புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_m10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10 
96 Posts - 49%
heezulia
இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_m10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_m10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_m10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_m10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10 
7 Posts - 4%
prajai
இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_m10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10 
3 Posts - 2%
Barushree
இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_m10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_m10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_m10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_m10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_m10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10 
223 Posts - 52%
heezulia
இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_m10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_m10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_m10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_m10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10 
16 Posts - 4%
prajai
இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_m10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_m10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_m10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_m10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10 
2 Posts - 0%
Barushree
இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_m10இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 15, 2013 4:06 pm

மறைமலை என்றொரு மனிதன் மட்டும் தோன்றியிருக்காவிட்டால் இன்றைய தமிழின் வடிவம் எப்படி இருந்திருக்கும்?என்ற கேள்வியை கேட்க முடியாமல் செய்த அவரை தமிழ் உலகும், சைவ உலகும் என்றென்றும் போற்றிப் புகழும் என்பதில் ஐயமில்லை.

"தனித்தமிழ்த் தந்தை" மறைமலை அடிகள்.

"என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே"

என்ற திருமூலர் வாக்கின் வழி நின்று தமிழ்த் தொண்டும் சிவத் தொண்டுமே வாழ்க்கைக் குறிகோளாகக் கொண்டு வாழ்ந்தவர் மறைமலையடிகள். அறிவுச் சுடரான இவர் தமிழே சிவமாகவும் சிவமே தமிழாகவும் வாழ்ந்தவர்.  "தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை மறைமலையடிகளுக்கு உண்டு. அவர் தம் தமிழ்ப் புலமையும், வடமொழிப் புலமையும், ஆங்கிலப் புலமையும், ஆராய்ச்சியும், பேச்சும், எழுத்தும், தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும்; மரமும் முழங்கும்; அடிகள் பேச்சு பல பேச்சாளரைப் படைத்தது; எழுத்து பல எழுத்தாளரை ஈன்றது; நூல் பல நூலாசிரியர்களை அளித்தது. அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள்", என்று பாராட்டுகிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.க.

நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியில் உள்ள நாகப்பட்டினத்துக்கு அருகே காடம்பாடியைச் சொந்த ஊராகக் கொண்ட சொங்கலிங்கம் பிள்ளை - சின்னம்மை தம்பதிக்கு 1876ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார் மறைமலையடிகள்.

திருக்கழுக்குன்றத்து இறைவன் வேதகிரீசுவரர் அருளால் பிறந்ததால் அவருக்கு "வேதாசலம்" என்று பெயர் சூட்டப்பட்டது. பின்னாளில் தனது பெயரைத் தனித் தமிழில் "மறைமலை" என்று மாற்றிக்கொண்டார்.
நாகப்பட்டினத்தில் உள்ள வெசுலி மிஷன் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியைப் பயின்றார். ஒன்பதாம் வகுப்பு வரைதான் படித்தார். சிறு வயதில் தந்தையை இழந்தார். பின்னர் தாயாரின் வழிகாட்டுதலால் பல நூல்களைக் கற்று பேரறிவாளராகத் திகழ்ந்தார்.

மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவராக இருந்த வெ.நாராயணசாமிப் பிள்ளையின் நட்பு இவரது தமிழ் அறிவுக்குப் பெரிதும் உதவியது. மாதம்தோறும் ஐம்பது ரூபாய்க்கு புதிய நூல்களை வாங்கிப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் மறைமலையடிகள். இப்படி தானே ஒரு நூலகமாகவும், ஆராய்ச்சி மாணவர்களுக்குத் தன் வீட்டிலேயே நூலகம் ஒன்றையும் அமைத்துத் தந்தார். பின்னாளில் பெரிய அளவில் "மறைமலையடிகள் நூலகம்" அமைய அது உதவியது.

மாமன் மகளான செளந்தரவல்லியை மணமுடித்தார். நான்கு ஆண் பிள்ளைகளையும் மூன்று பெண் பிள்ளைகளையும் மக்கட் செல்வங்களாகப் பெற்றனர் அத்தம்பதியினர்.

மனோன்மணீயம் எழுதிய சுந்தரம்பிள்ளையின் காப்பியத்திற்குப் பாடல்களாலேயே நயவுரை எழுதி அனுப்பினார் மறைமலை. சுந்தரம்பிள்ளையை அது மிகவும் கவர்ந்தது. அதன் காரணமாக உண்டான நட்பு மறைமலையின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. திருவனந்தபுரத்தில் மார்த்தாண்டன் தம்பி என்பவரால் நடத்தப்பட்ட ஆங்கிலப் பள்ளியில் அடிகளுக்குச் சுந்தரம்பிள்ளை மூலம் தமிழாசிரியர் பணி கிடைத்தது. ஆனால், சில காலம் பணியாற்றிய பிறகு அதிலிருந்து விலகிவிட்டார்.

தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாகச் செயல்பட்ட மறைமலையடிகள், சைவ சமயத்தின் கொள்கையில் அளவிட முடியாத ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். இலங்கைக்குச் சென்று பலமுறை சைவ சமயச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 1911இல் சென்னை அருகே உள்ள பல்லாவரத்தில் "சமரச சன்மார்க்க நிலையத்தைத் தோற்றுவித்து சமயப்பணிகளைச் செய்துவந்தார்.

தமிழும், சைவமும் தமது இரு கண்களாகக் கருதினார் மறைமலையடிகள்.
முண்டகம்
ஆரண்யகம்
ஈசாவாசி
கேனோ தைத்தீரியம்
அதர்வசிகை, கைவல்யம்
சாந்தோக்கியம்
சுவேதாசுவதாரம்
போன்ற உபநிடத நூல்களைக் கற்றதோடு மட்டுமன்றி ஆய்வு செய்து பல கட்டுரைகளும் எழுதினார்.
மூடப்பழக்க வழக்கங்களும், போலிச் சடங்குகளும் அறவே ஒழிய வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். உயிர்பலியை கடிந்ததோடு சமுதாயம் நன்னெறியில் உய்வதற்குச் சமய உணர்வு இன்றியமையாதது என்பது அவரின் அசைக்க முடியாத கருத்து.

"சமய உணர்ச்சி சிலர் மட்டும் விரும்பக்கூடிய அலங்காரப் பொருள் அன்று. மக்களை விலங்கினின்று பிரித்து தெய்வமாக்குவதற்கு இன்றியமையாது வேண்டப்படும் சக்தியாகும் அது", என "சைவ சமயத்தின் தற்கால நிலை", என்ற நூலில் சமய உணர்வின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

மறைமலையடிகள் பெரும்பாலும் எதிர்நீச்சல் அடித்தே வெற்றி கண்டவர். தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த போதும் கடுமையான கண்டனத்துக்கும், எதிர்ப்புக்கும் ஆளானார். தனித்து இயங்கக் கூடிய ஆற்றல் தமிழ்மொழிக்கு உண்டு என்பதனாலேயே "தனித்தமிழ்" என்றார் அடிகள். ஆனால் இதை எதிர்த்த சிலர், தனித்தமிழ் என்பது தனித்து அமிழ்கின்ற அதாவது மூழ்கிப்போகிற மொழி என்றே பொருள் தருவதாக உள்ளது. அப்படியென்றால் தமிழ் தனித்து செயலாற்றினால் மூழ்கிப் போய்விடுமா! என்று ஏளனம் செய்தனர். ஆனால் அடிகள் தன் சீரிய செயல்பாட்டினால் நகைத்தவரின் கூற்றுக்களை பொய்யாக்கிக் காட்டினார்.

அடிகள் சிறந்த இதழாளராகவும் விளங்கினார். இளமைப் பருவத்திலேயே செய்திகளைச் சேகரித்து "நாகை நீலலோசினி" என்ற நாளிதழுக்கு அளித்தார். பின்னாளில் "ஞானசேகரம்" என்ற இதழை அவரே நடத்தினார். சைவ சித்தாந்த நெறிமுறைகளை வெளிநாட்டவரும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக;
மிஸ்டிக் மைனா
தி ஓரியண்டல் விஸ்டம்
என்ற ஆங்கில இதழ்களையும் நடத்தினார்.

இவை உலகில் பல நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கில் விற்பனையாயின. 1897ஆம் ஆண்டு சே.எம்.நல்லாசாமிப் பிள்ளை என்பவர் தொடங்கிய "சித்தாந்த தீபிகை" என்ற தமிழ், ஆங்கில மொழிகளுக்கான இரண்டு இதழ்களிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

16 வயதிலேயே இந்து மதாபிமான சங்கத்தைத் தோற்றுவித்து, தாம் எழுதிய நூல்களுக்கு ஆங்கிலத்திலும் முன்னுரை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்த மறைமலையடிகள், ஐம்பத்தி ஆறு நூல்களை எழுதியுள்ளார். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தோன்றுவதற்கு இவரே காரணமாக இருந்தார். தன் வாழ்நாளில் சேகரித்த நான்காயிரம் நூல்களைக் கொண்டு "மணிமொழி நூல் நிலையம்" என்ற பெயரில் நூல் நிலையம் ஒன்றைத் தோற்றுவித்தார்.

முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை
தமிழர் மதம்
பழந்தமிழ்க் கொள்கையே சைவம்
சிறுவருக்கான செந்தமிழ் நூல்
மாணிக்கவாசகர் காலமும், வரலாறும்
மரணத்தின் பின் மனிதர் நிலை
தனித்தமிழ்மாட்சி
பண்டைக்காலத் தமிழரும், ஆரியரும்
உரைமணிக்கோவை
போன்ற 40க்கும் மேற்பட்ட சிறந்த ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார்.

சமயநெறி, இலக்கியத்தில் ஹரிஜனங்கள் பின்தங்கியிருப்பதைக் கண்டு அவர்களை மாணவர்களாக ஏற்றுக் கொண்டார். ஹரிஜனங்களைத் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கக் கூடாது; ஆலயங்களிலும் பள்ளிகளிலும் அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்றெல்லாம் பேசி அவர்கள் முன்னேற்றத்துக்கு வழிவகுத்தார் மறைமலையடிகள்.

1937ல் இராஜாஜி முதல்வராக பதவி வகித்த போது உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கினார். இதைக் கண்டு தமிழகம் வெகுண்டெழுந்தது. அப்போது இந்தியை எதிர்ப்பதில் முழு மூச்சாக ஈடுபட்டார் அடிகளார். எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராய் இல்லாத, தமிழையே மூச்சாக கொண்ட அடிகள், இந்தி எதிர்ப்புத் தொடர்பான மறியலில் கலந்து கொண்டு சிறை சென்றார்.

தமிழ்மொழி சீர்கேடுற்று சைவ நெறி தாழ்வுற்றிருந்த காலத்தில் வீறுகொண்ட ஞாயிரெனத் தோன்றி, தமிழுக்கும், சைவத்துக்கும் மிகுந்த பணியாற்றினார் அடிகள்.

தங்க விளக்கே ஆனாலும் தூசி படிந்து மூலையில் கிடந்தால் அதன் அருமையை யாரால் அறிந்து கொள்ள முடியும்.
தங்கத் தமிழ் தீபத்தை பேச்சால், எழுத்தால் தூசி தட்டித் துடைத்து ஏற்றி வைத்தவர் மறைமலையடிகள் என்றால் அதில் இரண்டாவது கருத்துக்கே இடம் கிடையாது.

இப்போதைய நமது கடமை, அந்தத் தீபத்தை என்றென்றும் அணையாமல் பாதுகாப்பதுதான். தமிழறிஞரைப் போற்றுவோம்; தமிழை வளர்ப்போம்; தமிழைக் காப்பாம்; தமிழராக வாழ்வோம்.
நன்றி:தீர்தக்கரைபிலாக்ஸ்பொட்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 15, 2013 4:13 pm

நல்ல padivu சாமி அவர்களே ! நன்றி புன்னகை நன்றி அன்பு மலர் 
.
.
வாழ்க மறைமலை அடிகள் புகழ் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 15, 2013 5:17 pm

தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரின் பிறந்த நாள் இந்நாள் (1876). தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படக் கூடியவர் - ஆரியத்தின் கடும் எதிரி - இந்து மதம் வேறு - தமிழர் சமயம் வேறு என்பதில் உறுதியாக இருந்தவர்.

சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் 1933 திசம்பர் 23, 24 ஆகிய நாள்களில் தமிழ் அன்பர் மாநாடு நடை பெற்றது. சென்னைப் புத்தகால யப் பிரச்சார சங்கத்தார் இம் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த னர். அதன் தலைவர் கே.வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர், பொக்கிஷதார் எஸ். ராமஸ்வாமி அய்யர், வரவேற்புச் சபைத் தலைவர் உ.வே. சாமிநாதய்யர் மற்றும் பொறுப்பாளர்கள் எல்லாம் பார்ப்பனர்களே. அம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு மறை மலை அடிகளார் அவர்களுக்கு கே.வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர் 22.12.1933 இல் தந்தி ஒன்றை அனுப்பினார்.

அதற்கு மறைமலை அடிகள் அளித்த பதில்தான் மிகமிக முக்கியமானது.

கடிதங்கள், அழைப்புகள், தந்தி ஆகியவற்றிற்கெல்லாம் உங்களுக்கும், டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, தூய தமிழை வளர்க்க விரும்பாத எந்தத் தமிழ்க் கூட்டத்திலும் கலந்துகொள்வதற்கு எமது மனம் இடந்தரவில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். பண்பட்ட பழைய மொழிகளெல்லாவற்றி லும் தமிழ்மொழி ஒன்றுதான் இன்னும் தன் பண்டை நலஞ் சார்ந்த புகழோடு வாழ்கின்றது. பிற மொழிக் கலப்பு அதன் தூய தன்மையினைக் கெடுக்குமென்றும், அதன் வளர்ச்சியினை குன்றச் செய்யும் என்றும் யாம் உறுதியாக நம்புகின்றோம். ஆதலால் எமது தனித்தமிழ்க் கொள்கையினைக் கடைபிடிக்காத உங்களுடைய மகாநாட்டிலே கலந்துகொள்ள முடியாமையினைப் பொறுத்துக் கொள்வீர்களாக!
என்று பதில் எழுதியவர் தான் நமது போற்றுதலுக்கும், மதிப்புக்கும் உரிய தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் அவர்கள். சுவாமி வேதாசலம் என்ற தம் பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டவர்.

சைவக் கொள்கையால் மாறு பட்டு இருந்தாலும்கூட, தந்தை பெரியார் அவர்களைப் பெரிதும் போற்றி மதித்தவர். இந்தி எதிர்ப் புக்களத்தில் தந்தை பெரியார் அவர்களுக்குத் துணை நின்றவர்.

தந்தை பெரியார் அவர்களைப் பல்லாவரத்துக்கு அழைத்துச் சென்று தாம் அரிதிற் சேர்த்துக் குவித்த நூல்கள் கொண்ட நூலகத்தைக் காட்டி மகிழ்ந்தவர்.

அவர் உடலால் மறைந்திருக்கலாம்; தமிழ் உணர்வால் நம்மோடு நிறைந்திருக்கிறார். இனம் எது - இனப் பகைவர் யார் என்பதை இனம் பிரித்துக் காட்டிய அந்தத் தமிழ்க் கடலின் நினைவைப் போற்றுவோம்!

குறைந்தபட்சம் தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயரைச் சூட்டும் உணர்வு கிளர்ந்தெழட்டும் - அதுதான் அந்தப் பெருமகனாருக்கு தமிழர்கள் காட்டும் உண்மையான மதிப்பாகும்.

----------- மயிலாடன் அவர்கள் "விடுதலை" 15-7-2008 இதழில் எழுதிய கட்டுரை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 15, 2013 7:43 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மிகவும் அருமை.
ரமணியன்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jul 16, 2013 10:51 am

தமிழ்த் தொண்டாற்றிய மறைமலை அடிகள் அவர்கள் தமிழுணர்வாளர்கள் நெஞ்சில் இன்றும் வாழ்கிறார். ஓங்குக அன்னாரது புகழ்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 16, 2013 11:08 am

வாழ்க மறைமலை அடிகள் புகழ் :வணக்கம்: 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக