ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடி குடியைக் கெடுக்கும்!

+5
Muthumohamed
ராஜா
ராஜு சரவணன்
அசுரன்
சாமி
9 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Empty குடி குடியைக் கெடுக்கும்!

Post by சாமி Sat Jul 13, 2013 7:54 pm

First topic message reminder :

1. கணவர் தூக்குப் போட்டு தற்கொலை

13 July 2013
மது குடித்து சீரழியாதே என்று மனைவி கண்டித்ததால், கணவர் தூக்குப் போட்டு நேற்று(வெள்ளிக்கிழமை) தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தருகா காவல் நிலைய சரகம், கல்பாரைச் சேர்ந்தவர் முத்தாண்டி மகன் முருகேசன்(32). டிராக்டர் ஓட்டுனர். இவருக்கு மலை ராணி(27) என்ற மனைவி, 5 வயதில் மகள் உள்ளனர். முருகேசன் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், அடிக்கடி குடிபோதையுடம், வீட்டிற்கு வந்து மனைவியுடன் சண்டை போட்டார் என்றும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று வழக்கம் போல் குடி போதையுடன் தகராறு செய்த கணவரை மனைவி மலைராணி கடுமையாகத் திட் டி, கண்டித்தாராம்.

இதனால் மனமுடைந்து வாழ்ககையில் வெறுப்புற்று முருகேசன் சாக முடிவு செய்தாராம். வீட்டில் யாரும் இல்லாத சமயம், தூக்கிட்டு முருகேசன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து ஏர்வாடி தருகா காவல் நிலையத்தில் முருகேசன் அண்ணன் நடராஜன்(42) புகார் செய்தார். காவல் ஆய்வாளர் முத்து ராஜ், சார்பு ஆய்வா ளர் மகேஸ்வரி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, முருகேசன் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

சியர்ஸ்                                           மப்பு ஏறிப்போச்சு     

2. குடிபோதையில் ஆம்புலன்சில் ரகளை: 2 பேரிடம் போலீஸ் விசாரணை
3. மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை!
4. தாயாரை தாக்கியதால் அண்ணனை கொலை செய்த தம்பி கைது
5. பொது குடிநீர் குழாயில் இளம்பெண் - மானபங்கம் செய்த போலீஸ் ஏட்டு
6. மதுவுக்கு அடிமையான தந்தையை கோடாரியால் வெட்டி கொன்ற மகன்!
7. மது குடிக்க பணம் கொடுக்காததால் தொழிலாளி தற்கொலை!
8. கரும்புத்தோட்டத்தில் போலி மதுபாட்டில்கள் தயாரிப்பு: 3 பேர் கைது
9. வியாசர்பாடி பகுதியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற 12 பெண்கள் கைது
10. உலகின் தலைசிறந்த என்ன கொடுமை சார் இது  மதுநிறுவனத்தின் முக்கிய இயக்குனராக இந்தியர் தேர்வு
11. பெரம்பலூரில் அரசு மதுபானத்தை அதிக விலைக்கு விற்றவர் கைது!
12. மதுபான விடுதியாக மாறிய சென்னை 'ஜெ.ஜெ.நகர் பஸ் நிலையம்'
13. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 1,012 பேர் மீது வழக்கு!
14. திருச்செந்தூர் அருகே 280 மதுபாட்டில்கள் பறிமுதல்!
15. மானாமதுரை: குடிபோதையில் தகறாறு அரசுபள்ளி தலைமையாசிரியர் கைது
16. மாங்காடு பகுதியில் கோயில் பூசாரி கொலை
17. மகன் சடலத்துடன் 3 நாள்கள் தவித்த தந்தை ஆபத்தான நிலையில் மீட்பு
18. தக்கலை அருகே மனைவியை கொன்றவர் 9 ஆண்டுக்கு பின் கைது
19. இரணியல் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து முதியவர் தற்கொலை
20. விருத்தாசலம் பஸ் நிலையத்தில் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்ற வாலிபர் கைது
21. டாஸ்மாக் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றவர் கைது
22. திட்டக்குடி அருகே பாலத்தின் கட்டையில் அமர்ந்து மது குடித்தவர் தவறி விழுந்து சாவு
23. வில்லியனூர் அருகே மதுகுடிக்க பணம் தரமறுத்த தொழிலாளிக்கு சோடா பாட்டில் குத்து
24. போட்டியின் போது 6 லிட்டர் பீர் குடித்தவர் பலி
25. பெரம்பலூர் அருகே டாஸ்மாக் மது பாட்டில்கள் வீடுகளுக்கு நேரடி சப்ளை
26. திறந்தவெளி "பார்' ஆக மாறும் திருமூர்த்தி அணை: இயற்கை ஆர்வலர்கள் வேதனை
27. போலி மதுபான ஆலைக்கு சீல்: 5 பேர் கைது
28. சாராயம் விற்பனை செய்த முதியவர் கைது
29. "பார்' ஆக மாறிய அரசு பள்ளி: குடிப்பவர்களுக்கு கொண்டாட்டம்: படிப்பவர்களுக்கு(?)
30. பைக்கில் மது பாட்டில்கள் கடத்தியவர் கைது
31. டி.கல்லுப்பட்டி அருகே 4 வயது சிறுவன் கொன்று புதைப்பு
32. தந்தை, மகனை கத்தியால் தாக்கியவர் கைது
33. போலி மதுபானம் குடித்த 20 பேர் பலி!
34. போதையில் வாகனம் ஓட்டிய இன்ஸ்பெக்டர் கைது
35. காவலரின் மனைவி தீக்குளித்து தற்கொலை : குழந்தை பலி, ஏட்டு கவலைக்கிடம்!
36. விழுப்புரத்தில் பெண் வக்கீலிடம் ரகளை: போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு!
(அவலங்கள் தொடரும்)


Last edited by சாமி on Thu Aug 01, 2013 12:01 am; edited 9 times in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down


குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by சாமி Tue Jul 30, 2013 6:50 am

35. காவலரின் மனைவி தீக்குளித்து தற்கொலை : குழந்தை பலி, ஏட்டு கவலைக்கிடம்!

29 July 2013 / மதுரையில், சட்டம் ஒழுங்கு காவலராக பணியாற்றி வரும் ஏட்டுவின் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் தீயில் கருகி குழந்தை பலியானது, ஏட்டு கவலைக்கிடமாக உள்ளார்.

மதுரையைச் சேர்ந்தவர் சுபாஷ் காந்தி (41). இவர் விளக்குத்தூண் காவல்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணியாற்றி வருகிறார். குற்றப் பிரிவு குடியிருப்பு பகுதியில், தனது மனைவி ராஜேஸ்வரி (32) மற்றும், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

திங்கட்கிழமை காலை தனது மூத்த பெண்ணை பள்ளியில் விட்டுவிட்டு வந்த சுபாஷ் காந்தி, காலையிலேயே குடிபோதையில் இருந்துள்ளார். இதனால், தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில், மனைவி ராஜேஸ்வரி தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அப்போது அங்கே இருந்த 2 வயது சிறுவன் சாய்சரண் மீதும், சுபாஷ் காந்தி மீதும் தீப்பற்றியது.

ஆபத்தான நிலையில் மூன்று பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், தாயும், குழந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சுபாஷ் காந்தி கவலைக்கிடமான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by Kuzhali Wed Jul 31, 2013 10:00 am

நாலைந்து நாட்களின் பதிவு.
இத்தனை குடும்பங்கள் சீரழிகின்றனவே...
...... ......
..... .......
ஆளுபவர்களுக்கு தெரியாதா?
..... .....
..... .....
மக்களை அழித்துவிட்டு அரசாங்கம் எதற்கு ?
Kuzhali
Kuzhali
பண்பாளர்


பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by ராஜா Wed Jul 31, 2013 11:50 am

Kuzhali wrote:நாலைந்து நாட்களின் பதிவு.
இத்தனை குடும்பங்கள் சீரழிகின்றனவே...
...... ......
..... .......
ஆளுபவர்களுக்கு தெரியாதா?
..... .....
..... .....
மக்களை அழித்துவிட்டு அரசாங்கம் எதற்கு ?
இந்த காசை வைத்து தானே , இந்த அரசியல் வியாதிகள் அடுத்த அடுத்த தேர்தலுக்கு இலவசங்களை வாரிக்கொடுக்கிறார்கள்.

இது ஒரு cycle டயர் போல .... ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by பாலாஜி Wed Jul 31, 2013 12:00 pm

ராஜா wrote:
Kuzhali wrote:நாலைந்து நாட்களின் பதிவு.
இத்தனை குடும்பங்கள் சீரழிகின்றனவே...
...... ......
..... .......
ஆளுபவர்களுக்கு தெரியாதா?
..... .....
..... .....
மக்களை அழித்துவிட்டு அரசாங்கம் எதற்கு ?
இந்த காசை வைத்து தானே , இந்த அரசியல் வியாதிகள் அடுத்த அடுத்த தேர்தலுக்கு இலவசங்களை வாரிக்கொடுக்கிறார்கள்.

இது ஒரு cycle டயர் போல .... ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும்

தமிழ் நாட்டின் இன்றைய நிலைமை அப்படி .... எந்த ஒரு கட்சியும் பூரண மதுவிலக்கு என்று அறிவித்தால் அந்த கட்சிக்கு டெப்பாசிட் கூட கிடைக்காது .. அந்த அளவிற்கு மக்களை அடிமை படுத்திவிட்டார்கள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by சாமி Thu Aug 01, 2013 12:02 am

36. விழுப்புரத்தில் பெண் வக்கீலிடம் ரகளை: போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு

விழுப்புரம், ஜூலை.30–

விழுப்புரம் வி.மருதூர் பகுதியை சேர்ந்தவர் பவானி (வயது 40), வக்கீல். நேற்று இரவு இவர் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தனது அலுவலகத்தில் பணிகளை செய்து முடித்தார். பின்னர் தனது இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கி புறப்பட்டார்.

வழியில், மோதுவது போல் எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த விக்கிரவாண்டி போலீஸ் நிலைய ஏட்டு கோவிந்தன் குடிபோதையில் பவானியிடம் ரகளை செய்ததாக தெரிகிறது.

இதுபற்றி விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் பவானி புகார் செய்தார். புகாரை விசாரித்த போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், ஏட்டு கோவிந்தனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by சாமி Thu Aug 01, 2013 12:14 am

37. தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!

2003–04ம் ஆண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் தொடங்கப்பட்டது. முதல் நிதியாண்டில் அதன் வருமானம் 3 ஆயிரத்து 639 கோடியாக இருந்தது. அதன் பிறகு மது விற்பனை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.

கடந்த 2003–04ம் ஆண்டு 156.61 லட்சம் பீர் பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை 2013–ம் ஆண்டில் 284.29 லட்சம் பீர் பெட்டிகளாக உயர்ந்துள்ளது.

மதுபானங்களின் விற்பனை 156.61 லட்சம் பெட்டிகளில் இருந்து தற்போது 536.35 லட்சம் பெட்டிகளாக உயர்ந்துள்ளது.

2010–ம் ஆண்டில் 12 ஆயிரத்து 498 கோடியாக இருந்த மது விற்பனை 2011–ம் ஆண்டில் 14 ஆயிரத்து 965 கோடியாக உயர்ந்தது. அடுத்த 2 ஆண்டுகளில் அதாவது 2013–14ம் ஆண்டில் மது விற்பனை ரூ.21 ஆயிரத்து 680 கோடியை எட்டியுள்ளது.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by பூவன் Thu Aug 01, 2013 12:15 am

அடுத்த ஆண்டு அப்படி என்றால் 50000 கோடி தான் ...சோகம் சோகம் சோகம் 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by சாமி Sat Aug 03, 2013 8:28 am

38. திருவொற்றியூரில் தாறுமாறாக ஓடிய மாநகர பஸ் மோதி வியாபாரி படுகாயம்!

திருவொற்றியூர்/ ஆக. 2 / 2013 எண்ணூரில் இருந்து திருவான்மியூருக்கு நேற்று இரவு மாநகர பஸ் (1சி) சென்றது. டிரைவர் கலையரசன் ஓட்டினார். 20–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். திருவொற்றியூர் பஸ்நிலையம் அருகே வந்த போது திடீரென பஸ் தாறுமாறாக ஓடியது. சாலையோரத்தில் லோடு சைக்கிளில் பினாயில் பாட்டில்களை தள்ளிச் சென்ற வியாபாரி காலடிப் பேட்டையை சேர்ந்த செல்வராஜ் மீது மோதி நின்றது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகளும் பொது மக்களும் டிரைவர் கலையரசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் அங்கு வந்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் குடி போதையில் தள்ளாடிய படி பதில் கூற முடியாமல் உளறினார். இதையடுத்து கலையரசனை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்று விட்டனர். பின்னர் பயணிகள் வேறு பஸ்களில் ஏறிச் சென்றனர்.

போதையில் டிரைவர் பஸ்சை கனரக வாகனங்களில் மோதி இருந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும்.

இதுபற்றி பயணிகள் கூறும்போது, ‘‘ஒவ்வொரு டிரைவரும் போதையில் உள்ளாரா? இல்லையா? என்பதை அறிந்து பஸ்சில் ஏற முடியுமா? பயணிகளின் உயிர்களுக்கு டிரைவர் தான் பாதுகாப்பு. இதுபற்றி துளியும் சிந்திக்காமல் போதையில் டிரைவர் பஸ்சை ஓட்டிச் சென்றதை நினைத்தால் பயமாக உள்ளது. இப்படிப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by சாமி Wed Aug 07, 2013 5:08 pm

39. தூத்துக்குடி துறைமுகத்தில் உயர்ரக மதுபானங்கள் பறிமுதல்

07 August 2013 / தூத்துக்குடி துறைமுகத்தில் தென்கொரியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட உயர்ரக மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி துறைமுகத்தில் தென்கொரியாவில் இருந்து கடல்வழி மார்கமாக கடத்திவரப்பட்ட உயர்ரக மதுபானங்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சுமார் 32 ஆயிரம் மதுபாட்டில்களின் மொத்த மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by சாமி Wed Aug 07, 2013 5:12 pm

40. ஊதாரியாக அலைந்த கணவரை கண்டித்த மனைவி வெட்டிக் கொலை!

06 August 2013 / ஊதாரியாக அலைந்ததால் கண்டித்த மனைவி  இன்று மாலை வெட்டிக் கொல்லப்பட்டார்.கணவன் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சாயல்குடி காவல் நிலைய சரகம் செவல்பட்டியைச் சேர்ந்தவர் கிளிராஜா(48).அவரது மனைவி முத்து லட்சுமி(42) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கிளிராஜா வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக அழைந்து திரிந்ததாகவும்,அடிக்கடி குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம்போல் இன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த கிளிராஜா மனைவியை அரிவாளால் வெட்டினார்.இதில் படுகாயம் அடைந்த முத்துலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த சாயல்குடி காவல் நிலைய  ஆய்வாளர் லாமேக்,சார்பு ஆய்வாளர்கள் நாகராஜன்,பரமசிவம்,சண்முகவேல் ஆகியோர் போலீஸாருடன் விரைந்து சென்று முத்துலட்சுமி சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதனையடுத்து கிளிராஜா கைது செய்யப்பட்டார்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum