Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
+42
பழ.முத்துராமலிங்கம்
ChitraGanesan
M.Jagadeesan
shobana sahas
வேல்முருகன்
Preethika Chandrakumar
ராஜா
monikaa sri
கோ. செந்தில்குமார்
M.Saranya
சிவனாசான்
m.latha
solomon
விமந்தனி
அருண்
ஹர்ஷித்
Dr.S.Soundarapandian
Ranjith Kumar
sethuraman manavar sangam
ரா.ரா3275
SajeevJino
கிருஷ்ணா
முனைவர் ம.ரமேஷ்
SenthilMookan
Aathira
பார்த்திபன்
T.N.Balasubramanian
சிவா
KINGUMAR
M.M.SENTHIL
rsrayan
amirmaran
கு.கோகிலா
அசுரன்
செம்மொழியான் பாண்டியன்
ayyasamy ram
mbalasaravanan
ஜாஹீதாபானு
Muthumohamed
யினியவன்
மதுமிதா
krishnaamma
46 posters
Page 6 of 58
Page 6 of 58 • 1 ... 5, 6, 7 ... 32 ... 58
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
Last edited by krishnaamma on Tue Jun 07, 2016 12:11 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஒன்பது நாள் தீபாவளியாம்!
ஒன்பது நாள் தீபாவளியாம்!
இந்தியாவிலிருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால், தென் அமெரிக்காவின் அருகே உள்ள கரீபியன் தீவுகளில், தீபாவளி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது ஆச்சரியமான செய்தி. அதுவும் நம் நாட்டில் கூட இப்பண்டிகை ஐந்து நாட்களுக்குத்தான் கொண்டாடப் படுகிறது. ஆனால், கரீபியன் தீவுகளில் உள்ள ட்ரினிடாட்டில் தீபாவளி ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.
"லாண்ட் ஆப் ஹம்மிங் பேர்ட்' என்றழைக்கப்படும் ட்ரினிடாட் மற்றும் டொபாகோ நகரங்களில், இப்பண்டிகையை இத்தனை முக்கியத்துவத்துடன் கொண்டாடக் காரணம் என்ன? கரீபியன் தீவுகளின் மொத்த ஜனத்தொகையான ஒன்றரை மில்லியன் மக்களில், நாற்பத்தி மூன்று சதவீதத்தினர் இந்தியர்களே! இந்தத் தீவுகளில் உள்ள கரும்புப் பண்ணைகளில் வேலை செய்ய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பாக சென்ற இந்தியர்கள் அங்கேயே குடியேறிவிட்டனர். அவர்கள் பரம்பரையில் வந்த மக்களே இப்படி ஆரவாரமாக கொண்டாடுகின்றனர்.
தீபாவளிப் பண்டிகைக்கு ஒன்பது நாட்களுக்கு முன் பிருந்தே ட்ரினிடாட் நகரின் நடுவில், தீபாவளி நகர் திருவிழா தொடங்குகிறது. தீவுகளின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் பாரம்பரிய இந்திய உடைகள் அணிந்து, திருவிழா திடலுக்குக் கூட்டம் கூட்டமாய் வந்து சேர்கின்றனர். இங்கு இந்திய கலாசாரப்படி, பாரம்பரிய நடனங்கள், இசை, பஜனைகள் நடப்பதோடு, வித்தியாசமாக மிஸ் இண்டியா, கரீபியன் போட்டியும் நடைபெறுகிறது.
திருவிழாவின் நடுப்பகுதியில் ஒரு கண்காட்சி நடைபெறும். அதில் ஒவ்வொரு வருடமும் ஒரு கருத்தை மையமாகக் கொண்டு கண்காட்சி அமைக்கப்படுகிறது. வேதங்கள், வழிபாட்டு முறை, இந்தியத் திருமணங்கள், விஞ்ஞானமும் மெய்ஞானமும், மகாத்மா காந்தி, யோகா, இந்தியக் கலை என பல கண்காட்சிகள் இதுவரை நடந்துள்ளன. இதன் முக்கியக் குறிக்கோள் அந்நிய நாட்டில் பிறந்து வளர்ந்தாலும், இந்திய நாட்டின் கலாசாரப் பாரம்பரியம், அடுத்த தலைமுறையினருக்கும் சென்றடைய வேண்டும் என்பதே!
தீபாவளிப் பண்டிகை உருவானதற்கு நரகாசுர வதம், ராவண வதம், மகாபலியை வாமனராக பூமிக்குக் கீழ் தள்ளியது போன்ற பின்னணிக் கதைகள் நாடகமாக, நாட்டியமாக தீபாவளி நகரில் மட்டுமல்ல, நகரின் பல தெருக்களிலும், கிராமங்களிலும் நடித்துக் காட்டப்படுகிறது. இந்த அந்நிய மண்ணில் தீபாவளி அன்று பொது விடுமுறை விடப்படுகிறது. பட்டாசுகளும், வாண வேடிக்கைகளும் விண்ணைப் பிளக்கின்றன. உச்சக்கட்டமாக, மாலையில் இருட்டத் தொடங்கும் போது மூங்கில்களில் ஆன கூடை போன்ற வடிவங்களில் , மண் அகல்கள் ஏற்றப்படுகிறது. ஒவ்வொரு வீட்டி லும் வாசல்களில், பால்கனிகளில், திண்ணை களில், படிகளில் தெருவோரங்களில்... என ஊரெங்கும் விளக்கேற்றி, லஷ்மி தேவியை ஆராதிக்கின்றனர்.
நன்றி : சிறுவர்மலர்
இந்தியாவிலிருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால், தென் அமெரிக்காவின் அருகே உள்ள கரீபியன் தீவுகளில், தீபாவளி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது ஆச்சரியமான செய்தி. அதுவும் நம் நாட்டில் கூட இப்பண்டிகை ஐந்து நாட்களுக்குத்தான் கொண்டாடப் படுகிறது. ஆனால், கரீபியன் தீவுகளில் உள்ள ட்ரினிடாட்டில் தீபாவளி ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.
"லாண்ட் ஆப் ஹம்மிங் பேர்ட்' என்றழைக்கப்படும் ட்ரினிடாட் மற்றும் டொபாகோ நகரங்களில், இப்பண்டிகையை இத்தனை முக்கியத்துவத்துடன் கொண்டாடக் காரணம் என்ன? கரீபியன் தீவுகளின் மொத்த ஜனத்தொகையான ஒன்றரை மில்லியன் மக்களில், நாற்பத்தி மூன்று சதவீதத்தினர் இந்தியர்களே! இந்தத் தீவுகளில் உள்ள கரும்புப் பண்ணைகளில் வேலை செய்ய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பாக சென்ற இந்தியர்கள் அங்கேயே குடியேறிவிட்டனர். அவர்கள் பரம்பரையில் வந்த மக்களே இப்படி ஆரவாரமாக கொண்டாடுகின்றனர்.
தீபாவளிப் பண்டிகைக்கு ஒன்பது நாட்களுக்கு முன் பிருந்தே ட்ரினிடாட் நகரின் நடுவில், தீபாவளி நகர் திருவிழா தொடங்குகிறது. தீவுகளின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் பாரம்பரிய இந்திய உடைகள் அணிந்து, திருவிழா திடலுக்குக் கூட்டம் கூட்டமாய் வந்து சேர்கின்றனர். இங்கு இந்திய கலாசாரப்படி, பாரம்பரிய நடனங்கள், இசை, பஜனைகள் நடப்பதோடு, வித்தியாசமாக மிஸ் இண்டியா, கரீபியன் போட்டியும் நடைபெறுகிறது.
திருவிழாவின் நடுப்பகுதியில் ஒரு கண்காட்சி நடைபெறும். அதில் ஒவ்வொரு வருடமும் ஒரு கருத்தை மையமாகக் கொண்டு கண்காட்சி அமைக்கப்படுகிறது. வேதங்கள், வழிபாட்டு முறை, இந்தியத் திருமணங்கள், விஞ்ஞானமும் மெய்ஞானமும், மகாத்மா காந்தி, யோகா, இந்தியக் கலை என பல கண்காட்சிகள் இதுவரை நடந்துள்ளன. இதன் முக்கியக் குறிக்கோள் அந்நிய நாட்டில் பிறந்து வளர்ந்தாலும், இந்திய நாட்டின் கலாசாரப் பாரம்பரியம், அடுத்த தலைமுறையினருக்கும் சென்றடைய வேண்டும் என்பதே!
தீபாவளிப் பண்டிகை உருவானதற்கு நரகாசுர வதம், ராவண வதம், மகாபலியை வாமனராக பூமிக்குக் கீழ் தள்ளியது போன்ற பின்னணிக் கதைகள் நாடகமாக, நாட்டியமாக தீபாவளி நகரில் மட்டுமல்ல, நகரின் பல தெருக்களிலும், கிராமங்களிலும் நடித்துக் காட்டப்படுகிறது. இந்த அந்நிய மண்ணில் தீபாவளி அன்று பொது விடுமுறை விடப்படுகிறது. பட்டாசுகளும், வாண வேடிக்கைகளும் விண்ணைப் பிளக்கின்றன. உச்சக்கட்டமாக, மாலையில் இருட்டத் தொடங்கும் போது மூங்கில்களில் ஆன கூடை போன்ற வடிவங்களில் , மண் அகல்கள் ஏற்றப்படுகிறது. ஒவ்வொரு வீட்டி லும் வாசல்களில், பால்கனிகளில், திண்ணை களில், படிகளில் தெருவோரங்களில்... என ஊரெங்கும் விளக்கேற்றி, லஷ்மி தேவியை ஆராதிக்கின்றனர்.
நன்றி : சிறுவர்மலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தீபாவளி இல்லாத கிராமங்கள்!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது மாம்பட்டி கிராமம். இந்த கிராமத்திலும், இதை சுற்றியுள்ள ஒப்பிலான் பட்டி, தும்பைபட்டி, சந்திரப்பட்டி, எம்.வலையபட்டி, கச்சப்பட்டி, தேப்பு பட்டி, கிலுகிலுப்பை பட்டி, இடையபட்டி, திருப்பதி பட்டி, கலுங்கு பட்டி, இந்திரா நகர், வாககரைப்பட்டி ஆகிய கிராமங் களிலும், கடந்த 54 ஆண்டுகளுக்கு மேலாக, தீபாவளியை கொண்டாடாமல் புறக்கணித்து வருகின்றனர்.
கிட்டத்தட்ட தீபாவளியும், விவசாய பணிகளும் ஒரே காலகட்டத்தில் வருவதால் தீபாவளிக்கு வட்டிக்கு கடன் வாங்குவதோடு, விவசாயத்திற்கும் கடன் வாங்குவர். அறுவடையின் போது இரண்டு கடனுக்காக விளைந்த நெல்லை முழுவதையும் விற்று வெறுங்கையுடன் வீடு திரும்புவர். 54 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதி மக்கள் இப்படி அல்லல்பட்டுதான் வந்தனர்.
அந்த காலகட்டத்தில் இந்த 13 கிராமங்களிலும் பெரும்பான்மையானவர்கள் வறுமை நிலையில் இருந்ததால், ஊர் பெரியவர்கள் கூடி நல்லெண்ண அடிப்படையில் இந்த முடிவை எடுத்தனர். அன்றிலிருந்து இன்றுவரை இந்த கிராமங்களில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், ஏன் வறுமை நிலையில் வாடியவர்கள் வசதியான நிலைக்கு வந்திருந்தாலும் தீபாவளி கொண்டாடுவதில்லை என்ற அந்த முடிவில் மட்டும் உறுதியாக நிற்கின்றனர்.
இந்த கிராமத்தை பொறுத்தவரை வெளியூரிலிருந்து திருமணமாகி வரும் பெண்களுக்கு தலைதீபாவளி மட்டுமல்ல, தொடர்ச்சியாக வரும் எந்த தீபாவளியும் கிடையாது.
தீபாவளி கொண்டாடுவதற்காக பிறந்த வீட்டிற்கும் செல்லக்கூடாது. அதே நேரம் இந்த கிராமங்களில் பிறந்து வளர்ந்து வெளியூர்களுக்கு திருமணமாகி செல்லும் பெண்கள், தங்கள் கணவன் வீட்டில் தீபாவளி கொண்டாடிக் கொள்ளலாம். தீபாவளி வர ஒருமாதம் இருக்கும் முன்பே நாள் காட்டியை புரட்டி புரட்டி தீபாவளியை எதிர்நோக்கும் சிறுவர், சிறுமியர்கள் மத்தியில் மாம்பட்டி பகுதி குழந்தைகள் தீபாவளியை நாட்காட்டியில் மட்டுமே பார்த்து பழக்கப்பட்டவர்கள். அதே நேரம் தீபாவளி கொண்டாட முடியவில்லையே என்ற ஏக்கம் மாம்பட்டி கிராம குழந்தைகளுக்கு மட்டுமல்ல, யாருக்கும் கிடையாது.
நன்றி : சிறுவர்மலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மம்மா நீ எங்கே இருக்கே?
ஆஸ்திரேலியாவின் "மாலிபவுல்' என்னும் பறவை ரொம்ப வினோதமானது. இந்தப் பறவைக்கு பெற்றோர் யார் என்றே தெரியாது. ஏனெனில், தாய்ப்பறவை முட்டைகளை மண்ணுக்குள் போட்டு மூடிவைத்து விட்டு சென்று விடும். குஞ்சுகளோ பொரிந்து வெளியே வந்தவுடன் அப்படியே பறக்க ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு அதற்கு இறகுகள் வளர்ந்து விடுகின்றன.
இதனால் அதன் பெற்றோர் யாரென்றே அந்தப் பறவைக்கு தெரிவதில்லை. தாய்ப்பறவையும் தனது முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வந்ததா என்று காண வருவதில்லை. பொறுப்பில்லாத மம்மி. இந்தப் பறவை பற்றிய இன்னொரு விசேஷமான தகவல். பிறந்த நாளிலேயே பறக்கும் ஒரே பறவையும் இதுதான்.
நன்றி : சிறுவர்மலர்
இதனால் அதன் பெற்றோர் யாரென்றே அந்தப் பறவைக்கு தெரிவதில்லை. தாய்ப்பறவையும் தனது முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வந்ததா என்று காண வருவதில்லை. பொறுப்பில்லாத மம்மி. இந்தப் பறவை பற்றிய இன்னொரு விசேஷமான தகவல். பிறந்த நாளிலேயே பறக்கும் ஒரே பறவையும் இதுதான்.
நன்றி : சிறுவர்மலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாத்திரைகள் உட்கொண்டால் சிறுநீர் ஏன் மஞ்சளாக வெளியேறுகிறது தெரியுமா?
உடல் எடுத்துக் கொண்டது போக மீதிமிருப்பவை சிறுநீர், வியர்வை மூலமாகத்தான் வழக்கமாக வெளியேறும். சில ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் மற்றும் பி-காம்ப்ளெக்ஸ் விட்டமின்களில் சேர்க்கப்படும் ரைபோபிளேவின் என்ற விட்டமின் உடலில் சேமிக்கப்படாமல், தேவைக்குப் போக மீதமுள்ளது சிறுநீரில் வெளிப்படும். அதனால் தான் சிறுநீர் மஞ்சளாக வெளிப்படுகிறது.
நன்றி : சிறுவர்மலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
லும்ப்சக்கர் மீன்!
லும்ப்சக்கர் மீன்!
ஷிம்ப்சக்கர் என்று அழைக்கப்படும் மீன், தன் உடம்பு முழுவதும் துண்டு துண்டு சதைகளுடன் காணப்படுகிறது. இந்த வகைப் பெண் மீன்கள் ஒரே சமயத்தில் ஒரு லட்சம் முட்டைகள் வரை இடுகின்ற தன்மை கொண்டுள்ளன. முட்டைகள் தளர்ச்சியாகக் காணப்படும். இந்த வகை மீன் ஒரு முட்டையிட்ட பின்பு சில நிமிடங்களில் மற்றொரு முட்டையை இடுவதால், முட்டை தண்ணீருக்குள் மூழ்கி, மண் பரப்பில் சிதறிக் காணப்படுகிறது.
பொதுவாக முட்டைகளைப் பாதுகாக்கும் பணியில் இந்த வகை ஆண் மீன்கள் ஈடுபடுகின்றன. மோசமான தட்பவெப்ப நிலையில் முட்டைகள் சிதறிவிடும். அப்போது ஆண் மீன் மிகுந்த கவலையுடன் காணப்படுகிறது. இந்த வகை மீன்களின் செயல்கள் கோழியின் செயலைப் போன்று காணப்படுவதால் "கோழிமீன்' என்ற செல்லப்பெயரில் அழைக்கப்படுகிறது.
பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடற்கரைப் பகுதியிலும், அட்லாண்டிக் கடலின் மேற்குப் பகுதியிலும் இந்த வகை மீன்கள் காணப்படுகின்றன.
நன்றி : சிறுவர்மலர்
ஷிம்ப்சக்கர் என்று அழைக்கப்படும் மீன், தன் உடம்பு முழுவதும் துண்டு துண்டு சதைகளுடன் காணப்படுகிறது. இந்த வகைப் பெண் மீன்கள் ஒரே சமயத்தில் ஒரு லட்சம் முட்டைகள் வரை இடுகின்ற தன்மை கொண்டுள்ளன. முட்டைகள் தளர்ச்சியாகக் காணப்படும். இந்த வகை மீன் ஒரு முட்டையிட்ட பின்பு சில நிமிடங்களில் மற்றொரு முட்டையை இடுவதால், முட்டை தண்ணீருக்குள் மூழ்கி, மண் பரப்பில் சிதறிக் காணப்படுகிறது.
பொதுவாக முட்டைகளைப் பாதுகாக்கும் பணியில் இந்த வகை ஆண் மீன்கள் ஈடுபடுகின்றன. மோசமான தட்பவெப்ப நிலையில் முட்டைகள் சிதறிவிடும். அப்போது ஆண் மீன் மிகுந்த கவலையுடன் காணப்படுகிறது. இந்த வகை மீன்களின் செயல்கள் கோழியின் செயலைப் போன்று காணப்படுவதால் "கோழிமீன்' என்ற செல்லப்பெயரில் அழைக்கப்படுகிறது.
பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடற்கரைப் பகுதியிலும், அட்லாண்டிக் கடலின் மேற்குப் பகுதியிலும் இந்த வகை மீன்கள் காணப்படுகின்றன.
நன்றி : சிறுவர்மலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பறக்கும் பாலூட்டி!
"கலாங்' என்று அழைக்கப்படும் பழ வவ்வால் கள் இந்தோனேஷியாவில் காணப்படுகின்றன. இந்த வகை வவ்வால் பறக்கும் பாலூட்டி வகைகளிலேயே நீளமானவை. இந்த வகை வவ்வாலின் உடல்... அதாவது, தலை முதல் கால் வரை 40 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. மேலும், 152.5 சென்டிமீட்டர் அளவு இறக்கையும்,900 கிராம் எடையையும் கொண்டது. இந்த வவ்வால்கள் அதிக சக்தி வாய்ந் தவை.
எனவே, நான்கு மீட்டர் தூரத்திற்கு அப்பால் வாழைப்பழம் இருக்கிறது என்பதை தன்னுடைய மோப்ப சக்தி மூலம் அறிந்து கொள்கிறது. பழ வவ்வால்கள், நரி போன்று முக அமைப்பைக் கொண்டுள்ளதால், "பறக்கும் நரிகள்' என்றும் அழைக்கப்படுகின்றன.
இதுபோன்று "பைபிஸ்ட்ரெலி' என்று அழைக்கப் பட்டும் சிறிய வகை வவ்வால்கள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படுகின்றன. இதன் இறக்கையின் அளவு 152 முதல் 200 மில்லிமீட்டர் வரை உள்ளது. மேலும், 2.5 கிராம் எடை கொண்டது.
நன்றி : சிறுவர்மலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
பொறுப்பில்லாத தாயை தேடதமா.krishnaamma wrote:ஆஸ்திரேலியாவின் "மாலிபவுல்' என்னும் பறவை ரொம்ப வினோதமானது. இந்தப் பறவைக்கு பெற்றோர் யார் என்றே தெரியாது. ஏனெனில், தாய்ப்பறவை முட்டைகளை மண்ணுக்குள் போட்டு மூடிவைத்து விட்டு சென்று விடும். குஞ்சுகளோ பொரிந்து வெளியே வந்தவுடன் அப்படியே பறக்க ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு அதற்கு இறகுகள் வளர்ந்து விடுகின்றன.
இதனால் அதன் பெற்றோர் யாரென்றே அந்தப் பறவைக்கு தெரிவதில்லை. தாய்ப்பறவையும் தனது முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வந்ததா என்று காண வருவதில்லை. பொறுப்பில்லாத மம்மி. இந்தப் பறவை பற்றிய இன்னொரு விசேஷமான தகவல். பிறந்த நாளிலேயே பறக்கும் ஒரே பறவையும் இதுதான்.
நன்றி : சிறுவர்மலர்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
தகவலுக்கு நன்றிமாkrishnaamma wrote:லும்ப்சக்கர் மீன்!
ஷிம்ப்சக்கர் என்று அழைக்கப்படும் மீன், தன் உடம்பு முழுவதும் துண்டு துண்டு சதைகளுடன் காணப்படுகிறது. இந்த வகைப் பெண் மீன்கள் ஒரே சமயத்தில் ஒரு லட்சம் முட்டைகள் வரை இடுகின்ற தன்மை கொண்டுள்ளன. முட்டைகள் தளர்ச்சியாகக் காணப்படும். இந்த வகை மீன் ஒரு முட்டையிட்ட பின்பு சில நிமிடங்களில் மற்றொரு முட்டையை இடுவதால், முட்டை தண்ணீருக்குள் மூழ்கி, மண் பரப்பில் சிதறிக் காணப்படுகிறது.
பொதுவாக முட்டைகளைப் பாதுகாக்கும் பணியில் இந்த வகை ஆண் மீன்கள் ஈடுபடுகின்றன. மோசமான தட்பவெப்ப நிலையில் முட்டைகள் சிதறிவிடும். அப்போது ஆண் மீன் மிகுந்த கவலையுடன் காணப்படுகிறது. இந்த வகை மீன்களின் செயல்கள் கோழியின் செயலைப் போன்று காணப்படுவதால் "கோழிமீன்' என்ற செல்லப்பெயரில் அழைக்கப்படுகிறது.
பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடற்கரைப் பகுதியிலும், அட்லாண்டிக் கடலின் மேற்குப் பகுதியிலும் இந்த வகை மீன்கள் காணப்படுகின்றன.
நன்றி : சிறுவர்மலர்
குழம்புக்கு நல்லா இருக்குமா?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
தகவலுக்கு நன்றிமாkrishnaamma wrote:
"கலாங்' என்று அழைக்கப்படும் பழ வவ்வால் கள் இந்தோனேஷியாவில் காணப்படுகின்றன. இந்த வகை வவ்வால் பறக்கும் பாலூட்டி வகைகளிலேயே நீளமானவை. இந்த வகை வவ்வாலின் உடல்... அதாவது, தலை முதல் கால் வரை 40 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. மேலும், 152.5 சென்டிமீட்டர் அளவு இறக்கையும்,900 கிராம் எடையையும் கொண்டது. இந்த வவ்வால்கள் அதிக சக்தி வாய்ந் தவை.
எனவே, நான்கு மீட்டர் தூரத்திற்கு அப்பால் வாழைப்பழம் இருக்கிறது என்பதை தன்னுடைய மோப்ப சக்தி மூலம் அறிந்து கொள்கிறது. பழ வவ்வால்கள், நரி போன்று முக அமைப்பைக் கொண்டுள்ளதால், "பறக்கும் நரிகள்' என்றும் அழைக்கப்படுகின்றன.
இதுபோன்று "பைபிஸ்ட்ரெலி' என்று அழைக்கப் பட்டும் சிறிய வகை வவ்வால்கள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படுகின்றன. இதன் இறக்கையின் அளவு 152 முதல் 200 மில்லிமீட்டர் வரை உள்ளது. மேலும், 2.5 கிராம் எடை கொண்டது.
நன்றி : சிறுவர்மலர்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 6 of 58 • 1 ... 5, 6, 7 ... 32 ... 58
Similar topics
» தெரிந்துகொள்ளுங்கள்!
» தெரிந்துகொள்ளுங்கள்
» தெரிந்துகொள்ளுங்கள்! - 2
» தெரிந்துகொள்ளுங்கள்! - 3
» தெரிந்துகொள்ளுங்கள்! - 4
» தெரிந்துகொள்ளுங்கள்
» தெரிந்துகொள்ளுங்கள்! - 2
» தெரிந்துகொள்ளுங்கள்! - 3
» தெரிந்துகொள்ளுங்கள்! - 4
Page 6 of 58
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|