈர்க்க வழி செய்வார்கள். 500 ரூபாய் இருந்தால் எந்த செய்தியையும் பத்திரிகையில், செய்தித்தாளில் இடம்பெற செய்யலாம். 1000 ரூபாய் இருந்தால் உங்கள் கட்டுரைகளை வார இதழ்களில் இடம்பெற செய்யலாம் என்பதை உணருங்கள். பிரபலமான நீங்கள் அத்தகைய தளங்களில் இணைந்திருப்பதால் யாரோ அப்பாவிப் பெண்கள் ஏமாற்றப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை எப்போதும் கவனத்தில் வைத்திருங்கள்.

எங்களுக்கு யாருடைய வளர்ச்சியிலும் பொறாமை இல்லை. நாங்கள் பொறாமைப்படும் வகையில் பிறருக்கு திறமை இருப்பதாகவும் ஆதாரமில்லை. இந்தத் தளத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுமக்களுக்கும், அப்பாவிப் பெண்களுக்கும் ஒரு எச்சரிக்கையாகவே இருக்கும்.
Mohan Pandiyan
Mohan Pandiyan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 18/08/2013

Back to top Go down

இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு! Empty Re: இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு!

Post by Mohan Pandiyan Mon Aug 19, 2013 11:16 am

ஈகரையின் சிறந்த நடவடிக்கைக்கு நன்றி. இந்தப் பதிவு வெளியானதும் முதலில் சிறப்பு அனுமதிப் பக்கத்திற்கு சென்றது. என்னதான் நடக்கிறது என்று நானும் காத்திருந்தேன் . ஆனால், சில நிமிடங்களில் மீண்டும் இந்தப் பதிவு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு சிறந்த நிர்வாகம் என்றால் பிரச்சினைக்குரிய பதிவின் தரத்தினை ஆராய்வதில் தவறில்லை. இது போல பிறரின் பதிவுகள் நீக்கப்பட்டதும் உடனே ஆர்ப்பாட்டம் செய்து ஏன் நீக்கினீர்கள் என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு பிரச்சினையை வளர்ப்பதன் காரணமாகவே இதுவரை ஈகரை நிர்வாகம் சில பதிவுகளை நிரந்தரமாக நீக்கியுள்ளது என்பதை சிலர் புரிந்து கொள்ளவேண்டும்.
இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு! 1571444738
Mohan Pandiyan
Mohan Pandiyan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 18/08/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum