Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
+46
Namasivayam Mu
பழ.முத்துராமலிங்கம்
சசி
M.Jagadeesan
வேல்முருகன்
balakarthik
சரவணன்
Preethika Chandrakumar
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
prabatneb
சிவனாசான்
அகிலன்
idigiti
solomon
உமேரா
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
M.Saranya
jesifer
விமந்தனி
பிஜிராமன்
கோ. செந்தில்குமார்
Dr.S.Soundarapandian
கிருஷ்ணா
பாலாஜி
சிவா
SenthilMookan
T.N.Balasubramanian
உதயசுதா
பார்த்திபன்
ஹர்ஷித்
jenisiva
amirmaran
விஸ்வாஜீ
ayyasamy ram
ஜாஹீதாபானு
அருண்
M.M.SENTHIL
அசுரன்
Muthumohamed
mbalasaravanan
ராஜா
malik
krishnaamma
50 posters
Page 82 of 100
Page 82 of 100 • 1 ... 42 ... 81, 82, 83 ... 91 ... 100
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:38 pm; edited 5 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1185925krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1185922ayyasamy ram wrote:பக்தர்களின் தர்ம சிந்தனையை ஒழித்த
கோயில் தர்மகர்த்தாவின் செயல் கண்டிக்கத்தக்கது...!!
-
அண்ணா, திரி மாத்தி பதிவு போட்டுவிட்டீங்களா?
-
பூந்தெட்டிக்கு வரவேற்பு என்ற கட்டுரையில் கோயில் தர்மகர்த்தா
பிச்சைக்காரர்களை கோயிலை விட்டு அவர்களாக சென்றுவிடும்படி
செய்ததை சுட்டித்தான் இந்த பின்னூட்டம்...
-
கோயில் உள்ளே வந்து பிச்சைக்காரர்கள் யாசகம்
கேட்பதில்லை...
-
அந்தக் காலத்தில் பழனி மலையில் படிக்கு ஒருவராக
பிச்சைகாரர்கள் அமர்ந்திருப்பார்கள்...
-
அவர்களுக்கு தம்பிடி காசு பிச்சை போடுவார்கள்
-
ஒரு ரூபாய் - பதினாறு அணா
ஒரு அணா - ஆறு பைசா
ஒரு பணம் - ரெண்டு அணா
ஒரு அணா - மூனு துட்டு
ஒரு துட்டு - ரெண்டு பைசா
பனிரெண்டு தம்பிடி - ஒரு அணா
-
அப்படி தம்பிடி காசுகளை ஒன்று சேர்த்து பக்தர்களுக்கு
வழங்குவதற்கு ஒருவர் இருப்பார்...
-
வெட்கத்தை விட்டு கேயேந்துகிறார்கள் என்றால்
அவர்கள் வாழ்வில் எந்த அளவுக்கு நலிந்து போனவர்களாக
இருக்க வேண்டும் என்பதையும் நாம் உணர வேண்டும்...
-
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1185932ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1185925krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1185922ayyasamy ram wrote:பக்தர்களின் தர்ம சிந்தனையை ஒழித்த
கோயில் தர்மகர்த்தாவின் செயல் கண்டிக்கத்தக்கது...!!
-
அண்ணா, திரி மாத்தி பதிவு போட்டுவிட்டீங்களா?
-
பூந்தெட்டிக்கு வரவேற்பு என்ற கட்டுரையில் கோயில் தர்மகர்த்தா
பிச்சைக்காரர்களை கோயிலை விட்டு அவர்களாக சென்றுவிடும்படி
செய்ததை சுட்டித்தான் இந்த பின்னூட்டம்...
-
கோயில் உள்ளே வந்து பிச்சைக்காரர்கள் யாசகம்
கேட்பதில்லை...
-
அந்தக் காலத்தில் பழனி மலையில் படிக்கு ஒருவராக
பிச்சைகாரர்கள் அமர்ந்திருப்பார்கள்...
-
அவர்களுக்கு தம்பிடி காசு பிச்சை போடுவார்கள்
-
ஒரு ரூபாய் - பதினாறு அணா
ஒரு அணா - ஆறு பைசா
ஒரு பணம் - ரெண்டு அணா
ஒரு அணா - மூனு துட்டு
ஒரு துட்டு - ரெண்டு பைசா
பனிரெண்டு தம்பிடி - ஒரு அணா
-
அப்படி தம்பிடி காசுகளை ஒன்று சேர்த்து பக்தர்களுக்கு
வழங்குவதற்கு ஒருவர் இருப்பார்...
-
வெட்கத்தை விட்டு கேயேந்துகிறார்கள் என்றால்
அவர்கள் வாழ்வில் எந்த அளவுக்கு நலிந்து போனவர்களாக
இருக்க வேண்டும் என்பதையும் நாம் உணர வேண்டும்...
-
மேற்கோள் இல்லாமல் இருந்ததால் வந்த குழப்பம் அண்ணா..............................மன்னிக்கணும் ..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
நோயாளிகளுக்கு 'பொக்கே' வேண்டாமே!
அண்மையில்,அறுவை சிகிச்சை செய்து, மருத்துவமனையில் இருக்கும் நண்பர் ஒருவரைக் காணச் சென்றிருந்தேன். எனக்கு முன் அவரது குடியிருப்பை சேர்ந்த சிலர், அவரைப் பார்க்க வந்திருந்தனர். அவர்கள் கைகளில் பூங்கொத்துகள் இருந்தன. அதை அவரிடம் கொடுத்து, நலம் விசாரித்தனர்.
அவர்கள் சென்ற பின், 'தாங்கள் பூரண நலம் பெற என் வேண்டுதல்கள்...' என்றபடியே, கையில் இருந்த வாழ்த்து அட்டையை கொடுத்தேன். வாங்கியவர், 'இந்த மலர்க் கொத்துகளை, உங்க வீட்டுக்கு எடுத்துச் செல்லுங்க; பூக்களை பார்க்கும் போது, மனம் லேசாகி, தெம்பு வருவது உண்மைன்னாலும், பூக்களின் வாசனை, சில நோயாளிகளுக்கு, ஒவ்வாமையை ஏற்படுத்தி, கூடவே ஜலதோஷம், தொடர் தும்மலை ஏற்படுத்தும்.
சீக்கிரம் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்...' என்று நீங்க அளித்த வாழ்த்து அட்டை அருமை. இதைப் பார்க்கும் போது, இதைக் கொடுத்தவர், தங்களோடு இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். ரொம்ப நன்றி...' என்றார்.
அவர் கூறுவதிலும் உண்மை உள்ளது. வாசகர்களே... நோயாளியை பார்க்கச் செல்லும் போது, 'பொக்கே' வேண்டாமே!
கே.ஆர்.ராமகிருஷ்ணன், சென்னை.
அண்மையில்,அறுவை சிகிச்சை செய்து, மருத்துவமனையில் இருக்கும் நண்பர் ஒருவரைக் காணச் சென்றிருந்தேன். எனக்கு முன் அவரது குடியிருப்பை சேர்ந்த சிலர், அவரைப் பார்க்க வந்திருந்தனர். அவர்கள் கைகளில் பூங்கொத்துகள் இருந்தன. அதை அவரிடம் கொடுத்து, நலம் விசாரித்தனர்.
அவர்கள் சென்ற பின், 'தாங்கள் பூரண நலம் பெற என் வேண்டுதல்கள்...' என்றபடியே, கையில் இருந்த வாழ்த்து அட்டையை கொடுத்தேன். வாங்கியவர், 'இந்த மலர்க் கொத்துகளை, உங்க வீட்டுக்கு எடுத்துச் செல்லுங்க; பூக்களை பார்க்கும் போது, மனம் லேசாகி, தெம்பு வருவது உண்மைன்னாலும், பூக்களின் வாசனை, சில நோயாளிகளுக்கு, ஒவ்வாமையை ஏற்படுத்தி, கூடவே ஜலதோஷம், தொடர் தும்மலை ஏற்படுத்தும்.
சீக்கிரம் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்...' என்று நீங்க அளித்த வாழ்த்து அட்டை அருமை. இதைப் பார்க்கும் போது, இதைக் கொடுத்தவர், தங்களோடு இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். ரொம்ப நன்றி...' என்றார்.
அவர் கூறுவதிலும் உண்மை உள்ளது. வாசகர்களே... நோயாளியை பார்க்கச் செல்லும் போது, 'பொக்கே' வேண்டாமே!
கே.ஆர்.ராமகிருஷ்ணன், சென்னை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
வித்தியாசமான வாழ்த்து!
சமீபத்தில், குழந்தை பிரசவித்திருந்த என் சித்தியை பார்க்க மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போது, வயதான பெண் ஒருவர், தன்னை அறிமுகப்படுத்தி, 'பைண்ட்' செய்யப்பட்ட சிறு புத்தகத்தை சித்தியிடம் தந்தார்.
அப்புத்தகத்தில், பல வார இதழ்களில் வெளிவந்த குழந்தை வளர்ப்பு, தாய்ப்பால் கொடுப்பது மற்றும் தாய்மார்கள் கடைபிடிக்க வேண்டிய உணவு முறை போன்ற பல அரிய தகவல்கள் இருந்தன. அத்துடன், அப்பெண் வசம்பு துண்டை சித்தியின் கையில் கட்டி, வாழ்த்தினார்.
அவர் சென்ற பின், நர்சிடம் அவரைப் பற்றி விசாரித்தேன். அந்த மருத்துவமனையில், யாருக்கு பிரசவம் நடந்தாலும், வாழ்த்தி, புத்தகம் தரும் பழக்கம் உள்ளவர் என்பதை கூறினார்.
அன்று முதல், என் அம்மாவும், வார இதழில் வரும் குழந்தை வளர்ப்பு பற்றிய குறிப்பை, நகல் எடுக்க ஆரம்பித்து விட்டார். நல்ல யோசனை தானே!
எஸ்.ராஜமித்ரன், ராஜபாளையம்.
சமீபத்தில், குழந்தை பிரசவித்திருந்த என் சித்தியை பார்க்க மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போது, வயதான பெண் ஒருவர், தன்னை அறிமுகப்படுத்தி, 'பைண்ட்' செய்யப்பட்ட சிறு புத்தகத்தை சித்தியிடம் தந்தார்.
அப்புத்தகத்தில், பல வார இதழ்களில் வெளிவந்த குழந்தை வளர்ப்பு, தாய்ப்பால் கொடுப்பது மற்றும் தாய்மார்கள் கடைபிடிக்க வேண்டிய உணவு முறை போன்ற பல அரிய தகவல்கள் இருந்தன. அத்துடன், அப்பெண் வசம்பு துண்டை சித்தியின் கையில் கட்டி, வாழ்த்தினார்.
அவர் சென்ற பின், நர்சிடம் அவரைப் பற்றி விசாரித்தேன். அந்த மருத்துவமனையில், யாருக்கு பிரசவம் நடந்தாலும், வாழ்த்தி, புத்தகம் தரும் பழக்கம் உள்ளவர் என்பதை கூறினார்.
அன்று முதல், என் அம்மாவும், வார இதழில் வரும் குழந்தை வளர்ப்பு பற்றிய குறிப்பை, நகல் எடுக்க ஆரம்பித்து விட்டார். நல்ல யோசனை தானே!
எஸ்.ராஜமித்ரன், ராஜபாளையம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மருத்துவர்களே... கை கழுவுங்கள்!
முன்பெல்லாம், மருத்துவரின் அறையில், அவரின் வலப்புற மூலையில், மரம் அல்லது இரும்பாலான ஸ்டேண்டில், வட்ட வடிவ கோப்பையில், டெட்டால் கலந்த தண்ணீரும், அருகில், துண்டும் இருக்கும்.
மருத்துவர், ஒரு நோயாளியைத் தொட்டு, மருத்துவம் செய்த பின், இந்த டெட்டால் கலந்த நீரில் கைகளை கழுவி, துண்டில் துடைப்பார். இன்று, ஒரு சில பெரிய மருத்துவமனைகளைத் தவிர்த்து, பெரும்பாலான மருத்துவர்களின் அறைகளில், இதைக் காண முடிவதில்லை.
ஒரு நோயாளியை தொட்ட கைகளுடன், அடுத்த நோயாளியை மருத்துவர்கள் தொடுவதால் நோய் தொற்றுகள் பரவ வாய்ப்பு அதிகம்.
இனியாவது மருத்துவர்கள் அருகிலேயே, 'லிக்விட் சோப்' பயன்படுத்தி, கைகளைச் சுத்தம் செய்யலாமே!
சுப்பு.லட்சுமணன், பெருங்களத்தூர், சென்னை.
முன்பெல்லாம், மருத்துவரின் அறையில், அவரின் வலப்புற மூலையில், மரம் அல்லது இரும்பாலான ஸ்டேண்டில், வட்ட வடிவ கோப்பையில், டெட்டால் கலந்த தண்ணீரும், அருகில், துண்டும் இருக்கும்.
மருத்துவர், ஒரு நோயாளியைத் தொட்டு, மருத்துவம் செய்த பின், இந்த டெட்டால் கலந்த நீரில் கைகளை கழுவி, துண்டில் துடைப்பார். இன்று, ஒரு சில பெரிய மருத்துவமனைகளைத் தவிர்த்து, பெரும்பாலான மருத்துவர்களின் அறைகளில், இதைக் காண முடிவதில்லை.
ஒரு நோயாளியை தொட்ட கைகளுடன், அடுத்த நோயாளியை மருத்துவர்கள் தொடுவதால் நோய் தொற்றுகள் பரவ வாய்ப்பு அதிகம்.
இனியாவது மருத்துவர்கள் அருகிலேயே, 'லிக்விட் சோப்' பயன்படுத்தி, கைகளைச் சுத்தம் செய்யலாமே!
சுப்பு.லட்சுமணன், பெருங்களத்தூர், சென்னை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மருத்துவமனையில் ஆண்டு விழா!
எங்கள் பகுதியில் உள்ள, 'மல்டி ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனையிலிருந்து, சமீபத்தில் என் மொபைல் போனுக்கு, 'மெசேஜ்' வந்தது. அதில், 'எங்கள் மருத்துவமனை ஆரம்பித்து, 11வது ஆண்டு விழாவை முன்னிட்டு, எங்களிடம் சிகிச்சை பெற்றவர்களுக்கு, 'பார்ட்டி' கொடுக்க முடிவு செய்துள்ளோம். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்...' என்றிருந்தது.
எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள் நிறையப் பேர் வந்திருந்தனர். விழாவில், டீ, பப்ஸ் கொடுத்து வரவேற்றதுடன், தலைமை மருத்துவர், 'இந்த இரண்டு மணி நேரமும் உங்களுக்கானது; உங்கள் மனதில் ஏற்படும் மருத்துவ சந்தேகங்களை, எங்களிடம் தயங்காமல் கேட்கலாம்...' என்றார்.
நாங்களும் எங்களது சந்தேகங்களை கேட்டோம்.
நிகழ்ச்சி முடிந்ததும், வந்திருந்த அனைவருக்கும் உணவு அளித்து, இலவசமாக சுகர் டெஸ்ட் எடுத்து, உடனே ரிசல்ட்டும் கொடுத்தனர். அத்துடன், வேறு சில சலுகைகளையும் அறிவித்தனர்.
இறுதியாக, தலைமை மருத்துவர், 'இதுவரை நம்மிடையே டாக்டர் - பேஷன்ட் என்ற உறவு மட்டுமே இருந்தது. இப்போது, நாம் அனைவரும் நண்பர்கள்...' என்று கூறி, விடை பெற்றார். மன நிறைவுடன் திரும்பினோம்.
எல்லா மருத்துவமனைகளும் இதைக் கடைப்பிடிக்கலாமே!
சுப்புலெட்சுமி சந்திரமவுலி, மடிப்பாக்கம், சென்னை
எங்கள் பகுதியில் உள்ள, 'மல்டி ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனையிலிருந்து, சமீபத்தில் என் மொபைல் போனுக்கு, 'மெசேஜ்' வந்தது. அதில், 'எங்கள் மருத்துவமனை ஆரம்பித்து, 11வது ஆண்டு விழாவை முன்னிட்டு, எங்களிடம் சிகிச்சை பெற்றவர்களுக்கு, 'பார்ட்டி' கொடுக்க முடிவு செய்துள்ளோம். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்...' என்றிருந்தது.
எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள் நிறையப் பேர் வந்திருந்தனர். விழாவில், டீ, பப்ஸ் கொடுத்து வரவேற்றதுடன், தலைமை மருத்துவர், 'இந்த இரண்டு மணி நேரமும் உங்களுக்கானது; உங்கள் மனதில் ஏற்படும் மருத்துவ சந்தேகங்களை, எங்களிடம் தயங்காமல் கேட்கலாம்...' என்றார்.
நாங்களும் எங்களது சந்தேகங்களை கேட்டோம்.
நிகழ்ச்சி முடிந்ததும், வந்திருந்த அனைவருக்கும் உணவு அளித்து, இலவசமாக சுகர் டெஸ்ட் எடுத்து, உடனே ரிசல்ட்டும் கொடுத்தனர். அத்துடன், வேறு சில சலுகைகளையும் அறிவித்தனர்.
இறுதியாக, தலைமை மருத்துவர், 'இதுவரை நம்மிடையே டாக்டர் - பேஷன்ட் என்ற உறவு மட்டுமே இருந்தது. இப்போது, நாம் அனைவரும் நண்பர்கள்...' என்று கூறி, விடை பெற்றார். மன நிறைவுடன் திரும்பினோம்.
எல்லா மருத்துவமனைகளும் இதைக் கடைப்பிடிக்கலாமே!
சுப்புலெட்சுமி சந்திரமவுலி, மடிப்பாக்கம், சென்னை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மருத்துவரிடம் செல்லும் போது...
மாசு நிறைந்த, தாறுமாறாக மாறும் பருவ நிலைகள் உள்ள காலத்தில் நாம் வசிக்கிறோம். இதனால், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுகிறது. இதை முறையாக எதிர்கொள்வது எப்படி என்பதை, என் அனுபவத்தின் மூலம் அறிந்த சில குறிப்புகள்:
* உங்கள் பகுதியில் உள்ள அனுபவம் மிக்க, திறமையான மருத்துவரை, குடும்ப டாக்டராக வைத்துக் கொள்ளலாம். அத்துடன், அப்பாயின்ட்மென்ட் மூலம் அவரை தொடர்பு கொள்ளும் வசதி இருந்தால், காத்திருத்தலை தவிர்க்கலாம்.
* ஆண்டுக்கொரு முறை, முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளவும். ஜுரம், வலி மற்றும் காயம் என்று வேறு எந்த உடல் நலக்குறைவுக்காக போனாலும், ஏற்கனவே உள்ள நோய், உட்கொள்ளும் மருந்து போன்ற விபரங்களையும் எடுத்துச் செல்லவும்.
* 'அஜீரணம், இதயத்தில் வலி, வாயுப்பிடிப்பு, பித்தம்...' என்று உங்கள் அனுமானங்களை எல்லாம் மருத்துவரிடம் கூறினால், அவர் எரிச்சலடைவார். என்ன பிரச்னை என்பதை மட்டும் கூறவும்.
* டாக்டரை, 'டாக்டர்' என்றே அழைக்கவும்; அது தான் அவருக்கு மகிழ்ச்சியை தரும். அத்துடன், அவர் படித்த படிப்புக்கு, நாம் தரும் மரியாதை!
* அறுவை சிகிச்சை தான் தீர்வு என்று கூறினால், உடனே, ஒத்துக் கொள்ள வேண்டாம்; இன்னொரு மருத்துவரிடம் காட்டி, 'செகண்டு ஒபீனியன்' வாங்கவும்.
* நாம் உட்கொள்ளவிருக்கும் மருந்துகளுக்கு, ஏதேனும் பக்க விளைவுகள், ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உண்டா என தெரிந்து கொண்டால், வீணாக பயப்பட வேண்டாம்.
* மருத்துவரிடம் கூற வேண்டிய விஷயங்களையும், சந்தேகங்களையும், தாளிலோ அல்லது மொபைல் போனிலோ, பதிவு செய்து கொள்வது நலம்.
* மருத்துவமனையில் காத்திருக்கும் போது, அங்குள்ள பத்திரிகைகளை, குறிப்பாக, பழையவற்றை எடுத்துப் படிப்பதைத் தவிர்க்கவும்; அதில், நோய் தொற்றுகள் இருக்க வாய்ப்புண்டு!
ஆர் சாந்தா பாய், சென்னை.
மாசு நிறைந்த, தாறுமாறாக மாறும் பருவ நிலைகள் உள்ள காலத்தில் நாம் வசிக்கிறோம். இதனால், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுகிறது. இதை முறையாக எதிர்கொள்வது எப்படி என்பதை, என் அனுபவத்தின் மூலம் அறிந்த சில குறிப்புகள்:
* உங்கள் பகுதியில் உள்ள அனுபவம் மிக்க, திறமையான மருத்துவரை, குடும்ப டாக்டராக வைத்துக் கொள்ளலாம். அத்துடன், அப்பாயின்ட்மென்ட் மூலம் அவரை தொடர்பு கொள்ளும் வசதி இருந்தால், காத்திருத்தலை தவிர்க்கலாம்.
* ஆண்டுக்கொரு முறை, முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளவும். ஜுரம், வலி மற்றும் காயம் என்று வேறு எந்த உடல் நலக்குறைவுக்காக போனாலும், ஏற்கனவே உள்ள நோய், உட்கொள்ளும் மருந்து போன்ற விபரங்களையும் எடுத்துச் செல்லவும்.
* 'அஜீரணம், இதயத்தில் வலி, வாயுப்பிடிப்பு, பித்தம்...' என்று உங்கள் அனுமானங்களை எல்லாம் மருத்துவரிடம் கூறினால், அவர் எரிச்சலடைவார். என்ன பிரச்னை என்பதை மட்டும் கூறவும்.
* டாக்டரை, 'டாக்டர்' என்றே அழைக்கவும்; அது தான் அவருக்கு மகிழ்ச்சியை தரும். அத்துடன், அவர் படித்த படிப்புக்கு, நாம் தரும் மரியாதை!
* அறுவை சிகிச்சை தான் தீர்வு என்று கூறினால், உடனே, ஒத்துக் கொள்ள வேண்டாம்; இன்னொரு மருத்துவரிடம் காட்டி, 'செகண்டு ஒபீனியன்' வாங்கவும்.
* நாம் உட்கொள்ளவிருக்கும் மருந்துகளுக்கு, ஏதேனும் பக்க விளைவுகள், ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உண்டா என தெரிந்து கொண்டால், வீணாக பயப்பட வேண்டாம்.
* மருத்துவரிடம் கூற வேண்டிய விஷயங்களையும், சந்தேகங்களையும், தாளிலோ அல்லது மொபைல் போனிலோ, பதிவு செய்து கொள்வது நலம்.
* மருத்துவமனையில் காத்திருக்கும் போது, அங்குள்ள பத்திரிகைகளை, குறிப்பாக, பழையவற்றை எடுத்துப் படிப்பதைத் தவிர்க்கவும்; அதில், நோய் தொற்றுகள் இருக்க வாய்ப்புண்டு!
ஆர் சாந்தா பாய், சென்னை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
குழந்தைகளை விளையாட விடுங்கள்!
சமீபத்தில், நண்பரின் மகன் கீழே விழுந்ததில், அவனுக்கு எலும்பு முறிவு ஏற்பட, எலும்பு சிகிச்சை நிபுணரிடம் அழைத்துச் சென்றார். 'நீங்க அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறீங்களா? என்று கேட்டுள்ளார் டாக்டர்.
அதற்கு, நண்பர், 'எப்படி கண்டுபிடிச்சீங்க...' என்று ஆச்சரியப்பட்டு கேட்க, 'இப்போ கட்டப்படும் அடுக்குமாடி வீடுகள்ல சூரிய வெளிச்சம் உள்ளே வர்ற மாதிரி ஜன்னல்கள் வைக்கப்படுறதில்ல. அப்படியே ஜன்னல்கள் இருந்தாலும், அது, அடுத்த வீட்டு ஜன்னல் அருகே இருப்பதால், பெரும்பாலானோர், ஜன்னல்களை திறக்கிறதேயில்ல. இதனால், சூரிய ஒளி நம் மீது படும் வாய்ப்பு குறைஞ்சுடுது.
'சூரிய ஒளியில், எலும்புகளை வலுவாக்க உதவும், விட்டமின் டி இருக்கு. முன்பெல்லாம், மாலையில் குழந்தைங்க விளையாடுவாங்க. இப்போ, பள்ளியிலிருந்து வந்தவுடன், வீடியோ கேம்ஸ், 'டிவி' இன்டர்நெட்ன்னு வீட்டுக்குள் முடங்கிடுறாங்க.
'இதனால், குழந்தைகளோட எலும்புகள் பலவீனமடைந்து, சிறு விபத்து ஏற்பட்டாலே, எலும்பு முறிவு ஏற்படுது. குழந்தைகள் மேல் வெயில் படணும்...' என்று நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார்.
குழந்தைகளை வெயில் படாமல் பொத்தி, வளர்ப்பவரா நீங்கள்... ஆம் என்றால், உடனே மாறுங்கள்!
ஜெ.கண்ணன், சென்னை.
சமீபத்தில், நண்பரின் மகன் கீழே விழுந்ததில், அவனுக்கு எலும்பு முறிவு ஏற்பட, எலும்பு சிகிச்சை நிபுணரிடம் அழைத்துச் சென்றார். 'நீங்க அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறீங்களா? என்று கேட்டுள்ளார் டாக்டர்.
அதற்கு, நண்பர், 'எப்படி கண்டுபிடிச்சீங்க...' என்று ஆச்சரியப்பட்டு கேட்க, 'இப்போ கட்டப்படும் அடுக்குமாடி வீடுகள்ல சூரிய வெளிச்சம் உள்ளே வர்ற மாதிரி ஜன்னல்கள் வைக்கப்படுறதில்ல. அப்படியே ஜன்னல்கள் இருந்தாலும், அது, அடுத்த வீட்டு ஜன்னல் அருகே இருப்பதால், பெரும்பாலானோர், ஜன்னல்களை திறக்கிறதேயில்ல. இதனால், சூரிய ஒளி நம் மீது படும் வாய்ப்பு குறைஞ்சுடுது.
'சூரிய ஒளியில், எலும்புகளை வலுவாக்க உதவும், விட்டமின் டி இருக்கு. முன்பெல்லாம், மாலையில் குழந்தைங்க விளையாடுவாங்க. இப்போ, பள்ளியிலிருந்து வந்தவுடன், வீடியோ கேம்ஸ், 'டிவி' இன்டர்நெட்ன்னு வீட்டுக்குள் முடங்கிடுறாங்க.
'இதனால், குழந்தைகளோட எலும்புகள் பலவீனமடைந்து, சிறு விபத்து ஏற்பட்டாலே, எலும்பு முறிவு ஏற்படுது. குழந்தைகள் மேல் வெயில் படணும்...' என்று நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார்.
குழந்தைகளை வெயில் படாமல் பொத்தி, வளர்ப்பவரா நீங்கள்... ஆம் என்றால், உடனே மாறுங்கள்!
ஜெ.கண்ணன், சென்னை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
அடுக்குமாடிக் குடியிருப்பிலே வசிப்பவர்கள் இழக்கின்ற இன்பங்கள் !
=================================================================
சப்பை வயிற்றுடன் எச்சில் இலைதேடி
குப்பைத் தொட்டியில் குதிக்கின்ற நாய்!
விருந்துவரக் கா!கா! எனக்கரைந்தே ஒருசோற்றுப்
பருக்கைக்காய் மரக்கிளையில் வந்தமரும் காக்கை !
பசும்புல்லும் புண்ணாக்கும் தின்பதற்கு வழியின்றி
நசுங்கிய செய்தித்தாள் தின்னுகின்ற மாடு!
பெருஞ்சாக்கு மூட்டையுடன் பேப்பர் பொறுக்குபவன்!
வருகின்ற எதிர்காலம் சொல்லும் கிளிஜோஷியன்!
தட்டுமுட்டு சாமானும் தகர டப்பாவும்
இட்டால் இனிக்கின்ற பேரீட்சை தருபவன்!
செருப்பு தைப்பவன் ! குடைரிப்பேர் செய்பவன் !
தெருவெங்கும் சுற்றியே சாணை பிடிப்பவன் !
கம்பியில் நடக்கின்ற கூத்தாடி! தன்உழைப்பை
நம்பியே பிழைக்கின்ற தென்னை மரமேறி!
அனுமார் வேடமிட்டு அலைகின்ற யாசகன்
இத்தனைக் காட்சிகளும் பார்க்கின்ற இன்பத்தை
மொத்தமாய் இழந்து எட்டாத உயரத்தில்
அடுக்குமாடிக் குடியிருப்பில் அனைத்து வசதியுடன்
மிடுக்குடன் வாழ்கின்ற பாவியேன் நான் !
=================================================================
சப்பை வயிற்றுடன் எச்சில் இலைதேடி
குப்பைத் தொட்டியில் குதிக்கின்ற நாய்!
விருந்துவரக் கா!கா! எனக்கரைந்தே ஒருசோற்றுப்
பருக்கைக்காய் மரக்கிளையில் வந்தமரும் காக்கை !
பசும்புல்லும் புண்ணாக்கும் தின்பதற்கு வழியின்றி
நசுங்கிய செய்தித்தாள் தின்னுகின்ற மாடு!
பெருஞ்சாக்கு மூட்டையுடன் பேப்பர் பொறுக்குபவன்!
வருகின்ற எதிர்காலம் சொல்லும் கிளிஜோஷியன்!
தட்டுமுட்டு சாமானும் தகர டப்பாவும்
இட்டால் இனிக்கின்ற பேரீட்சை தருபவன்!
செருப்பு தைப்பவன் ! குடைரிப்பேர் செய்பவன் !
தெருவெங்கும் சுற்றியே சாணை பிடிப்பவன் !
கம்பியில் நடக்கின்ற கூத்தாடி! தன்உழைப்பை
நம்பியே பிழைக்கின்ற தென்னை மரமேறி!
அனுமார் வேடமிட்டு அலைகின்ற யாசகன்
இத்தனைக் காட்சிகளும் பார்க்கின்ற இன்பத்தை
மொத்தமாய் இழந்து எட்டாத உயரத்தில்
அடுக்குமாடிக் குடியிருப்பில் அனைத்து வசதியுடன்
மிடுக்குடன் வாழ்கின்ற பாவியேன் நான் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
அருமையாக (புலம்பி? ) சொல்லி இருகீங்க ஐயா, இன்னும் கூட நிறைய சொல்லல்லாம் நாம் .........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 82 of 100 • 1 ... 42 ... 81, 82, 83 ... 91 ... 100
Similar topics
» படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது ..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது ..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
Page 82 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|