Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
+46
Namasivayam Mu
பழ.முத்துராமலிங்கம்
சசி
M.Jagadeesan
வேல்முருகன்
balakarthik
சரவணன்
Preethika Chandrakumar
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
prabatneb
சிவனாசான்
அகிலன்
idigiti
solomon
உமேரா
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
M.Saranya
jesifer
விமந்தனி
பிஜிராமன்
கோ. செந்தில்குமார்
Dr.S.Soundarapandian
கிருஷ்ணா
பாலாஜி
சிவா
SenthilMookan
T.N.Balasubramanian
உதயசுதா
பார்த்திபன்
ஹர்ஷித்
jenisiva
amirmaran
விஸ்வாஜீ
ayyasamy ram
ஜாஹீதாபானு
அருண்
M.M.SENTHIL
அசுரன்
Muthumohamed
mbalasaravanan
ராஜா
malik
krishnaamma
50 posters
Page 55 of 100
Page 55 of 100 • 1 ... 29 ... 54, 55, 56 ... 77 ... 100
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:38 pm; edited 5 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எதுக்கு சார், சென்ட்!
எதுக்கு சார், சென்ட்!
சமீபத்தில், பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தேன். அது, மதிய நேரம் என்பதால் அதிக கூட்டமில்லை. என் அருகில், அழகிய பெண் ஒருத்தி நின்றிருந்தாள். அவள் அருகில் சென்ற இளைஞன் ஒருவன், மெல்ல அவளிடம் பேச்சு கொடுத்தான்... 'மேடம்... நீங்க போட்டிருக்கிற, 'சென்ட்' வாசனை ஆளை தூக்குது; எந்த கடையில வாங்கினீங்க... இந்த,'சென்ட்'டைத் தான், என் தங்கச்சி ரொம்ப நாளா கேட்டுக்கிட்டே இருக்கா...' என்று, 'கடலை' போட்டான்.
பதில் கூறாமல் மவுனமாக இருந்தாள் அந்தப் பெண்.
'என்ன மேடம்... என் தங்கச்சிக்காக தானே கேட்கிறேன்... பதில் சொல்ல மாட்டேங்கிறீங்களே...' என்றான் அந்த இளைஞன்.
அதற்கு அந்தப்பெண், 'எதுக்கு சார் இந்த, 'சென்ட்'டை வாங்கிக் கொடுக்கணும்ன்னு சொல்றீங்க... என்னைப் போலவே உங்க தங்கச்சியும் அந்த, 'சென்ட்'டை போட்டு, பஸ் ஸ்டாப்புல நிற்க, எந்த நாயாவது, 'எங்கே வாங்கினீங்க... வாசனை ஆளை தூக்குது'ன்னு கேட்டு, உங்க தங்கச்சிய தொந்தரவுபடுத்தப் போறான்...' என்று சொன்னதும், அந்த இளைஞன் நைசாக நகர்ந்து விட்டான்.
தன்னிடம், 'கடலை' போட நினைத்த, 'சபலிஸ்ட்' இளைஞனுக்கு, அவன் பாணியிலேயே பதில் சொல்லி, 'மூக்குடைத்த' அப்பெண்ணிற்கு, மனதிற்குள் சபாஷ் போட்டேன்!
ஆர்.சுகந்தாராம், சென்னை.
சமீபத்தில், பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தேன். அது, மதிய நேரம் என்பதால் அதிக கூட்டமில்லை. என் அருகில், அழகிய பெண் ஒருத்தி நின்றிருந்தாள். அவள் அருகில் சென்ற இளைஞன் ஒருவன், மெல்ல அவளிடம் பேச்சு கொடுத்தான்... 'மேடம்... நீங்க போட்டிருக்கிற, 'சென்ட்' வாசனை ஆளை தூக்குது; எந்த கடையில வாங்கினீங்க... இந்த,'சென்ட்'டைத் தான், என் தங்கச்சி ரொம்ப நாளா கேட்டுக்கிட்டே இருக்கா...' என்று, 'கடலை' போட்டான்.
பதில் கூறாமல் மவுனமாக இருந்தாள் அந்தப் பெண்.
'என்ன மேடம்... என் தங்கச்சிக்காக தானே கேட்கிறேன்... பதில் சொல்ல மாட்டேங்கிறீங்களே...' என்றான் அந்த இளைஞன்.
அதற்கு அந்தப்பெண், 'எதுக்கு சார் இந்த, 'சென்ட்'டை வாங்கிக் கொடுக்கணும்ன்னு சொல்றீங்க... என்னைப் போலவே உங்க தங்கச்சியும் அந்த, 'சென்ட்'டை போட்டு, பஸ் ஸ்டாப்புல நிற்க, எந்த நாயாவது, 'எங்கே வாங்கினீங்க... வாசனை ஆளை தூக்குது'ன்னு கேட்டு, உங்க தங்கச்சிய தொந்தரவுபடுத்தப் போறான்...' என்று சொன்னதும், அந்த இளைஞன் நைசாக நகர்ந்து விட்டான்.
தன்னிடம், 'கடலை' போட நினைத்த, 'சபலிஸ்ட்' இளைஞனுக்கு, அவன் பாணியிலேயே பதில் சொல்லி, 'மூக்குடைத்த' அப்பெண்ணிற்கு, மனதிற்குள் சபாஷ் போட்டேன்!
ஆர்.சுகந்தாராம், சென்னை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
பொண்ணுங்கனா இப்படி தான் இருக்கனும். இவுங்க தான் பாரதி கண்ட புதுமை பெண்களோ?
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1131229மாணிக்கம் நடேசன் wrote:பொண்ணுங்கனா இப்படி தான் இருக்கனும். இவுங்க தான் பாரதி கண்ட புதுமை பெண்களோ?
இருக்கும் மாமா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
'வணக்கம் பலமுறை சொன்னேன்!'
பொதுவாக, திருமணத்திற்கு சென்று வந்தவர்கள் சொல்லும் குறை, 'என்னை, யாருமே வாங்கன்னு சொல்லல... சரியாக, 'ரிசீவ்' செய்யல. வரவேற்பு சரியில்ல...' என்பதாகவே இருக்கும். மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர் சடங்கு, சம்பிரதாய வேலைகளில் சிக்கி விடுவதால், இது, தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
சமீபத்தில், நான் சென்ற திருமணத்தில், மணமேடையில் அமரும் முன், மணமக்கள், தம் பெற்றோருடன் மேடையின் விளிம்பில் நின்று, நான்கு புறமும் கையெடுத்து கும்பிட்டு வரவேற்பு செய்ததில், மண்டபத்தில் அமர்ந்திருந்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். இதை, எல்லா திருமணங்களிலும் பின்பற்றினால், வரவேற்கவில்லை என்ற குறையில்லாமல் போய்விடுமே!
கவிதா, மதுரை
பொதுவாக, திருமணத்திற்கு சென்று வந்தவர்கள் சொல்லும் குறை, 'என்னை, யாருமே வாங்கன்னு சொல்லல... சரியாக, 'ரிசீவ்' செய்யல. வரவேற்பு சரியில்ல...' என்பதாகவே இருக்கும். மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர் சடங்கு, சம்பிரதாய வேலைகளில் சிக்கி விடுவதால், இது, தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
சமீபத்தில், நான் சென்ற திருமணத்தில், மணமேடையில் அமரும் முன், மணமக்கள், தம் பெற்றோருடன் மேடையின் விளிம்பில் நின்று, நான்கு புறமும் கையெடுத்து கும்பிட்டு வரவேற்பு செய்ததில், மண்டபத்தில் அமர்ந்திருந்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். இதை, எல்லா திருமணங்களிலும் பின்பற்றினால், வரவேற்கவில்லை என்ற குறையில்லாமல் போய்விடுமே!
கவிதா, மதுரை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வீட்டு வேலையும் கவுரவமானதே!
வீட்டு வேலையும் கவுரவமானதே!
சமீபத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் என் தங்கையை பார்க்கச் சென்றிருந்தேன். இருவரும் முன்னறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, மிக நாகரிக உடையணிந்த இளம்பெண் ஒருவர், சகஜமாக உள்ளே நுழைந்தவள், கைப்பையை ஓரமாக வைத்து, வீடு பெருக்கி, துடைத்து, பாத்திரம் கழுவி, மிஷினில் துவைத்த துணிகளை உலர்த்தி விட்டு, 'மடமட'வென கிளம்பி விட்டாள்.
'யார் இந்தப் பெண்?' என்று தங்கையிடம் விசாரித்ததில், அவள் கூறிய விவரங்கள், என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
பி.காம் படித்துள்ள அப்பெண், குடும்ப ஏழ்மையால் மேலே படிக்க வசதி இல்லாத நிலையில், வேலையும் கிடைக்காமல் இருந்துள்ளாள். தன் வீட்டிற்கு அருகில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பலர், வேலைக்கு செல்லும் பெண்கள் என்பதால், வீட்டு வேலைக்கு ஆள் கிடைக்காமல் திண்டாடுவதை அறிந்த அப்பெண், பட்டதாரி பெண் என்றும் பாராமல், வீட்டு வேலை செய்ய ஆரம்பித்துள்ளாள்.
ஒரு வீட்டுக்கு, 2,500 ரூபாய் வரை வசூலிக்கும் அவள், 13 வீடுகளில் வேலை செய்கிறாள்.
அத்துடன், மாலையில், குடியிருப்பவர் களின் குழந்தைகளுக்கு, ட்யூஷனும் எடுக்கிறார். தன் குடும்பத்திற்கு கண்ணியமான முறையில் வருவாய் ஈட்டித்தரும் இப்பெண், தற்போது, தன் தோழிகளையும், இவ்வேலைக்கு வரவழைத்துள்ளார்.
எந்த வேலை செய்தாலும், உழைப்பே உயர்வானது என்று நினைக்கும் அந்த இளம் பெண்ணுக்கு, என் வாழ்த்துகளை தெரிவித்தேன்.
ஏ.சங்கமித்ரா நாகராஜன், கோவை.
சமீபத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் என் தங்கையை பார்க்கச் சென்றிருந்தேன். இருவரும் முன்னறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, மிக நாகரிக உடையணிந்த இளம்பெண் ஒருவர், சகஜமாக உள்ளே நுழைந்தவள், கைப்பையை ஓரமாக வைத்து, வீடு பெருக்கி, துடைத்து, பாத்திரம் கழுவி, மிஷினில் துவைத்த துணிகளை உலர்த்தி விட்டு, 'மடமட'வென கிளம்பி விட்டாள்.
'யார் இந்தப் பெண்?' என்று தங்கையிடம் விசாரித்ததில், அவள் கூறிய விவரங்கள், என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
பி.காம் படித்துள்ள அப்பெண், குடும்ப ஏழ்மையால் மேலே படிக்க வசதி இல்லாத நிலையில், வேலையும் கிடைக்காமல் இருந்துள்ளாள். தன் வீட்டிற்கு அருகில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பலர், வேலைக்கு செல்லும் பெண்கள் என்பதால், வீட்டு வேலைக்கு ஆள் கிடைக்காமல் திண்டாடுவதை அறிந்த அப்பெண், பட்டதாரி பெண் என்றும் பாராமல், வீட்டு வேலை செய்ய ஆரம்பித்துள்ளாள்.
ஒரு வீட்டுக்கு, 2,500 ரூபாய் வரை வசூலிக்கும் அவள், 13 வீடுகளில் வேலை செய்கிறாள்.
அத்துடன், மாலையில், குடியிருப்பவர் களின் குழந்தைகளுக்கு, ட்யூஷனும் எடுக்கிறார். தன் குடும்பத்திற்கு கண்ணியமான முறையில் வருவாய் ஈட்டித்தரும் இப்பெண், தற்போது, தன் தோழிகளையும், இவ்வேலைக்கு வரவழைத்துள்ளார்.
எந்த வேலை செய்தாலும், உழைப்பே உயர்வானது என்று நினைக்கும் அந்த இளம் பெண்ணுக்கு, என் வாழ்த்துகளை தெரிவித்தேன்.
ஏ.சங்கமித்ரா நாகராஜன், கோவை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
நிஜத்தை போதித்த நண்பர்!
சில மாதங்களுக்கு முன், மதுரையில், சில முக்கிய பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது, நாள் தவறாமல் என் நண்பர், தன் ஆறு வயது மகனுடன் அங்கே வேடிக்கை பார்த்ததை காண முடிந்தது. இத்தனைக்கும் நண்பருக்கு சினிமா அறவே பிடிக்காது.
இதுபற்றி, நண்பரிடம், 'என்னப்பா... உனக்கு சினிமாவே பிடிக்காதுன்னு சொல்வே... இப்ப என்னடான்னா தினமும் உன் மகனை, படப்பிடிப்பு நடக்கிற இடத்துக்கு கூட்டிட்டு வந்து, ரொம்ப ஜாலியா என்ஜாய் செய்யுறே...' என்றேன். அதற்கு நண்பர், 'விஷயத்த அப்புறம் சொல்றேன்...' என்று என்னை அனுப்பி விட்டார்.
அதன்பின் மற்றொரு நாள் நண்பர் வீட்டுக்கு சென்றிருந்த போது, 'அங்கே பாரு... என் மகன் இந்தியா, 'மேப்' வரைஞ்சிட்டு இருக்கான்; இவ்வளவு நேரம் படிச்சுட்டு இருந்தான்; கொஞ்ச நேரம் கேரம் போர்டு விளையாடினோம்...' என்றார்.
'இப்போ எதுக்கு இதை என்கிட்ட சொல்றே...' என்றேன்.
'காரணமிருக்கு. என் மகன் சினிமா, 'டிவி'ன்னு ரொம்ப மோகமா இருந்தான். அதனால தான் சினிமா ஷூட்டிங்குக்கு கூட்டிட்டு போயி, அங்க ஒரு பாட்டை எத்தனை முறை எடுக்கிறாங்க, ஒரு சண்டைக் காட்சியில எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க, எப்பவெல்லாம், 'டூப்' போடுறாங்கன்னு நேரடியா காட்டினேன். அப்புறம் அவன்கிட்ட, 'ஒரு காட்சிய, 20 முறை எடுப்பாங்க; ஆனா, நீ தேர்வு எழுதிட்டு, இது சரியில்லன்னு அப்புறம் எழுதினா ஒத்துக்குவாங்களா?'ன்னு கேட்டேன். பையனுக்கு வாழ்க்கையில் நிஜம் எது, போலி எது, ஏமாற்றுத்தனம் எதுன்னு ஓரளவுக்கு புரிஞ்சதால, இப்போ சினிமா பக்கம் போறதேயில்ல...' என்றார்.
தற்போது, திறன் வளர்க்கும் கலை மற்றும் விளையாட்டு என, மாற்றுவழிகளை கையாண்ட நண்பரை, வியந்து பாராட்டினேன்.
கே.கார்த்திக், மதுரை.
சில மாதங்களுக்கு முன், மதுரையில், சில முக்கிய பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது, நாள் தவறாமல் என் நண்பர், தன் ஆறு வயது மகனுடன் அங்கே வேடிக்கை பார்த்ததை காண முடிந்தது. இத்தனைக்கும் நண்பருக்கு சினிமா அறவே பிடிக்காது.
இதுபற்றி, நண்பரிடம், 'என்னப்பா... உனக்கு சினிமாவே பிடிக்காதுன்னு சொல்வே... இப்ப என்னடான்னா தினமும் உன் மகனை, படப்பிடிப்பு நடக்கிற இடத்துக்கு கூட்டிட்டு வந்து, ரொம்ப ஜாலியா என்ஜாய் செய்யுறே...' என்றேன். அதற்கு நண்பர், 'விஷயத்த அப்புறம் சொல்றேன்...' என்று என்னை அனுப்பி விட்டார்.
அதன்பின் மற்றொரு நாள் நண்பர் வீட்டுக்கு சென்றிருந்த போது, 'அங்கே பாரு... என் மகன் இந்தியா, 'மேப்' வரைஞ்சிட்டு இருக்கான்; இவ்வளவு நேரம் படிச்சுட்டு இருந்தான்; கொஞ்ச நேரம் கேரம் போர்டு விளையாடினோம்...' என்றார்.
'இப்போ எதுக்கு இதை என்கிட்ட சொல்றே...' என்றேன்.
'காரணமிருக்கு. என் மகன் சினிமா, 'டிவி'ன்னு ரொம்ப மோகமா இருந்தான். அதனால தான் சினிமா ஷூட்டிங்குக்கு கூட்டிட்டு போயி, அங்க ஒரு பாட்டை எத்தனை முறை எடுக்கிறாங்க, ஒரு சண்டைக் காட்சியில எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க, எப்பவெல்லாம், 'டூப்' போடுறாங்கன்னு நேரடியா காட்டினேன். அப்புறம் அவன்கிட்ட, 'ஒரு காட்சிய, 20 முறை எடுப்பாங்க; ஆனா, நீ தேர்வு எழுதிட்டு, இது சரியில்லன்னு அப்புறம் எழுதினா ஒத்துக்குவாங்களா?'ன்னு கேட்டேன். பையனுக்கு வாழ்க்கையில் நிஜம் எது, போலி எது, ஏமாற்றுத்தனம் எதுன்னு ஓரளவுக்கு புரிஞ்சதால, இப்போ சினிமா பக்கம் போறதேயில்ல...' என்றார்.
தற்போது, திறன் வளர்க்கும் கலை மற்றும் விளையாட்டு என, மாற்றுவழிகளை கையாண்ட நண்பரை, வியந்து பாராட்டினேன்.
கே.கார்த்திக், மதுரை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
தனித்தனி கவர்!
சமீபத்தில், நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவரது வீட்டில் ஒரு பெரிய பிளாஸ்டிக் டப்பாவில், சிறிய காகித கவர்களில் மாத்திரைகளை போட்டு, அதன் மேலே மாத்திரைகளின் பெயர் மற்றும் காலாவதியாகும் தேதியை குறித்து வைத்திருந்தார்.
'மாத்திரைகளின் அட்டையிலேயே பெயர் மற்றும் காலாவதியாகும் தேதியும் இருக்குமே... அப்பறம் எதுக்கு மாத்திரைகளை காகித கவர்களில் போட்டு, அதையெல்லாம் குறிச்சு வச்சுருக்கே...' என்று கேட்டேன்.
அதற்கு அவர், 'எல்லாருடைய வீட்டிலும், தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் மற்றும் வயிற்று போக்கு போன்ற சிறிய பிரச்னைகளுக்கு, மாத்திரைகள வச்சிருப்போம். மாத்திரைய அட்டையிலிருந்து எடுக்கறப்ப, அதனோட பெயரும், காலாவதி தேதியும் சில சமயம் கிழிஞ்சு போகும். அப்பறம், சில நாட்கள் கழிச்சு, மீண்டும் அதே மாத்திரையை பயன்படுத்தும்போது பெயரும், காலாவதி தேதியும் தெரியாமல், குழம்பிப் போவோம்.
இது, அந்த மாத்திரையாகத் தான் இருக்கும்ன்னு குத்து மதிப்பா நினைச்சு மாத்திரைய சாப்பிடுறது, சமயத்தில பெரிய ஆபத்தை ஏற்படுத்திரும். அதோட, தேதி தெரியாம, காலாவதியான மாத்திரைகளை சாப்பிட்டா நம் கிட்னி தான் பாதிக்கும். அதனால தான், சிரமம் பாக்காம மாத்திரைகளை ஒரு காகித கவரில் போட்டு, அதன் மேல் பெயரையும், காலாவதி தேதியும் எழுதி வைச்சுருக்கேன்...' என்று விளக்கம் அளித்தார்.
நீங்களும் அவர் வழியை பின்பற்றலாமே!
ஜெ.கண்ணன்,சென்னை.
சமீபத்தில், நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவரது வீட்டில் ஒரு பெரிய பிளாஸ்டிக் டப்பாவில், சிறிய காகித கவர்களில் மாத்திரைகளை போட்டு, அதன் மேலே மாத்திரைகளின் பெயர் மற்றும் காலாவதியாகும் தேதியை குறித்து வைத்திருந்தார்.
'மாத்திரைகளின் அட்டையிலேயே பெயர் மற்றும் காலாவதியாகும் தேதியும் இருக்குமே... அப்பறம் எதுக்கு மாத்திரைகளை காகித கவர்களில் போட்டு, அதையெல்லாம் குறிச்சு வச்சுருக்கே...' என்று கேட்டேன்.
அதற்கு அவர், 'எல்லாருடைய வீட்டிலும், தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் மற்றும் வயிற்று போக்கு போன்ற சிறிய பிரச்னைகளுக்கு, மாத்திரைகள வச்சிருப்போம். மாத்திரைய அட்டையிலிருந்து எடுக்கறப்ப, அதனோட பெயரும், காலாவதி தேதியும் சில சமயம் கிழிஞ்சு போகும். அப்பறம், சில நாட்கள் கழிச்சு, மீண்டும் அதே மாத்திரையை பயன்படுத்தும்போது பெயரும், காலாவதி தேதியும் தெரியாமல், குழம்பிப் போவோம்.
இது, அந்த மாத்திரையாகத் தான் இருக்கும்ன்னு குத்து மதிப்பா நினைச்சு மாத்திரைய சாப்பிடுறது, சமயத்தில பெரிய ஆபத்தை ஏற்படுத்திரும். அதோட, தேதி தெரியாம, காலாவதியான மாத்திரைகளை சாப்பிட்டா நம் கிட்னி தான் பாதிக்கும். அதனால தான், சிரமம் பாக்காம மாத்திரைகளை ஒரு காகித கவரில் போட்டு, அதன் மேல் பெயரையும், காலாவதி தேதியும் எழுதி வைச்சுருக்கேன்...' என்று விளக்கம் அளித்தார்.
நீங்களும் அவர் வழியை பின்பற்றலாமே!
ஜெ.கண்ணன்,சென்னை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சொல்லக் கூடாத வார்த்தை!
சொல்லக் கூடாத வார்த்தை!
இரு ஆண்டுகளுக்கு முன், ஒரு குறும்படத்தில் நடித்தேன். அப்படத்தின் கதாநாயகி, திருநங்கை. அவர் வசனம் பேசும் போது ஒரு இடத்தில், 'சனியனே...' என, திட்ட வேண்டும். 'அந்த வசனத்தை பேச மாட்டேன்...' என்று, அவர் பிடிவாதமாக மறுத்து, 'நீங்க கோடி ரூபாய் கொடுத்தாலும் அச்சொல்லை சொல்ல மாட்டேன்; நான் மட்டுமல்ல, எந்தத் திருநங்கையும் சொல்ல மாட்டார்கள். நாங்கள் ஒருவரை திட்ட வேண்டுமானால், அந்த சொல்லை தவிர்த்து, வேறு எல்லாவிதமான கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்துவோம்...' என்றார்.
மேலும், 'அக்கிழமையை சொல்லும் போது கூட, வெள்ளிக்கு அடுத்த நாள் அல்லது ஞாயிறுக்கு முதல்நாள் என்று தான் கூறுவோம்...' என்றார்.
பலரது இழி பார்வைக்கு ஆளானவர்களாக இருந்தாலும், இவ்வளவு உயர்ந்த நற்பண்பு இருப்பதை நினைத்து பெருமை அடைந்தேன். அன்றிலிருந்து, நானும் அந்த வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறேன்.
வாசகர்களே... இனி நாமும் அந்த அச்சானியமான சொல்லை தவிர்க்கலாமே!
எம்.கோபால், வேடபட்டி.
இரு ஆண்டுகளுக்கு முன், ஒரு குறும்படத்தில் நடித்தேன். அப்படத்தின் கதாநாயகி, திருநங்கை. அவர் வசனம் பேசும் போது ஒரு இடத்தில், 'சனியனே...' என, திட்ட வேண்டும். 'அந்த வசனத்தை பேச மாட்டேன்...' என்று, அவர் பிடிவாதமாக மறுத்து, 'நீங்க கோடி ரூபாய் கொடுத்தாலும் அச்சொல்லை சொல்ல மாட்டேன்; நான் மட்டுமல்ல, எந்தத் திருநங்கையும் சொல்ல மாட்டார்கள். நாங்கள் ஒருவரை திட்ட வேண்டுமானால், அந்த சொல்லை தவிர்த்து, வேறு எல்லாவிதமான கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்துவோம்...' என்றார்.
மேலும், 'அக்கிழமையை சொல்லும் போது கூட, வெள்ளிக்கு அடுத்த நாள் அல்லது ஞாயிறுக்கு முதல்நாள் என்று தான் கூறுவோம்...' என்றார்.
பலரது இழி பார்வைக்கு ஆளானவர்களாக இருந்தாலும், இவ்வளவு உயர்ந்த நற்பண்பு இருப்பதை நினைத்து பெருமை அடைந்தேன். அன்றிலிருந்து, நானும் அந்த வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறேன்.
வாசகர்களே... இனி நாமும் அந்த அச்சானியமான சொல்லை தவிர்க்கலாமே!
எம்.கோபால், வேடபட்டி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 55 of 100 • 1 ... 29 ... 54, 55, 56 ... 77 ... 100
Similar topics
» படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது ..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது ..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
Page 55 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|