Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழர்களே தமிழை அவமதிப்பதா!
5 posters
Page 1 of 1
தமிழர்களே தமிழை அவமதிப்பதா!
இப்போது பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டிலுமே மொழிப் புலமை இருப்பதில்லை. அம் மொழிமீது மாணவர்களுக்கு உள்ள ஆர்வக்குறைவும் அவற்றைக் கற்றுத்தரும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பற்ற உணர்வுமே இதற்குக் காரணங்களாகும்.
இந்த நிலையில் பெற்றோரும் தனியார் பள்ளிக்கூட நிர்வாகங்களும் தமிழைப் புறக்கணிப்பதைப் பார்த்தால் நெஞ்சம் பதறுகிறது. தமிழர்களே தமிழுக்குத் துரோகம் செய்யலாமா?
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு தொலைக்காட்சியில் பெற்றோர் மற்றும் அவர்களுடைய குழந்தைகள் பங்கேற்ற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பானது. குழந்தைகளுடைய வாழ்க்கையில் தமிழ்ப்பயன்பாடு எவ்வாறு குறைந்து வருகிறது என்பது பற்றியது அது. அந்த விவாத நிகழ்ச்சியைப் பார்த்த எனக்கு ஒருபுறம் அதிர்ச்சியும் மறுபுறம் தாங்கொணாத வருத்தமும் ஏற்பட்டது.
ஏனெனில் தன்னுடைய மகனுக்குத் தமிழ் சரியாகப் படிக்க வரவில்லையென்பதால் அவரின் முதல் பாடமாக பிரெஞ்ச் தேர்வு செய்யப்பட்டதாக ஒரு தாய் கூறினார்.
தாய்மொழியான தமிழே சரியாக வரவில்லையென கூறிய அந்தத் தாய், கூடுதல் கவனம் செலுத்தி அப்பிள்ளைக்கு வீட்டில் தமிழ் மொழிப் பயிற்சி அளித்திருக்கலாமே?
தன்னுடைய பள்ளிப் படிப்பில் தமிழையே படிக்கவில்லையென மற்றொரு பிள்ளை அந்நிகழ்ச்சியில் கூறினார். அவர் கல்லூரிக்குச் சென்றபோது அங்கு தமிழ் மொழியைக் கட்டாயமாகப் படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும், தமிழைப் படிக்கும்போது மிகவும் சிரமப்பட்டதாகவும், தமிழ் எழுத்துகளை எழுத மிகவும் கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
மற்றவர்களோடு பேசும்பொழுது தமிழில் பேசுவதற்கு மிகவும் கூச்சப்படுவதாகவும், அந்த நிலைக்கு தங்களுடைய பெற்றோர்களும், பள்ளிக்கூட சூழ்நிலையுமேதான் காரணம் எனவும் சிலர் தெரிவித்தனர்.
அதிலும் பள்ளிக் கூடங்களில் தமிழில் பேசினால் ஒரு வார்த்தைக்கு ஒரு ரூபாய் அபராதம், மதிப்பெண்கள் குறைப்பு, பள்ளி முதல்வரைச் சந்திப்பது, பெற்றோர்களை அழைத்து வந்து விளக்கம் அளிப்பது உள்ளிட்ட தண்டனைகளை அனுபவிக்க நேரும் என்பதால் தாங்கள் ஆங்கிலத்தில் பேச வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாக அப்பிள்ளைகள் கூறினர். ஆங்கிலம் பேசச் சொல்லி மிகவும் கட்டாயப்படுத்தியது தங்களுடைய தாய்தான் என பெரும்பாலான பிள்ளைகள் தெரிவித்திருந்தனர்.
இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது, ஆங்கில மொழி மாணவர்களுக்குக் கற்பிக்கப்படவில்லை, திணிக்கப்பட்டுள்ளது என்று புரிகிறது.
அதே வேளையில் தாய் மொழியாம் தமிழ் மொழி ஒரேயடியாக புறக்கணிக்கப்பட்டு வருவதும் அதைவிடத் தெளிவாகத் தெரிகிறது.
ஒருவருக்கு தாய் மொழி என்பது மிகவும் அவசியமானது. தாய் மொழியில்தான் ஆரம்பக் கல்வியைக் கற்கிறோம். ஆனால் இப்போது தாய் மொழியில் கூட ஆரம்பக் கல்வியைக் கற்பதில்லை. ஆங்கில மோகம் தமிழர்களை ஆட்டிப் படைக்கிறது.
ஆங்கிலம் தேவைதான். அது ஒருவருடைய வாழ்க்கைக் கல்விக்கு அவசியமானதாகக் கருதப்படுகிறது. தமிழ் மொழியோடு ஆங்கிலத்தைக் கற்பதில் தவறில்லை.
தாய் மொழியாகிய தமிழைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலத்தைக் கற்பது மிகவும் வருத்தத்திற்குரியதாகும்.
ஆங்கிலத்தை அரைகுறையாகக் கற்றுக்கொண்டு தங்கள் குழந்தைகள் பேசுவதற்கே பல பெற்றோர்கள் புளகாங்கிதமடைந்து மகிழ்கிறார்கள்.
தமிழ், ஆங்கிலம் இரண்டையுமே தரமின்றித் தான் கற்றுவருகிறார்கள் என்றாலும் தமிழ் புறக்கணிக்கும் போக்கு வேதனையைக் கூட்டுகிறது. தமிழர்களே தமிழை அவமதித்தால் எப்படி?
நன்றி-தினமணி
இந்த நிலையில் பெற்றோரும் தனியார் பள்ளிக்கூட நிர்வாகங்களும் தமிழைப் புறக்கணிப்பதைப் பார்த்தால் நெஞ்சம் பதறுகிறது. தமிழர்களே தமிழுக்குத் துரோகம் செய்யலாமா?
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு தொலைக்காட்சியில் பெற்றோர் மற்றும் அவர்களுடைய குழந்தைகள் பங்கேற்ற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பானது. குழந்தைகளுடைய வாழ்க்கையில் தமிழ்ப்பயன்பாடு எவ்வாறு குறைந்து வருகிறது என்பது பற்றியது அது. அந்த விவாத நிகழ்ச்சியைப் பார்த்த எனக்கு ஒருபுறம் அதிர்ச்சியும் மறுபுறம் தாங்கொணாத வருத்தமும் ஏற்பட்டது.
ஏனெனில் தன்னுடைய மகனுக்குத் தமிழ் சரியாகப் படிக்க வரவில்லையென்பதால் அவரின் முதல் பாடமாக பிரெஞ்ச் தேர்வு செய்யப்பட்டதாக ஒரு தாய் கூறினார்.
தாய்மொழியான தமிழே சரியாக வரவில்லையென கூறிய அந்தத் தாய், கூடுதல் கவனம் செலுத்தி அப்பிள்ளைக்கு வீட்டில் தமிழ் மொழிப் பயிற்சி அளித்திருக்கலாமே?
தன்னுடைய பள்ளிப் படிப்பில் தமிழையே படிக்கவில்லையென மற்றொரு பிள்ளை அந்நிகழ்ச்சியில் கூறினார். அவர் கல்லூரிக்குச் சென்றபோது அங்கு தமிழ் மொழியைக் கட்டாயமாகப் படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும், தமிழைப் படிக்கும்போது மிகவும் சிரமப்பட்டதாகவும், தமிழ் எழுத்துகளை எழுத மிகவும் கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
மற்றவர்களோடு பேசும்பொழுது தமிழில் பேசுவதற்கு மிகவும் கூச்சப்படுவதாகவும், அந்த நிலைக்கு தங்களுடைய பெற்றோர்களும், பள்ளிக்கூட சூழ்நிலையுமேதான் காரணம் எனவும் சிலர் தெரிவித்தனர்.
அதிலும் பள்ளிக் கூடங்களில் தமிழில் பேசினால் ஒரு வார்த்தைக்கு ஒரு ரூபாய் அபராதம், மதிப்பெண்கள் குறைப்பு, பள்ளி முதல்வரைச் சந்திப்பது, பெற்றோர்களை அழைத்து வந்து விளக்கம் அளிப்பது உள்ளிட்ட தண்டனைகளை அனுபவிக்க நேரும் என்பதால் தாங்கள் ஆங்கிலத்தில் பேச வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாக அப்பிள்ளைகள் கூறினர். ஆங்கிலம் பேசச் சொல்லி மிகவும் கட்டாயப்படுத்தியது தங்களுடைய தாய்தான் என பெரும்பாலான பிள்ளைகள் தெரிவித்திருந்தனர்.
இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது, ஆங்கில மொழி மாணவர்களுக்குக் கற்பிக்கப்படவில்லை, திணிக்கப்பட்டுள்ளது என்று புரிகிறது.
அதே வேளையில் தாய் மொழியாம் தமிழ் மொழி ஒரேயடியாக புறக்கணிக்கப்பட்டு வருவதும் அதைவிடத் தெளிவாகத் தெரிகிறது.
ஒருவருக்கு தாய் மொழி என்பது மிகவும் அவசியமானது. தாய் மொழியில்தான் ஆரம்பக் கல்வியைக் கற்கிறோம். ஆனால் இப்போது தாய் மொழியில் கூட ஆரம்பக் கல்வியைக் கற்பதில்லை. ஆங்கில மோகம் தமிழர்களை ஆட்டிப் படைக்கிறது.
ஆங்கிலம் தேவைதான். அது ஒருவருடைய வாழ்க்கைக் கல்விக்கு அவசியமானதாகக் கருதப்படுகிறது. தமிழ் மொழியோடு ஆங்கிலத்தைக் கற்பதில் தவறில்லை.
தாய் மொழியாகிய தமிழைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலத்தைக் கற்பது மிகவும் வருத்தத்திற்குரியதாகும்.
ஆங்கிலத்தை அரைகுறையாகக் கற்றுக்கொண்டு தங்கள் குழந்தைகள் பேசுவதற்கே பல பெற்றோர்கள் புளகாங்கிதமடைந்து மகிழ்கிறார்கள்.
தமிழ், ஆங்கிலம் இரண்டையுமே தரமின்றித் தான் கற்றுவருகிறார்கள் என்றாலும் தமிழ் புறக்கணிக்கும் போக்கு வேதனையைக் கூட்டுகிறது. தமிழர்களே தமிழை அவமதித்தால் எப்படி?
நன்றி-தினமணி
Re: தமிழர்களே தமிழை அவமதிப்பதா!
100 % உண்மை ...சாமி wrote: இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது, ஆங்கில மொழி மாணவர்களுக்குக் கற்பிக்கப்படவில்லை, திணிக்கப்பட்டுள்ளது என்று புரிகிறது.
ஆங்கில மோகம் தமிழர்களை ஆட்டிப் படைக்கிறது.
அருமையான பதிவு
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Re: தமிழர்களே தமிழை அவமதிப்பதா!
எனக்கும் இது ஏன் என்று நீண்ட நாளாக குழப்பம்சாமி wrote: தமிழர்களே தமிழை அவமதித்தால் எப்படி?
Re: தமிழர்களே தமிழை அவமதிப்பதா!
ஆங்கிலம் பேசுவதோ அல்லது ஆங்கிலம் கலந்து பேசுவதோதான் நாக்ரீகம், அப்போதுதான் நம்மை அறிவார்ந்தவர்களாகப் பார்ப்பார்கள் என்கிற கேவலமான மாயை என்று விலகுகிறதோ, அன்றுதான் இப்பிரச்சனைக்கு விடிவுகாலம். ஆனால் பெரும்பான்மைத் தமிழர்களின் நாடி நரம்புகளிலெல்லாம் ஊறிவிட்ட இந்த மாயையை விரட்டுவதென்பது அவ்வளவு சாதாரணமான காரியம் இல்லை.
Re: தமிழர்களே தமிழை அவமதிப்பதா!
தமிழில் படித்தால் தான் வேலை என்று சொல்லிபாருங்கள், எல்லாம் தானாக நடக்கும்
செய்வார்களா இந்த அரசியல்வாதிகள்
செய்வார்களா இந்த அரசியல்வாதிகள்
Similar topics
» தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே !
» தமிழர்களே, தமிழர்களே.. இதையெல்லாம் நம்பாதீர்கள்..: கருணாநிதி
» தமிழர்களை அவமதிப்பதா: கடனாவுக்கு பொப் ரே கண்டனம்.
» தமிழர்களே, விரைவாக செயல்படுவோம்!
» இந்திய நாட்டின் மூத்த குடிமக்கள் தமிழர்களே
» தமிழர்களே, தமிழர்களே.. இதையெல்லாம் நம்பாதீர்கள்..: கருணாநிதி
» தமிழர்களை அவமதிப்பதா: கடனாவுக்கு பொப் ரே கண்டனம்.
» தமிழர்களே, விரைவாக செயல்படுவோம்!
» இந்திய நாட்டின் மூத்த குடிமக்கள் தமிழர்களே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|