Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
+46
Namasivayam Mu
பழ.முத்துராமலிங்கம்
சசி
M.Jagadeesan
வேல்முருகன்
balakarthik
சரவணன்
Preethika Chandrakumar
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
prabatneb
சிவனாசான்
அகிலன்
idigiti
solomon
உமேரா
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
M.Saranya
jesifer
விமந்தனி
பிஜிராமன்
கோ. செந்தில்குமார்
Dr.S.Soundarapandian
கிருஷ்ணா
பாலாஜி
சிவா
SenthilMookan
T.N.Balasubramanian
உதயசுதா
பார்த்திபன்
ஹர்ஷித்
jenisiva
amirmaran
விஸ்வாஜீ
ayyasamy ram
ஜாஹீதாபானு
அருண்
M.M.SENTHIL
அசுரன்
Muthumohamed
mbalasaravanan
ராஜா
malik
krishnaamma
50 posters
Page 31 of 100
Page 31 of 100 • 1 ... 17 ... 30, 31, 32 ... 65 ... 100
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:38 pm; edited 5 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
'சுகர் ப்ரீ' கொள்ளை!
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள என் அப்பாவைக் காண, பிறந்த வீட்டுக்கு போகும் போதெல்லாம், 'சுகர் ப்ரீ' இனிப்புகளும், காரங்களும் வாங்கி செல்வது வழக்கம். ஒரு முறை, அவ்வாறு நான் வாங்கிச் சென்றவற்றை சாப்பிட்டவருக்கு, 'சுகர்' அதிகமாகி, மாத்திரை சாப்பிட்டதும் தான் குறைந்தது.
இதனால், அடுத்தமுறை நான் செல்வதற்கு ஒரு நாள் முன்னரே, ரத்த பரிசோதனை எடுத்து வைக்க சொன்னேன். நான் வாங்கிட்டு போன, 'சுகர் ப்ரீ' ஸ்வீட்டுகளை அப்பாவுக்கு சாப்பிட கொடுத்த ஒன்றரை மணி நேரத்தில், 'ப்ளட் டெஸ்ட்' எடுக்க சொன்னேன். என்ன ஆச்சர்யம்... ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கட்டுக்கடங்கா வகையில் உயர்ந்திருந்தது. அப்புறம் எதுக்கு ஸ்வீட் ஸ்டால்களில் தனியாக, 'சுகர் ப்ரீ' இனிப்புகள்! விலையும் இரண்டு, மூன்று பங்கு அதிகம். சாதாரண இனிப்பு வகைகளை பல மடங்கு விலை உயர்த்தி விற்க, 'சுகர் ப்ரீ' லேபிள் தேவை தானா?
கிருத்திகா, பூனாம்பாளையம்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள என் அப்பாவைக் காண, பிறந்த வீட்டுக்கு போகும் போதெல்லாம், 'சுகர் ப்ரீ' இனிப்புகளும், காரங்களும் வாங்கி செல்வது வழக்கம். ஒரு முறை, அவ்வாறு நான் வாங்கிச் சென்றவற்றை சாப்பிட்டவருக்கு, 'சுகர்' அதிகமாகி, மாத்திரை சாப்பிட்டதும் தான் குறைந்தது.
இதனால், அடுத்தமுறை நான் செல்வதற்கு ஒரு நாள் முன்னரே, ரத்த பரிசோதனை எடுத்து வைக்க சொன்னேன். நான் வாங்கிட்டு போன, 'சுகர் ப்ரீ' ஸ்வீட்டுகளை அப்பாவுக்கு சாப்பிட கொடுத்த ஒன்றரை மணி நேரத்தில், 'ப்ளட் டெஸ்ட்' எடுக்க சொன்னேன். என்ன ஆச்சர்யம்... ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கட்டுக்கடங்கா வகையில் உயர்ந்திருந்தது. அப்புறம் எதுக்கு ஸ்வீட் ஸ்டால்களில் தனியாக, 'சுகர் ப்ரீ' இனிப்புகள்! விலையும் இரண்டு, மூன்று பங்கு அதிகம். சாதாரண இனிப்பு வகைகளை பல மடங்கு விலை உயர்த்தி விற்க, 'சுகர் ப்ரீ' லேபிள் தேவை தானா?
கிருத்திகா, பூனாம்பாளையம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
அட... நாங்களும் ராசியானவங்கதாம்மா!
தனியார் நிறுவனத்தில் பணி புரியும், விவாகரத்தான பெண் நான்; என்னுடன் பணிபுரியும் பெண்களில் சிலர், பல நேரங்களில் சகஜமாக பழகினாலும், முக்கிய நிகழ்வுகளில் என்னை தவிர்க்க நினைக்கின்றனர். குறிப்பாக திருமணம், வீடு பால் காய்ச்சுதல் போன்ற சுப நிகழ்ச்சிகளை என்னிடம் சொல்லவே தயங்குகின்றனர்.
என் நேரடி உயர் அதிகாரியின் வீட்டில் நடந்த விசேஷம் கூட, என் கீழ் பணிபுரியும் நபர் சொல்லித்தான் தெரிய வந்தது; பரிசுப் பொருட்கள் வாங்க செல்லும் போது கூட, என்னை ஒரு தடையாகத் தான் பார்க்கின்றனர். இவர்கள் சகுனம் பார்க்கின்றனரா அல்லது இதற்கெல்லாம் என்னை போன்றவர் ஏங்குவர் என்று நினைக்கின்றனரா... புரியவில்லை.
வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து, முன்னேற துடிக்கும் என்னை போன்றோருக்கு, உங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகள் சஞ்சலப்படுத்தப் போவதில்லை. மேலும், கணவனுடன் வாழ்ந்தால் மட்டுமே ஒருவரின் வாழ்த்து பலிக்கும் என்றில்லை; நல்ல மனதோடு யார் வாழ்த்தினாலும், அது சிறந்த ஆசிர்வாதமே என்பதை இனிமேலாவது புரிந்து கொள்ளுங்கள் தோழிகளே!
பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.
தனியார் நிறுவனத்தில் பணி புரியும், விவாகரத்தான பெண் நான்; என்னுடன் பணிபுரியும் பெண்களில் சிலர், பல நேரங்களில் சகஜமாக பழகினாலும், முக்கிய நிகழ்வுகளில் என்னை தவிர்க்க நினைக்கின்றனர். குறிப்பாக திருமணம், வீடு பால் காய்ச்சுதல் போன்ற சுப நிகழ்ச்சிகளை என்னிடம் சொல்லவே தயங்குகின்றனர்.
என் நேரடி உயர் அதிகாரியின் வீட்டில் நடந்த விசேஷம் கூட, என் கீழ் பணிபுரியும் நபர் சொல்லித்தான் தெரிய வந்தது; பரிசுப் பொருட்கள் வாங்க செல்லும் போது கூட, என்னை ஒரு தடையாகத் தான் பார்க்கின்றனர். இவர்கள் சகுனம் பார்க்கின்றனரா அல்லது இதற்கெல்லாம் என்னை போன்றவர் ஏங்குவர் என்று நினைக்கின்றனரா... புரியவில்லை.
வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து, முன்னேற துடிக்கும் என்னை போன்றோருக்கு, உங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகள் சஞ்சலப்படுத்தப் போவதில்லை. மேலும், கணவனுடன் வாழ்ந்தால் மட்டுமே ஒருவரின் வாழ்த்து பலிக்கும் என்றில்லை; நல்ல மனதோடு யார் வாழ்த்தினாலும், அது சிறந்த ஆசிர்வாதமே என்பதை இனிமேலாவது புரிந்து கொள்ளுங்கள் தோழிகளே!
பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
பயணிகள் ஆட்டு மந்தைகளா!
அண்மையில், மாநகர பஸ்சில் பயணித்த போது, ஒரு மூதாட்டி, மூன்று ரூபாய் டிக்கெட்டுக்கு, ௫௦ காசு நாணயங்களை நடத்துனரிடம் கொடுத்த போது, 'என்னம்மா... பிச்சை எடுத்த காசையெல்லாம் கொண்டு வந்து தர்ற... ௫௦ காசெல்லாம் செல்லாது; வேறு ரூபா கொடு...' என்று கேட்டு, அவரை அவமதித்ததைக் கண்டு திடுக்கிட்டேன். அந்த மூதாட்டியோ, 'வேறு சில்லரை இல்லை...' என்று கூறி, நூறு ரூபாய் நோட்டை நீட்டினார். ௧௦ ரூபாய், ௧௫ ரூபாய் டிக்கெட்டுக்கு, நூறு ரூபாய் நோட்டை கொடுத்தாலே எறிந்து விழும் நடத்துனர், மூன்று ரூபாய் டிக்கெட்டுக்கு, நூறு ரூபாய் நோட்டை வாங்கி, மீதி சில்லரையை கொடுத்த அதிசயமும் நடந்தது.
மத்திய அரசு பெட்ரோல் விலையை, லிட்டருக்கு மூன்று ரூபாய், ௫௦ காசு என்றும், டீசல் விலையை ஒரு ரூபாய், ௫௦ காசு என்றும், சமையல் சிலிண்டர் விலையை, ௪௫ ரூபாய், ௫௦ காசு என்றும், ௫௦ காசுக்கு முக்கியத்துவம் கொடுத்து விலையை உயர்த்தும் போது, பஸ் நடத்துனர்களுக்கு மட்டும், ௫௦ காசு செல்லாதாம். 'நாணயங்கள் செல்லாது...' என்று அறிவிக்கும் ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை, நடத்துனர்களுக்கு யார் கொடுத்தது? பயணிகளை அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்துவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது?
பஸ் நடத்துனர்கள் எல்லாம் வானத்தில் இருந்து குதித்து வந்த தேவர்களும் அல்ல; பயணிகள் எல்லாம் ஆட்டு மந்தைகளும் அல்ல என்பதை, நடத்துனர்கள் இனிமேலாவது உணர்ந்து திருந்துவரா!
ஜி.கலைவாணி, பனங்கோட்டூர்.
அண்மையில், மாநகர பஸ்சில் பயணித்த போது, ஒரு மூதாட்டி, மூன்று ரூபாய் டிக்கெட்டுக்கு, ௫௦ காசு நாணயங்களை நடத்துனரிடம் கொடுத்த போது, 'என்னம்மா... பிச்சை எடுத்த காசையெல்லாம் கொண்டு வந்து தர்ற... ௫௦ காசெல்லாம் செல்லாது; வேறு ரூபா கொடு...' என்று கேட்டு, அவரை அவமதித்ததைக் கண்டு திடுக்கிட்டேன். அந்த மூதாட்டியோ, 'வேறு சில்லரை இல்லை...' என்று கூறி, நூறு ரூபாய் நோட்டை நீட்டினார். ௧௦ ரூபாய், ௧௫ ரூபாய் டிக்கெட்டுக்கு, நூறு ரூபாய் நோட்டை கொடுத்தாலே எறிந்து விழும் நடத்துனர், மூன்று ரூபாய் டிக்கெட்டுக்கு, நூறு ரூபாய் நோட்டை வாங்கி, மீதி சில்லரையை கொடுத்த அதிசயமும் நடந்தது.
மத்திய அரசு பெட்ரோல் விலையை, லிட்டருக்கு மூன்று ரூபாய், ௫௦ காசு என்றும், டீசல் விலையை ஒரு ரூபாய், ௫௦ காசு என்றும், சமையல் சிலிண்டர் விலையை, ௪௫ ரூபாய், ௫௦ காசு என்றும், ௫௦ காசுக்கு முக்கியத்துவம் கொடுத்து விலையை உயர்த்தும் போது, பஸ் நடத்துனர்களுக்கு மட்டும், ௫௦ காசு செல்லாதாம். 'நாணயங்கள் செல்லாது...' என்று அறிவிக்கும் ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை, நடத்துனர்களுக்கு யார் கொடுத்தது? பயணிகளை அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்துவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது?
பஸ் நடத்துனர்கள் எல்லாம் வானத்தில் இருந்து குதித்து வந்த தேவர்களும் அல்ல; பயணிகள் எல்லாம் ஆட்டு மந்தைகளும் அல்ல என்பதை, நடத்துனர்கள் இனிமேலாவது உணர்ந்து திருந்துவரா!
ஜி.கலைவாணி, பனங்கோட்டூர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
பிள்ளையார் படும்பாடு!
விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு பின், பிள்ளையாரை நீர் நிலைகளில் கரைத்து வருகிறோம்; ஏன் இவ்வாறு செய்கிறோம் என்பதன் உண்மைக் காரணம் தெரியுமா?
மழைக்காலத்தில் விநாயக சதுர்த்தி பூஜை வருவதால், நம் முன்னோர்கள், மழை நீரை குளத்தில் சேமிக்க, களிமண்ணால் செய்த பிள்ளையாரின் தொப்புளில் ஒரு ரூபாய் காசு வைத்து குளத்தில் விடுவர். மக்கள் அக்காசை எடுக்க குளத்தில் இறங்குவர். அப்போது, களிமண்ணால் செய்த பிள்ளையார் அமுக்கப்பட்டு, களிமண் குளத்திலுள்ள மணல் பரப்பை மூடி, குளத்து நீரை வற்ற விடாமல் செய்வதால், தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கு பயனளித்தது.
மழைநீர் சேமிப்பின் அவசியம் உணர்ந்த நம் முன்னோர், அதை செயல்படுத்த ஆன்மிகத்தை பயன்படுத்தினர். இதனால், எவ்வித பணவிரயமும் அரசுக்கு ஏற்படவில்லை. ஆனால், தற்போது பிள்ளையார் உருவத்தை பலவிதமான பொருட்களால் செய்து, நீர்நிலைகளில் விட்டு தண்ணீரை மாசுபடுத்துகின்றனர். அத்துடன், குளம், ஏரி போன்ற நீர் நிலைகளில் வீடுகளை கட்டி, மழை நீரை சாலைகளில் விடுகிறோம். அது கழிவுநீராகி, கடலில் கலக்கிறது. இப்படி எல்லா வகைகளிலும் நீர் நிலைகளை மாசுபடுத்தி, தண்ணீர் இல்லை என, குடங்களை தூக்கி கொண்டு, தெருவில் போராடி வருகிறோம்.
ஒவ்வொருவரும் தங்கள் ஊரில் உள்ள குளம் மற்றும் ஏரிகளை பாதுகாக்க அக்கறை எடுத்துக் கொள்வதன் மூலமும், அரசு, நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்துவதன் மூலமாகவும் தான் தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.
ஏ.வி.வீரா,புதுச்சேரி.
விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு பின், பிள்ளையாரை நீர் நிலைகளில் கரைத்து வருகிறோம்; ஏன் இவ்வாறு செய்கிறோம் என்பதன் உண்மைக் காரணம் தெரியுமா?
மழைக்காலத்தில் விநாயக சதுர்த்தி பூஜை வருவதால், நம் முன்னோர்கள், மழை நீரை குளத்தில் சேமிக்க, களிமண்ணால் செய்த பிள்ளையாரின் தொப்புளில் ஒரு ரூபாய் காசு வைத்து குளத்தில் விடுவர். மக்கள் அக்காசை எடுக்க குளத்தில் இறங்குவர். அப்போது, களிமண்ணால் செய்த பிள்ளையார் அமுக்கப்பட்டு, களிமண் குளத்திலுள்ள மணல் பரப்பை மூடி, குளத்து நீரை வற்ற விடாமல் செய்வதால், தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கு பயனளித்தது.
மழைநீர் சேமிப்பின் அவசியம் உணர்ந்த நம் முன்னோர், அதை செயல்படுத்த ஆன்மிகத்தை பயன்படுத்தினர். இதனால், எவ்வித பணவிரயமும் அரசுக்கு ஏற்படவில்லை. ஆனால், தற்போது பிள்ளையார் உருவத்தை பலவிதமான பொருட்களால் செய்து, நீர்நிலைகளில் விட்டு தண்ணீரை மாசுபடுத்துகின்றனர். அத்துடன், குளம், ஏரி போன்ற நீர் நிலைகளில் வீடுகளை கட்டி, மழை நீரை சாலைகளில் விடுகிறோம். அது கழிவுநீராகி, கடலில் கலக்கிறது. இப்படி எல்லா வகைகளிலும் நீர் நிலைகளை மாசுபடுத்தி, தண்ணீர் இல்லை என, குடங்களை தூக்கி கொண்டு, தெருவில் போராடி வருகிறோம்.
ஒவ்வொருவரும் தங்கள் ஊரில் உள்ள குளம் மற்றும் ஏரிகளை பாதுகாக்க அக்கறை எடுத்துக் கொள்வதன் மூலமும், அரசு, நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்துவதன் மூலமாகவும் தான் தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.
ஏ.வி.வீரா,புதுச்சேரி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா... வா... வா!
எங்கள் தெருவில், தினமும் இரவு, 7:00 மணிக்கு, பதினாறு வயது சிறுவன் ஒருவன், வேர்க்கடலை விற்றுக் கொண்டு வருவான். 'பள்ளிக்கு செல்ல வேண்டிய வயதில், இந்த சிறுவன் இப்படி கஷ்டப்படுகிறானே... இவனை நாம் படிக்க வைச்சா என்ன...' என்று நினைத்து, ஒருநாள் அவனிடம் என் எண்ணத்தை சொன்னேன்.
'உங்க அன்புக்கு ரொம்ப நன்றிங்க. நான் படிக்கலன்னு நீங்க நினைக்க வேணாம்; நான் இப்போ, 'ப்ளஸ் ௧' படிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். எங்க அம்மா, அப்பா கூலி வேலை செய்றதுனால, அவங்க வருமானம் குடும்ப செலவுகளுக்கு பத்தல. அதனால் தான், நான் இரவு நேரத்தில கடல விக்றேன். உண்மையாகவே எனக்கு உதவி செய்ய விரும்பினா தினமும் ஒரு சிறு தொகைக்கு, கடலை வாங்குங்க; அது போதும்...' என்றான்.
பிரமித்து போனேன்; தன்னம்பிக்கையுடன், நெஞ்சுறுதியோடு செயல்படும் அச்சிறுவனுக்கு அன்று முதல் வாடிக்கையாளரானேன்.
சி.ரங்கராஜன், மேட்டுப்பாளையம்.
எங்கள் தெருவில், தினமும் இரவு, 7:00 மணிக்கு, பதினாறு வயது சிறுவன் ஒருவன், வேர்க்கடலை விற்றுக் கொண்டு வருவான். 'பள்ளிக்கு செல்ல வேண்டிய வயதில், இந்த சிறுவன் இப்படி கஷ்டப்படுகிறானே... இவனை நாம் படிக்க வைச்சா என்ன...' என்று நினைத்து, ஒருநாள் அவனிடம் என் எண்ணத்தை சொன்னேன்.
'உங்க அன்புக்கு ரொம்ப நன்றிங்க. நான் படிக்கலன்னு நீங்க நினைக்க வேணாம்; நான் இப்போ, 'ப்ளஸ் ௧' படிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். எங்க அம்மா, அப்பா கூலி வேலை செய்றதுனால, அவங்க வருமானம் குடும்ப செலவுகளுக்கு பத்தல. அதனால் தான், நான் இரவு நேரத்தில கடல விக்றேன். உண்மையாகவே எனக்கு உதவி செய்ய விரும்பினா தினமும் ஒரு சிறு தொகைக்கு, கடலை வாங்குங்க; அது போதும்...' என்றான்.
பிரமித்து போனேன்; தன்னம்பிக்கையுடன், நெஞ்சுறுதியோடு செயல்படும் அச்சிறுவனுக்கு அன்று முதல் வாடிக்கையாளரானேன்.
சி.ரங்கராஜன், மேட்டுப்பாளையம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
தன்னம்பிக்கையுடன், நெஞ்சுறுதியோடு செயல்படும் அச்சிறுவனுக்கு என்னுடைய
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1082300விமந்தனி wrote:தன்னம்பிக்கையுடன், நெஞ்சுறுதியோடு செயல்படும் அச்சிறுவனுக்கு என்னுடைய
நன்றி விமந்தினி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
ஜாதக பயம்!
எனது நண்பரின் மகள், சமீபத்தில், தன் கூட படிக்கும் மாணவனோடு வீட்டை விட்டு சென்று விட்டாள். நல்லவேளையாக, உடனே புகார் கொடுத்து அன்றே கண்டுபிடித்து, வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். நண்பரின் மகளிடம், 'ஏன் இப்படி நடந்து கொண்டாய்?' எனக் கேட்டேன்; அதற்கு அவள் சொன்ன பதில் வருத்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
'பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் நிலைக்காது...' என்று ஜாதகத்தில் இருப்பதாக கூறி நண்பரும், அவர் மனைவியும் மகள் முன்னிலையிலேயே அடிக்கடி புலம்புவார்களாம். அதுதான், 'நாமளே ஒருத்தன கணவனா தேர்ந்தெடுத்தா பிரச்னை இல்லையே'ன்னு நண்பரின் மகள் இந்த முடிவை எடுத்திருக்கிறாள்.
நண்பரிடம் இதுபற்றி கேட்டதற்கு, 'ஆமாம்; அவ ஜாதகத்துல இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா சொன்னாங்க; அத அவ இருக்கிறப்போ பேசி இருக்கிறோம்; ஆனா, அந்த பேச்சு இப்படி ஒரு விளைவை ஏற்படுத்தும்ன்னு நினைக்கல...' என்றார்.
ஜாதகம் பார்த்து அதில் உள்ள நன்மை, தீமைகளை பிள்ளைகள் முன் பெற்றோர் விவாதிப்பது தேவையற்றது; இம்மாதிரி தவறான முடிவை பிள்ளைகள் எடுக்க, பெற்றோரே உதாரணமாகி விடக் கூடாது.
எஸ்.சுந்தரமூர்த்தி, பொன்னேரி.
எனது நண்பரின் மகள், சமீபத்தில், தன் கூட படிக்கும் மாணவனோடு வீட்டை விட்டு சென்று விட்டாள். நல்லவேளையாக, உடனே புகார் கொடுத்து அன்றே கண்டுபிடித்து, வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். நண்பரின் மகளிடம், 'ஏன் இப்படி நடந்து கொண்டாய்?' எனக் கேட்டேன்; அதற்கு அவள் சொன்ன பதில் வருத்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
'பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் நிலைக்காது...' என்று ஜாதகத்தில் இருப்பதாக கூறி நண்பரும், அவர் மனைவியும் மகள் முன்னிலையிலேயே அடிக்கடி புலம்புவார்களாம். அதுதான், 'நாமளே ஒருத்தன கணவனா தேர்ந்தெடுத்தா பிரச்னை இல்லையே'ன்னு நண்பரின் மகள் இந்த முடிவை எடுத்திருக்கிறாள்.
நண்பரிடம் இதுபற்றி கேட்டதற்கு, 'ஆமாம்; அவ ஜாதகத்துல இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா சொன்னாங்க; அத அவ இருக்கிறப்போ பேசி இருக்கிறோம்; ஆனா, அந்த பேச்சு இப்படி ஒரு விளைவை ஏற்படுத்தும்ன்னு நினைக்கல...' என்றார்.
ஜாதகம் பார்த்து அதில் உள்ள நன்மை, தீமைகளை பிள்ளைகள் முன் பெற்றோர் விவாதிப்பது தேவையற்றது; இம்மாதிரி தவறான முடிவை பிள்ளைகள் எடுக்க, பெற்றோரே உதாரணமாகி விடக் கூடாது.
எஸ்.சுந்தரமூர்த்தி, பொன்னேரி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
திருந்துவரா!
அண்மையில், என் உறவினர் ஒருவரின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை சென்றிருந்தேன். விழா முடிந்த மறுநாள் காலை, தேநீர் அருந்துவதற்காக அருகிலுள்ள டீக்கடைக்கு சென்றிருந்தேன்.
அப்போது, தள்ளுவண்டி ஒன்றில், நடக்க இயலாத வெண்படை நோயாளி ஒருவர் அமர்ந்திருக்க, அந்த வண்டியை நடுத்தர வயது பெண்மணி தள்ளிக் கொண்டு வந்து கடைக்கு அருகில் நிறுத்தி, ஒரு அலுமினிய குவளையை நீட்டி, 'ஒரு கப் டீ வேணும்...' என்று கையில் சில்லரையை வைத்துக் கொண்டு கேட்டார். கடைக்காரர் டீ கொடுக்க மறுத்து விட்டார். அங்கு நின்று கொண்டிருந்தவர்களில் சிலர், 'காசு வாங்கிட்டு டீ போட்டுக் கொடுக்க வேண்டியது தானே...' என்றனர்.
அதற்கு அந்தக் கடைக்காரர், 'இம்மாதிரி ஆளுங்களுக்கு டீ கொடுத்தா வாடிக்கையாளர்ங்க இங்கு வர மாட்டாங்க...' என்றார்.
எவ்வளவு தான் சமுதாயம் முன்னேறி இருந்தாலும், இப்படியும் மனிதநேயமே இல்லாத மனிதர்கள் இருக்கத் தான் செய்கின்றனர்.
இவரைப் போன்றோர் இனியாவது திருந்துவரா!
போஸ்குமார், சென்னை.
அண்மையில், என் உறவினர் ஒருவரின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை சென்றிருந்தேன். விழா முடிந்த மறுநாள் காலை, தேநீர் அருந்துவதற்காக அருகிலுள்ள டீக்கடைக்கு சென்றிருந்தேன்.
அப்போது, தள்ளுவண்டி ஒன்றில், நடக்க இயலாத வெண்படை நோயாளி ஒருவர் அமர்ந்திருக்க, அந்த வண்டியை நடுத்தர வயது பெண்மணி தள்ளிக் கொண்டு வந்து கடைக்கு அருகில் நிறுத்தி, ஒரு அலுமினிய குவளையை நீட்டி, 'ஒரு கப் டீ வேணும்...' என்று கையில் சில்லரையை வைத்துக் கொண்டு கேட்டார். கடைக்காரர் டீ கொடுக்க மறுத்து விட்டார். அங்கு நின்று கொண்டிருந்தவர்களில் சிலர், 'காசு வாங்கிட்டு டீ போட்டுக் கொடுக்க வேண்டியது தானே...' என்றனர்.
அதற்கு அந்தக் கடைக்காரர், 'இம்மாதிரி ஆளுங்களுக்கு டீ கொடுத்தா வாடிக்கையாளர்ங்க இங்கு வர மாட்டாங்க...' என்றார்.
எவ்வளவு தான் சமுதாயம் முன்னேறி இருந்தாலும், இப்படியும் மனிதநேயமே இல்லாத மனிதர்கள் இருக்கத் தான் செய்கின்றனர்.
இவரைப் போன்றோர் இனியாவது திருந்துவரா!
போஸ்குமார், சென்னை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 31 of 100 • 1 ... 17 ... 30, 31, 32 ... 65 ... 100
Similar topics
» படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது ..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது ..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
Page 31 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|