ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடி குடியைக் கெடுக்கும்!

+5
Muthumohamed
ராஜா
ராஜு சரவணன்
அசுரன்
சாமி
9 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

குடி குடியைக் கெடுக்கும்!  - Page 2 Empty குடி குடியைக் கெடுக்கும்!

Post by சாமி Sat Jul 13, 2013 7:54 pm

First topic message reminder :

1. கணவர் தூக்குப் போட்டு தற்கொலை

13 July 2013
மது குடித்து சீரழியாதே என்று மனைவி கண்டித்ததால், கணவர் தூக்குப் போட்டு நேற்று(வெள்ளிக்கிழமை) தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தருகா காவல் நிலைய சரகம், கல்பாரைச் சேர்ந்தவர் முத்தாண்டி மகன் முருகேசன்(32). டிராக்டர் ஓட்டுனர். இவருக்கு மலை ராணி(27) என்ற மனைவி, 5 வயதில் மகள் உள்ளனர். முருகேசன் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், அடிக்கடி குடிபோதையுடம், வீட்டிற்கு வந்து மனைவியுடன் சண்டை போட்டார் என்றும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று வழக்கம் போல் குடி போதையுடன் தகராறு செய்த கணவரை மனைவி மலைராணி கடுமையாகத் திட் டி, கண்டித்தாராம்.

இதனால் மனமுடைந்து வாழ்ககையில் வெறுப்புற்று முருகேசன் சாக முடிவு செய்தாராம். வீட்டில் யாரும் இல்லாத சமயம், தூக்கிட்டு முருகேசன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து ஏர்வாடி தருகா காவல் நிலையத்தில் முருகேசன் அண்ணன் நடராஜன்(42) புகார் செய்தார். காவல் ஆய்வாளர் முத்து ராஜ், சார்பு ஆய்வா ளர் மகேஸ்வரி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, முருகேசன் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

சியர்ஸ்                                           மப்பு ஏறிப்போச்சு     

2. குடிபோதையில் ஆம்புலன்சில் ரகளை: 2 பேரிடம் போலீஸ் விசாரணை
3. மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை!
4. தாயாரை தாக்கியதால் அண்ணனை கொலை செய்த தம்பி கைது
5. பொது குடிநீர் குழாயில் இளம்பெண் - மானபங்கம் செய்த போலீஸ் ஏட்டு
6. மதுவுக்கு அடிமையான தந்தையை கோடாரியால் வெட்டி கொன்ற மகன்!
7. மது குடிக்க பணம் கொடுக்காததால் தொழிலாளி தற்கொலை!
8. கரும்புத்தோட்டத்தில் போலி மதுபாட்டில்கள் தயாரிப்பு: 3 பேர் கைது
9. வியாசர்பாடி பகுதியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற 12 பெண்கள் கைது
10. உலகின் தலைசிறந்த என்ன கொடுமை சார் இது  மதுநிறுவனத்தின் முக்கிய இயக்குனராக இந்தியர் தேர்வு
11. பெரம்பலூரில் அரசு மதுபானத்தை அதிக விலைக்கு விற்றவர் கைது!
12. மதுபான விடுதியாக மாறிய சென்னை 'ஜெ.ஜெ.நகர் பஸ் நிலையம்'
13. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 1,012 பேர் மீது வழக்கு!
14. திருச்செந்தூர் அருகே 280 மதுபாட்டில்கள் பறிமுதல்!
15. மானாமதுரை: குடிபோதையில் தகறாறு அரசுபள்ளி தலைமையாசிரியர் கைது
16. மாங்காடு பகுதியில் கோயில் பூசாரி கொலை
17. மகன் சடலத்துடன் 3 நாள்கள் தவித்த தந்தை ஆபத்தான நிலையில் மீட்பு
18. தக்கலை அருகே மனைவியை கொன்றவர் 9 ஆண்டுக்கு பின் கைது
19. இரணியல் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து முதியவர் தற்கொலை
20. விருத்தாசலம் பஸ் நிலையத்தில் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்ற வாலிபர் கைது
21. டாஸ்மாக் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றவர் கைது
22. திட்டக்குடி அருகே பாலத்தின் கட்டையில் அமர்ந்து மது குடித்தவர் தவறி விழுந்து சாவு
23. வில்லியனூர் அருகே மதுகுடிக்க பணம் தரமறுத்த தொழிலாளிக்கு சோடா பாட்டில் குத்து
24. போட்டியின் போது 6 லிட்டர் பீர் குடித்தவர் பலி
25. பெரம்பலூர் அருகே டாஸ்மாக் மது பாட்டில்கள் வீடுகளுக்கு நேரடி சப்ளை
26. திறந்தவெளி "பார்' ஆக மாறும் திருமூர்த்தி அணை: இயற்கை ஆர்வலர்கள் வேதனை
27. போலி மதுபான ஆலைக்கு சீல்: 5 பேர் கைது
28. சாராயம் விற்பனை செய்த முதியவர் கைது
29. "பார்' ஆக மாறிய அரசு பள்ளி: குடிப்பவர்களுக்கு கொண்டாட்டம்: படிப்பவர்களுக்கு(?)
30. பைக்கில் மது பாட்டில்கள் கடத்தியவர் கைது
31. டி.கல்லுப்பட்டி அருகே 4 வயது சிறுவன் கொன்று புதைப்பு
32. தந்தை, மகனை கத்தியால் தாக்கியவர் கைது
33. போலி மதுபானம் குடித்த 20 பேர் பலி!
34. போதையில் வாகனம் ஓட்டிய இன்ஸ்பெக்டர் கைது
35. காவலரின் மனைவி தீக்குளித்து தற்கொலை : குழந்தை பலி, ஏட்டு கவலைக்கிடம்!
36. விழுப்புரத்தில் பெண் வக்கீலிடம் ரகளை: போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு!
(அவலங்கள் தொடரும்)


Last edited by சாமி on Thu Aug 01, 2013 12:01 am; edited 9 times in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down


குடி குடியைக் கெடுக்கும்!  - Page 2 Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by சாமி Mon Jul 15, 2013 4:41 pm

7. மது குடிக்க பணம் கொடுக்காததால் தொழிலாளி தற்கொலை!

14 July 2013
சென்னையில் மது குடிக்க பணம் கொடுக்காததால் தூக்குப் போட்டு தொழிலாளி ஒருவர் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது: புது வண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பில் வசித்து வந்தவர் ரமேஷ் (50). இவர் லாரியில் சரக்குகளை ஏற்றி இறக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

கடந்த மாதம் நடந்த சாலை விபத்து ஒன்றில் இவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டதாம். இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இருந்தாலும் தோளில் கடுமையான வலியால் அவதியுற்று வந்தாராம்.

இந்த நிலையில் சனிக்கிழமை மாலை தோள் வலியால் பாதிக்கப்பட்ட அவர், வலியை மறக்க மது குடிக்க வேண்டும் என்று கூறி தனது மனைவி பத்தியிடம் (43) பணம் கேட்டாராம். ஆனால் பத்தி பணம் கொடுக்க மறுத்து, கடைக்கு சென்று விட்டாராம்.

கடும் வலியால் அவதியுற்ற ரமேஷ், மாலை சுமார் 5.30 கழிவறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  - Page 2 Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by சாமி Tue Jul 16, 2013 7:59 pm

8. கரும்புத்தோட்டத்தில் போலி மதுபாட்டில்கள் தயாரிப்பு: 3 பேர் கைது

6 July 2013 உளுந்தூர்பேட்டையை அருகே, கரும்புத் தோட்டத்தில் போலி மதுபாட்டில்கள் தயாரித்த 3 பேர் இன்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போலி மதுபாட்டில்கள், மினி லாரி வாகனம் உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உளுந்தூர்பேட்டை வட்டம் எடைக்கல் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன்கள் நமச்சிவாயம் (35), நித்யானந்தம் (30). இவர்கள் தங்களின் நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரிடம் குத்தகைக்கு விட்டிருந்தனர். அந்த நிலத்தில் பாலகிருஷ்ணன் கரும்பு சாகுபடி செய்துள்ளார். மேலும், கரும்புத் தோட்டத்தின் நடுவில், கள்ளச்சாராயத்தை வாங்கி அதில் கலர் பவுடரை கலந்து போலி மதுபாட்டில்களை தயாரித்து விற்பனையும் செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து, எடைக்கல் போலீஸாருக்கு வந்த ரகசிய தகவலின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் மற்றும் போலீஸார் எடைக்கல் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கரும்புத் தோட்டத்தில் போலி மதுபாட்டில்கள் தயாரித்த பாலகிருஷ்ணன், நமச்சிவாயம், நித்யானந்தம் ஆகியோரை போலீஸôர் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து, கள்ளச்சாராயம் 100 லிட்டர், போலி மதுப்பாட்டில்களுக்கு சீல் போடும் இயந்திரம், போலி மதுபாட்டில்கள் 1520, டாடா ஏசி வாகனம், ஒரு மோட்டார் சைக்கிள் உட்பட சுமார் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில், விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரன், போலீஸ் டி.எஸ்.பி. பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  - Page 2 Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by சாமி Tue Jul 16, 2013 8:13 pm

9. வியாசர்பாடி பகுதியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற 12 பெண்கள் கைது

பெரம்பூர், ஜூலை 16 2013

பெரம்பூர், வியாசர்பாடி பகுதியில் அரசு மதுபானங்களை வாங்கி வைத்து கடை பூட்டிய பிறகு கூடுதல் விலைக்கு விற்கும் தொழிலில் பலர் ஈடுபட்டு வருவதாக போலீசுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து புளியந் தோப்பு போலீஸ் உதவி கமிஷனர் கோவி மனோகரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், சங்கர், சம்பத் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் 12 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் சிக்கினார்கள். வியாசர்பாடி கக்கன்ஜி காலனியை சேர்ந்த ஜெகதீஸ்வரி, உதயசூரியன் நகரை சேர்ந்த கன்னியம்மாள், முனியம்மாள், அஞ்சலை, சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த தேவி, மருதாயி, கொடுங்கையூரை சேர்ந்த ரவணா, சாரதா, வின்னி, வியாசர்பாடி சி.கல்யாணபுரத்தை சேர்ந்த மகேஸ்வரி, சாமந்திபூ காலனியை சேர்ந்த ராணி, கண்ணகி, ஆறுமுகம், ரஞ்சித், அசோக், ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 150 பாட்டில் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  - Page 2 Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by சாமி Tue Jul 16, 2013 8:20 pm

10. உலகின் தலைசிறந்த என்ன கொடுமை சார் இது மதுபான நிறுவனத்தின் முக்கிய நிர்வாக இயக்குனராக இந்தியர் தேர்வு

உலக அளவில் வர்த்தக சாம்ராஜ்யங்களை இந்தியர்கள் நிர்வகிக்கும் போக்கு அதிகரிக்கும் இந்த வேளையில், உலகிலேயே சிறந்த மதுபான தயாரிப்பு நிறுவனமான ஜானி வாக்கரின் முக்கிய நிர்வாகப் பொறுப்பினை தலைமை தாங்க, ஒரு இந்தியர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  

இந்தியாவில் பிறந்த, 52 வயதுடைய இவான் மெனிசிஸ் வணிக மேலாண்மையில் பட்டம் பெற்றவர். இவர், இந்தியாவின் தலை சிறந்த நிர்வாகிகளாக விளங்கும் அன்ஷு ஜெயின், இந்திரா நூயி, அஜய் பங்கா, ராகேஷ் கபூர் போன்றவர்களுடன் சம காலத் தொடர்பில் உள்ளவர்.

கிழக்கத்திய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கத் துவங்கியதுமே பாரம்பரியமான ஐரோப்பிய நிறுவனங்கள் தங்களுடைய நிர்வாகப் பொறுப்புகளை இந்தியர்களிடம் ஒப்படைக்க ஆரம்பித்தன. அந்த வரிசையில் இவான், டியாஜியோ நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க இருக்கின்றார்.  

இந்நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்பில் நீண்ட ஆண்டுகளாக பணியாற்றி வந்த பால் வால்ஷ், அடுத்த ஆண்டு மத்தியில்தான் பதவி விலகுவதாக முடிவு செய்திருந்தார். ஆயினும், இப்போது வரும் ஜூலை முதலே, இவான் மெனிசிஸ் தலைமைப் பொறுப்பை ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் விஜய் மல்லையாவின், 2.6 பில்லியன் மதிப்புள்ள யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனப் பங்குகளை, ஜானி வாக்கர் நிறுவனம் ஏற்கின்றது என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து அவற்றின் பங்குகள் சந்தையில் உயர்ந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.


Last edited by சாமி on Mon Jul 22, 2013 4:34 pm; edited 2 times in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  - Page 2 Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by சாமி Wed Jul 17, 2013 8:46 pm

11. பெரம்பலூரில் அரசு மதுபானத்தை அதிக விலைக்கு விற்றவர் கைது!

பெரம்பலூர், ஜூலை 17 / 2013

பெரம்பலூர் பகுதியில் அரசு மதுபான கடைகளில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி அதனை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சர்புதீன், மற்றும் போலீசார் அதிரடியாக நகர்பகுதியில் சோதனை நடத்தினார்கள்.

அப்போது அரசு மதுபானத்தை அதிக விலைக்கு விற்ற மேலபுலியூரைச் சேர்ந்த துரைசாமி (வயது 45) என்பவர் பிடிப்பட்டார்.

அவரிடம் விசாரணை நடத்தியதில் டாஸ்மாக் கடையில் இருந்து மதுபானத்தை வாங்கி அதனை அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. அவர் பதுக்கி வைத்திருந்த 144 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக துரைசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  - Page 2 Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by சாமி Thu Jul 18, 2013 7:49 am

12. மதுபான விடுதியாக மாறிய சென்னை 'ஜெ.ஜெ.நகர் பஸ் நிலையம்'

18 July 2013
முறையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லாதததால் ஜெ.ஜெ.நகர் (கிழக்கு) பஸ் நிலையம், சமூக விரோதிகளின் புகலிடமாக மாறி வருவதாக அப்பகுதி பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பஸ் நிலையத்தில் விளக்குகள் இல்லாதததால், இரவு நேரத்தில் அந்த இடத்தை மதுபான விடுதியாக சிலர் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

சென்னை, முகப்பேர் பகுதியில் அமைந்துள்ள ஜெ.ஜெ.நகர் கிழக்கு பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 20 பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. நாளொன்றுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஜெ.ஜெ.நகர் பஸ் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பஸ் நிலையம் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி தற்போது புதர் மண்டி காட்சியளிக்கிறது.

சகதிக்குள் இயக்கப்படும் பஸ்கள்: பஸ் நிலையத்தின் உள்புறத்தில் சாலை வசதி இல்லாமல் குண்டும் குழியுமாக உள்ளதால் வண்டிகளை இயக்க மிகவும் சிரமமாக உள்ளதாக ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறிய தகவல்கள்:-

ஜெ.ஜெ.நகர் கிழக்கு பகுதியில் சுமார் ஒரு லட்சம் பேர் வசிக்கின்றனர். அதில் பெரும்பாலானவர்கள் இங்குள்ள பஸ் நிலையத்தை கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருகின்றனர். சேறும், சகதியுமாக பஸ் நிலையம் இருப்பதால் யாரும் உள்ளே சென்று பஸ் ஏறுவதில்லை. இதன் காரணமாக மாலை நேரத்தில் மது குடிக்கவும், மலம் கழிக்கவுமே பஸ் நிலையம் பயன்படுத்தப்படுகிறது.

இதை முறைப்படுத்தவோ, கண்காணிக்கவோ யாருமே இல்லாததால் சமூக விரோதச் செயல்களுக்கு வசதியான இடமாக உள்ளது இந்த பஸ் நிலையம். இதனால் இரவு நேரத்தில் பெண்கள் அப்பகுதியைக் கடந்து செல்லவே அச்சமாக உள்ளது என்றனர்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  - Page 2 Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by சாமி Thu Jul 18, 2013 7:56 am

13. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 1,012 பேர் மீது வழக்கு!

பெங்களூர், 15 July 2013
பெங்களூரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 1,012 பேர் மீது மாநகரப் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதுகுறித்து பெங்களூர் மாநகரப் போக்குவரத்து கூடுதல் ஆணையர் தயானந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெங்களூர் மாநகரில் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி வரை கிழக்கு, மேற்கு மண்டலத்தில் உள்ள போக்குவரத்து போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி வந்ததாக கிழக்கு மண்டலத்தில் உள்ள 20 காவல் நிலையங்களில் 480 வழங்குகளும், மேற்கு மண்டலத்தில் உள்ள 24 காவல் நிலையங்களில் 534 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  - Page 2 Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by சாமி Mon Jul 22, 2013 3:41 pm

14. திருச்செந்தூர் அருகே 280 மதுபாட்டில்கள் பறிமுதல்!

21 July 2013 , திருச்செந்தூர் அருகே டாஸ்மாக் பார்களில் அனுமதியின்றி விற்பனை செய்யவிருந்த 281 மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருச்செந்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் டாஸ்மாக் பார்களில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை டாஸ்மாக் பார்களில் சோதனை நடத்திட உத்திரவிட்டார். திருச்செந்தூர் தாலுகா காவல் ஆய்வாளர் கோ.பத்மநாபன் பிள்ளை, உதவி ஆய்வாளர்கள் ஜெயக்குமார், அய்யாச்சாமி உள்ளிட்ட காவல்துறையினர் காயாமொழி மற்றும் பள்ளிப்பத்து டாஸ்மாக் கடை பார்களில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அனுமதியின்றி மது விற்றுக்கொண்டிருந்த வடக்கு பள்ளிபத்தைச் சேர்ந்த சித்திரை (55) என்பவரிடமிருந்து 9 மது பாட்டில்களும், வனமுத்து (55) என்பவரிடமிருந்து 271 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.


Last edited by சாமி on Mon Jul 22, 2013 4:05 pm; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  - Page 2 Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by சாமி Mon Jul 22, 2013 3:43 pm

15. மானாமதுரையில்  பஸ் ஏற நின்றவரிடம் குடிபோதையில் தகறாறு செய்த அரசு பள்ளி தலைமையாசிரியர் கைது

மானாமதுரை : 21 July 2013

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த சனிக்கிழமை பஸ் ஏற நின்றவரிடம் குடி போதையில் தகறாறு செய்த அரசு பள்ளி தலைமையாசிரியரை டி.எஸ்.பி வெள்ளத்துரை உத்தரவின்பேரில் போலீசார் கைது செய்தனர். மானாமதுரை ரயில்வே காலணி ஜீவா நகரில் வசிப்பவர் மதியழகன்(46) இவர் அருகேயுள்ள கீழக்கொம்புக்காரனேந்தல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக வேலை பார்த்து வருகிறார். மானாமதுரை பழைய பஸ் நிலையத்தில் இங்குள்ள மூங்கில்ஊரணி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த கண்ணன் என்பவர் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த தலைமையாசிரியர் மதியழகன் கண்ணனிடம் தகறாறில் ஈடுபட்டார். இதையடுத்து கண்ணன் அருகேயுள்ள போலீஸ் டி.எஸ்.பி அலுவலகத்துக்குச் சென்று டி.எஸ்.பி வெள்ளத்துரையிடம் புகார் செய்தார். இவரது உத்தரவின்பேரில் மானாமதுரை போலீசார் வழக்கு பதிந்து மதியழகனை கைது செய்தனர்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  - Page 2 Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by சாமி Mon Jul 22, 2013 4:09 pm

16. மாங்காடு பகுதியில் கோயில் பூசாரி கொலை

21 July 2013 / சென்னை கெருகம்பாக்கத்தில் கல்லால் தலையில் தாக்கி கோயில் பூசாரி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னைக்கு அருகில் உள்ள கெருகம்பாக்கம் டாக்டர் சிவராஜ் தெருவைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (34). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் குறி சொல்லும் தொழில் செய்து வருகிறார். இவர் அடிக்கடி தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது வழக்கமாம்.இந்த நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு வெளியில் சென்ற ஹரிகிருஷ்ணன் வீடு திரும்பவில்லை என்று போலீஸாருக்கு புகார் வந்தது. இது குறித்து போலீஸார் விசாரித்து வந்தனர். அப்போது கெருகம்பாக்கம் மயானத்தில் உள்ள தகன மேடையில் கற்களால் மூடப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதாக இன்று தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அந்தப் பகுதிக்கு சென்ற போலீஸார் இறந்து கிடந்தது ஹரிகிருஷ்ணன் என்பதை உறுதிபடுத்தினர். அவரது முகம் சிதைக்கப்பட்டிருந்தது. அவர் கற்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.விசாரணையில் காணாமல் போன அன்று, ஹரிகிருஷ்ணன் அதேப் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் மது குடிக்கச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து ராஜேஷை கைது செய்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையின் போது, ஹரிகிருஷ்ணன் மது போதையில் தன்னிடம் தவறாக முயற்சி செய்ததாகவும், அதன் காரணமாக கற்களால் அவரது தலையில் தாக்கி கொலை செய்துவிட்டதாகவும் ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்த கொலை குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  - Page 2 Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum