Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
+46
Namasivayam Mu
பழ.முத்துராமலிங்கம்
சசி
M.Jagadeesan
வேல்முருகன்
balakarthik
சரவணன்
Preethika Chandrakumar
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
prabatneb
சிவனாசான்
அகிலன்
idigiti
solomon
உமேரா
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
M.Saranya
jesifer
விமந்தனி
பிஜிராமன்
கோ. செந்தில்குமார்
Dr.S.Soundarapandian
கிருஷ்ணா
பாலாஜி
சிவா
SenthilMookan
T.N.Balasubramanian
உதயசுதா
பார்த்திபன்
ஹர்ஷித்
jenisiva
amirmaran
விஸ்வாஜீ
ayyasamy ram
ஜாஹீதாபானு
அருண்
M.M.SENTHIL
அசுரன்
Muthumohamed
mbalasaravanan
ராஜா
malik
krishnaamma
50 posters
Page 80 of 100
Page 80 of 100 • 1 ... 41 ... 79, 80, 81 ... 90 ... 100
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:38 pm; edited 5 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மரியாதையும் தலைகாக்கும்!
இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்யும் என் நண்பர், சமீபத்தில், பணி நேரம் முடியும் தறுவாயில், இறைச்சி பதப்படுத்தும், 'ப்ரீசர்' அறைக்குள், ஏதோ வேலையாக இருந்த போது, எதிர்பாராத விதமாய், அதன் தானியங்கி கதவு, பூட்டிக் கொண்டது.
பெரும் கூச்சலிட்டாலும், அவர் எழுப்பிய ஓசை, வெளியே யாருக்கும் கேட்கவில்லை; மேலும், பெரும்பாலானோர் வேலை முடிந்து, கிளம்பி விட்டனர். 'இன்னும் சிறிது நேரத்தில், 'ஐசில்' உறைந்து, இறக்கப் போகிறோம்...' என்று எண்ணி, கவலையில் இருந்த வேளையில், கதவு திறக்கும் சத்தம் கேட்டது; உயிர் வந்தவராய், வெளியே ஓடி வந்திருக்கிறார். வெளியே தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தார். சந்தோஷத்தில் அவரை கட்டி தழுவி, 'நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?' என்று கேட்டுள்ளார்.
'சார்... நான் இங்க, 10 வருஷமா வேலை செய்றேன். நீங்க ஒருத்தர் தான், என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு, காலைல வணக்கமும், சாயங்காலம், 'குட் பை'யும் சொல்றவரு; இன்னிக்கி காலைல, வணக்கம் சொன்னீங்க... ஆனா, சாயங்காலம் நீங்க, 'குட் பை' சொல்லல. அதனால, சந்தேகப்பட்டு, உள்ளே வந்து, ஒவ்வொரு இடமா தேடினேன்; அப்போ தான் உங்கள கண்டு பிடிச்சேன்...' என்றார்.
செய்யும் பணியை வைத்து மற்றவர்களை தரக்குறைவாக எண்ணாமல், மனுஷனாக மதித்து பரஸ்பரம், மரியாதை செலுத்துவது, எப்போதுமே, நன்மை பயக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்!
ஆர்.வினோத், சென்னை.
இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்யும் என் நண்பர், சமீபத்தில், பணி நேரம் முடியும் தறுவாயில், இறைச்சி பதப்படுத்தும், 'ப்ரீசர்' அறைக்குள், ஏதோ வேலையாக இருந்த போது, எதிர்பாராத விதமாய், அதன் தானியங்கி கதவு, பூட்டிக் கொண்டது.
பெரும் கூச்சலிட்டாலும், அவர் எழுப்பிய ஓசை, வெளியே யாருக்கும் கேட்கவில்லை; மேலும், பெரும்பாலானோர் வேலை முடிந்து, கிளம்பி விட்டனர். 'இன்னும் சிறிது நேரத்தில், 'ஐசில்' உறைந்து, இறக்கப் போகிறோம்...' என்று எண்ணி, கவலையில் இருந்த வேளையில், கதவு திறக்கும் சத்தம் கேட்டது; உயிர் வந்தவராய், வெளியே ஓடி வந்திருக்கிறார். வெளியே தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தார். சந்தோஷத்தில் அவரை கட்டி தழுவி, 'நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?' என்று கேட்டுள்ளார்.
'சார்... நான் இங்க, 10 வருஷமா வேலை செய்றேன். நீங்க ஒருத்தர் தான், என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு, காலைல வணக்கமும், சாயங்காலம், 'குட் பை'யும் சொல்றவரு; இன்னிக்கி காலைல, வணக்கம் சொன்னீங்க... ஆனா, சாயங்காலம் நீங்க, 'குட் பை' சொல்லல. அதனால, சந்தேகப்பட்டு, உள்ளே வந்து, ஒவ்வொரு இடமா தேடினேன்; அப்போ தான் உங்கள கண்டு பிடிச்சேன்...' என்றார்.
செய்யும் பணியை வைத்து மற்றவர்களை தரக்குறைவாக எண்ணாமல், மனுஷனாக மதித்து பரஸ்பரம், மரியாதை செலுத்துவது, எப்போதுமே, நன்மை பயக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்!
ஆர்.வினோத், சென்னை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மொட்டை கடுதாசி எழுதுபவர்களே...
வேலைக்குப் போய், தன் வயதான பெற்றோர், விதவை அண்ணி மற்றும் அவரது குழந்தைகளை காப்பாற்றி வருகிறாள் என் தோழி. இதற்காகவே திருமணம் கூட செய்யவில்லை.
சமீபகாலமாக அவளுக்கு தினமும், 'ஐ லவ் யூ' என்றும், 'உன், டிரெஸ் சூப்பர்!' 'ஏன் என்னை ஏறெடுத்து பார்ப்பதில்லை...' என்றும் மொட்டை கடிதங்கள் வருகின்றன. எழுதியவன் யாரென்று தெரியாதபோது, இவள் யாரை ஏறெடுத்துப் பார்ப்பாள்.
'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பது போன்று, இப்போது, எந்த ஆணைப் பார்த்தாலும், அவளுக்கு அலர்ஜி ஆகிவிட்டது. மேலும், வீட்டுக்கு வரும் கடிதங்கள், அவள் அப்பாவின் கையில் கிடைப்பதால், அவர் கடிதத்தை படித்து விட்டு, 'யாரவன்?' என்று கேட்டு மிரட்டுகிறார்.
காதலிப்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. ஆனால், அது எதிராளியை பாதிக்காமல் இருக்க வேண்டாமா... செய்யாத தவறுக்கு தினம் தினம் தண்டனை பெறும் என் தோழியின் நிலைமை, இனிமேலும் தொடரக் கூடாது.
இதைக் கண்ட பிறகாவது, போக்கிரித்தனமாக மொட்டைக் கடிதங்கள் எழுதி, மற்றவர்களை இம்சிக்கும் கொடுமையை நிறுத்துங்கள்!
பா.பார்வதி, சிவகாசி.
வேலைக்குப் போய், தன் வயதான பெற்றோர், விதவை அண்ணி மற்றும் அவரது குழந்தைகளை காப்பாற்றி வருகிறாள் என் தோழி. இதற்காகவே திருமணம் கூட செய்யவில்லை.
சமீபகாலமாக அவளுக்கு தினமும், 'ஐ லவ் யூ' என்றும், 'உன், டிரெஸ் சூப்பர்!' 'ஏன் என்னை ஏறெடுத்து பார்ப்பதில்லை...' என்றும் மொட்டை கடிதங்கள் வருகின்றன. எழுதியவன் யாரென்று தெரியாதபோது, இவள் யாரை ஏறெடுத்துப் பார்ப்பாள்.
'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பது போன்று, இப்போது, எந்த ஆணைப் பார்த்தாலும், அவளுக்கு அலர்ஜி ஆகிவிட்டது. மேலும், வீட்டுக்கு வரும் கடிதங்கள், அவள் அப்பாவின் கையில் கிடைப்பதால், அவர் கடிதத்தை படித்து விட்டு, 'யாரவன்?' என்று கேட்டு மிரட்டுகிறார்.
காதலிப்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. ஆனால், அது எதிராளியை பாதிக்காமல் இருக்க வேண்டாமா... செய்யாத தவறுக்கு தினம் தினம் தண்டனை பெறும் என் தோழியின் நிலைமை, இனிமேலும் தொடரக் கூடாது.
இதைக் கண்ட பிறகாவது, போக்கிரித்தனமாக மொட்டைக் கடிதங்கள் எழுதி, மற்றவர்களை இம்சிக்கும் கொடுமையை நிறுத்துங்கள்!
பா.பார்வதி, சிவகாசி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
ராசி இல்லையென பெண்ணை திட்டலாமா?
என் நண்பரின் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்தனர். ஏழெட்டு வரன்கள் வந்தன; அத்தனையும் நல்ல இடம். வரதட்சணை, சீர்வரிசை பிரச்னையால், அனைத்தும் தட்டிப் போனது. தகுதிக்கேற்ற வரனை பார்க்காமல், பெரிய இடமாக, பார்த்தது தான் காரணம்.
இச்சூழ்நிலையில், பெண்ணுக்கு ஜாதகம் பார்த்துள்ளனர். ஜோதிடர் தன் பங்குக்கு, '30 வயதுக்கு மேல தான், திருமணம் கூடி வரும்...' என்று கூறி விட்டார். ஏற்கனவே, வரன் தேடி சலித்துள்ள நண்பரின் குடும்பத்தார், இது தான் சாக்கு என்று தற்போது, முயற்சியை கைவிட்டு, அப்பெண்ணை கரித்து கொட்டுகின்றனர்.
நண்பரோ, 'இந்த சனியன் எப்போ ஒழியறது; எனக்கு எப்போ திருமணம் ஆகிறது...' என புலம்புகிறார். அந்த பெண்ணின் நிலையோ பரிதாபமாக உள்ளது. பெற்றவர்கள், வரன் பார்க்கத் தெரியாமல் பார்த்துவிட்டு, 'ராசி இல்லாதவள், அதிர்ஷ்டம் கெட்டவள்...' என திட்டுவது எந்த விதத்தில் நியாயம்!
எப்போதுமே, 'விரலுக்கு தகுந்த வீக்கம் தேவை' என்ற பழமொழியை, பெண் வீட்டார் மறந்து விட கூடாது!
கே.விக்னேஷ், விருதுநகர்.
என் நண்பரின் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்தனர். ஏழெட்டு வரன்கள் வந்தன; அத்தனையும் நல்ல இடம். வரதட்சணை, சீர்வரிசை பிரச்னையால், அனைத்தும் தட்டிப் போனது. தகுதிக்கேற்ற வரனை பார்க்காமல், பெரிய இடமாக, பார்த்தது தான் காரணம்.
இச்சூழ்நிலையில், பெண்ணுக்கு ஜாதகம் பார்த்துள்ளனர். ஜோதிடர் தன் பங்குக்கு, '30 வயதுக்கு மேல தான், திருமணம் கூடி வரும்...' என்று கூறி விட்டார். ஏற்கனவே, வரன் தேடி சலித்துள்ள நண்பரின் குடும்பத்தார், இது தான் சாக்கு என்று தற்போது, முயற்சியை கைவிட்டு, அப்பெண்ணை கரித்து கொட்டுகின்றனர்.
நண்பரோ, 'இந்த சனியன் எப்போ ஒழியறது; எனக்கு எப்போ திருமணம் ஆகிறது...' என புலம்புகிறார். அந்த பெண்ணின் நிலையோ பரிதாபமாக உள்ளது. பெற்றவர்கள், வரன் பார்க்கத் தெரியாமல் பார்த்துவிட்டு, 'ராசி இல்லாதவள், அதிர்ஷ்டம் கெட்டவள்...' என திட்டுவது எந்த விதத்தில் நியாயம்!
எப்போதுமே, 'விரலுக்கு தகுந்த வீக்கம் தேவை' என்ற பழமொழியை, பெண் வீட்டார் மறந்து விட கூடாது!
கே.விக்னேஷ், விருதுநகர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
வித்தியாசமான, விசிட்டிங் கார்டு!
ஆட்டோ ஓட்டுனரான என் குடும்ப நண்பரை சமீபத்தில் சந்தித்தேன். அப்போது, அவருடைய விசிட்டிங் கார்டை கொடுத்து, 'எந்த நேரமும் என்னை அழைக்கலாம்; உடனடியாக என் ஆட்டோ வரும்...' என்றார்.
விசிட்டிங் கார்டை வாங்கிப் பார்த்தவன், வியந்தேன். காரணம், '24 மணி நேர சேவை - உங்களின் தேவைக்காக, சேவையுடன் காத்திருக்கும், இந்த ஆட்டோவை அழையுங்கள்...' என்ற தகவலுடன், அவருடைய, மொபைல் எண்களும், கார்டின் பின்புறம் அந்நகரில் உள்ள மருத்துவமனைகள், சிறப்பு மருத்துவர்கள், மருந்துக் கடைகள், காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் மற்றும் வங்கிகள் என, அத்தனை மொபைல் போன் எண்களையும் அச்சிட்டிருந்தார்.
'எப்படி இந்த யோசனை வந்தது?' என்றேன்.
'பணம் சம்பாதிப்பது மட்டும் என் நோக்கமல்ல; வழி தெரியாமல் தடுமாறுவோருக்கு என்னால் முடிந்த சிறு சிறு உதவி செய்வதும் தான் ...' என்றார். அவரின் சேவை நோக்கத்தை எண்ணி, பெருமிதம் அடைந்தேன். இவரைப் போல், மற்ற ஆட்டோக்காரர்களும் பின்பற்றினால், மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமே!
மு.சுகாரா, தொண்டி.
ஆட்டோ ஓட்டுனரான என் குடும்ப நண்பரை சமீபத்தில் சந்தித்தேன். அப்போது, அவருடைய விசிட்டிங் கார்டை கொடுத்து, 'எந்த நேரமும் என்னை அழைக்கலாம்; உடனடியாக என் ஆட்டோ வரும்...' என்றார்.
விசிட்டிங் கார்டை வாங்கிப் பார்த்தவன், வியந்தேன். காரணம், '24 மணி நேர சேவை - உங்களின் தேவைக்காக, சேவையுடன் காத்திருக்கும், இந்த ஆட்டோவை அழையுங்கள்...' என்ற தகவலுடன், அவருடைய, மொபைல் எண்களும், கார்டின் பின்புறம் அந்நகரில் உள்ள மருத்துவமனைகள், சிறப்பு மருத்துவர்கள், மருந்துக் கடைகள், காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் மற்றும் வங்கிகள் என, அத்தனை மொபைல் போன் எண்களையும் அச்சிட்டிருந்தார்.
'எப்படி இந்த யோசனை வந்தது?' என்றேன்.
'பணம் சம்பாதிப்பது மட்டும் என் நோக்கமல்ல; வழி தெரியாமல் தடுமாறுவோருக்கு என்னால் முடிந்த சிறு சிறு உதவி செய்வதும் தான் ...' என்றார். அவரின் சேவை நோக்கத்தை எண்ணி, பெருமிதம் அடைந்தேன். இவரைப் போல், மற்ற ஆட்டோக்காரர்களும் பின்பற்றினால், மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமே!
மு.சுகாரா, தொண்டி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மனைவிக்கு துரோகம் செய்யாதீர்!
சுயதொழில் செய்யும் எனக்கு, அழகான மனைவியும், அறிவான மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், என் அலுவலகத்தில், பெண் உதவியாளருடன் ஏற்பட்ட பழக்கம், தவறான தொடர்பை ஏற்படுத்தி விட்டது.
ஒரு கட்டத்தில் இதை தவறு என உணர்ந்து, 'இனிமேல் இந்த உறவு வேண்டாம்; உனக்கு என்ன தேவையோ அனைத்து உதவிகளும் செய்கிறேன்...' என்றேன். அவளோ, 'காசு, பணம் தேவையில்ல; உங்களுடன் இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி...' என்றாள். வேறு வழியில்லாமல், இரட்டை வாழ்க்கை வாழ்ந்தேன்.
இந்த விஷயம், எப்படியோ என் மனைவியின் காதுகளுக்கு போக, அவள் இது குறித்து கேட்க, நானும் உண்மையைக் கூறி, மன்னிப்பு கேட்டேன். ஆனால், அவளுக்கோ அதிர்ச்சியில், நாக்கு இழுத்துக் கொண்டதுடன், மனநிலை பாதிக்கப்பட்டவள் போல் ஆகி விட்டாள். எவ்வளவோ வைத்தியத்திற்கு பின், இன்று, ஒரு சில வார்த்தைகள் பேசினாலும், பிரமை பிடித்தவள் போலவே இருக்கிறாள்.
அவளின் இந்த நிலைக்கு காரணமான நான், 'இந்த அன்புத் தெய்வத்திற்கா துரோகம் செய்தோம்...' என நினைத்து, ஒவ்வொரு நாளும், ரத்தக் கண்ணீர் வடிக்கிறேன். யாருக்கும் என் நிலை வரக்கூடாது என்ற எண்ணத்தில் கூறுகிறேன்... இன்பத்திலும், துன்பத்திலும் நம்முடன் பங்கு போட, மனைவியை தவிர, இவ்வுலகில் யாரும் இல்லை என்பதை மறந்து விடாதீர்கள்!
பெயர் வெளியிட விரும்பாத வாசகர், கோயம்புத்தூர்.
சுயதொழில் செய்யும் எனக்கு, அழகான மனைவியும், அறிவான மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், என் அலுவலகத்தில், பெண் உதவியாளருடன் ஏற்பட்ட பழக்கம், தவறான தொடர்பை ஏற்படுத்தி விட்டது.
ஒரு கட்டத்தில் இதை தவறு என உணர்ந்து, 'இனிமேல் இந்த உறவு வேண்டாம்; உனக்கு என்ன தேவையோ அனைத்து உதவிகளும் செய்கிறேன்...' என்றேன். அவளோ, 'காசு, பணம் தேவையில்ல; உங்களுடன் இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி...' என்றாள். வேறு வழியில்லாமல், இரட்டை வாழ்க்கை வாழ்ந்தேன்.
இந்த விஷயம், எப்படியோ என் மனைவியின் காதுகளுக்கு போக, அவள் இது குறித்து கேட்க, நானும் உண்மையைக் கூறி, மன்னிப்பு கேட்டேன். ஆனால், அவளுக்கோ அதிர்ச்சியில், நாக்கு இழுத்துக் கொண்டதுடன், மனநிலை பாதிக்கப்பட்டவள் போல் ஆகி விட்டாள். எவ்வளவோ வைத்தியத்திற்கு பின், இன்று, ஒரு சில வார்த்தைகள் பேசினாலும், பிரமை பிடித்தவள் போலவே இருக்கிறாள்.
அவளின் இந்த நிலைக்கு காரணமான நான், 'இந்த அன்புத் தெய்வத்திற்கா துரோகம் செய்தோம்...' என நினைத்து, ஒவ்வொரு நாளும், ரத்தக் கண்ணீர் வடிக்கிறேன். யாருக்கும் என் நிலை வரக்கூடாது என்ற எண்ணத்தில் கூறுகிறேன்... இன்பத்திலும், துன்பத்திலும் நம்முடன் பங்கு போட, மனைவியை தவிர, இவ்வுலகில் யாரும் இல்லை என்பதை மறந்து விடாதீர்கள்!
பெயர் வெளியிட விரும்பாத வாசகர், கோயம்புத்தூர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
உபத்திரவம் செய்யாதீர்!
என் நண்பர் ஒருவர், அவருடன் வங்கியில் பணிபுரியும் இளம் விதவைப் பெண்ணை, வீட்டில் உள்ளோரின் அனுமதியுடன் சமீபத்தில் திருமணம் செய்தார். திருமணத்திற்கு வந்திருந்த நண்பர்களில் சிலர், அவர்களுக்கு வாழ்த்து கூறாமல், 'ஏண்டா... அடுத்தவன் அனுபவிச்ச பெண்ணைப் போயா திருமணம் செய்றே...' என்றனர்,
நண்பரின் மனம் புண்படும்படி! ஆனாலும், நண்பர், உயர்ந்த உள்ளத்துடன், அவர்கள் பேசியதை பொருட்படுத்தாமல், 'என் மனசுக்கு பிடிச்சுருக்கு; திருமணம் செய்கிறேன்...' என்றார்.
கணவனை இழந்த பெண்களின் மறுவாழ்விற்காக பாடுபட்ட பாரதியார் மற்றும் பாரதிதாசன் போன்றோர் பிறந்த இந்த நாட்டில், படித்த இளைஞர்களே இதுபோல் பேசுவது நியாயமா?
கணவனை இழந்த பெண் என்றால், முற்றும் துறந்த ஞானியா? அவர்களுக்கும் உணர்வு, அன்பு மற்றும் பாசம் அனைத்தும் உண்டு. இத்தகைய திருமணத்திற்கு செல்வோர், மணமக்களை வாழ்த்தாவிட்டாலும், மனம் புண்படும்படி பேசாதீர்கள்!
எம்.சந்திரமோகன், மதுரை.
என் நண்பர் ஒருவர், அவருடன் வங்கியில் பணிபுரியும் இளம் விதவைப் பெண்ணை, வீட்டில் உள்ளோரின் அனுமதியுடன் சமீபத்தில் திருமணம் செய்தார். திருமணத்திற்கு வந்திருந்த நண்பர்களில் சிலர், அவர்களுக்கு வாழ்த்து கூறாமல், 'ஏண்டா... அடுத்தவன் அனுபவிச்ச பெண்ணைப் போயா திருமணம் செய்றே...' என்றனர்,
நண்பரின் மனம் புண்படும்படி! ஆனாலும், நண்பர், உயர்ந்த உள்ளத்துடன், அவர்கள் பேசியதை பொருட்படுத்தாமல், 'என் மனசுக்கு பிடிச்சுருக்கு; திருமணம் செய்கிறேன்...' என்றார்.
கணவனை இழந்த பெண்களின் மறுவாழ்விற்காக பாடுபட்ட பாரதியார் மற்றும் பாரதிதாசன் போன்றோர் பிறந்த இந்த நாட்டில், படித்த இளைஞர்களே இதுபோல் பேசுவது நியாயமா?
கணவனை இழந்த பெண் என்றால், முற்றும் துறந்த ஞானியா? அவர்களுக்கும் உணர்வு, அன்பு மற்றும் பாசம் அனைத்தும் உண்டு. இத்தகைய திருமணத்திற்கு செல்வோர், மணமக்களை வாழ்த்தாவிட்டாலும், மனம் புண்படும்படி பேசாதீர்கள்!
எம்.சந்திரமோகன், மதுரை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
இது சரியா, இளம் மங்கையரே!
சமீபத்தில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்து, கோடம்பாக்கம் நோக்கி, இருசக்கர வாகனத்தில் சென்ற போது, கனத்த மழையின் காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, வாகனங்கள் நகராததால், பேருந்துக்காக காத்திருந்த பயணிகள், மழையில் நனைந்தபடியே வீட்டிற்கு நடந்து சென்றனர்.
அதில், இரு இளம்பெண்களும் நடந்து சென்றனர்; போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்த போதும், அத்தனை, 'ஜொள்ளர்'களும் அந்த பெண்களையே குறுகுறுவென பார்த்தனர். காரணம் அவர்கள் அணிந்திருந்த ஆடை!
கறுப்பு வண்ணத்தில், 'லெக்கின்ஸ்' எனப்படும் இன்றைய நவீன கால பேன்ட்டும், இடுப்பு வரை உள்ள, வெள்ளை நிற, டீ-சர்ட்டும் அணிந்திருந்தனர். மழையின் காரணமாக, அவர்களின் உடை, மேனியோடு ஒட்டியிருந்தது; இது, பெண்களையே முகம் சுளிக்க வைத்தது.
ஆடை சுதந்திரம், பெண் சுதந்திரம் எல்லாம் சரி தான்; மழை காலத்திற்கு தகுந்தாற்போல உடை அணிய வேண்டாமா, இளம் மங்கையரே!
சி.கலாதம்பி, பட்டுகோட்டை.
சமீபத்தில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்து, கோடம்பாக்கம் நோக்கி, இருசக்கர வாகனத்தில் சென்ற போது, கனத்த மழையின் காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, வாகனங்கள் நகராததால், பேருந்துக்காக காத்திருந்த பயணிகள், மழையில் நனைந்தபடியே வீட்டிற்கு நடந்து சென்றனர்.
அதில், இரு இளம்பெண்களும் நடந்து சென்றனர்; போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்த போதும், அத்தனை, 'ஜொள்ளர்'களும் அந்த பெண்களையே குறுகுறுவென பார்த்தனர். காரணம் அவர்கள் அணிந்திருந்த ஆடை!
கறுப்பு வண்ணத்தில், 'லெக்கின்ஸ்' எனப்படும் இன்றைய நவீன கால பேன்ட்டும், இடுப்பு வரை உள்ள, வெள்ளை நிற, டீ-சர்ட்டும் அணிந்திருந்தனர். மழையின் காரணமாக, அவர்களின் உடை, மேனியோடு ஒட்டியிருந்தது; இது, பெண்களையே முகம் சுளிக்க வைத்தது.
ஆடை சுதந்திரம், பெண் சுதந்திரம் எல்லாம் சரி தான்; மழை காலத்திற்கு தகுந்தாற்போல உடை அணிய வேண்டாமா, இளம் மங்கையரே!
சி.கலாதம்பி, பட்டுகோட்டை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1183423krishnaamma wrote:
நண்பரின் மனம் புண்படும்படி! ஆனாலும், நண்பர், உயர்ந்த உள்ளத்துடன், அவர்கள் பேசியதை பொருட்படுத்தாமல், 'என் மனசுக்கு பிடிச்சுருக்கு; திருமணம் செய்கிறேன்...' என்றார்.
கணவனை இழந்த பெண்களின் மறுவாழ்விற்காக பாடுபட்ட பாரதியார் மற்றும் பாரதிதாசன் போன்றோர் பிறந்த இந்த நாட்டில், படித்த இளைஞர்களே இதுபோல் பேசுவது நியாயமா?
சில நண்பர்கள் இப்படி செய்வது நல்லது அல்ல. நண்பர் எடுத்த இந்த முடிவை பாராட்டாவிட்டலும்
குறை கூறாதிருந்தாலே நல்லது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1183424krishnaamma wrote:
கறுப்பு வண்ணத்தில், 'லெக்கின்ஸ்' எனப்படும் இன்றைய நவீன கால பேன்ட்டும், இடுப்பு வரை உள்ள, வெள்ளை நிற, டீ-சர்ட்டும் அணிந்திருந்தனர். மழையின் காரணமாக, அவர்களின் உடை, மேனியோடு ஒட்டியிருந்தது; இது, பெண்களையே முகம் சுளிக்க வைத்தது.
சகோதரிகள் இதை தவிர்க்கலாமே??
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 80 of 100 • 1 ... 41 ... 79, 80, 81 ... 90 ... 100
Similar topics
» படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது ..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது ..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
Page 80 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|