ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் !

4 posters

Go down

ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Empty ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் !

Post by krishnaamma Fri Aug 09, 2013 7:30 pm

இன்று ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர். இது ரம்ஜான் பெருநாள் என்றும், ஈகைத் திருநாள் என்றும், ஈதுல் பித்ர் என்றும் அழைக்கப்படுகிறது.ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Fqwk
ரமலான் நோன்பை, ஒரு மாதம் நோற்று, அதன்பின் ரமலான் மாதத்திற்கு அடுத்த மாதமான ஷவ்வால் மாதம் முதல் நாளில், ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Fqwk

ரமலான் மாதத்தில் ஏழை வரியாகிய ஜக்காத் நன்கொடையையும், ஸதக்கா என்ற தருமத்தையும், அதிக அளவில் வழங்கி, அதன் பின் ரம்ஜான் தினத்தன்று, ஈத்காவிற்கு ரம்ஜான் தொழுகையை நிறைவேற்ற செல்லும் முன்பு, "பித்ரா' எனும் சிறப்பு நன்கொடையை ஏழைகளுக்கு கட்டாயமாக வழங்குவதால், இப்பண்டிகை ஈகைத் திருநாள் என்று அழைக்கப்படுகிறது.

இப்பண்டிகையை, "ஈத் உல் பித்ர்' என்றும் அழைக்கின்றனர். ஈத் என்பதற்கு திரும்ப திரும்ப வரும் மகிழ்ச்சி என்றும், பித்ர் என்பதற்கு தானம் தருமம் என்றும் பொருளாகும்.பொருட்களை தானம் செய்வதால், ஆண்டுதோறும் திரும்ப திரும்ப வருகின்ற மகிழ்ச்சியான நாள் தான், இந்த ரம்ஜான் பெருநாள்.பித்ரா என்ற நன்கொடையான, கட்டாயமாக ரம்ஜான் பண்டிகை அன்று காலையிலேயே ஏழைகளுக்கு வழங்குவதன் நோக்கம்; அன்று எந்த ஒரு மனிதனும் பசித்திருக்கக் கூடாது என்பது தான். ரமலான் மாதம் முழுவதும் பகல்

பொழுதில் நோன்பிருந்து பசித்திருக்கும் பணக்காரனும், வறுமையால் நெடுநாட்கள் பசியோடு இருக்கும் ஏழையும், ரம்ஜான் நாளில் உண்டு மகிழ்கின்றனர். கொடுப்பவனும் மகிழ்கிறான்; பெறுபவனும் மகிழ்கிறான். அன்று, பசி என்பது யாரிடத்திலும் காணப்படுவதில்லை.

இறைவனின் கட்டளைக்கு அடி பணிந்து, ரமலான் முழுவதும் நோன்பிருந்து, வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட்டு ஜக்காத், சதகா போன்ற தான, தருமங்களையும் செய்து, இறைவனின் அன்பிற்கு பாத்திரமான மனிதன், இதற்குரிய கூலியை, பயனை இறைவனிடமிருந்து பெறுகின்ற இந்நாள் ஒரு வெற்றித் திருநாள்.

வயலிலே உழைத்து அதற்குரிய பலனை உழவர்கள் அறுவடை நாளில் பெறுவதைப் போல் தங்கள் கடமைகள் ஆகிய நோன்பு, தொழுகை, ஜக்காத் ஆகியவற்றை ஈமான் எனும் இறை நம்பிக்கையோடு வெற்றிகரமாக நிறைவேற்றி, இறைவனின் திருபொருத்தத்திற்கு ஆளாகின்றனர். இறைவனின் அன்பிற்கு ஆளாகின்றனர். அவர்களுடைய தியாகங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அடியான் எனக்காகவே, பசித்திருந்து, நோன்பிருந்து தியாகம் செய்தான். அவனுக்குரிய கூலியை, நேரிடையாக நானே வழங்குவேன் என்று இறைவன் திருமறையில் குறிப்பிட்டிருக்கின்றான்.

பிற மாதங்களில் செய்யப்படும் நற்காரியங்களை விட, ரமலான் மாதத்தில் செய்யப்படும் நன்மைகளுக்கு, 70 மடங்கு அதிகமான பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுவதால், அதிகமான தான தருமங்கள் இம்மாதத்தில் வழங்கப் படுகின்றன. வணக்க வழிபாடுகளும், அதிகமாக நிறைவேற்றப்படுகின்றன. ரமலான் மாத நோன்பின் மாண்பே வணங்குங்கள்! வழங்குங்கள்! என்பதில் தான் அடங்கியிருக்கிறது.ஜக்காத் எனும் ஏழை வரியை வழங்குவது, ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சேமிப்பில் இரண்டரை சதவீதம் கணக்கிடப்பட்டு, அது, ஏழைகளுக்கு, தானமாக வழங்கப்பட வேண்டும்.

ஈத்துவக்கும் இன்பமே பேரின்பம். பொருள் ஓரிடத்தில் குவியாமல் தடுக்கும் பொருளாதார சீர்திருத்த முறை தான் ஜக்காத். பகல் முழுவதும் பசித்திருத்தல், இரவிலே விழித்திருந்து, வணக்க வழிபாடுகளிலே ஈடுபடுதல் போன்ற நற்செயல்களால், ஒருவனுடைய பாவங்கள் நீக்கப்படுகின்றன. மனிதன் புனிதமடைகிறான். அவனுடைய மனம் பண்படைகிறது.பசித்திருக்கும் நோன்பு, பட்டினி கிடப்பதற்காக அளிக்கப்படும் பயிற்சி அல்ல; அது, பண்பாடுகள் வளருவதற்காக அளிக்கப்படுகின்ற பயிற்சியாகும். ஏழைகளின் பசித் துயரை, பணக்காரர்களும் உணர்வதற்கு ரமலான் நோன்பு ஒரு காரணமாகிறது. ஏழைகள் மீது அவர்களுக்கு இரக்கம் உண்டாகிறது. மனிதாபிமானம் வளர்கின்றது.

பசித்திருக்கும் போது, மனிதனுடைய இச்சைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவனுடைய சுயகட்டுப்பாடு வளர்கிறது. மனம் ஒரு குரங்கு என்பார்கள். இங்கும் அங்கும் அலைபாயும் மனம், ஒரு கட்டுப் பாட்டிற்குள் வருவதால் மனம் ஒருமைப்படுகிறது. ஆன்மிக உணர்வுகள் வளர்கின்றன.நோன்பின் போது, பிறரைப் பற்றிப் புறம் பேசுவது கண்டிக்கப்பட்டுள்ளது. அப்படி பேசுவதை கேட்பதும் தவறு என்று கூறப்படுகிறது. ஆடவர் பெண்டிரையோ, பெண்டிர் ஆடவரையோ இச்சையுடன் நோக்குவதும் தடுக்கப்படுகிறது. எனவே, நாவால் செய்கின்ற பாவங்களும், காதுகளால் செய்கின்ற பாவங்களும், கண்களால் செய்கின்ற பாவங்களும் தடுக்கப்படுவதால், நோன்பு, மனிதனை பாவம் செய்வதிலிருந்து பாதுகாக்கும் கேடயமாக அமைகின்றது.ரம்ஜான் பண்டிகை அன்று பிறசமய சகோதரர்களுக்கும் உணவு மற்றும் இனிப்பு வகைகளை அன்பளிப்பாக வழங்கி, பரஸ்பர அன்பை வளர்த்துக் கொள்கின்றனர். இதனால் சமூக நல்லிணக்கம் ஏற்படுகின்றது.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Empty Re: ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் !

Post by Muthumohamed Fri Aug 09, 2013 11:55 pm

வாழ்துக்கும் பதிவுக்கு நன்றி அம்மா

ஆனால் எங்களுக்கு நேற்றே பெருநாள் முடிந்துவிட்டது



ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Mரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Uரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Tரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Hரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Uரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Mரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Oரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Hரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Aரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Mரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Eரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Empty Re: ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் !

Post by அசுரன் Sat Aug 10, 2013 9:26 am

ஈகரை இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் இனிய ரமதான் நல்வாழ்த்துகள்.
மாஷா அல்லாஹ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Empty Re: ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் !

Post by ஜாஹீதாபானு Sat Aug 10, 2013 11:53 am

சிறப்பான பகிர்வு நன்றிமா புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Empty Re: ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் !

Post by krishnaamma Sat Aug 10, 2013 8:21 pm

நன்றி முத்துபுன்னகை
நன்றி அசுரன்புன்னகை
நன்றி பானு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Empty Re: ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் !

Post by Muthumohamed Sun Aug 11, 2013 12:20 am

krishnaamma wrote:நன்றி முத்துபுன்னகை
நன்றி அசுரன்புன்னகை
நன்றி பானு புன்னகை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Mரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Uரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Tரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Hரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Uரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Mரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Oரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Hரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Aரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Mரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Eரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Empty Re: ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum