புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வள்ளலார் போட்ட பூட்டு! Poll_c10வள்ளலார் போட்ட பூட்டு! Poll_m10வள்ளலார் போட்ட பூட்டு! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
வள்ளலார் போட்ட பூட்டு! Poll_c10வள்ளலார் போட்ட பூட்டு! Poll_m10வள்ளலார் போட்ட பூட்டு! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வள்ளலார் போட்ட பூட்டு! Poll_c10வள்ளலார் போட்ட பூட்டு! Poll_m10வள்ளலார் போட்ட பூட்டு! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
வள்ளலார் போட்ட பூட்டு! Poll_c10வள்ளலார் போட்ட பூட்டு! Poll_m10வள்ளலார் போட்ட பூட்டு! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளலார் போட்ட பூட்டு! Poll_c10வள்ளலார் போட்ட பூட்டு! Poll_m10வள்ளலார் போட்ட பூட்டு! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
வள்ளலார் போட்ட பூட்டு! Poll_c10வள்ளலார் போட்ட பூட்டு! Poll_m10வள்ளலார் போட்ட பூட்டு! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வள்ளலார் போட்ட பூட்டு! Poll_c10வள்ளலார் போட்ட பூட்டு! Poll_m10வள்ளலார் போட்ட பூட்டு! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
வள்ளலார் போட்ட பூட்டு! Poll_c10வள்ளலார் போட்ட பூட்டு! Poll_m10வள்ளலார் போட்ட பூட்டு! Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளலார் போட்ட பூட்டு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Sep 29, 2013 7:27 am

வள்ளலார் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் மகன் புருஷோத்தமன் தன் தந்தையிடம் கோபித்துக்கொண்டு மதுரை ஞானசம்பந்தர் சுவாமிகள் மடத்திற்குச் சென்றுவிட்டார். அந்த மடாதிபதிக்கு ராமலிங்க அடிகள் ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தைப் படித்த அங்கிருந்த புலவர்கள் சிலர், "இராமலிங்க அடிகளை பெரிய வித்துவான் என்று சொல்கிறார்கள்; ஆனால் கடிதம் பாமரத்தன்மையாக உள்ளது, அவருக்கு இலக்கணப் புலமை கிடையாது' என்று கூறினர். அதன்பொருட்டு இராமலிங்க அடிகள் மீண்டும் சன்னிதானத்திற்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். ஆனால் அந்தப் புலவர்களால் அக்கடிதத்தைப் படித்து புரிந்துகொள்ள இயலவில்லை. வள்ளலாரின் இலக்கண நுண்மான் நுழைபுலத்துக்கு இக்கடிதமே மிகச்சிறந்த சான்றாகத் திகழ்கிறது. இது "வள்ளலார் கடிதங்கள்' (பக்.100) என்ற நூலில் "இலக்கண நுண்மான் இயல்' என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது. இதுவரை இதற்கு சரியான விளக்க உரை இல்லை என்பதால், இயன்ற அளவு விளக்க உரை எழுதியுள்ளேன்.

திருவருட்பிரகாச வள்ளலார் எழுதிய இலக்கணக் கடிதத்தின் விளக்கம் இதுதான்:

இயல்வகையான் இன்னவென் றவற்றின் பின்மொழி: இயல்புடைய மூவர். 1.பிரம்மசரிய ஒழுக்கத்தான், 2.மனைவி வழிபடத் தவம் செய்பவன், 3. முற்றும் துறந்த யோக ஒழுக்கத்தான். (யோக)

மதிக்கு முன்மொழி: மதி - திங்கள், முன்மொழி - ஞாயிறு (யோக ஞாயிறு)

மறைக்கு முதலீறு: மறை- ஆகமம், முதலீறு - முதலாகவும் ஈறாகவும் விளங்கும் ஆகமவடிவம்.

விளங்க முடிப்பதாய பின்மொழி: விளங்க-விளங்குமாறு, முடிப்பது -சூடியது, பிறைமதி பின்மொழி (மதி)

அடைசார் முன்மொழி: அடை-சொல்லைச் சிறப்பிக்கும், சொல்-வளர்திரு, முன்மொழி- வளர் (மதிவளர்)

ஞாங்கர் விளங்கிய ஞானிகட்கு: ஞாங்கர் - உயர்வு (உயர்ந்து விளங்கும் ஞானிகட்கு)

பொய்யற்கு எதிர்சார்புற்ற: பொய்யன்-இராவணன்(கு) எதிர்சார்புற்ற - எதிர்ப்பக்கம் இருந்த இராம(ன்)

மூலி ஒன்று: மூலிகை ஒன்று சாதிலிங்கம் - வேறுபெயர் லிங்கம்-(இராமலிங்கம்)

வளைந்து வணக்கம் செய்த: தலையைத் தாழ்த்தி வணக்கம் செய்து

ககனநீர் எழில் என்றும்: ககனம் - வானம், நீர்-ஆறு, வான்கங்கை, எழில்-உயர்வு (வான் கங்கை அளவு உயர்வு), உயர்வு - உத்தரம், உத்தரம்-மறுமொழி

வான்வழங்கு பண்ணிகாரம் என்றும்: வான்-விண், பண்ணிகாரம் - அப்பம் (விண்ணப்பம்)

நாகச்சுட்டு மீன் என்றும்: நாகம் - மலை, வரை, சுட்டு-அது, இது, உது, மீன் - மகரம் (ம்) வரை+உது+ம் = வரையுதும்

அண்மைச் சுட்டடுத்த ஏழாவதன் பொருண்மை: அண்மைச்சுட்டு - இ, ஏழாவதன் -ஏழாம் வேற்றுமையின், பொருண்மை - பொருள், இடம். இ+இடம்= இவ்விடம்

உம்மை அடுத்த பல்லோர் வினாப்பெயர்: பல்லோர் வினாப்பெயர்-யாவர், உம்மை அடுத்த(து) யாவர்+உம்= யாவரும்

குறிஞ்சி இறைச்சிப் பொருள் ஒன்றனொடு புணர்ப்ப: குறிஞ்சி நிலத்தின் கருப்பொருள் பதினான்கினுள் ஒன்று கிளி. கிளிக்கு வேறு ஒரு பெயர் "சுகம்'

சேய்மைச் சுட்டடுத்த அத்திறத்து இயல் யாது?: சேம்மைச் சுட்டு - அ, அத்திறத்து-அ+அத்திறத்து=அவத்திறத்து. அவ-அப்பால், அவ்விடம். திறத்து-சுற்றத்தின், இயல் -தன்மை (யாது) அவ்விடத்தில் உள்ள சுற்றத்தின் நலம் எவ்வாறு உள்ளது?

இரண்டன் உருபொடு புணர்ந்த தன்மைப் பன்மை: இரண்டன் உருபு - ஐ (சேர்ந்த), தன்மைப் பன்மை -எம், எம்+ஐ= எம்மை

ஆறாவதன் பொருட்டு ஆக்கினார்க்கு: ஆறு-சமயம், ஆவது-நல்வழி(யில்), ஆக்கினார் -செலுத்தியவர் கருங்குழி மணியகாரரான ரெட்டியாருக்கு, உய்த்த - கிடைத்த

கற்பியல் அதிகரிப்பின் வரும்: கற்பியல்- இல்லறம், அதிகரிப்பு - அதிகாரம் புருஷ(ன்)

தலைமகன் பெயர்: தலைமகன் - உத்தமன் -புருஷோத்தமன்

ஊகக் கழிவிலை: ஊகம் - மன மயக்கம், கழிவில் -மிகுதியில், ஐ-தந்தை(யை)

இரண்டினோடு இரண்டிரண்டு: இரண்டு ல இரண்டு ல இரண்டு = எட்டு-விலகி (னன்)

பெயரவும் - மீண்டும்

மகரவீற்று முதனிலைத் தனிவினை: - வம் (வம்-வா)

செயவென் வாய்ப்பாட்டு வினை எச்சத்தனவாக: வர (வந்தால்)

கலம்பகச் செய்யுள் உறுப்பாக: கலம்பகச் செய்யுள் உறுப்புகள் பதினெட்டினுள் ஒன்று களி - மகிழ்ச்சி +ஆல் (மகிழ்ச்சியால்) சிறத்தும் - மிகுவோம்.

இக்கடிதத்தில் வள்ளலார் சொல்ல வந்த செய்திகளைக் காண்போம். "யோகஞாயிறு, ஆகமவடிவம், மதிவளர் உயர்ந்துவிளங்கும் ஞானிகட்கு, இராமலிங்கம் மறுமொழி விண்ணப்பம் வரையுதும். இவ்விடம் யாவரும் சுகம். அவ்விடத்தில் உள்ள சுற்றத்தின் நலம் எவ்வாறு உள்ளது? எம்மை நல்வழியில் செலுத்திய கருங்குழி மணியகாரரான ரெட்டியாருக்குக் கிடைத்த புருஷோத்தமன், தந்தையை விலகினன். மீண்டும் வந்தால் மகிழ்ச்சியால் மிகுவோம். ஓர் விசேடணத்து ஆ.வேலையன் (ஆறுமுகமுதலியார் மகன் வேலாயுத முதலியார்) பின்னர் எழுதிமுடித்தது. சில காரியங்களுக்காக சிதம்பரம், மருதூர் செல்ல எண்ணினோம். விரும்பியவற்றை விரும்பியபடியே அடைக. மிகுதியான மாறுபாட்டை (கணைச்சலம்-கணை-மிகுதி; சலம்-மாறுபாடு) நீங்கினோம். மணிமுடியைச் சூட்டிய இராமலிங்க வள்ளலார் உத்தரவின்படி வேலாயுத முதலியார் எழுதியது. இவ்வாறு அக்கடிதம் அமைகிறது.
நன்றி-தினமணி - கா.மு. சிதம்பரம்




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக