புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
   ஈஎன இரத்தல்.... Poll_c10   ஈஎன இரத்தல்.... Poll_m10   ஈஎன இரத்தல்.... Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
   ஈஎன இரத்தல்.... Poll_c10   ஈஎன இரத்தல்.... Poll_m10   ஈஎன இரத்தல்.... Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
   ஈஎன இரத்தல்.... Poll_c10   ஈஎன இரத்தல்.... Poll_m10   ஈஎன இரத்தல்.... Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
   ஈஎன இரத்தல்.... Poll_c10   ஈஎன இரத்தல்.... Poll_m10   ஈஎன இரத்தல்.... Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
   ஈஎன இரத்தல்.... Poll_c10   ஈஎன இரத்தல்.... Poll_m10   ஈஎன இரத்தல்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
   ஈஎன இரத்தல்.... Poll_c10   ஈஎன இரத்தல்.... Poll_m10   ஈஎன இரத்தல்.... Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
   ஈஎன இரத்தல்.... Poll_c10   ஈஎன இரத்தல்.... Poll_m10   ஈஎன இரத்தல்.... Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
   ஈஎன இரத்தல்.... Poll_c10   ஈஎன இரத்தல்.... Poll_m10   ஈஎன இரத்தல்.... Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
   ஈஎன இரத்தல்.... Poll_c10   ஈஎன இரத்தல்.... Poll_m10   ஈஎன இரத்தல்.... Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
   ஈஎன இரத்தல்.... Poll_c10   ஈஎன இரத்தல்.... Poll_m10   ஈஎன இரத்தல்.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈஎன இரத்தல்....


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Sat Aug 03, 2013 8:31 am



நண்பர்களே,
நான் ரொம்ப நாட்களாகவே இவைகளைச் சொல்லவேண்டும் என நினைத்ததுண்டு...
ஆனால் எத்தனை பேர் விரும்புவர் என்பதும் யாருக்காக இவை சொல்லப்பட நினைக்கிறோனோ அவர்களை இது
சேராது என்ற நிதர்சனமும் என்னை இவ்வளவு காலமும் கட்டிப்போட்டது...இருந்தும் இப்போது இஃது...
படிப்பவர்கள் அமைதியாய் சிந்திக்க வேண்டும் எனும் வேண்டுகோளை மட்டும் துவக்கத்திலேயே சொல்லிக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் இன்றைய நிலை என்ன...முன்னாட்களில் எவ்விதம்...

இன்றைக்கு நம்மில் பலர் நியாயமன உழைப்புக்கு அஞ்சுபவர்களாகவே ஆகி விட்டோம்.முன்னர் எல்லாம் சில மேடைகளிலாவது ஜப்பானைப் பார் , ஜெர்மனியைப் பார் , அங்கெல்லாம் மக்கள் எவ்வாறு தேனீக்கள் போல் சுறுசுறுவென உழைத்து முன்னேறுகின்றனர் ; நாம் அப்படியெல்லாம் முன்னேற வேண்டாமா !? என்றெல்லாம் சொல்லுவர்.ஆனால், இப்போதோ...ம்ஹூம் ...அந்தப்பேச்சுகளையேக் காணொம்! மாறாக அதைத் தருகிறோம் , இதைத் தருகிறோம் ...இலவசமாய்...என்பதுதான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பேச்சுகள்...மக்களும் அவற்றையெல்லாம் ஏற்கும் மனநிலைக்கும் தள்ளப்பட்டுவிட்டனர் என்றே நினைக்கவும் தோன்றுகிறது...பொதுவில் நாம் கையேந்தி நிற்பவர்களாக ஆக்கப்பட்டு விட்டோம்...
ஆம்...நண்பர்களே, நாம் பிச்சைக்காரர்கள் ஆக்கப்பட்டிருக்கிறோம்...அறிந்தோ , அறியாமலோ...

ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் , நம் பாட்டன்களுக்கு பாட்டன்மார் எப்படியிருந்தனர்? அவர்களது சிந்தனையோட்டம் எப்படியிருந்தது ? தினசரியான , நடைமுறை வாழ்க்கைப் பற்றிய அவர்கள் எண்ணம் யாது ? - சற்று பின்னோக்குவோமா...

இரப்பது பற்றி , அதாவது தன் தேவைக்கு அடுத்தவர் தயவை எதிர்பார்ப்பதைப்பற்றி , அவர்கள் தீர்க்கமாகவே இருந்தனர் என்பது தெற்றென விளங்குகிறது ! இரப்பது என்றும் இழிவு என்றுதான் அவர்கள் நினைத்தனர் ! மேலும் இவ்வெண்ணப்போக்கைக் கட்டிக்காக்கவும் சில பேராசான்கள் முனைப்பும் காட்டியிருக்கின்றனர் !

ஏதோ சில நிலைகளில் கையேந்தல்/இரத்தல் சரியே என தமிழ் மக்கள் மூலைச்சலவை செய்யப்பட ஆரம்பித்த நேரத்திலேயே வள்ளுவன் வெகுண்டெழுகிறான் ; இரத்தல் எந்நிலையிலும் கூடாது என ஓங்கி அறிவிக்கிறான்...
இப்படிச் சொல்கிறான் அவன்:


" நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
"

எப்போதும் யாரிடமும் எதுவும் வாங்காதே ; ஆனால் , கொடுப்பதெனில் நன்றென்கிறான்...
என்னாளும் இரவாதே ; இலவசங்களைப் பெறாதே என்கிறான் வள்ளுவன் ! ஆனால் , அவன் வழி வந்தவர் எனச்சொல்லிக்கொள்வோரோ, அவன் சிலை வைத்தால் மட்டும் போதும் , அவன் சொல்படி நாமும் மக்களும் நடக்க வேண்டியதில்லை என்றுதான் இன்று அரிசி இனாம் , தொலைக்காட்சி இனாம் , மடிக்கணிணி இனாம் என்றெல்லாம் சொல்லி மக்களையும் ஏற்கவைத்து இந்நாட்டை ...என்னவென்று சொல்வது , அன்பர்களே ...நீங்களே யூகித்துக் கொள்ள வேண்டியதுதான்....இந்நேரத்தில் இதையும் சொல்லத்தான் வேண்டும்...

'தொல்காப்பியம் ' - இதையும் விட்டு வைக்கவில்லை இவர்கள்...இதற்கும் உரை எழுதப்போய் விட்டார்கள்...
I always consider this as the greatest ever insult on Tamil, Tamils and the great work . To write comments and notes on
such an all pervasive - on every aspect of language - masterpiece , well , you have to be a Philologist , first and last ; you have to be an Etymologist of the first order - par excellence ; and above all you have to be a Grammarian , in and out ! Being none of these , how one
can tolerate this ! Whenever I think of this I'm always reminded of this too...' Fools rush in where angels fear to tread ' !


இதில் வேடிக்கை என்னவெனில் இதிலும் நாற்பது லட்சம் பார்த்து விட்டனர் ; இருவது லட்சம் தனக்காம் - மீதம் தன் ஆளுகைக்குள்ள ஒரு அறக்கட்டளைக்காம்...இளிச்சவாயர்கள் தலையில் யார்தான் மிளகாய் அரைக்கமாட்டார்...


போய்த்தொலைகிறது...ஈவதும் ஏற்றலும் பற்றி , ஓர் சங்கத்தமிழ் பெரும்புலவன் , ' கழைதின் யானையார் ' என்பார் என்ன சொல்கிறார் எனப்பார்ப்போமே...புறநானூற்றில் 204 - வதுப் பாடல் இவரதுதான்.
' கொடு என யாசிப்பது இழிவே ; நான் தரமாட்டேன் ; எனக்கு எதுவும் எப்போதும் கொடுத்துப் பழக்கமில்லை எனச்சொல்வது அதனினும் மிக இழிவானது . இதற்கு மாறுபட்ட நிலையில் , இந்தா , பெற்றுக்கொள் என்பது உயர்வே ; ஆனாலும் , அதனிலும் உயர்ந்த பண்பாடு, சீர்மையான மனப்பக்குவம் - தான் முயற்சித்து , உழைத்துக் கிடைக்காத ஒன்றை வேண்டாம் என மறுப்பது ...'மிகக் கூர்மையுடன் யாத்துள்ளார் இக்கவிதையினை...
அதன் முத்தான முதல் நான்கு வரிகள் இவைதான்...

"ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்,
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
"

இப்படிச் செல்லும் அவர் பாடலில் இன்றளவும் - ஏன் , என்றைக்குமேதான் - நின்று நிலைக்கும் சில யதார்த்தங்களையும் எளிதில் மனதில் தைக்கும்படி உரைக்கிறார் ; தண்ணீர்த் தாகம் எடுப்பின் ஒலியும் , நுரையும் பொங்கி , தெளிவான நீர்ப்பரப்பைக் கொண்ட கடல்நீரை யாரும் பருகுவதில்லை ; அதேவேளையில் , ஆறாம் அறிவற்ற விலங்குகள் கூட , சேறு நிறைந்ததாயினும் உண்ணுதற்குரிய சிறிய நீர்நிலைகளை அணுகி அடிக்கடி அந்நீரைப்பருகுவதால் அக்குளங்களில் உள்ள வழித்தடங்கள் பலவே ; அதே போன்றே , நாம் செய்த பணிகளுக்கு உதவியைப் பெறினும் அதனையும் செல்வம் நிறைந்து பண்பு குறைவானவர்களிடம் பெறாது,
செல்வம் சிறிதே பெற்றவராயினும் குணத்தில் , பண்பில் , ஒழுக்கத்தில் சிறந்தோரிடமிருந்தேப் பெற வேண்டும் எனச் சொல்கிறார். இன்னும் பல அந்தப்பாடலில் இருப்பினும் இதுவரைப் போதும் ...

முழுப்பாடல் கீழே :


"ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்,
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர்வேட் டோரே;
ஆவும் மாவும் சென்றுஉணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்,
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே
."

பாடியவர்: கழைதின் யானையார்.

இமிழ் - ஒலிக்கின்ற
நீர் மருங்கின் - நீர் நிலையிடத்தில்
அதர் - வழி
புள் - பறவை
புலவேன் - வெறுக்க மாட்டென்


அன்பன்,
சுந்தரம்


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Aug 03, 2013 10:34 am

உங்கள் சொந்த பதிவு அருமை நண்பரே

பிச்சை எடுப்பதும் தவறு பிச்சை போடுவதும் தவறு.ஒருகாலத்தில் 1ருபாய் பிச்சை போட்ட நாம் இன்று 10ருபாய் 20ருபாய் என பிச்சை போட ஆரம்பித்து விட்டோம். பிச்சையிடுவதை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் இனாம் என்பதை ஏற்கதான் செய்வர்.

இப்படி நாம் மாறி போனதற்கு அரசியல்வாதிகளே காரணம்.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Sat Aug 03, 2013 7:40 pm

நண்பரே,
நான் பிச்சையைப் பற்றியே சொல்லவில்லை...
நமது வாக்குகளுக்கு லஞ்சமாக கொடுப்பது நம்மை பிச்சைக்காரர்களாக ஆக்கி விடுகிறது
என்ற வருத்தந்தான் ...நாமும் அதன் முழு வீச்சையும் தாக்கத்தையும் உணராதிருப்பதுதான்...
நன்றி,
சுந்தரம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக