புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காகம் எப்படிக் கருப்பானது? -சிறுவர் கதை
Page 1 of 1 •
ஆதிகாலத்தில் காகங்கள் சற்று நீண்ட தோகை போன்ற இறக்கைகளுடன் வெண்மை நிறத்தில்தான் இருந்தனவாம்! அப்படிப்பட்ட காக்கை இனத்தில் ஒரு காக்கைக் குஞ்சு தன் பெற்றோருடன் ஒரு மரத்தில் வசித்து வந்தது. அது ஓயாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும். "அது என்ன?'
"இது ஏன் இப்படி?', "இதைச் செய்தது யார்?' என்று தன் பெற்றோரிடம் கேட்டுக் கொண்டே இருந்தது.
அது ஒருநாள் மரத்தை விட்டுக் கீழே இறங்கி வந்ததும், அதை ஒரு பூனை தாவிப் பிடிக்க முயன்றது. இதனால் அஞ்சி நடுங்கிய காக்கைக் குஞ்சு மீண்டும் தன் கூட்டிற்கே சென்று, அமர்ந்து கொண்டது. அதன் தாய் அதனிடம், ""அவை விலங்குகள்! நம்மை விட வலிமை மிகுந்தவை! நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!'' என்றது.
உடனே காக்கைக் குஞ்சு, ""வலிமை என்றால் என்ன அம்மா?'' என்றது.
""எப்படிப்பட்ட சூழலையும் சமாளித்து உயிர் வாழும் திறனே வலிமை எனப்படும்...'' என்றது.
இப்பொழுது அந்த காக்கைக் குஞ்சிற்கு உலகிலேயே வலிமை மிகுந்த உயிரினத்தைக் காண ஆவல் பிறந்தது. அதைப் பூனையிடமே கேட்டுவிடுவோம்... என்று நினைத்துக் கொண்டது.
மறுநாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த காக்கைக் குஞ்சு பூனையிடம் சென்று, ""அண்ணே! உன்னைவிட வலிமை மிகுந்தவர் யார்?'' என்று கேட்டது.
அதற்குப் பூனை, ""என்னைவிட வலிமை மிகுந்தவன் நாய்'' என்றது.
காக்கைக் குஞ்சு உடனே நாயிடம் சென்று, ""உன்னைவிட வலிமை மிகுந்தவர் யார்?'' என்றது.
நாயோ தன்னைவிட வலிமை மிகுந்தது காளை மாடு என்றது.
காளை மாட்டிடம் சென்று கேட்க அது "யானை' என்றது. யானையிடம் சென்று கேட்டால் அது சிங்கமும் புலியும் தன்னைவிட வலிமை மிகுந்தவை என்று கூறின.
எனவே அவற்றைப் பார்க்க உடனடியாகக் காட்டுக்குச் சென்றது அந்த காக்கைக் குஞ்சு. அங்கு சிங்கத்தின் குகை வாயிலில் ஒரு சிங்கம் அம்பு பாய்ந்து இறந்துகிடந்தது. அதைச் சுற்றிலும் சில சிங்கங்கள் நின்று கொண்டிருந்தன. சற்றுத் தொலைவில் புலி ஒன்று வலையில் மாட்டித் தவித்துக் கொண்டிருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு புலியின் அருகில் சென்ற காக்கை குஞ்சு, ""அண்ணே, வலிமை மிகுந்த உங்களை வலையில் மாட்டிவிட்டவர், உங்களைவிட வலிமை மிகுந்தவராகத்தான் இருக்கவேண்டும். தயவுசெய்து அவர் யார் என்று என்னிடம் கூறுங்கள்?'' என்று கேட்டது.
கோபத்தில் உறுமிய புலி, ""இரண்டு கால்களையும் இரண்டு கைகளையும் உடைய மனிதன்தான் அவன்!'' என்றது.
""மனிதனின் வலிமை அவன் உடலில் இல்லை! அவன் அறிவில்தான் உள்ளது! தன்னால் செல்லமுடியாத இடங்களில் இருக்கும் பகைவர்களை வெல்ல ஆயுதங்களைப் பயன்படுத்துவான். எமது விலங்கினத்தையே "வீட்டு விலங்குகள்' "காட்டு விலங்குகள்' என இரு பிரிவாகப் பிரித்துவிட்டான். மனிதனின் அறிவாலும் ஆற்றலாலும் செய்யமுடியாத காரியம் என்று எதுவும் இல்லை. தன் அறிவைப் பயன்படுத்தியே அங்கிருக்கும் சிங்கத்தை வீழ்த்தியுள்ளான். என்னையும் சிறை பிடித்துவிட்டான்..'' என்று கூறியது.
உடனே அந்த காக்கைக் குஞ்சிற்குத் தானும் மனிதன் போல் அறிவு பெற வேண்டும் என்ற ஆசை பிறந்தது. சற்று நேரத்தில் அங்கு ஒரு நரி வந்து சேர்ந்தது. காக்கைக் குஞ்சு அதனிடம் சென்று, ""அண்ணே! மனிதன் தன் அறிவை எங்கு வைத்திருப்பான் என்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டது.
அதற்கு நரி, ""அதைத் தெரிந்து கொண்டு நீ என்ன செய்யப்போகிறாய்?'' என்றது.
""அவனிடம் உள்ள அறிவை நான் எடுத்துக் கொள்வேன். இதனால் நான் உலகிலேயே மிகவும் வலிமை மிகுந்த உயிரினமாவேன்! என் இனத்தைக் காப்பேன்!'' என்றது.
""நீ அளவுக்கு மீறி ஆசைப்படுகிறாய். இதனால் உனக்குத் துன்பமே நேரும்!''
என்றது. இதை சற்றும் பொருட்படுத்தாத காக்கைக் குஞ்சு, ""அண்ணே! என்னை எப்படியாவது மனிதர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்!'' என்று கெஞ்சியது.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நரி, ""மனிதர்கள் என்னைக் கண்டால் கொன்றுவிடுவர். உன்னை மிக எளிதாக விரட்டிவிடுவர்...'' என்றது.
""அப்படியென்றால் மனிதனின் அறிவை நான் எப்படிப் பார்ப்பது? அது எப்படி இருக்கும்?'' என்றது.
""எனக்குத் தெரிந்த வரையில் பகலில் மனிதன் தன் அறிவைத் தன்னுடன் எடுத்துச் சென்றுவிடுவான். ஆனால் இரவில் தூங்கும் பொழுது அதை எங்கோ ஓரிடத்தில் யாரும் எடுக்கமுடியாதபடி ஒளித்துவைத்துவிடுவான். வேண்டுமென்றால் உன்னை அருகில் உள்ள கரும்புத் தோட்டத்திற்கு இன்று இரவு அழைத்துச் செல்கிறேன். நாம் இருவரும் ஒளிந்து நின்றுகொண்டு அங்கு காவலிருக்கும் மனிதர்களைக் கண்காணிப்போம்!'' என்று கூறியது நரி.
அதன்படியே அங்கு ஒளிந்து சென்று இருவரும் கண்காணிக்கத் தொடங்கினர். அங்கு காவலில் இருந்த மனிதர்கள் இரவு கடும் குளிராக இருந்ததால் ஓரிடத்தில் நெருப்பு மூட்டிக் குளிர் காய்வதற்காக காய்ந்த சருகுகளையும் சுள்ளிகளையும் குவித்துவைத்தனர். ஒரு மனிதன் இரு கட்டைகளை உரச அதிலிருந்து தீப்பொறி தோன்றவே காய்ந்த சருகுகள் உடனே பற்றி எரியத் தொடங்கின.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த நரி, ""அதோ வெளிச்சமாகத் தெரியும் அந்த ஒளியே மனிதனின் அறிவாகும்!'' என்றது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த காக்கைக் குஞ்சு எப்படியாவது அந்த அறிவைத் தன் கூட்டத்தாரிடம் கொடுக்க எண்ணியது. பறந்து சென்று எரியும் நெருப்பில் வீழ்ந்தது. திடீரென்று காக்கைக் குஞ்சு ஒன்று பறந்து வந்து நெருப்பில் விழுந்ததைக் கண்ட மனிதர்கள், அதை நெருப்பிலிருந்து எடுத்து தண்ணீரில் போட்டனர்.
இதற்குள் அதன் நீண்ட தோகை போன்ற இறகுகள் முழுவதுமாக எரிந்துவிட்டிருந்தன. உடலெங்கும் தீக்காயம் ஏற்பட்டு இருந்தது. வெண்மை நிறத்தில் இருந்த காக்கைக் குஞ்சு கருஞ்சாம்பல் நிறத்தில் மாறி இருந்தது. காக்கைக் குஞ்சு நெருப்பில் விழுந்த அடுத்த நொடியே நரி தப்பித்து ஓடிவிட்டது.
தாய்க் காகத்தால் தன் குஞ்சை அடையாளம் காணமுடியவில்லை. காலங்கள் உருண்டோடின. குஞ்சாக இருந்த அது, பெட்டைக் காகமாக வளர்ந்து முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தது. அதன் குஞ்சுகள் சாம்பல் நிறத்தில் இருந்தன. அதற்குப் பிறந்த குஞ்சுகள் கருஞ்சாம்பல் நிறத்திலும் நாளடைவில் அதற்குப் பிறகு பிறந்த குஞ்சுகள் முழுமையாக கருமை நிறத்திலும் மாறின.
இன்று கூட சில காக்கைகளின் கழுத்துப் பகுதி சாம்பல் நிறத்தில் இருப்பதைக் காணலாம். தன் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டதால், காகம் கருப்பான கதை இதுதான்! ய்
நன்றி-ந.லெட்சுமி சிறுவர்மணி
"இது ஏன் இப்படி?', "இதைச் செய்தது யார்?' என்று தன் பெற்றோரிடம் கேட்டுக் கொண்டே இருந்தது.
அது ஒருநாள் மரத்தை விட்டுக் கீழே இறங்கி வந்ததும், அதை ஒரு பூனை தாவிப் பிடிக்க முயன்றது. இதனால் அஞ்சி நடுங்கிய காக்கைக் குஞ்சு மீண்டும் தன் கூட்டிற்கே சென்று, அமர்ந்து கொண்டது. அதன் தாய் அதனிடம், ""அவை விலங்குகள்! நம்மை விட வலிமை மிகுந்தவை! நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!'' என்றது.
உடனே காக்கைக் குஞ்சு, ""வலிமை என்றால் என்ன அம்மா?'' என்றது.
""எப்படிப்பட்ட சூழலையும் சமாளித்து உயிர் வாழும் திறனே வலிமை எனப்படும்...'' என்றது.
இப்பொழுது அந்த காக்கைக் குஞ்சிற்கு உலகிலேயே வலிமை மிகுந்த உயிரினத்தைக் காண ஆவல் பிறந்தது. அதைப் பூனையிடமே கேட்டுவிடுவோம்... என்று நினைத்துக் கொண்டது.
மறுநாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த காக்கைக் குஞ்சு பூனையிடம் சென்று, ""அண்ணே! உன்னைவிட வலிமை மிகுந்தவர் யார்?'' என்று கேட்டது.
அதற்குப் பூனை, ""என்னைவிட வலிமை மிகுந்தவன் நாய்'' என்றது.
காக்கைக் குஞ்சு உடனே நாயிடம் சென்று, ""உன்னைவிட வலிமை மிகுந்தவர் யார்?'' என்றது.
நாயோ தன்னைவிட வலிமை மிகுந்தது காளை மாடு என்றது.
காளை மாட்டிடம் சென்று கேட்க அது "யானை' என்றது. யானையிடம் சென்று கேட்டால் அது சிங்கமும் புலியும் தன்னைவிட வலிமை மிகுந்தவை என்று கூறின.
எனவே அவற்றைப் பார்க்க உடனடியாகக் காட்டுக்குச் சென்றது அந்த காக்கைக் குஞ்சு. அங்கு சிங்கத்தின் குகை வாயிலில் ஒரு சிங்கம் அம்பு பாய்ந்து இறந்துகிடந்தது. அதைச் சுற்றிலும் சில சிங்கங்கள் நின்று கொண்டிருந்தன. சற்றுத் தொலைவில் புலி ஒன்று வலையில் மாட்டித் தவித்துக் கொண்டிருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு புலியின் அருகில் சென்ற காக்கை குஞ்சு, ""அண்ணே, வலிமை மிகுந்த உங்களை வலையில் மாட்டிவிட்டவர், உங்களைவிட வலிமை மிகுந்தவராகத்தான் இருக்கவேண்டும். தயவுசெய்து அவர் யார் என்று என்னிடம் கூறுங்கள்?'' என்று கேட்டது.
கோபத்தில் உறுமிய புலி, ""இரண்டு கால்களையும் இரண்டு கைகளையும் உடைய மனிதன்தான் அவன்!'' என்றது.
""மனிதனின் வலிமை அவன் உடலில் இல்லை! அவன் அறிவில்தான் உள்ளது! தன்னால் செல்லமுடியாத இடங்களில் இருக்கும் பகைவர்களை வெல்ல ஆயுதங்களைப் பயன்படுத்துவான். எமது விலங்கினத்தையே "வீட்டு விலங்குகள்' "காட்டு விலங்குகள்' என இரு பிரிவாகப் பிரித்துவிட்டான். மனிதனின் அறிவாலும் ஆற்றலாலும் செய்யமுடியாத காரியம் என்று எதுவும் இல்லை. தன் அறிவைப் பயன்படுத்தியே அங்கிருக்கும் சிங்கத்தை வீழ்த்தியுள்ளான். என்னையும் சிறை பிடித்துவிட்டான்..'' என்று கூறியது.
உடனே அந்த காக்கைக் குஞ்சிற்குத் தானும் மனிதன் போல் அறிவு பெற வேண்டும் என்ற ஆசை பிறந்தது. சற்று நேரத்தில் அங்கு ஒரு நரி வந்து சேர்ந்தது. காக்கைக் குஞ்சு அதனிடம் சென்று, ""அண்ணே! மனிதன் தன் அறிவை எங்கு வைத்திருப்பான் என்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டது.
அதற்கு நரி, ""அதைத் தெரிந்து கொண்டு நீ என்ன செய்யப்போகிறாய்?'' என்றது.
""அவனிடம் உள்ள அறிவை நான் எடுத்துக் கொள்வேன். இதனால் நான் உலகிலேயே மிகவும் வலிமை மிகுந்த உயிரினமாவேன்! என் இனத்தைக் காப்பேன்!'' என்றது.
""நீ அளவுக்கு மீறி ஆசைப்படுகிறாய். இதனால் உனக்குத் துன்பமே நேரும்!''
என்றது. இதை சற்றும் பொருட்படுத்தாத காக்கைக் குஞ்சு, ""அண்ணே! என்னை எப்படியாவது மனிதர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்!'' என்று கெஞ்சியது.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நரி, ""மனிதர்கள் என்னைக் கண்டால் கொன்றுவிடுவர். உன்னை மிக எளிதாக விரட்டிவிடுவர்...'' என்றது.
""அப்படியென்றால் மனிதனின் அறிவை நான் எப்படிப் பார்ப்பது? அது எப்படி இருக்கும்?'' என்றது.
""எனக்குத் தெரிந்த வரையில் பகலில் மனிதன் தன் அறிவைத் தன்னுடன் எடுத்துச் சென்றுவிடுவான். ஆனால் இரவில் தூங்கும் பொழுது அதை எங்கோ ஓரிடத்தில் யாரும் எடுக்கமுடியாதபடி ஒளித்துவைத்துவிடுவான். வேண்டுமென்றால் உன்னை அருகில் உள்ள கரும்புத் தோட்டத்திற்கு இன்று இரவு அழைத்துச் செல்கிறேன். நாம் இருவரும் ஒளிந்து நின்றுகொண்டு அங்கு காவலிருக்கும் மனிதர்களைக் கண்காணிப்போம்!'' என்று கூறியது நரி.
அதன்படியே அங்கு ஒளிந்து சென்று இருவரும் கண்காணிக்கத் தொடங்கினர். அங்கு காவலில் இருந்த மனிதர்கள் இரவு கடும் குளிராக இருந்ததால் ஓரிடத்தில் நெருப்பு மூட்டிக் குளிர் காய்வதற்காக காய்ந்த சருகுகளையும் சுள்ளிகளையும் குவித்துவைத்தனர். ஒரு மனிதன் இரு கட்டைகளை உரச அதிலிருந்து தீப்பொறி தோன்றவே காய்ந்த சருகுகள் உடனே பற்றி எரியத் தொடங்கின.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த நரி, ""அதோ வெளிச்சமாகத் தெரியும் அந்த ஒளியே மனிதனின் அறிவாகும்!'' என்றது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த காக்கைக் குஞ்சு எப்படியாவது அந்த அறிவைத் தன் கூட்டத்தாரிடம் கொடுக்க எண்ணியது. பறந்து சென்று எரியும் நெருப்பில் வீழ்ந்தது. திடீரென்று காக்கைக் குஞ்சு ஒன்று பறந்து வந்து நெருப்பில் விழுந்ததைக் கண்ட மனிதர்கள், அதை நெருப்பிலிருந்து எடுத்து தண்ணீரில் போட்டனர்.
இதற்குள் அதன் நீண்ட தோகை போன்ற இறகுகள் முழுவதுமாக எரிந்துவிட்டிருந்தன. உடலெங்கும் தீக்காயம் ஏற்பட்டு இருந்தது. வெண்மை நிறத்தில் இருந்த காக்கைக் குஞ்சு கருஞ்சாம்பல் நிறத்தில் மாறி இருந்தது. காக்கைக் குஞ்சு நெருப்பில் விழுந்த அடுத்த நொடியே நரி தப்பித்து ஓடிவிட்டது.
தாய்க் காகத்தால் தன் குஞ்சை அடையாளம் காணமுடியவில்லை. காலங்கள் உருண்டோடின. குஞ்சாக இருந்த அது, பெட்டைக் காகமாக வளர்ந்து முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தது. அதன் குஞ்சுகள் சாம்பல் நிறத்தில் இருந்தன. அதற்குப் பிறந்த குஞ்சுகள் கருஞ்சாம்பல் நிறத்திலும் நாளடைவில் அதற்குப் பிறகு பிறந்த குஞ்சுகள் முழுமையாக கருமை நிறத்திலும் மாறின.
இன்று கூட சில காக்கைகளின் கழுத்துப் பகுதி சாம்பல் நிறத்தில் இருப்பதைக் காணலாம். தன் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டதால், காகம் கருப்பான கதை இதுதான்! ய்
நன்றி-ந.லெட்சுமி சிறுவர்மணி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சவுக்கியமே கதை நன்று
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|