ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடரும் பாஜக மற்றும் இந்து அமைப்பினரின் கொலைகளுக்குக் காரணம் முஸ்லீம்களா?

3 posters

Go down

தொடரும் பாஜக மற்றும் இந்து அமைப்பினரின் கொலைகளுக்குக் காரணம் முஸ்லீம்களா? Empty தொடரும் பாஜக மற்றும் இந்து அமைப்பினரின் கொலைகளுக்குக் காரணம் முஸ்லீம்களா?

Post by thillalangadi Fri Jul 26, 2013 1:14 am

இந்து அமைப்பினர் கொல்லப்படுவதற்கு காரணம் இஸ்லாமியர்கள் தான் என்று அரசியல் ஆதாயம் தேடுவோர்களே...இந்த லின்கை படித்து பாருங்கள்..

http://www.tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1307/22/1130722031_4.htm

தமிழ்நாட்டில் பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கொல்லப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்கிவிட்டது. முஸ்லீம் தீவிரவாதிகளை ஒடுக்க தமிழக அரசு தவறிவிட்டது என்று பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் கூறிவருகின்றனர்.

குற்றத்துக்கு மரண தண்டனையே கூடாது என்பது அறிவார்ந்த சமூகத்தின் கருத்தாக இருக்கும் போது கொலை என்பது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு வன்செயல். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக இந்து அமைப்பினர் கொல்லப்படுவது உண்மைதான். ஆனால் அந்தக் கொலைகளுக்கு மத சாயம் பூசி, அரசியல் கொலையாக அடையாளம் காட்டி தமக்கான இந்து மத அடிப்படைவாத அரசியலைக் கட்டியெழுப்ப பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் முயல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

உண்மையில் இந்த கொலைகளுக்குக் காரணம் யார்? எதற்காக செய்தார்கள்?

கோயம்பேடு விட்டல் கொலை - 27.4.2012

சென்னை விருகம்பாக்கம் சாய்நகரை சேர்ந்தவர் விட்டல் (35). இவர் 127வது வட்ட பாரதிய ஜனதா தலைவராக இருந்தார். கோயம்பேடு மார்க்கெட்டில் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். 27.4.2012 அன்று இரவு கோயம்பேடு மார்க்கெட்டின் பின்புறம் கை துண்டிக்கப்பட்டு உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயங்களுடன் விட்டல் பிணமாக கிடந்தார்.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு சுந்தரபாண்டியன் என்பவருக்கு ரூ.2 லட்சம் பணம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை சுந்தரபாண்டியன் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அடிக்கடி விட்டல், சுந்தரபாண்டியன் வீட்டுக்கு சென்று அவர் வீட்டு பெண்களை ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சுந்தரபாண்டியன், அவரது அண்ணன் முருகன் மற்றும் நண்பர் கங்காதரன் ஆகியோர் சேர்ந்து விட்டலை வெட்டிக் கொன்றுள்ளனர். இந்த வழக்கில் நால்வர் கைது டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை - 23.10.12

வேலூர் ரங்காபுரத்தைச் சேர்ந்தவர் பிரபல டாக்டர் அரவிந்த் ரெட்டி (38). பாஜக மாநில மருத்துவர் அணி செயலாளராக இருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வேலூர் தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த மாதம் 24 ஆம் இரவு 7.30 மணியளவில் பைக்கில் வந்த 3 பேர் அரவிந்த் ரெட்டியை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர்.

கொலை நடந்த இடத்தில் ஸ்பிரேயர் பாட்டிலில் தயார் செய்த நாட்டு வெடிகுண்டை போலீசார் பறிமுதல் செய்தனர். உடனே முஸ்லிம் தீவிரவாதிகள்தான் இந்த கொலையை செய்ததாக பந்த் நடத்தினார்கள்.

விசாரணையில் பெண் விவகாரத்தால் கொலை நடந்தது தெரிய வந்தது. இந்த கொலைக்கான சதித்திட்டத்தை குண்டர் சட்டத்தின்கீழ் வேலூர் மத்திய சிறையில் உள்ள பிரபல ரவுடி வசூர் ராஜா தீட்டியுள்ளார்.

இந்த கொலையில் வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த தங்கராஜ் (26), பிச்சை பெருமாள் (28), ஓல்டு டவுன் உதயா என்ற உதயகுமார் (28), சின்னா என்ற சந்திரன் (25), அரியூர் ராஜா (எ) ராஜ்குமார் (எ) எம்எல்ஏ ராஜா (32), சோளிங்கர் தரணி என்ற தரணிகுமார் (24) ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் குட்டநம்பு கொலை - 7.7.13

ராமேசுவரத்தைச் சேர்ந்தவர் குட்டநம்பு இந்து முன்னணி ஒன்றிய துணைத் தலைவராக இருந்து வந்தார். சம்பவத்தன்று மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் ரெயில்வே ரோடு பகுதியில் குடிபோதையில் குட்டநம்பு தகராறு செய்ததால் ஊர்மக்கள் கல்லால் அடித்து கொன்றது தெரியவந்தது. இது தொடர்பாக ராமச்சந்திரன் என்பவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.செய்யப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டிணம் புகழேந்தி கொலை - 05.07.12

நாகப்பட்டிணத்தில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்த புகழேந்தி (53), காலை நடைபயணம் சென்ற போது ஆட்டோவில் வந்த 4 மர்ம நபர்களால் வெட்டி படுகொலைச் செய்யப்பட்டார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியது:-
கடந்த 30 ஆண்டுகளாக இந்து மக்களுக்காக போராடி வந்தவர் புகழேந்தி. இவர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் பிரபலமான கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்ததை எதிர்த்து போராடியவர். இதனால் இந்த கொலை நடந்ததாக கூறினார்.

ஆனால் போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்ட புகழேந்தி, கட்டப்பஞ்சாயத்து மற்றும் நில ஆக்கிரமிப்பு உள்ளிட்ட அடாவடி செயல்களில் ஈடுபட்டு வந்ததும், சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஆசிரியர் ஒருவர் வீட்டை அபகரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து பின்னர் ஜாமீனில் வெளிவந்ததும் தெரியவந்தது. இவரால் பாதிக்கப்பட்ட முனீஸ்வரன் என்பவர் இந்த கொலையை செய்ததும் தெரியவந்தது. முனீஸ்வரன் சேலம் நீதி மன்றத்தில் சரணடைந்தார்.

பரமக்குடி முருகன் கொலை - 19.3.13

பரமக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் கவுன்சிலர் முருகன். இவர் வாஜ்பாய் மன்றத் தலைவராகவும் இருந்து வந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் பைப் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.

போலீஸ் விசாரணையில் 6 ஏக்கர் நிலத்தகராறு தொடர்பாக ராஜபாண்டி மற்றும் மனோகரன் ஆகியோரால் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

வேலூர் வெள்ளையப்பன் கொலை - 01.07.13

இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் வேலூரில் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வெள்ளையப்பன் சென்ற போது இந்த சம்பவம் நடந்தது. வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் அவரது மோட்டார் சைக்கிள் அருகே 4 பைப் வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர்.

இது தொடர்பாக ஜூலை 02, 2013 வெளிவந்த ஒரு தினசரி பத்திரிக்கையில் இவ்வாறு செய்தி வந்தது:

"வேலூர், புது பஸ்நிலையம் அருகே இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் (45) மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். கொலை நடந்த இடத்தில் கறுப்பு நிற பை கண்டெடுக்கப்பட்டது. அந்த பையில், ஐந்து பைப் வெடிகுண்டுகள் இருந்தன. பேட்டரி இணைக்கப்பட்டிருந்த வெடி குண்டை கொலைக்கு அல்லது தப்பி செல்லும் போது பயன்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பைப் வெடிகுண்டுகள், தென்மாவட்டங்களில் பிரபலம் என்பதால் தென் மாவட்டத்தைச் சேர்ந்த கூலிப்படையினர் இதில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்".

ஆடிட்டர் ரமேஷ் கொலை - 19.07.13

சேலம், பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் வி.ரமேஷ் கடந்த வெள்ளியன்று இரவு தனது அலுவலக வாசலில் மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். உடனே பாஜகவினர் கடையடைப்பு, சாலை மறியல், பேருந்து உடைப்பில் இறங்கியுள்ளனர்.

பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், மீண்டும் மத பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது. இந்து அமைப்பினர் ஆயுதம் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது என்று பேசுகிறார்.

தமிழ்நாட்டில் சமீபகாலமாக வன்முறை, கொலைக் குற்றங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக அரசியல் கொலைகள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன என்பது முற்றிலும் உண்மை. ஆனால் அதற்கு எந்த கட்சியும் விதிவிலக்கல்ல. ஆளும் அதிமுக பிரமுகர்கள் கூட படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மற்ற அரசியல் கட்சிகளெல்லாம் குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறுவதோடு நிறுத்திக் கொள்கின்றனர். ஆனால் பாஜக, இந்து அமைப்பினர் மட்டும் அதை மத பயங்கரவாதம் என்றும், குற்றவாளிகளை தீவிரவாதிகள் என்றும் வர்ணிக்கின்றனர்.

குற்றவாளிகள் பிடிபடாத ஆடிட்டர் ரமேஷ் கொலையைத் தவிர மேற்கண்ட அனைத்து இந்து அமைப்பினரின் கொலையில் ஈடுபட்டவர்கள் இந்து மதத்தை சேர்ந்தாவர்களே!

இப்படியாக பாஜக மற்றும் இந்து முன்னணியினர் உள்ளூர் தகராறின் காரணமாக படுகொலை செய்யப்படும்போது கூட, அதற்கு மதசாயம் பூசி அந்த பழியை முஸ்லீம்கள் மீது போட்டு, பஸ் எரிப்பு, கடையடைப்பு, சாலை மறியல், பந்த் நடத்தி தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். இந்த செயல்பாடுகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது..

இந்த பதிவு,யாரையும் வேதனைபடுத்த பதியப்படவில்லை..உண்மை விளங்க வேண்டும்..மத நல்லிணக்கம் மேம்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பதியப்பட்டுள்ளது..
thillalangadi
thillalangadi
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Back to top Go down

தொடரும் பாஜக மற்றும் இந்து அமைப்பினரின் கொலைகளுக்குக் காரணம் முஸ்லீம்களா? Empty Re: தொடரும் பாஜக மற்றும் இந்து அமைப்பினரின் கொலைகளுக்குக் காரணம் முஸ்லீம்களா?

Post by தர்மா Fri Jul 26, 2013 7:30 am

அது சரி முஸ்லிம் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இந்து தலைவர்களின் தகவல்களை நீங்கள் யென் போடவில்லை அதையும் போட்டிருக்கலாமே.


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

தொடரும் பாஜக மற்றும் இந்து அமைப்பினரின் கொலைகளுக்குக் காரணம் முஸ்லீம்களா? Empty Re: தொடரும் பாஜக மற்றும் இந்து அமைப்பினரின் கொலைகளுக்குக் காரணம் முஸ்லீம்களா?

Post by தர்மா Fri Jul 26, 2013 7:39 am

போலீஸ்' பக்ருதீன், "அல்-உம்மா' அமைப்பைச் சேர்ந்த, இமாம் அலி, ஐதர் அலியை, போலீசார் கைது செய்து, சிறைக்கு கொண்டு செல்லும் போது, போலீஸ் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தி, இருவரையும் மீட்டவன். அத்வானியின் விழிப்புணர்வு யாத்திரையில், பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு உட்பட, 22 வழக்குகள் இவன் மீது உள்ள நிலையில், 2011ம் ஆண்டு முதல் தலைமறைவாக உள்ளான். மதுரை, நெல்பேட்டையைச் சேர்ந்த பிலால் மாலிக்கும், "போலீஸ்' பக்ருதீனும், "அல்முஜாகிதீன் படை' இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என, போலீசார் கருதுகின்றனர். இதன் உறுப்பினர்கள், "தியாகப்படை' என்றும் அழைக்கப்படுகின்றனர். பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இந்த இயக்கம், மதுரையில் செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த, 2005ல், மதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி, காளிதாஸ் கொலையில், 17 வயதாக இருந்த, பிலால் மாலிக் சேர்க்கப்பட்டான். அதன் பின், பூசாரி கங்காதரன் கொலை, அத்வானி யாத்திரையில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்குகளில் தேடப்பட்டு வருகிறான்.

தலைமறைவு:
தன், 20 வயதில் வன்முறையில் இறங்கியவன்,
Click Here
Advertisement
மேலப்பாளையத்தைச் சேர்ந்த, பன்னா இஸ்மாயில். பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில், கிச்சான் புகாரி கைது செய்யப்பட்ட நிலையில், பன்னாவும் அவனுடன் சேர்ந்து இன்னும், 5 பேரும் தலைமறைவாக உள்ளனர்.இந்து முன்னணி பிரமுகர் மனைவியை, தபால் வெடிகுண்டு மூலம், கொலை செய்த வழக்கில், முக்கிய குற்றவாளியான, நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக், 18 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளான். இவனது உருவம் தெரியாத நிலையில், தொழிற்பயிற்சி நிலையத்தில், அளித்த புகைப்படம் மூலம் போலீசார் தற்போது தேடி வருகின்றனர். இவர்கள் நால்வரையும், ஒரே வாரத்தில் பிடிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், தற்போது தமிழகம் முழுவதும் போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர்.


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

தொடரும் பாஜக மற்றும் இந்து அமைப்பினரின் கொலைகளுக்குக் காரணம் முஸ்லீம்களா? Empty Re: தொடரும் பாஜக மற்றும் இந்து அமைப்பினரின் கொலைகளுக்குக் காரணம் முஸ்லீம்களா?

Post by பார்த்திபன் Fri Jul 26, 2013 10:46 am

தர்மா wrote:போலீஸ்' பக்ருதீன், "அல்-உம்மா' அமைப்பைச் சேர்ந்த, இமாம் அலி, ஐதர் அலியை, போலீசார் கைது செய்து, சிறைக்கு கொண்டு செல்லும் போது, போலீஸ் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தி, இருவரையும் மீட்டவன். அத்வானியின் விழிப்புணர்வு யாத்திரையில், பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு உட்பட, 22 வழக்குகள் இவன் மீது உள்ள நிலையில், 2011ம் ஆண்டு முதல் தலைமறைவாக உள்ளான். மதுரை, நெல்பேட்டையைச் சேர்ந்த பிலால் மாலிக்கும், "போலீஸ்' பக்ருதீனும், "அல்முஜாகிதீன் படை' இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என, போலீசார் கருதுகின்றனர். இதன் உறுப்பினர்கள், "தியாகப்படை' என்றும் அழைக்கப்படுகின்றனர். பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இந்த இயக்கம், மதுரையில் செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த, 2005ல், மதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி, காளிதாஸ் கொலையில், 17 வயதாக இருந்த, பிலால் மாலிக் சேர்க்கப்பட்டான். அதன் பின், பூசாரி கங்காதரன் கொலை, அத்வானி யாத்திரையில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்குகளில் தேடப்பட்டு வருகிறான்.

தலைமறைவு:
தன், 20 வயதில் வன்முறையில் இறங்கியவன்,
Click Here
Advertisement
மேலப்பாளையத்தைச் சேர்ந்த, பன்னா இஸ்மாயில். பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில், கிச்சான் புகாரி கைது செய்யப்பட்ட நிலையில், பன்னாவும் அவனுடன் சேர்ந்து இன்னும், 5 பேரும் தலைமறைவாக உள்ளனர்.இந்து முன்னணி பிரமுகர் மனைவியை, தபால் வெடிகுண்டு மூலம், கொலை செய்த வழக்கில், முக்கிய குற்றவாளியான, நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக், 18 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளான். இவனது உருவம் தெரியாத நிலையில், தொழிற்பயிற்சி நிலையத்தில், அளித்த புகைப்படம் மூலம் போலீசார் தற்போது தேடி வருகின்றனர். இவர்கள் நால்வரையும், ஒரே வாரத்தில் பிடிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், தற்போது தமிழகம் முழுவதும் போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தர்மாண்ணே அவர் சொல்ல வர்றது என்னன்னா, பா.ஜ.க அல்லது இந்து முன்னணியைச் சேர்ந்த பிரமுகர்கள் கொல்லப்படுவதற்கு மதத் தீவிரவாதம் மட்டும் காரணமில்லை. வேறு பல பிரச்சனைகளுக்காகவும் அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றுதான் சொல்கிறார். அதனால் விசாரணை முடிவதற்கு முன்னர் யூகத்தின் அடிப்படையில் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடுவது சரியில்லை என்கிறார். நியாயம்தானே?
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

தொடரும் பாஜக மற்றும் இந்து அமைப்பினரின் கொலைகளுக்குக் காரணம் முஸ்லீம்களா? Empty Re: தொடரும் பாஜக மற்றும் இந்து அமைப்பினரின் கொலைகளுக்குக் காரணம் முஸ்லீம்களா?

Post by thillalangadi Fri Jul 26, 2013 7:20 pm

பார்த்திபன் wrote:
தர்மா wrote:போலீஸ்' பக்ருதீன், "அல்-உம்மா' அமைப்பைச் சேர்ந்த, இமாம் அலி, ஐதர் அலியை, போலீசார் கைது செய்து, சிறைக்கு கொண்டு செல்லும் போது, போலீஸ் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தி, இருவரையும் மீட்டவன். அத்வானியின் விழிப்புணர்வு யாத்திரையில், பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு உட்பட, 22 வழக்குகள் இவன் மீது உள்ள நிலையில், 2011ம் ஆண்டு முதல் தலைமறைவாக உள்ளான். மதுரை, நெல்பேட்டையைச் சேர்ந்த பிலால் மாலிக்கும், "போலீஸ்' பக்ருதீனும், "அல்முஜாகிதீன் படை' இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என, போலீசார் கருதுகின்றனர். இதன் உறுப்பினர்கள், "தியாகப்படை' என்றும் அழைக்கப்படுகின்றனர். பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இந்த இயக்கம், மதுரையில் செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த, 2005ல், மதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி, காளிதாஸ் கொலையில், 17 வயதாக இருந்த, பிலால் மாலிக் சேர்க்கப்பட்டான். அதன் பின், பூசாரி கங்காதரன் கொலை, அத்வானி யாத்திரையில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்குகளில் தேடப்பட்டு வருகிறான்.

தலைமறைவு:
தன், 20 வயதில் வன்முறையில் இறங்கியவன்,
Click Here
Advertisement
மேலப்பாளையத்தைச் சேர்ந்த, பன்னா இஸ்மாயில். பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில், கிச்சான் புகாரி கைது செய்யப்பட்ட நிலையில், பன்னாவும் அவனுடன் சேர்ந்து இன்னும், 5 பேரும் தலைமறைவாக உள்ளனர்.இந்து முன்னணி பிரமுகர் மனைவியை, தபால் வெடிகுண்டு மூலம், கொலை செய்த வழக்கில், முக்கிய குற்றவாளியான, நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக், 18 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளான். இவனது உருவம் தெரியாத நிலையில், தொழிற்பயிற்சி நிலையத்தில், அளித்த புகைப்படம் மூலம் போலீசார் தற்போது தேடி வருகின்றனர். இவர்கள் நால்வரையும், ஒரே வாரத்தில் பிடிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், தற்போது தமிழகம் முழுவதும் போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தர்மாண்ணே அவர் சொல்ல வர்றது என்னன்னா, பா.ஜ.க அல்லது இந்து முன்னணியைச் சேர்ந்த பிரமுகர்கள் கொல்லப்படுவதற்கு மதத் தீவிரவாதம் மட்டும் காரணமில்லை. வேறு பல பிரச்சனைகளுக்காகவும் அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றுதான் சொல்கிறார். அதனால் விசாரணை முடிவதற்கு முன்னர் யூகத்தின் அடிப்படையில் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடுவது சரியில்லை என்கிறார். நியாயம்தானே?

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் 

என் எண்ணத்தை பிரதிபலித்து விட்டீர்கள்..அன்பரே..தவறு செய்பவனை கண்டறிய காவல் துறை இருக்கும் போது அப்பாவி முஸ்லிம்கள் மீதும்,பள்ளிவாயல்களின் மீதும் தாக்குதல் நடத்துவது என்பது வீரச் செயல் அல்ல..கோழைச் செயல்..

தவறு செய்பவன் எந்த மதமாக இருந்தாலும்,எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவனாக இருந்தாலும் அவன் தண்டிக்கப் பட வேண்டும்..
ஜாதி,மதம்,மொழி,இனம் இவற்றால் மக்களைப் பிரித்து,சகோதரர்களாக வாழும் மக்களிடயே கலகத்தை உண்டு பண்ணும் எல்லா அரசியல் கட்சிகளையும் விரட்டி அடிக்க வேண்டும்...
பல நாள் உன்னோடு பழகும் நண்பனை உனக்குத் தான் தெரியுமே தவிர..உன் அரசியல் கட்சிக்கு தெரியாது..அவர்களுக்கு வேண்டியது ஆட்சி...பணம்..அவர்கள் ஜாதி மேலோங்கி நிற்கணும் அவ்வளவு தான்..அதற்காக அவர்கள் மனித நேயத்தை பலி கொடுக்கிறார்கள்..
நாளை நான் அவசரத்திற்கு அழைக்கும் போது எனக்கு உடனே உதவி செய்பவன் என் அடுத்த வீட்டு வேற மதச் ச்கோதரனே தவிர நான் சார்ந்திருக்கும் கட்சி அல்ல...

நாம் சம்பாதித்தால் தான் நமக்குச் சாப்பாடு..
என் மதத்தைப் பற்றி என்னிடம் கேட்டால் தான் தெரியும்..அது போல்த் தான் உங்கள் மதமும்..
ஆனால் இந்த மதவெறிக் கட்சிகள்,மற்ற மதங்களை தவறாக சித்தரித்து,தாழ்மைப்படுத்தி பாமர மனிதனுக்கு மத வெறியை ஊட்டி குளிர் காய்கின்றன...
இவர்களை அடையாளம் கண்டு தோலுரிப்போம்..அவர்களை அண்ட விடாமல் விரட்டுவோம்..அவர்கள் யாராக,எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரியே.
thillalangadi
thillalangadi
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Back to top Go down

தொடரும் பாஜக மற்றும் இந்து அமைப்பினரின் கொலைகளுக்குக் காரணம் முஸ்லீம்களா? Empty Re: தொடரும் பாஜக மற்றும் இந்து அமைப்பினரின் கொலைகளுக்குக் காரணம் முஸ்லீம்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 100 ஆண்டாக தொடரும் இந்து, முஸ்லிம் சந்தன பூச்சு: மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டு
» அயோத்தி தீர்ப்புக்கு பாஜக-ஆர்எஸ்எஸ் ஆதரவு, வக்பு வாரியம்-இந்து மகா சபா எதிர்ப்பு
» அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக கூட்டணி
» அமெரிக்காவில் தொடரும் இந்து கோவில் மீதான தாக்குதல்கள் : ஜன்னல்கள் உடைப்பு- பயம் என்று எழுதியதால் பதற்றம்
» அதிமுக-பாஜக மற்றும் திமுக-தேமுதிக கூட்டணிகள் உருவாகலாம்"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum