ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:47 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு

2 posters

Go down

மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Empty மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு

Post by ராஜு சரவணன் Sat Aug 17, 2013 3:51 pm

ஒவ்வொரு மனிதரும் தான் கருவில் உருவான நாள் முதல் உலகை எட்டி பார்க்கும் பிறப்பு எனும் நாள் முதல் எந்த மொழியை தன் கருவறையில் கேட்கிறார்களோ அந்த மொழி தான் அந்த மனிதனின் இயந்திர மொழி ஆகும். தன் அன்னையின் மொழியே ஒவ்வொரு மனிதனின் இயந்திர மொழியாக இருக்கும்.
தாய் மற்றவரிடம் பேசுவதையும் கேட்பதையும், பார்ப்பதையும், படிப்பதையும், ரசிப்பதையும்,சுவைபதையும் கருவில் உள்ள குழந்தை தன் தாயுடன் சேர்ந்து அந்த செயல்களில் தன்னையும் ஈடுபடுத்திகொள்ளும் என்பது அறிவியல் ரீதியான உண்மை. அதனால் தான் கருவுற்ற தாய்மார்கள் எப்போதும் நல்லதை பேச வேண்டும், நல்லதை மட்டுமே அவர்கள் காதில் படும்படி மற்றவர்கள் பேச வேண்டும், பக்தி பாடல்களை கேட்க வேண்டும், பக்தி படங்களை பார்க்க ரசிக்க வேண்டும், நகைச்சுவை நிகழ்வுகளை பார்க்க பேச வேண்டும், அனைத்து வகையான உணவுகளையும் சுவைக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள்.
மேலே சொன்ன தகவல்கள் மூலம் கருவில் உள்ள குழந்தை தாயின் பேச்சு மொழியை சிசுவாக இருக்கும் தன்னுடைய இயந்திர மொழியாக அதன் வளர்ச்சியிலேயே இணைத்துக்கொள்கிறது. இப்போது தெரிகிறதா இயந்திர மொழி என்றால் என்னவென்று?... ஆம் மனிதனின் இயந்திர மொழி என்பது அவரவர் தாய்மொழியோ தான்.
என்ன இது இயந்திர மொழி , தந்திர மொழி என்று நான் குழப்புவதாக எண்ணலாம். ஒருவர் மற்றவரிடம் எந்தவொரு மொழியில் பேசினாலும் அவர் பேச விரும்பும் தகவல் அவருடைய இயந்திர மொழியில் (தாய் மொழி) தான் முதலில் தோன்றும் , பிறகுதான் தகவல் பேசும் மொழிக்கு ஏற்ப மொழிமாற்றம் அடைந்து நாவில் பேச்சாக வெளிவரும். அதேபோல் ஒருவர் தன் இயந்திர மொழி அல்லாத வேறு மொழியில் தகவல்களை கேட்டாலும், அத்தகவல்கள் தனது இயந்திர மொழிக்கு(தாய்மொழி) ஏற்றவாறு மொழிமாற்றம் அடைந்து பின்புதான் அவரவர் அறிவை எட்டுகிறது.அறிவும் மொழியும் ஓன்றுக்கொன்று தொடர்புடையவை.
ஆகா மனிதன் எவ்வளவு மொழிகள் கற்றாலும் பேசினாலும் கடைசியில் தகவல்கள் அறிவை எட்டும்போதும்/பிறக்கும்போதும் அவரவர் இயந்திர மொழியில் (தாய்மொழி) தான் செயல்பாடுகள் அமைகின்றன.எப்படி கணனிக்கு C++, Csharp, VB, JAVA, HTML போன்ற மொழிகளில் நிரல்களை(PROGRAMING) எழுதினாலும் அது இயங்கும்போது கணனியின் CPU விற்கு கணனியின் இயந்திர மொழியான MACHINE LANGUAGE ஆகா கம்பைளர்கள் உதவியுடன் மாற்றமடைந்து செல்கிறதோ அதுபோலத்தான்.
சரி விசயத்திற்க்கு வருவோம். கணினியும் மனிதனும் செயல்பாடுகளில் ஒன்று தான். மனிதனின் மூளைக்கு அறிவு எனும் சாப்ட்வேர் கட்டளைகளை பிறப்பிப்பது போல் கணனியின் CPU விற்கு கட்டளைகளை பிறப்பிப்பது சாப்ட்வேர் எனும் நிரல்கள். கணனியின் நிரல்களை Machine language ல் நேரடியாக எழுதினால் எவ்வாறு கணனியின் திறன் , வேகம் அதிகரிக்கிறதோ அதுபோல மனிதனுக்கு அவனுடைய Machine language ஆனா தாய்மொழியில் கற்றால் அவனுடைய அறிவு, திறமை, செயல்திறன், கண்டுபிடிப்புகள் போன்ற திறமை சிறக்கும். 
இந்த தத்துவத்தினை அறிந்ததால் என்னவோ உலகில் ஜப்பான், சீனா, ரஷ்ய , ஜெர்மன், இஸ்ரேல் போன்ற பல நாடுகள் தங்கள் தாய்மொழியிலேயே பாடங்கள், ஆராய்ச்சிகள் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். இதனால் தான் இன்று அவர்கள் பல துறைகளில் முன்னேற்றமடைந்த வல்லரசுகளாக திகழ்கின்றன. உயரிய நோபல் பரிசு போன்றவற்றை அவர்கள் பெற முடிகிறது. பற்பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து தங்கள் அறிவை மற்ற நாட்டினர் மெச்சும் படி இருக்கின்றனர்.
ஆனால் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பெற்றோர்கள் தாங்கள் பிரிட்டனில் பிறந்து வளர்ந்து ஆங்கிலம் அவர்களது தாய்மொழி போலவும் தங்கள் குழந்தைகளை வழுகட்டாயமாக ஆங்கில வழி பள்ளியில் சேர்த்து விட்டு அழகு பார்க்கின்றனர். தமிழ்நாட்டு பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தில் ஆறிவை ஊட்டுவது என்பது ஒருவரிடம் நேராக சொல்லவேண்டிய தகவலை மற்றொருவர் மூலம் சொல்வதுபோலாகும்.அதே பிள்ளைகளுக்கு தமிழில் அறிவை  ஊட்டுவது என்பது ஒருவரிடம் நேராக சொல்லவேண்டிய தகவலை அவரிடம் நேரடியாக சொல்வது போலாகும்.
ஆங்கிலமே தெரியாத குழந்தைகளை ஆங்கிலத்தின் மூலமே அனைத்து பாடங்களையும் கற்க வேண்டும் என்று நாம் அவர்களை கட்டாயப்படுத்துவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். தனக்கு ஆங்கிலம் பேச படிக்க தெரியாது என்ற ஒரே காரணத்திற்காக தன் பிள்ளைகளை இப்படி தான் படிக்க வேண்டும் என்று முடிவுசெய்து தலையை பிடித்து அழுத்துவது தங்கள் பிள்ளைகள் அறிவாளியாகவோ அல்லது விஞ்ஞானியாகவோ வர தேவையில்லை ஆங்கிலம் மட்டும் பேசும் சாதாரண வேலையாளாக வந்தாலே போதும் என்ற அவர்களின் உள் உணர்வு தெளிவாக தெரிகிறது.


Last edited by ராஜு சரவணன் on Sun Aug 18, 2013 3:40 am; edited 3 times in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Empty Re: மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு

Post by யினியவன் Sat Aug 17, 2013 4:01 pm

நல்ல ஒப்பீடு டெக்லஸ் - இத படிச்சிட்டு இனிமே மாசமா இருக்கும்போதே ஆங்கிலப்படமா பார்த்து பிறக்கும் பொழுதே ஹாய் மாம் ன்னு கத்திட்டே குழந்தை பிறக்க தயாராயிட மாட்டாங்களே!!! புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Empty Re: மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு

Post by ராஜு சரவணன் Sat Aug 17, 2013 4:57 pm

இப்போதுள்ள பெற்றோர்களின் மனநிலையை தெரிந்து கொண்டதால் தான் இன்று பள்ளிகள் முதல் வகுப்பிற்கே இரண்டு லட்சம் கேட்கின்றனர். அதையும் ஒத்து கொண்டு நம்ம குழந்தை நல்லா ஆங்கிலத்தில் பீட்டர் விட்ட போதும் அதுதான் உண்மையான படிப்பு என்று பெற்றோர்கள் கருதுகின்றனர்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Empty Re: மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum