Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
+46
Namasivayam Mu
பழ.முத்துராமலிங்கம்
சசி
M.Jagadeesan
வேல்முருகன்
balakarthik
சரவணன்
Preethika Chandrakumar
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
prabatneb
சிவனாசான்
அகிலன்
idigiti
solomon
உமேரா
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
M.Saranya
jesifer
விமந்தனி
பிஜிராமன்
கோ. செந்தில்குமார்
Dr.S.Soundarapandian
கிருஷ்ணா
பாலாஜி
சிவா
SenthilMookan
T.N.Balasubramanian
உதயசுதா
பார்த்திபன்
ஹர்ஷித்
jenisiva
amirmaran
விஸ்வாஜீ
ayyasamy ram
ஜாஹீதாபானு
அருண்
M.M.SENTHIL
அசுரன்
Muthumohamed
mbalasaravanan
ராஜா
malik
krishnaamma
50 posters
Page 73 of 100
Page 73 of 100 • 1 ... 38 ... 72, 73, 74 ... 86 ... 100
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:38 pm; edited 5 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
வீட்டை காலி செய்ய ஒரு ஐடியா!
எங்களது ஏரியா நண்பர் ஒருவர், வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். வாடகைக்கு குடியிருந்தவர், வீட்டை சரி வர பராமரிக்காததால், நண்பருக்கும், குடியிருந்தவருக்கும் இடையே அடிக்கடி முட்டல், மோதல் நடந்து வந்தது. ஒரு கட்டத்தில், நண்பர், வாடகைக்கு குடியிருந்தவரை காலி செய்யச் சொல்ல, அரசியல் செல்வாக்குள்ள அவரோ வீட்டை காலி செய்ய மறுத்து, கலாட்டா செய்தார்.
இந்நிலையில், நான்கு, 'பிளக்ஸ்' பேனர் அடித்து, 'வீடு விற்பனைக்கு' என்று எழுதி, எங்கள் ஏரியாவில் மாட்டி வைத்தார் நண்பர். அத்துடன், தினமும் வீடு பார்க்கிறேன் பேர்வழி என்று, புரோக்கர்கள் பத்து, பதினைந்து பேரை கூட்டி வந்து, பகல், இரவு பாராமல், வீட்டிற்குள் நுழைந்து காட்டும்படியும் ஏற்பாடு செய்தார்.
வெளியாள் தொந்தரவால் நொந்து போன வாடகைதாரர், வீட்டை காலி செய்து, வேறு எங்கோ குடி போய் விட்டார். பதினைந்து நாட்கள் வீட்டை சும்மா வைத்திருந்த நண்பர், பின், வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டார். அத்துடன், பின்னால், பயன்படும் என, நான்கு, 'பிளக்ஸ்' போர்டுகளையும் கழட்டி, வீட்டிற்கு கொண்டு வந்து விட்டார்.
சண்டை, சச்சரவு இல்லாமல், பிரச்னைக் குரியவரை சமயோசிதமாக விரட்டிய நண்பரை பாராட்டினேன்.
எஸ்.பாலசுப்ரமணியன், கோவை.
எங்களது ஏரியா நண்பர் ஒருவர், வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். வாடகைக்கு குடியிருந்தவர், வீட்டை சரி வர பராமரிக்காததால், நண்பருக்கும், குடியிருந்தவருக்கும் இடையே அடிக்கடி முட்டல், மோதல் நடந்து வந்தது. ஒரு கட்டத்தில், நண்பர், வாடகைக்கு குடியிருந்தவரை காலி செய்யச் சொல்ல, அரசியல் செல்வாக்குள்ள அவரோ வீட்டை காலி செய்ய மறுத்து, கலாட்டா செய்தார்.
இந்நிலையில், நான்கு, 'பிளக்ஸ்' பேனர் அடித்து, 'வீடு விற்பனைக்கு' என்று எழுதி, எங்கள் ஏரியாவில் மாட்டி வைத்தார் நண்பர். அத்துடன், தினமும் வீடு பார்க்கிறேன் பேர்வழி என்று, புரோக்கர்கள் பத்து, பதினைந்து பேரை கூட்டி வந்து, பகல், இரவு பாராமல், வீட்டிற்குள் நுழைந்து காட்டும்படியும் ஏற்பாடு செய்தார்.
வெளியாள் தொந்தரவால் நொந்து போன வாடகைதாரர், வீட்டை காலி செய்து, வேறு எங்கோ குடி போய் விட்டார். பதினைந்து நாட்கள் வீட்டை சும்மா வைத்திருந்த நண்பர், பின், வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டார். அத்துடன், பின்னால், பயன்படும் என, நான்கு, 'பிளக்ஸ்' போர்டுகளையும் கழட்டி, வீட்டிற்கு கொண்டு வந்து விட்டார்.
சண்டை, சச்சரவு இல்லாமல், பிரச்னைக் குரியவரை சமயோசிதமாக விரட்டிய நண்பரை பாராட்டினேன்.
எஸ்.பாலசுப்ரமணியன், கோவை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
சூப்பர் ஐடியாவாக இருக்கே..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மின்சார சிக்கனம், தேவை இக்கணம்!
சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவரின் மகனும், மகளும் வெவ்வேறு ஊர்களில் வசிப்பதால், நண்பரும், அவர் மனைவியும் மட்டுமே குடியிருந்தனர்.
வீட்டை சுற்றிப் பார்த்த போது, 10க்கு, ஏழடியில், 10அடி உயரம் கொண்ட ஒரு சிறு அறையை பார்த்து, 'இது ஸ்டோர் ரூமா...' என்றேன்.
'இல்ல... கோடைக்காலத்தில இது தான் எங்க, பெட்ரூம்...' என்றவர், மேலும், 'முதல் வகுப்பு, 'கூபே' ரயில் பெட்டி பாத்திருக்கிறீர்களா.... அது மாதிரிதான் இதிலும் மேலே ஒரு பெர்த்; கீழே ஒரு பெர்த் பொருத்தியிருக்கேன். ஆனா, இது சற்று பெரியதாக, சவுகரியமாக இருக்கும். 'ஏசி' வசதியும் செய்திருக்கிறேன்.
கூடுதலாக, பக்கவாட்டு, 'பெடஸ்டல்' பேனும் இருக்கு. பீரோ, பரண் போன்ற அடசல்கள் இல்லாத சிறிய அறை என்பதால், விரைவில் குளிருட்டப்படும். கடுமையான மின்சார பற்றாக்குறை உள்ள நம்ம ஊருல, பெரிய அறையில் படுத்து, அதிக மின்சாரத்தை வீண் அடிப்பது சரியல்ல என்கிறதால தான் இப்படி வடிவமைச்சுருக்கேன்...' என்றார்.
எவ்வளவு மின் கட்டணம் ஆனாலும், தருவதற்கு வசதி இருப்பினும், மின் சேமிப்பு குறித்த சமூக சிந்தனை கொண்ட அவரை மனதார வாழ்த்தினேன். புதிதாக வீடு கட்டுபவர்கள் இப்படி செய்தால், பெருமளவு மின்சாரம் சேமிக்கலாமே!
ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவரின் மகனும், மகளும் வெவ்வேறு ஊர்களில் வசிப்பதால், நண்பரும், அவர் மனைவியும் மட்டுமே குடியிருந்தனர்.
வீட்டை சுற்றிப் பார்த்த போது, 10க்கு, ஏழடியில், 10அடி உயரம் கொண்ட ஒரு சிறு அறையை பார்த்து, 'இது ஸ்டோர் ரூமா...' என்றேன்.
'இல்ல... கோடைக்காலத்தில இது தான் எங்க, பெட்ரூம்...' என்றவர், மேலும், 'முதல் வகுப்பு, 'கூபே' ரயில் பெட்டி பாத்திருக்கிறீர்களா.... அது மாதிரிதான் இதிலும் மேலே ஒரு பெர்த்; கீழே ஒரு பெர்த் பொருத்தியிருக்கேன். ஆனா, இது சற்று பெரியதாக, சவுகரியமாக இருக்கும். 'ஏசி' வசதியும் செய்திருக்கிறேன்.
கூடுதலாக, பக்கவாட்டு, 'பெடஸ்டல்' பேனும் இருக்கு. பீரோ, பரண் போன்ற அடசல்கள் இல்லாத சிறிய அறை என்பதால், விரைவில் குளிருட்டப்படும். கடுமையான மின்சார பற்றாக்குறை உள்ள நம்ம ஊருல, பெரிய அறையில் படுத்து, அதிக மின்சாரத்தை வீண் அடிப்பது சரியல்ல என்கிறதால தான் இப்படி வடிவமைச்சுருக்கேன்...' என்றார்.
எவ்வளவு மின் கட்டணம் ஆனாலும், தருவதற்கு வசதி இருப்பினும், மின் சேமிப்பு குறித்த சமூக சிந்தனை கொண்ட அவரை மனதார வாழ்த்தினேன். புதிதாக வீடு கட்டுபவர்கள் இப்படி செய்தால், பெருமளவு மின்சாரம் சேமிக்கலாமே!
ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள்!
தனியார் ஆங்கிலப் பள்ளி யு.கே.ஜி., வகுப்பு ஆசிரியை நான். தினமும் மாணவர்களுக்கு, வீட்டுப் பாடம் செய்யச் செல்லி, ஒரு பாடத்தை தேர்வு செய்து, எழுத்து பயிற்சி கொடுத்து அனுப்புவேன். ஆனால், வகுப்பிலுள்ள பாதி மாணவர்களின் வீட்டுப் பாட நோட்டைப் பார்த்தால், அது, அவர்கள் எழுதியதாக இருக்காது; அவர்களின் பெற்றோர்களே எழுதியிருப்பர்.
குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவோ, எழுத்துப் பயற்சி அளிக்கவோ நேரமில்லாமல் அவசர கதியில், வேலை முடிந்தால் போதும் என்று, பெற்றோரே எழுதிக் கொடுத்து விடுகின்றனர்.
பள்ளியில் நாங்கள் சொல்லி கொடுத்தாலும், வீட்டில் பெற்றோரும் பயிற்சி கொடுக்க வேண்டும். அதைவிட்டு, குழந்தைகள் எழுதிப் பழக வேண்டியதை பெற்றோர் எழுதினால், அவர்களுக்கு எப்படி எழுத்துப் பயிற்சி வரும்?
வீட்டுப் பாடத்தை போல, மாதமொரு முறை, 'பிராஜக்ட் ஒர்க்' உண்டு. அதிலும், பெற்றோரின் பங்கே அதிகம். சரியோ, தவறோ குழந்தைகளே செய்யும் போது தான், அவர்கள் மனதில் பதியும். இனியாவது, பெற்றோர் இதை, புரிந்து கொள்ள வேண்டும்.
ஆ.தேவகுமாரி, அய்யம்பேட்டை.
தனியார் ஆங்கிலப் பள்ளி யு.கே.ஜி., வகுப்பு ஆசிரியை நான். தினமும் மாணவர்களுக்கு, வீட்டுப் பாடம் செய்யச் செல்லி, ஒரு பாடத்தை தேர்வு செய்து, எழுத்து பயிற்சி கொடுத்து அனுப்புவேன். ஆனால், வகுப்பிலுள்ள பாதி மாணவர்களின் வீட்டுப் பாட நோட்டைப் பார்த்தால், அது, அவர்கள் எழுதியதாக இருக்காது; அவர்களின் பெற்றோர்களே எழுதியிருப்பர்.
குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவோ, எழுத்துப் பயற்சி அளிக்கவோ நேரமில்லாமல் அவசர கதியில், வேலை முடிந்தால் போதும் என்று, பெற்றோரே எழுதிக் கொடுத்து விடுகின்றனர்.
பள்ளியில் நாங்கள் சொல்லி கொடுத்தாலும், வீட்டில் பெற்றோரும் பயிற்சி கொடுக்க வேண்டும். அதைவிட்டு, குழந்தைகள் எழுதிப் பழக வேண்டியதை பெற்றோர் எழுதினால், அவர்களுக்கு எப்படி எழுத்துப் பயிற்சி வரும்?
வீட்டுப் பாடத்தை போல, மாதமொரு முறை, 'பிராஜக்ட் ஒர்க்' உண்டு. அதிலும், பெற்றோரின் பங்கே அதிகம். சரியோ, தவறோ குழந்தைகளே செய்யும் போது தான், அவர்கள் மனதில் பதியும். இனியாவது, பெற்றோர் இதை, புரிந்து கொள்ள வேண்டும்.
ஆ.தேவகுமாரி, அய்யம்பேட்டை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
வடமாநிலத்தில் இது சகஜம்!
நான் பணிபுரியும் அலுவலகத்தில், ஒரே பகுதியிலிருந்து அலுவலகத்திற்கு வரும், இரு வடமாநில நண்பர்கள் இருந்தனர். அவர்கள் இருவருக்கும், தனித்தனியே இருசக்கர வாகனம் இருந்தாலும், அலுவலகத்திற்கு வரும் போது, ஒரு வாகனத்தில் தான் வருவர். விசாரித்ததில், ஒருநாள் ஒருவருடைய வாகனத்தையும், அடுத்த நாள் மற்றொருவரின் வாகனத்தையும் பயன்படுத்துவதாக தெரிவித்தனர்.
இப்படி செய்வதன் மூலம் பெட்ரோல் செலவு மிச்சமாவதாகவும், வண்டியும் விரைவில் தேய்மானம் ஆகாதென்றும் விளக்கமளித்தனர்.
'வடமாநிலத்தில் இது சகஜமான விஷயம்; இங்கு ஏன் அது போல இல்ல?' என்றும் என்னிடம் கேள்வி எழுப்பினர். ஆரம்பத்தில், அவர்களை கருமிகள் என்று கிண்டல் செய்த சக நண்பர்கள், தற்போது, அவர்களுடைய யோசனையை காப்பி அடிக்க ஆரம்பித்து விட்டனர். நீங்களும் இந்த யோசனையை பின்பற்றலாமே?
ஜெ.கண்ணன், சென்னை.
நான் பணிபுரியும் அலுவலகத்தில், ஒரே பகுதியிலிருந்து அலுவலகத்திற்கு வரும், இரு வடமாநில நண்பர்கள் இருந்தனர். அவர்கள் இருவருக்கும், தனித்தனியே இருசக்கர வாகனம் இருந்தாலும், அலுவலகத்திற்கு வரும் போது, ஒரு வாகனத்தில் தான் வருவர். விசாரித்ததில், ஒருநாள் ஒருவருடைய வாகனத்தையும், அடுத்த நாள் மற்றொருவரின் வாகனத்தையும் பயன்படுத்துவதாக தெரிவித்தனர்.
இப்படி செய்வதன் மூலம் பெட்ரோல் செலவு மிச்சமாவதாகவும், வண்டியும் விரைவில் தேய்மானம் ஆகாதென்றும் விளக்கமளித்தனர்.
'வடமாநிலத்தில் இது சகஜமான விஷயம்; இங்கு ஏன் அது போல இல்ல?' என்றும் என்னிடம் கேள்வி எழுப்பினர். ஆரம்பத்தில், அவர்களை கருமிகள் என்று கிண்டல் செய்த சக நண்பர்கள், தற்போது, அவர்களுடைய யோசனையை காப்பி அடிக்க ஆரம்பித்து விட்டனர். நீங்களும் இந்த யோசனையை பின்பற்றலாமே?
ஜெ.கண்ணன், சென்னை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
இதை carpooling என்று சொல்வார்கள், சென்னைலும் பெங்களுரிலும் கூட செய்கிறார்களே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
உணர்வுகளை மதிப்போம்!
நாங்கள் வசிக்கும் காலனியில், விபத்தில் கை இழந்த, மாற்றுத்திறனாளி ஒருவர், தினமும் மாலையில், பசுமையான கீரைகளை கொண்டு வந்து விற்பார். அவரிடம், கீரைகள் தரமானதாகவும், புதிதாகவும் இருப்பதால், அவர் வந்த சிறிது நேரத்திலேயே விற்றுவிடும்.
காலனியில் உள்ளோர், அவரை, 'கை இல்லாத கீரைக்காரர்' என்றே குறிப்பிடுவது வழக்கம். இப்படி நாங்கள் அழைப்பதைக் கேட்ட என் ஐந்து வயது பேத்தி, 'ஏன் பாட்டி எல்லாரும் அவரை அப்படி கூப்பிடறாங்க...' என்று கேட்டதுடன், அவரிடம் ஓடிச்சென்று, அவரது பெயரை கேட்டுக் கொண்டு வந்தாள்.
'பாட்டி... அந்த அங்கிள் பேர் கோபால்; இனிமேல் நீங்கள் எல்லாரும் அவரை, 'கோபால் அங்கிள்' என்று கூப்பிடுங்கள்...' என்று சொல்லி, விளையாட போய் விட்டாள். அவள் அப்படி சொன்னது அங்கிருந்த பலருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.
மாற்றுத் திறனாளிகளை அவர்களது உடல் குறைபாடுகளை குறிப்பிட்டு, அடையாளம் காட்டுவது எவ்வளவு கீழ்த்தரமானது என்பதை உணர்ந்தோம். அதிலிருந்து, அவரை பெயரிட்டு அழைக்க ஆரம்பித்துள்ளோம்.
அவர்களுக்கும் மனமும், உணர்ச்சிகளும் உண்டு என்பதை புரிந்து, அவர்களை புண்படுத்தாமல் மதித்து நடக்க, எல்லாரும் முயற்சிக்கலாமே!
சுதா கணபதி, சென்னை.
நாங்கள் வசிக்கும் காலனியில், விபத்தில் கை இழந்த, மாற்றுத்திறனாளி ஒருவர், தினமும் மாலையில், பசுமையான கீரைகளை கொண்டு வந்து விற்பார். அவரிடம், கீரைகள் தரமானதாகவும், புதிதாகவும் இருப்பதால், அவர் வந்த சிறிது நேரத்திலேயே விற்றுவிடும்.
காலனியில் உள்ளோர், அவரை, 'கை இல்லாத கீரைக்காரர்' என்றே குறிப்பிடுவது வழக்கம். இப்படி நாங்கள் அழைப்பதைக் கேட்ட என் ஐந்து வயது பேத்தி, 'ஏன் பாட்டி எல்லாரும் அவரை அப்படி கூப்பிடறாங்க...' என்று கேட்டதுடன், அவரிடம் ஓடிச்சென்று, அவரது பெயரை கேட்டுக் கொண்டு வந்தாள்.
'பாட்டி... அந்த அங்கிள் பேர் கோபால்; இனிமேல் நீங்கள் எல்லாரும் அவரை, 'கோபால் அங்கிள்' என்று கூப்பிடுங்கள்...' என்று சொல்லி, விளையாட போய் விட்டாள். அவள் அப்படி சொன்னது அங்கிருந்த பலருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.
மாற்றுத் திறனாளிகளை அவர்களது உடல் குறைபாடுகளை குறிப்பிட்டு, அடையாளம் காட்டுவது எவ்வளவு கீழ்த்தரமானது என்பதை உணர்ந்தோம். அதிலிருந்து, அவரை பெயரிட்டு அழைக்க ஆரம்பித்துள்ளோம்.
அவர்களுக்கும் மனமும், உணர்ச்சிகளும் உண்டு என்பதை புரிந்து, அவர்களை புண்படுத்தாமல் மதித்து நடக்க, எல்லாரும் முயற்சிக்கலாமே!
சுதா கணபதி, சென்னை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மானம் காத்த மாமனிதர்!
நானும், என் தோழியும் அரசு அலுவலகத்தில் பணிபுரிகிறோம். பொதுமக்கள், அதிகளவில் வந்து செல்லும் இடம் அது.
அன்று, என் தோழி அணிந்திருந்த ஆடையின் ஓரத்தில், தையல் பிரிந்திருந்தது. அதை, கவனிக்காமல் அணிந்து வந்திருந்தாள். ஒரு பெரியவர், என் தோழியிடம் சிறு பேப்பரை தந்தார். அவளும், அதை, 'என்ன' என்று கேட்டவாறு, வாங்கிப் படித்தாள்.
அப்பேப்பரில், 'மகளே... உன் ஆடையின் ஓரத்தில், தையல் பிரிந்துள்ளது. நீ, எனக்கு முன் நடந்து சென்ற போது, அதை கவனித்தேன். அதை மற்றவர்கள் பார்ப்பதற்கு முன், சரி செய்து கொள்...' என்று எழுதியிருந்தது.
படித்து முடித்து நிமிர்ந்தவளிடம், 'நான் உன் அப்பாவாக சொல்கிறேன்... தவறாக நினைக்காதே மகளே...' என்று கூறிச் சென்றார்.
பின், என் தோழி ஆடையை சரி செய்து, அந்த பெரியவருக்கு மானசீகமாக நன்றி கூறினாள்.
நீ.அபிராமி, கண்டனூர்.
நானும், என் தோழியும் அரசு அலுவலகத்தில் பணிபுரிகிறோம். பொதுமக்கள், அதிகளவில் வந்து செல்லும் இடம் அது.
அன்று, என் தோழி அணிந்திருந்த ஆடையின் ஓரத்தில், தையல் பிரிந்திருந்தது. அதை, கவனிக்காமல் அணிந்து வந்திருந்தாள். ஒரு பெரியவர், என் தோழியிடம் சிறு பேப்பரை தந்தார். அவளும், அதை, 'என்ன' என்று கேட்டவாறு, வாங்கிப் படித்தாள்.
அப்பேப்பரில், 'மகளே... உன் ஆடையின் ஓரத்தில், தையல் பிரிந்துள்ளது. நீ, எனக்கு முன் நடந்து சென்ற போது, அதை கவனித்தேன். அதை மற்றவர்கள் பார்ப்பதற்கு முன், சரி செய்து கொள்...' என்று எழுதியிருந்தது.
படித்து முடித்து நிமிர்ந்தவளிடம், 'நான் உன் அப்பாவாக சொல்கிறேன்... தவறாக நினைக்காதே மகளே...' என்று கூறிச் சென்றார்.
பின், என் தோழி ஆடையை சரி செய்து, அந்த பெரியவருக்கு மானசீகமாக நன்றி கூறினாள்.
நீ.அபிராமி, கண்டனூர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
லேட்டஸ்ட் பேஷன்!
லேட்டஸ்ட் பேஷன்!
அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற நண்பரை, சற்று மாறுதலான சூழலில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
மஞ்சள் பை ஒன்றை தொங்க விட்டவாறே சைக்கிளில் வந்தவர், என்னை கண்டதும் வண்டியை நிறுத்தினார். எனக்கோ ஆச்சரியம். 'வழக்கமா கார்ல தானே ஷாப்பிங் வருவீங்க; இப்ப தான் முதன் முதலா சைக்கிளில் பாக்குறேன்...' என்று வியப்பை வெளிப்படுத்தினேன்.
'எங்க ஆபிசுல எனக்கு பணி நிறைவு விழா நடத்தும் போது, 'உங்களுக்கு, என்ன, 'கிப்ட்' வேணும்; வெளிப்படையா சொல்லுங்க'ன்னு கேட்டனர். நானும் ஒரு சைக்கிள் வாங்கித்தாங்க'ன்னு சொன்னேன். ரொம்ப சந்தோஷமா இந்த சைக்கிளை வாங்கி தந்தாங்க.
'தினசரி சின்ன சின்ன வேலைகளுக்கு போக, வர இதை பயன்படுத்துறேன். இதனால், உடம்புக்கும், மனதுக்கும் மகிழ்ச்சியாவும், தெம்பாவும் இருக்கு. இன்னொரு விஷயம், உலக அளவுல இதுதான் இப்ப லேட்டஸ்ட் பேஷன்...' என்று சொல்லி, சிரித்தார் நண்பர்.
மனந்திறந்து பாராட்டியதோடு, பாடமும் கற்றேன்.
பி.ஜி.பி.இசக்கி, பொட்டல்புதூர்.
அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற நண்பரை, சற்று மாறுதலான சூழலில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
மஞ்சள் பை ஒன்றை தொங்க விட்டவாறே சைக்கிளில் வந்தவர், என்னை கண்டதும் வண்டியை நிறுத்தினார். எனக்கோ ஆச்சரியம். 'வழக்கமா கார்ல தானே ஷாப்பிங் வருவீங்க; இப்ப தான் முதன் முதலா சைக்கிளில் பாக்குறேன்...' என்று வியப்பை வெளிப்படுத்தினேன்.
'எங்க ஆபிசுல எனக்கு பணி நிறைவு விழா நடத்தும் போது, 'உங்களுக்கு, என்ன, 'கிப்ட்' வேணும்; வெளிப்படையா சொல்லுங்க'ன்னு கேட்டனர். நானும் ஒரு சைக்கிள் வாங்கித்தாங்க'ன்னு சொன்னேன். ரொம்ப சந்தோஷமா இந்த சைக்கிளை வாங்கி தந்தாங்க.
'தினசரி சின்ன சின்ன வேலைகளுக்கு போக, வர இதை பயன்படுத்துறேன். இதனால், உடம்புக்கும், மனதுக்கும் மகிழ்ச்சியாவும், தெம்பாவும் இருக்கு. இன்னொரு விஷயம், உலக அளவுல இதுதான் இப்ப லேட்டஸ்ட் பேஷன்...' என்று சொல்லி, சிரித்தார் நண்பர்.
மனந்திறந்து பாராட்டியதோடு, பாடமும் கற்றேன்.
பி.ஜி.பி.இசக்கி, பொட்டல்புதூர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
நல்ல யோசனை ... இங்கும் எனது நண்பர்கள் பயன்படுத்துகின்றனர்krishnaamma wrote:வடமாநிலத்தில் இது சகஜம்!
நான் பணிபுரியும் அலுவலகத்தில், ஒரே பகுதியிலிருந்து அலுவலகத்திற்கு வரும், இரு வடமாநில நண்பர்கள் இருந்தனர். அவர்கள் இருவருக்கும், தனித்தனியே இருசக்கர வாகனம் இருந்தாலும், அலுவலகத்திற்கு வரும் போது, ஒரு வாகனத்தில் தான் வருவர். விசாரித்ததில், ஒருநாள் ஒருவருடைய வாகனத்தையும், அடுத்த நாள் மற்றொருவரின் வாகனத்தையும் பயன்படுத்துவதாக தெரிவித்தனர்.
இப்படி செய்வதன் மூலம் பெட்ரோல் செலவு மிச்சமாவதாகவும், வண்டியும் விரைவில் தேய்மானம் ஆகாதென்றும் விளக்கமளித்தனர்.
'வடமாநிலத்தில் இது சகஜமான விஷயம்; இங்கு ஏன் அது போல இல்ல?' என்றும் என்னிடம் கேள்வி எழுப்பினர். ஆரம்பத்தில், அவர்களை கருமிகள் என்று கிண்டல் செய்த சக நண்பர்கள், தற்போது, அவர்களுடைய யோசனையை காப்பி அடிக்க ஆரம்பித்து விட்டனர். நீங்களும் இந்த யோசனையை பின்பற்றலாமே?
ஜெ.கண்ணன், சென்னை.
Page 73 of 100 • 1 ... 38 ... 72, 73, 74 ... 86 ... 100
Similar topics
» படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது ..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது ..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
Page 73 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|