புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானாக நானில்லை! I_vote_lcapநானாக நானில்லை! I_voting_barநானாக நானில்லை! I_vote_rcap 
65 Posts - 64%
heezulia
நானாக நானில்லை! I_vote_lcapநானாக நானில்லை! I_voting_barநானாக நானில்லை! I_vote_rcap 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
நானாக நானில்லை! I_vote_lcapநானாக நானில்லை! I_voting_barநானாக நானில்லை! I_vote_rcap 
6 Posts - 6%
mohamed nizamudeen
நானாக நானில்லை! I_vote_lcapநானாக நானில்லை! I_voting_barநானாக நானில்லை! I_vote_rcap 
4 Posts - 4%
viyasan
நானாக நானில்லை! I_vote_lcapநானாக நானில்லை! I_voting_barநானாக நானில்லை! I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
நானாக நானில்லை! I_vote_lcapநானாக நானில்லை! I_voting_barநானாக நானில்லை! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானாக நானில்லை! I_vote_lcapநானாக நானில்லை! I_voting_barநானாக நானில்லை! I_vote_rcap 
257 Posts - 44%
heezulia
நானாக நானில்லை! I_vote_lcapநானாக நானில்லை! I_voting_barநானாக நானில்லை! I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
நானாக நானில்லை! I_vote_lcapநானாக நானில்லை! I_voting_barநானாக நானில்லை! I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நானாக நானில்லை! I_vote_lcapநானாக நானில்லை! I_voting_barநானாக நானில்லை! I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நானாக நானில்லை! I_vote_lcapநானாக நானில்லை! I_voting_barநானாக நானில்லை! I_vote_rcap 
15 Posts - 3%
prajai
நானாக நானில்லை! I_vote_lcapநானாக நானில்லை! I_voting_barநானாக நானில்லை! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
நானாக நானில்லை! I_vote_lcapநானாக நானில்லை! I_voting_barநானாக நானில்லை! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
நானாக நானில்லை! I_vote_lcapநானாக நானில்லை! I_voting_barநானாக நானில்லை! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நானாக நானில்லை! I_vote_lcapநானாக நானில்லை! I_voting_barநானாக நானில்லை! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நானாக நானில்லை! I_vote_lcapநானாக நானில்லை! I_voting_barநானாக நானில்லை! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானாக நானில்லை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 24, 2013 10:11 pm

வாசல் கேட்டைத் திறந்து, பைக்கை உள்ளே கொண்டு வந்து நிறுத்திய சரவணனின் கண்கள் வியப்பால் விரிந்தன.
""ஹாய் மகேஷ், எப்படா வந்தே?''

""காலை பஸ்சுக்கே கிளம்பி, மத்தியானம் வந்துட்டேன் அண்ணா. நீ சாயங்காலம், 5:00 மணிக்கு தான் வருவேன்னு அண்ணி சொன்னாங்க... அதான், உனக்காக காத்துகிட்டிருந்தேன்.''

"அப்போலேருந்து இங்கேயே உட்கார்ந்திட்டு இருக்கியா...' என்று கேட்க நினைத்தவன், கீதா கதவருகில் வந்து நிற்பதைப் பார்த்து, வார்த்தைகளை விழுங்கிக் கொண்டான்.

""ஆபீசிலிருந்து வந்த மனுஷன் உள்ளே வரக்கூடாதா? வாசல்லேயே நின்னு கதையளக்கணுமா?''
கீதாவின் கடுகடுப்பு, அவனை உள்ளே இழுத்தது. மகேஷை நோக்கி தலையசைக்க... சரவணனை தொடர்ந்து, உள்ளே வந்த மகேஷ் மவுனமாக, சுவர் ஓரமாக ஓதுங்கி நின்றான்.

கீதா, டிபன் தட்டை சரவணன் எதிரில் டக்கென வைத்துவிட்டு, மகேஷை பார்வையால் எரித்துவிட்டு விருட்டென உள்ளே போனாள்.
சரவணன் எழுந்து உள்ளே போய் உடை மாற்றி, முகம் கழுவி விட்டு வந்து உட்கார்ந்தவன், டிபன் தட்டை எடுத்து ஒரு விள்ளல் வாயருகில் கொண்டு போனான்.

மகேஷின் வாடிய முகத்தை பார்த்து, உள்ளம் பதை பதைத்தது. மகேஷ் காலையிலிருந்து ஒண்ணுமே சாப்பிட்டிருக்க மாட்டான் என்ற உண்மை மனதை சுட, சட்டென தட்டை தள்ளி வைத்தான்.

""அப்புறம், ஊர்லே அப்பா - அம்மா நல்லா இருக்காங்களா... பிளஸ் 2-ல நல்ல மார்க் எடுத்திருக்கறதா, அப்பா போன்ல சொன்னார். ரொம்ப சந்தோஷம்டா... அன்னிக்கி நான் எடுத்த அதே மார்க்... மேலே என்ன செய்யப் போறே.''
""நாலஞ்சு, இஞ்னியரிங் கல்லூரியில அப்ளிகேஷன் வாங்கி வெச்சிருக்கேன்... நல்ல மார்க் என்கிறதாலே நிச்சயம் இடம் கிடைச்சிடும்.''

""அப்புறம் என்னடா... சேர்ந்துட வேண்டியது தானே?''
தயக்கத்துடன் குரலை தாழ்த்திக் கொண்டான் மகேஷ்.

""அது வந்து... நல்ல கல்லூரியில பீஸ் லட்சக்கணக்கிலே ஆகும் . அப்பா சமாளிக்க முடியாதுன்னு பயப்படறார். அதான், உன்னை பார்த்துட்டு வரச்சொல்லி அனுப்பினார்.''
திடீரென உள்ளே கீதா குரல் எழுப்பினாள்...

""சூ... சூ... போறியா இல்லையா?''
உள்ளே திரும்பி கேட்டான் சரவணன் .
""என்ன கீதா?''

""சனியன் பிடிச்ச காக்கா... எத்தனை தடவை விரட்டினாலும், திரும்ப திரும்ப வந்து தொல்லை கொடுக்குது, சே... ரொம்ப தொல்லையா போச்சு.''

சரவணனுக்கு, "சுரீர்' என்று வலித்து உடம்பே குறுகினது போல ஆனது. எச்சிலை விழுங்கிக் கொண்டான் மகேஷ்.
""அப்ப... நான் கிளம்பட்டுமா அண்ணா, இப்ப பஸ் பிடிச்சாதான், ராத்திரி ஊர் போய் சேர முடியும்.''

நேராக மகேஷை பார்க்க தெம்பில்லாமல், தலை குனிந்தபடி பேசினான் சரவணன்.
""இப்ப நான், உனக்கு உதவுர நிலயிலே இல்லை மகேஷ். ஏகப்பட்ட லோன் போட்டிருக்கேன். பிளாட் வாங்க, மொத்த பணத்தையும் ஆறு மாசத்துக்குள்ளே, "செட்டில்' செய்யணும்.

என்ன செய்யறதுன்னு தெரியாமே நானே தவிச்சுக் கிட்டு இருக்கேன்,'' பேசி முடிப்பதற்குள் குரல் உடைந்து நடுங்கியது.
""பரவாயில்லை அண்ணா... கிளம்பறேன், அண்ணிகிட்டே சொல்லிடு.''
விடுவிடுவென படியிறங்கி நடந்தான் மகேஷ்.

தொடரும்.....




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 24, 2013 10:13 pm

பஸ்சில் உட்கார்ந்திருந்த மகேஷ், பசியுடன் பிஸ்கட் பொட்டலத்தை பிரிக்கும் போது, தடதடனெ ஏறி வந்தான் சரவணன்.
""இறங்குடா கீழே,'' என்றான்.

""இல்லேண்ணா... பஸ் இப்ப கிளம்பிடும்,'' என்று மகேஷ் தயங்க, அவன் கையை பிடித்து கீழே இறக்கினான் சரவணன்.
""அடுத்த பஸ்லே போயிக்கலாம் வா, '' என்று பக்கத்திலிருந்த ஓட்டலுக்கு அழைத்து போனான்.
""என்னடா சாப்பிடறே?''
"
"ஊருக்கு போய் சாப்பிட்டுக்கறேனே,'' என்று மகேஷ் முனக, கோபத்துடன் பார்த்தான் சரவணன்.
""எனக்கு தெரியும்டா இன்னிக்கி பூரா நீ எதுவுமே சாப்பிட்டிருக்கமாட்டே,'' என்றவன் இட்லி, தோசை, பூரி என்று ஏகத்துக்கு ஆர்டர் செய்தான்.

பசி காதை அடைத்தாலும், சாப்பிட முடியாமல் மகேஷûக்கு தொண்டை அடைத்தது. விம்மியபடி சரவணனின் கைகளை பிடித்துக் கொண்டான். சரவணனும் கண் கலங்கினான் .

""வேண்டாண்டா மகேஷ்... என்ன மாதிரி, சூழ்நிலை கைதியா மாற வேண்டாம். இது மாதிரி தான், அன்னிக்கு நானும் இன்ஜினியர் கனவுல மிதந்தேன். கீதாவோட அப்பா, என் படிப்பு செலவு முழுக்க ஏத்துக்கிட்டதும், அப்பா மகிழ்ந்து போனார். நான் வானத்திலே மிதந்தேன். படிச்சு முடிச்சதும், கை நிறைய சம்பளத்தோட நல்ல வேலை. அதுவும் கீதாவோட, அப்பா ஏற்பாடு தான். எலிப் பொறியிலே மசால் வடையை பார்த்த எலி மாதிரி துள்ளி குதிச்சேன். அப்ப தெரியலைடா எனக்கு. மெல்ல மெல்ல என்னையே, நான் தொலைச்சிட்ட உண்மையை. அவர் செய்த அத்தனை உதவிகளுக்கும், நான் கொடுத்த விலை, கீதா கழுத்திலே தாலி கட்டினது தான்.

""ஏற்கனவே, ஒருத்தனை காதலிச்சு அவனோட ஓடிப்போய், அப்புறம் காதும் காதும் வச்ச மாதிரி ரகசியமா அவளை மீட்டு வந்து, ஊர் உலகத்துக்கு தெரியறதுக்கு முன்னாடி, என் கையிலே தாலியை திணிச்சிட்டார்டா, அந்த திறமையான வியாபாரி. இன்னிக்கு வரை கீதா வேண்டா வெறுப்பா தான் என் கூட வாழ்ந்திட்டு வர்றாள்.''
திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் மகேஷ்.

""இந்த உண்மை, இதுவரை யாருக்கும் தெரியாது. ஏன்... அப்பா, அம்மாவுக்கே தெரியாது. படிக்க உதவி செய்து, வேலை வாங்கி கொடுத்து, பெண்ணையும் கொடுத்திருக்கார்ன்னு, அந்த நயவஞ்சக வியாபாரியை, அதான், என் மாமனாரை, இப்பவும் புகழ்ந்திட்டு தான் இருக்காங்க நம்ம அம்மா அப்பா. இப்ப நீ என்கிட்ட உதவி கேட்டு வந்திருக்கே... என்னாலே நிச்சயம் உன்னை படிக்க வைக்க முடியும். ஆனா, இதை கீதாவுக்கும், அவ அப்பாவுக்கும் தெரியாம செய்ய முடியாது. எப்படியும் தெரிஞ்சிரும். கீதாவுக்கு ஒரு தங்கை இருக்கா. இப்பவே, அவ நடவடிக்கை சரியில்லை. உன்னை நான் படிக்க வைச்சா அதையே காரணம் காட்டி, உன்னையும் பலிகடா ஆக்கிடுவாங்கடா.''

""புரியுது அண்ணா... உன்னோட இக்கட்டான நிலைமை.''
""ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ, இன்னொருத்தர் தயவை எதிர்பார்க்காதே, உன்னாலே என்ன முடியுமோ, அதை படி. பாலிடெக்னிக் இருக்கு. ஆர்ட்ஸ் கல்லூரியில சேரு. இப்பல்லாம் விதவிதமா எத்தனையோ கோர்ஸ் இருக்கு. சமாளிக்க முடியும்ங்கிற விதத்திலே எதிலேயாவது சேரு. சைடுலே... கம்யூட்டர் கோர்ஸ் சேர்ந்துக்க, இன்ஜினியர் மட்டும் தான் படிப்புன்னு இல்லை. நேர்மை, நம்பிக்கை, முயற்சி, உழைப்பு இதெல்லாம் இருந்தா எப்படியும் முன்னுக்கு வரலாம்.

""பாலிடெக்னிக் படிச்சுட்டு, கை நிறைய சம்பாதிக்கறவுங்களும் இருக்காங்க. பி.இ., படிச்சுட்டு வேலை கிடைக்காம, திண்டாடறவனும் இருக்காங்க... எல்லாம் உன் சாமர்த்தியத்தை பொறுத்தது.''
தெளிவுடன் முகத்தை துடைத்துக் கொண்டான் மகேஷ்.
""அண்ணா...நிறைய டிபன் வாங்கி கொடுத்து வயிற்றை நிரப்பி, அருமையா, புத்திமதி சொல்லி, மனசையும் நிரப்பிட்டே, ரொம்ப நன்றி அண்ணா. அப்பாவோட கலந்து பேசி, அவராலே செலவழிக்க முடியும்ங்கிற மாதிரியான படிப்பை தேர்ந்தெடுக்கறேன் அண்ணா.''

நெகிழ்ச்சியுடன், அவனை அணைத்துக் கொண்டான் சரவணன்.
""நீ நீயாகவே இருந்து முன்னேறணும்டா...அதான் என் ஆசை.

""என்னை மாதிரி ஆயுள் கைதியா, என்னையே தொலைச்சிட்டு நிற்கற மாதிரி நீ ஆகக்கூடாது. உன் படிப்புக்கு உதவி செய்யலையேன்னு, என்னை தப்பா நினைக்காதேடா. சுயமா நிற்க முடியாமே, கம்பை சுத்தி நிற்கிற கொடிமாதிரி இருக்கேன் நான். நீயாவது சொந்த கால்லே சுயமா நின்னு உறுதியான மரமா உசந்து வளரணும்டா.''
""கண்டிப்பா இருப்பேண்ணா,'' உறுதியாக கூறினான் மகேஷ்.

மீண்டும் பஸ் ஸ்டாண்டுக்கு அழைத்து வந்து பஸ் ஏற்றி விட்டான் சரவணன். மறுத்தும் கேளாமல், 1000 ரூபாய் தாளை, அவன் சட்டைப் பையில் திணித்தான்.
""ஒரு விஷயம் மகேஷ். கீதா பத்தி, அவ அப்பா பத்தி நான் சொன்னதை அப்பா - அம்மாகிட்டே மறந்தும் சொல்லிடாதே,'' என்று சொல்ல, பஸ் கிளம்பியது.

சிரித்தபடி தெளிவுடன் கை அசைத்தான் மகேஷ். பதிலுக்கு கை அசைத்த சரவணனின் மனம் கனத்தது.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 24, 2013 10:13 pm

சூப்பருங்க கதை என்பதால் பதிவிட்டேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக