புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 52 I_vote_lcapதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 52 I_voting_barதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 52 I_vote_rcap 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 52 I_vote_lcapதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 52 I_voting_barதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 52 I_vote_rcap 
2 Posts - 18%
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 52 I_vote_lcapதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 52 I_voting_barதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 52 I_vote_rcap 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'


   
   

Page 52 of 58 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 58  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:41 pm

First topic message reminder :

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?

வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

நன்றி : சிறுவர்மலர் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 18, 2016 12:40 am

பூவிலே பெரிய பூ!

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 52 ZIP7G8hwS4KJ2zWEADqA+Bunga-Rafflesia-Bengkulu

இந்தோனேஷியாவின் மலைக்காடுகளில் காணப்படும் தாவரம், ரஃப்லேஸியா (Rafflesia). இந்தத் தாவரத்துக்குத் தண்டுகளோ, இலைகளோ கிடையாது. இந்தத் தாவரத்தில் பூக்கும் பூதான், உலகின் மிகப் பெரிய பூ. ஏறத்தாழ ஒரு மீட்டர் விட்டத்தில், 10ல் இருந்து 11 கிலோ எடையில், ராட்சச அளவில் வளரும். இந்தப் பூவின் நடுவில் சட்டி போல இருக்கும் குழி, 10 லிட்டர் நீரைக் கொள்ளும்!

இந்தத் தாவரம் மிகவும் விந்தையான அமைப்பைக் கொண்டது. 'டெட்ராஸ்டிக்மா' (Tetrastigma) என்ற ஒரு வகை திராட்சைக் கொடிக்குள், ஊடுருவி சிறிய திசுக்களாக வளரும். சுமார் 18 மாதங்கள் ஒட்டுண்ணியாக அதன் சத்துகளை உறிஞ்சி வளர்ந்த பிறகு, திராட்சைக் கொடியின் மேலே சிறிய முடிச்சாகத் தென்படும். சுமார் 9 மாத காலம் இந்த முடிச்சு நன்கு வளர்ந்து, முட்டைக்கோசைப் போன்ற தோற்றத்தில் ஒரு பெரிய மொட்டாக மாறும்.

சிறிது நாட்களில் ஐந்து இதழ்களைக் கொண்ட பூவாக மலரும். சிவப்பும் ஆரஞ்சும் கலந்த அடர் நிறத்தில் பூக்கள் இருக்கும். ஆண் பூக்களும், பெண் பூக்களும் தனித்தனி ஒட்டுண்ணிகளில் வளரும். ஒரு பகுதியில் பெண் பூவும், ஆண் பூவும் மலர்ந்து இருந்தால், அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் கனிகள் உருவாகும்.

இந்தப் பூவின் மணம், சதை அழுகினால் வீசும் துர்நாற்றத்தை ஒத்தது. அதனால் அழுகிய உடலை மொய்க்கும் ஈக்களால்தான் இந்தத் தாவரத்தில் மகரந்தச் சேர்க்கை நடக்கிறது. சில நாட்கள் கழித்து, பூ அழுகத் தொடங்கியதும், எலிகள் மாதிரியான சிறு விலங்குகள் பூவைத் தின்ன வரும்.

அப்போது, காய்ந்த விதைகள் அவற்றின் உடலில் ஒட்டிக்கொள்ளும். ரஃப்லேஸியா தாவரம் வளரக்கூடிய திராட்சைக் கொடியின்மீது, விதைகளைச் சுமந்து செல்லும் எலிகள் ஏற நேரிட்டால், விதைகள் கொடியின்மேல் ஒட்டிக்கொண்டுவிடும். விதைகளில் இருந்து திசுக்கள் உருவாகி, கொடிக்குள் ஊடுருவி வளரத் தொடங்கும்.

இந்தோனேசியா நாட்டின் மூன்று தேசிய மலர்களுள் ஒன்று இந்த ரஃப்லேஸியா.

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 52 X7d9juWTf6GnlWQbpzpG+019643-01

ஐரோப்பியர்களில் இந்தப் பூவை முதன்முதலில் கண்டறிந்தது, சர். ஸ்டாம்ஃபோர்ட் ரஃப்லேஸ், (Sir Stamford Raffles) டாக்டர்.ஜோசப் ஆர்னால்ட் (Dr. Joseph Arnold) எனும் இரு தாவரவியல் அறிஞர்கள்.

அவர்களின் நினைவாக இந்தப் பூவுக்கு ரஃப்லேஸியா என்ற ஆங்கிலப் பெயரும், ரஃப்லேஸியா ஆர்னால்டி (Rafflesia Arnoldi) என்ற தாவரவியல் பெயரும் வந்தது. இதன் இந்தோனேசியப் பெயர், புஷ்ப ராட்சசா (Pushpa Raksasa).



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 18, 2016 7:43 am

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 52 103459460 தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 52 3838410834 தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 52 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 18, 2016 9:32 am

ayyasamy ram wrote:தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 52 103459460 தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 52 3838410834 தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 52 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1207505

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 12:13 pm

மிக பழமையான ஓட்டல்!

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 52 UnNSEFMIREi7wRGByaK3+E_1464929758

உலகிலேயே மிகப் பழைய ஓட்டல், ஜப்பானில் உள்ள, 'நிஷியாமா ஆன்சென் கெய்யுன்கான்' ஓட்டல் தான். 1300 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த ஓட்டலை, ஜப்பானை சேர்ந்த ஒரே குடும்பத்தார் நிர்வகித்து வருகின்றனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், 52 தலைமுறைகளாக தொடர்ந்து, இந்த ஓட்டலை நடத்தி வருவது தான்!

வாரமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 21, 2016 10:36 am

நான் ரொம்ப, 'ரிஸ்கி' ஆனவ!

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 52 Hq6THvsTtOTL99pdRAQN+E_1470286065

* லேப்டாப்பின் ஆயுட்காலம் வழக்கமான டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை விட குறைவு.

* சிறிய பழுது என்றாலும் செலவு அதிகம்.

* நீண்ட நேரம் மடியில் வைத்து வேலை செய்யக்கூடாது. அதிலிருந்து வெளியேறும் வெப்பம் தோலை பாதிக்கும்.

* மெத்தை அல்லது தலையணை மீது வைத்துப் பயன்படுத்தும்போது, வெப்பம் வெளியேற முடியாமல், சூடு அதிகரித்து கணினியின் பிளாஸ்டிக் அடிப்பாகம் உருகிவிட வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்க கூலிங் பேட் பயன்படுத்தலாம்.

* லேப்டாப்பை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யக்கூடாது.

நன்றி : சிறுவர்மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 21, 2016 10:38 am

'வெல்க்ரோ' பிறந்த கதை!

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 52 ZSULBTDyR05yVd77esIx+E_1470892230

ஜார்ஜெஸ் டீ மெஸ்ட்ரால் என்ற பிரெஞ்சு எஞ்சினியர் காட்டுப்பகுதியில் நடந்து கொண்டிருந்தார். தன் சாக்ஸில் தாவரத்தின் விதைகளும், முட்களும் ஒட்டிக் கொள்வதைக் கவனித்தார்.

ஒரு உருப்பெருக்கிக் கண்ணாடியை எடுத்து. தாவரங்களின் பகுதிகளால் எப்படி இப்படி ஒட்டிக் கொள்ள முடிகிறது என்று ஆராய்ந்தார். அவற்றில், துணியில் ஒட்டிக்கொள்ளும் வகையில் சிறிய முட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். இதே யோசனையைக் கொண்டு, பேப்ரிக் பாஸ்டனரை உருவாக்க முடியுமா எனச் சிந்தித்தார். 8 ஆண்டு காலம் உழைத்தார்.

ஒரு முயற்சியாக, இரண்டு ஸ்ட்ரிக் துணிகளைப் பயன்படுத்திப் பார்த்தார். ஒன்றில் நூற்றுக்கணக்கான சிறு ஹுக்குகள் இருந்தன. மற்றொன்றில் நூற்றுக் கணக்கான சிறு லூப்கள் இருந்தன. இரண்டையும் சேர்த்தால் ஹுக்குகள், லூப்களை அட்டகாசமாகப் பற்றிக்கொண்டன. இழுத்தால், இரண்டு துணிகளும் பிரிந்தன. டீ மெஸ்ட்ரால் இந்தக் கண்டுபிடிப்புக்கு, 'வெல்க்ரோ' என்று பெயர் சூட்டி, 1957ல் பேடண்ட் வாங்கினார்.

அதற்குப் பிறகு ஸ்நூக்கர், ஸ்னோசூட் எனச் சிறப்பு உடைகளில் இவை பயன்படுத்தப்பட்டன. விண்வெளி வீரர் உடையிலும், செயற்கை இதயத்திலும் பயன்படுத்தப்படும் பெருமையும், 'வெல்க்ரோ'வுக்கு உண்டு. அதுமட்டுமல்ல, ஷூ, பர்ஸ், பேக் போன்றவற்றில் அதிக அளவு வெல்க்ரோதான் உபயோகப்படுத்துகின்றனர்.

இப்போது, வெல்க்ரோ வேட்டிகளும் வந்து விட்டது.
பேன்ட், ஜீன்ஸ் போன்றவற்றை அணிய விரும்பிய இளசுகள், இப்போது வெல்க்ரோ
வேட்டிகளையும் அணிய துவங்கி விட்டனர்.

சூப்பர் வெல்க்ரோ!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 21, 2016 10:46 am


ISO என்பதன் விளக்கம் என்ன?

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 52 J5NqzUYORY2SihsklCB0+E_1472099744

வல்லரசு நாடுகளும், வளரும் நாடுகளும் தரம் மிக்க பரிமாற்றங்களுக்காக அமைக்கப்பட்ட உலகத்தர நிர்ணய அமைப்பு தான் ISO எனப்படுகிற International standard organization விஞ்ஞானம், தொழில், உற்பத்தி, வினியோகம் போன்றவற்றிற்கு ஒரே கூரையின் கீழ் குறிப்பிட்ட நிர்ணய விதிகளின்படி தரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே ISO வின் பணியாகும். இது ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இக்கழகம், 1946ல் ஆரம்பிக்கப்பட்டது.

BIS என்பது இந்தியாவின் தர நிர்ணயக் கழகத்தின் பெயராகும்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 21, 2016 2:26 pm

krishnaamma wrote:'வெல்க்ரோ' பிறந்த கதை!

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 52 ZSULBTDyR05yVd77esIx+E_1470892230

ஜார்ஜெஸ் டீ மெஸ்ட்ரால் என்ற பிரெஞ்சு எஞ்சினியர் காட்டுப்பகுதியில் நடந்து கொண்டிருந்தார். தன் சாக்ஸில் தாவரத்தின் விதைகளும், முட்களும் ஒட்டிக் கொள்வதைக் கவனித்தார்.

ஒரு உருப்பெருக்கிக் கண்ணாடியை எடுத்து. தாவரங்களின் பகுதிகளால் எப்படி இப்படி ஒட்டிக் கொள்ள முடிகிறது என்று ஆராய்ந்தார். அவற்றில், துணியில் ஒட்டிக்கொள்ளும் வகையில் சிறிய முட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். இதே யோசனையைக் கொண்டு, பேப்ரிக் பாஸ்டனரை உருவாக்க முடியுமா எனச் சிந்தித்தார். 8 ஆண்டு காலம் உழைத்தார்.

ஒரு முயற்சியாக, இரண்டு ஸ்ட்ரிக் துணிகளைப் பயன்படுத்திப் பார்த்தார். ஒன்றில் நூற்றுக்கணக்கான சிறு ஹுக்குகள் இருந்தன. மற்றொன்றில் நூற்றுக் கணக்கான சிறு லூப்கள் இருந்தன. இரண்டையும் சேர்த்தால் ஹுக்குகள், லூப்களை அட்டகாசமாகப் பற்றிக்கொண்டன. இழுத்தால், இரண்டு துணிகளும் பிரிந்தன. டீ மெஸ்ட்ரால் இந்தக் கண்டுபிடிப்புக்கு, 'வெல்க்ரோ' என்று பெயர் சூட்டி, 1957ல் பேடண்ட் வாங்கினார்.

அதற்குப் பிறகு ஸ்நூக்கர், ஸ்னோசூட் எனச் சிறப்பு உடைகளில் இவை பயன்படுத்தப்பட்டன. விண்வெளி வீரர் உடையிலும், செயற்கை இதயத்திலும் பயன்படுத்தப்படும் பெருமையும், 'வெல்க்ரோ'வுக்கு உண்டு. அதுமட்டுமல்ல, ஷூ, பர்ஸ், பேக் போன்றவற்றில் அதிக அளவு வெல்க்ரோதான் உபயோகப்படுத்துகின்றனர்.

இப்போது, வெல்க்ரோ வேட்டிகளும் வந்து விட்டது.
பேன்ட், ஜீன்ஸ் போன்றவற்றை அணிய விரும்பிய இளசுகள், இப்போது வெல்க்ரோ
வேட்டிகளையும் அணிய துவங்கி விட்டனர்.

சூப்பர் வெல்க்ரோ!
மேற்கோள் செய்த பதிவு: 1229468


இந்த பதிவையும் http://www.eegarai.net/t74649-topic 15 /11 /2011 ஐயும் பார்க்கவும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 27, 2016 10:42 am

நன்றி ஐயா ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 22, 2017 11:11 am

1.இந்தியாவில், குறைந்த வயதில், ஜனாதிபதி பதவியை பெற்றவர் யார்?
நீலம் சஞ்சீவ ரெட்டி; ஜூலை, 25, 1977ல் பதவி ஏற்ற போது, அவரது வயது, 64.

2.இந்தியாவின் முதல் நீர் மூழ்கி கப்பல் எது?
ஐ.என்.எஸ்., கல்வாரி

3.இந்திய வரலாற்றிலேயே, குற்றவாளி கூண்டில் ஏறிய பிரதமர் யார்?
பி.வி.நரசிம்மராவ்; 1996ம் ஆண்டு

4.இந்தியாவில், தேசிய மொழியாக இந்தி எப்போது அறிவிக்கப்பட்டது?
செப்., 15, 1949.

5.இந்தியாவின், தேசிய விலங்காக, புலி எப்போது அறிவிக்கப்பட்டது?
நவ., 18, 1972.

6.இந்திய தேசிய கீதத்திற்கு இசை அமைத்தவரின் பெயர் என்ன?
ஹெர்பர்ட்மூரில்

7.இந்தியா தயாரித்த பெரிய போர்க்கப்பல் எது?
ஐ.என்.எஸ்.டில்லி.

8.இந்தியா சுதந்திரம் அடைந்த பின், முதல் பொதுத் தேர்தல், எப்போது நடந்தது?
1952.

9.ஜனாதிபதியாக, பதவி ஏற்பவர், யாருடைய முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்?
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி

10. காந்திஜியை தன் தந்தையாக, சுவீகாரம் எடுத்துக் கொண்டவர் யார்?
ஜமுனாலால் பஜாஜ்.

11.காந்திஜியின் வாழ்க்கை சம்பவங்களை, டாக்குமென்டரி படமாக எடுத்தவர் யார்?
ஏ.கே.செட்டியார்,1940ம் ஆண்டு.

12.இந்திய ஜனாதிபதி மாளிகையை கட்டியவர் யார்?
எட்வின் லாட்யன்ஸ்.

13.இந்தியாவில், வாக்குரிமை வயது, 18 என்ற சட்டம், எப்போது அமல்படுத்தப்பட்டது?
1989.

14.இந்தியாவில், வெண்மை புரட்சிக்கு வித்திட்டவர் யார்?
வர்கீஸ் குரியன்.

15.நாட்டு நலனுக்காக, தன் ஐ.சி.எஸ்., பதவியை, ராஜினாமா செய்த முதல் இந்தியர் யார்?
சுபாஷ் சந்திர போஸ்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 52 of 58 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 58  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக