Latest topics
» கருத்துப்படம் 18/09/2024by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
+46
Namasivayam Mu
பழ.முத்துராமலிங்கம்
சசி
M.Jagadeesan
வேல்முருகன்
balakarthik
சரவணன்
Preethika Chandrakumar
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
prabatneb
சிவனாசான்
அகிலன்
idigiti
solomon
உமேரா
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
M.Saranya
jesifer
விமந்தனி
பிஜிராமன்
கோ. செந்தில்குமார்
Dr.S.Soundarapandian
கிருஷ்ணா
பாலாஜி
சிவா
SenthilMookan
T.N.Balasubramanian
உதயசுதா
பார்த்திபன்
ஹர்ஷித்
jenisiva
amirmaran
விஸ்வாஜீ
ayyasamy ram
ஜாஹீதாபானு
அருண்
M.M.SENTHIL
அசுரன்
Muthumohamed
mbalasaravanan
ராஜா
malik
krishnaamma
50 posters
Page 75 of 100
Page 75 of 100 • 1 ... 39 ... 74, 75, 76 ... 87 ... 100
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:38 pm; edited 5 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
உடைமைகளின் மீதும், ஒரு கண்!
சமீபத்தில் ஒரு நாள், இருசக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தேன். எனக்கு முன், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒருவர், வேகத் தடை மீது மோதி, நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். பலமான அடி எதுவும் இல்லை என்றாலும், கீழே விழுந்த அதிர்ச்சியில் மயக்கமடைந்தார்.
காலை நேரம் என்பதால், சாலையில், நிறைய வாகனங்கள் சென்றபடி இருந்தன. என் வண்டியை நிறுத்தி, பாதசாரி ஒருவரின் உதவியுடன் அவரை தூக்கி நடைபாதையில் படுக்க வைத்தேன். அதற்குள், போக்குவரத்து காவலர்கள் வந்து விட்டனர்.
இனி, அவர்கள் பார்த்துக் கொள்வர் என்று எண்ணி, என் வாகனத்தை எடுக்க வந்தேன்.
என் வாகனத்திலேயே சாவி இருப்பதை பார்த்து விட்ட ஒருவன், வாகனத்தை கிளப்ப முயற்சித்து கொண்டிருந்தான். மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று, அவனை தடுத்து நிறுத்தினேன். 'உங்கள் வாகனம் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததால், அதை ஓரமாக நிறுத்துகிறேன்...' என்று சாக்கு போக்கு கூறினான் அந்த கயவன்.
'வண்டியை ஏன் ஓட்ட முயற்சி செய்தே... வண்டியை தள்ளி போய் ஓரமாக நிறுத்தலாமே...' என்ற என் கேள்விக்கு, அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஒரு நொடி தாமதித்திருந்தால், என் வண்டி காணாமல் போயிருக்கும். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவது மனிதாபிமானம் தான்; அதே நேரம், உங்கள் உடைமைகளின் மீதும், ஒரு கண் வைத்துக் கொள்ளுங்கள்.
— ஜெ.கண்ணன், சென்னை.
சமீபத்தில் ஒரு நாள், இருசக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தேன். எனக்கு முன், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒருவர், வேகத் தடை மீது மோதி, நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். பலமான அடி எதுவும் இல்லை என்றாலும், கீழே விழுந்த அதிர்ச்சியில் மயக்கமடைந்தார்.
காலை நேரம் என்பதால், சாலையில், நிறைய வாகனங்கள் சென்றபடி இருந்தன. என் வண்டியை நிறுத்தி, பாதசாரி ஒருவரின் உதவியுடன் அவரை தூக்கி நடைபாதையில் படுக்க வைத்தேன். அதற்குள், போக்குவரத்து காவலர்கள் வந்து விட்டனர்.
இனி, அவர்கள் பார்த்துக் கொள்வர் என்று எண்ணி, என் வாகனத்தை எடுக்க வந்தேன்.
என் வாகனத்திலேயே சாவி இருப்பதை பார்த்து விட்ட ஒருவன், வாகனத்தை கிளப்ப முயற்சித்து கொண்டிருந்தான். மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று, அவனை தடுத்து நிறுத்தினேன். 'உங்கள் வாகனம் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததால், அதை ஓரமாக நிறுத்துகிறேன்...' என்று சாக்கு போக்கு கூறினான் அந்த கயவன்.
'வண்டியை ஏன் ஓட்ட முயற்சி செய்தே... வண்டியை தள்ளி போய் ஓரமாக நிறுத்தலாமே...' என்ற என் கேள்விக்கு, அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஒரு நொடி தாமதித்திருந்தால், என் வண்டி காணாமல் போயிருக்கும். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவது மனிதாபிமானம் தான்; அதே நேரம், உங்கள் உடைமைகளின் மீதும், ஒரு கண் வைத்துக் கொள்ளுங்கள்.
— ஜெ.கண்ணன், சென்னை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
ஆசிரியையின் புலம்பல்!
அரசுப் பள்ளி ஆசிரியை நான்; சமீபத்தில் ஒருநாள், வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, ஒரு மாணவி, என்னிடம் வந்து, பள்ளிக்கு வரும் வழியில், மாதாந்திர பிரச்னை ஏற்பட்டு விட்டதாகவும், அதனால், கடும் வயிற்று வலி உள்ளதாகவும் கூறி, வீட்டுக்குச் செல்ல அனுமதி கேட்டாள்.
நானும், உண்மையென நம்பி, அவளை அனுப்பி வைத்தேன். பின்பு தான் தெரிந்தது, அவள், தன் பாய் பிரண்டுடன் சுற்றுவதற்காக, இப்படி பொய் சொல்லி இருக்கிறாள் என்று! அவள் படிப்பதோ எட்டாம் வகுப்பு; பாய் பிரெண்டோ, வேறொரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு!
'ஏன் படிக்கல?'ன்னு கேட்டாலே, மாணவ - மாணவியர் தற்கொலை செய்து, எங்கள் மீது பழி போடும் காலம் இது. நான் கண்டிக்கப் போக, அவள் எக்குதப்பாக ஏதாவது செய்து, பழி, என் மீது விழுந்து விட்டால் என்ன செய்வது என்று, கஷ்டப்பட்டு என்னை அடக்கி கொண்டேன். இப்படியொரு தர்மசங்கடம், ஆசிரியர்களான எங்களுக்கு தேவை தானா?
சுகுணா ரவிச்சந்திரன், மதுரை.
அரசுப் பள்ளி ஆசிரியை நான்; சமீபத்தில் ஒருநாள், வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, ஒரு மாணவி, என்னிடம் வந்து, பள்ளிக்கு வரும் வழியில், மாதாந்திர பிரச்னை ஏற்பட்டு விட்டதாகவும், அதனால், கடும் வயிற்று வலி உள்ளதாகவும் கூறி, வீட்டுக்குச் செல்ல அனுமதி கேட்டாள்.
நானும், உண்மையென நம்பி, அவளை அனுப்பி வைத்தேன். பின்பு தான் தெரிந்தது, அவள், தன் பாய் பிரண்டுடன் சுற்றுவதற்காக, இப்படி பொய் சொல்லி இருக்கிறாள் என்று! அவள் படிப்பதோ எட்டாம் வகுப்பு; பாய் பிரெண்டோ, வேறொரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு!
'ஏன் படிக்கல?'ன்னு கேட்டாலே, மாணவ - மாணவியர் தற்கொலை செய்து, எங்கள் மீது பழி போடும் காலம் இது. நான் கண்டிக்கப் போக, அவள் எக்குதப்பாக ஏதாவது செய்து, பழி, என் மீது விழுந்து விட்டால் என்ன செய்வது என்று, கஷ்டப்பட்டு என்னை அடக்கி கொண்டேன். இப்படியொரு தர்மசங்கடம், ஆசிரியர்களான எங்களுக்கு தேவை தானா?
சுகுணா ரவிச்சந்திரன், மதுரை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
டாக்டர் செய்த ஐடியா!
சமீபத்தில், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை சென்றிருந்தேன். கூட்டம் அதிகமாக இருக்கவே, வரிசையில் காத்திருக்க நேர்ந்தது. அப்போது, 'ரிசப்ஷனிஸ்ட்' பைண்டிங் செய்யப்பட்ட ஒரு புத்தகத்தை, ஆளுக்கொன்று அளித்து, டாக்டரின் அழைப்பு வரும் வரை, படித்துக் கொண்டிருக்கும்படி கூறினார்.
அப்புத்தகத்தில், உடல் நலம் மற்றும் அதைப் பேணிக் காப்பது குறித்த தகவல்களும், பலவித நோய்கள், அதைத் தடுக்கும் வழிகள் மற்றும் உணவுப் பழக்கங்கள் என்று விரிவான விளக்கங்கள் இருந்தன.
காத்திருப்போர் சலிப்படையாமல் இருக்கவும், அவர்களுக்கு, உடல் நலத்தில் அக்கறையை ஏற்படுத்தவும், அந்த மருத்துவமனை பின்பற்றும் வழிமுறையை, மற்ற மருத்துவமனைகளும் பின்பற்றலாமே!
கே.பாலமுருகன், லாஸ்பேட்டை.
சமீபத்தில், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை சென்றிருந்தேன். கூட்டம் அதிகமாக இருக்கவே, வரிசையில் காத்திருக்க நேர்ந்தது. அப்போது, 'ரிசப்ஷனிஸ்ட்' பைண்டிங் செய்யப்பட்ட ஒரு புத்தகத்தை, ஆளுக்கொன்று அளித்து, டாக்டரின் அழைப்பு வரும் வரை, படித்துக் கொண்டிருக்கும்படி கூறினார்.
அப்புத்தகத்தில், உடல் நலம் மற்றும் அதைப் பேணிக் காப்பது குறித்த தகவல்களும், பலவித நோய்கள், அதைத் தடுக்கும் வழிகள் மற்றும் உணவுப் பழக்கங்கள் என்று விரிவான விளக்கங்கள் இருந்தன.
காத்திருப்போர் சலிப்படையாமல் இருக்கவும், அவர்களுக்கு, உடல் நலத்தில் அக்கறையை ஏற்படுத்தவும், அந்த மருத்துவமனை பின்பற்றும் வழிமுறையை, மற்ற மருத்துவமனைகளும் பின்பற்றலாமே!
கே.பாலமுருகன், லாஸ்பேட்டை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
பெயரும் மொபைல் நம்பரும்!
சமீபத்தில், ஆட்டோ ஒன்றில் பயணித்தேன். வண்டியில் ஏறி அமர்ந்ததும், டிரைவர் ஒரு நோட்டை நீட்டி, என் பெயரையும், மொபைல் நம்பரையும் எழுதுமாறு கூறினார். எதற்கு என கேட்டதற்கு, 'தினமும் நிறைய பேர் பயணிக்கின்றனர்; அவர்கள், நகை அல்லது உடைமைகள் எதையாவது வண்டியில் தவற விட்டுச் சென்றால், தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிப்பதற்காக...' என்றார்.
நல்ல யோசனையாக இருந்ததால், ஆட்டோ டிரைவரை பாராட்டினேன். உடனே, அவர் தன், 'விசிட்டிங் கார்டை' தந்து, 'தேவைக்கு அழையுங்கள்...' என்றார்.
அவரது அணுகுமுறை கண்டு வியந்தேன். இதை, அனைத்து ஓட்டுனர்களும் கடைப்பிடிக்கலாமே!
எல்.வெங்கடேசன், திருவண்ணாமலை.
சமீபத்தில், ஆட்டோ ஒன்றில் பயணித்தேன். வண்டியில் ஏறி அமர்ந்ததும், டிரைவர் ஒரு நோட்டை நீட்டி, என் பெயரையும், மொபைல் நம்பரையும் எழுதுமாறு கூறினார். எதற்கு என கேட்டதற்கு, 'தினமும் நிறைய பேர் பயணிக்கின்றனர்; அவர்கள், நகை அல்லது உடைமைகள் எதையாவது வண்டியில் தவற விட்டுச் சென்றால், தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிப்பதற்காக...' என்றார்.
நல்ல யோசனையாக இருந்ததால், ஆட்டோ டிரைவரை பாராட்டினேன். உடனே, அவர் தன், 'விசிட்டிங் கார்டை' தந்து, 'தேவைக்கு அழையுங்கள்...' என்றார்.
அவரது அணுகுமுறை கண்டு வியந்தேன். இதை, அனைத்து ஓட்டுனர்களும் கடைப்பிடிக்கலாமே!
எல்.வெங்கடேசன், திருவண்ணாமலை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
வளைகாப்பு செய்வது ஏன்?
கர்ப்பிணியான என் தோழிக்கு, வளைகாப்பு சடங்கு செய்ய விரும்பினர் அவளது பிறந்த வீட்டினர். ஆனால், அவளது மாமியார் வீட்டினர், 'வளைகாப்பு செய்யும் பழக்கம் எங்களுக்கு இல்லை...' என்று கூறி மறுத்தனர். அதற்கு தோழியின் பாட்டி, 'வளைகாப்புங்கிறது வெறும் சடங்கு இல்ல; அது, அவசியமானது. ஏன்னா, கர்ப்பிணி பெண்களுக்கு கை, கால்களில் நீர் சுரந்து, வீக்கம் ஏற்படும். இதைத் தவிர்க்கத் தான், வளைகாப்பின் போது, கை நிறைய கண்ணாடி வளையல்களை போடுறோம். அந்த வளையல்கள், கை நரம்புகளில் உரசிக்கிட்டே இருக்கிறதால, ரத்த ஓட்டம் சீராகி, கை, கால்களில் ஏற்படும் வீக்கம் மட்டுப்படும்.
'அதோட, வளையல்கள் உரசும் போது ஏற்படும் சத்தத்தோட அதிர்வால், வயிற்றில் இருக்கும் குழந்தை, அசைந்து புரளும். இப்படி அடிக்கடி புரள்வதால, அதிக கஷ்டமில்லாமல் சுகப்பிரசவம் ஏற்படும். அதனால் தான், கர்ப்பிணி பெண்களுக்கு, வளைகாப்பு சடங்கை செய்றோம்...' என்று விளக்கமாக கூறினார்.
உண்மையை உணர்ந்த, தோழியின் மாமியார் வீட்டினர், வளைகாப்பு விழாவை விமரிசையாக நடத்தினர். நம் முன்னோர் செய்யும் எல்லா காரியமும், ஏதாவது காரணத்தோடு தான் இருக்குமென்று உணர்ந்து கொண்டேன்.
எஸ்.விஜயலட்சுமி, கோச்சடை.
கர்ப்பிணியான என் தோழிக்கு, வளைகாப்பு சடங்கு செய்ய விரும்பினர் அவளது பிறந்த வீட்டினர். ஆனால், அவளது மாமியார் வீட்டினர், 'வளைகாப்பு செய்யும் பழக்கம் எங்களுக்கு இல்லை...' என்று கூறி மறுத்தனர். அதற்கு தோழியின் பாட்டி, 'வளைகாப்புங்கிறது வெறும் சடங்கு இல்ல; அது, அவசியமானது. ஏன்னா, கர்ப்பிணி பெண்களுக்கு கை, கால்களில் நீர் சுரந்து, வீக்கம் ஏற்படும். இதைத் தவிர்க்கத் தான், வளைகாப்பின் போது, கை நிறைய கண்ணாடி வளையல்களை போடுறோம். அந்த வளையல்கள், கை நரம்புகளில் உரசிக்கிட்டே இருக்கிறதால, ரத்த ஓட்டம் சீராகி, கை, கால்களில் ஏற்படும் வீக்கம் மட்டுப்படும்.
'அதோட, வளையல்கள் உரசும் போது ஏற்படும் சத்தத்தோட அதிர்வால், வயிற்றில் இருக்கும் குழந்தை, அசைந்து புரளும். இப்படி அடிக்கடி புரள்வதால, அதிக கஷ்டமில்லாமல் சுகப்பிரசவம் ஏற்படும். அதனால் தான், கர்ப்பிணி பெண்களுக்கு, வளைகாப்பு சடங்கை செய்றோம்...' என்று விளக்கமாக கூறினார்.
உண்மையை உணர்ந்த, தோழியின் மாமியார் வீட்டினர், வளைகாப்பு விழாவை விமரிசையாக நடத்தினர். நம் முன்னோர் செய்யும் எல்லா காரியமும், ஏதாவது காரணத்தோடு தான் இருக்குமென்று உணர்ந்து கொண்டேன்.
எஸ்.விஜயலட்சுமி, கோச்சடை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மருந்து வாங்கி தரலாமே!
சமீபத்தில், என் கணவர் நினைவு நாளன்று ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று, ஒருநாள் உணவு வழங்க, பணம் கட்டினேன். அப்படியே, அங்கு பணியாற்றும் என் பள்ளித் தோழியை சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது, அவள், 'நிறைய பேர் உணவுப் பொருட்கள் கொடுக்குறாங்க; மருந்துப் பொருள் தான் கிடைக்கிறதில்ல. நீ கொடுக்குற உணவுக்கான தொகைக்கு, மருந்து பொருள் வாங்கி கொடுக்கலாமே...' என்றாள்.
இந்த யோசனையை நிர்வாகியிடம் சொல்ல, அவரும், நல்ல யோசனை என்று கூறி, இல்லத்திற்கு தேவையான மருந்து பட்டியலை தந்தார்; என்னால் முடிந்த அளவு மருந்துகளை வாங்கி தந்தேன்.
பொதுவாக, இதுபோன்ற இல்லங்களுக்கு உதவ நினைப்பவர்கள், அங்கு என்ன தேவை என்பதை அறிந்து உதவலாமே!எஸ்.சந்திரா, பூவிருந்தவல்லி.
சமீபத்தில், என் கணவர் நினைவு நாளன்று ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று, ஒருநாள் உணவு வழங்க, பணம் கட்டினேன். அப்படியே, அங்கு பணியாற்றும் என் பள்ளித் தோழியை சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது, அவள், 'நிறைய பேர் உணவுப் பொருட்கள் கொடுக்குறாங்க; மருந்துப் பொருள் தான் கிடைக்கிறதில்ல. நீ கொடுக்குற உணவுக்கான தொகைக்கு, மருந்து பொருள் வாங்கி கொடுக்கலாமே...' என்றாள்.
இந்த யோசனையை நிர்வாகியிடம் சொல்ல, அவரும், நல்ல யோசனை என்று கூறி, இல்லத்திற்கு தேவையான மருந்து பட்டியலை தந்தார்; என்னால் முடிந்த அளவு மருந்துகளை வாங்கி தந்தேன்.
பொதுவாக, இதுபோன்ற இல்லங்களுக்கு உதவ நினைப்பவர்கள், அங்கு என்ன தேவை என்பதை அறிந்து உதவலாமே!எஸ்.சந்திரா, பூவிருந்தவல்லி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
பெண்கள் நிர்வாகத்தில் இருந்தால்...
எங்கள் வீட்டிற்கு அருகில், புதிய வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. கட்டடம் கட்டும் மேஸ்திரி, தினமும், இருசக்கர வாகனத்தில், தன் மனைவியுடன் வருவார். சில சமயங்களில், சித்தாள்களோடு சேர்ந்து, வேலை செய்வார் அவர் மனைவி.
ஒருநாள் மேஸ்திரியிடம், 'எதுக்குண்ணே தினமும் உங்க மனைவியையும் அழைச்சுட்டு வர்றீங்க...' என்று கேட்டேன்.
அதற்கு அவர், 'நான், எங்க வேலை செய்தாலும், என் மனைவியையும் அங்க கூட்டிட்டு போவேன். இதனால, வேலை சரியா நடக்குதான்னு கண்காணிப்பதுடன், வேலையாட்களுக்கும் ஒத்தாசையா இருக்கிறாள். சிமென்ட், செங்கல் மற்றும் கம்பி கணக்கு வழக்குகளை எல்லாம் சரி பாத்துக்கிறா.
'அது மட்டுமில்லீங்க... என் மனைவி, என் கூட வந்து கண்காணிக்கிறதால, வேலையாட்கள் வேலை நேரத்துல வீண் அரட்டை அடிக்கிறதில்ல; எல்லாத்துக்கும் மேல, பாலியல் குற்றங்கள் நடக்க வாய்ப்பு ஏற்படுவதில்ல. மேலும், வீட்டுக்காரங்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை வந்து, அவங்களுக்கு தெரிந்தவர்களிடம் எங்களைப்பற்றி நல்லவிதமாக சொல்வதால், எங்களுக்கு நிறைய வேலை வாய்ப்பும் கிடைக்கின்றன...' என்றார்.
பெண் நிர்வாகம் செய்யும் இடங்களில் கட்டுப்பாடும், கவுரவமும் தானே வந்து விடுகிறது என்பதை, அந்த மேஸ்திரி மூலமாக நன்கு உணர்ந்தேன்.
எஸ்.பூவேந்தரசு, கம்பைநல்லூர்.
எங்கள் வீட்டிற்கு அருகில், புதிய வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. கட்டடம் கட்டும் மேஸ்திரி, தினமும், இருசக்கர வாகனத்தில், தன் மனைவியுடன் வருவார். சில சமயங்களில், சித்தாள்களோடு சேர்ந்து, வேலை செய்வார் அவர் மனைவி.
ஒருநாள் மேஸ்திரியிடம், 'எதுக்குண்ணே தினமும் உங்க மனைவியையும் அழைச்சுட்டு வர்றீங்க...' என்று கேட்டேன்.
அதற்கு அவர், 'நான், எங்க வேலை செய்தாலும், என் மனைவியையும் அங்க கூட்டிட்டு போவேன். இதனால, வேலை சரியா நடக்குதான்னு கண்காணிப்பதுடன், வேலையாட்களுக்கும் ஒத்தாசையா இருக்கிறாள். சிமென்ட், செங்கல் மற்றும் கம்பி கணக்கு வழக்குகளை எல்லாம் சரி பாத்துக்கிறா.
'அது மட்டுமில்லீங்க... என் மனைவி, என் கூட வந்து கண்காணிக்கிறதால, வேலையாட்கள் வேலை நேரத்துல வீண் அரட்டை அடிக்கிறதில்ல; எல்லாத்துக்கும் மேல, பாலியல் குற்றங்கள் நடக்க வாய்ப்பு ஏற்படுவதில்ல. மேலும், வீட்டுக்காரங்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை வந்து, அவங்களுக்கு தெரிந்தவர்களிடம் எங்களைப்பற்றி நல்லவிதமாக சொல்வதால், எங்களுக்கு நிறைய வேலை வாய்ப்பும் கிடைக்கின்றன...' என்றார்.
பெண் நிர்வாகம் செய்யும் இடங்களில் கட்டுப்பாடும், கவுரவமும் தானே வந்து விடுகிறது என்பதை, அந்த மேஸ்திரி மூலமாக நன்கு உணர்ந்தேன்.
எஸ்.பூவேந்தரசு, கம்பைநல்லூர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மாற்றி யோசி; பிரச்னை தீரும்!
பத்து தளங்களை கொண்ட பிளாட்டில், 10வது மாடியில், நடுத்தர வயதுள்ள பள்ளி ஆசிரியை ஒருவர், குடியிருக்கிறார். இங்குள்ள, 'லிப்ட்' 10 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் இல்லாமல், நன்றாகவே இயங்கி வருகிறது. இருப்பினும், தினமும் காலையில், பள்ளிக்கு கிளம்பும் இந்த ஆசிரியை, 'சுவிட்சை' அழுத்தி, 'லிப்ட்' மேலே வருவதற்குள், பொறுமையிழந்து, 'என்ன இந்த, 'லிப்ட்' மேலே வருவதற்கு இவ்வளவு நேரமாகிறது... எனக்கு நேரமாகி விட்டதே...' என்று புலம்புவார். இத்தனைக்கும், அவர் பணிபுரியும் பள்ளி, எங்க பில்டிங்க் அருகில் தான் உள்ளது.
இதுகுறித்து, அதே தளத்தில் இருக்கும் செகரட்டரியிடம், அடிக்கடி குறை கூறுவார்; இவரை தவிர வேறு யாரும், குறை கூறுவது இல்லை.
அதனால், இச்சிக்கலைத் தீர்க்க, ஒரு எளிய, மாற்று வழியை, கண்டுபிடித்த செகரட்டரி, லிப்டின் முன் பக்க சுவரில், சுவிட்சுக்கு கீழ், ஆள் உயர முகம் பார்க்கும் கண்ணாடியை பொருத்தினார். இப்போது, புலம்பல் நின்று, 'லிப்ட் வேகமாக போகிறது...' என்று சிலாகிக்கிறார் ஆசிரியை. காரணம், ஆசிரியை, சுவிட்சை அழுத்தி விட்டு, தன் ஒப்பனையை சரி பார்ப்பதற்குள், 'லிப்ட்' மேலே வந்து விடுகிறது.
செகரட்டரி மாற்றி யோசித்ததால், ஒரு பிரச்னை தீர்ந்தது. இது எப்படி இருக்கு!
வசந்தா சுப்பிரமணியம்,சென்னை.
பத்து தளங்களை கொண்ட பிளாட்டில், 10வது மாடியில், நடுத்தர வயதுள்ள பள்ளி ஆசிரியை ஒருவர், குடியிருக்கிறார். இங்குள்ள, 'லிப்ட்' 10 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் இல்லாமல், நன்றாகவே இயங்கி வருகிறது. இருப்பினும், தினமும் காலையில், பள்ளிக்கு கிளம்பும் இந்த ஆசிரியை, 'சுவிட்சை' அழுத்தி, 'லிப்ட்' மேலே வருவதற்குள், பொறுமையிழந்து, 'என்ன இந்த, 'லிப்ட்' மேலே வருவதற்கு இவ்வளவு நேரமாகிறது... எனக்கு நேரமாகி விட்டதே...' என்று புலம்புவார். இத்தனைக்கும், அவர் பணிபுரியும் பள்ளி, எங்க பில்டிங்க் அருகில் தான் உள்ளது.
இதுகுறித்து, அதே தளத்தில் இருக்கும் செகரட்டரியிடம், அடிக்கடி குறை கூறுவார்; இவரை தவிர வேறு யாரும், குறை கூறுவது இல்லை.
அதனால், இச்சிக்கலைத் தீர்க்க, ஒரு எளிய, மாற்று வழியை, கண்டுபிடித்த செகரட்டரி, லிப்டின் முன் பக்க சுவரில், சுவிட்சுக்கு கீழ், ஆள் உயர முகம் பார்க்கும் கண்ணாடியை பொருத்தினார். இப்போது, புலம்பல் நின்று, 'லிப்ட் வேகமாக போகிறது...' என்று சிலாகிக்கிறார் ஆசிரியை. காரணம், ஆசிரியை, சுவிட்சை அழுத்தி விட்டு, தன் ஒப்பனையை சரி பார்ப்பதற்குள், 'லிப்ட்' மேலே வந்து விடுகிறது.
செகரட்டரி மாற்றி யோசித்ததால், ஒரு பிரச்னை தீர்ந்தது. இது எப்படி இருக்கு!
வசந்தா சுப்பிரமணியம்,சென்னை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1178102krishnaamma wrote:மாற்றி யோசி; பிரச்னை தீரும்!
பத்து தளங்களை கொண்ட பிளாட்டில், 10வது மாடியில், நடுத்தர வயதுள்ள பள்ளி ஆசிரியை ஒருவர், குடியிருக்கிறார். இங்குள்ள, 'லிப்ட்' 10 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் இல்லாமல், நன்றாகவே இயங்கி வருகிறது. இருப்பினும், தினமும் காலையில், பள்ளிக்கு கிளம்பும் இந்த ஆசிரியை, 'சுவிட்சை' அழுத்தி, 'லிப்ட்' மேலே வருவதற்குள், பொறுமையிழந்து, 'என்ன இந்த, 'லிப்ட்' மேலே வருவதற்கு இவ்வளவு நேரமாகிறது... எனக்கு நேரமாகி விட்டதே...' என்று புலம்புவார். இத்தனைக்கும், அவர் பணிபுரியும் பள்ளி, எங்க பில்டிங்க் அருகில் தான் உள்ளது.
இதுகுறித்து, அதே தளத்தில் இருக்கும் செகரட்டரியிடம், அடிக்கடி குறை கூறுவார்; இவரை தவிர வேறு யாரும், குறை கூறுவது இல்லை.
அதனால், இச்சிக்கலைத் தீர்க்க, ஒரு எளிய, மாற்று வழியை, கண்டுபிடித்த செகரட்டரி, லிப்டின் முன் பக்க சுவரில், சுவிட்சுக்கு கீழ், ஆள் உயர முகம் பார்க்கும் கண்ணாடியை பொருத்தினார். இப்போது, புலம்பல் நின்று, 'லிப்ட் வேகமாக போகிறது...' என்று சிலாகிக்கிறார் ஆசிரியை. காரணம், ஆசிரியை, சுவிட்சை அழுத்தி விட்டு, தன் ஒப்பனையை சரி பார்ப்பதற்குள், 'லிப்ட்' மேலே வந்து விடுகிறது.
செகரட்டரி மாற்றி யோசித்ததால், ஒரு பிரச்னை தீர்ந்தது. இது எப்படி இருக்கு!
வசந்தா சுப்பிரமணியம்,சென்னை.
எங்க வீட்டிலும் இப்படித்தான் செய்தோம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
ஓட்டுநரின் முன் யோசனை!
சமீபத்தில், அவசர வேலையாக குடும்பத்தோடு வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், பஸ் மற்றும் ரயிலில் இடம் கிடைக்கவில்லை என்பதால், வாடகைக் காரில் செல்ல முடிவு செய்து, வாடகைக் கார் நிறுவனத்திடம் பேசி, உறுதி செய்தோம். சிறிது நேரத்தில், அந்நிறுவனம் அனுப்பிய வண்டி, வீட்டிற்கு வந்தது. ஓட்டுனர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பின், ஒரு படிவத்தைக் கொடுத்து, பூர்த்தி செய்யுமாறு கூறினார்.
அப்படிவத்தில், பயணிப்போர் பெயர், முகவரி, புறப்படும் இடம் மற்றும் சேரும் இடம், அங்கு தங்கப் போகும் இடம், ரத்த வகை இவற்றோடு, அவசர தொடர்புக்காக அணுக வேண்டியவர் பற்றிய விவரங்களும் கேட்கப்பட்டு, படிவத்தின் கடைசியில், ஓட்டுனரின் பெயர் மற்றும் முகவரியும் இருந்தது.
பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை பெற்றுக் கொண்ட ஓட்டுனர், 'என்னுடைய காரில் நெடுந்தூரம் பயணம் செய்வோரிடமிருந்து, இந்த விவரங்களை வாங்கி வைத்துக் கொள்வேன்; இதனால், பயணத்தின் போது திடீர் உடல் நலக் குறைவோ, விபத்தோ ஏற்பட்டால், யாரிடம் தெரிவிப்பதுன்னு தடுமாறாம, உரிய நபரிடம் தெரிவித்தால், உடனடி உதவி கிடைக்கும். அதுபோல், எனக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டாலும், என் குடும்பத்தாருக்கு தெரிவிக்க, என் முகவரியையும் தந்துள்ளேன்...' என்றார்.
அவரின் முன் யோசனையை, வெகுவாகப் பாராட்டினோம். பிற வாடகைக்கார் ஓட்டுனர்களும், இம்முறையைப் பின்பற்றி, ஆபத்துக் காலங்களில் உதவலாமே!
எஸ்.அரிகரன், சென்னை.
சமீபத்தில், அவசர வேலையாக குடும்பத்தோடு வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், பஸ் மற்றும் ரயிலில் இடம் கிடைக்கவில்லை என்பதால், வாடகைக் காரில் செல்ல முடிவு செய்து, வாடகைக் கார் நிறுவனத்திடம் பேசி, உறுதி செய்தோம். சிறிது நேரத்தில், அந்நிறுவனம் அனுப்பிய வண்டி, வீட்டிற்கு வந்தது. ஓட்டுனர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பின், ஒரு படிவத்தைக் கொடுத்து, பூர்த்தி செய்யுமாறு கூறினார்.
அப்படிவத்தில், பயணிப்போர் பெயர், முகவரி, புறப்படும் இடம் மற்றும் சேரும் இடம், அங்கு தங்கப் போகும் இடம், ரத்த வகை இவற்றோடு, அவசர தொடர்புக்காக அணுக வேண்டியவர் பற்றிய விவரங்களும் கேட்கப்பட்டு, படிவத்தின் கடைசியில், ஓட்டுனரின் பெயர் மற்றும் முகவரியும் இருந்தது.
பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை பெற்றுக் கொண்ட ஓட்டுனர், 'என்னுடைய காரில் நெடுந்தூரம் பயணம் செய்வோரிடமிருந்து, இந்த விவரங்களை வாங்கி வைத்துக் கொள்வேன்; இதனால், பயணத்தின் போது திடீர் உடல் நலக் குறைவோ, விபத்தோ ஏற்பட்டால், யாரிடம் தெரிவிப்பதுன்னு தடுமாறாம, உரிய நபரிடம் தெரிவித்தால், உடனடி உதவி கிடைக்கும். அதுபோல், எனக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டாலும், என் குடும்பத்தாருக்கு தெரிவிக்க, என் முகவரியையும் தந்துள்ளேன்...' என்றார்.
அவரின் முன் யோசனையை, வெகுவாகப் பாராட்டினோம். பிற வாடகைக்கார் ஓட்டுனர்களும், இம்முறையைப் பின்பற்றி, ஆபத்துக் காலங்களில் உதவலாமே!
எஸ்.அரிகரன், சென்னை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 75 of 100 • 1 ... 39 ... 74, 75, 76 ... 87 ... 100
Similar topics
» படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது ..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது ..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
Page 75 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|