ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு!

2 posters

Go down

கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Empty கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு!

Post by சாமி Wed Jul 17, 2013 11:47 pm

தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்திருக்கும் தொன்மையான கல்வெட்டுக்களில் மிகப்பெரிய கல்வெட்டாகக் கருதப்படும் பூலாங்குறிச்சி கல்வெட்டு, முறையான பராமரிப்பு இல்லாமல் தற்போது அழியும் நிலையில் உள்ளது. சிவகங்கை மாவட்டம் பொன்னமராவதியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் சிவகங்கை-புதுக்கோட்டை மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள பூலாங்குறிச்சி என்னும் கிராமத்தில் இந்தக் கல்வெட்டு காணப்படுகிறது. கிட்டத்தட்ட 40 அடி நீளமும் 6 அடி உயரமும் கொண்ட இந்தக் கல்வெட்டானது அருகருகே 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது.

1979-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பூலாங்குறிச்சி கல்வெட்டில் நிலத்தைப் பராமரிப்பது தொடர்பாகவும், அதன் உரிமை யாருக்கு என்பது குறித்தும் பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே தமிழ் கல்வெட்டுக்களில் நிலம் தொடர்பான செய்திகளைக் கூறும் விரிவான கல்வெட்டு என்கிற சிறப்பும் இக்கல்வெட்டுக்கு உண்டு. ‘கோச்சேந்தன் கூற்றன்’ என்கிற மன்னனின் பெயரில் இக்கல்வெட்டு உள்ளது. மேலும் ஒல்லையூர் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய பகுதிகள் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்ததாகவும் இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. ‘கோச்சேந்தன் கூற்றன்’ என்கிற பெயரைக்கொண்டு இக்கல்வெட்டு களப்பிரர் காலத்தைச் சேர்ந்தது என தொல்லியல் அறிஞர்கள் கருதுவதால் தமிழ் வரலாற்றின் இருண்ட காலமாகக் கருதப்படும் களப்பிரர் காலம் பற்றிய செய்திகளை ஆதாரப்பூர்வமாக தெரிந்துகொள்ள துணை புரியும் முக்கிய கல்வெட்டாக இது அறியப்படுகிறது.

இக்கல்வெட்டின் காலம் கி.பி. 442 எனக் கூறப்பட்டாலும் தொல்லியல் அறிஞர்களிடையே பூலாங்குறிச்சி கல்வெட்டின் காலம் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனாலும் கி.பி. 3 - கி.பி.9-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களில் மிக முக்கியமான இடம் பூலாங்குறிச்சி கல்வெட்டிற்கு உண்டு.

கல்வெட்டு அமைந்துள்ள இடம் குறித்து உள்ளூர்வாசிகள் பலருக்குத் தெரியவில்லை. வயதான சிலரிடம் விசாரித்த பிறகே ஊரின் எல்லையில் அமைந்துள்ள சிவன் கோயில் குன்று அருகே கல்வெட்டு அமைந்திருப்பதை அறிய முடிந்தது. சிறிய குன்றின் மீது அமைந்துள்ள சிவன் கோயில் தொன்மையானது என்பதால் அங்கு செல்வதற்கான சாலை வசதிகளை உள்ளூர் நிர்வாகம் ஓரளவிற்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

சிவன் கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டிற்கு இடதுபுறமாக உள்ள பாறைச்சரிவில் இறங்கியபோது அதிர்ச்சி காத்திருந்தது. தமிழகத்தின் மிகப்பெரிய கல்வெட்டு, தமிழர்களின் தொன்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் கல்வெட்டு எனப் பாராட்டப்படும் பூலாங்குறிச்சி கல்வெட்டு ஓர் அறிவிப்புப் பலகை கூட இல்லாமல் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு சிதிலமடைந்திருந்தது. பாறைச்சரிவில் மூன்று பாகமாக எழுதப்பட்டுள்ள கல்வெட்டின் ஒரு பகுதி மட்டும் வெயிலின் தாக்கத்திற்கு ஆட்படாமல் ஓரளவு தெளிவாக உள்ளது. அதன் அருகில் அமைந்துள்ள மற்ற இரண்டு பகுதிகளும் வாசிக்க முடியாத அளவு மங்கிப் போய் காட்சியளிக்கின்றன. அருகில் இருந்து பார்த்தால் கல்வெட்டின் முழு தோற்றத்தைக் காண முடியவில்லை. ஏதோ வெள்ளை சாக்பீசால் கோடு போட்டது போல் தெரிகிறது. கல்வெட்டிற்கு அருகில் உள்ள நிலத்தில் இறங்கி சற்றுத் தொலைவில் இருந்து பாறைச்சரிவைப் பார்த்தால் கல்வெட்டின் பிரம்மாண்டம் புலப்படுகிறது. நெருங்கிப் பார்க்கும்போது சுவடே தெரியாத கல்வெட்டு, தூரத்தில் இருந்து பார்க்கும்போது தெளிவாகத் தெரிவது இக்கல்வெட்டின் மற்றொரு ஆச்சரியம். கேமரா விழி வழியே கல்வெட்டைப் பார்த்தால் இன்னும் தெளிவாகக் காணலாம்.

பொதுவாக தமிழ் கல்வெட்டுக்களில் எழுத்துக்கள் சிறிய அளவில்தான் காணப்படும்.ஆனால் பூலாங்குறிச்சி கல்வெட்டு கொட்டை எழுத்துக்களாக, பாறைச்சரிவையே ஒரு பலகை போல் பயன்படுத்தி சரியான அளவுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.  கல்வெட்டிற்கு  அருகிலே வயல் உள்ளதால் விவசாயம் நடைபெறும்போது கல்வெட்டு, பயிர்களுக்குள் மறைந்து விடுகிறது.

உள்ளூர்வாசிகளும் கல்வெட்டைப் பராமரிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது கல்வெட்டு சிறிது சிறிதாக மங்கி வருகிறது.

இந்தக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அதன் நிலை இன்றும் பரிதாபத்திற்குரியதாகவே இருக்கிறது. பூலாங்குறிச்சி கல்வெட்டு குறித்து தொல்லியல் ஆய்வுத்துறை தனது இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தாலும் இந்தக் கல்வெட்டைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இனியேனும் ஆவன செய்வார்களா அதிகாரிகள்?
நன்றி-புதிய தலைமுறை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Empty Re: கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு!

Post by மதுமிதா Thu Jul 18, 2013 11:26 am

வருத்தபடக் கூடிய விஷயம்


கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Mகவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Aகவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Dகவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Hகவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! U



கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரு அரிய தமிழ் கல்வெட்டு - சீனாவில் இருந்து !
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் வாழ்க தமிழ் நம் உயிர் மூச்சி manoranjan மனோரஞ்சன் எழுதும் தமிழ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum