Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
+46
Namasivayam Mu
பழ.முத்துராமலிங்கம்
சசி
M.Jagadeesan
வேல்முருகன்
balakarthik
சரவணன்
Preethika Chandrakumar
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
prabatneb
சிவனாசான்
அகிலன்
idigiti
solomon
உமேரா
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
M.Saranya
jesifer
விமந்தனி
பிஜிராமன்
கோ. செந்தில்குமார்
Dr.S.Soundarapandian
கிருஷ்ணா
பாலாஜி
சிவா
SenthilMookan
T.N.Balasubramanian
உதயசுதா
பார்த்திபன்
ஹர்ஷித்
jenisiva
amirmaran
விஸ்வாஜீ
ayyasamy ram
ஜாஹீதாபானு
அருண்
M.M.SENTHIL
அசுரன்
Muthumohamed
mbalasaravanan
ராஜா
malik
krishnaamma
50 posters
Page 36 of 100
Page 36 of 100 • 1 ... 19 ... 35, 36, 37 ... 68 ... 100
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:38 pm; edited 5 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
அட... இதுவும் கரெக்ட் தான்!
என் தோழி, புது ப்ளாட்டில் குடி புகுந்தாள். புதுமனை புகுவிழாவுக்கு சென்றிருந்தேன். அந்த காம்ப்ளக்சில் நீச்சல் குளம், பார்க் மற்றும் 'ஏசி' ஜிம் என, வசதிகள் ஏராளம். வீடும் செம மாடர்னாக இருந்தது. இத்தாலிய டைல்சில் சமையலறை, டிசைனர் வார்ட்ரோப் என, படு அமர்க்களம். வீட்டை சுற்றி காண்பித்துக் கொண்டே வந்த போது, பாத்ரூம் மட்டும் இண்டியன் ஸ்டைலில் இருந்தது. 'ஏண்டி... வீட்டை இவ்வளவு பிரமாதமா கட்டிட்டு, டாய்லெட்டை மட்டும் ஏன் இண்டியன் ஸ்டைல்ல வச்சுருக்க; வெஸ்டர்ன் மாடலே வச்சிருக்கலாம்ல...' என்றேன்.
'நமக்கு இந்தியன் டாய்லெட்டோட அருமை தெரியல; நம்மை அறியாமலேயே உட்கார்ந்து, எழுந்து உடற்பயிற்சி செய்றோம். நான் கர்ப்பமா இருந்தப்ப டாக்டர் என்னை, கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், இந்தியன் டாய்லெட்டையே, பயன்படுத்தச் சொன்னார். இது ஒரு வகையில, சுக பிரசவத்துக்கு வழி வகுக்குமாம். நம்ம பிள்ளைகளுக்கும், இதை உபயோகப்படுத்தி பழக்கணும்; அதான், உடம்புக்கும் நல்லது...' என்றாள்.
அட, இதுவும் சரி தான்!
ஆர்.அம்பிகா, பழங்காநத்தம்.
என் தோழி, புது ப்ளாட்டில் குடி புகுந்தாள். புதுமனை புகுவிழாவுக்கு சென்றிருந்தேன். அந்த காம்ப்ளக்சில் நீச்சல் குளம், பார்க் மற்றும் 'ஏசி' ஜிம் என, வசதிகள் ஏராளம். வீடும் செம மாடர்னாக இருந்தது. இத்தாலிய டைல்சில் சமையலறை, டிசைனர் வார்ட்ரோப் என, படு அமர்க்களம். வீட்டை சுற்றி காண்பித்துக் கொண்டே வந்த போது, பாத்ரூம் மட்டும் இண்டியன் ஸ்டைலில் இருந்தது. 'ஏண்டி... வீட்டை இவ்வளவு பிரமாதமா கட்டிட்டு, டாய்லெட்டை மட்டும் ஏன் இண்டியன் ஸ்டைல்ல வச்சுருக்க; வெஸ்டர்ன் மாடலே வச்சிருக்கலாம்ல...' என்றேன்.
'நமக்கு இந்தியன் டாய்லெட்டோட அருமை தெரியல; நம்மை அறியாமலேயே உட்கார்ந்து, எழுந்து உடற்பயிற்சி செய்றோம். நான் கர்ப்பமா இருந்தப்ப டாக்டர் என்னை, கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், இந்தியன் டாய்லெட்டையே, பயன்படுத்தச் சொன்னார். இது ஒரு வகையில, சுக பிரசவத்துக்கு வழி வகுக்குமாம். நம்ம பிள்ளைகளுக்கும், இதை உபயோகப்படுத்தி பழக்கணும்; அதான், உடம்புக்கும் நல்லது...' என்றாள்.
அட, இதுவும் சரி தான்!
ஆர்.அம்பிகா, பழங்காநத்தம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1093738krishnaamma wrote:அட... இதுவும் கரெக்ட் தான்!
என் தோழி, புது ப்ளாட்டில் குடி புகுந்தாள். புதுமனை புகுவிழாவுக்கு சென்றிருந்தேன். அந்த காம்ப்ளக்சில் நீச்சல் குளம், பார்க் மற்றும் 'ஏசி' ஜிம் என, வசதிகள் ஏராளம். வீடும் செம மாடர்னாக இருந்தது. இத்தாலிய டைல்சில் சமையலறை, டிசைனர் வார்ட்ரோப் என, படு அமர்க்களம். வீட்டை சுற்றி காண்பித்துக் கொண்டே வந்த போது, பாத்ரூம் மட்டும் இண்டியன் ஸ்டைலில் இருந்தது. 'ஏண்டி... வீட்டை இவ்வளவு பிரமாதமா கட்டிட்டு, டாய்லெட்டை மட்டும் ஏன் இண்டியன் ஸ்டைல்ல வச்சுருக்க; வெஸ்டர்ன் மாடலே வச்சிருக்கலாம்ல...' என்றேன்.
'நமக்கு இந்தியன் டாய்லெட்டோட அருமை தெரியல; நம்மை அறியாமலேயே உட்கார்ந்து, எழுந்து உடற்பயிற்சி செய்றோம். நான் கர்ப்பமா இருந்தப்ப டாக்டர் என்னை, கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், இந்தியன் டாய்லெட்டையே, பயன்படுத்தச் சொன்னார். இது ஒரு வகையில, சுக பிரசவத்துக்கு வழி வகுக்குமாம். நம்ம பிள்ளைகளுக்கும், இதை உபயோகப்படுத்தி பழக்கணும்; அதான், உடம்புக்கும் நல்லது...' என்றாள்.
அட, இதுவும் சரி தான்!
ஆர்.அம்பிகா, பழங்காநத்தம்.
ரொம்ப சரி...............நாம் தான் இதை மாற்றி முட்டி வலியை விலைகொடுத்து வாங்கிட்டோம் ......நம் நாட்டு பொருட்களின் அருமை நமக்கு தெரிவதில்லை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
துணிக்கடையில் பொது அறிவுப்போட்டி!
எங்கள் ஊரிலுள்ள ஒரு பிரபலமான துணிக்கடைக்கு எங்கள் குடும்பம் மற்றும் உறவினர்கள் குடும்பத்துடன் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சென்றிருந்தோம்.
பல்வேறு பிரிவுகளுக்கு சென்று, தேவையானதை தேர்ந்தெடுக்கும் போது, எங்களுடன் வந்திருந்த பள்ளியில் பயிலும் எங்கள் குடும்பத்து பிள்ளைகளை, 'கம்ப்யூட்டர் கேம் விளையாட வருகிறீர்களா...' என, அக்கடையின், ஒரு பகுதியில், கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருந்த இளம் பெண் ஒருவர், அழைத்தார். கூடவே, 'உங்களுக்கு நிறைய பரிசுப் பொருட்களும் கிடைக்கும்...' என்றார். நாங் களும் குஷியுடன், 'எங்கள் குழந்தைகள் கலந்து கொள்வர்...' என தெரிவித்து, கம்ப்யூட்டர் முன் ஒவ்வொருவராக அமர வைத்தோம்.
ஒவ்வொருவருக்கும், ௧௦ பொது அறிவுக் கேள்விகள் கேட்டனர். கேள்வியின் தன்மை வகுப்புக்குத் தக்கபடி மாறும். ஒவ்வொரு கேள்விக்கும், நான்கு பதில் கீழே இருக்கும்; சரியானதை தேர்ந்தெடுக்க வேண்டும். எத்தனை பதில் சரியாக இருக்கிறதோ, அதற்குத் தகுந்தார் போல பரிசு என்ற நிபந்தனையுடன், பொது அறிவு போட்டி துவங்கியது.
வந்திருந்த மூன்று பிள்ளைகளும், ஆளுக்கு ஒரு பரிசைப் பெற்றனர்; இது சந்தோஷமான நிகழ்வாக அமைந்தது.
புத்தக அறிவு மட்டும் போதாது, அதையும் தாண்டி, நுாலகம் செல்ல வேண்டும்; செய்தித்தாள் படிக்க வேண்டும். பொது அறிவு நுால்கள் வாசிக்க வேண்டும் என்று இந்த போட்டி உணர்த்தியது. இந்த வித்தியாசமான பொது அறிவு, கேள்வி - பதில் போட்டியை நடத்தி வரும் கடை நிர்வாகிகளைப் பாராட்டிவிட்டு வந்தோம்.
பிற வர்த்தக நிறுவனங் களும் இது போன்று நடத்த முன் வரலாமே!
எஸ்.ராமு, நிலக்கோட்டை.
எங்கள் ஊரிலுள்ள ஒரு பிரபலமான துணிக்கடைக்கு எங்கள் குடும்பம் மற்றும் உறவினர்கள் குடும்பத்துடன் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சென்றிருந்தோம்.
பல்வேறு பிரிவுகளுக்கு சென்று, தேவையானதை தேர்ந்தெடுக்கும் போது, எங்களுடன் வந்திருந்த பள்ளியில் பயிலும் எங்கள் குடும்பத்து பிள்ளைகளை, 'கம்ப்யூட்டர் கேம் விளையாட வருகிறீர்களா...' என, அக்கடையின், ஒரு பகுதியில், கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருந்த இளம் பெண் ஒருவர், அழைத்தார். கூடவே, 'உங்களுக்கு நிறைய பரிசுப் பொருட்களும் கிடைக்கும்...' என்றார். நாங் களும் குஷியுடன், 'எங்கள் குழந்தைகள் கலந்து கொள்வர்...' என தெரிவித்து, கம்ப்யூட்டர் முன் ஒவ்வொருவராக அமர வைத்தோம்.
ஒவ்வொருவருக்கும், ௧௦ பொது அறிவுக் கேள்விகள் கேட்டனர். கேள்வியின் தன்மை வகுப்புக்குத் தக்கபடி மாறும். ஒவ்வொரு கேள்விக்கும், நான்கு பதில் கீழே இருக்கும்; சரியானதை தேர்ந்தெடுக்க வேண்டும். எத்தனை பதில் சரியாக இருக்கிறதோ, அதற்குத் தகுந்தார் போல பரிசு என்ற நிபந்தனையுடன், பொது அறிவு போட்டி துவங்கியது.
வந்திருந்த மூன்று பிள்ளைகளும், ஆளுக்கு ஒரு பரிசைப் பெற்றனர்; இது சந்தோஷமான நிகழ்வாக அமைந்தது.
புத்தக அறிவு மட்டும் போதாது, அதையும் தாண்டி, நுாலகம் செல்ல வேண்டும்; செய்தித்தாள் படிக்க வேண்டும். பொது அறிவு நுால்கள் வாசிக்க வேண்டும் என்று இந்த போட்டி உணர்த்தியது. இந்த வித்தியாசமான பொது அறிவு, கேள்வி - பதில் போட்டியை நடத்தி வரும் கடை நிர்வாகிகளைப் பாராட்டிவிட்டு வந்தோம்.
பிற வர்த்தக நிறுவனங் களும் இது போன்று நடத்த முன் வரலாமே!
எஸ்.ராமு, நிலக்கோட்டை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1093734krishnaamma wrote:சபாஷ்!
தனியார் நிறுவனத்தில், பணிபுரியும் நண்பனைக் காண, அவனது நிறுவனத்துக்குச் சென்றிருந்தேன். வரவேற்பறையில் காத்திருந்த போது, தற்செயலாக எதிரே இருந்த நோட்டீஸ் போர்டை கவனித்தேன். அதில், 'நம் நிறுவனத்தில் பணிபுரியும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பணியாளர்கள் யாராக இருப்பினும், அவர்களின் ஓட்டுனர் உரிமம், வாகனச்சான்றிதழ், வாகன காப்பீடு போன்றவற்றின் நகல்களை கண்டிப்பாக நிறுவனத்தில் சமர்பிக்க வேண்டும். சமர்பிக்காத பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். டூவீலர் வைத்திருக்கும் பணியாளர்கள், அவசியம் தலைக்கவசம் வைத்திருக்க வேண்டும்...' என, அறிவுறுத்தி எழுதப்பட்டிருந்தது. தினமும் பலர், புதிதாக பணிக்கு வருவதால், இவ்விஷயத்தில் நிர்வாகம், அவர்களது நலன் கருதி கண்டிப்புடன் இருப்பது, நண்பன் மூலம் தெரிந்தது.
ஒரு தனியார் நிறுவனம், தன் பணியாளர்களில் நலனை கருத்தில் கொண்டு, இப்படி ஒரு கட்டாயத்தை கடைப்பிடிக்கும் போது, லட்சக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்ட அரசு, கட்டாயப்படுத்தி ஏன் செயல்படுத்தக்கூடாது? அரசும், பிற தனியார் நிறுவனங்களும், தம் ஊழியர்களின் நலன் கருதி, இதை அமல்படுத்தலாமே!
உ.குணசீலபாண்டியன், ராஜபாளையம்.
திட்டம் நல்லாத் தான் இருக்கு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
செயல் படுத்தணுமே பானு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
வாழ்க்கையை மாற்றிய மருத்துவம்!
ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் நான். பல ஆண்டுகளாக தோள் பட்டை வலியால் அவதிப்பட்ட நான், எவ்வளவோ சிகிச்சை எடுத்துக் கொண்ட போதும், பணச் செலவு தான் மிச்சம்; குணமாகவில்லை.
'ஊசி, மருந்துகளை விட்டு, மாற்று மருத்துவத்திற்கு முயற்சிக்கலாம்...' என நினைத்தேன். அச்சமயத்தில், பக்கத்து வீட்டுக்காரர், ஒரு மருத்துவரை குறிப்பிட்டு, 'அக்கு பிரஷர் மற்றும் பங்சர் பார்க்கிறார்; பீசும் குறைவு...' என்றார். அவர் குறிப்பிட்ட கிளினிக்கிற்கு போனேன்.
அங்கு இருந்த மருத்துவரை பார்த்ததும், ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப் போனேன். காரணம், அந்த டாக்டர், என்னோடு பணிபுரிந்து, எனக்கு முன் ஓய்வு பெற்ற நண்பர். அவரிடம் இது குறித்து கேட்டபோது, 'ரிடையர் ஆனதும் வருமானம் குறைஞ்சு போகுது; ஆனா, செலவுகள் குறையறதுல்ல. அதை ஈடு கட்டவும், ஓய்வு காலத்தை நல்லபடியாக கழிக்கவும் என்ன செய்யலாம்ன்னு யோசிச்சுக்கிட்டிருந்தேன்.
அப்ப எனக்கு இருந்த சில உடல் உபாதைக்கு, ஒரு அக்குபிரஷர் வைத்தியரிடம் சிகிச்சைக்கு போனேன். அந்த வைத்தியத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு, மருத்துவரிடம், 'இதை கற்று தர முடியுமா?' என, கேட்டேன். அதற்கான படிப்பில் சேர்த்துவிட்டதோடு, தன் மருத்துவமனையில் பயிற்சி பெறவும் அனுமதித்தார். தேர்ச்சி பெற்றதும் தனியாக வந்து, கிளினிக் போட்டுட்டேன். ஓரளவு வருமானமும் வர, செய்வதற்கு ஒரு தொழில் இருக்கிற தெம்புடன் மகிழ்ச்சியாக இருக்றேன்...' என்றார்.
இவரைப் போல் முன் யோசனையில்லாமல், மகனின் தயவில் வாழ்ந்து முடங்கிக் கிடக்கிறோமே என்ற ஆதங்கம் ஏற்பட்டது.
ச.பஞ்சாட்சரம், சென்னை.
ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் நான். பல ஆண்டுகளாக தோள் பட்டை வலியால் அவதிப்பட்ட நான், எவ்வளவோ சிகிச்சை எடுத்துக் கொண்ட போதும், பணச் செலவு தான் மிச்சம்; குணமாகவில்லை.
'ஊசி, மருந்துகளை விட்டு, மாற்று மருத்துவத்திற்கு முயற்சிக்கலாம்...' என நினைத்தேன். அச்சமயத்தில், பக்கத்து வீட்டுக்காரர், ஒரு மருத்துவரை குறிப்பிட்டு, 'அக்கு பிரஷர் மற்றும் பங்சர் பார்க்கிறார்; பீசும் குறைவு...' என்றார். அவர் குறிப்பிட்ட கிளினிக்கிற்கு போனேன்.
அங்கு இருந்த மருத்துவரை பார்த்ததும், ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப் போனேன். காரணம், அந்த டாக்டர், என்னோடு பணிபுரிந்து, எனக்கு முன் ஓய்வு பெற்ற நண்பர். அவரிடம் இது குறித்து கேட்டபோது, 'ரிடையர் ஆனதும் வருமானம் குறைஞ்சு போகுது; ஆனா, செலவுகள் குறையறதுல்ல. அதை ஈடு கட்டவும், ஓய்வு காலத்தை நல்லபடியாக கழிக்கவும் என்ன செய்யலாம்ன்னு யோசிச்சுக்கிட்டிருந்தேன்.
அப்ப எனக்கு இருந்த சில உடல் உபாதைக்கு, ஒரு அக்குபிரஷர் வைத்தியரிடம் சிகிச்சைக்கு போனேன். அந்த வைத்தியத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு, மருத்துவரிடம், 'இதை கற்று தர முடியுமா?' என, கேட்டேன். அதற்கான படிப்பில் சேர்த்துவிட்டதோடு, தன் மருத்துவமனையில் பயிற்சி பெறவும் அனுமதித்தார். தேர்ச்சி பெற்றதும் தனியாக வந்து, கிளினிக் போட்டுட்டேன். ஓரளவு வருமானமும் வர, செய்வதற்கு ஒரு தொழில் இருக்கிற தெம்புடன் மகிழ்ச்சியாக இருக்றேன்...' என்றார்.
இவரைப் போல் முன் யோசனையில்லாமல், மகனின் தயவில் வாழ்ந்து முடங்கிக் கிடக்கிறோமே என்ற ஆதங்கம் ஏற்பட்டது.
ச.பஞ்சாட்சரம், சென்னை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
//இவரைப் போல் முன் யோசனையில்லாமல், மகனின் தயவில் வாழ்ந்து முடங்கிக் கிடக்கிறோமே என்ற ஆதங்கம் ஏற்பட்டது.//
அவர் செய்வது ரொம்ப சூப்பர் என்றாலும் இவர் எதற்கு 'மகனின் தயவில் வாழ்கிறோம் ' என்கிற தாழ்வு மனப்பான்மை கொண்டார் என்று எனக்கு தெரியலை, எப்படி ஒரு அப்பாக்கு தன மகன் அல்லது மகளை காப்பாத்தணும் என்று கடமை இருக்கோ...அதே போல வயதான பெற்றோரை அவர்கள் காப்பாத்தணும்...நாம் ஒன்றும் காக்காய் குருவி இல்லையே?................இதை சின்ன வயதிலிருந்து, அவர்களுக்கு சொல்லி சொல்லி பழக்கப்படுத்தணும்................
அவர் செய்வது ரொம்ப சூப்பர் என்றாலும் இவர் எதற்கு 'மகனின் தயவில் வாழ்கிறோம் ' என்கிற தாழ்வு மனப்பான்மை கொண்டார் என்று எனக்கு தெரியலை, எப்படி ஒரு அப்பாக்கு தன மகன் அல்லது மகளை காப்பாத்தணும் என்று கடமை இருக்கோ...அதே போல வயதான பெற்றோரை அவர்கள் காப்பாத்தணும்...நாம் ஒன்றும் காக்காய் குருவி இல்லையே?................இதை சின்ன வயதிலிருந்து, அவர்களுக்கு சொல்லி சொல்லி பழக்கப்படுத்தணும்................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
நவராத்திரி- நான் அறிந்த பாடம்!
நவராத்திரி கொலுவிற்காக, என் தோழியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். கொலு பார்த்து விட்டு வீட்டுக்கு கிளம்பும் போது, ஒரு காகிதப் பையில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பழம் அவற்றுடன், 100 ரூபாய் வைத்து கொடுத்தாள். 'எதற்கு பணம்?' என்று கேட்டேன். அதற்கு அவள், 'நவராத்திரியின் போது வெற்றிலை, பாக்குடன் ஜாக்கெட் பிட் வைத்து கொடுப்பது நம்முடைய சம்பிரதாயம். இப்போது நல்ல பிளவுஸ் துணி வாங்க வேண்டுமானால், குறைந்தது, 100 ரூபாயாவது வேணும். பிளவுஸ் துணி வச்சுக் கொடுக்கலாம்ன்னா, நாம கொடுக்கற கலரு அவங்களுக்கு பிடிக்கணும்.
'சில சமயம் நாம தர்ற துணி அவர்களுக்கு அளவு குறைவாகவோ, பிடிக்காத கலராகவோ இருக்கலாம். அதனால அது, திரும்ப நம்ம கிட்டயே வரும். இது என்னோட அனுபவம். அதனால தான் ஜாக்கெட் துணிக்கு பதிலாக பணமாக கொடுத்து விட்டால், பிடித்த கலரில், பிடித்தளவு துணி வாங்கிக்கலாம். அதே மாதிரி சின்ன பசங்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக பேனா, பென்சிலை வச்சு தர்றேன். பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பை சுற்று சூழலுக்கு எதிரி; அதேபோல் தேங்காயும் உபயோகப்படுத்தறதில்ல...' என்றார்.
அவர் சொன்னது, எனக்கும், 'சரி' எனப் பட்டது. கொலு வைக்கும் வாசகிகளே...இந்த ஆண்டு இல்லாவிட்டாலும், அடுத்த ஆண்டாவது இதை கடைபிடியுங்கள்!
லலிதா பாலசுப்ரமணியம், சென்னை.
நவராத்திரி கொலுவிற்காக, என் தோழியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். கொலு பார்த்து விட்டு வீட்டுக்கு கிளம்பும் போது, ஒரு காகிதப் பையில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பழம் அவற்றுடன், 100 ரூபாய் வைத்து கொடுத்தாள். 'எதற்கு பணம்?' என்று கேட்டேன். அதற்கு அவள், 'நவராத்திரியின் போது வெற்றிலை, பாக்குடன் ஜாக்கெட் பிட் வைத்து கொடுப்பது நம்முடைய சம்பிரதாயம். இப்போது நல்ல பிளவுஸ் துணி வாங்க வேண்டுமானால், குறைந்தது, 100 ரூபாயாவது வேணும். பிளவுஸ் துணி வச்சுக் கொடுக்கலாம்ன்னா, நாம கொடுக்கற கலரு அவங்களுக்கு பிடிக்கணும்.
'சில சமயம் நாம தர்ற துணி அவர்களுக்கு அளவு குறைவாகவோ, பிடிக்காத கலராகவோ இருக்கலாம். அதனால அது, திரும்ப நம்ம கிட்டயே வரும். இது என்னோட அனுபவம். அதனால தான் ஜாக்கெட் துணிக்கு பதிலாக பணமாக கொடுத்து விட்டால், பிடித்த கலரில், பிடித்தளவு துணி வாங்கிக்கலாம். அதே மாதிரி சின்ன பசங்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக பேனா, பென்சிலை வச்சு தர்றேன். பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பை சுற்று சூழலுக்கு எதிரி; அதேபோல் தேங்காயும் உபயோகப்படுத்தறதில்ல...' என்றார்.
அவர் சொன்னது, எனக்கும், 'சரி' எனப் பட்டது. கொலு வைக்கும் வாசகிகளே...இந்த ஆண்டு இல்லாவிட்டாலும், அடுத்த ஆண்டாவது இதை கடைபிடியுங்கள்!
லலிதா பாலசுப்ரமணியம், சென்னை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சண்டைக்கோழி பெற்றோரா நீங்கள்?
சண்டைக்கோழி பெற்றோரா நீங்கள்?
மாலை நேரத்தில், நண்பர்கள் சிலருடன் நடைபயிற்சி சென்றிருந்தேன். நடைபயிற்சிக்கு பின், பள்ளி விளையாட்டு மைதானத்தின் ஓரிடத்தில் அமர்ந்தோம். சற்று தள்ளி, கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், எங்கள் அருகில் வந்து அமர்ந்தனர். அவர்கள் பேசிய பேச்சைக் கேட்டு அதிர்ந்து போனோம்.
ஒருவன், 'வீட்டுக்கு போகவே புடிக்கலடா; எங்கம்மாவும், அப்பாவும் எப்பப் பாரு சண்ட போடுறாங்க. எங்கப்பா ஒரு லூசுப்பயன்னா, எங்கம்மா ஒரு கிறுக்குடா. இவங்க போடுற சண்டையில படிக்கவே முடியல. ஆனா, 'படிடா... படிடா'ங்கறான் அந்த பரதேசி; ஆனா, படிக்க விடறதில்ல. இதுகளையெல்லாம் முதியோர் இல்லத்துல கொண்டு போய் விட்டுடணும்டா...' என்றான்.
அவனைத் தொடர்ந்து மற்றவர்களும், தம் பெற்றோரை சகட்டு மேனிக்கு மண் வாரி தூற்றினர். ஒருவன் கூட தன் பெற்றோரை, மரியாதையாய் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களது பெற்றோர்களின், 'வருங்காலம்' எப்படி இருக்கும் என்பது இப்போதே தெரிந்தது. பெற்றவர்கள் சரி வர நடந்து கொள்ளாததால், பிள்ளைகள் சிறுவயது முதலே, அவர்கள் மீது வெறுப்பை மனதில் பதித்து, பின்னாளில் அது பழிவாங்கும் எண்ணமாக மாறி, முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்படுகின்றனர் என்பதும் புரிந்தது. இதை, சண்டைக்கோழி பெற்றோர்கள் உணர்ந்து திருந்துவரா?
டி.ஆறுமுகம், விஜயமங்கலம்.
மாலை நேரத்தில், நண்பர்கள் சிலருடன் நடைபயிற்சி சென்றிருந்தேன். நடைபயிற்சிக்கு பின், பள்ளி விளையாட்டு மைதானத்தின் ஓரிடத்தில் அமர்ந்தோம். சற்று தள்ளி, கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், எங்கள் அருகில் வந்து அமர்ந்தனர். அவர்கள் பேசிய பேச்சைக் கேட்டு அதிர்ந்து போனோம்.
ஒருவன், 'வீட்டுக்கு போகவே புடிக்கலடா; எங்கம்மாவும், அப்பாவும் எப்பப் பாரு சண்ட போடுறாங்க. எங்கப்பா ஒரு லூசுப்பயன்னா, எங்கம்மா ஒரு கிறுக்குடா. இவங்க போடுற சண்டையில படிக்கவே முடியல. ஆனா, 'படிடா... படிடா'ங்கறான் அந்த பரதேசி; ஆனா, படிக்க விடறதில்ல. இதுகளையெல்லாம் முதியோர் இல்லத்துல கொண்டு போய் விட்டுடணும்டா...' என்றான்.
அவனைத் தொடர்ந்து மற்றவர்களும், தம் பெற்றோரை சகட்டு மேனிக்கு மண் வாரி தூற்றினர். ஒருவன் கூட தன் பெற்றோரை, மரியாதையாய் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களது பெற்றோர்களின், 'வருங்காலம்' எப்படி இருக்கும் என்பது இப்போதே தெரிந்தது. பெற்றவர்கள் சரி வர நடந்து கொள்ளாததால், பிள்ளைகள் சிறுவயது முதலே, அவர்கள் மீது வெறுப்பை மனதில் பதித்து, பின்னாளில் அது பழிவாங்கும் எண்ணமாக மாறி, முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்படுகின்றனர் என்பதும் புரிந்தது. இதை, சண்டைக்கோழி பெற்றோர்கள் உணர்ந்து திருந்துவரா?
டி.ஆறுமுகம், விஜயமங்கலம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சண்டைக்கோழி பெற்றோரா நீங்கள்?
சண்டைக்கோழி பெற்றோரா நீங்கள்?
மாலை நேரத்தில், நண்பர்கள் சிலருடன் நடைபயிற்சி சென்றிருந்தேன். நடைபயிற்சிக்கு பின், பள்ளி விளையாட்டு மைதானத்தின் ஓரிடத்தில் அமர்ந்தோம். சற்று தள்ளி, கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், எங்கள் அருகில் வந்து அமர்ந்தனர். அவர்கள் பேசிய பேச்சைக் கேட்டு அதிர்ந்து போனோம்.
ஒருவன், 'வீட்டுக்கு போகவே புடிக்கலடா; எங்கம்மாவும், அப்பாவும் எப்பப் பாரு சண்ட போடுறாங்க. எங்கப்பா ஒரு லூசுப்பயன்னா, எங்கம்மா ஒரு கிறுக்குடா. இவங்க போடுற சண்டையில படிக்கவே முடியல. ஆனா, 'படிடா... படிடா'ங்கறான் அந்த பரதேசி; ஆனா, படிக்க விடறதில்ல. இதுகளையெல்லாம் முதியோர் இல்லத்துல கொண்டு போய் விட்டுடணும்டா...' என்றான்.
அவனைத் தொடர்ந்து மற்றவர்களும், தம் பெற்றோரை சகட்டு மேனிக்கு மண் வாரி தூற்றினர். ஒருவன் கூட தன் பெற்றோரை, மரியாதையாய் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களது பெற்றோர்களின், 'வருங்காலம்' எப்படி இருக்கும் என்பது இப்போதே தெரிந்தது. பெற்றவர்கள் சரி வர நடந்து கொள்ளாததால், பிள்ளைகள் சிறுவயது முதலே, அவர்கள் மீது வெறுப்பை மனதில் பதித்து, பின்னாளில் அது பழிவாங்கும் எண்ணமாக மாறி, முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்படுகின்றனர் என்பதும் புரிந்தது. இதை, சண்டைக்கோழி பெற்றோர்கள் உணர்ந்து திருந்துவரா?
டி.ஆறுமுகம், விஜயமங்கலம்.
மாலை நேரத்தில், நண்பர்கள் சிலருடன் நடைபயிற்சி சென்றிருந்தேன். நடைபயிற்சிக்கு பின், பள்ளி விளையாட்டு மைதானத்தின் ஓரிடத்தில் அமர்ந்தோம். சற்று தள்ளி, கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், எங்கள் அருகில் வந்து அமர்ந்தனர். அவர்கள் பேசிய பேச்சைக் கேட்டு அதிர்ந்து போனோம்.
ஒருவன், 'வீட்டுக்கு போகவே புடிக்கலடா; எங்கம்மாவும், அப்பாவும் எப்பப் பாரு சண்ட போடுறாங்க. எங்கப்பா ஒரு லூசுப்பயன்னா, எங்கம்மா ஒரு கிறுக்குடா. இவங்க போடுற சண்டையில படிக்கவே முடியல. ஆனா, 'படிடா... படிடா'ங்கறான் அந்த பரதேசி; ஆனா, படிக்க விடறதில்ல. இதுகளையெல்லாம் முதியோர் இல்லத்துல கொண்டு போய் விட்டுடணும்டா...' என்றான்.
அவனைத் தொடர்ந்து மற்றவர்களும், தம் பெற்றோரை சகட்டு மேனிக்கு மண் வாரி தூற்றினர். ஒருவன் கூட தன் பெற்றோரை, மரியாதையாய் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களது பெற்றோர்களின், 'வருங்காலம்' எப்படி இருக்கும் என்பது இப்போதே தெரிந்தது. பெற்றவர்கள் சரி வர நடந்து கொள்ளாததால், பிள்ளைகள் சிறுவயது முதலே, அவர்கள் மீது வெறுப்பை மனதில் பதித்து, பின்னாளில் அது பழிவாங்கும் எண்ணமாக மாறி, முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்படுகின்றனர் என்பதும் புரிந்தது. இதை, சண்டைக்கோழி பெற்றோர்கள் உணர்ந்து திருந்துவரா?
டி.ஆறுமுகம், விஜயமங்கலம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 36 of 100 • 1 ... 19 ... 35, 36, 37 ... 68 ... 100
Similar topics
» படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது ..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது ..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
Page 36 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|