Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
+46
Namasivayam Mu
பழ.முத்துராமலிங்கம்
சசி
M.Jagadeesan
வேல்முருகன்
balakarthik
சரவணன்
Preethika Chandrakumar
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
prabatneb
சிவனாசான்
அகிலன்
idigiti
solomon
உமேரா
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
M.Saranya
jesifer
விமந்தனி
பிஜிராமன்
கோ. செந்தில்குமார்
Dr.S.Soundarapandian
கிருஷ்ணா
பாலாஜி
சிவா
SenthilMookan
T.N.Balasubramanian
உதயசுதா
பார்த்திபன்
ஹர்ஷித்
jenisiva
amirmaran
விஸ்வாஜீ
ayyasamy ram
ஜாஹீதாபானு
அருண்
M.M.SENTHIL
அசுரன்
Muthumohamed
mbalasaravanan
ராஜா
malik
krishnaamma
50 posters
Page 11 of 100
Page 11 of 100 • 1 ... 7 ... 10, 11, 12 ... 55 ... 100
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:38 pm; edited 5 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல ஐடியா!
சமீபத்தில், என் தோழியை, அஞ்சல் அலுவலகத்தில் சந்தித்தேன். அவளுக்கு, இரண்டு மாதத்துக்கு முன், நிச்சயதார்த்தம் நடந்தது. அவளின் வருங்கால கணவருடன் வந்திருந்தாள். கடந்த மாதமும், அவர்களை பேங்கில் பார்த்த ஞாபகம். கூட்டத்தில் பேச முடியவில்லை. 'என்னடி... உங்களை போல் திருமணம் நிச்சயித்த ஆட்கள், பீச், சினிமா என்று சுற்றும் போது, உங்களுக்கு மட்டும் பேங்க், போஸ்ட் ஆபீசில் என்ன வேலை?' என கேட்டேன்.
அதற்கு அவள், 'எங்க கல்யாணத்துக்கு, இவருக்கு, ஒரு வாரம் தான் லீவ் கிடைச்சிருக்கு. நானும், சென்னைக்கு புதுசு. அதான், என் மாமியார், வீட்டுக்கு அருகில் உள்ள பேங்க், போஸ்ட் ஆபீஸ், பால் பூத், இ.பி., ஆபீஸ் என, எல்லாவற்றையும் பார்த்து வச்சுக்கன்னு சொன்னார். அதனால் தான் இவர் எல்லா இடத்தையும் சுற்றி காட்டுகிறார்...' என்றாள்.
அதற்கு அவளது வருங்கால கணவர், 'ஆமாம் சிஸ்டர்... கல்யாணத்துக்கு பின், இவள் இடம் தெரியாமல், அவஸ்தை படக்கூடாது இல்லையா... அதான், இப்பவே சுற்றி காட்டுகிறேன்...' என்றார். நான், அவள் வருங்கால கணவரை பாராட்டினேன். இன்றைய இளைஞர்கள் நன்றாகவே யோசிக்கின்றனர்.
- சுகாசினி கணேஷ், திருவள்ளூர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
krishnaamma wrote:
சமீபத்தில், என் தோழியை, அஞ்சல் அலுவலகத்தில் சந்தித்தேன். அவளுக்கு, இரண்டு மாதத்துக்கு முன், நிச்சயதார்த்தம் நடந்தது. அவளின் வருங்கால கணவருடன் வந்திருந்தாள். கடந்த மாதமும், அவர்களை பேங்கில் பார்த்த ஞாபகம். கூட்டத்தில் பேச முடியவில்லை. 'என்னடி... உங்களை போல் திருமணம் நிச்சயித்த ஆட்கள், பீச், சினிமா என்று சுற்றும் போது, உங்களுக்கு மட்டும் பேங்க், போஸ்ட் ஆபீசில் என்ன வேலை?' என கேட்டேன்.
அதற்கு அவள், 'எங்க கல்யாணத்துக்கு, இவருக்கு, ஒரு வாரம் தான் லீவ் கிடைச்சிருக்கு. நானும், சென்னைக்கு புதுசு. அதான், என் மாமியார், வீட்டுக்கு அருகில் உள்ள பேங்க், போஸ்ட் ஆபீஸ், பால் பூத், இ.பி., ஆபீஸ் என, எல்லாவற்றையும் பார்த்து வச்சுக்கன்னு சொன்னார். அதனால் தான் இவர் எல்லா இடத்தையும் சுற்றி காட்டுகிறார்...' என்றாள்.
அதற்கு அவளது வருங்கால கணவர், 'ஆமாம் சிஸ்டர்... கல்யாணத்துக்கு பின், இவள் இடம் தெரியாமல், அவஸ்தை படக்கூடாது இல்லையா... அதான், இப்பவே சுற்றி காட்டுகிறேன்...' என்றார். நான், அவள் வருங்கால கணவரை பாராட்டினேன். இன்றைய இளைஞர்கள் நன்றாகவே யோசிக்கின்றனர்.
- சுகாசினி கணேஷ், திருவள்ளூர்.
அடப்பாவிகளா...............முன்னேற்பாட்டுக்கு ஒரு அளவில்லையா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வேலியே பயிரை மேயலாமா?
திருச்சிக்கு செல்வதற்காக, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினேன்.
டி.டி.ஆர்., வந்து, டிக்கெட் பரிசோதித்த பின் தூங்கலாம் என்று காத்திருந்தேன். இரவு, 10:00 மணிக்கு, ரயில் கிளம்பியது. நேரம் ஆக ஆக, எங்கள் கோச்சில், ஒவ்வொருவராக தூங்க துவங்கினர். நானும், விளக்கை அணைத்துவிட்டு, பர்த்தில் படுத்துவிட்டேன். நள்ளிரவில், இயற்கை உபாதை கழிக்க, கழிப்பறை போய், திரும்பும் போது, நான் கண்ட காட்சி, என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது!
லோயர் பர்த்தில், மார்புச் சேலை விலகியது கூட தெரியாமல், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண் ஒருவரின் அழகை, கள்ளத்தனமாக ரசித்துக் கொண்டிருந்தார் டி.டி.ஆர்., என்னைப் பார்த்ததும், சட்டென்று சுதாரித்த அவர், 'எல்லாரும் டிக்கெட் காட்டுங்க...' என்றார். இவர்களைப் போன்ற, 'ஜொள் மன்னர்'களை பொறுப்புள்ள பதவியில் அமர்த்தும் முன், ரயில்வே நிர்வாகம், தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும்.அகாலத்தில் எழுப்புவதால், ஆழ்ந்த தூக்கம் பறிபோய் விடுவதோடு, நேரம் கடந்து பரிசோதகர், தங்கள் பணியை செய்ய முற்படுவது, வேலியே பயிரைத் தாண்டுவது போல் உள்ளது.
- பாலா சரவணன், சென்னை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உண்மை காதலுக்கு வயதில்லை!
உண்மை காதலுக்கு வயதில்லை!
நீண்ட இடைவெளிக்கு பின், என் பழைய தோழியை சந்தித்தேன். நலம் விசாரித்து கொண்டிருக்கையில், 'உனக்கு, 'மெனோபாஸ்' ஆகிவிட்டதா...' என்று கேட்டாள். 'இன்னும் இல்லை...'என்றேன். தனக்கு, 'மெனோபாஸ்' ஆகி, இரண்டு ஆண்டுகளாகிவிட்டது என்றும், யோகா, டயட் என்று எடுத்து கொண்டிருப்பதாகவும், என்ன இருந்து, என்ன பயன்... மனசு ஆரோக்கியமா இல்லையே... என்று வருத்தப்பட்டாள். 'ஏன், என்ன ஆச்சு...' என்றேன்.
'இனி, வேலைக்கு ஆகமாட்டே, வயசாயிடுச்சு, எனக்கு அப்படி இல்ல. நாளுக்கு நாள், இளமை கூடுது, பவர் ஏறுது...' என்று, அவர் கணவர் கூறி, அலட்சியப்படுத்துவதாக கூறி வருத்தப்பட்டாள். நான், அவளுக்கு ஆறுதலும், தேறுதலும் கூறி, மனநல மருத்துவரை பார்க்கும்படியும் கூறி அனுப்பினேன்.
மனைவிக்கு வயது ஏறினால், கணவருக்கும்தானே வயது கூடும். இதில், மார்தட்டிக் கொள்ள என்ன இருக்கிறது! 65ல் வாங்கிய காரை கூட, விற்க மனமில்லாமல், ஷெட்டில் நிறுத்தி, 'பளீர்' என்று துடைத்து பழைய நினைவுகளோடு பார்த்து கொண்டிருப்பவர்களை பார்க்கிறோம். உயிரும், உணர்வும் உள்ள மனைவியை, இயற்கையாக நிகழும், மெனோபாஸ் விஷயத்திற்காக, புறக்கணிப்பது என்ன நியாயம்? இந்த வயதில் தானே மனைவி மீது, அதிக அன்பு செலுத்த வேண்டும்.
ஆண்களே... பிரசவம், மாதவிடாய் இப்படி, பலவற்றுக்கு ரத்த அணுக்களை இழந்து, தியாகம் செய்து செய்தே உங்களுக்கும், வாரிசுகளுக்கும் உழைத்து ஓடாய் தேய்ந்து போகிறவள் பெண், அத்தகைய பெண் இனத்திற்கு, குறிப்பிட்ட வயதிற்கு பின், இயற்கை, தானாய் ஓய்வு கொடுத்து விடுகிறது. இந்த ஒய்வு உடலுக்குத்தானே தவிர, மனதுக்கல்ல. அதனால், மனதை நேசியுங்கள், மாறாதது, காதல்; காமமல்ல... புரிந்து கொள்ளுங்கள் ஆண்களே!
- ராஜேஸ்வரி வெங்கட், சென்னை.
நீண்ட இடைவெளிக்கு பின், என் பழைய தோழியை சந்தித்தேன். நலம் விசாரித்து கொண்டிருக்கையில், 'உனக்கு, 'மெனோபாஸ்' ஆகிவிட்டதா...' என்று கேட்டாள். 'இன்னும் இல்லை...'என்றேன். தனக்கு, 'மெனோபாஸ்' ஆகி, இரண்டு ஆண்டுகளாகிவிட்டது என்றும், யோகா, டயட் என்று எடுத்து கொண்டிருப்பதாகவும், என்ன இருந்து, என்ன பயன்... மனசு ஆரோக்கியமா இல்லையே... என்று வருத்தப்பட்டாள். 'ஏன், என்ன ஆச்சு...' என்றேன்.
'இனி, வேலைக்கு ஆகமாட்டே, வயசாயிடுச்சு, எனக்கு அப்படி இல்ல. நாளுக்கு நாள், இளமை கூடுது, பவர் ஏறுது...' என்று, அவர் கணவர் கூறி, அலட்சியப்படுத்துவதாக கூறி வருத்தப்பட்டாள். நான், அவளுக்கு ஆறுதலும், தேறுதலும் கூறி, மனநல மருத்துவரை பார்க்கும்படியும் கூறி அனுப்பினேன்.
மனைவிக்கு வயது ஏறினால், கணவருக்கும்தானே வயது கூடும். இதில், மார்தட்டிக் கொள்ள என்ன இருக்கிறது! 65ல் வாங்கிய காரை கூட, விற்க மனமில்லாமல், ஷெட்டில் நிறுத்தி, 'பளீர்' என்று துடைத்து பழைய நினைவுகளோடு பார்த்து கொண்டிருப்பவர்களை பார்க்கிறோம். உயிரும், உணர்வும் உள்ள மனைவியை, இயற்கையாக நிகழும், மெனோபாஸ் விஷயத்திற்காக, புறக்கணிப்பது என்ன நியாயம்? இந்த வயதில் தானே மனைவி மீது, அதிக அன்பு செலுத்த வேண்டும்.
ஆண்களே... பிரசவம், மாதவிடாய் இப்படி, பலவற்றுக்கு ரத்த அணுக்களை இழந்து, தியாகம் செய்து செய்தே உங்களுக்கும், வாரிசுகளுக்கும் உழைத்து ஓடாய் தேய்ந்து போகிறவள் பெண், அத்தகைய பெண் இனத்திற்கு, குறிப்பிட்ட வயதிற்கு பின், இயற்கை, தானாய் ஓய்வு கொடுத்து விடுகிறது. இந்த ஒய்வு உடலுக்குத்தானே தவிர, மனதுக்கல்ல. அதனால், மனதை நேசியுங்கள், மாறாதது, காதல்; காமமல்ல... புரிந்து கொள்ளுங்கள் ஆண்களே!
- ராஜேஸ்வரி வெங்கட், சென்னை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உயிரோடு விளையாடலாமா!
உயிரோடு விளையாடலாமா!
சமீபத்தில், உறவினர் ஒருவர், கோவையில் உள்ள பிரபல மருத்துவமனையில், அல்சர், பிரஷர், தலை சுற்றல் போன்ற பிரச்ரனைகளுக்காக, ஐ.சி.யூ.,வில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். அவரைப் பார்ப்பதற்காக, நானும், என் மூத்த சகோதரரும், ஐ.சி.யூ., அறைக்குள் சென்றோம்.
அப்போது அவர், எங்களிடம், 'எனக்கு மயக்கமாக வருகிறது...' என்றார். அருகில் இருந்த நர்சிடம் கூறியபோது, அவர், 'திருதிரு'வென விழித்தார். காரணம், அந்த நர்ஸ், வட மாநிலத்தை சார்ந்தவர். ஐ.சி.யூ.,வில் உள்ள நோயாளி சொன்னது அவருக்கு புரியவில்லை. நாங்கள் அரைகுறை ஆங்கிலத்தில் கூறியும், சைகையில் விளக்கிய பின்னர் தான் அவருக்கு புரிந்து, பின், மருத்துவரை அழைத்து வந்தார்.
தமிழே புரியாதவர்களை, இன்றியமையாத உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை அறைக்குள், பணியமர்த்தினால், நோயாளியின் நிலை என்னவாகும்? மருத்துவமனை நிர்வாகத்திற்கு இது, ஏன் புரியவில்லை?
பயிற்சி பெறுபவர்கள், கல்லூரி மாணவிகள் என்று, என்ன தான் காரணம் கூறினாலும், ஐ.சி.யூ.,வில் பணியமர்த்த வேண்டுமா?
மொழி தெரியாதவர்களை, ஐ.சி.யூ.,வில் பணிக்கு அமர்த்தி, உயிரோடு விளையாடும் விபரீத போக்கை மருத்துவமனைகள் உடனே நிறுத்த முன்வர வேண்டும்.
- ஆ.சிவமணி, புன்செய்புளியம்பட்டி.
சமீபத்தில், உறவினர் ஒருவர், கோவையில் உள்ள பிரபல மருத்துவமனையில், அல்சர், பிரஷர், தலை சுற்றல் போன்ற பிரச்ரனைகளுக்காக, ஐ.சி.யூ.,வில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். அவரைப் பார்ப்பதற்காக, நானும், என் மூத்த சகோதரரும், ஐ.சி.யூ., அறைக்குள் சென்றோம்.
அப்போது அவர், எங்களிடம், 'எனக்கு மயக்கமாக வருகிறது...' என்றார். அருகில் இருந்த நர்சிடம் கூறியபோது, அவர், 'திருதிரு'வென விழித்தார். காரணம், அந்த நர்ஸ், வட மாநிலத்தை சார்ந்தவர். ஐ.சி.யூ.,வில் உள்ள நோயாளி சொன்னது அவருக்கு புரியவில்லை. நாங்கள் அரைகுறை ஆங்கிலத்தில் கூறியும், சைகையில் விளக்கிய பின்னர் தான் அவருக்கு புரிந்து, பின், மருத்துவரை அழைத்து வந்தார்.
தமிழே புரியாதவர்களை, இன்றியமையாத உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை அறைக்குள், பணியமர்த்தினால், நோயாளியின் நிலை என்னவாகும்? மருத்துவமனை நிர்வாகத்திற்கு இது, ஏன் புரியவில்லை?
பயிற்சி பெறுபவர்கள், கல்லூரி மாணவிகள் என்று, என்ன தான் காரணம் கூறினாலும், ஐ.சி.யூ.,வில் பணியமர்த்த வேண்டுமா?
மொழி தெரியாதவர்களை, ஐ.சி.யூ.,வில் பணிக்கு அமர்த்தி, உயிரோடு விளையாடும் விபரீத போக்கை மருத்துவமனைகள் உடனே நிறுத்த முன்வர வேண்டும்.
- ஆ.சிவமணி, புன்செய்புளியம்பட்டி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெற்றோர் மனம் குளிர்ந்தால்...
பெற்றோர் மனம் குளிர்ந்தால்...
மாத சம்பளம் வாங்கும், என் நண்பன், ஒவ்வொரு மாதமும், சம்பளம் வாங்கியவுடன், முதல் வேலையாக, தன் பெற்றோருக்கு குறிப்பிட்ட தொகையை, அனுப்பிவிட்டு, அதன்பின், மீதிப் பணத்தை, தன் செலவிற்கு உபயோகப்படுத்துவதாக, கூறினான். அவனது வருவாயோ, குடும்ப செலவு, குழந்தைகள் பள்ளி கட்டணம், டியூஷன் கட்டணம், வீட்டு வாடகை, வட்டிப்பணம் இவைகளுக்கே பற்றாக்குறை நிலையில்தான் உள்ளது. இந்த நிலையில், பெற்றோருக்கு மாதந்தோறும் பணம் அனுப்புவது அவசியமா, எனக் கேட்டேன்.
அதற்கு அவன், 'எனக்கு எவ்வளவு தான் பிரச்னைகள் இருந்தாலும், சம்பளம் வாங்கியதும், முதலில், என் பெற்றோருக்கு பணம் அனுப்புவதால், ஒரு மனநிறைவு ஏற்படுகிறது. அதனால், எனக்கு ஏற்படும் பிரச்னைகளும் எப்படியோ தீர்ந்து விடுகின்றன. இதனால், வாழ்க்கையில், ஒரு நிறைவும், சந்தோஷமும் ஏற்படுகிறது...' என்று கூறினான்.
இதை கேட்டதும், நானும் அவ்வாறு செய்து வருகிறேன். இன்றுவரை, நானும் சந்தோஷமாக வாழ்கிறேன். ஆகையால், நீங்களும் அவ்வாறு செய்து பாருங்கள். நிம்மதியான உறக்கமும், கவலையில்லாத சந்தோஷ வாழ்க்கையும் அமையும். வசதி படைத்த பெற்றோராக இருந்தாலும், அவர்களுக்கு பணத்துக்குப் பதிலாக, அவர்கள் விரும்பி உபயோகப்படுத்தும் துணி, காலணி மற்றும் விரும்பிச் சாப்பிடும் ஆகாரம் போன்றவை வாங்கிக் கொடுத்து, மனம் குளிர மகிழ்வியுங்கள்.
- தமிழ் அரசன் முத்துக்குட்டி, திருநெல்வேலி.
மாத சம்பளம் வாங்கும், என் நண்பன், ஒவ்வொரு மாதமும், சம்பளம் வாங்கியவுடன், முதல் வேலையாக, தன் பெற்றோருக்கு குறிப்பிட்ட தொகையை, அனுப்பிவிட்டு, அதன்பின், மீதிப் பணத்தை, தன் செலவிற்கு உபயோகப்படுத்துவதாக, கூறினான். அவனது வருவாயோ, குடும்ப செலவு, குழந்தைகள் பள்ளி கட்டணம், டியூஷன் கட்டணம், வீட்டு வாடகை, வட்டிப்பணம் இவைகளுக்கே பற்றாக்குறை நிலையில்தான் உள்ளது. இந்த நிலையில், பெற்றோருக்கு மாதந்தோறும் பணம் அனுப்புவது அவசியமா, எனக் கேட்டேன்.
அதற்கு அவன், 'எனக்கு எவ்வளவு தான் பிரச்னைகள் இருந்தாலும், சம்பளம் வாங்கியதும், முதலில், என் பெற்றோருக்கு பணம் அனுப்புவதால், ஒரு மனநிறைவு ஏற்படுகிறது. அதனால், எனக்கு ஏற்படும் பிரச்னைகளும் எப்படியோ தீர்ந்து விடுகின்றன. இதனால், வாழ்க்கையில், ஒரு நிறைவும், சந்தோஷமும் ஏற்படுகிறது...' என்று கூறினான்.
இதை கேட்டதும், நானும் அவ்வாறு செய்து வருகிறேன். இன்றுவரை, நானும் சந்தோஷமாக வாழ்கிறேன். ஆகையால், நீங்களும் அவ்வாறு செய்து பாருங்கள். நிம்மதியான உறக்கமும், கவலையில்லாத சந்தோஷ வாழ்க்கையும் அமையும். வசதி படைத்த பெற்றோராக இருந்தாலும், அவர்களுக்கு பணத்துக்குப் பதிலாக, அவர்கள் விரும்பி உபயோகப்படுத்தும் துணி, காலணி மற்றும் விரும்பிச் சாப்பிடும் ஆகாரம் போன்றவை வாங்கிக் கொடுத்து, மனம் குளிர மகிழ்வியுங்கள்.
- தமிழ் அரசன் முத்துக்குட்டி, திருநெல்வேலி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
நிம்மதி எங்கே?
சமீபத்தில், கோவிலுக்கு சென்றிருந்தேன். பிரபலமான கோவில் என்பதால், அன்று, மக்கள் கூட்டம் அலை மோதியது. அங்கே, அதிசயமாக, என் நண்பனைக் கண்டேன். அவன், அவனுடைய காதலியுடன் வந்திருந்தான். நான், அவனிடம், 'என்னடா சாமி தரிசனம் முடிஞ்சாச்சா...' எனக் கேட்க, பதிலுக்கு, 'தரிசனமா... சாமிய பாக்க யார் வந்தா... பத்து நாளா, இவள பாக்க முடியல. இன்னிக்குத்தான் பார்க்க முடிஞ்சது. பீச்சுக்கு போனா, போலீஸ் தொல்ல. அதுதான் இங்க வந்தோம். இங்க, யாரும் நம்மள கண்டுக்க மாட்டாங்க...' எனக் கூறி, காதலியுடன், தனியிடம் தேடி நகர்ந்தான்.
அவன் சென்றதும், ஒருமுறை கோவிலைச் சுற்றி பார்த்தேன். மெரினா பீச்சைப் போல, ஆங்காங்கே காதல் ஜோடிகள். இவர்கள், கடவுளைத் தரிசிக்க வராமல், கோவிலை, காதலர்கள் சந்திக்கும் இடமாக பயன்படுத்துவது, வருத்தமளித்தது. இன்றைய வாழ்க்கை சூழலில், மனதில் அமைதி இழந்து, நிம்மதியைத் தேடி வரும், ஒரே இடம் கோவில். அங்கேயும் இப்படியென்றால், நிம்மதியை தேடி எங்கே தான் போவது?
தி.சந்திரசேகர், அம்பத்தூர்.
சமீபத்தில், கோவிலுக்கு சென்றிருந்தேன். பிரபலமான கோவில் என்பதால், அன்று, மக்கள் கூட்டம் அலை மோதியது. அங்கே, அதிசயமாக, என் நண்பனைக் கண்டேன். அவன், அவனுடைய காதலியுடன் வந்திருந்தான். நான், அவனிடம், 'என்னடா சாமி தரிசனம் முடிஞ்சாச்சா...' எனக் கேட்க, பதிலுக்கு, 'தரிசனமா... சாமிய பாக்க யார் வந்தா... பத்து நாளா, இவள பாக்க முடியல. இன்னிக்குத்தான் பார்க்க முடிஞ்சது. பீச்சுக்கு போனா, போலீஸ் தொல்ல. அதுதான் இங்க வந்தோம். இங்க, யாரும் நம்மள கண்டுக்க மாட்டாங்க...' எனக் கூறி, காதலியுடன், தனியிடம் தேடி நகர்ந்தான்.
அவன் சென்றதும், ஒருமுறை கோவிலைச் சுற்றி பார்த்தேன். மெரினா பீச்சைப் போல, ஆங்காங்கே காதல் ஜோடிகள். இவர்கள், கடவுளைத் தரிசிக்க வராமல், கோவிலை, காதலர்கள் சந்திக்கும் இடமாக பயன்படுத்துவது, வருத்தமளித்தது. இன்றைய வாழ்க்கை சூழலில், மனதில் அமைதி இழந்து, நிம்மதியைத் தேடி வரும், ஒரே இடம் கோவில். அங்கேயும் இப்படியென்றால், நிம்மதியை தேடி எங்கே தான் போவது?
தி.சந்திரசேகர், அம்பத்தூர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
என்ன கொடுமை இது?
பிரபலமான, 'டிவி'யில், மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும், ஒரு தொடரை, ஒரு வாரமாக, ஏதேச்சையாக பார்க்க நேர்ந்தது. அதில், சிறுவயதிலேயே கணவனை இழந்து, ஒரு குழந்தையோடு உள்ள, தன் மருமகளுக்கு, மறுமணம் செய்து வைக்க துடிக்கிறார் மாமியார். அவரது எண்ணம், பாராட்டப்பட வேண்டியதுதான். அதற்காக, அவர் எடுக்கும் முயற்சிதான், மிக கொடுமையாக இருந்தது.
அந்த மாமியார், வெளியூரில் உள்ள, தன் நெருங்கிய தோழியின் மகனை, தன் வீட்டிற்கு வரவழைத்து, தன் மருமகளுடன் பழக விட்டு, அவளை மயக்கி, திருமணம் செய்து வைக்க திட்டம் போடுகிறார். அதன்படி அந்த ஆணும், அந்த வீட்டிலேயே தங்கி, மருமகளோடு தினமும் பேசி, பழகுகிறார். இவர்களை, தனிமையில் சந்திக்க வைக்கவும் ஏற்பாடு செய்கிறார் மாமியார்.
அறிமுகமே இல்லாத, இன்னொரு வீட்டு ஆணை, தன் வீட்டில் தங்க வைத்து, தன் மருமகளுடன் பேசி, மயக்கி, திருமணத்திற்கு சம்மதம் வாங்க வேண்டும் என்ற திட்டம், கேவலமாக இல்லையா?
நம் பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தும், இம்மாதிரி காட்சிகள் அவசியமா? திருமணம் செய்து வைக்க, எத்தனையோ நல்ல வழிகள் இருக்க, இப்படி ஒரு கேவலமான முயற்சி செய்துதான், திருமணம் செய்து வைக்க வேண்டுமா? நிகழ்ச்சி தயாரிப்பவர்கள் இது குறித்து, யோசிப்பரா?
— வே.விநாயக மூர்த்தி, வெட்டுவான்கேணி.
பிரபலமான, 'டிவி'யில், மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும், ஒரு தொடரை, ஒரு வாரமாக, ஏதேச்சையாக பார்க்க நேர்ந்தது. அதில், சிறுவயதிலேயே கணவனை இழந்து, ஒரு குழந்தையோடு உள்ள, தன் மருமகளுக்கு, மறுமணம் செய்து வைக்க துடிக்கிறார் மாமியார். அவரது எண்ணம், பாராட்டப்பட வேண்டியதுதான். அதற்காக, அவர் எடுக்கும் முயற்சிதான், மிக கொடுமையாக இருந்தது.
அந்த மாமியார், வெளியூரில் உள்ள, தன் நெருங்கிய தோழியின் மகனை, தன் வீட்டிற்கு வரவழைத்து, தன் மருமகளுடன் பழக விட்டு, அவளை மயக்கி, திருமணம் செய்து வைக்க திட்டம் போடுகிறார். அதன்படி அந்த ஆணும், அந்த வீட்டிலேயே தங்கி, மருமகளோடு தினமும் பேசி, பழகுகிறார். இவர்களை, தனிமையில் சந்திக்க வைக்கவும் ஏற்பாடு செய்கிறார் மாமியார்.
அறிமுகமே இல்லாத, இன்னொரு வீட்டு ஆணை, தன் வீட்டில் தங்க வைத்து, தன் மருமகளுடன் பேசி, மயக்கி, திருமணத்திற்கு சம்மதம் வாங்க வேண்டும் என்ற திட்டம், கேவலமாக இல்லையா?
நம் பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தும், இம்மாதிரி காட்சிகள் அவசியமா? திருமணம் செய்து வைக்க, எத்தனையோ நல்ல வழிகள் இருக்க, இப்படி ஒரு கேவலமான முயற்சி செய்துதான், திருமணம் செய்து வைக்க வேண்டுமா? நிகழ்ச்சி தயாரிப்பவர்கள் இது குறித்து, யோசிப்பரா?
— வே.விநாயக மூர்த்தி, வெட்டுவான்கேணி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிறு தானியங்களை மதிப்போம்!
சிறு தானியங்களை மதிப்போம்!
திண்டுக்கல் நகரில் உள்ள, ஒரு பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோருக்குச் சென்றிருந்தேன்.
'சிறு தானியங்கள்' என்ற தலைப்பில் கம்பு, திணை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற தானியங்களையும், அவற்றில் அடங்கியுள்ள சத்துக்கள் குறித்தும், இந்த வகை உணவை எடுத்துக் கொள்வதால், நமக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி தெளிவாக பட்டியலிட்டு ஒட்டியிருந்தனர்.
பலரும், அதை ஆர்வமுடன் படித்தனர். இந்த வகை தானியங்களில், என்னென்ன பதார்த்தங்கள் செய்யலாம் என்பதையும் விளக்கியிருந்தனர். அரிசி மற்றும் கோதுமையை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். இந்த சிறு தானிய உணவின் பயன் குறித்து, இன்று, கிராமம், நகரப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை.
மிகக் குறைந்த அளவு வாங்கி, வாரம் இரு முறை, இந்த சிறுதானியங்களை, நம் உணவில் சேர்த்துக் கொள்வதுடன், பிள்ளைகளுக்கும் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும். உணவு பாக்கெட், டின்கள், டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் துரித வகை உணவு வகைகளை தவிர்த்து, ஆரோக்கியத்தை தரும் சிறுதானிய உணவு முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்!
- எஸ்.ராமு,செம்பட்டி.
திண்டுக்கல் நகரில் உள்ள, ஒரு பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோருக்குச் சென்றிருந்தேன்.
'சிறு தானியங்கள்' என்ற தலைப்பில் கம்பு, திணை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற தானியங்களையும், அவற்றில் அடங்கியுள்ள சத்துக்கள் குறித்தும், இந்த வகை உணவை எடுத்துக் கொள்வதால், நமக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி தெளிவாக பட்டியலிட்டு ஒட்டியிருந்தனர்.
பலரும், அதை ஆர்வமுடன் படித்தனர். இந்த வகை தானியங்களில், என்னென்ன பதார்த்தங்கள் செய்யலாம் என்பதையும் விளக்கியிருந்தனர். அரிசி மற்றும் கோதுமையை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். இந்த சிறு தானிய உணவின் பயன் குறித்து, இன்று, கிராமம், நகரப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை.
மிகக் குறைந்த அளவு வாங்கி, வாரம் இரு முறை, இந்த சிறுதானியங்களை, நம் உணவில் சேர்த்துக் கொள்வதுடன், பிள்ளைகளுக்கும் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும். உணவு பாக்கெட், டின்கள், டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் துரித வகை உணவு வகைகளை தவிர்த்து, ஆரோக்கியத்தை தரும் சிறுதானிய உணவு முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்!
- எஸ்.ராமு,செம்பட்டி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 11 of 100 • 1 ... 7 ... 10, 11, 12 ... 55 ... 100
Similar topics
» படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது ..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது ..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
Page 11 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|