ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு

2 posters

Go down

மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Empty மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு

Post by nandagopal.d Mon Jul 22, 2013 6:48 pm

"நேற்று இரவு விருந்துக்கு வந்து விட்டு போனார்; இன்று காலை அவர் திடீர் மரணம்' என்று செய்தி வருகிறது. இதைக் கேட்டு உறவினர்கள் கதறுகின்றனர்; நண்பர்கள் அங்கலாய்க்கின்றனர்; பெரிய தலைவரென்றால், நாடே பேசுகிறது.
உதாரணம்: பெருந்தலைவர் காமராஜ், மதிய உணவு உண்டு, சிறிது ஓய்வுக்காக படுக்க போனவர், எழுந்து வரவில்லை.
திடீர் மரணம் என்றால், மாரடைப்பு தான். மாரடைப்பு என்றால் இதயத்திற்கு செல்லும் ரத்த நாளமான, கரோனரி ரத்த நாள முழு அடைப்பு. கரோனரி ஆஞ்சியோகிராமில் அடைப்பு இல்லாதவர், திடீர் மரணமடைகிறார். ஏன்?
ரத்த நாளத்தில் உட்சுவர், நடுசுவர், வெளிச்சுவர் உண்டு. உட்சுவர் கண்ணாடி போன்று, ஒரே ஒரு அடுக்கை கொண்டதால், சிறிய பிரச்னையானாலும் எளிதில் பாதிப்படைகிறது. நடுசுவர், தசைகளால் ஆனது. இது சுருங்கி விரியும் தன்மை கொண்டது. வெளிச்சுவர் இரண்டு சுவர்களை தாங்கி கொண்டுள்ளது. ரப்பர் போல சுருங்கி விரியும் தன்மை கொண்டது ரத்த குழாய். ரத்தத்தில் அதிகமாகவுள்ள கெட்ட கொழுப் புகளான எல்.டி.எல்., - வி.எல்.டி.எல்., - டி.ஜி.எல்., இவை அதிகமாக இருந்து, நல்ல கொழுப்பான எச்.டி.எல்., குறைவாக இருந் தாலும், அதிகமாக சர்க்கரை இருந்தாலும் ரத்தத்தின் நீர் தன்மை குறைந்து, ரத்தம் கெட்டியாக இருக்கும்.
இதனால் ரத்த ஓட்டம் குறைகிறது. கெட்டக் கொழுப்பு, ரத்த நாளத்தின் உட்சுவர் மீது படர்ந்து இருக்கும். சில நேரங்களில் இது கட்டியாக வளர்ந்து, அடைப்பை உண்டாக்கும். இது ஒரு வகை அடைப்பு. மற்றொரு வகையில், ரத்த நாளத்தின் உட்சுவரில் விரிசல் ஏற்பட்டு, அந்த விரிசலில் கெட்டக் கொழுப்பு, நடு சுவருக்கும், உட்சுவருக்கும் இடையில் சேர்ந்து விடும். இந்த அடைப்பு இ.சி.ஜி., டிரெட் மில், எக்கோ கார்டியே கிராம், ஆஞ்சியோ கிராம் முதலிய பரிசோதனைகளால் கூட கண்டறிய முடியாது. தற்கொலை படை, வெடிகுண்டுகளை உடலில் கட்டி, நாட்டில் செல்வாக்குமிக்க, புகழ் பெற்ற தலைவர்களைக் கொன்று, தானும் சிதறி அழிவதோடு இல்லாமல், ஒன்றுமறியாத மக்களையும் கொன்று அழிக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜிவின் மரணத்தை யாரும் மறக்க முடியாது. மே 21, 1991 அன்று நடந்த சம்பவத்தில், அவரது சிதறிய உடலை, சென்னை ஜி.எச்., சவ அறையில் பார்த்து, நான் கதறி அழுதேன்.
இப்போது நாமெல்லாம் நம் உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு அலைகிறோம். எப்படி?
நமது உடலிலுள்ள ரத்த நாளத்தின் உட் சுவரில், கெட்டக் கொழுப்புகளான டி.ஜி.எல்., - எல்.டி.எல்., - வி.எல்.டி.எல்., போன்றவைகள் படர்ந்து விடும். இவை நாளடைவில் அதிகமாகச் சேர்ந்து, அடைப்பாக மாறும்.
அடைப்பு பெரிதாகி, நாளத்தின் விட்டத்தை அடைக்கும். இதை  "அதெரோமேட்டஸ் பிளேக்' (ச்tடஞுணூணிட்ச்tணிதண் ணீடூச்ணுதஞு) என்பர். இது, கெட்டியாக இருக்கும்.  பால், தயிர் வைத்த பாத்திரத்தின் சுவரில் படர்ந்து இருப்பது போல, இவை இருக்கும். இது ஒரு வகை. இது ஆஞ்சியோ கிராமில் தெரியும்.
இந்த வகை அடைப்பிற்கு உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி, ஸ்டென்ட் அல்லது பை-பாஸ் செய்து கொள்ளலாம். 90 சதவீதம் கீழுள்ள அடைப்பிற்கு திட்டமிட்டு வைத்தியம் பார்க்கலாம்.
அடுத்த வகை, மென்மையான, "வல்னரபுள் பிளேக்!' ஆனால், இது பயங்கரமானது. ரத்த நாளத்தில் உட்சுவரில் விரிசில் ஏற்படும் போது, கெட்டக் கொழுப்புகள், விரிசல் மூலமாக உள்ளே சென்று, நாளடைவில் பலூன் போல விரிவடைகிறது. இது எந்த நேரத்திலும், பலூன் போலவே வெடித்து விடும்.
உடலில் எங்காவது காயம் ஏற்பட்டால் சிறிது ரத்தம் வெளியேறி, பின் உறைந்து நின்று விடுகிறது அல்லவா? ரத்தத்திலுள்ள தட்டை அணுக்கள் எனப்படும், "பிளேட்லெட்' தான் இதற்கு காரணம்.
பலூன் கட்டி, உட்சுவருக்கும் நடுசுவருக்கும் இடையில் இருப்பதால், கட்டி வெடித்த பின், ரத்தம் சிறிது வெளியேறி, பின் உறைகிறது. உறைந்த பகுதி ரத்த நாளத்தை அடைத்து, இதயத்தை செயலிழக்க செய்து, திடீர் மரணத்தை ஏற்படுத்துகிறது. இது தான் ஆங்கிலத்தில், "சடன் கார்டியாக் டெத்' எனப்படுகிறது. இந்த பலூன் வகை, "பிளேக்'கை, ஆஞ்சியோகிராமில் கண்டுபிடிக்க முடியாது. இதயத்திற்கு ரத்தத்தை எடுத்து செல்லும் ரத்த நாளம், ஐந்து மடங்கு வரை விரிவடைந்து, இதயத்திற்கு ரத்தம் கொடுக்கும். அதிக வேலை, உடற்பயிற்சி, படி ஏறுவது, மன உளைச்சல், அலைச்சல் ஆகியவற்றின் போது, இதயத்திற்கு அதிக ரத்தம் தேவைப்படும்.
அப்போது, ரத்த நாளம் அதிகளவில் விரிவடைந்து கொடுக்க நேரிடும். விரியும் தன்மையில் கோளாறு ஏற்பட்டால், மார்பு வலி வரும்.
இந்த வகையான மார்பு வலி தான், பெண்களுக்கு 90 சதவீதம் இருக்கும். இதை ஆங்கிலத்தில், "பிரின்ஸ்மட்டல் அல்லது ஸ்பாஸ்டிக் ஆஞ்சைனா' என அழைப்பர். இது சில நேரங்களில் ஆபத்தாக முடியும்.
இந்த இரண்டும் தான், நாம் உடலில் கட்டிக் கொண்டு அலையும் மனித வெடிகுண்டுகள். இப்போது புரிகிறதா...
மனித வெடிகுண்டின் வரலாறு
ரத்த நாளத்திலுள்ள உட்சுவர், வழவழப்பாக இருக்கும். இதனால், ரத்தத்திலுள்ள தட்டணுக்கள், வெள்ளை அணுக்கள் சுவரில் ஒட்டாமல், ரத்தம் ஓடிக் கொண்டே இருக்கும். எதுவும் ஒட்டாது. இந்த வழுவழுப்புத் தன்மை, குழந்தை பருவத்திலிருந்து 22 வயது வரை நன்றாக இருக்கும். அதன் பிறகு இது குறைந்து விடுகிறது.
நம் 25வது வயதிலிருந்து வழுவழுப்புத் தன்மை குறைந்து, கெட்டக் கொழுப்பு படர ஆரம் பிக்கும். அதிக எடை, தினமும் மாமிசம், புகை, மது, உடல் உழைப்பு இல்லாமை, இவைகளால் கொழுப்பு படரத் துவங்கி விடுகிறது.  இந்த கொழுப்பு கட்டியாக வளர்ந்து, முழு அடைப்பாக மாறி விடுகிறது.
ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், அதிக எடை, அதிக கொலஸ்டிரால் என்று பல காரணங்கள், "சாப்ட் பிளேக்' கட்டிகளை வெடிக்கச் செய்து விடும்.
மனித வெடிகுண்டை செயலிழக்கச் செய்வது எப்படி?
இந்த மனித வெடிகுண்டுகள், "வெடிக் காமல்'  செயலிழக்க செய்வது எப்படி? ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பை கட்டுப்பாட்டில் வைத்து, உடற்பயிற்சி தினமும் செய்து வர வேண்டும். யோகா, தியானம் செய்ய வேண்டும்.
"ஸ்டேட்டின்' என்ற, கொலஸ்டிரால் குறையும் மருந்தை தினமும் உட்கொள்ள வேண்டும். இது ரத்த நாளத்தின் உட்சுவரில் படிந்துள்ள கெட்டக் கொழுப்பை குறைக்கிறது. மேலும், இந்த கொழுப்பு கட்டியையும் குறைக்கிறது. ஆஸ்பரின் அல்லது சூப்பர் ஆஸ்பரின் இரண்டும், ரத்தம் உறைவதைத் தடுத்து, திடீர் மரணத்தை தடுத்து விடும். இது உயிர் காக்கும் அபூர்வ மருந்து.
மார்பு வலி ஏற்பட்ட உடன், மருத்துவமனை செல்ல வேண்டும். "எமர்ஜென்சி ஆஞ்சியோகிராம்' செய்து, அடைபட்ட ரத்த குழாயை திறந்து, "ஸ்டென்ட்' வைத்து, ரத்த ஓட்டத்தை சரி செய்ய வேண்டும். இந்த மாரடைப்பை கண்டறிய, கூகீOகஏ கூ பரிசோதனை செய்து, அடைப்பு இல்லையா என அறிய முடியும்.
மார்பு வலி, மாரடைப்பை, வாயுக்கோளாறு என்று கருதி அசட்டையாக இருந்து விடாமல், இ.சி.ஜி., டிராப் டி, எக்கோ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.
மனித வெடிகுண்டு உருவாகாமல் தடுப்பது எப்படி?
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கெட்டக் கொழுப்பு இவைகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, வெறும் வயிற்று சர்க்கரை, உணவுக்குப் பின் சர்க்கரை மட்டும் போதாது. ஏஆஅ1ஞி என்ற, மூன்று மாத சர்க்கரையின் அளவு தான் மிகவும் முக்கியம். புகைப் பிடித்தால், நிகோட்டின் என்ற நச்சுப் பொருள், உடலிலுள்ள ரத்தக் குழாயை பாதிக்கிறது.
மன உளைச்சல், மன அழுத்தமில்லாமல் இருக்க வேண்டும். உடல் எடை , இடுப்பு அளவு அதிகமாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும், மனித வெடிகுண்டு என்ற, "வல்னரபுள் பிளேக்' உருவாகக் காரணமாகும் மூலப் பொருட்கள். இது ஏற்படாமல் வாழ்வதே, மனிதனின் முக்கிய கடமை!
நன்றிகள் :தின மலர்
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்


பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Empty Re: மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு

Post by Muthumohamed Tue Jul 23, 2013 4:48 am

பதிவு அருமையிருக்கு கொஞ்சம் இடைவெளி விட்டு பதிந்து இருக்கலாம் படிக்க சிரமமாக இருக்கிறது



மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Mமனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Uமனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Tமனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Hமனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Uமனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Mமனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Oமனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Hமனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Aமனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Mமனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Eமனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Empty Re: மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு

Post by nandagopal.d Tue Jul 23, 2013 6:33 pm

நன்றி நண்பரே தங்களின் கருத்திற்க்கு
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்


பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Empty Re: மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum