Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
+42
பழ.முத்துராமலிங்கம்
ChitraGanesan
M.Jagadeesan
shobana sahas
வேல்முருகன்
Preethika Chandrakumar
ராஜா
monikaa sri
கோ. செந்தில்குமார்
M.Saranya
சிவனாசான்
m.latha
solomon
விமந்தனி
அருண்
ஹர்ஷித்
Dr.S.Soundarapandian
Ranjith Kumar
sethuraman manavar sangam
ரா.ரா3275
SajeevJino
கிருஷ்ணா
முனைவர் ம.ரமேஷ்
SenthilMookan
Aathira
பார்த்திபன்
T.N.Balasubramanian
சிவா
KINGUMAR
M.M.SENTHIL
rsrayan
amirmaran
கு.கோகிலா
அசுரன்
செம்மொழியான் பாண்டியன்
ayyasamy ram
mbalasaravanan
ஜாஹீதாபானு
Muthumohamed
யினியவன்
மதுமிதா
krishnaamma
46 posters
Page 33 of 58
Page 33 of 58 • 1 ... 18 ... 32, 33, 34 ... 45 ... 58
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
Last edited by krishnaamma on Tue Jun 07, 2016 12:11 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
பன்றிகளுக்கும், 'டாட்டூஸ்!'
சீனாவில், 'டாட்டூஸ்' எனப்படும் பச்சை குத்தும் மோகம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. மனிதர்களை தாண்டி, தற்போது மிருகங்களுக்கும் டாட்டூஸ் குத்தப்படுகிறது. அதிலும், வெண்பன்றிகளுக்கு டாட்டூஸ் குத்துவதில், சீனர்களுக்கு அப்படி என்ன அலாதி பிரியமோ தெரியவில்லை.
பன்றிகளுக்கு மயக்க மருத்து செலுத்தி, அவை மயக்கமடைந்ததும், பிரபல கார்ட்டூன் கேரக்டர்களை பச்சை குத்துகின்றனர். இப்போதெல்லாம் சீனாவில் பன்றிகளை பார்க்கும்போது, நடமாடும் நவீன ஓவியக் கூடம் போல் காட்சி அளிக்கிறன. இந்த பன்றிகள் இறந்ததும், அவற்றின் தோல்கள், பல லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஜோல்னாபையன்.
பன்றிகளுக்கு மயக்க மருத்து செலுத்தி, அவை மயக்கமடைந்ததும், பிரபல கார்ட்டூன் கேரக்டர்களை பச்சை குத்துகின்றனர். இப்போதெல்லாம் சீனாவில் பன்றிகளை பார்க்கும்போது, நடமாடும் நவீன ஓவியக் கூடம் போல் காட்சி அளிக்கிறன. இந்த பன்றிகள் இறந்ததும், அவற்றின் தோல்கள், பல லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஜோல்னாபையன்.
Last edited by krishnaamma on Tue Apr 28, 2015 1:07 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
படங்களுக்கு நன்றி ராஜா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பறக்கும் பாலூட்டி!
பறக்கும் பாலூட்டிகள் வவ்வால் இனத்தைச் சார்ந்தவைகளே. இவை இரவில் பறக்கும் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும். வவ்வால் சிறகுகள் மெல்லிய தோலால் முன் புறமும், பின் புறமும் தோளுடன் நான்கு நீண்ட விரல் களுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
பூத வவ்வால்கள் பாலூட்டிகளின் ரத்தத்தைக் குடிக்கும். சில நீள நாக்குடைய வவ்வால்கள் பூக்களிலிருந்து தேனைக் குடிக்கும். மற்ற வவ்வால்கள் பழங்களையும், பூக்களையும் சாப்பிடும். பறக்கும், "நரி வவ்வால்' இந்த வகையைச் சார்ந்தவைகளே!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
ஜப்பான் கரன்சியில் முதன் முதலாக இசியோ இகுச்சி என்ற பெண்ணின் உருவத்தை 5 ஆயிரம் 10 ஆயிரம் யென் கரன்சியில் பொறிக்கப் பட்டுள்ளது. இவர் 1927-ல் பிரபல மான எழுத்தாளராக இருந்தவர். 1986ல் இறந்து விட்டார். அவரையும், ஜப்பான் பெண்களையும் பெருமைப் படுத்தும் விதமாக இந்தக் கரன்சியை வெளியிட்டுள்ளனர்.
ஜப்பான் மதத்தின் வழக்கப்படி 1641களில், வெளி உலகிலிருந்து தகவல்களைப் பெறுவதற்குத் தடை விதித்திருந்தது. மீறுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கியது. கடல் பயணத்துக் கான கப்பல் எல்லாம் அழிக்கப்பட்டன. ஆனால், இதற்கு முன்னால் ஜப்பானியர்கள் இந்தியா, சயாம், பிலிப்பைன்ஸ் நாடுகளுடன் கடல் வாணிபம் செய்தனர். மெக்சிகோவை ஆராய்ந் திருக்கின்றனர். பசிபிக் தீவுகளுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் கடல் வழியில் கப்பல்களில் பயணித்திருக்கின்றனர்.
தினமலர்
ஜப்பான் மதத்தின் வழக்கப்படி 1641களில், வெளி உலகிலிருந்து தகவல்களைப் பெறுவதற்குத் தடை விதித்திருந்தது. மீறுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கியது. கடல் பயணத்துக் கான கப்பல் எல்லாம் அழிக்கப்பட்டன. ஆனால், இதற்கு முன்னால் ஜப்பானியர்கள் இந்தியா, சயாம், பிலிப்பைன்ஸ் நாடுகளுடன் கடல் வாணிபம் செய்தனர். மெக்சிகோவை ஆராய்ந் திருக்கின்றனர். பசிபிக் தீவுகளுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் கடல் வழியில் கப்பல்களில் பயணித்திருக்கின்றனர்.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
கறிவேப்பிலை பற்றி தெரிஞ்சிக்கலாமா !
சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படுவதில் கறிவேப்பிலையும் ஒன்று. இது மலைகளிலும், காடுகளிலும், வீட்டில் தோட்டங்களிலும் பயிராகக் கூடிய ஒரு பெருஞ்செடியின் வகையை சார்ந்தது.
கறிவேப்பிலையில் இரண்டு வகை உண்டு. அவை காட்டு கறிவேப்பிலை; நாட்டு கறிவேப்பிலை. காட்டு கறிவேப்பிலை மருந்தாகவும், நாட்டு கறிவேப்பிலை உணவாகவும் பயன் படுகிறது.
காட்டு கறிவேப்பிலை பெரிதாக, கசப்பு உள்ளதாக இருக்கும். நாட்டு கறிவேப்பிலை சிறிதாகவும் இனிப்பும், துவர்ப்பும், மணமும் உள்ளதாகவும் இருக்கும்.
கறிவேப்பிலையில் தாதுப்பொருள், நார்ச்சத்து, வைட்டமின் போன்றவை அடங்கியுள்ளன. இது ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், இளநரையை தடுக்கும். வயிற்று கோளாறுகளால் அவதிப்படுவர்கள் கறிவேப்பிலை பொடியுடன், வெந்தயம் அரைத்து சேர்த்து சாப்பிடலாம்!
சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படுவதில் கறிவேப்பிலையும் ஒன்று. இது மலைகளிலும், காடுகளிலும், வீட்டில் தோட்டங்களிலும் பயிராகக் கூடிய ஒரு பெருஞ்செடியின் வகையை சார்ந்தது.
கறிவேப்பிலையில் இரண்டு வகை உண்டு. அவை காட்டு கறிவேப்பிலை; நாட்டு கறிவேப்பிலை. காட்டு கறிவேப்பிலை மருந்தாகவும், நாட்டு கறிவேப்பிலை உணவாகவும் பயன் படுகிறது.
காட்டு கறிவேப்பிலை பெரிதாக, கசப்பு உள்ளதாக இருக்கும். நாட்டு கறிவேப்பிலை சிறிதாகவும் இனிப்பும், துவர்ப்பும், மணமும் உள்ளதாகவும் இருக்கும்.
கறிவேப்பிலையில் தாதுப்பொருள், நார்ச்சத்து, வைட்டமின் போன்றவை அடங்கியுள்ளன. இது ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், இளநரையை தடுக்கும். வயிற்று கோளாறுகளால் அவதிப்படுவர்கள் கறிவேப்பிலை பொடியுடன், வெந்தயம் அரைத்து சேர்த்து சாப்பிடலாம்!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அகோட்டி!
மான்-முயல் இரண்டின் குணங்களைக் கொண்ட மிருகம் இந்த அகோட்டி. அபாயம் என்று உணர்ந்தால் முயலைப் போல துள்ளிக் குதித்து, மான்களைப் போன்ற தன் நீண்ட மெல்லிய கால்களினால் தாவிப் பாய்ந்து ஓடும். அது மட்டுமல்ல, இதன் முதுகில் உள்ள மஞ்சள் நிறம், இப்படி இது தாவி ஓடும்போது, மற்ற அகோட்டி களுக்கு எச்சரிக்கையாக டாலடிக்கும்.
இது கூச்ச சுபாவமுள்ள பிராணி. சின்னகாதுகள், சிவந்த காவி ரோமம், கம்பளி ரோமம் போன்ற இதன் தோலுக்காகவே இது வேட்டையாடப்படுகிறது. அகோட்டி இனத்தில் பதின்மூன்று வகைகள் உள்ளன. மத்திய தென் அமெரிக்காவில் மெக்சிகோவிலிருந்து பெருவரையிலும், மேற்கு இந்தியத் தீவுகளிலும் அகோட்டிகள் காணப்படுகின்றன.
கொறித்துத் தின்னும் பிராணி வகையைச் சேர்ந்தது அகோட்டி. இதன் ரோமம் பட்டுப்போல வழ வழப் பாகவும், மிருதுவாகவும் இருக்கும். ஆலிவ், தங்கக் காவி, சிவப்பு இப்படிப் பல்வேறு நிறங்களில் அகோட்டிகள் தென் அமெரிக்காவில் நிறையக் காணப்படுகின்றன.
நன்கு வளர்ந்த அகோட்டி பதினெட்டிலிருந்து இருபது அங்குல நீளமிருக்கும். அடர்ந்த கானகங்களில் பகல் பொழுதில் மரங்களின் வேர்ப் பகுதியில் உள்ள பொந்து களிலோ அல்லது மரங்களில் உள்ள குடைவான பகுதி களிலோ ஓய்வு கொண்டிருக்கும். இரவில்தான் உணவு வேட்டைக்குக் கிளம்பும்.
இதன் உணவு, இலைகள், வேர்கள், உதிர்ந்துள்ள கொட்டைகள், பழங்கள் ஆகியவையே. இது மாமிச பட்சிணி அல்ல. கொட்டைகளையும், பழங்களையும் அணிலைப் போல் முன்னங்கால்களில் பற்றிக் கொண்டு, கொறித்துத் தின்னும். வேட்டைக்காரர்கள் இதை ஏமாற்றிப் பிடிப்பது சுவாரஸ்யமான விஷயம்.
மரங்களடர்ந்த கிளையை நோக்கி சிறு கற்களை வீசுவர். கல் கீழே விழும் ஓசை கேட்ட அகோட்டி, பழமோ, கொட்டையோ மரத்திலிருந்து விழுந்திருப்பதாகக் கருதி, தன் பதுங்குமிடத்திலிருந்து வெளிப்பட்டு, அதைத் தேட முற்படும். அவ்வளவுதான் போச்சு. வேட்டைக்காரர் களின் பிடியில் அகோட்டி சிக்கிவிடும். இதன் இறைச்சி ரொம்பவும் சுவையானது.
இது தாவித் தாவி, வேகமாக ஓடக் கூடியது. இது நன்றாக நீந்தும். ஆனால், நீரில் அமிழ்ந்து மூழ்கிப்போகத் தெரியாது. நாய்கள் இதைத் துரத்தினால், சட்டென்று அருகிலுள்ள நீர்நிலையில் குதித்து, நீந்தித் தப்பி விடும்.
இது சிறு குழுக்களாகவே வாழ்கின்றன. வாழை - கரும்புத் தோட்டங்களைக் கண்டால் படுநாசம் விளைவித்து விடும். நிறைய உணவு கிடைக்கும் போது, அதைத் தன் பதுங்குமிடத்தில் சேமித்து வைத்துக் கொள்ளும்.
இவற்றின் உறுதியான பலம்மிக்க முன்பற்களினால், (உளிப்பற்கள்) முன்னங்கால்களால் பற்றிக் கொண்டுள்ள கொட்டைகளை மிக எளிதாக உடைத்துக் கொறிக்கும்.
பெண் அகோட்டிகள் எல்லாப் பருவத்திலும் நிறைய குட்டிகளைப் போடும். ஒவ்வொரு முறையும் இரண்டிலிருந்து நான்கு குட்டிகள் போடும். இதன் கர்ப்ப காலம் மூன்று மாதமே. குட்டிகள், இலை மற்றும் ரோமங்களாலான குழிகளில், தாயிடம் பால் குடித்து வளரும் இவ்வேளையில், ஆண் அகோட்டிகளை, பெண் அகோட்டிகள் கிட்ட நெருங்கவிடாது.
அகோட்டிகளைப் பிடித்து வளர்க்கலாம். மிருகக் காட்சி சாலைகளிலும் இவை இனப்பெருக்கம் செய்யக் கூடியவை. ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் கானங்களின் தரையில் நிறையத் தாவரங்கள் வளரும். இவற்றைச் சிறிய இன மான்கள் தின்று வாழும். ஆனால், தென் அமெரிக்காவில் மான் இனம் கிடையாது. இதன் இடத்தை, மான்களின் உடல்வாகும், வாழ்க்கை முறையும் கொண்ட அகோட்டிகள் பூர்த்தி செய்கின்றன.
அகோட்டிகளுக்கு, மான்களைப் போன்ற மெல்லிய கால்கள் இருப்பது மட்டுமல்ல... பின்னங்கால்களில் குளம்புகள் போன்ற நகங்கள் இருப்பதும், அகோட்டிகள் தாவிப்பாய்ந்து ஓட வசதியாக உள்ளன. ஆனால், இவற்றின் விரல்கள் தனித்தனியே பிரிந்து இருக்கும். இதன் முன்னங்கால்கள் கொறித்துத் தின்னும் பிராணிகளான ரோடெண்டுகளுடையதைப் போல உணவைப் பற்றிக்கொள்ள வசதியாக உள்ளன.
இவற்றின் வாயில் முன்னால் உள்ள உளிப்பற்கள் வளைந்து முன்பக்கம் எனாமல் பூச்சோடு இருக்கும். இந்த உளிப்பற்களின் பின் பக்கம் டென்டீன் என்ற பொருளால் ஆனது. இது எனாமலை விட மிருதுவானது. அடிக்கடி தேய்ந்து போகும். மேல் பல்லும், கீழ்ப்பல்லும் கொறிக்கும் வேளையில் உராயும். ஆனால், இச்செயலினால் உளிப் பற்களின் நுனி கூராக்கப் படுகிறது.
இந்தத் தேய்மானத்தை ஈடுகட்ட சிலவகை ரோடண்டு களுக்கு உளிப்பற்கள் தொடர்ந்து வாரத்துக்கு 2.5 மி.மீ வளர்ந்து கொண்டே இருக்கும். இதுமட்டுமல்லாமல் இவற்றின் கீழ்த் தாடை முன்னும் பின்னும் நகரும்படி இணைப்பு உள்ளது. ஆகவே, கொறித்த உணவை கடைவாய்ப் பற்கள் அரைக்க வசதியாகவும் இருக்கிறது.
அகோட்டி வித்தியாசமான பிராணி.
நன்றி : சிறுவர் மலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நெருப்பு இல்லாமல் எரியும்!
ஒரு மேஜிக்மேன் நாருடன் கூடிய தேங்காயை எடுத்து, தன் உள்ளங்கையில் சிறிது தண்ணீரை ஊற்றி, அதை தேங்காய் மீது தெளித்துவிட்டு நெருப்பு இல்லாமல் தீப்பற்ற வைத்தார். இந்த ரகசியத்தை உங்களுக்கு சொல்லட்டுமா குட்டீஸ்...
மேஜிக் காட்டுபவர் நமக்கு தெரியாமல் சுத்தமான, ஒரு சிறு துண்டு சோடியத்தை தேங்காய் நாரில் மறைத்து வைத்து விடுவார். பிறகு நம் முன் வைத்து சிறிது தண்ணீரை தேங்காய் நாரின் மீது தெளிப்பார். சோடியம் தண்ணீரில் கரைந்து தேங்காய் நார் முழு வதும் படர்ந்து விடும்.
சிறிது நேரத்திற்கு பிறகு ஹைட்ரஜனையும், சோடியம் ஹைட்ராக்சைடையும் உற்பத்தி செய்கிறது. இந்த வேதிவினை ஏராளமான வெப்பத்தை உற்பத்திசெய்கிறது. இங்கு உருவாக்கப் படும் ஹைட்ரஜன் வாயு தீப்பற்றி எரிகிறது. இதுதான் மேஜிக்.
இதுபோல நீங்களும் மேஜிக் செய்து நண்பர்களை அசத்தலாம்!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Preethika Chandrakumar- இளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
நெருப்பு இல்லாமல் எரியும் என்பதைப் படித்ததும் The Door To Hell என்று அழைக்கப்படும் இடம் நினைவுக்கு வந்துவிட்டது!
துர்க்மெனிஸ்தானில் 1971 முதல் அணைக்க முடியாத இயற்கை வாயுவில் பற்றிய நெருப்பு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறதாம்!
துர்க்மெனிஸ்தானில் 1971 முதல் அணைக்க முடியாத இயற்கை வாயுவில் பற்றிய நெருப்பு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறதாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 33 of 58 • 1 ... 18 ... 32, 33, 34 ... 45 ... 58
Similar topics
» தெரிந்துகொள்ளுங்கள்!
» தெரிந்துகொள்ளுங்கள்
» தெரிந்துகொள்ளுங்கள்! - 2
» தெரிந்துகொள்ளுங்கள்! - 3
» தெரிந்துகொள்ளுங்கள்! - 4
» தெரிந்துகொள்ளுங்கள்
» தெரிந்துகொள்ளுங்கள்! - 2
» தெரிந்துகொள்ளுங்கள்! - 3
» தெரிந்துகொள்ளுங்கள்! - 4
Page 33 of 58
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|