ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிசியின் பயன்பாடு

4 posters

Go down

ஈகரை அரிசியின் பயன்பாடு

Post by thivya balan Sat Jul 20, 2013 9:26 pm

அரிசியின் பயன்பாடு உலகம் முழுவதும் உள்ளது. குறிப்பாக தென்னிந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மக்களின் அன்றாட உணவாக அரிசி இருக்கிறது. அரிசி உற்பத்தியில் மியான்மர் (பர்மா) முதலிடம் வகிக்கிறது. அதுபோல் தாய்லாந்து, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அதிகம் விளைகிறது.

அரிசி ஒரு மாவுப் பொருளாகும். உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அரிசியையே உணவாகக் கொண்டுள்ளனர்.

அரிசியில் அதாவது தவிடு நீக்கப்படாத அரிசியில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி12, வைட்டமின் கே, வைட்டமின் இ, மாவுச்சத்து, புரதச் சத்துக்கள் நிரம்பியுள்ளன.
...

ஆனால் தவிடு நீக்கப்பட்ட அரிசியில் மாவுச்சத்து மட்டுமே நிரம்பியுள்ளது.

நாம் அனைவருமே கண்ணைப் பறிக்கும் வெண்மையான மல்லிகைப் பூ போன்ற அரிசியையே விரும்புகிறோம். இதில் நாவிற்கு சுவை மட்டுமே உண்டு.

இரண்டு மூன்று முறை பாலீஷ் செய்யப்பட்ட இவ்வகையான அரிசியில் உள்ள எல்லா வைட்டமின் சத்துக்களும் வெளியேற்றப்பட்டு விடுகிறது.

இந்த அரிசியை சமைத்து உண்பதால் மாவுச் சத்து அதிகம் உடலில் சேருகிறது. ஆரம்பத்தில் அந்த மாவுச்சத்தைக் கட்டுப்படுத்த உடலில் இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இன்சுலின் சுரப்பு குறைவதால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால் சர்க்கரை நோய் உண்டாகிவிடுகிறது.

விஞ்ஞான முன்னேற்றம் காணாத காலத்தில் மக்கள் கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தினர். உரலில் நெல்லை போட்டு உலக்கையால் அந்த நெல்லினை இடித்து அதன் உமியைப் பிரித்து சுத்தம் செய்து அந்த அரிசியை சமைத்து சாப்பிட்டனர்.

இவ்வாறு அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் ஜீரணிக்கச் செய்யும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்னும் பழமொழியை நாம் அறிந்திருப்போம்..

எந்த ஒரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இதன் பொருள். ஆனால் அதை முறியடிக்கும் மருந்தும் அந்த உணவிலேயே இருக்கிறது என்பதை பலர் அறிந்திருக்கமாட்டார்கள்.

இதைத்தான் சித்தர்கள் சத்துரு(பகைவன்), மித்துரு(நண்பன்) என்கின்றனர்.

தவிடு நீக்காத அரிசியை சாப்பிடுவதால் அதன் பலன்கள் அனைத்தும் சரிசமமாக உடலுக்கு சேர்கிறது.

இந்த தவிடு நீக்காத அரிசி இந்தியாவில் கேரளாவிலும், இலங்கையிலும் மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் இந்த அரிசியை பயன்படுத்துவது தற்போது வெகுவாக குறைந்துவிட்டது.


உனக்கு
பயந்து நான்
வழமையான
பாதையையும்
மாற்றிவிட்டேன்
வாழ்க்கையை
மட்டுமல்ல
தெருவையும் தான்

உனக்கு
உலகவிருது
கொடுக்க வேண்டும்
காதல் ஆடை
அலங்காரத்துக்கு

கண்ணீரில்
விளக்கு எரியும்
காதல் நம் காதல்
thivya balan
thivya balan
பண்பாளர்


பதிவுகள் : 73
இணைந்தது : 21/04/2013

Back to top Go down

ஈகரை Re: அரிசியின் பயன்பாடு

Post by ராஜு சரவணன் Sat Jul 20, 2013 11:43 pm

என் சிறு வயதில் கிராமத்தில் தான் இருந்தேன். அங்கு ஓருத்தொருக்கொருவர்  "என்னப்பா உங்க வீட்டில் நெல்லு சோறாமுள்ள" என்று கேட்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் மாதம் இரண்டு அல்லது மூன்று முறைதான் நெல்லு சோறு ஆக்குவார்கள். பொதுவாக நெல்லு சொறு ஆக்கினால் அவர்கள் வீட்டில் எதோ விஷேசம் என்று தான் ஊரில் பேசிகொள்வார்கள்.நெல்லு சோறு என்று சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கு. நாம் நினைப்பது போல் சோறு என்பதுஅரிசி சோற்றை மட்டும் குறிக்காது. சோளத்தால் ஆக்கும் சோறுக்கு சோளச்சோறு, வரகு கொண்டு ஆக்கப்படும் சோறுக்கு வரஞ்சோறு என்றும்,திணை கொண்டு ஆக்கும் சோறுக்கு திணைசோறு என்றும் பெயர்.

அதேபோல் அவர்கள் நெல்லை அரிசியாக்கும் முறை அருமையாக இருக்கும். உரலில் நெல்லை போட்டு , நெல்லை உலக்கையால் இருவர் மாறி மாறி குத்துவர்.அவ்வாறு குத்தும் போது நெல் வெளியே சிதறாமல் இருக்க வாய்பட்டி எனும் ஒரு கூம்பு வடிவ பெட்டியை வைத்து விடுவார்கள்.

குறிப்பாக நெல் குத்தும் வேலையை இளம்பெண்களே செய்வார்கள். அதனால்தான் அரிசி குத்தும் அக்காமகளே என்று பாடல்களில் பாடுவதுன்டு.

உலக்கை கொண்டு குத்தப்பட்ட நெல் அரிசியும் தவிடுமான கலவையாக இருக்கம்.அதில் இருந்து அரிசியை முறத்தை வைத்து புடைத்து தனியாக பிரித்து எடுக்கப்படுகிறது. புடைத்தலின் போது கழிவாக வரும் தவிட்டை மீண்டும் சலித்து பவுடர் போன்ற தவிட்டை சிறுவர்களுக்கு கொடுப்பார்கள். நல்ல சுவையாக இருக்கும். மீதி தவிடு மாடுகளுக்கு கொடுக்கப்படும்.

இவ்வாறு தான் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் நெல்லில் இருந்து அரிசி பிரித்தெடுத்த முறை. இப்போது எந்த கிராமத்திலும் இதுபோன்ற முறையை பார்க்கமுடியாது.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: அரிசியின் பயன்பாடு

Post by ராஜு சரவணன் Sun Jul 21, 2013 12:53 pm

பழசை அசை போட வைத்த உங்கள் பதிவுக்கு நன்றி புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: அரிசியின் பயன்பாடு

Post by பூவன் Sun Jul 21, 2013 12:58 pm

ராஜு சரவணன் wrote:பழசை அசை போட வைத்த உங்கள் பதிவுக்கு நன்றி புன்னகை

இன்றெல்லாம் கைகுத்தல்  அரிசி  கண்ணில்  கூட பார்க்கமுடியாது , அந்த காலம் மலை எரி போய்விட்டது   , இதெல்லாம் புத்தகத்தில்  மட்டுமே  படித்து  தெரிந்து  கொள்ளும் படியாக அமைந்து  விட்டது .  அரிசி என்ற  ஒன்றே கண்காட்சி பொருள்  ஆனாலும்  இனி வரும்  காலங்களில்  நடந்தாலும் சொல்வதற்க்கு  இல்லை  ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: அரிசியின் பயன்பாடு

Post by ராஜு சரவணன் Sun Jul 21, 2013 1:00 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:பழசை அசை போட வைத்த உங்கள் பதிவுக்கு நன்றி புன்னகை

இன்றெல்லாம் கைகுத்தல்  அரிசி  கண்ணில்  கூட பார்க்கமுடியாது , அந்த காலம் மலை எரி போய்விட்டது   , இதெல்லாம் புத்தகத்தில்  மட்டுமே  படித்து  தெரிந்து  கொள்ளும் படியாக அமைந்து  விட்டது .  அரிசி என்ற  ஒன்றே கண்காட்சி பொருள்  ஆனாலும்  இனி வரும்  காலங்களில்  நடந்தாலும் சொல்வதற்க்கு  இல்லை  ....

உண்மைதான் பூவன்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: அரிசியின் பயன்பாடு

Post by manikandan.dp Sun Jul 21, 2013 1:03 pm

அருமையான பதிவு...சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

ஈகரை Re: அரிசியின் பயன்பாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum