புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆடி மாதத்து ஆதிரை விழா! Poll_c10ஆடி மாதத்து ஆதிரை விழா! Poll_m10ஆடி மாதத்து ஆதிரை விழா! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஆடி மாதத்து ஆதிரை விழா! Poll_c10ஆடி மாதத்து ஆதிரை விழா! Poll_m10ஆடி மாதத்து ஆதிரை விழா! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஆடி மாதத்து ஆதிரை விழா! Poll_c10ஆடி மாதத்து ஆதிரை விழா! Poll_m10ஆடி மாதத்து ஆதிரை விழா! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஆடி மாதத்து ஆதிரை விழா! Poll_c10ஆடி மாதத்து ஆதிரை விழா! Poll_m10ஆடி மாதத்து ஆதிரை விழா! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆடி மாதத்து ஆதிரை விழா! Poll_c10ஆடி மாதத்து ஆதிரை விழா! Poll_m10ஆடி மாதத்து ஆதிரை விழா! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஆடி மாதத்து ஆதிரை விழா! Poll_c10ஆடி மாதத்து ஆதிரை விழா! Poll_m10ஆடி மாதத்து ஆதிரை விழா! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஆடி மாதத்து ஆதிரை விழா! Poll_c10ஆடி மாதத்து ஆதிரை விழா! Poll_m10ஆடி மாதத்து ஆதிரை விழா! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஆடி மாதத்து ஆதிரை விழா! Poll_c10ஆடி மாதத்து ஆதிரை விழா! Poll_m10ஆடி மாதத்து ஆதிரை விழா! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடி மாதத்து ஆதிரை விழா!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jul 28, 2013 10:19 am

ஆதிரையான் என்பது சிவபெருமானின் திருநாமம். அவர்க்குரிய திருநாள் மார்கழி மாதத்துத் திருவாதிரை நாளாகும். அதனால்தான் தில்லை போன்ற திருத்தலங்களில் ஆதிரை நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பெறுகின்றது. தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் காணப்பெறும் கல்வெட்டுச் சாசனங்களில் மார்கழி மாதத்து ஆதிரை நாள் தமிழ்நாட்டு மன்னர்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பெற்ற திருநாளாக குறிக்கப்பெற்றுள்ளன.

திருநாவுக்கரசு பெருமானார் திருவாரூரில் தான் கண்ட ஆதிரை நாளின் சிறப்புக்களை "முத்து விதானம்' எனத் தொடங்கும் திருவாதிரைத் திருப்பதிகத்தின் பத்துப் பாடல்களில் "ஆதிரைநாளால் அது வண்ணம்' என முடியும் சொற்றொடர்களோடு குறிப்பிட்டு தான் திருவாரூரில் கண்ட அவ்விழா பற்றிய செய்திகளைப் பதிவு செய்துள்ளார். திருவாரூரில் நிகழ்ந்த ஆதிரை விழா அளப்பரிய சிறப்புடைய விழாவாகும்.

அப்பர் சுவாமிகளே மார்கழி விழாவைக் கண்டு களித்த ஊர் திருவாரூர் என்ற காரணத்தால்தானோ என்னவோ மாமன்னன் இராஜேந்திர சோழன் தான் பிறந்த ஆடித் திருவாதிரை நாள் விழாவையும், தன் தந்தை (அய்யன்) இராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நாளையும் ஆரூர் இறைவனின் திருநாளான மார்கழி ஆதிரை நாளையும் மிகச் சிறப்பாக அக்கோயிலில் கொண்டாட ஏற்பாடுகளைச் செய்தான். அங்கு அவன் வெட்டுவித்த கல்வெட்டுச் சாசனம் இம்மூன்று விழாக்கள் பற்றி தெளிவுபட விவரிக்கின்றது:

""பூர்வ தேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பர கேசரிவர்மன்'' என்று கல்வெட்டுக்கள் புகழ்ந்து கூறும் அரசனாகிய இராஜேந்திர சோழன் மாமன்னன் இராஜராஜனுக்கும், அவன் தேவி வானவன்மாதேவிக்கும் ஆடி மாதத்து ஆதிரை நாளில் திருமகனாகப் பிறந்தவன். மதுராந்தகன் என்பது இவனது இயற்பெயராகும். சோழ அரசர்கள் மாறி மாறி புனைந்து கொள்ளும் "ராஜகேசரி', "பரகேசரி' என்ற பட்டப் பெயர்களில் ஒன்றான "பரகேசரி' என்பதனை தன் பட்டமாகச் சூடிக் கொண்டான். கி.பி. 1012-இல் இராஜராஜனால் இளவரசாக நியமனம் பெற்றவன், கி.பி.1014-இல் தன் தந்தையின் மரணத்திற்குப் பின்பு சோழப் பேரரசனாக "இராஜேந்திரசோழன்' எனும் திருநாமத்தோடு அரியணையில் அமர்ந்தான்.

தான் பேரரசனாக அரியணையில் அமர்ந்த நான்காம் ஆண்டிலேயே (கி.பி.1018-இல்) தன் மகன் முதலாம் இராஜாதிராஜனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி தன்னோடு இணைத்துக் கொண்டு, கி.பி. 1044-ஆம் ஆண்டு வரை முப்பதாண்டுக்காலம் பரந்துபட்ட சோழப் பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான்.

தன் வீரத்தைக் காட்டி நிற்கும் பட்டப்பெயரான "கங்கை கொண்டான்' என்ற பெயரினை நினைவூட்டும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரைக் கொள்ளிடத்திற்கு வடபால் தோற்றுவித்தான். அங்குக் கோட்டை, கொத்தளங்களையும், அரண்மனையையும் அமைத்ததோடு, கங்கை கொண்ட சோழீச்சுரம் எனும் திருக்கோயிலையும் எடுப்பித்தான். வடபுலத்து அரசர்களை வென்று கங்கையிலிருந்து கொணர்ந்த புனித நீரைத்தான் அந்நகரில் தோற்றுவித்த "சோழகங்கம்' எனும் ஏரியில் விடுத்து, தன் வெற்றிக்கு "ஜலஸ்தம்பம்' எடுத்தான். பொதுவாக வெற்றியைக் கொண்டாட ஜெயஸ்தம்பம் - வெற்றித்தூண் நிறுவுவது வழக்கம். ஆனால் இப்பெருவேந்தனோ ஜலஸ்தம்பம் எடுத்ததாகக் கல்வெட்டில் கூறிக்கொள்கிறான்.

தமிழிசைக்கு செய்த தொண்டு: தமிழின்பாலும், தமிழிசையின்பாலும் தணியாத தாகமுடையவனாகவே வாழ்ந்தான். பண்டித சோழன் என்ற சிறப்புப் பெயரும் பெற்றான். ஒருமுறை பழையாறை அரண்மனையில் இப்பேரரசன் உணவு அருந்திக் கொண்டிருந்தான். அவ்வேளையில் அங்குவந்த அவனது போர்த்தளபதி இராசராச பிரம்மராயன் என்பவன் மன்னனிடம் ஒரு விண்ணப்பம் செய்தான். அந்த விண்ணப்பம் போர் பற்றியதோ அல்லது ஆட்சி பற்றியதோ அல்ல. திருக்கற்குடி (திருச்சிராப்பள்ளி - உய்யகொண்டான் திருமலை) சிவாலயத்தில் மூவர் தேவாரம் பாடும் ஓதுவார்களுக்காக நிவந்தம் வேண்டி விண்ணப்பம் செய்தான். உணவு அருந்திக் கொண்டே காது கொடுத்துக் கேட்ட இராஜேந்திர சோழன் உளம் மகிழ்ந்து தமிழ்பாடும் இசைவாணர்களுக்காக திருக்கற்குடியில் நிலமளித்து ஆணையிட்டான். அப்படியே கல்லிலும் எழுதச் செய்தான். நிலம் அளித்தவனோ கங்கையும் கடாரமும் வென்ற சோழப் பேரரசன். தமிழ் பாடுபவர்களுக்காக விண்ணப்பித்தவனோ பல போர்களைக் கண்ட சோழர் தளபதி. அதுமட்டுமன்று, அத்தளபதி பின்னாளில் மேலைச் சாளுக்கியரோடு நிகழ்ந்த போரில் வீரமரணம் அடைந்தவன். அவனுக்காகக் கீழைச் சாளுக்கிய மன்னன் இராஜராஜ நரேந்திரன் அந்த இடத்திலேயே சமாதிக் கோயிலும் எடுத்தான். மன்னனும், தளபதியும் தமிழுக்காகவும் தமிழிசைக்காகவும் காட்டிய ஈடுபாட்டைத்தான் இந்த வரலாறு நமக்கு உணர்த்து
கின்றது.

"சிவபாதசேகரன்' என இராஜராஜனும் "சிவசரண சேகரன்' என இராஜேந்திரனும் பட்டங்கள் சூடிக் கொண்டனர். சிறந்த சைவனாக இராஜேந்திர சோழன் விளங்கிய போதும், மற்ற சமயத்தவர்களிடத்தில் நேசமுடன் திகழ்ந்தான். நாகப்பட்டினத்தில் கடாரத்து அரசனால் எடுக்கப்பட்ட பெüத்த பள்ளிக்கு பள்ளிச் சந்தமாக (கொடை) பல ஊர்களை இராஜராஜன் அளித்திருந்தான். அதற்கான செப்பேட்டுச் சாசனத்தை இராஜேந்திர சோழனே கடாரத்து அரசனுக்கு வழங்கினான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வரலாற்றுக் குழப்பம்: சோழர் வரலாற்றை ஆய்ந்து அறிந்து எழுதிய அறிஞர் பெருமக்கள் திருவாரூரில் உள்ள இராஜேந்திர சோழனின் கல்வெட்டை அறிந்திராத காரணத்தால் திருவொற்றியூரில் உள்ள ஒரு கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் மார்கழி திருவாதிரை நாளினை இராஜேந்திர சோழன் திருநாளாகக் கொண்டாடப்பெறும் செய்தியினை அறிந்து, மார்கழி திருவாதிரையே இராஜேந்திரனின் பிறந்த நட்சத்திரம் என பதிவு செய்தனர். தன் பிறந்த நட்சத்திரம் திருவாதிரை (ஆடி) என்பதால் ஈசனின் திருநாளான மார்கழித் திருவாதிரையைத் தன் பெயரால் கொண்டாடச் செய்தானேயொழிய, தன் பிறந்தநாள் அதுவென அச்சாசனத்தில் குறிக்கவில்லை.

பொற்கோயில்: திருவாரூரில் இராஜேந்திர சோழனுக்கு அணுக்கியராக விளங்கிய பரவை நங்கையார் என்ற பெண்மணி விரும்பியதற்காக வீதிவிடங்கப் பெருமானாகிய தியாகேசரின் செங்கற் கோயிலை கற்றளியாக மாற்றி அமைத்தான். மேலும் பரவையின் வேண்டுகோளுக்காக 20643 கழஞ்சு பொன் கொண்டும், 42000 பலம் செம்பு கொண்டும், தன் 18-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.1030இல்) தான் எடுத்த கற்றளிக்கு பொன் வேய்ந்து பொற்கோயிலாக மாற்றி அமைத்தான். அக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருநாளில், தன் தேரில் அவ்வம்மையாருக்கு உடனிருக்கைக் கொடுத்து திருவீதியில் பவனிவந்து தியாகப் பெருமானை அவ்விருவரும் வணங்கியதாகவும், அவர்கள் நின்று வணங்கிய இடத்தில் நினைவாக ஆளுயர இரு குத்துவிளக்குகளை வைத்ததாகவும் அங்கு பொறித்துள்ள கல்வெட்டில் பதிவு செய்துள்ளான்.

முப்பெரும் விழாக்கள்: மேற்கூறப்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டு தியாகேசர் கோயிலின் அதிட்டானத்தில் தன் ஆணையாக மற்றொரு கல்வெட்டையும் பொறித்தான். அதில் தன் தந்தை (இராஜராஜ சோழன்) பிறந்த ஐப்பசி சதய நாள் விழாவுக்கும் தான் பிறந்த ஆடித் திருவாதிரை விழாவுக்கும் ஈசனாரின் மார்கழித் திருவாதிரை விழாவுக்கும் அவன் ஏற்படுத்திய நிவந்தங்களைப் பதிவு செய்தான். இதே கோயிலில் உள்ள இராஜாதிராஜனின் கல்வெட்டு, அவன் தந்தை இராஜேந்திர சோழனுக்கும் அவரின் அணுக்கியார் பரவை நங்கையாருக்கும் அவர்கள் மறைந்த பிறகு படிமம் எடுத்து வழிபாடு செய்தது பற்றி விவரிக்கின்றது. இப்பெரு மன்னனே விழுப்புரம் அருகில் உள்ள பனையபுரத்திலும் இவர்கள் இருவருக்கும் உருவச் சிலைகள் எடுத்து வழிபாடு செய்ததை அங்குள்ள மற்றொரு கல்வெட்டு கூறுகின்றது.

ஐயத்திற்கு இடமின்றி இராஜேந்திர சோழனின் திருவாக்காகவே கூறப்பெற்றுள்ள ஆரூர் சாசனத்தில் அவன் பிறந்த நாளாகக் குறிக்கப்பெறுவது ஆடி மாதத்து திருவாதிரை நாளே, இவ்வாண்டு ஆகஸ்ட் 4 ஆம் நாள் அவன் பிறந்த நாளாகும். அவன் பேரரசனாக முடிசூடிக் கொண்ட ஆயிரமாவது ஆண்டு, நிகழ இருக்கின்ற 2014-ஆம் ஆண்டாகும். இவ்வாண்டும், வரும் ஆண்டும் அவன் பிறந்த நாளில் அவனை நினைத்து போற்றுவோம். தமிழனின் வீரத்திற்கும் கலை மற்றும் பண்பாட்டுச் சிறப்புகளுக்கும் ஒரு குறியீடே ஆடித் திருவாதிரை நாளாகும்.

நன்றி- ஞாயிறு மணி - முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக