ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!!

Go down

 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Empty குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!!

Post by sundaram77 Wed Jul 24, 2013 1:52 pm

நண்பர்களே !
ஒரு குறுந்தொகைப் பாடல் தோற்றுவிக்கும் எண்ணங்கள்...

இந்த மாந்தரினம் சூழலின் கைதியாகத்தான் என்றும் இருந்துள்ளது.டார்வினின் பரிமாண வளர்ச்சிக் கோட்பாடுபடி,
நம்மினம் அமீபா எனும் மிகச் சிறிய உயிரியிலிருந்து இன்றுள்ள ஆறறிவு மாந்தனாக வளர்ந்துள்ள நிலைவரை சூழல்
மிக முக்கிய பங்கினை வகித்து வந்துள்ளது ; இன்னும் சொல்லப்போனால் தலைமை இடம் கூட அதற்குண்டு எனத்
துணியலாம் ! இல்லையெனில் ஏறத்தாழ ஐம்பதாயிரம் ஆண்டுகள் வளர்நிலை கொண்ட நாம் பேசும் மொழிகள் கூட
அதற்கு அடிபணிந்துருக்க முடியுமா..!?

ஒரு சிறு எடுத்துக்காட்டு பார்ப்போமா..

மேற்கத்திய நாடுகளில் ஒருவரை சிறப்பாக வரவேற்பதை ' warm welcome ' என்றே கூறுகின்றனர் ; ஏனெனில் , புவியின்
வட அரைக் கோளத்தில் பெரும்பாலும் நிலவும் சகிக்க இயலா குளிருக்கு இதமான வேனில் பருவம் பெரும் வரவேற்பைப்
பெறுவது இயல்புதானே ! அதன் பாதிப்பே ' warm welcome ' மும் ! இதனையே தமிழகச் சூழலில் கற்பனை செய்து
பாருங்களேன்... ' சூடான வரவேற்பு ' விபரீதமான எதிர்மறைப் பொருளைத்தானே காட்டும் ; காரணம் , எளிதானது -
நம் சூழலுக்கு வெப்பம் இனிப்பானதல்ல !

இவ்வாறே காலத்தின் இயல்புக்கும் நம் உள்ளம் உள்ளும் எண்ணங்களுக்கும் இயைபுண்டு. நம் அனைவரின் மெய்யுள்ளும்
உயிரியல் கடிகை ( biological clock ) இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றது. பகற்போழ்தில் பல பணிகள் ; மாலைப்
போழ்தில் ஓய்வும் தனிமையும் களிப்பினை நாட ஏதுவாகிறது. தோழமையான அருகாமையை எந்த மனம்தான் விழையாது !

அதிலும் காதலில் கட்டுண்டு உடலும் , உள்ளமும் உயிரும் ஒன்றிணைந்த இருவர் பிரிந்திருப்பின் மனச்சோர்வு மறையுமா !?
ஆடவருக்காவது உரமான மனம் ; தனிமை இனிமையாகாவிடினும் சமாளித்துவிட முடிகிறது. ஆனால் இள நங்கைக்கு...
அதிலும் , இல்லமே உலகமாய் உள்ளவளுக்கு துயர்தானே !

இதோ...! ஒளிவிட்ட ஞாயிற்றுச்சுடர் அந்திப்போழ்தைச் செக்கர்வானக்கிவிட்ட பின்னர் மறையப்பார்க்கிறது ! அவ்வொளி
மங்கும் நேரத்தில்தான் துணையை மனம் விரும்பி நாடுகிறது ; ஆனால் , துணை இல்லா நிலை ! துன்பம் மிகுகிறது !!
அதனை ஈடுகட்டவே முல்லை மலர்ந்து மணம் பரப்புகிறது எனக் கூறுவோரும் உளர் !ஆனால் , இவ்வாறு கூறுபவர்கள்
மதியிழந்தவர்களாகத்தான் இருத்தல் வேன்டும் !! வேறு எப்படித்தான் சொல்வது அவர்களைப் பற்றி !!! சலித்துக் கொள்கிறாள் தலைவி .


காலவியல்புகளுக்கு ஏற்ப உள்ளமும் திரிபு கொள்ளும் ; மாறாக , சில வேளைகளில் , உள்ளத்தின் இயல்புக்கேற்பவும்
காலவியல்புகள் மாறுபட்டுத் தோன்றலுங் கூடும். உள்ளத்தின் உணர்வாற்றல் , காலத்தின் ஆற்றலைவிட நம் தலைவிக்கு
மிகுந்திருக்கிறது - தனிமை தரும் வேதனை ! ஆதலால், காலம் கூட அவளுக்கு மாறித் தோன்றுவதில் விந்தை இல்லை !
இம்மாலைக் காலம் மட்டும் அவளை வருத்தவில்லை ! அவளின் கூற்றைத்தான் பாருங்களேன்...!


' பெரும்புலர் விடியலும் மாலை ' யாம் !
விடியும் புலர்காலைப்பொழுதும் அவளுக்கு மாலை நேரமாய் தோற்றுகிறாம்...பிதற்றுகிறாளா...!

இல்லை , நண்பர்களே , இல்லை !
துணையில்லாத நினப்பே அவளை வருத்துவதால் , பக்ற்காலத்தையும் அவள்
வேதனை விளைவிக்கும் மாலையாகவேக் காண்கிறாள் ...!

முழுப்பாடல் :


சுடர்செல் வானஞ் சேப்பப் படர்கூர்ந்
தெல்லறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார் மயங்கி யோரே
குடுமிக் கோழி நெடுநக ரியம்பும்
பெரும்புலர் விடியலு மாலை
பகலும் மாலை துணையி லோர்க்கே.



தோழியை நோக்கித்தான் சொல்கிறாள் !
நம் காதிலும் விழுவதால் நமக்கும் வருத்தமாய்த்தான் உள்ளது !
ஆனால், தலைவிக்கு ஆறுதல் இல்லையே ...
அவளின் துன்பத்திற்கு அவளின் மனம் மட்டுமே ஆறுதலையும் தேறுதலையும் தர முடியும் ...


"துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி
."

இதை அறிந்தவள்தான் நம் தலைவியும்...!

இக்குறுந்தொகைப்பாடலலை இயற்றியவர் மிளைப்பெருங் கந்தனார் ...

படர் கூர்ந்து - துன்ப நினைவு மிக
எல்லறு - ஒளி குறைகின்ற
புலர் - இராப்பொழுது புலர்தலையுடைய
இயம்பும் - கூவும்

அன்பன்,
சுந்தரம்
sundaram77
sundaram77
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum