Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்காவின் புது எதிரி?
4 posters
Page 1 of 1
அமெரிக்காவின் புது எதிரி?
சம்பவம் ஒன்று :
கடந்த வருடம் விக்கிலீக்ஸ் அசாஞ்சேவை போட்டுத்தள்ள... அமெரிக்கா கையை முறுக்கிக்கொண்டு தயார் ஆனது. ஸ்வீடன் நாட்டில் அவர் மீது ஒரு பாலியல் குற்றச்சாட்டு பதியப்பட்டு கைதுக்கு தயார் ஆனபோது திடீரென்று, லண்டனில் இருந்த ஈக்குவேடார் நாட்டின் தூதரகத்துக்குள் போய் தஞ்சமடைந்து விட்டார். இன்றுவரை ஈக்குவேடார்தான் அவரைப் பாதுகாக்கிறது. எப்போது வெளியே வருவார் என்று ஸ்வீடனும், ஸ்வீடனை பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்காவும் கொலைவெறியோடு காத்திருக்கிறார்கள்.
சம்பவம் இரண்டு :
போன மாதம் உலக அரங்கில் அமெரிக்காவுக்குப் பெரும் தலைகுனிவு. நம் எல்லோருடைய இணைய செயல்பாடுகளை அமெரிக்கா உளவு பார்க்கும், ‘ப்ரிஸம்’ என்கிற ரகசியத் திட்டத்தைப் பற்றி விலாவாரியாக ஊடகங்களுக்குப் போட்டு உடைத்து விட்டார் எட்வர்ட் ஸ்நோடன் என்கிற முப்பது வயது இளைஞர். அமெரிக்க தேசியப் பாதுகாப்பு நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒப்பந்தக்காரர் இவர். அதுவுமின்றி, சி.ஐ.ஏ.வின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர். நாட்டின் ரகசியங்களை வெளியிட்டு விட்டதாக பாதுகாப்புக் குற்றங்களுக்காக இவரை கைது செய்ய அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டிலிருந்து உஷாராக வெளியேறி, ஹாங்காங் வழியாக மாஸ்கோவுக்கு சென்றுவிட்டார் ஸ்நோடன். பல்வேறு நாடுகள் இவருக்கு புகலிடம் வழங்க தயங்கிக் கொண்டிருக்கும்போது, ஈக்குவேடார் தைரியமாக அவருக்கு தங்கள் நாட்டில் அடைக்கலம் தர முன்வந்திருக்கிறது.
அமெரிக்காவின் காலுக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டு அந்நாட்டுக்கு தென்அமெரிக்க குட்டி நாடுகள் குழி பறிப்பது புதிதல்ல. முன்பு கியூபா, பின்பு வெனிசுலா, இன்று ஈக்குவேடார். உலக கால்பந்துக் கோப்பையின் போது மட்டும்தான் இந்த நாட்டின் பெயரை நாம் அடிக்கடி கேள்விப்படுவோம். சமீபமாக அமெரிக்காவுக்கு தொடர்ந்து, ‘பெப்பே’ காட்டிக் கொண்டிருப்பதால், ஊடகங்கள் விடாமல் ஈக்குவேடாரை உச்சரிக்கத் தொடங்கியிருக்கின்றன.
தென்அமெரிக்காவின் வடமேற்கு மூலையில் அமர்ந்திருக்கும் குட்டி நாடுதான் ஈக்குவேடார். மக்கள் தொகையே ஒன்றரை கோடிக்குள்தான். தோராயமாக ஒரு லட்சம் சதுர மைல் பரப்பளவு. பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி ஸ்பானிஷ். இது தவிர அந்நாட்டின் பூர்வக்குடி மக்களின் மொழிகள் பத்துக்கும் மேலே உண்டு. இன்கா ஆதி கலாச்சாரம் கோலோச்சிய பூமி என்பதால் பழைமைக்குப் பஞ்சமேயில்லை. பழைமையான இடங்கள் என்று யுனெஸ்கோவில் பரிந்துரைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் பல இடங்கள் ஈக்குவேடாரில் உண்டு.
ஸ்பானிய காலனியாதிக்கத்தில் இருந்து 1830-இல் சுதந்திரம் பெற்றது. அப்போதிலிருந்தே குடியரசு நாடாகவே இருக்கிறது. அவ்வப்போது குட்டிக்குட்டி கலகங்களால் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டு மீண்டும் ஜனநாயகம் திரும்புவதுண்டு. நம்மூரில் எல்லாம் மனித உரிமை என்கிற சொல்லையே கொஞ்சம் காலமாகத்தான் கேட்கிறோம். இங்கே இயற்கை உரிமை பற்றி வெகுகாலமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். 2008-ஆம் ஆண்டு உலகிலேயே முதன்முறையாக இயற்கை உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்த நாடு ஈக்குவேடார். இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட அரிய வகை உயிரினங்களும் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட செடி, கொடி வகைகளும் நிறைந்த நாடு.
மக்கள் பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள். அமைதியான வாழ்க்கையை விரும்புபவர்கள். வழக்கமான தென்அமெரிக்க நாடுகளைப் போலவே கால்பந்து என்றால் உயிர். வணிகம் என்றால், எண்ணெய் ஏற்றுமதிதான். அந்நாட்டின் 40% வணிகத்தை எண்ணெய் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. விவசாயம் என்றால் வாழைதான். வாழை பயிரிடுவதிலும், ஏற்றுமதியிலும் உலகளவில் ஈக்குவேடாருக்குதான் முதலிடம். கோக்கோ, கரும்பு, அரிசி, பருத்தி, சோளம், காபி போன்றவையும் விளைகின்றன.
பொதுவாகவே பெரிய சச்சரவுகளுக்குள் தலையிடாத நாடாகத்தான் ஈக்குவேடார் இருந்து வந்திருக்கிறது. ஆனால், ‘ஆயில் அரசியல்’ காரணமாக அமெரிக்காவுக்கு எதிரான மனோபாவம் மனதுக்குள்ளேயே எரிமலையாய் குமுறிக்கொண்டிருந்திருக்கிறது. ரேஃபல் கோரியா அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இந்த உணர்வு முன்பிலும் அதிகமாக வெளிப்படுகிறது.
ஐம்பது வயதான கோரியா, அடிப்படையில் ஒரு பொருளாதார மேதை. 2007-இல் பொறுப்பேற்றவுடனேயே நிதி சீர்திருத்தங்களை தொடங்கினார். முந்தைய ஊழல் ஆட்சிகளின் நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்து மிக விரைவாக நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வந்தார். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய பிரச்சினைகளை மிகத்திறமையாகக் கையாண்டதால் அடுத்தடுத்து அவரே தேர்தல்களில் வென்று வருகிறார். வெனிசுலா அதிபர் ஹ்யூகோ சாவேஸின் அபிமானி. அவருக்கு நெருக்கமான நட்போடு இருந்ததால் இடதுசாரி சார்பும் உண்டு.
பெட்ரோல் விற்பனையில் அமெரிக்க நிறுவனங்களின் அடாவடியை தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறார். ‘ஐந்து பேரல் எண்ணெய் எடுக்கப்பட்டால், அவற்றில் ஒன்றே ஒன்றுதான் எடுக்கப்படும் நாட்டுக்கு கிடைக்கிறது. மீதி நான்கு வேறு எங்கோ யாருக்கோ கொழுத்த லாபத்துக்கு விற்கப்படுகிறது. இது ஏற்கெனவே முடியாத செயல். இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும் புதியதாக மாற்றி புதுப்பிப்போம்’ என்று ஒருமுறை பேசினார். அயல்நாட்டு நிறுவனங்கள் பெட்ரோலை உறிஞ்சி உறிஞ்சி ஈக்குவேடாரை சக்கையாகப் பிழிவதாக கோரியா தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகிறார். பெட்ரோலால் கிடைக்கும் உபரி லாபத்தைக்கொண்டு ஈக்குவேடார் மக்களின் ஏழ்மையைப் போக்கும் சமூக நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது அவரது திட்டம். சோசலிஸம்தான் ஈக்குவேடார் மாதிரியான நாட்டுக்குப் பொருந்தும் என்பது அவரது நம்பிக்கை.
கடந்த கால் நூற்றாண்டில் மிக வலிமையான, நேர்மையான தலைவர் என்று மக்களிடையே பெயர் எடுத்திருக்கிறார். மிக லேசான, பலகீனமான எதிர்ப்புகளும் உண்டு என்றாலும் மூன்றாம் முறையாகவும் (இரண்டு முறை தேர்தலில் வென்று) அவரே அதிபராக தொடர்வது, அவருக்குக் கிடைத்திருக்கும் அபரிமிதமான மக்கள் ஆதரவுதான் காரணம்.
அமெரிக்கா தன்னுடைய எதிரிகளை பெட்ரோல் மார்க்கெட்டில்தான் உருவாக்குகிறது.
யுவகிருஷ்ணா
புதியதலைமுறை
கடந்த வருடம் விக்கிலீக்ஸ் அசாஞ்சேவை போட்டுத்தள்ள... அமெரிக்கா கையை முறுக்கிக்கொண்டு தயார் ஆனது. ஸ்வீடன் நாட்டில் அவர் மீது ஒரு பாலியல் குற்றச்சாட்டு பதியப்பட்டு கைதுக்கு தயார் ஆனபோது திடீரென்று, லண்டனில் இருந்த ஈக்குவேடார் நாட்டின் தூதரகத்துக்குள் போய் தஞ்சமடைந்து விட்டார். இன்றுவரை ஈக்குவேடார்தான் அவரைப் பாதுகாக்கிறது. எப்போது வெளியே வருவார் என்று ஸ்வீடனும், ஸ்வீடனை பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்காவும் கொலைவெறியோடு காத்திருக்கிறார்கள்.
சம்பவம் இரண்டு :
போன மாதம் உலக அரங்கில் அமெரிக்காவுக்குப் பெரும் தலைகுனிவு. நம் எல்லோருடைய இணைய செயல்பாடுகளை அமெரிக்கா உளவு பார்க்கும், ‘ப்ரிஸம்’ என்கிற ரகசியத் திட்டத்தைப் பற்றி விலாவாரியாக ஊடகங்களுக்குப் போட்டு உடைத்து விட்டார் எட்வர்ட் ஸ்நோடன் என்கிற முப்பது வயது இளைஞர். அமெரிக்க தேசியப் பாதுகாப்பு நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒப்பந்தக்காரர் இவர். அதுவுமின்றி, சி.ஐ.ஏ.வின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர். நாட்டின் ரகசியங்களை வெளியிட்டு விட்டதாக பாதுகாப்புக் குற்றங்களுக்காக இவரை கைது செய்ய அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டிலிருந்து உஷாராக வெளியேறி, ஹாங்காங் வழியாக மாஸ்கோவுக்கு சென்றுவிட்டார் ஸ்நோடன். பல்வேறு நாடுகள் இவருக்கு புகலிடம் வழங்க தயங்கிக் கொண்டிருக்கும்போது, ஈக்குவேடார் தைரியமாக அவருக்கு தங்கள் நாட்டில் அடைக்கலம் தர முன்வந்திருக்கிறது.
அமெரிக்காவின் காலுக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டு அந்நாட்டுக்கு தென்அமெரிக்க குட்டி நாடுகள் குழி பறிப்பது புதிதல்ல. முன்பு கியூபா, பின்பு வெனிசுலா, இன்று ஈக்குவேடார். உலக கால்பந்துக் கோப்பையின் போது மட்டும்தான் இந்த நாட்டின் பெயரை நாம் அடிக்கடி கேள்விப்படுவோம். சமீபமாக அமெரிக்காவுக்கு தொடர்ந்து, ‘பெப்பே’ காட்டிக் கொண்டிருப்பதால், ஊடகங்கள் விடாமல் ஈக்குவேடாரை உச்சரிக்கத் தொடங்கியிருக்கின்றன.
தென்அமெரிக்காவின் வடமேற்கு மூலையில் அமர்ந்திருக்கும் குட்டி நாடுதான் ஈக்குவேடார். மக்கள் தொகையே ஒன்றரை கோடிக்குள்தான். தோராயமாக ஒரு லட்சம் சதுர மைல் பரப்பளவு. பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி ஸ்பானிஷ். இது தவிர அந்நாட்டின் பூர்வக்குடி மக்களின் மொழிகள் பத்துக்கும் மேலே உண்டு. இன்கா ஆதி கலாச்சாரம் கோலோச்சிய பூமி என்பதால் பழைமைக்குப் பஞ்சமேயில்லை. பழைமையான இடங்கள் என்று யுனெஸ்கோவில் பரிந்துரைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் பல இடங்கள் ஈக்குவேடாரில் உண்டு.
ஸ்பானிய காலனியாதிக்கத்தில் இருந்து 1830-இல் சுதந்திரம் பெற்றது. அப்போதிலிருந்தே குடியரசு நாடாகவே இருக்கிறது. அவ்வப்போது குட்டிக்குட்டி கலகங்களால் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டு மீண்டும் ஜனநாயகம் திரும்புவதுண்டு. நம்மூரில் எல்லாம் மனித உரிமை என்கிற சொல்லையே கொஞ்சம் காலமாகத்தான் கேட்கிறோம். இங்கே இயற்கை உரிமை பற்றி வெகுகாலமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். 2008-ஆம் ஆண்டு உலகிலேயே முதன்முறையாக இயற்கை உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்த நாடு ஈக்குவேடார். இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட அரிய வகை உயிரினங்களும் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட செடி, கொடி வகைகளும் நிறைந்த நாடு.
மக்கள் பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள். அமைதியான வாழ்க்கையை விரும்புபவர்கள். வழக்கமான தென்அமெரிக்க நாடுகளைப் போலவே கால்பந்து என்றால் உயிர். வணிகம் என்றால், எண்ணெய் ஏற்றுமதிதான். அந்நாட்டின் 40% வணிகத்தை எண்ணெய் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. விவசாயம் என்றால் வாழைதான். வாழை பயிரிடுவதிலும், ஏற்றுமதியிலும் உலகளவில் ஈக்குவேடாருக்குதான் முதலிடம். கோக்கோ, கரும்பு, அரிசி, பருத்தி, சோளம், காபி போன்றவையும் விளைகின்றன.
பொதுவாகவே பெரிய சச்சரவுகளுக்குள் தலையிடாத நாடாகத்தான் ஈக்குவேடார் இருந்து வந்திருக்கிறது. ஆனால், ‘ஆயில் அரசியல்’ காரணமாக அமெரிக்காவுக்கு எதிரான மனோபாவம் மனதுக்குள்ளேயே எரிமலையாய் குமுறிக்கொண்டிருந்திருக்கிறது. ரேஃபல் கோரியா அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இந்த உணர்வு முன்பிலும் அதிகமாக வெளிப்படுகிறது.
ஐம்பது வயதான கோரியா, அடிப்படையில் ஒரு பொருளாதார மேதை. 2007-இல் பொறுப்பேற்றவுடனேயே நிதி சீர்திருத்தங்களை தொடங்கினார். முந்தைய ஊழல் ஆட்சிகளின் நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்து மிக விரைவாக நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வந்தார். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய பிரச்சினைகளை மிகத்திறமையாகக் கையாண்டதால் அடுத்தடுத்து அவரே தேர்தல்களில் வென்று வருகிறார். வெனிசுலா அதிபர் ஹ்யூகோ சாவேஸின் அபிமானி. அவருக்கு நெருக்கமான நட்போடு இருந்ததால் இடதுசாரி சார்பும் உண்டு.
பெட்ரோல் விற்பனையில் அமெரிக்க நிறுவனங்களின் அடாவடியை தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறார். ‘ஐந்து பேரல் எண்ணெய் எடுக்கப்பட்டால், அவற்றில் ஒன்றே ஒன்றுதான் எடுக்கப்படும் நாட்டுக்கு கிடைக்கிறது. மீதி நான்கு வேறு எங்கோ யாருக்கோ கொழுத்த லாபத்துக்கு விற்கப்படுகிறது. இது ஏற்கெனவே முடியாத செயல். இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும் புதியதாக மாற்றி புதுப்பிப்போம்’ என்று ஒருமுறை பேசினார். அயல்நாட்டு நிறுவனங்கள் பெட்ரோலை உறிஞ்சி உறிஞ்சி ஈக்குவேடாரை சக்கையாகப் பிழிவதாக கோரியா தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகிறார். பெட்ரோலால் கிடைக்கும் உபரி லாபத்தைக்கொண்டு ஈக்குவேடார் மக்களின் ஏழ்மையைப் போக்கும் சமூக நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது அவரது திட்டம். சோசலிஸம்தான் ஈக்குவேடார் மாதிரியான நாட்டுக்குப் பொருந்தும் என்பது அவரது நம்பிக்கை.
கடந்த கால் நூற்றாண்டில் மிக வலிமையான, நேர்மையான தலைவர் என்று மக்களிடையே பெயர் எடுத்திருக்கிறார். மிக லேசான, பலகீனமான எதிர்ப்புகளும் உண்டு என்றாலும் மூன்றாம் முறையாகவும் (இரண்டு முறை தேர்தலில் வென்று) அவரே அதிபராக தொடர்வது, அவருக்குக் கிடைத்திருக்கும் அபரிமிதமான மக்கள் ஆதரவுதான் காரணம்.
அமெரிக்கா தன்னுடைய எதிரிகளை பெட்ரோல் மார்க்கெட்டில்தான் உருவாக்குகிறது.
யுவகிருஷ்ணா
புதியதலைமுறை
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Re: அமெரிக்காவின் புது எதிரி?
போன வாரம் இதே எதிரியைப் பற்றி இங்க செய்தி வந்ததே படத்தோட - டெக்லஸ் போட்டாரு.
இந்த எதிரி நம்ம அகலா இருக்குமோன்னு நெனச்சேன் - அடுத்த வாரம் அமெரிக்கா போகிறார்
இந்த எதிரி நம்ம அகலா இருக்குமோன்னு நெனச்சேன் - அடுத்த வாரம் அமெரிக்கா போகிறார்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அமெரிக்காவின் புது எதிரி?
யினியவன் wrote:இந்த எதிரி நம்ம அகலா இருக்குமோன்னு நெனச்சேன் - அடுத்த வாரம் அமெரிக்கா போகிறார்
தெரியும் பாஸ் நானும் வாழ்த்து சொல்லி இருக்கேன் ........
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Re: அமெரிக்காவின் புது எதிரி?
அமெரிக்காவின் ஹாட் நியூஸ் இந்த எட்வர்ட் ஸ்நோடன்.மனுஷன் பார்க்க மணிரத்தினம் பட ஹீரோ மாதிரி இருந்துகிட்டு எவ்வளவு பெரிய விஷயத்தை பொசுக்குன்னு போட்டு உடச்சுட்டார் . இவருக்கு பின்புலமாக பல நாடுகள் இருக்குமோ
அமெரிக்காவின் புது எதிரி?
சம்பவம் ஒன்று :
கடந்த வருடம் விக்கிலீக்ஸ் அசாஞ்சேவை போட்டுத்தள்ள... அமெரிக்கா கையை முறுக்கிக்கொண்டு தயார் ஆனது. ஸ்வீடன் நாட்டில் அவர் மீது ஒரு பாலியல் குற்றச்சாட்டு பதியப்பட்டு கைதுக்கு தயார் ஆனபோது திடீரென்று, லண்டனில் இருந்த ஈக்குவேடார் நாட்டின் தூதரகத்துக்குள் போய் தஞ்சமடைந்து விட்டார். இன்றுவரை ஈக்குவேடார்தான் அவரைப் பாதுகாக்கிறது. எப்போது வெளியே வருவார் என்று ஸ்வீடனும், ஸ்வீடனை பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்காவும் கொலைவெறியோடு காத்திருக்கிறார்கள்.
சம்பவம் இரண்டு :
போன மாதம் உலக அரங்கில் அமெரிக்காவுக்குப் பெரும் தலைகுனிவு. நம் எல்லோருடைய இணைய செயல்பாடுகளை அமெரிக்கா உளவு பார்க்கும், ‘ப்ரிஸம்’ என்கிற ரகசியத் திட்டத்தைப் பற்றி விலாவாரியாக ஊடகங்களுக்குப் போட்டு உடைத்து விட்டார் எட்வர்ட் ஸ்நோடன் என்கிற முப்பது வயது இளைஞர். அமெரிக்க தேசியப் பாதுகாப்பு நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒப்பந்தக்காரர் இவர். அதுவுமின்றி, சி.ஐ.ஏ.வின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர். நாட்டின் ரகசியங்களை வெளியிட்டு விட்டதாக பாதுகாப்புக் குற்றங்களுக்காக இவரை கைது செய்ய அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டிலிருந்து உஷாராக வெளியேறி, ஹாங்காங் வழியாக மாஸ்கோவுக்கு சென்றுவிட்டார் ஸ்நோடன். பல்வேறு நாடுகள் இவருக்கு புகலிடம் வழங்க தயங்கிக் கொண்டிருக்கும்போது, ஈக்குவேடார் தைரியமாக அவருக்கு தங்கள் நாட்டில் அடைக்கலம் தர முன்வந்திருக்கிறது.
அமெரிக்காவின் காலுக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டு அந்நாட்டுக்கு தென்அமெரிக்க குட்டி நாடுகள் குழி பறிப்பது புதிதல்ல. முன்பு கியூபா, பின்பு வெனிசுலா, இன்று ஈக்குவேடார். உலக கால்பந்துக் கோப்பையின் போது மட்டும்தான் இந்த நாட்டின் பெயரை நாம் அடிக்கடி கேள்விப்படுவோம். சமீபமாக அமெரிக்காவுக்கு தொடர்ந்து, ‘பெப்பே’ காட்டிக் கொண்டிருப்பதால், ஊடகங்கள் விடாமல் ஈக்குவேடாரை உச்சரிக்கத் தொடங்கியிருக்கின்றன.
தென்அமெரிக்காவின் வடமேற்கு மூலையில் அமர்ந்திருக்கும் குட்டி நாடுதான் ஈக்குவேடார். மக்கள் தொகையே ஒன்றரை கோடிக்குள்தான். தோராயமாக ஒரு லட்சம் சதுர மைல் பரப்பளவு. பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி ஸ்பானிஷ். இது தவிர அந்நாட்டின் பூர்வக்குடி மக்களின் மொழிகள் பத்துக்கும் மேலே உண்டு. இன்கா ஆதி கலாச்சாரம் கோலோச்சிய பூமி என்பதால் பழைமைக்குப் பஞ்சமேயில்லை. பழைமையான இடங்கள் என்று யுனெஸ்கோவில் பரிந்துரைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் பல இடங்கள் ஈக்குவேடாரில் உண்டு.
ஸ்பானிய காலனியாதிக்கத்தில் இருந்து 1830-இல் சுதந்திரம் பெற்றது. அப்போதிலிருந்தே குடியரசு நாடாகவே இருக்கிறது. அவ்வப்போது குட்டிக்குட்டி கலகங்களால் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டு மீண்டும் ஜனநாயகம் திரும்புவதுண்டு. நம்மூரில் எல்லாம் மனித உரிமை என்கிற சொல்லையே கொஞ்சம் காலமாகத்தான் கேட்கிறோம். இங்கே இயற்கை உரிமை பற்றி வெகுகாலமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். 2008-ஆம் ஆண்டு உலகிலேயே முதன்முறையாக இயற்கை உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்த நாடு ஈக்குவேடார். இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட அரிய வகை உயிரினங்களும் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட செடி, கொடி வகைகளும் நிறைந்த நாடு.
மக்கள் பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள். அமைதியான வாழ்க்கையை விரும்புபவர்கள். வழக்கமான தென்அமெரிக்க நாடுகளைப் போலவே கால்பந்து என்றால் உயிர். வணிகம் என்றால், எண்ணெய் ஏற்றுமதிதான். அந்நாட்டின் 40% வணிகத்தை எண்ணெய் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. விவசாயம் என்றால் வாழைதான். வாழை பயிரிடுவதிலும், ஏற்றுமதியிலும் உலகளவில் ஈக்குவேடாருக்குதான் முதலிடம். கோக்கோ, கரும்பு, அரிசி, பருத்தி, சோளம், காபி போன்றவையும் விளைகின்றன.
பொதுவாகவே பெரிய சச்சரவுகளுக்குள் தலையிடாத நாடாகத்தான் ஈக்குவேடார் இருந்து வந்திருக்கிறது. ஆனால், ‘ஆயில் அரசியல்’ காரணமாக அமெரிக்காவுக்கு எதிரான மனோபாவம் மனதுக்குள்ளேயே எரிமலையாய் குமுறிக்கொண்டிருந்திருக்கிறது. ரேஃபல் கோரியா அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இந்த உணர்வு முன்பிலும் அதிகமாக வெளிப்படுகிறது.
ஐம்பது வயதான கோரியா, அடிப்படையில் ஒரு பொருளாதார மேதை. 2007-இல் பொறுப்பேற்றவுடனேயே நிதி சீர்திருத்தங்களை தொடங்கினார். முந்தைய ஊழல் ஆட்சிகளின் நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்து மிக விரைவாக நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வந்தார். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய பிரச்சினைகளை மிகத்திறமையாகக் கையாண்டதால் அடுத்தடுத்து அவரே தேர்தல்களில் வென்று வருகிறார். வெனிசுலா அதிபர் ஹ்யூகோ சாவேஸின் அபிமானி. அவருக்கு நெருக்கமான நட்போடு இருந்ததால் இடதுசாரி சார்பும் உண்டு.
பெட்ரோல் விற்பனையில் அமெரிக்க நிறுவனங்களின் அடாவடியை தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறார். ‘ஐந்து பேரல் எண்ணெய் எடுக்கப்பட்டால், அவற்றில் ஒன்றே ஒன்றுதான் எடுக்கப்படும் நாட்டுக்கு கிடைக்கிறது. மீதி நான்கு வேறு எங்கோ யாருக்கோ கொழுத்த லாபத்துக்கு விற்கப்படுகிறது. இது ஏற்கெனவே முடியாத செயல். இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும் புதியதாக மாற்றி புதுப்பிப்போம்’ என்று ஒருமுறை பேசினார். அயல்நாட்டு நிறுவனங்கள் பெட்ரோலை உறிஞ்சி உறிஞ்சி ஈக்குவேடாரை சக்கையாகப் பிழிவதாக கோரியா தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகிறார். பெட்ரோலால் கிடைக்கும் உபரி லாபத்தைக்கொண்டு ஈக்குவேடார் மக்களின் ஏழ்மையைப் போக்கும் சமூக நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது அவரது திட்டம். சோசலிஸம்தான் ஈக்குவேடார் மாதிரியான நாட்டுக்குப் பொருந்தும் என்பது அவரது நம்பிக்கை.
கடந்த கால் நூற்றாண்டில் மிக வலிமையான, நேர்மையான தலைவர் என்று மக்களிடையே பெயர் எடுத்திருக்கிறார். மிக லேசான, பலகீனமான எதிர்ப்புகளும் உண்டு என்றாலும் மூன்றாம் முறையாகவும் (இரண்டு முறை தேர்தலில் வென்று) அவரே அதிபராக தொடர்வது, அவருக்குக் கிடைத்திருக்கும் அபரிமிதமான மக்கள் ஆதரவுதான் காரணம்.
அமெரிக்கா தன்னுடைய எதிரிகளை பெட்ரோல் மார்க்கெட்டில்தான் உருவாக்குகிறது.
நன்றி-புதிய தலைமுறை
கடந்த வருடம் விக்கிலீக்ஸ் அசாஞ்சேவை போட்டுத்தள்ள... அமெரிக்கா கையை முறுக்கிக்கொண்டு தயார் ஆனது. ஸ்வீடன் நாட்டில் அவர் மீது ஒரு பாலியல் குற்றச்சாட்டு பதியப்பட்டு கைதுக்கு தயார் ஆனபோது திடீரென்று, லண்டனில் இருந்த ஈக்குவேடார் நாட்டின் தூதரகத்துக்குள் போய் தஞ்சமடைந்து விட்டார். இன்றுவரை ஈக்குவேடார்தான் அவரைப் பாதுகாக்கிறது. எப்போது வெளியே வருவார் என்று ஸ்வீடனும், ஸ்வீடனை பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்காவும் கொலைவெறியோடு காத்திருக்கிறார்கள்.
சம்பவம் இரண்டு :
போன மாதம் உலக அரங்கில் அமெரிக்காவுக்குப் பெரும் தலைகுனிவு. நம் எல்லோருடைய இணைய செயல்பாடுகளை அமெரிக்கா உளவு பார்க்கும், ‘ப்ரிஸம்’ என்கிற ரகசியத் திட்டத்தைப் பற்றி விலாவாரியாக ஊடகங்களுக்குப் போட்டு உடைத்து விட்டார் எட்வர்ட் ஸ்நோடன் என்கிற முப்பது வயது இளைஞர். அமெரிக்க தேசியப் பாதுகாப்பு நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒப்பந்தக்காரர் இவர். அதுவுமின்றி, சி.ஐ.ஏ.வின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர். நாட்டின் ரகசியங்களை வெளியிட்டு விட்டதாக பாதுகாப்புக் குற்றங்களுக்காக இவரை கைது செய்ய அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டிலிருந்து உஷாராக வெளியேறி, ஹாங்காங் வழியாக மாஸ்கோவுக்கு சென்றுவிட்டார் ஸ்நோடன். பல்வேறு நாடுகள் இவருக்கு புகலிடம் வழங்க தயங்கிக் கொண்டிருக்கும்போது, ஈக்குவேடார் தைரியமாக அவருக்கு தங்கள் நாட்டில் அடைக்கலம் தர முன்வந்திருக்கிறது.
அமெரிக்காவின் காலுக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டு அந்நாட்டுக்கு தென்அமெரிக்க குட்டி நாடுகள் குழி பறிப்பது புதிதல்ல. முன்பு கியூபா, பின்பு வெனிசுலா, இன்று ஈக்குவேடார். உலக கால்பந்துக் கோப்பையின் போது மட்டும்தான் இந்த நாட்டின் பெயரை நாம் அடிக்கடி கேள்விப்படுவோம். சமீபமாக அமெரிக்காவுக்கு தொடர்ந்து, ‘பெப்பே’ காட்டிக் கொண்டிருப்பதால், ஊடகங்கள் விடாமல் ஈக்குவேடாரை உச்சரிக்கத் தொடங்கியிருக்கின்றன.
தென்அமெரிக்காவின் வடமேற்கு மூலையில் அமர்ந்திருக்கும் குட்டி நாடுதான் ஈக்குவேடார். மக்கள் தொகையே ஒன்றரை கோடிக்குள்தான். தோராயமாக ஒரு லட்சம் சதுர மைல் பரப்பளவு. பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி ஸ்பானிஷ். இது தவிர அந்நாட்டின் பூர்வக்குடி மக்களின் மொழிகள் பத்துக்கும் மேலே உண்டு. இன்கா ஆதி கலாச்சாரம் கோலோச்சிய பூமி என்பதால் பழைமைக்குப் பஞ்சமேயில்லை. பழைமையான இடங்கள் என்று யுனெஸ்கோவில் பரிந்துரைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் பல இடங்கள் ஈக்குவேடாரில் உண்டு.
ஸ்பானிய காலனியாதிக்கத்தில் இருந்து 1830-இல் சுதந்திரம் பெற்றது. அப்போதிலிருந்தே குடியரசு நாடாகவே இருக்கிறது. அவ்வப்போது குட்டிக்குட்டி கலகங்களால் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டு மீண்டும் ஜனநாயகம் திரும்புவதுண்டு. நம்மூரில் எல்லாம் மனித உரிமை என்கிற சொல்லையே கொஞ்சம் காலமாகத்தான் கேட்கிறோம். இங்கே இயற்கை உரிமை பற்றி வெகுகாலமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். 2008-ஆம் ஆண்டு உலகிலேயே முதன்முறையாக இயற்கை உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்த நாடு ஈக்குவேடார். இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட அரிய வகை உயிரினங்களும் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட செடி, கொடி வகைகளும் நிறைந்த நாடு.
மக்கள் பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள். அமைதியான வாழ்க்கையை விரும்புபவர்கள். வழக்கமான தென்அமெரிக்க நாடுகளைப் போலவே கால்பந்து என்றால் உயிர். வணிகம் என்றால், எண்ணெய் ஏற்றுமதிதான். அந்நாட்டின் 40% வணிகத்தை எண்ணெய் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. விவசாயம் என்றால் வாழைதான். வாழை பயிரிடுவதிலும், ஏற்றுமதியிலும் உலகளவில் ஈக்குவேடாருக்குதான் முதலிடம். கோக்கோ, கரும்பு, அரிசி, பருத்தி, சோளம், காபி போன்றவையும் விளைகின்றன.
பொதுவாகவே பெரிய சச்சரவுகளுக்குள் தலையிடாத நாடாகத்தான் ஈக்குவேடார் இருந்து வந்திருக்கிறது. ஆனால், ‘ஆயில் அரசியல்’ காரணமாக அமெரிக்காவுக்கு எதிரான மனோபாவம் மனதுக்குள்ளேயே எரிமலையாய் குமுறிக்கொண்டிருந்திருக்கிறது. ரேஃபல் கோரியா அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இந்த உணர்வு முன்பிலும் அதிகமாக வெளிப்படுகிறது.
ஐம்பது வயதான கோரியா, அடிப்படையில் ஒரு பொருளாதார மேதை. 2007-இல் பொறுப்பேற்றவுடனேயே நிதி சீர்திருத்தங்களை தொடங்கினார். முந்தைய ஊழல் ஆட்சிகளின் நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்து மிக விரைவாக நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வந்தார். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய பிரச்சினைகளை மிகத்திறமையாகக் கையாண்டதால் அடுத்தடுத்து அவரே தேர்தல்களில் வென்று வருகிறார். வெனிசுலா அதிபர் ஹ்யூகோ சாவேஸின் அபிமானி. அவருக்கு நெருக்கமான நட்போடு இருந்ததால் இடதுசாரி சார்பும் உண்டு.
பெட்ரோல் விற்பனையில் அமெரிக்க நிறுவனங்களின் அடாவடியை தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறார். ‘ஐந்து பேரல் எண்ணெய் எடுக்கப்பட்டால், அவற்றில் ஒன்றே ஒன்றுதான் எடுக்கப்படும் நாட்டுக்கு கிடைக்கிறது. மீதி நான்கு வேறு எங்கோ யாருக்கோ கொழுத்த லாபத்துக்கு விற்கப்படுகிறது. இது ஏற்கெனவே முடியாத செயல். இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும் புதியதாக மாற்றி புதுப்பிப்போம்’ என்று ஒருமுறை பேசினார். அயல்நாட்டு நிறுவனங்கள் பெட்ரோலை உறிஞ்சி உறிஞ்சி ஈக்குவேடாரை சக்கையாகப் பிழிவதாக கோரியா தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகிறார். பெட்ரோலால் கிடைக்கும் உபரி லாபத்தைக்கொண்டு ஈக்குவேடார் மக்களின் ஏழ்மையைப் போக்கும் சமூக நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது அவரது திட்டம். சோசலிஸம்தான் ஈக்குவேடார் மாதிரியான நாட்டுக்குப் பொருந்தும் என்பது அவரது நம்பிக்கை.
கடந்த கால் நூற்றாண்டில் மிக வலிமையான, நேர்மையான தலைவர் என்று மக்களிடையே பெயர் எடுத்திருக்கிறார். மிக லேசான, பலகீனமான எதிர்ப்புகளும் உண்டு என்றாலும் மூன்றாம் முறையாகவும் (இரண்டு முறை தேர்தலில் வென்று) அவரே அதிபராக தொடர்வது, அவருக்குக் கிடைத்திருக்கும் அபரிமிதமான மக்கள் ஆதரவுதான் காரணம்.
அமெரிக்கா தன்னுடைய எதிரிகளை பெட்ரோல் மார்க்கெட்டில்தான் உருவாக்குகிறது.
நன்றி-புதிய தலைமுறை
Similar topics
» காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்:புது மண தம்பதிகள் மாலைகளை ஆற்றில் விட்டு புது தாலி- மஞ்சள் கயிறு அணிந்து வழிபாடு
» புது அவதாரம் எடுக்கவுள்ளான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி...
» புது வருஷம் வரும்னு வெயிட் பண்ணா, புது வைரஸ் வருது!
» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
» குப்பைகளை சேகரிக்க புது வெப்சைட்- சென்னையில் புது வசதி
» புது அவதாரம் எடுக்கவுள்ளான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி...
» புது வருஷம் வரும்னு வெயிட் பண்ணா, புது வைரஸ் வருது!
» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
» குப்பைகளை சேகரிக்க புது வெப்சைட்- சென்னையில் புது வசதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|