Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வுby ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963]
2 posters
Page 1 of 1
சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963]
சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963]
போக்குவரவு மிகுந்துள்ள நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணத்திற்குப் பெரும் துணையாக இருப்பது சிக்னல் விளக்குகளே! இவ்விளக்குகளை முதன்முதலாக வடிவமைத்துச் செயல்படுத்தியவர்தான் கேரெட் மோர்கன் (Garrett Morgan) என்ற மேதை. தீயணைப்பு வீரர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்துடன் புகைமூட்டத்திலிருந்து வீரர்கள் எளிதில் தப்பிச் செல்ல (Gas Mask) என்ற முகக் கவசத்தைக் கண்டுபிடித்த பெருமையும் இவரையே சாரும்.
இளமைப் பருவம்:
இவர் 1877ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க நாட்டில் கென்டுகி மாகாணத்தில் உள்ள பாரிஸ் நகரில் பிறந்தார். இவரது பெற்றோர் சிட்னி (Sydney) மற்றும் எலிசபெத் ஆவர். அவர்கள் அடிமைகளாக வாழ்ந்தமையால் குடும்பம் வறுமையில் வாடியது. மோர்கன் தனது பள்ளிப் படிப்பை அய்ந்தாம் வகுப்பிற்கு மேல் தொடரும் வாய்ப்பை இழந்தார். தன் 14ஆம் வயதில் வேலை தேடி வேற்று இடம் செல்ல முயற்சித்தார். முதன்முதலாக ஒஹியோ மாகாணத்தில், சின்சினாட்டி (Ohio-Cincinnati) நகரில் ஒரு நிலக்கிழாருக்கு உதவியாளராகச் சென்று பணியாற்றினார்.
தனது அன்றாடச் செலவுகள் போக மீதமுள்ள பணத்தைச் சேமித்து தன் படிப்பைத் தொடர்ந்தார். இந்த நிலையில் 1895ஆம் ஆண்டு தையல் இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் பணியில் இணைந்தார். இங்ஙனம் இவரது தேடுதல் வேட்டை தொடர்ந்தது _ அறிவு எல்லைகள் விரிந்தன. தையல் இயந்திரங்களைப் பழுதுபார்த்து வந்த இவர் அவ்வியந்திரங்களின் இயக்கத்தை முழுமையாக உணர்ந்த பொறியாளராக உயர்ந்தார். 1907ஆம் ஆண்டில் இதன் அடிப்படையில் ஆடைகளை வடிவமைக்கும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். இவருள் இருந்த நுண் ஆற்றல் இவ்வண்ணம் சிறிது சிறிதாக வெளிப்பட்டது.
விபத்தும் விளைவும்:
1911ஆம் ஆண்டு மார்ச் மாதம் நியூயார்க் நகரின் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் நடந்த தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்களிடம் போதுமான பாதுகாப்புக் கவசங்கள் இல்லாத நிலை; படுமோசமான இழப்புகளைச் சந்திக்க வேண்டிய நிலை. இந்த நிலையிலிருந்து மக்களைக் காப்பாற்ற முதன்முதலில் முகமூடிக் கவசத்தைக் (Gas Mask) கண்டுபிடித்து மக்கள் துயர் துடைக்க வழிவகுத்தார்.
இந்த முகக் கவசத்தின் முன்பகுதியில் அமைந்த இரண்டு சுவாசக் குழாய்கள் தரையைச் சென்றடையும் வரை வடிவமைக்கப்பட்டிருக்கும். கட்டடத்தில் சூழ்ந்துள்ள புகை மேல் எழும்பும்போது தரைப் பகுதியில் உள்ள காற்றை எளிதில் சுவாசிப்பதற்கு ஏற்றாற்போல் இக்கவசம் அமைந்திருக்கும். அதனால் தீயணைப்பு வீரர்கள் எளிதில் தம் பணியைத் தொடர ஏதுவாகும். இப்பாதுகாப்புக் கவசத்திற்கு 1914ஆம் ஆண்டில் இவர் வடிவமைப்பு உரிமை பெற்றார்;
நடைமுறைப் பயன்பாடு:
இவர் வாழ்ந்த க்ளீவ்லாண்ட் நகரில் உள்ள ஓர் ஏரியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அய்ம்பதுக்கும் மேற்பட்டவர்கள் நச்சுவாயுவால் தாக்கப்பட்டனர். இச்செய்தி மோர்கனிடம் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த இவர் தனது சகோதரரின் துணையுடனும் வேறு பல உதவியாளர்களுடனும் சுரங்கப் பாதை அமைக்கும் இடத்திற்குப் பாதுகாப்புக் கவசங்களுடன் விரைந்தார்.
அனைவரும் தயங்கி வெளியே செயலற்றுப் போன நேரம் இவர் துணிவுடன், கவசத்தின் துணையுடன் உள்ளே சென்று ஒவ்வொரு பணியாளரையும் சமயோசிதமாகக் காப்பாற்றினார். மாந்த நேயம் சார்ந்த இவரது கண்டுபிடிப்பு இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.
போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் கண்டுபிடிப்பு:
இவர் வாழ்ந்த க்ளீவ்லாண்டு நகரில் சாலைப் போக்குவரத்து எண்ணற்ற வாகனங்களால் பெரும் நெருக்கடிக்கு ஆட்பட்டது _ விபத்துகள் தொடர்ந்தன. இதனை அறிந்த இவர் முதன்முதலில் போக்குவரத்தைச் சீர்செய்ய பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளை ஒவ்வொரு சாலையிலும் அமைக்கும் முறையை 1923ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.
இவரது சமிக்ஞை விளக்குகள் அமைக்கப்பட்ட சாலைகளில் பாதசாரிகள், வாகனங்கள் ஆகியவை முறையாகவும் _ பாதுகாப்புடனும் செல்லும் பாங்கு அனைவரையும் கவர்ந்தது-. இவரது கண்டுபிடிப்பை உலகம் முழுதும் விற்பனை செய்ய ஜெனரல் எலக்ட்ரிகல் நிறுவனம் 40,000 டாலர்கள் சன்மானம் தந்து இவரிடமிருந்து உரிமை பெற்றுச் சென்றது. இவர் கண்ட இப்போக்குவரவு சாதனங்கள் 3 வண்ண விளக்குகளுடன் எல்லா நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிறர் நலனும் பாதுகாப்பும்:
நில், கவனி, செல் என்பது இவரது கண்டுபிடிப்பின் அடிப்படைத் தத்துவம். இதே தத்துவம் நம் வாழ்க்கைப் பயணத்தையும் வளமாக்கும். இவ்வுலகில் தோன்றிய மனிதகுலம் பகுத்தறிவு வழியில் நின்று, தனக்கு நன்மை தருவனவற்றையும், பிறருக்குப் பயன் தருவனவற்றையும் கவனித்து, உண்மையான பாதையில் சென்றால் என்றும் இனிமையும் இன்பமும் பெற்று உயரும்.
நன்றி :- பெரியார் பிஞ்சு
போக்குவரவு மிகுந்துள்ள நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணத்திற்குப் பெரும் துணையாக இருப்பது சிக்னல் விளக்குகளே! இவ்விளக்குகளை முதன்முதலாக வடிவமைத்துச் செயல்படுத்தியவர்தான் கேரெட் மோர்கன் (Garrett Morgan) என்ற மேதை. தீயணைப்பு வீரர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்துடன் புகைமூட்டத்திலிருந்து வீரர்கள் எளிதில் தப்பிச் செல்ல (Gas Mask) என்ற முகக் கவசத்தைக் கண்டுபிடித்த பெருமையும் இவரையே சாரும்.
இளமைப் பருவம்:
இவர் 1877ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க நாட்டில் கென்டுகி மாகாணத்தில் உள்ள பாரிஸ் நகரில் பிறந்தார். இவரது பெற்றோர் சிட்னி (Sydney) மற்றும் எலிசபெத் ஆவர். அவர்கள் அடிமைகளாக வாழ்ந்தமையால் குடும்பம் வறுமையில் வாடியது. மோர்கன் தனது பள்ளிப் படிப்பை அய்ந்தாம் வகுப்பிற்கு மேல் தொடரும் வாய்ப்பை இழந்தார். தன் 14ஆம் வயதில் வேலை தேடி வேற்று இடம் செல்ல முயற்சித்தார். முதன்முதலாக ஒஹியோ மாகாணத்தில், சின்சினாட்டி (Ohio-Cincinnati) நகரில் ஒரு நிலக்கிழாருக்கு உதவியாளராகச் சென்று பணியாற்றினார்.
தனது அன்றாடச் செலவுகள் போக மீதமுள்ள பணத்தைச் சேமித்து தன் படிப்பைத் தொடர்ந்தார். இந்த நிலையில் 1895ஆம் ஆண்டு தையல் இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் பணியில் இணைந்தார். இங்ஙனம் இவரது தேடுதல் வேட்டை தொடர்ந்தது _ அறிவு எல்லைகள் விரிந்தன. தையல் இயந்திரங்களைப் பழுதுபார்த்து வந்த இவர் அவ்வியந்திரங்களின் இயக்கத்தை முழுமையாக உணர்ந்த பொறியாளராக உயர்ந்தார். 1907ஆம் ஆண்டில் இதன் அடிப்படையில் ஆடைகளை வடிவமைக்கும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். இவருள் இருந்த நுண் ஆற்றல் இவ்வண்ணம் சிறிது சிறிதாக வெளிப்பட்டது.
விபத்தும் விளைவும்:
1911ஆம் ஆண்டு மார்ச் மாதம் நியூயார்க் நகரின் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் நடந்த தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்களிடம் போதுமான பாதுகாப்புக் கவசங்கள் இல்லாத நிலை; படுமோசமான இழப்புகளைச் சந்திக்க வேண்டிய நிலை. இந்த நிலையிலிருந்து மக்களைக் காப்பாற்ற முதன்முதலில் முகமூடிக் கவசத்தைக் (Gas Mask) கண்டுபிடித்து மக்கள் துயர் துடைக்க வழிவகுத்தார்.
இந்த முகக் கவசத்தின் முன்பகுதியில் அமைந்த இரண்டு சுவாசக் குழாய்கள் தரையைச் சென்றடையும் வரை வடிவமைக்கப்பட்டிருக்கும். கட்டடத்தில் சூழ்ந்துள்ள புகை மேல் எழும்பும்போது தரைப் பகுதியில் உள்ள காற்றை எளிதில் சுவாசிப்பதற்கு ஏற்றாற்போல் இக்கவசம் அமைந்திருக்கும். அதனால் தீயணைப்பு வீரர்கள் எளிதில் தம் பணியைத் தொடர ஏதுவாகும். இப்பாதுகாப்புக் கவசத்திற்கு 1914ஆம் ஆண்டில் இவர் வடிவமைப்பு உரிமை பெற்றார்;
நடைமுறைப் பயன்பாடு:
இவர் வாழ்ந்த க்ளீவ்லாண்ட் நகரில் உள்ள ஓர் ஏரியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அய்ம்பதுக்கும் மேற்பட்டவர்கள் நச்சுவாயுவால் தாக்கப்பட்டனர். இச்செய்தி மோர்கனிடம் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த இவர் தனது சகோதரரின் துணையுடனும் வேறு பல உதவியாளர்களுடனும் சுரங்கப் பாதை அமைக்கும் இடத்திற்குப் பாதுகாப்புக் கவசங்களுடன் விரைந்தார்.
அனைவரும் தயங்கி வெளியே செயலற்றுப் போன நேரம் இவர் துணிவுடன், கவசத்தின் துணையுடன் உள்ளே சென்று ஒவ்வொரு பணியாளரையும் சமயோசிதமாகக் காப்பாற்றினார். மாந்த நேயம் சார்ந்த இவரது கண்டுபிடிப்பு இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.
போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் கண்டுபிடிப்பு:
இவர் வாழ்ந்த க்ளீவ்லாண்டு நகரில் சாலைப் போக்குவரத்து எண்ணற்ற வாகனங்களால் பெரும் நெருக்கடிக்கு ஆட்பட்டது _ விபத்துகள் தொடர்ந்தன. இதனை அறிந்த இவர் முதன்முதலில் போக்குவரத்தைச் சீர்செய்ய பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளை ஒவ்வொரு சாலையிலும் அமைக்கும் முறையை 1923ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.
இவரது சமிக்ஞை விளக்குகள் அமைக்கப்பட்ட சாலைகளில் பாதசாரிகள், வாகனங்கள் ஆகியவை முறையாகவும் _ பாதுகாப்புடனும் செல்லும் பாங்கு அனைவரையும் கவர்ந்தது-. இவரது கண்டுபிடிப்பை உலகம் முழுதும் விற்பனை செய்ய ஜெனரல் எலக்ட்ரிகல் நிறுவனம் 40,000 டாலர்கள் சன்மானம் தந்து இவரிடமிருந்து உரிமை பெற்றுச் சென்றது. இவர் கண்ட இப்போக்குவரவு சாதனங்கள் 3 வண்ண விளக்குகளுடன் எல்லா நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிறர் நலனும் பாதுகாப்பும்:
நில், கவனி, செல் என்பது இவரது கண்டுபிடிப்பின் அடிப்படைத் தத்துவம். இதே தத்துவம் நம் வாழ்க்கைப் பயணத்தையும் வளமாக்கும். இவ்வுலகில் தோன்றிய மனிதகுலம் பகுத்தறிவு வழியில் நின்று, தனக்கு நன்மை தருவனவற்றையும், பிறருக்குப் பயன் தருவனவற்றையும் கவனித்து, உண்மையான பாதையில் சென்றால் என்றும் இனிமையும் இன்பமும் பெற்று உயரும்.
நன்றி :- பெரியார் பிஞ்சு
malik- இளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
Re: சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963]
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Similar topics
» வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு!
» வேற்றுகிரகத்தில் இருந்து வந்த முதல் அபூர்வ சமிக்ஞை விஞ்ஞானிகள் ஆய்வு
» விளக்கை அணைத்து விட்டு படிக்கிறோம்...!
» கூகிள் க்ரோம்: விளக்கை அணை! நீட்சி!
» சிக்னல் :
» வேற்றுகிரகத்தில் இருந்து வந்த முதல் அபூர்வ சமிக்ஞை விஞ்ஞானிகள் ஆய்வு
» விளக்கை அணைத்து விட்டு படிக்கிறோம்...!
» கூகிள் க்ரோம்: விளக்கை அணை! நீட்சி!
» சிக்னல் :
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|