Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
+46
Namasivayam Mu
பழ.முத்துராமலிங்கம்
சசி
M.Jagadeesan
வேல்முருகன்
balakarthik
சரவணன்
Preethika Chandrakumar
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
prabatneb
சிவனாசான்
அகிலன்
idigiti
solomon
உமேரா
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
M.Saranya
jesifer
விமந்தனி
பிஜிராமன்
கோ. செந்தில்குமார்
Dr.S.Soundarapandian
கிருஷ்ணா
பாலாஜி
சிவா
SenthilMookan
T.N.Balasubramanian
உதயசுதா
பார்த்திபன்
ஹர்ஷித்
jenisiva
amirmaran
விஸ்வாஜீ
ayyasamy ram
ஜாஹீதாபானு
அருண்
M.M.SENTHIL
அசுரன்
Muthumohamed
mbalasaravanan
ராஜா
malik
krishnaamma
50 posters
Page 42 of 100
Page 42 of 100 • 1 ... 22 ... 41, 42, 43 ... 71 ... 100
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:38 pm; edited 5 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
முழுமையான விருந்தோம்பல் இதுதான்!
சமீபத்தில், வயதான என் தாயாருடன், நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். நண்பரின் மனைவி எங்களை வரவேற்று, குளிர்ந்த தண்ணீர் கொடுத்து உபசரித்ததுடன், 'டீயா, காபியா...' என்றதுடன், 'ஸ்ட்ராங்கா, லைட்டா, சீனி கம்மியா, கூடுதலா...' எனக் கேட்டு, எங்கள் விருப்பப்படியே தயாரித்துக் கொடுத்தார். மேலும், 'மதியம் சாப்பிட்டுத்தான் போகணும்...' என்று வற்புறுத்தி, 'சைவமா, அசைவமா... என்னென்ன காய்கறிகள் பிடிக்கும்...' என்பதையெல்லாம் கேட்டு, உப்பு, காரம் அளவுகளையும் தெரிந்து கொண்டார்.
'இது என்ன புதுசா இருக்கு?' என, நண்பரிடம் கேட்டேன். 'நாம சின்ன வயசுல என்ன சாப்பிட்டாலும் உடனே ஜீரணமாயிடும்; ஆனா, வயசானவங்களுக்கு எது பிடிக்கும், எந்தெந்த உணவுகளை தவிர்க்கணும்ன்னு கேட்டு, அது மாதிரி செய்தால், உடல் நலம் சீராக இருப்பதுடன், தேவையற்ற உடல் உபாதைகளில் இருந்தும் தப்பிக்கலாம்...' என்றார்.
நண்பரின் ஐடியாவை நாமும் பின்பற்றலாமே!
ஆர்.பகவதி சுப்புலட்சுமி,
பொட்டல்புதூர்.
சமீபத்தில், வயதான என் தாயாருடன், நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். நண்பரின் மனைவி எங்களை வரவேற்று, குளிர்ந்த தண்ணீர் கொடுத்து உபசரித்ததுடன், 'டீயா, காபியா...' என்றதுடன், 'ஸ்ட்ராங்கா, லைட்டா, சீனி கம்மியா, கூடுதலா...' எனக் கேட்டு, எங்கள் விருப்பப்படியே தயாரித்துக் கொடுத்தார். மேலும், 'மதியம் சாப்பிட்டுத்தான் போகணும்...' என்று வற்புறுத்தி, 'சைவமா, அசைவமா... என்னென்ன காய்கறிகள் பிடிக்கும்...' என்பதையெல்லாம் கேட்டு, உப்பு, காரம் அளவுகளையும் தெரிந்து கொண்டார்.
'இது என்ன புதுசா இருக்கு?' என, நண்பரிடம் கேட்டேன். 'நாம சின்ன வயசுல என்ன சாப்பிட்டாலும் உடனே ஜீரணமாயிடும்; ஆனா, வயசானவங்களுக்கு எது பிடிக்கும், எந்தெந்த உணவுகளை தவிர்க்கணும்ன்னு கேட்டு, அது மாதிரி செய்தால், உடல் நலம் சீராக இருப்பதுடன், தேவையற்ற உடல் உபாதைகளில் இருந்தும் தப்பிக்கலாம்...' என்றார்.
நண்பரின் ஐடியாவை நாமும் பின்பற்றலாமே!
ஆர்.பகவதி சுப்புலட்சுமி,
பொட்டல்புதூர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
வெளியே தெரிவது தான் பேஷன்!
கடந்த வாரம், இ.உ.இ., பகுதியில், இன்றைய இளைஞர்கள் அணியும் பேன்ட் குறித்து எழுதியிருந்தார் ஒரு வாசகி. ஆமாம்... தெரியாமல் தான் கேட்கிறேன்... லேடீஸ் நீங்கள் செய்யுறது மட்டும் உங்க கண்ணுக்குத் தெரியலயா?
முன்பெல்லாம் உள்ளாடைகள் வெளியே தெரிவதை அவமானமாக நினைத்த பெண்கள், 'இப்போ பிராவை வெளியே தெரியும்படி போடுவது தான் பேஷன்...' எனச் சொல்லி திரிவதும், லோ-ஹிப் ஜீன்ஸ் பேன்ட் போட்டு வயித்துக்கு மேலே பனியன் அணிந்து கவர்ச்சி காட்டுவதும், 'ஸ்லீவ்லெஸ்' என்ற பெயரில் அழுக்கு அக்குளையும் காட்டுறீங்களே... இதையெல்லாம் நாங்க சகிக்கலயா?
சரி அதவிடுங்க... புடவையையாவது ஒழுங்கா கட்டுறீங்களா...குட்டி குட்டியா மடிப்பு வைக்கிறேன்னு, பாதி உடம்பை காட்டும் உங்களுக்கும், கவர்ச்சி நடிகைகளுக்கும் என்ன வித்தியாசம்?
இப்படி எல்லாத்தையும் காட்டிட்டு இந்த அதிகாரி, 'செக்ஸ்' டார்ச்சர் கொடுத்தார், அந்த அமைச்சர் கையை பிடிச்சி இழுத்தார்ன்னு அழுவுறீங்களே... இது உங்களுக்கே நியாயமா இருக்கா?
முதல்ல கண்ணியமான உடைகளை நீங்க உடுத்துங்க; அப்புறம் எங்களுக்கு, 'அட்வைஸ்' செய்யுங்க!
ரத்தக் கொதிப்புடன்,
யூத் பாய்ஸ் சங்கம்.
கடந்த வாரம், இ.உ.இ., பகுதியில், இன்றைய இளைஞர்கள் அணியும் பேன்ட் குறித்து எழுதியிருந்தார் ஒரு வாசகி. ஆமாம்... தெரியாமல் தான் கேட்கிறேன்... லேடீஸ் நீங்கள் செய்யுறது மட்டும் உங்க கண்ணுக்குத் தெரியலயா?
முன்பெல்லாம் உள்ளாடைகள் வெளியே தெரிவதை அவமானமாக நினைத்த பெண்கள், 'இப்போ பிராவை வெளியே தெரியும்படி போடுவது தான் பேஷன்...' எனச் சொல்லி திரிவதும், லோ-ஹிப் ஜீன்ஸ் பேன்ட் போட்டு வயித்துக்கு மேலே பனியன் அணிந்து கவர்ச்சி காட்டுவதும், 'ஸ்லீவ்லெஸ்' என்ற பெயரில் அழுக்கு அக்குளையும் காட்டுறீங்களே... இதையெல்லாம் நாங்க சகிக்கலயா?
சரி அதவிடுங்க... புடவையையாவது ஒழுங்கா கட்டுறீங்களா...குட்டி குட்டியா மடிப்பு வைக்கிறேன்னு, பாதி உடம்பை காட்டும் உங்களுக்கும், கவர்ச்சி நடிகைகளுக்கும் என்ன வித்தியாசம்?
இப்படி எல்லாத்தையும் காட்டிட்டு இந்த அதிகாரி, 'செக்ஸ்' டார்ச்சர் கொடுத்தார், அந்த அமைச்சர் கையை பிடிச்சி இழுத்தார்ன்னு அழுவுறீங்களே... இது உங்களுக்கே நியாயமா இருக்கா?
முதல்ல கண்ணியமான உடைகளை நீங்க உடுத்துங்க; அப்புறம் எங்களுக்கு, 'அட்வைஸ்' செய்யுங்க!
ரத்தக் கொதிப்புடன்,
யூத் பாய்ஸ் சங்கம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொஞ்சம் விவசாயியாக நடிங்க பாஸ்!
கொஞ்சம் விவசாயியாக நடிங்க பாஸ்!
தனியார் ஆங்கிலப்பள்ளியில், ஆசிரியையாக பணிபுரிகிறேன். நடந்து முடிந்த குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு மாறுவேட போட்டி நடத்த ஏற்பாடு செய்திருந்தோம்.
மாணவ, மாணவியர் அனைவருமே டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர், தலைவர்கள் மற்றும் அவ்வையார் போன்ற வேடங்களைப் போடவே விருப்பம் தெரிவித்தனர். 'இது எல்லாமே வழக்கமானது தானே... யாராவது ஒருத்தர் விவசாயி வேடம் போட்டு, உழவுத் தொழிலை பற்றி பேசலாமே...' என்று கூறினேன். ஆனால், மாணவர்களோ, பெற்றோரோ இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
எல்லாரும் டாக்டர், இன்ஜினியர் என்று தான் யோசித்தனரே தவிர, விவசாயிகளை கவுரவிக்க, யாரும் முன்வரவில்லை. மாறாக, விவசாயி என்ற பெயரை கேட்டாலே, முகம் சுழித்தனர்.
ஒருவழியாக, ஒரு மாணவனிடம் பக்குவமாக பேசி, விவசாயி வேடம் போட வைத்து, 'உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்ற தலைப்பில் நானே எழுதிக் கொடுத்து, பேச வைத்தேன். அவனுக்கே முதல் பரிசும் கிடைத்தது.
இன்று, பெரிய பதவியில், பணச் செழுமையில் இருக்கும் எல்லாருக்கும் உணவிடுவது, வயலில் வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயி என்பதை உணர மறுப்பதேன்?
கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் விவசாயம் குறித்த விழிப்புணர்வு, மாணவர்களுக்கும் தேவை. இனியாவது, நாட்டின் முதுகெலும்பான விவசாயியை பற்றி பெருமையாக பேச, எல்லா மாணவர்களும் தயங்காமல் உறுதி எடுத்துக் கொள்ள முன் வருவரா?
— வி.சாந்தி, வெட்டுவான்கேணி.
தனியார் ஆங்கிலப்பள்ளியில், ஆசிரியையாக பணிபுரிகிறேன். நடந்து முடிந்த குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு மாறுவேட போட்டி நடத்த ஏற்பாடு செய்திருந்தோம்.
மாணவ, மாணவியர் அனைவருமே டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர், தலைவர்கள் மற்றும் அவ்வையார் போன்ற வேடங்களைப் போடவே விருப்பம் தெரிவித்தனர். 'இது எல்லாமே வழக்கமானது தானே... யாராவது ஒருத்தர் விவசாயி வேடம் போட்டு, உழவுத் தொழிலை பற்றி பேசலாமே...' என்று கூறினேன். ஆனால், மாணவர்களோ, பெற்றோரோ இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
எல்லாரும் டாக்டர், இன்ஜினியர் என்று தான் யோசித்தனரே தவிர, விவசாயிகளை கவுரவிக்க, யாரும் முன்வரவில்லை. மாறாக, விவசாயி என்ற பெயரை கேட்டாலே, முகம் சுழித்தனர்.
ஒருவழியாக, ஒரு மாணவனிடம் பக்குவமாக பேசி, விவசாயி வேடம் போட வைத்து, 'உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்ற தலைப்பில் நானே எழுதிக் கொடுத்து, பேச வைத்தேன். அவனுக்கே முதல் பரிசும் கிடைத்தது.
இன்று, பெரிய பதவியில், பணச் செழுமையில் இருக்கும் எல்லாருக்கும் உணவிடுவது, வயலில் வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயி என்பதை உணர மறுப்பதேன்?
கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் விவசாயம் குறித்த விழிப்புணர்வு, மாணவர்களுக்கும் தேவை. இனியாவது, நாட்டின் முதுகெலும்பான விவசாயியை பற்றி பெருமையாக பேச, எல்லா மாணவர்களும் தயங்காமல் உறுதி எடுத்துக் கொள்ள முன் வருவரா?
— வி.சாந்தி, வெட்டுவான்கேணி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொஞ்சம் விவசாயியாக நடிங்க பாஸ்!
கொஞ்சம் விவசாயியாக நடிங்க பாஸ்!
தனியார் ஆங்கிலப்பள்ளியில், ஆசிரியையாக பணிபுரிகிறேன். நடந்து முடிந்த குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு மாறுவேட போட்டி நடத்த ஏற்பாடு செய்திருந்தோம்.
மாணவ, மாணவியர் அனைவருமே டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர், தலைவர்கள் மற்றும் அவ்வையார் போன்ற வேடங்களைப் போடவே விருப்பம் தெரிவித்தனர். 'இது எல்லாமே வழக்கமானது தானே... யாராவது ஒருத்தர் விவசாயி வேடம் போட்டு, உழவுத் தொழிலை பற்றி பேசலாமே...' என்று கூறினேன். ஆனால், மாணவர்களோ, பெற்றோரோ இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
எல்லாரும் டாக்டர், இன்ஜினியர் என்று தான் யோசித்தனரே தவிர, விவசாயிகளை கவுரவிக்க, யாரும் முன்வரவில்லை. மாறாக, விவசாயி என்ற பெயரை கேட்டாலே, முகம் சுழித்தனர்.
ஒருவழியாக, ஒரு மாணவனிடம் பக்குவமாக பேசி, விவசாயி வேடம் போட வைத்து, 'உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்ற தலைப்பில் நானே எழுதிக் கொடுத்து, பேச வைத்தேன். அவனுக்கே முதல் பரிசும் கிடைத்தது.
இன்று, பெரிய பதவியில், பணச் செழுமையில் இருக்கும் எல்லாருக்கும் உணவிடுவது, வயலில் வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயி என்பதை உணர மறுப்பதேன்?
கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் விவசாயம் குறித்த விழிப்புணர்வு, மாணவர்களுக்கும் தேவை. இனியாவது, நாட்டின் முதுகெலும்பான விவசாயியை பற்றி பெருமையாக பேச, எல்லா மாணவர்களும் தயங்காமல் உறுதி எடுத்துக் கொள்ள முன் வருவரா?
— வி.சாந்தி, வெட்டுவான்கேணி.
தனியார் ஆங்கிலப்பள்ளியில், ஆசிரியையாக பணிபுரிகிறேன். நடந்து முடிந்த குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு மாறுவேட போட்டி நடத்த ஏற்பாடு செய்திருந்தோம்.
மாணவ, மாணவியர் அனைவருமே டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர், தலைவர்கள் மற்றும் அவ்வையார் போன்ற வேடங்களைப் போடவே விருப்பம் தெரிவித்தனர். 'இது எல்லாமே வழக்கமானது தானே... யாராவது ஒருத்தர் விவசாயி வேடம் போட்டு, உழவுத் தொழிலை பற்றி பேசலாமே...' என்று கூறினேன். ஆனால், மாணவர்களோ, பெற்றோரோ இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
எல்லாரும் டாக்டர், இன்ஜினியர் என்று தான் யோசித்தனரே தவிர, விவசாயிகளை கவுரவிக்க, யாரும் முன்வரவில்லை. மாறாக, விவசாயி என்ற பெயரை கேட்டாலே, முகம் சுழித்தனர்.
ஒருவழியாக, ஒரு மாணவனிடம் பக்குவமாக பேசி, விவசாயி வேடம் போட வைத்து, 'உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்ற தலைப்பில் நானே எழுதிக் கொடுத்து, பேச வைத்தேன். அவனுக்கே முதல் பரிசும் கிடைத்தது.
இன்று, பெரிய பதவியில், பணச் செழுமையில் இருக்கும் எல்லாருக்கும் உணவிடுவது, வயலில் வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயி என்பதை உணர மறுப்பதேன்?
கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் விவசாயம் குறித்த விழிப்புணர்வு, மாணவர்களுக்கும் தேவை. இனியாவது, நாட்டின் முதுகெலும்பான விவசாயியை பற்றி பெருமையாக பேச, எல்லா மாணவர்களும் தயங்காமல் உறுதி எடுத்துக் கொள்ள முன் வருவரா?
— வி.சாந்தி, வெட்டுவான்கேணி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொஞ்சம் விவசாயியாக நடிங்க பாஸ்!
கொஞ்சம் விவசாயியாக நடிங்க பாஸ்!
தனியார் ஆங்கிலப்பள்ளியில், ஆசிரியையாக பணிபுரிகிறேன். நடந்து முடிந்த குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு மாறுவேட போட்டி நடத்த ஏற்பாடு செய்திருந்தோம்.
மாணவ, மாணவியர் அனைவருமே டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர், தலைவர்கள் மற்றும் அவ்வையார் போன்ற வேடங்களைப் போடவே விருப்பம் தெரிவித்தனர். 'இது எல்லாமே வழக்கமானது தானே... யாராவது ஒருத்தர் விவசாயி வேடம் போட்டு, உழவுத் தொழிலை பற்றி பேசலாமே...' என்று கூறினேன். ஆனால், மாணவர்களோ, பெற்றோரோ இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
எல்லாரும் டாக்டர், இன்ஜினியர் என்று தான் யோசித்தனரே தவிர, விவசாயிகளை கவுரவிக்க, யாரும் முன்வரவில்லை. மாறாக, விவசாயி என்ற பெயரை கேட்டாலே, முகம் சுழித்தனர்.
ஒருவழியாக, ஒரு மாணவனிடம் பக்குவமாக பேசி, விவசாயி வேடம் போட வைத்து, 'உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்ற தலைப்பில் நானே எழுதிக் கொடுத்து, பேச வைத்தேன். அவனுக்கே முதல் பரிசும் கிடைத்தது.
இன்று, பெரிய பதவியில், பணச் செழுமையில் இருக்கும் எல்லாருக்கும் உணவிடுவது, வயலில் வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயி என்பதை உணர மறுப்பதேன்?
கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் விவசாயம் குறித்த விழிப்புணர்வு, மாணவர்களுக்கும் தேவை. இனியாவது, நாட்டின் முதுகெலும்பான விவசாயியை பற்றி பெருமையாக பேச, எல்லா மாணவர்களும் தயங்காமல் உறுதி எடுத்துக் கொள்ள முன் வருவரா?
— வி.சாந்தி, வெட்டுவான்கேணி.
தனியார் ஆங்கிலப்பள்ளியில், ஆசிரியையாக பணிபுரிகிறேன். நடந்து முடிந்த குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு மாறுவேட போட்டி நடத்த ஏற்பாடு செய்திருந்தோம்.
மாணவ, மாணவியர் அனைவருமே டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர், தலைவர்கள் மற்றும் அவ்வையார் போன்ற வேடங்களைப் போடவே விருப்பம் தெரிவித்தனர். 'இது எல்லாமே வழக்கமானது தானே... யாராவது ஒருத்தர் விவசாயி வேடம் போட்டு, உழவுத் தொழிலை பற்றி பேசலாமே...' என்று கூறினேன். ஆனால், மாணவர்களோ, பெற்றோரோ இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
எல்லாரும் டாக்டர், இன்ஜினியர் என்று தான் யோசித்தனரே தவிர, விவசாயிகளை கவுரவிக்க, யாரும் முன்வரவில்லை. மாறாக, விவசாயி என்ற பெயரை கேட்டாலே, முகம் சுழித்தனர்.
ஒருவழியாக, ஒரு மாணவனிடம் பக்குவமாக பேசி, விவசாயி வேடம் போட வைத்து, 'உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்ற தலைப்பில் நானே எழுதிக் கொடுத்து, பேச வைத்தேன். அவனுக்கே முதல் பரிசும் கிடைத்தது.
இன்று, பெரிய பதவியில், பணச் செழுமையில் இருக்கும் எல்லாருக்கும் உணவிடுவது, வயலில் வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயி என்பதை உணர மறுப்பதேன்?
கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் விவசாயம் குறித்த விழிப்புணர்வு, மாணவர்களுக்கும் தேவை. இனியாவது, நாட்டின் முதுகெலும்பான விவசாயியை பற்றி பெருமையாக பேச, எல்லா மாணவர்களும் தயங்காமல் உறுதி எடுத்துக் கொள்ள முன் வருவரா?
— வி.சாந்தி, வெட்டுவான்கேணி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
பதவி உயர்வும், சந்தேகப் புத்தியும்!
பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் என் தோழி, பதவி உயர்வு கிடைத்ததிலிருந்து மகிழ்ச்சியே இல்லாமல் இருந்தாள். இது குறித்து அவளிடம் கேட்ட போது, 'என் கணவர், வேலையில்லாமல் வீட்டில் இருக்கிறார். இந்நிலையில், எனக்கு கிடைத்துள்ள பதவி உயர்வு, அவருக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிவிட்டது. இதனால், அவர், என்னுடன் சரிவர முகம் கொடுத்து பேசுவதில்லை. அத்துடன், என் பதவி உயர்வை மட்டம் தட்டி பேசுவதுடன், 'மேலதிகாரிகளுக்கு பல்லைக்காட்டி, படுக்கை விரித்து, பெற்றிருப்பே...' என்று நாகூசாமல் பேசுகிறார்...' என்று கூறி, கதறி அழுதாள்.
அப்போதைக்கு, ஆறுதல் சொல்லி, சமதானப்படுத்தினாலும், மனம் பதறியது எனக்கு. ஆணோ, பெண்ணோ பதவி உயர்வு பெறுவதற்கு, பணிபுரியும் திறன், பழகும் தன்மை, அவசர நேரங்களில் சரியான முடிவெடுத்தல், குறித்த நேரத்தில் வேலையை முடிப்பது, இவைகள்தான் காரணமாய் இருக்க முடியுமே தவிர, பெண் என்றால், எதையும் பேசி விடுவது ஆணாதிக்க கணவர்களுக்கு அழகல்ல.
தன்னை விட உயர்ந்து, ஜெயித்திருக்கும் ஒரு பெண், தனக்கு மனைவியாக கிடைத்திருப்பதை பாக்கியமாக கருதுவதை விட்டுவிட்டு, சந்தேகப்படும் குணம் எதற்கு? யோசிப்பீர்களா ஆண்களே!
பி.சுபானு, காரைக்குடி.
பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் என் தோழி, பதவி உயர்வு கிடைத்ததிலிருந்து மகிழ்ச்சியே இல்லாமல் இருந்தாள். இது குறித்து அவளிடம் கேட்ட போது, 'என் கணவர், வேலையில்லாமல் வீட்டில் இருக்கிறார். இந்நிலையில், எனக்கு கிடைத்துள்ள பதவி உயர்வு, அவருக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிவிட்டது. இதனால், அவர், என்னுடன் சரிவர முகம் கொடுத்து பேசுவதில்லை. அத்துடன், என் பதவி உயர்வை மட்டம் தட்டி பேசுவதுடன், 'மேலதிகாரிகளுக்கு பல்லைக்காட்டி, படுக்கை விரித்து, பெற்றிருப்பே...' என்று நாகூசாமல் பேசுகிறார்...' என்று கூறி, கதறி அழுதாள்.
அப்போதைக்கு, ஆறுதல் சொல்லி, சமதானப்படுத்தினாலும், மனம் பதறியது எனக்கு. ஆணோ, பெண்ணோ பதவி உயர்வு பெறுவதற்கு, பணிபுரியும் திறன், பழகும் தன்மை, அவசர நேரங்களில் சரியான முடிவெடுத்தல், குறித்த நேரத்தில் வேலையை முடிப்பது, இவைகள்தான் காரணமாய் இருக்க முடியுமே தவிர, பெண் என்றால், எதையும் பேசி விடுவது ஆணாதிக்க கணவர்களுக்கு அழகல்ல.
தன்னை விட உயர்ந்து, ஜெயித்திருக்கும் ஒரு பெண், தனக்கு மனைவியாக கிடைத்திருப்பதை பாக்கியமாக கருதுவதை விட்டுவிட்டு, சந்தேகப்படும் குணம் எதற்கு? யோசிப்பீர்களா ஆண்களே!
பி.சுபானு, காரைக்குடி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மனதில் பதிந்த அன்பளிப்பு!
என் அம்மா யார் வீட்டுக்கு சென்றாலும், அந்தந்த வயதினருக்கு ஏற்ற அன்பளிப்பை வாங்கிச் செல்வார். பொதுவாக பூ, பழம் என்று வாங்கிச் செல்லாமல், சிறு குழந்தைகளை பார்க்க சென்றால், பொம்மைகள், வளர்ந்த பிள்ளைகளுக்கு எழுதுபொருட்கள் என்று, வாங்கிச் செல்வார்.
'இப்படி மெனக்கெடல் தேவையா...' என்று நான் கூட நினைப்பேன்.
அன்று தூரத்து உறவினர்களான, 60 வயதைக் கடந்த தாத்தா, பாட்டியைப் பார்க்க சென்றோம். அவர்களுக்கு, குறுக்கு எழுத்துப் போட்டி புத்தகத்தைக் கொடுத்த அம்மா, '50 - 60 வயசுக்கு மேல், ஞாபக மறதி வரும்ன்னு சொல்றாங்க; உங்க ஓய்வு நேரத்துல போட்டு பாருங்க, மூளை சோர்வடையாம இருக்கும். வயசானவங்க இந்த மாதிரி, குறுக்கெழுத்து எல்லாம் போட்டா ஞாபகமறதி வராம இருக்கும்ன்னு எங்க குடும்ப டாக்டர் சொன்னாரு...' என்றார்.
அந்த முதியவர்கள், முகத்தில் தெரிந்த ஆனந்தத்தைப் பார்க்க வேண்டுமே... நம் மேல் அக்கறை காட்டக் கூடியவர்களுக்கும் இருக்கின்றனரே என்ற நிம்மதி தெரிந்தது. நாம் என்னதான், பணம் பணம் என்று அடித்துக் கொண்டாலும், மனித மனம் எப்போதும் எதிர்பார்ப்பது, இந்த அன்பிற்குத்தான்.
தற்போது நானும், என் அம்மா வழியைப் பின்பற்றத் துவங்கி விட்டேன். நீங்களும் கடைபிடித்துத் தான் பாருங்களேன்!
ஆர்.அம்பிகா, மதுரை.
என் அம்மா யார் வீட்டுக்கு சென்றாலும், அந்தந்த வயதினருக்கு ஏற்ற அன்பளிப்பை வாங்கிச் செல்வார். பொதுவாக பூ, பழம் என்று வாங்கிச் செல்லாமல், சிறு குழந்தைகளை பார்க்க சென்றால், பொம்மைகள், வளர்ந்த பிள்ளைகளுக்கு எழுதுபொருட்கள் என்று, வாங்கிச் செல்வார்.
'இப்படி மெனக்கெடல் தேவையா...' என்று நான் கூட நினைப்பேன்.
அன்று தூரத்து உறவினர்களான, 60 வயதைக் கடந்த தாத்தா, பாட்டியைப் பார்க்க சென்றோம். அவர்களுக்கு, குறுக்கு எழுத்துப் போட்டி புத்தகத்தைக் கொடுத்த அம்மா, '50 - 60 வயசுக்கு மேல், ஞாபக மறதி வரும்ன்னு சொல்றாங்க; உங்க ஓய்வு நேரத்துல போட்டு பாருங்க, மூளை சோர்வடையாம இருக்கும். வயசானவங்க இந்த மாதிரி, குறுக்கெழுத்து எல்லாம் போட்டா ஞாபகமறதி வராம இருக்கும்ன்னு எங்க குடும்ப டாக்டர் சொன்னாரு...' என்றார்.
அந்த முதியவர்கள், முகத்தில் தெரிந்த ஆனந்தத்தைப் பார்க்க வேண்டுமே... நம் மேல் அக்கறை காட்டக் கூடியவர்களுக்கும் இருக்கின்றனரே என்ற நிம்மதி தெரிந்தது. நாம் என்னதான், பணம் பணம் என்று அடித்துக் கொண்டாலும், மனித மனம் எப்போதும் எதிர்பார்ப்பது, இந்த அன்பிற்குத்தான்.
தற்போது நானும், என் அம்மா வழியைப் பின்பற்றத் துவங்கி விட்டேன். நீங்களும் கடைபிடித்துத் தான் பாருங்களேன்!
ஆர்.அம்பிகா, மதுரை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விவசாயத்தை அழிக்கும் உ.பா., பிரியர்கள்!
விவசாயத்தை அழிக்கும் உ.பா., பிரியர்கள்!
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் என் நண்பர், நகரத்தை ஒட்டியுள்ள அவருக்கு சொந்தமான வயலில் விவசாயமும் செய்து வந்தார். சமீபத்தில், அங்கு உட்கார்ந்து மது அருந்திய சிலர், காலி பாட்டில்களை உடைத்து வயலில் போட்டிருக்கின்றனர். விவசாய வேலைக்காக வயலில் இறங்கிய நண்பரின் பாதத்தை உடைந்த கண்ணாடி துண்டுகள் பதம் பார்த்து விடவே, தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கும், வீட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்.
அவரை நலம் விசாரிக்க சென்ற போது, 'மழையின்மை, உரம் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட பிரச்னைகளைக் கூட சமாளித்து, இதுவரை விவசாயம் பார்த்து விட்டேன். ஆனால், இப்போதெல்லாம் வயல்வெளியில் அமர்ந்து, மது அருந்துபவர்கள், பாட்டில்களை அப்படியே போட்டாலும் பரவாயில்லை; உடைத்துப் போட்டு விடுகின்றனர். இதனால், இதுவரை பலமுறை என் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
'இப்படி தொடர்ந்து நடக்கும் போது என் உயிருக்கோ அல்லது உடலுக்கோ ஆபத்து ஏற்பட்டால், என் குடும்பத்தினர் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும். அதனால், நான் விவசாயத்தை விட்டு விடப் போகிறேன்...' என்று வருத்தத்துடன் கூறினார். உ.பா., பிரியர்கள் தம்மையும், குடும்பத்தையும் அழித்துக் கொள்வதோடு, விவசாயிகளுக்கும் புது முறையில் வேட்டு வைக்கின்றனரே என்று வேதனையாக இருந்தது. இதைப்படிக்கும் சிலராவது திருந்துவரா!
க.சரவணன், திருவாரூர்.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் என் நண்பர், நகரத்தை ஒட்டியுள்ள அவருக்கு சொந்தமான வயலில் விவசாயமும் செய்து வந்தார். சமீபத்தில், அங்கு உட்கார்ந்து மது அருந்திய சிலர், காலி பாட்டில்களை உடைத்து வயலில் போட்டிருக்கின்றனர். விவசாய வேலைக்காக வயலில் இறங்கிய நண்பரின் பாதத்தை உடைந்த கண்ணாடி துண்டுகள் பதம் பார்த்து விடவே, தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கும், வீட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்.
அவரை நலம் விசாரிக்க சென்ற போது, 'மழையின்மை, உரம் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட பிரச்னைகளைக் கூட சமாளித்து, இதுவரை விவசாயம் பார்த்து விட்டேன். ஆனால், இப்போதெல்லாம் வயல்வெளியில் அமர்ந்து, மது அருந்துபவர்கள், பாட்டில்களை அப்படியே போட்டாலும் பரவாயில்லை; உடைத்துப் போட்டு விடுகின்றனர். இதனால், இதுவரை பலமுறை என் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
'இப்படி தொடர்ந்து நடக்கும் போது என் உயிருக்கோ அல்லது உடலுக்கோ ஆபத்து ஏற்பட்டால், என் குடும்பத்தினர் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும். அதனால், நான் விவசாயத்தை விட்டு விடப் போகிறேன்...' என்று வருத்தத்துடன் கூறினார். உ.பா., பிரியர்கள் தம்மையும், குடும்பத்தையும் அழித்துக் கொள்வதோடு, விவசாயிகளுக்கும் புது முறையில் வேட்டு வைக்கின்றனரே என்று வேதனையாக இருந்தது. இதைப்படிக்கும் சிலராவது திருந்துவரா!
க.சரவணன், திருவாரூர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
திறமைதான் நமது செல்வம்!
நானும், என் தோழியும் பிரபல பேக்கரியில் பணிபுரிந்து வந்தோம். இந்நிலையில், ஆட்டோ ஓட்டுனரான தோழியின் கணவர், மாரடைப்பால் இறந்து போனார். அதனால், பேக்கரி நிறுவனத்தார், ' கணவனை இழந்தவர்களை இங்கு வேலையில் வைத்துக் கொள்ள மாட்டோம்...' என, அவளை வேலையிலிருந்து நிறுத்தி விட்டனர். தோழிக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளதால், அவர்களை வளர்ப்பதற்கும், படிக்க வைப்பதற்கும் அவள் கட்டாயம் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை.
இச்சூழ்நிலையில், தோழிக்கு, ஒரு யோசனை தோன்றியது. அருகில் உள்ள ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று, தற்போது தன் கணவரின் ஆட்டோவை ஓட்டுகிறாள். காலை, மாலை வேளைகளில் பள்ளி சவாரியும், வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கோவில்களுக்கும், விடுமுறை நாட்களில் தியேட்டருக்கு சவாரி செல்வதும், ஓய்வு நேரங்களில் கூடை பின்னுவது என, பல்வேறு வேலைகளை செய்து கடுமையாக உழைத்து, தற்போது நன்றாக சம்பாதித்து, வாழ்க்கையில் முன்னேறி வருகிறாள்.
அத்துடன் தன் ஆட்டோவில், 'கணவனை இழந்தோருக்கு இலவசம்...' என்று எழுதியுள்ளதுடன், 'கணவனை இழந்த பெண்களே... வீட்டிற்குள் முடங்கிக் கிடக்காதீர்; நீங்களும் திறமையானவர்கள்...' என்ற வாசகத்தையும் எழுதி வைத்துள்ளாள்.
கணவனை இழந்து விட்டோமே... இனி என்ன செய்யப் போகிறோம் என கலங்கி, வீட்டிற்குள் முடங்கிப் போகாமல், தன் திறமையால், தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து காட்டும் தோழியை, இப்போது அப்பகுதியினர் அனைவரும் பாராட்டுகின்றனர்.
கணவனை இழந்தோர்களே... உங்களுக்குள்ளும் திறமை இருக்கிறது; திறமைகளை புதைக்காமல், உலகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகத்
திகழுங்கள்.
கே. முருகேஸ்வரி, காரைக்குடி.
நானும், என் தோழியும் பிரபல பேக்கரியில் பணிபுரிந்து வந்தோம். இந்நிலையில், ஆட்டோ ஓட்டுனரான தோழியின் கணவர், மாரடைப்பால் இறந்து போனார். அதனால், பேக்கரி நிறுவனத்தார், ' கணவனை இழந்தவர்களை இங்கு வேலையில் வைத்துக் கொள்ள மாட்டோம்...' என, அவளை வேலையிலிருந்து நிறுத்தி விட்டனர். தோழிக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளதால், அவர்களை வளர்ப்பதற்கும், படிக்க வைப்பதற்கும் அவள் கட்டாயம் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை.
இச்சூழ்நிலையில், தோழிக்கு, ஒரு யோசனை தோன்றியது. அருகில் உள்ள ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று, தற்போது தன் கணவரின் ஆட்டோவை ஓட்டுகிறாள். காலை, மாலை வேளைகளில் பள்ளி சவாரியும், வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கோவில்களுக்கும், விடுமுறை நாட்களில் தியேட்டருக்கு சவாரி செல்வதும், ஓய்வு நேரங்களில் கூடை பின்னுவது என, பல்வேறு வேலைகளை செய்து கடுமையாக உழைத்து, தற்போது நன்றாக சம்பாதித்து, வாழ்க்கையில் முன்னேறி வருகிறாள்.
அத்துடன் தன் ஆட்டோவில், 'கணவனை இழந்தோருக்கு இலவசம்...' என்று எழுதியுள்ளதுடன், 'கணவனை இழந்த பெண்களே... வீட்டிற்குள் முடங்கிக் கிடக்காதீர்; நீங்களும் திறமையானவர்கள்...' என்ற வாசகத்தையும் எழுதி வைத்துள்ளாள்.
கணவனை இழந்து விட்டோமே... இனி என்ன செய்யப் போகிறோம் என கலங்கி, வீட்டிற்குள் முடங்கிப் போகாமல், தன் திறமையால், தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து காட்டும் தோழியை, இப்போது அப்பகுதியினர் அனைவரும் பாராட்டுகின்றனர்.
கணவனை இழந்தோர்களே... உங்களுக்குள்ளும் திறமை இருக்கிறது; திறமைகளை புதைக்காமல், உலகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகத்
திகழுங்கள்.
கே. முருகேஸ்வரி, காரைக்குடி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
கர்ப்பிணி பெண்களுக்கு அழகு நிலையம் தேவையா?
நிறைமாத கர்ப்பிணியான நண்பரின் மனைவிக்கு, வளைகாப்பு நடத்த நண்பரின் வீட்டில் ஏற்பாடு செய்தனர். வளைகாப்பு அன்று அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக, நண்பரின் மனைவி அழகு நிலையம் சென்றார்.
அங்கு அவருக்கு ஒப்பனை செய்த பெண், நண்பரின் மனைவியை நாற்காலியில் நன்றாக சாய வைத்து ஒப்பனை செய்திருக்கிறார். இதனால், அன்று மாலையே, அவருக்கு பிரசவ வலி வந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்,'ஏடாகூடமாக நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்ததால், தொப்புள்கொடி, குழந்தையின் கழுத்தில் சுற்றியிருக்கிறது, சிக்கல் தான்...' என்று கூறினார். அதன்பின், மருத்துவர்களின் பெரும் முயற்சியால், பிரசவம் நல்லபடியாக முடிந்தது.
வளைகாப்பு செய்து கொள்ளும் பெண்கள், அழகு நிலையங்களுக்கு செல்வதைத் தவிர்ப்பது நல்லது!
ஜெ.கண்ணன், சென்னை.
நிறைமாத கர்ப்பிணியான நண்பரின் மனைவிக்கு, வளைகாப்பு நடத்த நண்பரின் வீட்டில் ஏற்பாடு செய்தனர். வளைகாப்பு அன்று அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக, நண்பரின் மனைவி அழகு நிலையம் சென்றார்.
அங்கு அவருக்கு ஒப்பனை செய்த பெண், நண்பரின் மனைவியை நாற்காலியில் நன்றாக சாய வைத்து ஒப்பனை செய்திருக்கிறார். இதனால், அன்று மாலையே, அவருக்கு பிரசவ வலி வந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்,'ஏடாகூடமாக நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்ததால், தொப்புள்கொடி, குழந்தையின் கழுத்தில் சுற்றியிருக்கிறது, சிக்கல் தான்...' என்று கூறினார். அதன்பின், மருத்துவர்களின் பெரும் முயற்சியால், பிரசவம் நல்லபடியாக முடிந்தது.
வளைகாப்பு செய்து கொள்ளும் பெண்கள், அழகு நிலையங்களுக்கு செல்வதைத் தவிர்ப்பது நல்லது!
ஜெ.கண்ணன், சென்னை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 42 of 100 • 1 ... 22 ... 41, 42, 43 ... 71 ... 100
Similar topics
» படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது ..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது ..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
Page 42 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|