புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படைத்தவன் யாரோ? Poll_c10படைத்தவன் யாரோ? Poll_m10படைத்தவன் யாரோ? Poll_c10 
2 Posts - 50%
ayyasamy ram
படைத்தவன் யாரோ? Poll_c10படைத்தவன் யாரோ? Poll_m10படைத்தவன் யாரோ? Poll_c10 
1 Post - 25%
வேல்முருகன் காசி
படைத்தவன் யாரோ? Poll_c10படைத்தவன் யாரோ? Poll_m10படைத்தவன் யாரோ? Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படைத்தவன் யாரோ? Poll_c10படைத்தவன் யாரோ? Poll_m10படைத்தவன் யாரோ? Poll_c10 
285 Posts - 45%
heezulia
படைத்தவன் யாரோ? Poll_c10படைத்தவன் யாரோ? Poll_m10படைத்தவன் யாரோ? Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
படைத்தவன் யாரோ? Poll_c10படைத்தவன் யாரோ? Poll_m10படைத்தவன் யாரோ? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
படைத்தவன் யாரோ? Poll_c10படைத்தவன் யாரோ? Poll_m10படைத்தவன் யாரோ? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
படைத்தவன் யாரோ? Poll_c10படைத்தவன் யாரோ? Poll_m10படைத்தவன் யாரோ? Poll_c10 
20 Posts - 3%
prajai
படைத்தவன் யாரோ? Poll_c10படைத்தவன் யாரோ? Poll_m10படைத்தவன் யாரோ? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
படைத்தவன் யாரோ? Poll_c10படைத்தவன் யாரோ? Poll_m10படைத்தவன் யாரோ? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
படைத்தவன் யாரோ? Poll_c10படைத்தவன் யாரோ? Poll_m10படைத்தவன் யாரோ? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
படைத்தவன் யாரோ? Poll_c10படைத்தவன் யாரோ? Poll_m10படைத்தவன் யாரோ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
படைத்தவன் யாரோ? Poll_c10படைத்தவன் யாரோ? Poll_m10படைத்தவன் யாரோ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படைத்தவன் யாரோ?


   
   
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Sun Jul 14, 2013 2:18 pm

நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஐயம். தமிழ்க் கவிஞர்கள் அதிகமாகப் பாடிய கடவுள் யார்?

முருகன், அம்மன், சிவன், கிருஷ்ணன் என்று அடுக்கலாம். ஆனால் அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களால் பாடப்பட்டவர்கள்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் இல்லாதவர்களும் ஒத்த எண்ணத்தோடு எந்தக் கடவுளைப் பாடியிருக்கிறார்கள்?

அப்படியொரு ஒரு கடவுள் இருக்கிறார். அவருக்கு கோயில் கிடையாது. வழிபாடு கிடையாது. திருவிழா கிடையாது. பலிகளோ படையல்களோ கிடையாது. ஆனால் கவிஞர்கள் மட்டும் அவரைப் போற்றிக் கொண்டாடுவார்கள்.

யார் அந்தக் கடவுள்? ஏன் அவரைக் கொண்டாடுகிறார்கள்?

புலவர் புலமைப் பித்தன் எழுதிய ஒரு பாடலின் வரியைச் சொல்கிறேன். உங்களுக்குச் சட்டென்று புரிந்து போகும்.

படைத்தானே பிரம்மதேவன் பதினாறு வயது கோலம்!

புரிந்து விட்டதல்லவா? நான்முகன் பிரம்மன் என்றெல்லாம் அழைக்கப்படும் படைப்புக் கடவுள்தான் அந்தக் கடவுள்.

ஏன்? ஏனென்றால் அந்தப் படைப்புக் கடவுள்தான் காதலர்களுக்குத் தக்க காதலிகளைக் கொடுக்கிறார். இல்லை இல்லை. படைக்கிறார்.

”மடப்பாவையார் நம் வசமாகத் தூது நடப்பாரே தெய்வம் நமக்கு” என்று ஆதிநாதன் வளமடலில் செயங்கொண்டார் சொன்னதும் அதே கருத்துதான்.

கொன்றை அணிந்த சிவனோ உலகளந்த கோபலனோ எமக்குத் தெய்வமல்ல. அழகான காதல் பாவையருக்காக தூது நடப்பவரே நமக்குத் தெய்வம்.

சரி. வாருங்கள். இனி ஒவ்வொரு கவிஞரும் பிரம்மனை எப்படியெல்லாம் புகழ்ந்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

அப்படி பிரம்மனைப் புகழ்ந்தவர்களில் என்னை மிகவும் வியக்க வைத்தவர் டி.ராஜேந்தர். அவரே எழுதி இசையமைத்த இரண்டு பாடல்களில் மிகமிகக் கவிநயத்தோடு பிரம்மனைக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வரிகளை நீங்களே படித்துப் பாருங்கள். நான் சொல்வதை ஒப்புக் கொள்வீர்கள்.

தேவலோக அமுதத்தை குழம்பாக எடுத்து
தங்க நிற வர்ணத்தில் குழைக்கின்ற போது
பிரம்மனுக்கு ஞானம் வந்து உன்னை படைக்க
அட பிரமிப்புடன் நானும் வந்து உன்னை ரசிக்க

மேலே குறிப்பிட்டுள்ள பாடல் உயிருள்ளவரை உஷா படத்தில் இடம் பெற்ற “மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க” பாடல். விளக்கமே தேவைப்படாத அழகிய வரிகள் அல்லவா!

அதே போல மைதிலி என்னைக் காதலி படத்தில் இடம் பெற்ற “ஒரு பொன்மானை நான் காணத் தகதிமித்தோம்” பாடலிலும் பிரம்மனைப் பாராட்டுகிறார் விஜய டி.ராஜேந்தர்.

தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி
தாமரைப் பூ மீது விழுந்தனவோ
இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகந்தான் உன் கண்களோ

அடடா! என்ன கற்பனை! அவள் கண்ணைப் படைப்பதற்கே பிரம்மனுக்கு இப்படியொரு காட்சி தேவைப்பட்டிருக்கிறது. அவள் முழுவுடலையும் பளிங்குச் சிலையாய் படைப்பதற்கு எதையெதையெல்லாம் பார்த்துக் கற்றானோ!

வைரமுத்துவின் சிந்தனை சற்று வேறுவிதமாகச் செல்கிறது. ஒரு எலக்ட்ரானிக் கண் கொண்டு காதலியைப் பார்க்கிறார். அவள் சிரிப்பு கூட டெலிபோன் மணி போலக் கேட்கிறது. அப்படி ஒரு பெண்ணை பிரம்மன் எதை அடிப்படையாகக் கொண்டு படைத்திருப்பான்? வேதங்களா? குருவருளா? சிவனருளா?

கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா

பிரம்மனும் காலமாற்றத்துக்குத் தக்க ஓலைச் சுவடிகளை வீசி எறிந்து விட்டு கம்ப்யூட்டரில் அனிமேஷன் செய்யத் துவங்கி விட்டானோ என்று வைரமுத்துவின் கற்பனை ஓடுகிறது.

இன்னொரு பாட்டில் சற்று கொச்சையாக பிரம்மனின் படைப்புக் கதையைச் சொல்கிறார் வைரமுத்து. அண்ணாமலை திரைப்படத்தில் இடம் பெற்ற “அண்ணாமல அண்ணாமல” பாடல் வரிகளைக் கொஞ்சம் பார்க்கலாம்.

பிரம்மனுக்கு மூடு வந்து உன்னை படைச்சிட்டான்
அடி காமனுக்கு மூடு வந்து என்னை அனுப்பிட்டான்

பிரம்மனின் வள்ளல் திறமையையும் கஞ்சத்தனத்தையும் இன்னொரு பாட்டில் கொண்டுவருகிறார் வைரமுத்து. ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற “அன்பே அன்பே கொல்லாதே” பாடல் வரிகளைக் கொடுக்கிறேன். பிரம்மன் எங்கு கஞ்சத்தனத்தையும் எங்கு வள்ளல் தன்மையையும் காட்டினான் என்று நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி

அத்தோடு விடவில்லை வைரமுத்து. பிரம்மனைப் பார்த்து “தகுமா? முறையா? நீதியா?” என்று ஜெமினி படத்து நாயகனுக்காக முறையிடுகிறார்.

பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா

இந்தப் பாட்டில் சொல்வது போன்ற அழகான பெண்ணை பிரம்மன் கொடுத்தால் அது வரமா? சாபமா? இரண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

இன்னொரு வித்தியாசமான கவிஞர் இருக்கிறார். அவர் இசையில் அவர் எழுதி இசையமைத்த பாடல் தான் நாடோடித் தென்றல் படத்தில் வந்த “மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரழகே” பாடல். ஆம். இசைஞானி இளையராஜா தான் எழுதிய பாடலிலும் பிரம்மனை இழுக்கிறார்.

மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரழகே
கொடியே கொடிமலரே கொடியிடையில் மணியழகே
………………..
பொன்னில் வடித்த சிலையே பிரம்மன் படைத்தான் உனையே

இன்றைய கவிஞர்களும் பிரம்மனை விடுவதாக இல்லை. முதலில் பா.விஜய் எழுதிய பாடல்களைப் பார்க்கலாம்.

அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று
ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்

அரசாங்க அலுவலகத்தில் மனு கொடுத்தால் அது எங்கு போகும் என்று தெரியும். ஆனால் பிரம்மனிடத்தில் மனு கொடுத்தால் கண்டிப்பாக அது நடக்கும் என்றொரு நம்பிக்கையை தேவதையைக் கண்டேன் திரைப்படப் பாடல் வரிகளில் கொண்டு வந்திருக்கிறார்.

பிரியமான தோழி படத்துக்காகவும் பிரம்மனைப் புகழ்ந்திருக்கிறார் பா.விஜய்.

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
………………..
பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது

இந்த உலகத்தையே படைத்து, அதில் அத்தனை உயிர்களையும் படைத்ததை விட ஓவியம் போன்ற அழகான காதலியைப் படைத்ததுதான் மிகப் பெரிய சாதனை என்று காதலன் பார்வையில் பா.விஜய் எழுதியதும் ரசிக்கத்தக்கதுதான்.

நா.முத்துக்குமாரும் வழக்கு எண் 18/9 படத்துக்காக பிரம்மன் கையைப் பிடித்து இழுத்திருக்கிறார்.

வானத்தையே எட்டி புடிப்பேன்
பூமியையும் சுத்தி வருவேன்
…………………
அடி பெண்ணே நீயும் பெண்தானோ
இல்ல பிரம்மன் செய்த சிலைதானோ

வழக்கமாக பாட்டெழுதும் கவிஞர்கள் மட்டுமல்ல, புதிதாகப் பாட்டெழுதுகின்றவர்களுக்கும் பிரம்மனே துணை. தானே இயக்கிய கச்சேரி ஆரம்பம் திரைப்படத்தில் ஒரு பாடலை இயக்குனர் திரைவாணன் எழுதியிருக்கிறார். அங்கும் பிரம்மனுக்குப் போற்றி மேல் போற்றி.

பிரம்மா உன் படைப்பினிலே…
எத்தனையோ பெண்கள் உண்டு
ஆனாலும் அசந்துவிட்டேன் அழகினிலே
இவளைக் கண்டு
அழகினிலே.. இவளைக்கண்டு
வாடா வாடா பையா

இப்படியெல்லாம் பாடல்களைப் பார்க்கும் போது எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா?

இதுதான் பிரம்மனுக்கு வந்த வாழ்வு! வாழ்வோ வாழ்வு!

பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

பாடல் – மோகம் வந்து தாகம் வந்து
படம் – உயிருள்ளவரை உஷா
பாடியவர்கள் – எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல் & இசை – டி.ராஜேந்தர்
பாடலின் சுட்டி – https://youtu.be/1S3XGSA4qTk

பாடல் – அன்பே அன்பே கொல்லாதே
படம் – ஜீன்ஸ்
பாடல் – வைரமுத்து
பாடியவர் – ஹரிஹரன்
இசை – ஏ.ஆர்.ரகுமான்
பாடலின் சுட்டி – https://youtu.be/_QzDFtWVf3c

பாடல் – படைத்தானே பிரம்மதேவன்
படம் – எல்லோரும் நல்லவரே
பாடல் – புலவர் புலமைப்பித்தன்
பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை – வி.குமார்
பாடலின் சுட்டி – https://youtu.be/qamttiCClsc

பாடல் – அழகே பிரம்மனிடம் மனு
படம் – தேவதையைக் கண்டேன்
பாடல் – பா.விஜய்
பாடியவர்கள் – ஹரீஷ் ராகவேந்திரா, கங்கா
இசை – தேவா
பாடலின் சுட்டி – https://youtu.be/lrCW8fOcXVQ

பாடல் – அண்ணாமல அண்ணாமல
படம் – அண்ணாமலை
பாடல் – வைரமுத்து
பாடியவர்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா
இசை – தேவா
பாடலின் சுட்டி – https://youtu.be/OQ3RdFU5vsQ

பாடல் – வானத்தையே எட்டி புடிப்பேன்
படம் – வழக்கு எண் 18/9
பாடல் – நா.முத்துக்குமார்
பாடகர் – தண்டபாணி
இசை – ஆர்.பிரசன்னா
பாடலின் சுட்டி – https://youtu.be/a-ohRTF8CeI

பாடல் – பெண்ணொருத்தி பெண்ணொருத்தி
படம் – ஜெமினி
பாடல் – வைரமுத்து
இசை – பரத்வாஜ்
பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடலின் சுட்டி – https://youtu.be/XNiS5Zxj_RY

பாடல் – பிரம்மா உன் படைப்பினிலே(வாடா வாடா பையா)
படம் – கச்சேரி ஆரம்பம்
பாடல் – திரைவாணன் (இயக்குனர்)
பாடியவர் – கார்த்திகேயன் எம்.ஐ.ஆர், அந்திதா
இசை – டி.இமான்
பாடலின் சுட்டி – https://youtu.be/ho-4PCJnQ6k

பாடல் – பெண்ணே நீயும் பெண்ணா
படம் – பிரியமான தோழி
பாடல் – பா.விஜய்
பாடியவர்கள் – கல்பனா, உன்னி மேனன்
இசை – எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=KSM9aCJFVTo

பாடல் – மணியே மணிக்குயிலே
படம் – நாடோடித் தென்றல்
பாடியவர்கள் – எஸ்.ஜானகி, மனோ
பாடல் & இசை – இளையராஜா
பாடலின் சுட்டி – https://youtu.be/UNIb8Pblu7w

பாடல் – ஒரு பொன் மானை நான் காண
படம் – மைதிலி என்னைக் காதலி
பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல் & இசை – டி.ராஜேந்தர்
பாடலின் சுட்டி – https://youtu.be/S-XvP9p9mOs

பாடல் – டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா
படம் – இந்தியன்
பாடியவர் – ஹரிணி, ஹரிஹரன்
பாடல் – வைரமுத்து
இசை – ஏ.ஆர்.ரகுமான்
பாடலின் சுட்டி – https://youtu.be/SfHbknfOOuA

அன்புடன்,
ஜிரா
நன்றி
நாலு வரி நோட்டு



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 14, 2013 3:02 pm

பிரம்மனுக்கும் கோவில் உண்டு. கும்பகோணத்தில் மற்றும் புஷ்கர் - ராஜஸ்தான் எனும் இடங்களில் கோவில் உள்ளது.

அதுவும் பிரம்மானை பற்றி சொல்ல இந்த கட்டுரையாளருக்கு திரைப்பட பாடல்கள் தான் கிடைத்ததா? புன்னகை

அதுசரி திரைப்படம் எனும் ஒன்றோடு வைத்து சொன்னால் தான் மக்கள மனதில் இதுபோன்ற தகவல்கள் பதியும் என எண்ணி இருக்கலாம். புன்னகை

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Sun Jul 14, 2013 8:23 pm

ராஜு சரவணன் wrote:பிரம்மனுக்கும் கோவில் உண்டு. கும்பகோணத்தில் மற்றும் புஷ்கர் - ராஜஸ்தான் எனும் இடங்களில் கோவில் உள்ளது.

அதுவும் பிரம்மானை பற்றி சொல்ல இந்த கட்டுரையாளருக்கு திரைப்பட பாடல்கள் தான் கிடைத்ததா? புன்னகை

அதுசரி திரைப்படம் எனும் ஒன்றோடு வைத்து சொன்னால் தான் மக்கள மனதில் இதுபோன்ற தகவல்கள் பதியும் என எண்ணி இருக்கலாம். புன்னகை

திரைப்பட படல்கள் என்ன அவ்வளவு கேவலமா ....பல கவிஞர்களை வாழவைத்த ஒரு தொழில் .....
இந்த கட்டுரை பிரம்மா பற்றியது அல்ல தமிழ் கவிஞர்கள் எவ்வாறு படைப்புகளை வர்ணித்தார்கள் என்பதை கூற சிறு முயற்சி அவ்வளவு தான் ....
என்னைப் பொருத்த வரை சினிமா என்பது நவீன கால காப்பியங்கள் ( அல்லது கதை,கவிதை மற்றும் கட்டுரைகளை மறுவடிவமைப்பு ).......



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக