புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாயப் பாட்டியின் முத்துமாலை Poll_c10மாயப் பாட்டியின் முத்துமாலை Poll_m10மாயப் பாட்டியின் முத்துமாலை Poll_c10 
6 Posts - 60%
heezulia
மாயப் பாட்டியின் முத்துமாலை Poll_c10மாயப் பாட்டியின் முத்துமாலை Poll_m10மாயப் பாட்டியின் முத்துமாலை Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
மாயப் பாட்டியின் முத்துமாலை Poll_c10மாயப் பாட்டியின் முத்துமாலை Poll_m10மாயப் பாட்டியின் முத்துமாலை Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மாயப் பாட்டியின் முத்துமாலை


   
   
thivya balan
thivya balan
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 21/04/2013

Postthivya balan Sun Jul 21, 2013 4:10 pm

நெடுங்காலத்துக்கு முன் எகிப்தில் ஷகானா என்னும் இளவரசி இருந்தாள். ஒரு நாள் அவள் தன் தோழிகளுடன் அரண்மனைக்குப் பக்கத்தில் உள்ள நீரூற்றில் குளிக்கச் சென்றாள்.
குளித்து முடித்துவிட்டு ஷகானா கரையேறினாள். அப்போது ஒரு பாட்டி நீரூற்றின் கரையில் நின்றுகொண்டு இருந்தாள்.
'ஏய் கிழவி, உனக்கு இங்கே என்ன வேலை? இது எங்களைப் போன்ற அழகான இளவரசிகள் குளிப்பதற்கான இடம். சீக்கிரம் இங்கே இருந்து போய்விடு'' என்று இளவரசி கோபத்துடன் சொன்னாள்.
அதைக் கேட்டு அந்தப் பாட்டி சிரித்தவாறு அருகே வந்தாள். 'அழகான இளவரசியே, இப்போது இருப்பதைவிட நீ இன்னும் அழகாக ஆக வேண்டுமா? அப்படி என்றால் இந்த மந்திர முத்துமாலையை அணிந்துகொள்'' என்று ஷகானாவிடம் ஒரு முத்துமாலையைக் கொடுத்தாள்.

'இவ்வளவு அழகான முத்துமாலையை நான் இதுவரை பார்த்ததே இல்லை'' என்று சொன்ன ஷகானா, அதைக் கழுத்தில் அணிந்துகொண்டாள்.  
அடுத்த நொடி ஷகானாவின் கையும் காலும் குறுகிச் சுருங்கின. அவள் மிகவும் வயதான முதியவள் ஆகிவிட்டாள். இந்தக் காட்சியைக் கண்ட இளவரசியின் தோழிகள் பொங்கி அழுதார்கள். அவர்கள்  இளவரசியை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
விவரம் அறிந்த ராஜா கோபமானார். 'என் மகளை ஏமாற்றி இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்தக் கிழவியைச் சீக்கிரம் பிடித்து சிறையில் அடையுங்கள்'' என்று கட்டளையிட்டார்.
பாட்டியைப் பிடிப்பதற்காகத் தளபதி சில வீரர்களுடன் நீரூற்றுக்கு வந்தான். அப்போது அந்தப் பாட்டி மெதுவாக வானில் பறந்து செல்வதைப் பார்த்தான்.

அப்படியே விளம்பரம் செய்யப்பட்டது. செய்தி அறிந்த பலரும் அந்தச் சூனியக்காரியைத் தேடி அலைந்தார்கள். ஆனால், எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போதுதான் வெளிநாட்டில் வசிக்கும் ஷாகித் என்ற இளைஞன் அந்தத் தகவலை அறிந்தான். ஷாகித் அன்றே சூனியக்காரியைத் தேடிப் புறப்பட்டான்.  அவனுக்கு அதிர்ஷ்டமும் இருந்தது. அவன் நீரூற்றை நெருங்கியபோது பாட்டி அங்கே இருப்பதைப் பார்த்தான்.
பாட்டி ஒரு பாறையில் சாய்ந்து தூங்கிக்கொண்டு இருந்தாள். பக்கத்தில் இருந்த மூட்டையில் முத்துமாலையும் இருந்தது.

இப்படிப்பட்ட ஒரு முத்துமாலைதான் இளவரசியைக் கிழவியாக மாற்றி இருக்கும். நான் இந்த மாலையை அணிந்து ஒரு கிழவன் ஆகிறேன் என்று நினைத்தான் ஷாகித். நொடிப் பொழுதில் அந்த மாலையை எடுத்து அணிந்துகொண்டு கிழவன் ஆகிவிட்டான்.
அப்போது பாட்டி கண் விழித்தாள். முத்துமாலையையும் இளைஞனையும் பார்த்து 'நீ ஏன் இந்த மாலை அணிந்து கிழவன் ஆனாய்?'' என்று கேட்டாள்.
ஷாகித் தந்திரமாகப் பேசினான் 'மன்னிக்க வேண்டும். நான் ஒரு ஏழை. எனக்கென்று யாரும் இல்லை. எனவே மிகவும் சீக்கிரம் இறந்துவிட விரும்புகிறேன். கிழவன் ஆகிவிட்டால் சீக்கிரம் இறந்துவிடலாம் என்று முத்துமாலையை அணிந்துகொண்டேன். ஆனால் இப்போது நான் செய்தது தவறு என்று புரிகிறது'' என்று சொல்லி போலியாக அழுதான்.

பாட்டிக்கு அவன் மீது இரக்கம் ஏற்பட்டது. 'தம்பி வருத்தப்படாதே. உனக்கு நான் உதவி செய்கிறேன்'' என்று சொல்லி வேறு ஒரு முத்துமாலையைக் கொடுத்தாள். அவன் அதை அணிந்ததும் முன்பு இருந்ததுபோன்று இளைஞனாக மாறினான். பிறகு பாட்டிக்கு நன்றி சொல்லி புறப்பட முற்பட்டான்.

அப்போது பாட்டி 'நீ இப்போது எங்கே செல்கிறாய் என்று எனக்குத் தெரியும். ஆனால், இளவரசியின் கழுத்தில் இந்த முத்துமாலையை அணிவிப்பதற்கு முன்பு அவளுக்குச் சாட்டையால் பத்து அடி கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் அவள் பழைய உருவத்தைப் பெறுவாள்'' என்றாள்.

அரண்மனையை அடைந்த ஷாகித் 'ராஜாவே, எனக்கு அனுமதி கொடுங்கள். உங்கள் மகளை முன்பு இருந்தது போன்று அழகி ஆக்குகிறேன்'' என்று ராஜாவிடம் சொன்னான்.
ராஜா உடனடியாக அவனைத் தன் மகளிடம் அழைத்துச் சென்றான். ஷாகித் தன் கையில் இருந்த சாட்டையால் இளவரசியை அடிக்கத் தொடங்கினான். பாவம் இளவரசி! வேதனை தாளாமல் துடித்தாள்.

மகள் படும் துன்பத்தைப் பார்த்து மனம் கலங்கிக் கண்ணீர் வடித்தார் ராஜா. அடிபட்ட இளவரசி மயங்கி விழுந்தாள். அந்த நேரத்தில் ஷாகித், பாட்டி கொடுத்த முத்துமாலையை இளவரசியின் கழுத்தில் அணிவித்தான். அடுத்த நொடியே அவள் பேரழகியாக எழுந்தாள்.
ராஜா மகிழ்ந்தார். 'இளைஞனே, நீ அந்த சூனியக்காரியையும் பிடித்துக்கொண்டு வந்தால்  உனக்கு ஆயிரம் தங்க நாணயங்கள் பரிசளிக்கிறேன்'' என்றார்.
அப்போது இளவரசி முன்னால் வந்து 'வேண்டாம் அப்பா. என் ஆணவப் பேச்சுதான் ஆபத்தில் சிக்க வைத்தது. அந்தப் பாட்டிக்குத் தண்டனை கொடுக்க வேண்டாம். என்னைக் காப்பாற்றிய இவருக்கு உடனே பரிசு கொடுக்க வேண்டும். அதோடு, இவரையே நான் திருமணம் செய்துகொள்ளவும்  விரும்புகிறேன்'' என்று சொன்னாள்.
அவள் விருப்பத்துக்கு ராஜாவும் சம்மதம் தெரிவித்தார். ஷகானா மற்றும் ஷாகித்தின் திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.



உனக்கு
பயந்து நான்
வழமையான
பாதையையும்
மாற்றிவிட்டேன்
வாழ்க்கையை
மட்டுமல்ல
தெருவையும் தான்

உனக்கு
உலகவிருது
கொடுக்க வேண்டும்
காதல் ஆடை
அலங்காரத்துக்கு

கண்ணீரில்
விளக்கு எரியும்
காதல் நம் காதல்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக