புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_c10 
2 Posts - 50%
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_c10 
1 Post - 25%
வேல்முருகன் காசி
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_c10 
285 Posts - 45%
heezulia
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_c10 
20 Posts - 3%
prajai
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_c10 
7 Posts - 1%
mruthun
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!


   
   

Page 45 of 100 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 72 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 14, 2015 12:30 am

எங்க வீட்டு ஜாலக்காரி!

எங்கள் வீட்டு செல்லக்குட்டியின் அட்டகாசங்களை கொஞ்சம் கேட்கறீங்களா...ஒன்றரை வயதே ஆகும் என் மகள், இந்த வயதிலேயே எல்லாரையும் எப்படி, 'கவர்' செய்றா தெரியுமா?

அவங்க அப்பா பெயரை கேட்டா, சுத்தி முத்தி பாத்துட்டு அவர் பெயரை சொல்லுவா; அவங்க அப்பா பக்கத்துல இருந்தா, அவரோட பெயரைச் சொல்லாம, 'அப்பா'ன்னு சொல்லி சமாளிப்பா. எப்பவும் அப்பா செல்லம்; சில நேரங்களில், என் முகம் போற போக்கை பார்த்து, அப்பப்ப எனக்கு ஒரு, 'முத்தா' கொடுத்து, என்னை சரி செய்திடுவா. பாட்டியை கண்டதும், 'ஸ்லோகம்' சொல்றதும், வெளியே, 'வாக்கிங்' போனா. 'பாட்டி பர்ஸ் எடுத்துக்கோ'ன்னு மறக்காம சொல்லுவா. அப்பதானே, அவளுக்கு இஷ்டமானதை வாங்கலாம்.

தாத்தாவ பார்த்ததும், 'குளிச்சிட்டியா; சாமி கும்பிடு'ன்னு சொல்லுவா. இப்படி ஒவ்வொருத்தரையும், அவரவர், 'வீக்' பாயின்ட்ல தட்றா... வேலைக்காரியிடம், 'இந்த டம்ளர கழுவு; இங்க தண்ணி இருக்கு தொட...' என அதிகாரம் செய்றதும் தாங்க முடியல.

பிசினஸ்... பிசினஸ் என்று ஆபீசையே கட்டிக்கிட்டு அழும் என் மாமனார், இந்த ஜாலக்காரியை பார்ப்பதற்கென்றே எல்லாத்தையும் தூக்கி வீசிட்டு, சீக்கிரமா வீட்டுக்கு வந்துடறார்ன்னா பார்த்துக்கோங்களேன். ஊருக்கு போயிட்டா, 'வாட்ஸ் அப்'ல பேத்தியோட குறும்புகளை அனுப்பச் சொல்வார். அப்படி எல்லாரையும் மயக்கி வச்சிருக்கா, இந்த குட்டி ஏஞ்சல்.

'காலிங்பெல்' அடிச்சா போதும், 'யாரது? இதோ வந்துட்டேன்'ன்னு அதிகாரத் தோரணையில் சொல்வதும், அவர்களை விசாரித்து வரவேற்பதும் தாங்க முடியல... மாலையில் பாட்டிகிட்ட போய் உட்கார்ந்துகிட்டு, 'நீ மட்டும் தைலம் தேய்ச்சிக்கிறியே... எனக்கும் தேய்ச்சுவிடு. நடந்து நடந்து கால் வலிக்கிறது...' என்பாள்.

இதற்குதான், அந்த காலத்துல சொன்னாங்களோ, 'குழல் இனிது யாழினிது என்பர் மழலைச் சொல் கேளாதோர்...' என்று. இந்த காலத்து இளம் ஜோடிகளுக்கு ஒரு, 'அட்வைஸ்' செய்றேன்... லேட்டா குழந்தையை பெத்துக்கலாம்; லைப்ல செட்டில் ஆயிட்டு பெத்துக்கலாம் என்று நினைத்து குழந்தை பிறப்பை தள்ளி போடாதீங்க. அது மிகவும் ஆபத்து. உடனுக்குடன் பெத்துகிட்டு, இந்த குட்டி பிசாசுகளின் செல்ல அட்டகாசங்களை, 'என்ஜாய்' செய்யுங்க!

கி.ரஞ்சனி, சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 21, 2015 12:11 am

இதுவும் அத்தியாவசியமானது தான்!

கடந்த ஞாயிறு அன்று, என் நண்பரைக் காண அவரது வீட்டிற்கு சென்றிருந்தேன். அச்சமயம் அவசரமாக வெளியே கிளம்பிக் கொண்டிருந்த நண்பர், என்னையும் அவரது பைக்கில் ஏற்றிச் சென்றார். 'எங்க போறோம்?' என்று கேட்டதற்கு, 'வந்து பாரு... உன் பிள்ளைகளுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும்...' என்று புதிர் போட்டபடியே, ஒரு நீச்சல் குளத்தின் முன் பைக்கை நிறுத்தி, உள்ளே அழைத்துச் சென்றார்.

அங்கே ஏறத்தாழ, 20 சிறுவர்கள் நீச்சல் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு பிரிவுக்கும் எட்டு பேர் என்ற விகிதத்தில், போட்டி நடந்து கொண்டிருந்தது. என் நண்பரின் பத்து வயது மகனும் அப்போட்டியில் கலந்து கொண்டான். 'என்ன திடீர்ன்னு நீச்சல் பயிற்சி... உன் மகனை ஒலிம்பிக்கிற்கு தயார் செய்யப் போறீயா?' என்றேன். உடனே, அவர், 'அதெல்லாம் ஒண்ணுமில்ல; இதுவும் ஒரு தற்காப்பு கலை தானே... நானே அவனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்தேன்.

அதோடு, வித்தியாசமான நீர்நிலைகளில் பயிற்சி தர, என் நண்பர்களும் உதவினர். கடந்த வாரம், 'கள்ளந்திரி கால்வாயில்' தண்ணீர் திறந்த போது, ஓடும் நீரில் பாதுகாப்பாக எப்படி நீந்துறதுன்னு அங்குள்ள ஒரு நண்பர் பயிற்சி தந்தார். அதே போல், விவசாய கிணற்றில் ஒரு பெரியவரின் உதவியோடு பயிற்சி பெறச் செய்தேன். இந்நிலையில், அவனோட படிக்கும் நண்பர்கள் மூலமாக இங்கு நீச்சல் போட்டி நடைபெறுவதாக சொன்னான். வெற்றி - தோல்வி ஒருபுறம் இருக்கட்டும்; போட்டியில் பங்கேற்று அந்த பரவசத்தையும் அனுபவிக்கட்டுமேன்னு அனுப்பி வச்சுருக்கேன்...' என்றார்.

'எல்லாருமே நீச்சல் கற்றுக் கொள்வது அவசியம்; அது, அவசரத்திற்கு நம் உயிரைக் காப்பதோடு, மற்றவரையும் காப்பாற்ற உதவும். ஆனாலும், அதை மேலோட்டமாக கற்காமல், கிணறு, குளம், ஆறு, கடல் போன்ற வேறுபட்ட நீர்நிலைகளிலும், பயிற்சி எடுப்பது நல்லது. அதுமட்டுமல்லாமல், நீருக்கடியில் சேறு, பாசி, செடி கொடி மற்றும் தண்ணீரின் வேகம், ஆழம் அறிந்து முழுமையாக பயிற்சி கொள்வதே சிறப்பு...' என்று அவர் விளக்கி முடித்தபோது, நானும் என் குழந்தைகளுக்கு நீந்தக் கற்றுத் தருவதென்று உறுதி எடுத்தேன்.

உயிர் காக்கும் உன்னதமான கலைக்கு மதிப்பளித்து, பயிற்சியளிப்பது நல்லது தானே!

பி.சதீஷ்குமார், மதுரை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 21, 2015 12:11 am

அலைபேசியில் முதலிரவு!

சமீபத்தில், சமூக வலைதளமொன்றில், ஒரு காணொளியை பார்த்தேன். இரண்டு நிமிடம் ஓடிய அந்தக் காணொளி, அலைபேசியில் படம் பிடிக்கப்பட்டிருந்தது. அப்படத்தில், கையில் பால் டம்ளருடன் முதலிரவுக்கு தயாராகும் மணப்பெண்ணை, அவரது தோழிகள் மற்றும் உறவினர்கள் கிண்டல் செய்தபடியே, மாடியில் இருக்கும் அறைக்கு அழைத்துச் செல்கின்றனர். பின், மாடியில் இருக்கும் படுக்கை அறையை காட்டுகின்றனர். அந்த அறை, பூ வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. புது மணமக்கள் வெட்கத்தில் நெளிகின்றனர்; அதோடு படம் முடிகிறது.

இப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது அந்த புதுமண ஜோடிக்கு தெரியுமா? அலைபேசியில் படமெடுத்தவர், இதை வெளியிட்டாரா அல்லது அவருக்கு தெரியாமல், யாராவது இதை வலை தளத்தில் வெளியிட்டிருக்கின்றனரா... அலைபேசியில் இதை படமெடுக்கும் போது, வீட்டிலுள்ள பெரியவர்கள் யாரும் ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்? எதைத்தான் படமெடுப்பது என்ற விவஸ்தை கிடையாதா? நல்லவேளை, படமெடுத்தவர் தொடர்ந்து படமெடுக்காமல், அத்துடன் நிறுத்திக் கொண்டது ஆறுதலளிக்கிறது.
எத்தனையோ நல்ல விஷயங்களுக்கு பயன்படும் இன்டர்நெட் வசதியை, வக்ர மனதுடன் பயன்படுத்தும் சில, அரைகுறை ஜென்மங்கள் திருந்துவரா!

பெயர் குறிப்பிட விரும்பாத சென்னை வாசகர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 21, 2015 12:12 am

மகளை நிம்மதியாக வாழ விடுங்கள்!

என் நண்பரின் மகளுக்கு, மூன்று மாதங்களுக்கு முன், திருமணம் நடந்தது. அனைத்து சுப சடங்குகளும் முடிந்து, பெண்ணை, மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பும் போது, நண்பர் தன் மகளிடம், 'மாப்பிள்ளை, எப்படி நடந்து கொள்கிறார்ன்னு பார்; ஒத்துப் போகலன்னா சொல்... நண்பர்களாக பிரிந்து கொள்ளலாம்....' என்று கூறி அனுப்பினார்.

ஒரு வாரம் தான் சென்றிருக்கும். அதற்குள் புகுந்த வீட்டில் நடக்கும் ஒவ்வொரு அசைவையும், தன் வீட்டுக்கு, மொபைல் போன் மூலம் சொல்லி, மாப்பிள்ளை வீட்டார் மீது வெறுப்பு ஏற்படும்படி செய்து விட்டார் நண்பரின் மகள். இவர்களும் எதையும் விசாரித்து உண்மையை அறியாமல், பெண்ணை அழைத்து வந்து விட்டனர்.

பத்து நாட்கள் சென்றபின், மாப்பிள்ளையே போய் பெண்ணை அழைத்து வந்து குடும்பம் நடத்தினார். அப்போது கூட, 'குழந்தை பிறக்காமல் பார்த்துக் கொள்; விவாகரத்து வாங்கிக் கொள்ளலாம்...' என்று அறிவுரை கூறி அனுப்பினார் நண்பர். இத்தகைய அறிவுரைகள் தொடரவே, இப்போது கணவன், மனைவி நிரந்தரமாக பிரிந்து விட்டனர்.

பெண்ணை பெற்றவர்களே... உங்கள் மகளிடம் நல்ல விஷயங்கள் குறித்தும், குடும்பத்தில் நடக்கும் சிறு சிறு பிரச்னைகளை அனுசரித்து போக சொல்லுங்கள். அதற்குமேல் பிரச்னை ஏற்பட்டால், சுமுகமாக தீர்க்க பாருங்கள். அல்ப காரணங்களுக்காக விவாகரத்து கேட்பதும், அதற்கு துணை போவதையும் தவிர்த்து, குடும்ப நலம் பேணி, நம் கலாசாரத்தை விட்டுக் கொடுக்காமல் இருங்களேன்!

கோ.பாலாஜி, கடலூர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 21, 2015 12:17 am

நிஜம் தான், கல்யாணம் ஆனதுக்கபுறம் ஒருமாதம் அந்த புது பெண்ணுக்கு டைம் தரணும் ...........அவளே புக்ககத்தை   புரிந்து கொள்ள.....................யாரும் குறுக்கிடாமல் இருந்தாலே போறும்................முக்கியமா பெண்ணை பெற்றவர்கள் ...............இல்லாவிட்டால் இப்படித்தான் ஆகும் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Jan 21, 2015 10:27 am

அனைத்தும் மிக மிக அருமையான கருத்துள்ள கதைகள்....

நன்றி...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 45 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 21, 2015 4:46 pm

M.Saranya wrote:அனைத்தும் மிக மிக அருமையான கருத்துள்ள கதைகள்....

நன்றி...
மேற்கோள் செய்த பதிவு: 1116475

நன்றி சரண்யா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 25, 2015 1:19 am

புத்தகம் பரிசளிப்பவரா நீங்கள்?

நானும், என் நண்பரும் மற்றொரு நண்பரின் திருமணத்திற்கு சென்றிருந்தோம். நான், மொய் பணம் கொடுத்தேன்; நண்பரோ, புத்தகம் ஒன்றை மணமக்களுக்கு பரிசளித்தார்.அடுத்த சில நாட்களில், மாப்பிள்ளை எங்கள் மீது கோபமாக இருக்கிறார் என, தெரிய வந்தது.

என்னவென்று தெரிந்து கொள்ள, புதுமாப்பிள்ளை வீட்டுக்கு சென்றேன். அப்போது தான் அவரின் கோபத்திற்கு காரணம் தெரிந்தது.

என் நண்பர் பரிசளித்த புத்தகம், 'செக்ஸ்' பற்றியது. புதுமணத் தம்பதிகளின் அந்தரங்கத்திற்கு தேவையான விளக்கங்கள், வரைபடங்களுடன் இருந்தது. திருமணம் முடிந்த மறுநாள், சுற்றம் சூழ உறவினர்கள் மத்தியில், திருமணத்திற்கு வந்த பரிசுகள் பிரிக்கப்படும் போது, மணப் பெண்ணின் உறவுகளிடம் இந்தப் புத்தகம் கிடைத்திருக்கிறது.

நண்பரை போட்டு உலுக்கி எடுத்திருக்கின்றனர். நீண்ட விளக்கம் கொடுத்த பின்பே, நிலைமை சகஜ நிலைக்கு வந்திருக்கிறது.

நண்பர்களே... புத்தகம் பரிசளிப்பது நல்ல பழக்கம் தான். ஆனால், அது முகம் சுளிக்க வைக்கக் கூடியதாக இல்லாமல் தரமான புத்தகமாக இருக்க வேண்டும்.

எஸ்.சஞ்சய் ராமசாமி, துறவிக்காடு.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 25, 2015 1:20 am

கம்பன் ஓ பாசிடிவ்!

சமூக வலைதளங்களில், தங்கள் கணக்குகளை துவக்குபவர்கள், 'மாதவன் தி கிரேட்' 'பிரதோஷ் டைம் ஹாஸ் கம்' 'ராகுல் ஹாண்ட்சம்' என்பது மாதிரியான வித்தியாசமான பெயர்களை வைப்பர். ஆனால், கம்பன் என்பவர், தன்னுடைய கணக்கிற்கு, 'கம்பன் ஓ பாசிடிவ்' என்று பெயர் வைத்திருக்கிறார்.

பெயரோடு தன்னுடைய, 'ப்ளட்' குரூப்பையும் சேர்த்து, கணக்கு துவங்கியிருக்கும் அவருடைய செயல், என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதன் மூலம், 'ஓ' பாசிடிவ் ரத்தம் தேவைப்படுவோர் அவரை அணுகலாம்.

சமூக வலைதளங்களில் நேரத்தை வீணடிக்கும் மனிதர்களுக்கு மத்தியில், சமூக அக்கறை கொண்ட இவரை போன்றவர்களை நினைக்கும் போது, பெருமையாக இருக்கிறது. சமூகவலை தளங்களை, நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தலாம் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இவர்.

ஜெ.கண்ணன், சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 25, 2015 1:21 am

ஆளைப் பார்க்காதீர்!

கசாப்புக் கடை வைத்திருக்கும் என் நண்பருக்கு, திருமணத்திற்கு பெண் தேடிய போது எளிதில் கிடைக்கவில்லை. கசாப்பு கடை என்றதும், வெறும் லுங்கி, பனியனும், கையில் அரிவாளுமாக அவரை கற்பனை செய்து கொண்டு, யாரும் பெண் கொடுக்க சம்மதிக்கவில்லை.

கல்யாணம் என்றாலே, ஆபீஸ் வேலை, அழுக்கு படியாத தோற்றம் கொண்ட மாப்பிள்ளைகளை நினைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு, நண்பரை பிடிக்காமல் போனதில் வியப்பில்லை.

கடைசியில், ஆசிரியர் வேலைக்கு படித்த பெண் கிடைத்தது. கல்யாணம் முடித்த கையோடு, தன் மனைவிக்கு வேலையும் வாங்கிக் தந்தார் நண்பர். ஆசிரியர் வேலை பார்க்கும் அவரது மனைவியும், கணவரது தொழிலை விரிவுபடுத்த யோசனை கூறிக் கொண்டிருக்கிறாரே தவிர, தடை ஏதும் போடவில்லை. நேர்மையான வேலையும், அதன் வருமானமும் தான் முக்கியமே தவிர, வீண் கவுரவம் தேவையில்லை.

திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்களே... கணவரை தேர்வு செய்யும் போது, வீண் கனவுகளுக்கு முக்கியத்துவம் தந்து, நல்ல வாழ்க்கையை இழந்து விடாதீர்கள்!

எம்.கிருஷ்ணன்,காஞ்சிபுரம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 45 of 100 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 72 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக