Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் !
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் !
பொதுவாக நிதிப் பற்றாக்குறை என்றால் அது நடுத்தர குடும்பங்களுக்குத் தான் அதிகமாக ஏற்படும். ஏன் எனில், செல்வ செழிப்பான குடும்பங்களுக்கு மாத பட்ஜெட் போட்டு செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. அதேப்போல, ஏழைக் குடும்பத்தினர், அவர்களுக்கு வரும் குறைந்தபட்ச தொகையை அவர்களது அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். அதுவே அவர்களுக்கு போதாத நிலையில், பட்ஜெட் என்பது கேள்விக்குறியாக இருக்கும்.
எனவே, நடுத்தர குடும்பத்தார் தங்களது செலவுகளை பட்டியல் போட்டு பட்ஜெட் தயார் செய்யுங்கள். அதாவது, ஒவ்வொரு மாதமும் என்னென்ன விஷயங்களுக்கு எவ்வளவு செலவுகள் ஆகின்றன என்பதை தனியாக கணக்கெடுங்கள். நீங்கள் தயாரிக்கும் பட்ஜெட் இரண்டு வகையாக இருக்க வேண்டும். அதாவது, சில குறிப்பிட்ட செலவுகள் அதாவது மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், கல்விக் கட்டணம் போன்றவை கட்ட வேண்டிய மாதத்துக்கான ஒரு பட்ஜெட்டும், இவை இல்லாமல் இருக்கும் மாதங்களுக்கு ஒரு தனி பட்ஜெட்டும் உருவாக்குங்கள்.
இதில், எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளையும் தனியாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். (எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளை எவ்வாறு குறிப்பெடுப்பது?) அதாவது, திடீரென சுப, அசுப காரியங்களுக்குச் செல்லுதல், வீட்டில் பழுதாகி இருக்கும் ஒரு பொருளை மாற்ற வேண்டிய நிலை வருதல் போன்றவற்றை தனியாக எடுத்தெழுதிக் கொள்ளுங்கள்.
இப்போது, சாதாரண மாதத்துக்கான செலவின் மொத்தக் கணக்கையும், கூடுதல் செலவுகள் கொண்ட மாதத்துக்கான மொத்தக் கணக்கையும் கூட்டி எடுங்கள்.
இதில், உங்களது செலவு எந்த மாதத்துக்கான செலவுக்கு வசதியாக இருக்கிறது என்று பாருங்கள். அதாவது, குறைந்த செலவுள்ள மாதத்துக்கான தொகை தான் உங்களது மாத வருமானம் என்றால், ஒன்று, உங்களது வருமானத்தை உயர்த்த வேண்டும். அல்லது தேவையற்ற செலவுகளை கண்டறிந்து அதனை குறைக்க வேண்டும்.
ஒரு வேளை அதிகப்படியான செலவு கொண்ட மாதத் தொகையை உங்களது வருமானத்தால் ஈடுகட்ட முடியும் என்றால், செலவு குறைந்த மாதத்தில் உங்கள் கையில் நிற்கும் கூடுதல் தொகையை முதலீடு செய்யவோ, சேமிக்கவோ திட்டமிடுங்கள்.
நன்றி : தினமணி
எனவே, நடுத்தர குடும்பத்தார் தங்களது செலவுகளை பட்டியல் போட்டு பட்ஜெட் தயார் செய்யுங்கள். அதாவது, ஒவ்வொரு மாதமும் என்னென்ன விஷயங்களுக்கு எவ்வளவு செலவுகள் ஆகின்றன என்பதை தனியாக கணக்கெடுங்கள். நீங்கள் தயாரிக்கும் பட்ஜெட் இரண்டு வகையாக இருக்க வேண்டும். அதாவது, சில குறிப்பிட்ட செலவுகள் அதாவது மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், கல்விக் கட்டணம் போன்றவை கட்ட வேண்டிய மாதத்துக்கான ஒரு பட்ஜெட்டும், இவை இல்லாமல் இருக்கும் மாதங்களுக்கு ஒரு தனி பட்ஜெட்டும் உருவாக்குங்கள்.
இதில், எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளையும் தனியாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். (எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளை எவ்வாறு குறிப்பெடுப்பது?) அதாவது, திடீரென சுப, அசுப காரியங்களுக்குச் செல்லுதல், வீட்டில் பழுதாகி இருக்கும் ஒரு பொருளை மாற்ற வேண்டிய நிலை வருதல் போன்றவற்றை தனியாக எடுத்தெழுதிக் கொள்ளுங்கள்.
இப்போது, சாதாரண மாதத்துக்கான செலவின் மொத்தக் கணக்கையும், கூடுதல் செலவுகள் கொண்ட மாதத்துக்கான மொத்தக் கணக்கையும் கூட்டி எடுங்கள்.
இதில், உங்களது செலவு எந்த மாதத்துக்கான செலவுக்கு வசதியாக இருக்கிறது என்று பாருங்கள். அதாவது, குறைந்த செலவுள்ள மாதத்துக்கான தொகை தான் உங்களது மாத வருமானம் என்றால், ஒன்று, உங்களது வருமானத்தை உயர்த்த வேண்டும். அல்லது தேவையற்ற செலவுகளை கண்டறிந்து அதனை குறைக்க வேண்டும்.
ஒரு வேளை அதிகப்படியான செலவு கொண்ட மாதத் தொகையை உங்களது வருமானத்தால் ஈடுகட்ட முடியும் என்றால், செலவு குறைந்த மாதத்தில் உங்கள் கையில் நிற்கும் கூடுதல் தொகையை முதலீடு செய்யவோ, சேமிக்கவோ திட்டமிடுங்கள்.
நன்றி : தினமணி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் !
நிஜமாகவே லிஸ்ட் போட்டு செலவழிப்பது ரொம்ப நல்லது, என் அனுபவத்தில் சொல்கிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் !
லிஸ்டு போடுற அளவுக்கு செலவா?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் !
அசுரன் wrote:லிஸ்டு போடுற அளவுக்கு செலவா?
ஒரு சின்ன கதை அசுரன் ஒரு ராஜா மன நிம்மதி இல்லாம சுத்திவந்தானாம் தன் தோட்டத்தை, அப்போது அவன் தோட்டக்காரன் ரொம்ப சந்தோஷமாக வாழ்வதை பார்த்தனாம். உடனே அவனுக்கு கொஞ்சம் பொறாமையாகக்கூட இருந்ததாம், நம்மிடம் கொஞ்சமே சம்பளம் வாங்கும் இவன் இவ்வளவு சந்தோஷாமாக வாழ்கிறானா? எபப்டி என்று யோசித்து அவனுக்கு அது தெரியாதாதால், தோட்டக்காரனை அழைத்து அவனையே கேட்டனாம்.
என்னிடம் சம்பளம் வாங்கும் நீ என்னைவிட நிம்மதியாக வாழ்வது போல இருக்கே எப்படி என்றானாம்.
அதற்கு அவன் சொன்னனாம் நான் வாங்கும் சம்பளத்தை சரியாக பட்டியலிட்டு செலவழிக்கிறேன் அது தான் என்றானாம் .
அது தான் எப்படி என்றானாம் ராஜா.
அதற்கு அந்த தோட்டக்காரன் சொன்னான், எனக்கு நீங்கள் தரும் ஒரு பணத்தில் 1/4பங்கு என் கடனை கழிக்கவும், 1/4 பங்கு புண்ணியம் சேர்க்கவும், 1/4 பங்கு எதிர் காலத்துக்கும் போக மீதி 1/4 பங்கை இன்று வாழ நான் செலவு செய்கிறேன். எனவே நான்சந்தோஷமாக வாழ்கிறேன் என்றான்.
அரசனுக்கு இன்னும் புரியலை.
மீண்டும் விளக்கம் கேட்டான்.
அவனும் சொன்னான், அதாவது, தன்னை பெற்ற வர்களுக்காக செயலவழிப்பதை கடனை கழிக்க செலவழிப்பதாகவும், வாழாவெட்டியாக வந்துள்ள தங்கையை காப்பாற்றுவதை புண்ணியத்துக்கு செலவழிப்பதாகவும், குழந்தைகளுக்கு செலவழிப்பதை எதிர்கால சேமிப்பாகவும், இன்று வாழ மீதியை செலவழிப்பதாகவும் சொன்னான்.
அந்த ராஜா புரிந்து கொண்டான்.....நீங்க அசுரன் ?
1 ரூபாய் சம்பளம் என்றாலும் ( நம்ம சிஎம் சம்பளம் போல இலலை ) அதிலும் கொஞ்சம் சேமிக்கணும், அதற்கு எழுதி பார்ப்பது அவசியம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் !
அருமையான கதை அம்மா. நானும் புரிஞ்சிக்கிறேன்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் !
அசுரன் wrote:அருமையான கதை அம்மா. நானும் புரிஞ்சிக்கிறேன்.
நல்லது அசுரன் நம் ஆட்கள் தான் சொல்லி இருக்காங்க " ஆற்றில் போட்டாலும் அளந்து போடணும்" என்று அதாவது நமக்கு வேண்டாம் என்று போட்டாலும் அது எவ்வளவு என்று தெரிந்துகொள்ள வேண்டும். இன்னும் விளக்கமாய் சொல்லணும் என்றால் "என்ன குப்பை கொட்டப்போராளோ?" என்று சொல்வார்களே சொல் வழக்கில் , அது அர்த்தம் கூட இது தான், ஒருவர் என்ன குப்பைகளை வெளியே போடுகிறார்கள் என்பதை வைத்தே அவரின் குடும்பம் நடத்தும் முறையை நாம் தெரிந்து கொண்டுவிடமுடியும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் !
நல்ல கதை அக்கா ,
நான் கொஞ்சம் சோம்பேறி அதனால் நான் செலவழிப்பதை எனது வங்கியை எழுதி வைத்துக்கொள்ள சொல்லிவிட்டேன். மாத கடைசியில் எழுதி வைத்ததை அனுப்புவார்கள் நான் பணம் கொடுத்துவிடுவேன்.
நான் கொஞ்சம் சோம்பேறி அதனால் நான் செலவழிப்பதை எனது வங்கியை எழுதி வைத்துக்கொள்ள சொல்லிவிட்டேன். மாத கடைசியில் எழுதி வைத்ததை அனுப்புவார்கள் நான் பணம் கொடுத்துவிடுவேன்.
Re: உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் !
அம்மா பழமொழி மீனிங் வேற என்று நினைக்கிறேன்
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு ...
வீட்டில் பெரியவர்கள் இப்படி சொல்ல கேட்டிருப்போம். தமிழன் என்ன இவ்வளவு கருமியா? அல்லது தானம் செய்ய வேண்டாம் என்று சொல்கிறார்களா?
நமக்கு தெரிந்த வரையில் எந்த பொருளையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி. இப்படித்தான் பலரும் இதை புரிந்து வைத்துள்ளோம்.
ஆனால், இந்த பழமொழியில் நம் உடல் நலம் குறித்த இரகசியம் அடங்கி உள்ளது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? நாம் பாடுபட்டு சம்பாதித்த செல்வத்தை யாராவது ஆற்றில் கொண்டு போய் போட சொல்வார்களா? இந்த கேள்விகளுக்கு விடை தான் இந்த பழமொழியின் உண்மையான பொருள்.
" ஆற்றில் போட்டாலும் அளந்து போடு..."
இதில், "ஆற்றில்" என்பது நாம் அனைவரும் நினைப்பது போல் "நதி" அல்ல. உண்மையாக இந்த பழமொழி எப்படி இருந்தது என்று பார்ப்போம்.
"அகத்தில் போட்டாலும் அளந்து போடு..."
இது, காலப்போக்கில் "ஆத்தில் போட்டாலும் அளந்து போடு" என்றானது. அதை நம் மக்கள் அழகு தமிழில் "ஆற்றில் போட்டாலும் அளந்து போடு" என்று எழுதினார்கள்.
சரி, பெயர் காரணம் தெரிந்து விட்டது. இந்த பழமொழிக்கும் உடல் நலத்துக்கும் என்ன சம்மந்தம்??
"அகம்" என்பது நம் உடலை தான் குறிக்கிறது. நம் உடலுக்குள் நாம் போடும் உணவை கூட அளந்து தான் போட வேண்டும் என்பதைத் தான் இந்த பழமொழி நமக்கு உணர்த்துகிறது.
இன்று நம் உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு காரணம் நாம் உட்கொள்ளும் உணவு தான். உப்பு, சர்க்கரை, புளி என்று நம் சமையல் அறையில் இருக்கும் அனைத்து சமாச்சாரங்களும் நம் உடலில் நோயாக தங்கி இருக்கிறது.
நமது உணவு முறையை ஒழுங்கு படுத்தினாலே பல நோய்கள் நம் பக்கமே வராது.
இப்படிப்பட்ட ஒரு சிறந்த பழமொழியை நாம் முற்றிலும் தவறான வகையில் பயன் படுத்துகிறோம் என்பதை இப்போதாவது உணர்ந்து கொள்வோம்.
"அகத்தில் போட்டாலும் அளந்து போடு...!"
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு ...
வீட்டில் பெரியவர்கள் இப்படி சொல்ல கேட்டிருப்போம். தமிழன் என்ன இவ்வளவு கருமியா? அல்லது தானம் செய்ய வேண்டாம் என்று சொல்கிறார்களா?
நமக்கு தெரிந்த வரையில் எந்த பொருளையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி. இப்படித்தான் பலரும் இதை புரிந்து வைத்துள்ளோம்.
ஆனால், இந்த பழமொழியில் நம் உடல் நலம் குறித்த இரகசியம் அடங்கி உள்ளது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? நாம் பாடுபட்டு சம்பாதித்த செல்வத்தை யாராவது ஆற்றில் கொண்டு போய் போட சொல்வார்களா? இந்த கேள்விகளுக்கு விடை தான் இந்த பழமொழியின் உண்மையான பொருள்.
" ஆற்றில் போட்டாலும் அளந்து போடு..."
இதில், "ஆற்றில்" என்பது நாம் அனைவரும் நினைப்பது போல் "நதி" அல்ல. உண்மையாக இந்த பழமொழி எப்படி இருந்தது என்று பார்ப்போம்.
"அகத்தில் போட்டாலும் அளந்து போடு..."
இது, காலப்போக்கில் "ஆத்தில் போட்டாலும் அளந்து போடு" என்றானது. அதை நம் மக்கள் அழகு தமிழில் "ஆற்றில் போட்டாலும் அளந்து போடு" என்று எழுதினார்கள்.
சரி, பெயர் காரணம் தெரிந்து விட்டது. இந்த பழமொழிக்கும் உடல் நலத்துக்கும் என்ன சம்மந்தம்??
"அகம்" என்பது நம் உடலை தான் குறிக்கிறது. நம் உடலுக்குள் நாம் போடும் உணவை கூட அளந்து தான் போட வேண்டும் என்பதைத் தான் இந்த பழமொழி நமக்கு உணர்த்துகிறது.
இன்று நம் உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு காரணம் நாம் உட்கொள்ளும் உணவு தான். உப்பு, சர்க்கரை, புளி என்று நம் சமையல் அறையில் இருக்கும் அனைத்து சமாச்சாரங்களும் நம் உடலில் நோயாக தங்கி இருக்கிறது.
நமது உணவு முறையை ஒழுங்கு படுத்தினாலே பல நோய்கள் நம் பக்கமே வராது.
இப்படிப்பட்ட ஒரு சிறந்த பழமொழியை நாம் முற்றிலும் தவறான வகையில் பயன் படுத்துகிறோம் என்பதை இப்போதாவது உணர்ந்து கொள்வோம்.
"அகத்தில் போட்டாலும் அளந்து போடு...!"
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் !
அருமை அண்ணே .. இந்த பழமொழியின் உண்மையான வடிவத்தை இன்று தான் கண்டுகொண்டேன்தர்மா wrote:
"அகத்தில் போட்டாலும் அளந்து போடு...!"
Re: உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் !
நன்றி தம்பி
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மருத்துவச் செலவுகளை குறைக்கும் வழி!
» மருத்துவச் செலவுகளை குறைக்கும் வழி
» செலவுகளை அதிகரிக்கச் செய்யும் மருத்துவர்கள்!
» தேவையா இந்த மாத்திரைகள்? செலவுகளை அதிகரிக்கச் செய்யும் மருத்துவர்கள்!
» உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை உருவ உங்கள் டெபிட் கார்டு எண்ணே போதும்!
» மருத்துவச் செலவுகளை குறைக்கும் வழி
» செலவுகளை அதிகரிக்கச் செய்யும் மருத்துவர்கள்!
» தேவையா இந்த மாத்திரைகள்? செலவுகளை அதிகரிக்கச் செய்யும் மருத்துவர்கள்!
» உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை உருவ உங்கள் டெபிட் கார்டு எண்ணே போதும்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|