Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனிமரம் தோப்பாகும்
4 posters
Page 1 of 1
தனிமரம் தோப்பாகும்
பதினான்கு மாஸ்டர் டிகிரி... நான்கு நிறுவனங்களுக்கு மேனேஜிங் டைரக்டர்... நானூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு... ஆயிரக்கணக்கான என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வழிகாட்டி எனப் பன்முகம் காட்டி சுழன்று கொண்டிருப்பவர் விஜயலட்சுமி. மதுரையைச் சேர்ந்த இந்த பிஸினஸ் பெண்மணியின் வெற்றிக்குப் பின்னால் நின்றுகொண்டிருப்பது வலி நிறைந்த சோகங்கள். ‘இனி வாழ்க்கையில ஒண்ணுமே இல்ல... இனிமே அவ்ளோதான்’ என்று சோர்ந்து போகிற பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும் உத்வேகத்தைக் கொடுக்கிறது இவரது வெற்றிக் கதை.
எனக்கு சொந்த ஊர் கோயம்புத்தூரு. நானும் என் கணவர் ஸ்டீபன் ராஜும் ஒரே கல்லூரியில் என்ஜினீயரிங் படிக்கும்போது காதல் திருமணம் செய்து கொண்டோம். வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ததால் என் பெற்றோர் ஆதரிக்காமல் என்னுடனான தொடர்பை துண்டித்துக் கொண்டனர். அதே சமயம் கணவர் வீட்டிலோ, எங்க இருவரையும் மனப்பூர்வமாக ஆசீர்வதித்து பச்சைக்கொடி காட்டினார்கள். கணவர் ஸ்டீபன் பொறியாளராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். எங்க அன்பின் வெளிப்பாடா அடுத்தடுத்து இரு ஆண் குழந்தைங்க பிறந்தாங்க. பெரிய பையனுக்கு 4 வயசும், சின்னவனுக்கு 2 வயசும் இருக்கும்போது என் அன்புக் கணவர் ஸ்டீபன் ஒரு விபத்துல இறந்துட்டாரு. அப்போ எனக்கு 25 வயசு. என்னால அவர் இறப்பை தாங்கிக்கவே முடியல. 3 மாசம் கோமா ஸ்டேஜ்ல மருத்துவமனையிலேயே கிடந்தேன்.
சிகிச்சைக்குப் பிறகு உடல் ரீதியா சரியானாலும் மன ரீதியா கணவர் இல்லாத வெறுமையை நினைச்சு தினம் தினம் அழ ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துல தற்கொலை பண்ணிக்கொள்ளக்கூட முயற்சித்தேன். அந்த நேரத்துல என்னோட குழந்தைகளோட முகம் ஞாபகம் வந்து, தற்கொலை முடிவை கைவிட்டுட்டேன். அப்பா, அம்மா இல்லாத குழந்தைகளா வளர்ந்து அவர்களோட எதிர்காலம் சிதைஞ்சி போக நான் விரும்பல. பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து காட்டணும்னு முடிவு பண்ணேன். நான் படிச்ச என்ஜினீயரிங் படிப்பை வச்சி ஏதாவது பிசினஸ் துவக்கி சொந்தமா சம்பாதிச்சு எம்புள்ளைகளை காப்பாத்தலாம்ன்னு நினைச்சேன். தீவிர யோசனைக்குப் பிறகு கணவர் வீட்டுலயும், கூடப் படிச்ச ஃப்ரண்ட்ஸ் கிட்டயும் ஆலோசனை கேட்டு பேங்க்ல 5 லட்சம் ரூபாய் லோன் வாங்கி என் பேரிலேயே ‘விஜயலட்சுமி கம்ப்யூட்டர்ஸ்’ என்ற சாஃப்ட்வேர் நிறுவனத்தை 12 பணியாளர்களோட வீட்டு மாடியிலேயே துவக்கினேன். 1990 - 2000 காலகட்டத்தில் சாஃப்ட்வேர் ஃபீல்டுக்கு நல்ல கிரேஸ் இருந்ததால தொடர்ச்சியான க்ளையண்ட்ஸ் கிடைச்சாங்க. அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி விஜயலட்சுமி கம்ப்யூட்டர்ஸ், இப்போ ஹைடெக் சொல்யூஷனா உருமாறி சாஃப்ட்வேர் எக்ஸ்போர்ட், அவுட் சோர்சிங்ன்னு எல்லாத் துறையிலும் தொழில் ரீதியாவும், பொருளாதார ரீதியாவும் வளர்ந்திருக்கிறது" என்கிற விஜயலட்சுமியின் முகத்தில் பெருமை நிரம்பி வழிகிறது. 12-இல் ஆரம்பித்த பணியாளர்களின் எண்ணிக்கை இப்போது 400-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் வேலை பார்க்கும் நிறுவனமாக உயர்ந்துள்ளது. இதற்கிடையே தன்னுடைய பிள்ளைகள் நிகில், அஷ்வின் இருவரையும் படிக்க வைத்துக்கொண்டே பணியிலும் கவனம் செலுத்தி வெற்றியும் பெற்றுள்ளார் விஜயலட்சுமி.
கணவர் இல்லாததாலும் பெண்ணாக இருப்பதாலும் வேலை சார்ந்து வெளியூர்களுக்குப் போகும்போது வழக்கமாக பெண்கள் சந்திக்கும் பல பிரச்சினைககளையும், நக்கலானப் பேச்சுகளையும் எதிர்கொண்டாலும் மனம் சோர்ந்து போகாம முழு கவனத்தையும் பிள்ளைங்க நலனிலும், நிறுவனத்தின் வளர்ச்சியிலுமே செலுத்தினேன். என்னதான் கம்பெனியை பார்த்துக்கிட்டாலும் கணவர் இல்லாத வெறுமை அடிக்கடி மனசை கஷ்டப்படுத்தும்.
இந்நிலையில்தான் எங்க குடும்ப டாக்டர் ரஜினி பிரேமலதா, ‘புத்தகங்கள் படிச்சா மன அழுத்தம் குறைஞ்சு போகும். ஏதாவது கோர்ஸ் எடுத்துப்படி’ன்னு ஒரு தோழியா அறிவுறுத்தினாங்க. தொடர்ந்து படிச்சா மட்டுமே திறமைகளை வளர்த்துக்க முடியும்னு உறுதியா நம்பி அழகப்பா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம்ன்னு ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் சிறந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து பகுதி நேரமா நேரடியா போய்ப் படித்தும், தொலைநிலைக் கல்வி மூலமாகவும் படிக்கத் துவங்கினேன். இப்படி ஆரம்பிச்ச என்னோட படிப்பு ஆர்வம் எம்.இ. சிஸ்டம்ஸ் என்ஜினீயரிங், எம்.பி.ஏ. மனிதவள மேம்பாடு, எம்.ஹெச்.ஆர்.எம்., எம்.ஏ., பப்ளிக் அட்மினிஸ்ட்ரேட்டிவ் என்று பல மாஸ்டர் டிகிரிகளை தமிழக பல்கலைக்கழகங்களில் முடித்ததோடு இங்கிலாந்திலுள்ள காடிஃப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. கம்ப்யூட்டர்ஸ் அட்மினிஸ்ட்ரேட்டிவ் படிப்பையும், சிகாகோ யுனிவர்சிட்டியில் எம்.எஸ். சிஸ்டம்ஸ் சொல்யூஷன் படிப்பையும் நேரடியாகவே சென்று தங்கிப் படித்து, அங்கிருந்தபடியே நிறுவனத்தையும் கவனித்துக்கொண்டேன்.
பிறகு மூன்று எம்.பில்., இரண்டு பிஎச்.டி. முடிச்சேன். படிப்பார்வம் இன்னும் தொடர்ந்துகிட்டேதான் இருக்கு. இப்பக்கூட, மூணாவது பிஎச்.டி.யை பப்ளிக் அட்மினிஸ்ட்ரேட்டிவ்ல துறையில பண்ணிட்டிருக்கேன். மேலும் இவ்வளவு படித்ததால் மட்டுமே பல தனியார் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளுக்கும், நிறுவனங்களுக்கும், ரிசர்ச் கமிட்டிகளுக்கும் கன்சல்டன்ட்டாகவும் மோட்டிவேட் அதிகாரியாகவும் சென்று என்னால் ஆலோசனை வழங்க முடிகிறது. வாழ்க்கையில நேரமும், காலமும் ரொம்ப முக்கியம். நேரத்தை சரியாகத் திட்டமிட்டுப் பயன்படுத்தினாலே ஒவ்வொரு மனிதரும் வெற்றி பெறலாம்" என்று கூறும் விஜயலட்சுமி, தன்னுடைய வீட்டிலேயே ஆரம்பித்த விஜயலட்சுமி கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை தற்போது பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி என 4 யூனிட்களாக விரிவடைய வைத்துள்ளார்.
டெலி கம்யூனிகேஷன் சாஃப்ட்வேர் வெப் டெக்னாலஜி, எண்டர்பிரைசஸ் ரிசர்ச் புரோகிராமிங், ஆபீஸ் ஆட்டோமேஷன், என்ஜினீயரிங் காலேஜ் ஆட்டோமேஷன் என்று பல்வேறு சாஃப்ட்வேர்களை தனது நிறுவனம் மூலம் உருவாக்கி இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார். இதுவரை 64 சாஃப்ட்வேர்களை சொந்தமாக டிசைன் செய்துள்ள விஜயலட்சுமி, மதுரை மாவட்டத்தின் முதல் பெண் கம்ப்யூட்டர் மென்பொருள் ஏற்றுமதியாளர் என்பதோடு, மதுரையில் எஸ்.எஸ்.ஐ. (SMALL SCALE INDUSTRIES ) தரச் சான்றிதழ் பெற்ற முதல் நிறுவனம் இவருடையது என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
தனது உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் உயர்ந்த விஜயலட்சுமிக்கு இவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் இன்னும் தனது கணவர் வாழ்ந்த வீட்டின் சிறிய அறையையே தன் அலுவலக அறையாகப் பயன்படுத்தி, மகன்களுடன் கணவரின் நினைவுகளை சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். தாய், தந்தையைப் போலவே விஜயலட்சுமியின் இரு மகன்களும் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்துப் படித்து வருகின்றனர்.
கிராமப்புறங்களில் அமைந்துள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வெப் டெவலப்பிங் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, எங்கள் நிறுவனத்தின் ரிசர்ச் குழுவினருடன் இணைந்து சிலபஸ்களை நாங்களே வடிவமைத்து முழுக்க முழுக்க இலவசமாக 12 நாட்கள் என்ஜினீயரிங் கல்லூரிகளிலேயே தங்கி, 120 மணி நேரம் வெப் டெவலப்பிங் பயிற்சியை கொடுக்கிறோம். 4 வருடம் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களுக்கு டெக்னாலஜி துறையில் ப்ராக்டிகல் அனுபவம் இருப்பதில்லை. இந்நிலை முற்றிலும் மாற வேண்டும். இலவச வெப் டெவலப்பிங் பயிற்சியை எங்கள் குழு 10 நாட்கள் அளித்தபிறகு 11-ஆவது நாள் மாணவர்கள் கற்றுள்ள திறனை அறிய, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் துணையுடன் ஆன்லைன் மெயின் எக்ஸாம் வைத்து, தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழும் தருகிறோம். இதில் சிறப்பு என்னவென்றால் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்கள் மைக்ரோசாஃப்ட் வெப்சைட்களிலேயே அதிகாரப்பூர்வமாக வெளிவந்துவிடும். இந்தப் பட்டியலைப் பார்த்து பல எம்.என்.சி. நிறுவனங்கள் தங்கள் கம்பெனிகளுக்கு பொறியாளர்களை தேர்வு செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நாங்கள் பயிற்சி கொடுத்து இதுவரை மைக்ரோசாஃப்ட் ஆன்லைன் தேர்வுகளில் ஒரு மாணவர் கூட தோல்வியடைய வில்லை என்பது எங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி" என்கிறார் விஜயலட்சுமி.
மேலும் தன்னைப் போலவே பெண்கள் சுயமாக முன்னேறிக் காட்ட வேண்டும் என்பதற்காக 1998-ஆம் ஆண்டு ஓர் அமைப்பை ஏற்படுத்தி கணவனை இழந்த பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு டெக்னிக்கல் ட்ரெய்னிங், கவுன்சலிங், கம்ப்யூட்டர் பயிற்சிகள், மருத்துவ உதவிகள் போன்றவற்றை இலவசமாக அளித்து வருகிறார்.
2003-ஆம் ஆண்டு மத்திய அரசின் சிறந்த பெண் தொழில் முனைவோர் விருதை டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கையால் பெற்றுள்ளார் என்பதோடு, இங்கிலாந்திலுள்ள இன்டர்நேஷனல் சாஃப்ட்வேர் கன்சல்டண்ட் அசோசியேஷனின் ‘விமன் ஆஃப் தி இயர்’ விருதையும் வென்றுள்ளார்.
விஜயலட்சுமியின் அலைபேசி எண்: 98421 74800
பூ. சர்பனா
புதியதலைமுறை
எனக்கு சொந்த ஊர் கோயம்புத்தூரு. நானும் என் கணவர் ஸ்டீபன் ராஜும் ஒரே கல்லூரியில் என்ஜினீயரிங் படிக்கும்போது காதல் திருமணம் செய்து கொண்டோம். வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ததால் என் பெற்றோர் ஆதரிக்காமல் என்னுடனான தொடர்பை துண்டித்துக் கொண்டனர். அதே சமயம் கணவர் வீட்டிலோ, எங்க இருவரையும் மனப்பூர்வமாக ஆசீர்வதித்து பச்சைக்கொடி காட்டினார்கள். கணவர் ஸ்டீபன் பொறியாளராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். எங்க அன்பின் வெளிப்பாடா அடுத்தடுத்து இரு ஆண் குழந்தைங்க பிறந்தாங்க. பெரிய பையனுக்கு 4 வயசும், சின்னவனுக்கு 2 வயசும் இருக்கும்போது என் அன்புக் கணவர் ஸ்டீபன் ஒரு விபத்துல இறந்துட்டாரு. அப்போ எனக்கு 25 வயசு. என்னால அவர் இறப்பை தாங்கிக்கவே முடியல. 3 மாசம் கோமா ஸ்டேஜ்ல மருத்துவமனையிலேயே கிடந்தேன்.
சிகிச்சைக்குப் பிறகு உடல் ரீதியா சரியானாலும் மன ரீதியா கணவர் இல்லாத வெறுமையை நினைச்சு தினம் தினம் அழ ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துல தற்கொலை பண்ணிக்கொள்ளக்கூட முயற்சித்தேன். அந்த நேரத்துல என்னோட குழந்தைகளோட முகம் ஞாபகம் வந்து, தற்கொலை முடிவை கைவிட்டுட்டேன். அப்பா, அம்மா இல்லாத குழந்தைகளா வளர்ந்து அவர்களோட எதிர்காலம் சிதைஞ்சி போக நான் விரும்பல. பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து காட்டணும்னு முடிவு பண்ணேன். நான் படிச்ச என்ஜினீயரிங் படிப்பை வச்சி ஏதாவது பிசினஸ் துவக்கி சொந்தமா சம்பாதிச்சு எம்புள்ளைகளை காப்பாத்தலாம்ன்னு நினைச்சேன். தீவிர யோசனைக்குப் பிறகு கணவர் வீட்டுலயும், கூடப் படிச்ச ஃப்ரண்ட்ஸ் கிட்டயும் ஆலோசனை கேட்டு பேங்க்ல 5 லட்சம் ரூபாய் லோன் வாங்கி என் பேரிலேயே ‘விஜயலட்சுமி கம்ப்யூட்டர்ஸ்’ என்ற சாஃப்ட்வேர் நிறுவனத்தை 12 பணியாளர்களோட வீட்டு மாடியிலேயே துவக்கினேன். 1990 - 2000 காலகட்டத்தில் சாஃப்ட்வேர் ஃபீல்டுக்கு நல்ல கிரேஸ் இருந்ததால தொடர்ச்சியான க்ளையண்ட்ஸ் கிடைச்சாங்க. அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி விஜயலட்சுமி கம்ப்யூட்டர்ஸ், இப்போ ஹைடெக் சொல்யூஷனா உருமாறி சாஃப்ட்வேர் எக்ஸ்போர்ட், அவுட் சோர்சிங்ன்னு எல்லாத் துறையிலும் தொழில் ரீதியாவும், பொருளாதார ரீதியாவும் வளர்ந்திருக்கிறது" என்கிற விஜயலட்சுமியின் முகத்தில் பெருமை நிரம்பி வழிகிறது. 12-இல் ஆரம்பித்த பணியாளர்களின் எண்ணிக்கை இப்போது 400-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் வேலை பார்க்கும் நிறுவனமாக உயர்ந்துள்ளது. இதற்கிடையே தன்னுடைய பிள்ளைகள் நிகில், அஷ்வின் இருவரையும் படிக்க வைத்துக்கொண்டே பணியிலும் கவனம் செலுத்தி வெற்றியும் பெற்றுள்ளார் விஜயலட்சுமி.
கணவர் இல்லாததாலும் பெண்ணாக இருப்பதாலும் வேலை சார்ந்து வெளியூர்களுக்குப் போகும்போது வழக்கமாக பெண்கள் சந்திக்கும் பல பிரச்சினைககளையும், நக்கலானப் பேச்சுகளையும் எதிர்கொண்டாலும் மனம் சோர்ந்து போகாம முழு கவனத்தையும் பிள்ளைங்க நலனிலும், நிறுவனத்தின் வளர்ச்சியிலுமே செலுத்தினேன். என்னதான் கம்பெனியை பார்த்துக்கிட்டாலும் கணவர் இல்லாத வெறுமை அடிக்கடி மனசை கஷ்டப்படுத்தும்.
இந்நிலையில்தான் எங்க குடும்ப டாக்டர் ரஜினி பிரேமலதா, ‘புத்தகங்கள் படிச்சா மன அழுத்தம் குறைஞ்சு போகும். ஏதாவது கோர்ஸ் எடுத்துப்படி’ன்னு ஒரு தோழியா அறிவுறுத்தினாங்க. தொடர்ந்து படிச்சா மட்டுமே திறமைகளை வளர்த்துக்க முடியும்னு உறுதியா நம்பி அழகப்பா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம்ன்னு ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் சிறந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து பகுதி நேரமா நேரடியா போய்ப் படித்தும், தொலைநிலைக் கல்வி மூலமாகவும் படிக்கத் துவங்கினேன். இப்படி ஆரம்பிச்ச என்னோட படிப்பு ஆர்வம் எம்.இ. சிஸ்டம்ஸ் என்ஜினீயரிங், எம்.பி.ஏ. மனிதவள மேம்பாடு, எம்.ஹெச்.ஆர்.எம்., எம்.ஏ., பப்ளிக் அட்மினிஸ்ட்ரேட்டிவ் என்று பல மாஸ்டர் டிகிரிகளை தமிழக பல்கலைக்கழகங்களில் முடித்ததோடு இங்கிலாந்திலுள்ள காடிஃப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. கம்ப்யூட்டர்ஸ் அட்மினிஸ்ட்ரேட்டிவ் படிப்பையும், சிகாகோ யுனிவர்சிட்டியில் எம்.எஸ். சிஸ்டம்ஸ் சொல்யூஷன் படிப்பையும் நேரடியாகவே சென்று தங்கிப் படித்து, அங்கிருந்தபடியே நிறுவனத்தையும் கவனித்துக்கொண்டேன்.
பிறகு மூன்று எம்.பில்., இரண்டு பிஎச்.டி. முடிச்சேன். படிப்பார்வம் இன்னும் தொடர்ந்துகிட்டேதான் இருக்கு. இப்பக்கூட, மூணாவது பிஎச்.டி.யை பப்ளிக் அட்மினிஸ்ட்ரேட்டிவ்ல துறையில பண்ணிட்டிருக்கேன். மேலும் இவ்வளவு படித்ததால் மட்டுமே பல தனியார் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளுக்கும், நிறுவனங்களுக்கும், ரிசர்ச் கமிட்டிகளுக்கும் கன்சல்டன்ட்டாகவும் மோட்டிவேட் அதிகாரியாகவும் சென்று என்னால் ஆலோசனை வழங்க முடிகிறது. வாழ்க்கையில நேரமும், காலமும் ரொம்ப முக்கியம். நேரத்தை சரியாகத் திட்டமிட்டுப் பயன்படுத்தினாலே ஒவ்வொரு மனிதரும் வெற்றி பெறலாம்" என்று கூறும் விஜயலட்சுமி, தன்னுடைய வீட்டிலேயே ஆரம்பித்த விஜயலட்சுமி கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை தற்போது பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி என 4 யூனிட்களாக விரிவடைய வைத்துள்ளார்.
டெலி கம்யூனிகேஷன் சாஃப்ட்வேர் வெப் டெக்னாலஜி, எண்டர்பிரைசஸ் ரிசர்ச் புரோகிராமிங், ஆபீஸ் ஆட்டோமேஷன், என்ஜினீயரிங் காலேஜ் ஆட்டோமேஷன் என்று பல்வேறு சாஃப்ட்வேர்களை தனது நிறுவனம் மூலம் உருவாக்கி இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார். இதுவரை 64 சாஃப்ட்வேர்களை சொந்தமாக டிசைன் செய்துள்ள விஜயலட்சுமி, மதுரை மாவட்டத்தின் முதல் பெண் கம்ப்யூட்டர் மென்பொருள் ஏற்றுமதியாளர் என்பதோடு, மதுரையில் எஸ்.எஸ்.ஐ. (SMALL SCALE INDUSTRIES ) தரச் சான்றிதழ் பெற்ற முதல் நிறுவனம் இவருடையது என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
தனது உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் உயர்ந்த விஜயலட்சுமிக்கு இவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் இன்னும் தனது கணவர் வாழ்ந்த வீட்டின் சிறிய அறையையே தன் அலுவலக அறையாகப் பயன்படுத்தி, மகன்களுடன் கணவரின் நினைவுகளை சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். தாய், தந்தையைப் போலவே விஜயலட்சுமியின் இரு மகன்களும் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்துப் படித்து வருகின்றனர்.
கிராமப்புறங்களில் அமைந்துள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வெப் டெவலப்பிங் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, எங்கள் நிறுவனத்தின் ரிசர்ச் குழுவினருடன் இணைந்து சிலபஸ்களை நாங்களே வடிவமைத்து முழுக்க முழுக்க இலவசமாக 12 நாட்கள் என்ஜினீயரிங் கல்லூரிகளிலேயே தங்கி, 120 மணி நேரம் வெப் டெவலப்பிங் பயிற்சியை கொடுக்கிறோம். 4 வருடம் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களுக்கு டெக்னாலஜி துறையில் ப்ராக்டிகல் அனுபவம் இருப்பதில்லை. இந்நிலை முற்றிலும் மாற வேண்டும். இலவச வெப் டெவலப்பிங் பயிற்சியை எங்கள் குழு 10 நாட்கள் அளித்தபிறகு 11-ஆவது நாள் மாணவர்கள் கற்றுள்ள திறனை அறிய, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் துணையுடன் ஆன்லைன் மெயின் எக்ஸாம் வைத்து, தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழும் தருகிறோம். இதில் சிறப்பு என்னவென்றால் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்கள் மைக்ரோசாஃப்ட் வெப்சைட்களிலேயே அதிகாரப்பூர்வமாக வெளிவந்துவிடும். இந்தப் பட்டியலைப் பார்த்து பல எம்.என்.சி. நிறுவனங்கள் தங்கள் கம்பெனிகளுக்கு பொறியாளர்களை தேர்வு செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நாங்கள் பயிற்சி கொடுத்து இதுவரை மைக்ரோசாஃப்ட் ஆன்லைன் தேர்வுகளில் ஒரு மாணவர் கூட தோல்வியடைய வில்லை என்பது எங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி" என்கிறார் விஜயலட்சுமி.
மேலும் தன்னைப் போலவே பெண்கள் சுயமாக முன்னேறிக் காட்ட வேண்டும் என்பதற்காக 1998-ஆம் ஆண்டு ஓர் அமைப்பை ஏற்படுத்தி கணவனை இழந்த பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு டெக்னிக்கல் ட்ரெய்னிங், கவுன்சலிங், கம்ப்யூட்டர் பயிற்சிகள், மருத்துவ உதவிகள் போன்றவற்றை இலவசமாக அளித்து வருகிறார்.
2003-ஆம் ஆண்டு மத்திய அரசின் சிறந்த பெண் தொழில் முனைவோர் விருதை டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கையால் பெற்றுள்ளார் என்பதோடு, இங்கிலாந்திலுள்ள இன்டர்நேஷனல் சாஃப்ட்வேர் கன்சல்டண்ட் அசோசியேஷனின் ‘விமன் ஆஃப் தி இயர்’ விருதையும் வென்றுள்ளார்.
விஜயலட்சுமியின் அலைபேசி எண்: 98421 74800
பூ. சர்பனா
புதியதலைமுறை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: தனிமரம் தோப்பாகும்
அருமை திருமதி விஜயலக்ஷ்மியின் உழைப்பு எனக்கு பாடமாக உள்ளது நன்றி nanri
anbalagan- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 17/07/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|