ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 10:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 9:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 9:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 9:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 9:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 9:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 22:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 19:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 17:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 0:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 15:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:53

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 17:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 16:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 14:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 2:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 0:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 18:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 18:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 15:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 14:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

+46
Namasivayam Mu
பழ.முத்துராமலிங்கம்
சசி
M.Jagadeesan
வேல்முருகன்
balakarthik
சரவணன்
Preethika Chandrakumar
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
prabatneb
சிவனாசான்
அகிலன்
idigiti
solomon
உமேரா
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
M.Saranya
jesifer
விமந்தனி
பிஜிராமன்
கோ. செந்தில்குமார்
Dr.S.Soundarapandian
கிருஷ்ணா
பாலாஜி
சிவா
SenthilMookan
T.N.Balasubramanian
உதயசுதா
பார்த்திபன்
ஹர்ஷித்
jenisiva
amirmaran
விஸ்வாஜீ
ayyasamy ram
ஜாஹீதாபானு
அருண்
M.M.SENTHIL
அசுரன்
Muthumohamed
mbalasaravanan
ராஜா
malik
krishnaamma
50 posters

Page 26 of 100 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 63 ... 100  Next

Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 26 Empty படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma Wed 31 Jul 2013 - 0:00

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.


Last edited by krishnaamma on Fri 24 Feb 2017 - 1:08; edited 5 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 26 Empty Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma Tue 27 May 2014 - 12:55

வேட்டி கட்டும் வேந்தர்களே!

கல்லூரி படிப்பை முடித்து, தற்காலிகமாக, எங்கள் பகுதியில் உள்ள, ஒரு மொபைல் ரீசார்ஜ் செய்யும் கடையில், வேலை செய்யும் இளம்பெண் நான்.பல வகையான, கஸ்டமர்கள், 'ரீசார்ஜ்' செய்ய வருகின்றனர். இதில், வேட்டி கட்டி வரும் சில ஆண்கள் செய்யும் செயல், அருவருப்பாக இருக்கிறது.

இவர்கள், 'ரீசார்ஜ்' முடிந்ததும், அதற்கான பணத்தை கொடுக்க, எதிரில் ஒரு பெண் இருக்கிறாள் என்ற, இங்கிதம் இல்லாமல், திடீரென்று வேட்டியை, ஒரு பக்கமாக ஒதுக்கி, உள்ளாடையில் உள்ள பாக்கெட்டிலிருந்து, பணத்தை எடுத்து தருகின்றனர்.

'ரீ சார்ஜ்' செய்யப் போகிறோம் என்று முடிவு செய்து விட்டால், பணத்தை முன்பே எடுத்து சட்டைப் பையிலோ, கையிலோ எடுத்துக் கொண்டு வரலாமே... அதை விட்டுவிட்டு, பணம் கொடுக்கும் போது, அவர்கள் நடந்து கொள்ளும் விதம், அருவருப்பாக இருக்கிறது. இதை, இவர்கள் தெரிந்து செய்கின்றனரா அல்லது தெரியாமல் செய்கின்றனரா எனத் தெரியவில்லை.

இது, ஆண்களுக்கு சாதாரணமாக இருக்கலாம்; பெண்களாகிய எங்களுக்கு அவர்களின் இத்தகைய செயல் எத்தனை சங்கடத்தை தரும் என்பதை, வேட்டி கட்டும் ஆண்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
வேட்டிக்கென்று ஒரு மரியாதையும், கம்பீரமும் இருக்கிறது. அதை, இம்மாதிரி செயல்களால், சீர் குலைக்காதீர்கள்.

— வீ.சுசீலா, வெட்டுவான்கேணி.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 26 Empty Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma Tue 27 May 2014 - 12:55

அழைப்பிதழ் கொடுத்தவருக்கும்...

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர், தன் வீட்டிற்கு யார் திருமண அழைப்பிதழ் கொண்டு வந்தாலும், அவர்களை இன்முகத்துடன் வரவேற்று, உணவு தந்து உபசரிப்பார். பின், அவர்கள் புறப்படும் போது ஒரு கவரில், போக்குவரத்து செலவுக்குரிய பணத்தை வைத்து கொடுப்பார்.

இதையறிந்த நான், 'எதற்காக இப்படி பணம் தருகிறீர்கள்?' என்று கேட்டேன். அவர் சொன்ன பதில், என்னை அசர வைத்து விட்டது. 'எவ்வளவோ செலவுகள், சிரமங்களுக்கிடையில், என் மீது உள்ள அன்பினால், என்னை நேரில் பார்த்து அழைக்க வருகின்றனர். அப்படி வருபவரை, வெறுங்கையுடன் அனுப்புவது முறையல்ல; அதனால் தான், அழைப்பிதழை கொண்டு வருபவர்களுக்கு, போக்குவரத்து செலவுக்குரிய பணத்தை, என் அன்பின் காணிக்கையாகத் தருகிறேன். மேலும், திருமணத்தன்று மணமக்களுக்கு உபயோகப்படும் பொருளையும், வாங்கித் தந்திடுவேன். இதனால், நட்பும், உறவும் பலப்படும். அவர்கள் மனதில், நம்மைப் பற்றி ஒரு மரியாதையும் இருக்கும்...' என்றார்.
அவர் சொன்னதில், எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை, நானும், அவரும் கலந்து கொண்ட, ஒரு திருமண நிகழ்ச்சியில், நேரிடையாக பார்த்து வியந்தேன்.

- ராம.முத்துக்குமரன், கடலூர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 26 Empty மாணவர்களின் சத்தியம்!

Post by krishnaamma Tue 27 May 2014 - 12:58

மாணவர்களின் சத்தியம்!

'பிளஸ் 2' தேர்வு முடிந்ததும், ஒவ்வொரு பள்ளியிலும் மதிப்பெண் பட்டியலும், மாற்றுச் சான்றிதழும் (டி.சி.,) தருவர். மாணவர்கள் அவற்றைப் பெற்று, கல்லூரியில் சேர முயற்சி செய்வர். இதுதான், பல பள்ளிகளின், நடைமுறை.

ஆனால், சென்னை திருவான்மியூரில், ஒரு தனியார் பள்ளியில், வித்தியாசமான ஒரு அணுகுமுறையைக் கையாளுகின்றனர்.'பிளஸ் 2' முடித்த மாணவர்கள், தலைமை ஆசிரியரைச் சந்தித்து சான்றிதழ்களைப் பெறச் செல்லும்போது, அவர்கள் இரண்டு சத்தியங்களைச் செய்ய வேண்டும்.

அது, 'எக்காரணத்தைக் கொண்டும், பெற்றோரை விட்டு, பிரிந்து வாழ மாட்டேன்; அரசுப் பணியில் அமர்ந்தால், எவரிடமும் லஞ்சம் வாங்க மாட்டேன்...' என்று, வாக்குறுதிகளைக் கொடுத்து விட்டுத்தான், மாணவர்கள் அங்கிருந்து வெளியேறுகின்றனர்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும், மாணவப்பருவம் மிக மிக முக்கியமானது. அந்தப் பருவத்தில், அவர்கள் சில உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டால், வாழ்நாள் முழுவதும் அதைக் காப்பாற்ற முயலுவர். இதைத்தான் மேற்காணும் நிகழ்ச்சி நமக்கு விளக்குகிறது.

வித்தியாசமான இந்தப் பள்ளியின் அணுகுமுறையை, ஒவ்வொரு பள்ளியும் பின்பற்றினால், எதிர்காலத்தில் நல்லதொரு சமுதாயம் உருவாவது நிச்சயம்.

— டி.எஸ்.பாலு, கவுரிவாக்கம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 26 Empty Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by ஜாஹீதாபானு Tue 27 May 2014 - 18:44

krishnaamma wrote:மாணவர்களின் சத்தியம்!

'பிளஸ் 2' தேர்வு முடிந்ததும், ஒவ்வொரு பள்ளியிலும் மதிப்பெண் பட்டியலும், மாற்றுச் சான்றிதழும் (டி.சி.,) தருவர். மாணவர்கள் அவற்றைப் பெற்று, கல்லூரியில் சேர முயற்சி செய்வர். இதுதான், பல பள்ளிகளின், நடைமுறை.

ஆனால், சென்னை திருவான்மியூரில், ஒரு தனியார் பள்ளியில், வித்தியாசமான ஒரு அணுகுமுறையைக் கையாளுகின்றனர்.'பிளஸ் 2' முடித்த மாணவர்கள், தலைமை ஆசிரியரைச் சந்தித்து சான்றிதழ்களைப் பெறச் செல்லும்போது, அவர்கள் இரண்டு சத்தியங்களைச் செய்ய வேண்டும்.

அது, 'எக்காரணத்தைக் கொண்டும், பெற்றோரை விட்டு, பிரிந்து வாழ மாட்டேன்; அரசுப் பணியில் அமர்ந்தால், எவரிடமும் லஞ்சம் வாங்க மாட்டேன்...' என்று, வாக்குறுதிகளைக் கொடுத்து விட்டுத்தான், மாணவர்கள் அங்கிருந்து வெளியேறுகின்றனர்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும், மாணவப்பருவம் மிக மிக முக்கியமானது. அந்தப் பருவத்தில், அவர்கள் சில உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டால், வாழ்நாள் முழுவதும் அதைக் காப்பாற்ற முயலுவர். இதைத்தான் மேற்காணும் நிகழ்ச்சி நமக்கு விளக்குகிறது.

வித்தியாசமான இந்தப் பள்ளியின் அணுகுமுறையை, ஒவ்வொரு பள்ளியும் பின்பற்றினால், எதிர்காலத்தில் நல்லதொரு சமுதாயம் உருவாவது நிச்சயம்.

— டி.எஸ்.பாலு, கவுரிவாக்கம்.

 சூப்பருங்க 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 26 Empty Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by கிருஷ்ணா Wed 28 May 2014 - 11:15

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 26 3838410834 


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 26 Empty Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma Sat 14 Jun 2014 - 12:53

நன்றி பானு, நன்றி கிருஷ்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 26 Empty Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma Sat 14 Jun 2014 - 12:53

இன்ப அதிர்ச்சி ஏற்படுத்திய இளசுகள்!

சென்னை திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனை, பேருந்து நிறுத்தத்தில், நான் கண்ட காட்சி, என்னை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மாலை, 5:00 மணி இருக்கும். 75 வயது மதிக்கக்தக்க, ஒரு மூதாட்டி கையில், ஒரு துணிப்பையுடன், பரிதாபமாக, கடை ஓரமாக அமர்ந்திருந்தார். சில இளம் பெண்கள், பஸ் நிறுத்தத்தில், கூட்டமாய் நின்று கொண்டிருந்தனர். அவர்களுள், இருவர் அங்கிருக்கும் பெட்டிக் கடையில், ஒரு பிஸ்கட் பாக்கெட்டை வாங்கி வந்து, 'பாட்டி...' என்று, அன்புடன் அழைத்து, அவரது கையில் கொடுத்ததுடன், காபியும் வாங்கி கொடுத்தனர். அந்த மூதாட்டி, அவர்களுக்கு தெரிந்தவராய் இருக்குமோ என நினைத்து, அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'தெரிஞ்சவங்க இல்ல; அந்தப்பாட்டியின் முகம் வாடிப் போய் இருந்ததால் தான், காபி மற்றும் பிஸ்கட் வாங்கிக் கொடுத்தோம்...'என்றனர்.

நான், அவர்களைப் பாராட்டி, மனமாற வாழ்த்தினேன். 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்...' என்ற வள்ளலாரின் வாக்கு தான், என் நினைவிற்கு வந்தது.

- எஸ்.தியாகமணி, சென்னை..


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 26 Empty Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma Sat 14 Jun 2014 - 12:54

கணவன் இருந்தும்...

என், கணவருக்கு ஒரு தங்கை உள்ளார். கணவனை இழந்தவர். பிறந்த வீட்டில் இருக்கும் அவரை, எந்த வேலையும் செய்ய விடாமல், எல்லாருமே அன்பாக பார்த்து கொள்வோம். ஆனால், அவரோ, எங்களது இந்த சலுகையை தனக்கு சாதகமாக்கி, முடிசூடா ராணி மாதிரி வளைய வந்து கொண்டிருக்கிறார். நான் பொட்டு, பூ வைத்துக்கொண்டால் போச்சு... வீடு திமிலோகப்படும். அவரைப் போலவே நானும் பொட்டு வைக்காமல், பூ சூடாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.

அது மட்டுமல்ல, நான் என் கணவருடன் எங்காவது வெளியில் சென்று வந்தால், பத்ரகாளியாக மாறி விடுவார். இதற்கு பயந்தே நான் வெளியில் எங்கும் செல்வது கிடையாது. என்னுடைய மாமியார், எரிகிற கொள்ளியில் எண்ணை ஊற்றுவது போல், தன் மகளுக்கு சாதகமாக பேசுவது போல், என்னை இழிவுப்படுத்துகிறார்.

எவ்வளவு நாளைக்குத் தான், இந்த இம்சையை பொறுத்துப் போவதோ தெரியவில்லை. இத்தனைக்கும், எனக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டு தான் ஆகிறது. வீட்டு பெண் வாழாமல் இருக்கிறார் என்பதற்காக, வந்த மருமகளும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பது, எந்த விதத்தில் நியாயம்? கணவன் இருந்தும், பூ, பொட்டு இல்லாமல் இருப்பது கொடுமை அல்லவா? இதை எப்படி இவர்களுக்கு சொல்லி, புரிய வைப்பது?

— ஊர் பெயர் வெளியிட விரும்பாத வாசகி..


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 26 Empty Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma Sat 14 Jun 2014 - 14:16

krishnaamma wrote:கணவன் இருந்தும்...

என், கணவருக்கு ஒரு தங்கை உள்ளார். கணவனை இழந்தவர். பிறந்த வீட்டில் இருக்கும் அவரை, எந்த வேலையும் செய்ய விடாமல், எல்லாருமே அன்பாக பார்த்து கொள்வோம். ஆனால், அவரோ, எங்களது இந்த சலுகையை தனக்கு சாதகமாக்கி, முடிசூடா ராணி மாதிரி வளைய வந்து கொண்டிருக்கிறார். நான் பொட்டு, பூ வைத்துக்கொண்டால் போச்சு... வீடு திமிலோகப்படும். அவரைப் போலவே நானும் பொட்டு வைக்காமல், பூ சூடாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.

அது மட்டுமல்ல, நான் என் கணவருடன் எங்காவது வெளியில் சென்று வந்தால், பத்ரகாளியாக மாறி விடுவார். இதற்கு பயந்தே நான் வெளியில் எங்கும் செல்வது கிடையாது. என்னுடைய மாமியார், எரிகிற கொள்ளியில் எண்ணை ஊற்றுவது போல், தன் மகளுக்கு சாதகமாக பேசுவது போல், என்னை இழிவுப்படுத்துகிறார்.

எவ்வளவு நாளைக்குத் தான், இந்த இம்சையை பொறுத்துப் போவதோ தெரியவில்லை. இத்தனைக்கும், எனக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டு தான் ஆகிறது. வீட்டு பெண் வாழாமல் இருக்கிறார் என்பதற்காக, வந்த மருமகளும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பது, எந்த விதத்தில் நியாயம்? கணவன் இருந்தும், பூ, பொட்டு இல்லாமல் இருப்பது கொடுமை அல்லவா? இதை எப்படி இவர்களுக்கு சொல்லி, புரிய வைப்பது?

— ஊர் பெயர் வெளியிட விரும்பாத வாசகி..
மேற்கோள் செய்த பதிவு: 1069034

சோகம் இது கொஞ்சம் அநியாயமாய் இருக்கே !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 26 Empty Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by M.M.SENTHIL Sat 14 Jun 2014 - 14:23

krishnaamma wrote:கணவன் இருந்தும்...

என், கணவருக்கு ஒரு தங்கை உள்ளார். கணவனை இழந்தவர். பிறந்த வீட்டில் இருக்கும் அவரை, எந்த வேலையும் செய்ய விடாமல், எல்லாருமே அன்பாக பார்த்து கொள்வோம். ஆனால், அவரோ, எங்களது இந்த சலுகையை தனக்கு சாதகமாக்கி, முடிசூடா ராணி மாதிரி வளைய வந்து கொண்டிருக்கிறார். நான் பொட்டு, பூ வைத்துக்கொண்டால் போச்சு... வீடு திமிலோகப்படும். அவரைப் போலவே நானும் பொட்டு வைக்காமல், பூ சூடாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.

அது மட்டுமல்ல, நான் என் கணவருடன் எங்காவது வெளியில் சென்று வந்தால், பத்ரகாளியாக மாறி விடுவார். இதற்கு பயந்தே நான் வெளியில் எங்கும் செல்வது கிடையாது. என்னுடைய மாமியார், எரிகிற கொள்ளியில் எண்ணை ஊற்றுவது போல், தன் மகளுக்கு சாதகமாக பேசுவது போல், என்னை இழிவுப்படுத்துகிறார்.

எவ்வளவு நாளைக்குத் தான், இந்த இம்சையை பொறுத்துப் போவதோ தெரியவில்லை. இத்தனைக்கும், எனக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டு தான் ஆகிறது. வீட்டு பெண் வாழாமல் இருக்கிறார் என்பதற்காக, வந்த மருமகளும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பது, எந்த விதத்தில் நியாயம்? கணவன் இருந்தும், பூ, பொட்டு இல்லாமல் இருப்பது கொடுமை அல்லவா? இதை எப்படி இவர்களுக்கு சொல்லி, புரிய வைப்பது?

— ஊர் பெயர் வெளியிட விரும்பாத வாசகி..
மேற்கோள் செய்த பதிவு: 1069034

பெயர் வெளியிட விரும்பாத வாசகியே, மணமுடித்து இரண்டரை ஆண்டுகளில் உங்களுக்கு வந்த இந்த கொடுமை வருத்தத்திற்கு உரியதே. கணவனுடன் தனிமையில் இதைப் பற்றி பேசிப் பாருங்கள். அவர் உங்கள் பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை எனில், அவர் தங்கையிடமும், தாயிடமும் உங்கள் உள்ளக் குமுறலை கொட்டிப் பாருங்கள். அவர்களும் பெண்கள் தானே கொஞ்சம் மன மாற்றம் வரலாம்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 26 Empty Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 26 of 100 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 63 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum