புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_c10திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_m10திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_c10 
1 Post - 50%
heezulia
திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_c10திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_m10திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_c10திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_m10திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_c10 
284 Posts - 45%
heezulia
திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_c10திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_m10திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_c10திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_m10திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_c10திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_m10திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_c10திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_m10திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_c10 
20 Posts - 3%
prajai
திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_c10திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_m10திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_c10திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_m10திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_c10திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_m10திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_c10திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_m10திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_c10 
7 Posts - 1%
mruthun
திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_c10திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_m10திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திகைக்க வைக்கும் திசு வாழை! ....


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 16, 2013 1:48 pm

ஒரு தார் 1,000 ரூபாய்.
அறுவடை செய்து 15 நாள்வரை
இருப்பு வைக்கலாம்.

சுற்று வட்டார வாழை வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம்... 'பெரிய வாழைத்தார்...' என்று ஆரம்பித்தாலே போதும், 'ஓ... சுந்தரம் தோப்புல விளைஞ்சதைத்தானே சொல்றீங்க!' என்று சொல்லும் அளவுக்கு பிரபலமாகி இருக்கிறார்,

தஞ்சாவூர் மாவட்டம், மகாராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம். அவருடைய தோப்பில் எட்டடி உயரத்துக்கு விளைந்த வாழைத்தார்கள் தேடித்தந்த பெருமை இது!
''நாங்க 50 ஏக்கர்ல விவசாயம் செஞ்சுட்டு இருக்கோம். 30 ஏக்கர்ல நெல், 10 ஏக்கர்ல தென்னை இருக்கு. மீதி பத்து ஏக்கர்ல எப்பவும் மொந்தன் வாழை ரகத்தைத்தான் போடுவோம்.  திருச்சியில இருக்குற தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்துல, 'உதயம் திசு வாழை'னு சொல்லி நாலு கன்னுகள இலவசமா கொடுத்தாங்க. அதை நடவு பண்ணினோம். பதினாலு மாசம் வளரக்கூடிய அந்த ரகம், அறுவடையப்போ... ஒவ்வொரு தாரும் எட்டடி உயரத்துலயும் எழுபதுல இருந்து எண்பது கிலோ எடையும் கொண்டதா இருந்துச்சு. அதைப் பாத்து ஊரே அதிசயிச்சுட்டுது.

திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Pv26

தாருக்கு 25 சீப்பு!
ஒவ்வொரு தார்லயும் 25 சீப்புக்குக் குறையாம இருந்துச்சு. பழம் நல்ல திரட்சியா இருந்ததால... தாருக்கு 1,000 ரூபாய் வரை விலையும் கிடைச்சது. ரெண்டாம் தழைவுலயும் அதேமாதிரி விலை கிடைச்சதால... கொஞ்சம் அதிக எண்ணிக்கையில கன்னுகள வெச்சுப் பாக்கலாம்னு தோணுச்சு.

ஆராய்ச்சி நிலையத்துல ஒரு கன்னு பத்து ரூபாய்னு 50 கன்னுகளை வாங்கிட்டு வந்து, எட்டு சென்ட்ல நடவு செஞ்சேன். அதைத்தான் இப்போ அறுவடை செய்திருக்கேன்'' என்று அறிமுகம் சொன்ன சுந்தரம், வாழைத் தோப்புக்குள் நம்மை அழைத்துச் சென்று உதயம் வாழை மரங்களைக் காட்டினார். ஒவ்வொரு மரமும் 25 அடி உயரத்துக்கு வளர்ந்து பசுமை கட்டி செழிப்பாகக் காட்சி அளித்தன.

50 மரம்... 50 ஆயிரம் ரூபாய்!
''தார் வெட்டுற பருவத்துக்கு வந்தாலும், இலையெல்லாம் காயுறதில்லை. அடிப்பகுதி பெருத்து மரம் நல்லா உறுதியா இருக்கு. அறுவடை செஞ்ச பிறகு, பதினஞ்சு நாள் வரைக்கும் வெச்சுருந்தாலும்... பழம் கெட்டுப் போறதில்லை. அதனால, வெச்சுருந்தும் விக்கலாம்.
நான் இயற்கை உரங்களோட, ரசாயன உரங்களையும் கலந்துதான் சாகுபடி பண்ணினேன். எட்டு சென்ட்ல சாகுபடி செய்யுறதுக்கு... உரம், அறுவடை, போக்குவரத்து, கமிஷன் எல்லாம் சேர்த்து 16 ஆயிரத்து750 ரூபாய் செலவாச்சு. ஒரு தார் 1,000 ரூபாய்னு வித்ததுல... 50 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. செலவு போக, 33 ஆயிரத்து 250 ரூபாய் லாபம் கிடைச்சுது. இந்த தடவை இன்னும் அதிக கன்னுகள நடலாம்னு இருக்கேன்'' என்று சந்தோஷமாகச் சொன்ன சுந்தரம், எட்டு சென்ட் நிலத்தில், 50 உதயம் வாழைகளுக்கு தான் பயன்படுத்திய சாகுபடி தொழில்நுட்பங்களையும் தந்தார். அவற்றைப் பாடமாகத் தொகுத்திருக்கிறோம்!
சணப்பின் நிழலில் வாழை!

வாழை நடவு செய்வதற்கு ஒரு மாதத்துக்கும் முன்னதாகவே நுண்ணுரக் கலவை தயார் செய்ய வேண்டும். 250 கிலோ தென்னைநார் கழிவோடு, அசோஸ்பைரில்லம், பாஸ்போ- பாக்டீரியா, சூடோமோனஸ், டிரைக்கோ டெர்மா விரிடி ஆகியவற்றில் தலா ஒரு கிலோ அளவுக்கு கலந்து, நிழலில் வைத்து, லேசான ஈரப்பதம் இருக்குமாறு, தினமும் தண்ணீர் தெளித்து வர வேண்டும்.
அதேபோல, தேர்வு செய்திருக்கும் நிலத்தையும் முன்கூட்டியே உழுது, சணப்பு விதைகளைத் தெளித்து, தண்ணீர் பாய்ச்ச வேண்டும் (8 சென்ட் நிலத்துக்கு, 3 கிலோ சணப்பு தேவை). 20 நாட்களில் சணப்பு இரண்டடி உயரத்துக்கு வளர்ந்து விடும். இதன் நிழலில்தான் வாழையை நடவு செய்ய வேண்டும்.9 அடி இடைவெளி!

வரிசைக்கு வரிசை, மரத்துக்கு மரம் ஒன்பது அடி இடைவெளி இருக்குமாறு ஒரு கன அடி அளவில் குழி எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் நுண்ணுரக் கலவையை தலா 5 கிலோ வீதம் இட்டு, உதயம் வாழைக் கன்றை நடவு செய்து, மண்ணை நிரப்ப வேண்டும். கையால் மண்ணை அழுத்தக்கூடாது. நடவு செய்தவுடன் பூவாளியால் தண்ணீர் தெளிக்க வேண்டும். பிறகு மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. நடவு செய்த 15-ம் நாள், தரையிலிருந்து ஓர் அடி உயரம் விட்டு, சணப்பை அறுத்து, வாழைக் கன்றுகளைச் சுற்றிப் பரப்ப வேண்டும். 20 நாட்கள் கழித்து, பவர் டில்லர் மூலமாக சணப்பு முழுவதையும் மடக்கி உழவு செய்ய வேண்டும்.

திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Pv26c

நடவிலிருந்து 3 மாதம் கழித்து, 100 கிராம் யூரியா, 150 கிராம் சூப்பர்-பாஸ்பேட், 150 கிராம் பொட்டாஷ், 250 கிராம் ஜிப்சம், 250 கிராம் வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் இட வேண்டும். இது ஒரு மரத்துக்கான அளவு. இதேபோல ஐந்தாம் மாதத்திலும் உரம் இட வேண்டும்.

நான்காவது மாதத்தில் ஒவ்வொரு மரத்துக்கும் சவுக்குக் குச்சியால் முட்டுக் கொடுக்க வேண்டும். நடவிலிருந்து 3, 5, 6-ம் மாதங்களில்... நுண்ணூட்டக் கலவையைத் தெளிக்க வேண்டும். 10 மில்லி டிரைக்கோ டெர்மா விரிடி, 10 மில்லி சூடோமோனஸ், 10 மில்லி இயற்கை நுண்ணூட்ட திரவம் இவற்றை 500 மில்லி தண்ணீரில் கலந்துகொள்ள வேண்டும். இது ஒரு மரத்துக்கான அளவு. இந்தக் கலவையை மரத்தைச் சுற்றிலும், குறிப்பிட்ட அளவிலான இடங்களில் கடப்பாரையால் ஓங்கி ஒரு குத்துவிட்டு, அந்த துளையில் ஊற்ற வேண்டும். வாடல் நோய் தாக்கினால்... அதற்குத் தேவையான மருந்துகளைக் கொடுக்கலாம்.
இயற்கைக் கவர்ச்சிப்பொறி!

நடவு செய்து ஆறாவது மாதத்திலிருந்து, ஒன்பதாவது மாதம் வரை தண்டு மற்றும் கிழங்கு கூன் வண்டுகளின் தாக்குதல் இருக்கலாம். இவற்றை, இயற்கையான முறையிலேயே கட்டுப்படுத்தி விடலாம். அதாவது, பக்கத்து தோட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட வாழை மரங்களில் சாறு அதிகமுள்ள மரங்கள் சிலவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை ஒன்றரையடி துண்டுகளாக வெட்டி, ஒவ்வொரு துண்டையும் நீளவாக்கில் இரண்டாகப் பிளந்து, பசைத் தன்மையுள்ள இயற்கைப் பூஞ்சணத்தை உள்புறமாக தடவி, மீண்டும் ஒட்டியநிலையில் தோப்புக்குள் ஆங்காங்கு போட்டு வைத்தால்... அவற்றால் ஈர்க்கப்பட்டு, குடைந்துகொண்டு உள்ளே செல்லும் வண்டுகள், அதில் ஒட்டிக்கொண்டு இறந்துவிடும்.

ஒரு ஏக்கருக்கு 40 இடங்களில் இப்படி பொறி வைக்க வேண்டும். பொறிக்காக வைக்கும் மரம் காய்ந்துவிட்டால், புதிய மரத்தை வைக்க வேண்டும். நடவு செய்த 10-ம் மாதத்தில் தார் விடத் தொடங்கும். அனைத்து சீப்புகளும் வந்தவுடன், பூவை ஒடித்துவிட்டு, தாரைச் சுற்றிலும் நைலான் உறையால் மூடி வைக்க வேண்டும். தாரின் மேல்புறமும், கீழ்புறமும் மட்டும் திறந்து வைக்க வேண்டும். இது பனி, வெப்பம் மற்றும் பூச்சிகளிலிருந்து தாரைப் பாதுகாக்கும். 14-ம் மாதத்தில் அறுவடை செய்யலாம்.

இவர்  தான் அந்த சுந்தரம்  

திகைக்க வைக்கும் திசு வாழை!  .... Pv26b

நன்றி நேர்மை  

thanks vikatan +paranthaman naidu coimbatore


றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Jul 16, 2013 2:22 pm

நல்லது...
றினா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் றினா



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 16, 2013 2:59 pm

கொஞ்சம் வியப்படையும் படியாக இருந்தது விவசாயம் ... அதான் பகிர்ந்தேன் ..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 16, 2013 4:34 pm

கேட்கவும் பார்க்கவும் நல்லா தான் இருக்கு , இந்த PT கத்தரிக்காய் போல இதுவும் டெஞ்சரா இருக்க போவுது .... ஏன்னா இங்க இருக்குற சூப்பர் மார்க்கெட்ல இந்த புகைபடத்தில் உள்ளது போலவே தான் நீள நீளமா தங்கநிறத்தில் வாழைபழங்கள் இருக்கும் அனைத்தும் பிலிப்பைன் நாட்டில் இருந்து வந்தது , ஒரு வாரத்திற்கு மேல் இருந்தாலும் முதல் நாள் பார்த்தது போலவே fresh ஆக இருக்கும்.

அதே நம்ம ஊரு பூவன் பழங்கள் மறுநாளே கருப்பு புள்ளிகள் வந்துருக்கும் , நம்ம ஆட்கள் நான் உட்பட இதை தான் வாங்குவோம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 16, 2013 4:39 pm

ராஜா wrote:கேட்கவும் பார்க்கவும் நல்லா தான் இருக்கு , இந்த PT கத்தரிக்காய் போல இதுவும் டெஞ்சரா இருக்க போவுது .... ஏன்னா இங்க இருக்குற சூப்பர் மார்க்கெட்ல இந்த புகைபடத்தில் உள்ளது போலவே தான் நீள நீளமா தங்கநிறத்தில் வாழைபழங்கள் இருக்கும் அனைத்தும் பிலிப்பைன் நாட்டில் இருந்து வந்தது , ஒரு வாரத்திற்கு மேல் இருந்தாலும் முதல் நாள் பார்த்தது போலவே fresh ஆக இருக்கும்.

அதே நம்ம ஊரு பூவன் பழங்கள் மறுநாளே கருப்பு புள்ளிகள் வந்துருக்கும் , நம்ம ஆட்கள் நான் உட்பட இதை தான் வாங்குவோம்

இயற்கை மாறி செயற்கை வளர்ந்து வருகிறது என்ன செய்ய அண்ணா ,

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 16, 2013 9:22 pm

வாழை அடி வாழை
எட்டடி வாழை

ரமணியன்


manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed Jul 17, 2013 8:40 am

சூப்பருங்க அருமையிருக்கு 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 17, 2013 7:27 pm

ரொம்ப அற்புதம் பூவன் புன்னகை அந்த வாழைக்கும் உங்க பேருதானா ? புன்னகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jul 17, 2013 7:38 pm

krishnaamma wrote:ரொம்ப அற்புதம் பூவன் புன்னகை அந்த வாழைக்கும் உங்க பேருதானா ? புன்னகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 

என் பேரு பூவேந்திரன் அம்மா , வாழை பேரு பூ வாழை இந்த வாழை பேரு திசு வாழை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 17, 2013 7:42 pm

பூவன் wrote:
krishnaamma wrote:ரொம்ப அற்புதம் பூவன் புன்னகைஅந்த வாழைக்கும்  உங்க பேருதானா ? புன்னகைநக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 

என் பேரு  பூவேந்திரன் அம்மா  , வாழை பேரு பூ  வாழை  இந்த  வாழை பேரு திசு வாழை

ஹேய் ! சும்மா கலாட்டா க்கு சொன்னேன், நாம் வழக்கத்தில் சொல்வோம் இல்லியா பூவன் வாழை என்று புன்னகைஅதுதான் ...........
.
.
.
அது சரி நான் கேட்டது என்ன ஆச்சு ? புன்னகை ( அந்த திரி il புன்னகை )



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக