Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
+46
Namasivayam Mu
பழ.முத்துராமலிங்கம்
சசி
M.Jagadeesan
வேல்முருகன்
balakarthik
சரவணன்
Preethika Chandrakumar
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
prabatneb
சிவனாசான்
அகிலன்
idigiti
solomon
உமேரா
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
M.Saranya
jesifer
விமந்தனி
பிஜிராமன்
கோ. செந்தில்குமார்
Dr.S.Soundarapandian
கிருஷ்ணா
பாலாஜி
சிவா
SenthilMookan
T.N.Balasubramanian
உதயசுதா
பார்த்திபன்
ஹர்ஷித்
jenisiva
amirmaran
விஸ்வாஜீ
ayyasamy ram
ஜாஹீதாபானு
அருண்
M.M.SENTHIL
அசுரன்
Muthumohamed
mbalasaravanan
ராஜா
malik
krishnaamma
50 posters
Page 38 of 100
Page 38 of 100 • 1 ... 20 ... 37, 38, 39 ... 69 ... 100
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:38 pm; edited 5 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அரசியல் நாகரிகம்!
கேரளாவில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் சட்டசபையிலும், மேடைகளிலும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்தாலும், பொது இடங்களில் நண்பர்களைப் போல் பழகுவர். இந்த படத்தை பாருங்கள்... முதல்வர் உம்மன் சாண்டியும், எதிர்க் கட்சி தலைவர் அச்சுதானந்த்தும் பேசி சிரிப்பதை!
இப்படி ஒரு ஆரோக்கியமான அரசியல் நாகரிகம் நம் மாநிலத்தில் காண வாய்ப்பு கிடைக்குமா?
ஜோல்னாபையன்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
முன் ஜாக்கிரதை!
தபால் நிலையத்தில் ஒருவர், கடிதம் எழுதி கவரில் போட்டு ஒட்டிய பின், அதை, ஒரு துணியால் அழுத்தி தேய்த்துக் கொண்டிருந்தார். 'சாதாரணமாக அழுத்தினால் ஒட்டாதா... எதற்காக இப்படி துடைக்கிறீர்கள்...' என்று கேட்டேன்.
அதற்கு அவர் சொன்ன பதில், அனுபவ பூர்வமாக இருந்தது.
'சும்மா அழுத்திப் போடலாம் தப்பில்ல; ஆனால், சில நேரத்தில் நாம் ஒட்டுகிற அந்த கோந்தின் பிசிறு வெளிவந்து, நம்முடைய கவர், இன்னொரு கவருடன் ஒட்டிப் போய், 'டெலிவரி' தாமதம் ஆகிவிடும். இதற்கு முன், எனக்கு இப்படி நடந்த அனுபவம் இருக்கிறது...' என்றார். ஒவ்வொரு செயலும், அனுபவம் தான் என்பதை புரிந்து கொண்டேன்.
— ஏ.நாகராஜன், சென்னை.
தபால் நிலையத்தில் ஒருவர், கடிதம் எழுதி கவரில் போட்டு ஒட்டிய பின், அதை, ஒரு துணியால் அழுத்தி தேய்த்துக் கொண்டிருந்தார். 'சாதாரணமாக அழுத்தினால் ஒட்டாதா... எதற்காக இப்படி துடைக்கிறீர்கள்...' என்று கேட்டேன்.
அதற்கு அவர் சொன்ன பதில், அனுபவ பூர்வமாக இருந்தது.
'சும்மா அழுத்திப் போடலாம் தப்பில்ல; ஆனால், சில நேரத்தில் நாம் ஒட்டுகிற அந்த கோந்தின் பிசிறு வெளிவந்து, நம்முடைய கவர், இன்னொரு கவருடன் ஒட்டிப் போய், 'டெலிவரி' தாமதம் ஆகிவிடும். இதற்கு முன், எனக்கு இப்படி நடந்த அனுபவம் இருக்கிறது...' என்றார். ஒவ்வொரு செயலும், அனுபவம் தான் என்பதை புரிந்து கொண்டேன்.
— ஏ.நாகராஜன், சென்னை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மின்சாரம்... இது புது சமாசாரம்!
ஆடு, மாடுகளைக் கொன்று அதன் ரத்தத்தை குடிப்பார்களா என்று தெரியாது. ஆனால், அதன் மாமிசத்திற்காக அவற்றை கதறக் கதற அரிவாளால் வெட்டிக் கொல்வர் என்று கேள்விப்பட்டதுண்டு. ஆனால், இதெல்லாம் பழைய டெக்னிக்காம்! புது சமாசாரம் என்ன தெரியுமா... அவற்றுக்கு, 'எலக்டிரிக் ஷாக்' கொடுத்து, சட்டென்று தீர்த்து விடுகின்றனராம்.
இவ்வாறு கொல்லப்படும் விலங்குகளின் மாமிசம் சாப்பிட ஏற்றதா, சாப்பிடுவோர் கதி என்ன என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கம் தருவரா?
— எஸ்.கோவிந்தராஜன், கோவை.
ஆடு, மாடுகளைக் கொன்று அதன் ரத்தத்தை குடிப்பார்களா என்று தெரியாது. ஆனால், அதன் மாமிசத்திற்காக அவற்றை கதறக் கதற அரிவாளால் வெட்டிக் கொல்வர் என்று கேள்விப்பட்டதுண்டு. ஆனால், இதெல்லாம் பழைய டெக்னிக்காம்! புது சமாசாரம் என்ன தெரியுமா... அவற்றுக்கு, 'எலக்டிரிக் ஷாக்' கொடுத்து, சட்டென்று தீர்த்து விடுகின்றனராம்.
இவ்வாறு கொல்லப்படும் விலங்குகளின் மாமிசம் சாப்பிட ஏற்றதா, சாப்பிடுவோர் கதி என்ன என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கம் தருவரா?
— எஸ்.கோவிந்தராஜன், கோவை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
'அந்த நாளும்' நல்ல நாளே!
என் தோழி மேற்படிப்பு, வேலை என அக்கறை காட்டி வந்ததால், அவளின் திருமணம் தள்ளிக் கொண்டே போய் சமீபத்தில் தான் முடிவானது. வரன் தள்ளி போனதால், பரிகாரமாக திருமணத்தை கோவிலில் நடத்த ஜோசியர் சொல்லிவிட, அதன்படி கோவிலில் திருமணத்தை நடத்தவும், வரவேற்புக்கு மண்டபமும் பிடித்திருந்தனர்.
திருமண நாளன்று, வழக்கத்துக்கு மாறாக சில நாட்கள் முன்னதாகவே தோழி வீட்டு விலக்காகி விட, கோவிலுக்குள் செல்ல முடியாதென்பதால், மாற்று ஏற்பாடுகளை செய்ய தீர்மானித்து, மண்டபத்திலேயே திருமணத்தை நடத்த முடிவெடுத்தனர்.
ஆனால், அதற்குள் தோழி பட்டபாடு சொல்லி மாளாது. இதை, ஒரு அபசகுனமாக எல்லாரும் இடித்துரைத்து பேச, வெட்கத்திலும், துக்கத்திலும் அன்று முழுக்க, அவள் கல்யாணக்களையே இல்லாமல் அழுதபடியே இருந்தாள்; எத்தனை ஆறுதல் சொல்லியும் எடுபடவே இல்லை.
சிவனே தன்னுடைய சரிபாதியை சக்திக்கு கொடுத்தாலும், நம்மவர்கள் விட மாட்டார்கள் போலிருக்கு. ஒரு பெண் விலக்காவதென்பது இயற்கையானது; வம்ச விருத்திக்கு அவசியமானதும் கூட. அதை ஏன் அபசகுனமாய் பார்த்து, மனதை காயப்படுத்த வேண்டும்?
பெண்ணுக்கு பெண்ணே எதிரியாகலாமா... யோசிக்க வேண்டும்.
- பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.
என் தோழி மேற்படிப்பு, வேலை என அக்கறை காட்டி வந்ததால், அவளின் திருமணம் தள்ளிக் கொண்டே போய் சமீபத்தில் தான் முடிவானது. வரன் தள்ளி போனதால், பரிகாரமாக திருமணத்தை கோவிலில் நடத்த ஜோசியர் சொல்லிவிட, அதன்படி கோவிலில் திருமணத்தை நடத்தவும், வரவேற்புக்கு மண்டபமும் பிடித்திருந்தனர்.
திருமண நாளன்று, வழக்கத்துக்கு மாறாக சில நாட்கள் முன்னதாகவே தோழி வீட்டு விலக்காகி விட, கோவிலுக்குள் செல்ல முடியாதென்பதால், மாற்று ஏற்பாடுகளை செய்ய தீர்மானித்து, மண்டபத்திலேயே திருமணத்தை நடத்த முடிவெடுத்தனர்.
ஆனால், அதற்குள் தோழி பட்டபாடு சொல்லி மாளாது. இதை, ஒரு அபசகுனமாக எல்லாரும் இடித்துரைத்து பேச, வெட்கத்திலும், துக்கத்திலும் அன்று முழுக்க, அவள் கல்யாணக்களையே இல்லாமல் அழுதபடியே இருந்தாள்; எத்தனை ஆறுதல் சொல்லியும் எடுபடவே இல்லை.
சிவனே தன்னுடைய சரிபாதியை சக்திக்கு கொடுத்தாலும், நம்மவர்கள் விட மாட்டார்கள் போலிருக்கு. ஒரு பெண் விலக்காவதென்பது இயற்கையானது; வம்ச விருத்திக்கு அவசியமானதும் கூட. அதை ஏன் அபசகுனமாய் பார்த்து, மனதை காயப்படுத்த வேண்டும்?
பெண்ணுக்கு பெண்ணே எதிரியாகலாமா... யோசிக்க வேண்டும்.
- பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1102966krishnaamma wrote:'அந்த நாளும்' நல்ல நாளே!
என் தோழி மேற்படிப்பு, வேலை என அக்கறை காட்டி வந்ததால், அவளின் திருமணம் தள்ளிக் கொண்டே போய் சமீபத்தில் தான் முடிவானது. வரன் தள்ளி போனதால், பரிகாரமாக திருமணத்தை கோவிலில் நடத்த ஜோசியர் சொல்லிவிட, அதன்படி கோவிலில் திருமணத்தை நடத்தவும், வரவேற்புக்கு மண்டபமும் பிடித்திருந்தனர்.
திருமண நாளன்று, வழக்கத்துக்கு மாறாக சில நாட்கள் முன்னதாகவே தோழி வீட்டு விலக்காகி விட, கோவிலுக்குள் செல்ல முடியாதென்பதால், மாற்று ஏற்பாடுகளை செய்ய தீர்மானித்து, மண்டபத்திலேயே திருமணத்தை நடத்த முடிவெடுத்தனர்.
ஆனால், அதற்குள் தோழி பட்டபாடு சொல்லி மாளாது. இதை, ஒரு அபசகுனமாக எல்லாரும் இடித்துரைத்து பேச, வெட்கத்திலும், துக்கத்திலும் அன்று முழுக்க, அவள் கல்யாணக்களையே இல்லாமல் அழுதபடியே இருந்தாள்; எத்தனை ஆறுதல் சொல்லியும் எடுபடவே இல்லை.
சிவனே தன்னுடைய சரிபாதியை சக்திக்கு கொடுத்தாலும், நம்மவர்கள் விட மாட்டார்கள் போலிருக்கு. ஒரு பெண் விலக்காவதென்பது இயற்கையானது; வம்ச விருத்திக்கு அவசியமானதும் கூட. அதை ஏன் அபசகுனமாய் பார்த்து, மனதை காயப்படுத்த வேண்டும்?
பெண்ணுக்கு பெண்ணே எதிரியாகலாமா... யோசிக்க வேண்டும்.
- பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.
அபசகுனம் என்று எண்ண வேண்டாம்............ஆனால் அந்த மாதிரி நாட்களில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யக் கூடாது ................அக்னி ஸ்வாமி இல்லையா ? அப்புறம் எப்படி?????????????????
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
சிவப்பழகு கிரீமா... உஷார்!
என் தோழி, தோல் மருத்துவராக பணியாற்றுகிறாள். சமீபத்தில் அவளை சந்தித்து, பேசிக் கொண்டிருந்த போது, எங்களின் பேச்சு, 'சிவப்பழகு கிரீம்' பக்கம் திரும்பியது. அப்போது அவள் கூறியது:
அழகு பொருட்களில் அதிகம் கல்லா கட்டுவது சிவப்பழகு கிரீம் தான். வெள்ளையனிடமிருந்து நமக்கு சுதந்திரம் கிடைத்த போதும், வெள்ளைத்தோலுக்கு நாம் இன்னும் அடிமையாகவே இருக்கிறோம். இந்த சிவப்பழகு மோகத்தை பயன்படுத்தி, பெண்களை அடிமைப்படுத்தியது போதாதென்று, இப்போது ஆண்களுக்கும் குறி வைத்து விட்டனர் சிவப்பழகு கிரீம் தயாரிப்பாளர்கள்.
எவ்வளவு தான் கிரீம் தேய்த்தாலும், ஒரு மனிதனின் நிறம் மாறாது என்பது நம் இளைய தலைமுறையினருக்கு தெரியவில்லை. இதனால், கிரீம் கம்பெனியினர் நம் தலையில் மிளகாய் அரைத்து, பணத்தை மூட்டையாக கட்டிக் கொண்டு செல்கின்றனர்.
அளவுக்கு மீறி நாம் தோலில் தேய்க்கும் எதுவுமே, கிட்னியை தான் பாதிக்கும். இந்த சிவப்பழகு கிரீம்கள் தோலை வெள்ளையாக்குவதில்லை, 'ப்ளீச்' தான் செய்கிறது. நாம் வாழும் மண்ணுக்கேற்ப, நம் நிறத்தை கடவுள் படைத்திருக்கிறார்; நம் நிறமே நமக்கு ஆரோக்கியம்; அதை மீற நினைக்கும் போது, அதற்கான எதிர்விளைவையும் சந்திக்க நேரிடும், என்றாள்.
அவள் கூறியதில் உள்ள உண்மையை கேட்டு, அசந்து போனேன்.
இதை படித்த பிறகாவது நம் மக்கள் திருந்துவரா?
- எச்.தஸ்மிலா, கீழக்கரை.
என் தோழி, தோல் மருத்துவராக பணியாற்றுகிறாள். சமீபத்தில் அவளை சந்தித்து, பேசிக் கொண்டிருந்த போது, எங்களின் பேச்சு, 'சிவப்பழகு கிரீம்' பக்கம் திரும்பியது. அப்போது அவள் கூறியது:
அழகு பொருட்களில் அதிகம் கல்லா கட்டுவது சிவப்பழகு கிரீம் தான். வெள்ளையனிடமிருந்து நமக்கு சுதந்திரம் கிடைத்த போதும், வெள்ளைத்தோலுக்கு நாம் இன்னும் அடிமையாகவே இருக்கிறோம். இந்த சிவப்பழகு மோகத்தை பயன்படுத்தி, பெண்களை அடிமைப்படுத்தியது போதாதென்று, இப்போது ஆண்களுக்கும் குறி வைத்து விட்டனர் சிவப்பழகு கிரீம் தயாரிப்பாளர்கள்.
எவ்வளவு தான் கிரீம் தேய்த்தாலும், ஒரு மனிதனின் நிறம் மாறாது என்பது நம் இளைய தலைமுறையினருக்கு தெரியவில்லை. இதனால், கிரீம் கம்பெனியினர் நம் தலையில் மிளகாய் அரைத்து, பணத்தை மூட்டையாக கட்டிக் கொண்டு செல்கின்றனர்.
அளவுக்கு மீறி நாம் தோலில் தேய்க்கும் எதுவுமே, கிட்னியை தான் பாதிக்கும். இந்த சிவப்பழகு கிரீம்கள் தோலை வெள்ளையாக்குவதில்லை, 'ப்ளீச்' தான் செய்கிறது. நாம் வாழும் மண்ணுக்கேற்ப, நம் நிறத்தை கடவுள் படைத்திருக்கிறார்; நம் நிறமே நமக்கு ஆரோக்கியம்; அதை மீற நினைக்கும் போது, அதற்கான எதிர்விளைவையும் சந்திக்க நேரிடும், என்றாள்.
அவள் கூறியதில் உள்ள உண்மையை கேட்டு, அசந்து போனேன்.
இதை படித்த பிறகாவது நம் மக்கள் திருந்துவரா?
- எச்.தஸ்மிலா, கீழக்கரை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
கறையை கழுவினால் கை நிறைய பணம்!
சமீபத்தில் சென்னை சென்றிருந்த போது, அபார்ட்மென்ட் ஒன்றில், ஒருவர், கார்களை தண்ணீர் ஊற்றி கழுவிக் கொண்டிருந்தார். என் மாமாவிடம், 'இப்படி கார்களை கழுவி இவர் என்னத்த பெருசா சம்பாதிச்சுடப் போறாரு... ஒரு காரைக் கழுவ, 10, 20 ரூபாய் கொடுப்பாங்க; அதை வைத்து எப்படி தான் குடும்பம் நடத்துவாரோ...' என்றேன்.
அதற்கு என் மாமா, 'என்ன அப்படி சொல்லிட்டே... ஒரு கார் கழுவ, ௧௦௦ ரூபாய்; தினமும் பத்து, பதினைந்து கார்கள் கழுவினால், சாதாரணமாக, 1,500 ரூபாய் வருமானம் கிடைக்கும். அதனால், அவர் கஷ்டமில்லாமல் குடும்பம் நடத்த முடியும். இதனால, படித்த இளைஞர்கள் கூட கவுரவம் பார்க்காமல், இத்தொழிலைச் செய்றாங்க. பெரும்பாலான அபார்ட்மென்ட்வாசிகள் சொந்தமாக கார் வச்சிருப்பதால், இவர்களது காட்டில் பணமழை கொட்டுது.
'அதே போல், இப்போ பல வீடுகளில் வண்ண மீன்கள் வளர்ப்பதும் பேஷனாகி விட்டது. அசைவம் சாப்பிடாதவர்கள் கூட, வண்ண மீன்களை வளர்க்கிறாங்க. அவங்க மீன் தொட்டியை சுத்தம் செய்ய அசூசைப்படுவதால், அதற்கும் சில நபர்கள், நூறு ரூபாய் கட்டணத்தில் சுத்தம் செய்து கொடுக்கறாங்க. இப்படி சுலபமாக செய்யக் கூடிய பல தொழில்கள் செய்து சம்பாதிக்கிறாங்க. 'ஒயிட் காலர் ஜாப்' ஆசாமிகள், பந்தாவுக்காக, 'டிப்ஸ்' கொடுப்பதால், நகரத்தில் கவுரவம் பார்க்காமல், கறைகளை கழுவி, தினம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கின்றனர் வேலையில்லா பட்டதாரிகள்...' என்றார். இதைக் கேட்டதும் ஆச்சரியத்தில் வாய் பிளந்தேன்.
கவுரவம் பார்க்கா விட்டால், ஆயிரம் வேலைகள் கொட்டிக் கிடக்கிறது என்ற கூற்று உண்மை தான் என்று புரிந்தது.
— ஏ.எஸ்.யோகானந்தம், கலிங்கியம்.
சமீபத்தில் சென்னை சென்றிருந்த போது, அபார்ட்மென்ட் ஒன்றில், ஒருவர், கார்களை தண்ணீர் ஊற்றி கழுவிக் கொண்டிருந்தார். என் மாமாவிடம், 'இப்படி கார்களை கழுவி இவர் என்னத்த பெருசா சம்பாதிச்சுடப் போறாரு... ஒரு காரைக் கழுவ, 10, 20 ரூபாய் கொடுப்பாங்க; அதை வைத்து எப்படி தான் குடும்பம் நடத்துவாரோ...' என்றேன்.
அதற்கு என் மாமா, 'என்ன அப்படி சொல்லிட்டே... ஒரு கார் கழுவ, ௧௦௦ ரூபாய்; தினமும் பத்து, பதினைந்து கார்கள் கழுவினால், சாதாரணமாக, 1,500 ரூபாய் வருமானம் கிடைக்கும். அதனால், அவர் கஷ்டமில்லாமல் குடும்பம் நடத்த முடியும். இதனால, படித்த இளைஞர்கள் கூட கவுரவம் பார்க்காமல், இத்தொழிலைச் செய்றாங்க. பெரும்பாலான அபார்ட்மென்ட்வாசிகள் சொந்தமாக கார் வச்சிருப்பதால், இவர்களது காட்டில் பணமழை கொட்டுது.
'அதே போல், இப்போ பல வீடுகளில் வண்ண மீன்கள் வளர்ப்பதும் பேஷனாகி விட்டது. அசைவம் சாப்பிடாதவர்கள் கூட, வண்ண மீன்களை வளர்க்கிறாங்க. அவங்க மீன் தொட்டியை சுத்தம் செய்ய அசூசைப்படுவதால், அதற்கும் சில நபர்கள், நூறு ரூபாய் கட்டணத்தில் சுத்தம் செய்து கொடுக்கறாங்க. இப்படி சுலபமாக செய்யக் கூடிய பல தொழில்கள் செய்து சம்பாதிக்கிறாங்க. 'ஒயிட் காலர் ஜாப்' ஆசாமிகள், பந்தாவுக்காக, 'டிப்ஸ்' கொடுப்பதால், நகரத்தில் கவுரவம் பார்க்காமல், கறைகளை கழுவி, தினம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கின்றனர் வேலையில்லா பட்டதாரிகள்...' என்றார். இதைக் கேட்டதும் ஆச்சரியத்தில் வாய் பிளந்தேன்.
கவுரவம் பார்க்கா விட்டால், ஆயிரம் வேலைகள் கொட்டிக் கிடக்கிறது என்ற கூற்று உண்மை தான் என்று புரிந்தது.
— ஏ.எஸ்.யோகானந்தம், கலிங்கியம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
இப்படியும் ஒரு திருமணம்!
நாம் திருமணத்திற்கு சென்றால் என்ன செய்வோம்... மொய் எழுதுவோம், உணவருந்துவோம், தேங்காய் பையைப் பெற்றுக் கொண்டு வந்து விடுவோம். நண்பர் ஒருவரது இல்லத் திருமணத்திற்கு சென்றிருந்தேன். விழாவில், திருக்குறள் புத்தகத்தை பரிசாக தந்தனர்.
பின், 20 நாட்கள் சென்ற பின், திருமணத்திற்கு சென்றிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த கடிதமும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையிலிருந்து, நாங்கள் பணஉதவி செய்ததற்கான கடிதமும் வந்தது. பின்னர்தான் தெரிந்தது, திருமணத்தில் மொய் எழுதிய அத்தனை பேரின் பெயராலும், அப்பணம் புற்று நோய் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று. நண்பரின், செயல், என்னை மெய் சிலிர்க்க வைத்தது. தான் மட்டும் புண்ணியத்தில் பங்கு கொள்ளாமல், எங்களையும் அதில், பங்கு பெறச் செய்த செயலை நினைத்து பெருமைப்பட்டோம். நாமும், இதுபோல் செய்யலாமே!
— கே.சுரேஷ், சென்னை.
நாம் திருமணத்திற்கு சென்றால் என்ன செய்வோம்... மொய் எழுதுவோம், உணவருந்துவோம், தேங்காய் பையைப் பெற்றுக் கொண்டு வந்து விடுவோம். நண்பர் ஒருவரது இல்லத் திருமணத்திற்கு சென்றிருந்தேன். விழாவில், திருக்குறள் புத்தகத்தை பரிசாக தந்தனர்.
பின், 20 நாட்கள் சென்ற பின், திருமணத்திற்கு சென்றிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த கடிதமும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையிலிருந்து, நாங்கள் பணஉதவி செய்ததற்கான கடிதமும் வந்தது. பின்னர்தான் தெரிந்தது, திருமணத்தில் மொய் எழுதிய அத்தனை பேரின் பெயராலும், அப்பணம் புற்று நோய் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று. நண்பரின், செயல், என்னை மெய் சிலிர்க்க வைத்தது. தான் மட்டும் புண்ணியத்தில் பங்கு கொள்ளாமல், எங்களையும் அதில், பங்கு பெறச் செய்த செயலை நினைத்து பெருமைப்பட்டோம். நாமும், இதுபோல் செய்யலாமே!
— கே.சுரேஷ், சென்னை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
பெற்றோருக்கு ஒரு பாடம்!
சமீபத்தில், என் குழந்தைகள் படிக்கும் பள்ளியில், பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடப்பதாகவும், அவசியம் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டிருந்தோம். கூட்டம் துவங்கியதும், வழக்கமான நிகழ்வுகளுக்கு பின், பெற்றோருக்கு ஒரு போட்டி என அறிவிப்பு செய்தனர்.
போட்டி என்னவென்றால், குழந்தைகள் படிக்கும் பாடங்கள் ஒவ்வொன்றிலும் மூன்று தலைப்புகளை கூறுமாறு அறிவித்தனர். இக்கேள்விக்கு பதில் தெரியாமல் பெரும்பாலானோர் விழித்தோம். ஆசிரியர்களோ, 'டிவி சீரியல்களில் காட்டும் ஆர்வத்தை உங்கள் குழந்தைகளின் படிப்பு விஷயத்திலும் கொஞ்சம் காட்டுங்கள்; அப்போது தான் உங்கள் குழந்தைகளின், கல்வி தரத்தை உணர முடியும். என்ன தான் பள்ளியில் நாங்கள் பாடம் நடத்தினாலும், உங்களின் ஒத்துழைப்பும் அவசியம்...' என, அறிவுறுத்தினார்.
இச்சம்பவத்துக்கு பின் நாள்தோறும் குழந்தைகளின் கல்விக்காக, ஒரு மணிநேரம் ஒதுக்கி, பாடம் நடத்துகிறோம்; மேலும், அன்றாட பள்ளி நிகழ்வுகளையும் கேட்டு அறிகிறோம்.
— ஜி.கோகுலகிருஷ்ணன், திருவாரூர்.
சமீபத்தில், என் குழந்தைகள் படிக்கும் பள்ளியில், பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடப்பதாகவும், அவசியம் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டிருந்தோம். கூட்டம் துவங்கியதும், வழக்கமான நிகழ்வுகளுக்கு பின், பெற்றோருக்கு ஒரு போட்டி என அறிவிப்பு செய்தனர்.
போட்டி என்னவென்றால், குழந்தைகள் படிக்கும் பாடங்கள் ஒவ்வொன்றிலும் மூன்று தலைப்புகளை கூறுமாறு அறிவித்தனர். இக்கேள்விக்கு பதில் தெரியாமல் பெரும்பாலானோர் விழித்தோம். ஆசிரியர்களோ, 'டிவி சீரியல்களில் காட்டும் ஆர்வத்தை உங்கள் குழந்தைகளின் படிப்பு விஷயத்திலும் கொஞ்சம் காட்டுங்கள்; அப்போது தான் உங்கள் குழந்தைகளின், கல்வி தரத்தை உணர முடியும். என்ன தான் பள்ளியில் நாங்கள் பாடம் நடத்தினாலும், உங்களின் ஒத்துழைப்பும் அவசியம்...' என, அறிவுறுத்தினார்.
இச்சம்பவத்துக்கு பின் நாள்தோறும் குழந்தைகளின் கல்விக்காக, ஒரு மணிநேரம் ஒதுக்கி, பாடம் நடத்துகிறோம்; மேலும், அன்றாட பள்ளி நிகழ்வுகளையும் கேட்டு அறிகிறோம்.
— ஜி.கோகுலகிருஷ்ணன், திருவாரூர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
கல்யாண புரோக்கர்கள் சிந்திக்கலாமே!
என் நண்பரின் மகளுக்கு மாப்பிள்ளை தேடும் படலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் துவக்கமாக நானும், என் நண்பரும் ஒரு கல்யாண புரோக்கர் அலுவலகத்திற்கு சென்றோம். புரோக்கர் இல்லை. மொபைல் போனில் தொடர்பு கொண்டோம்.
அவசரம் என்றோம். அதற்கு அவர், 'நான் ரத்தப் பரிசோதனை நிலையத்தில் இருக்கிறேன். அங்கு வாருங்கள்...' என்றார். நானும், நண்பரும் அவர் இருக்கும் ரத்தப் பரிசோதனை நிலையத்திற்கு சென்றோம்.
இரண்டு இளைஞர்களுடன், அவர்களின் மருத்துவ பரிசோதனை ரிப்போர்ட் வாங்கியபடி வெளியே வந்தார் புரோக்கர்.
'இங்கு என்ன வேலை?' என்றோம்.
'டாஸ்மாக் பணியாளர், நடத்துனர், டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோருக்கு பெண் கொடுக்க பலரும் தயங்குகின்றனர். காரணம், அவர்களின் உடல்நலன் மீது சந்தேகப்படுகின்றர்...' என்றார்.
மேலும், 'எயிட்ஸ் உள்ளிட்ட பல டெஸ்ட்டுகளுக்கான ரிப்போர்ட்டை நானே நேரில் சென்று வாங்கி, நகல் எடுத்து அவர்களின் ஜாதகத்துடன் இணைத்து, பெண் வீட்டாருக்கு கொடுக்கிறேன்...' என்றார். எங்களுக்கு வியப்பாக இருந்தது.
இதை அனைவருக்கும் கட்டாயமாக்கினால் நன்றாக இருக்குமே என நினைத்தோம். கமிஷனுக்காக புரோக்கர்கள் பொய் சொல்லாமல், மிகையாக சொல்லாமல் உண்மையை சொல்ல வேண்டும் என்பதை அவரின் பேச்சு எங்களுக்கு உணர்த்தியது.
கல்யாண புரோக்கர்களே... இந்த மருத்துவ பரிசோதனை விஷயத்திலும் உங்கள் பார்வை திரும்பினால் வாழ்வு சிறக்குமே வருங்கால புது ஜோடிகளுக்கு!
சோ.ராமு, செம்பட்டி.
என் நண்பரின் மகளுக்கு மாப்பிள்ளை தேடும் படலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் துவக்கமாக நானும், என் நண்பரும் ஒரு கல்யாண புரோக்கர் அலுவலகத்திற்கு சென்றோம். புரோக்கர் இல்லை. மொபைல் போனில் தொடர்பு கொண்டோம்.
அவசரம் என்றோம். அதற்கு அவர், 'நான் ரத்தப் பரிசோதனை நிலையத்தில் இருக்கிறேன். அங்கு வாருங்கள்...' என்றார். நானும், நண்பரும் அவர் இருக்கும் ரத்தப் பரிசோதனை நிலையத்திற்கு சென்றோம்.
இரண்டு இளைஞர்களுடன், அவர்களின் மருத்துவ பரிசோதனை ரிப்போர்ட் வாங்கியபடி வெளியே வந்தார் புரோக்கர்.
'இங்கு என்ன வேலை?' என்றோம்.
'டாஸ்மாக் பணியாளர், நடத்துனர், டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோருக்கு பெண் கொடுக்க பலரும் தயங்குகின்றனர். காரணம், அவர்களின் உடல்நலன் மீது சந்தேகப்படுகின்றர்...' என்றார்.
மேலும், 'எயிட்ஸ் உள்ளிட்ட பல டெஸ்ட்டுகளுக்கான ரிப்போர்ட்டை நானே நேரில் சென்று வாங்கி, நகல் எடுத்து அவர்களின் ஜாதகத்துடன் இணைத்து, பெண் வீட்டாருக்கு கொடுக்கிறேன்...' என்றார். எங்களுக்கு வியப்பாக இருந்தது.
இதை அனைவருக்கும் கட்டாயமாக்கினால் நன்றாக இருக்குமே என நினைத்தோம். கமிஷனுக்காக புரோக்கர்கள் பொய் சொல்லாமல், மிகையாக சொல்லாமல் உண்மையை சொல்ல வேண்டும் என்பதை அவரின் பேச்சு எங்களுக்கு உணர்த்தியது.
கல்யாண புரோக்கர்களே... இந்த மருத்துவ பரிசோதனை விஷயத்திலும் உங்கள் பார்வை திரும்பினால் வாழ்வு சிறக்குமே வருங்கால புது ஜோடிகளுக்கு!
சோ.ராமு, செம்பட்டி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 38 of 100 • 1 ... 20 ... 37, 38, 39 ... 69 ... 100
Similar topics
» படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது ..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது ..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
Page 38 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|