ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

Top posting users this week
ayyasamy ram
தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_c10தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_m10தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_c10 
heezulia
தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_c10தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_m10தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_c10 
mohamed nizamudeen
தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_c10தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_m10தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துக் கொள்ளுங்கள்...

Go down

தெரிந்துக் கொள்ளுங்கள்... Empty தெரிந்துக் கொள்ளுங்கள்...

Post by Powenraj Fri Jul 12, 2013 2:00 pm

வாஞ்சிநாதன்
 
இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்டவர்கள் என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு. இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் வாஞ்சிநாதனும் ஒருவர். வரலாற்று நாயகன். இவரது முக்கியத்துவம் இன்னும் பெரும்பாலான மக்களால் புரிந்து கொள்ளப்
 படவில்லை.
 சுதந்திரத்துக்காக ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள் பூலித்தேவன், சின்னமலை, கட்டபொம்மன், ஊமைத்துரை, அழகு முத்துக்கோன், மருது சகோதரர்கள் ஆகியோர்கள்.
 இவர்கள் அனைவருமே ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டவர்கள்.
 1806-ஆம் ஆண்டு குறுநில மன்னர்களும் பாளையக்காரர்களும் நடத்திய வேலூர் புரட்சிக்குப் பின் 105 ஆண்டுகள் கழித்து ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் புரட்சி செய்தவர் வாஞ்சிநாதன்.
 இவர் தனது தீரச் செயலின் மூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டவர்.
 இந்திய எல்லையையும் தாண்டி இங்கிலாந்து நாட்டையே உலுக்கியது வாஞ்சிநாதனின் தீரச் செயல்.
 தகவல் தொடர்பு, போக்குவரத்து ஆகிய துறைகளில் மிகவும் பின்தங்கியிருந்த அக்காலத்திலேயே வாஞ்சிநாதன், 1911-ஆம் ஆண்டு, ஜூன் 17-இல் திருநெல்வேலிக்கருகிலுள்ள மணியாச்சி ரயில் நிலையத்தில், ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டது பற்றி அதே ஆண்டு ஜூன் 19-ஆம் நாள் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
 இப்படிப் புகழ்பெற்ற வீரர் வாஞ்சிநாதனின் நினைவு தினம், அவர் பிறந்த செங்கோட்டையில் ஆண்டுதோறும் வீர வணக்க நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
 
 குண்டுகளின் கிராமம்
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் அண்டோவர் என்பது ஒரு சிறிய கிராமம். இந்த கிராமம் முழுவதும் குண்டு மனிதர்களின் நடமாட்டம் எப்போதும் இருக்கும்.
 இதற்குக் காரணம் கரின் பிரெஞ்ச் என்பவரின் தலைமையில் இங்கு ஒரு மருத்துவமனை உள்ளது. இங்கு குண்டாக இருப்பவர்களை மெலிய வைப்பதற்கான தொடர் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட சிகிச்சைக்காக வருபவர்களால்தான் இந்தக் கிராமம் குண்டு மனிதர்கள் நிரம்பிய ஊராகக் காட்சியளிக்கிறதாம்.
 பல மருத்துவமனைகளுக்கும் சென்று உடல் மெலியாத குண்டர்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்றால் மெலிந்து விடுகிறார்களாம்.
 300 கிலோ எடை உள்ளவர்கள் 150 கிலோவினர்களாகவும் 177 கிலோக்காரர்கள் 90 கிலோ மனிதர்களாகவும் சிகிச்சையின் மூலம் மாறி விடுகிறார்களாம். அவ்வளவு உயர்ந்த சிகிச்சை இந்த மருத்துவ
 மனையில்.
 
 பந்து வீடு
கனடா நாட்டு பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த டாம் அடிக் என்ற புதுமைத் தொழில்நுட்பக் கலைஞர், மரத்துக்கு மேல் பைபர் கிளாஸ் மூலம் பந்து போன்ற வீடு கட்டி விற்பனை செய்கிறார். இதன் விலை இரண்டு லட்ச ரூபாய் என்கிறார்கள். பத்துக்குப் பத்து அடிகளே உள்ள இந்தப் பந்து வீட்டில் வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை, கழிவறை என எல்லா வசதிகளும் உண்டு. இவ்வீட்டில் டி.வி.பார்க்கலாம். ஹீட்டர் சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் பந்து வீட்டில் ஒவ்வொரு முறை நடக்கும்போதும் இடம் மாறி உட்காரும்போதும் வீடு சுழன்று நீங்கள் நிற்பதற்கேற்ப உட்காருவதற்கேற்ப தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும். கதவைப் பூட்டிவிட்டால் பந்து வீட்டை யாரும் எதுவும் செய்ய முடியாது. அவ்வளவு பாதுகாப்பு.
 பறவைகளின் கூடு மாதிரியுள்ள இந்தப் பந்துவீட்டை இயற்கையான சூழலில் வாழ விரும்புகிறவர்கள் அதிக ஆர்வத்துடன் வாங்கிக் குடியேறு
 கிறார்கள்.
 -தொகுப்பு: க.பரமசிவன், மதுரை.
 
 தன்னிகரில்லாத் தமிழ்நாடு...
 1. தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழியான ஆண்டு 1958.
 2. தமிழகத்தின் மொத்தப் பரப்பளவு 1,30,058 சதுர கிலோமீட்டர்கள்.
 3. முதல் உலகத் தமிழ் மாநாடு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது.
 4. தமிழகத்தின் மாநிலப் பூ செங்காந்தள் மலர்.
 5. தமிழகத்தின் மாநிலப் பறவை மரகதப்புறா.
 6. தமிழகத்தின் மாநில மரம் பனை.
 7. தமிழகத்தின் மாநில விலங்கு வரையாடு.
 8. தமிழகத்தின் உயர்ந்த மலைச்சிகரம் தொட்டபெட்டா.
 9. தமிழ்நாட்டிலுள்ள மொத்த ரயில் பாதையின் நீளம் 6,693 கிலோமீட்டர்.
 10. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 690 ரயில் நிலையங்கள் உள்ளன.
 -தொகுப்பு: கு.பன்னீர்செல்வம், தஞ்சாவூர்.
 
 அதிகம் பேசவேண்டாம்!
ஒவ்வொரு வார்த்தையையும் நாம் பேசும்போது நமது உடலில் எழுபத்து இரண்டு தசைகள் அசைந்து இயங்குகின்றன. அதனாலேயே அதிகம் பேச வேண்டாம் என்று பெரியவர்கள் நம்மைக் கட்டுப்படுத்துகிறார்கள். அதிகமான பேச்சு உடலின் தசைகளை பலவீனப்படுத்தி விடுகின்றது. உரிய நேரத்தில் உரிய பலத்தைக் காட்ட இயலாமல் போகிறது என்பது ஜப்பானியர்களின் கண்டுபிடிப்பு.
 
 இதயம்...ஜாக்கிரதை!
நம்முடைய வாழ்நாளில் ஆறில் ஒரு பங்கு நேரம் நமது இதயம் இயங்காமல் நிற்கின்றது என்பது வியக்கத்தக்க உண்மை. நமது இதயம் எப்போதும் துடித்துக் கொண்டிருக்கிறது. அப்படித் துடிக்கும்போது, இரு துடிப்புகளுக்கு இடையே ஒரு விநாடியில் ஆறில் ஒரு பங்கு நேரம் இயக்கம் இன்றி நிற்கின்றது. லப்-டப் என்ற ஒலியுடன் இயங்கும் துடிப்புகளுக்கிடையே அசைவற்ற நேரத்தை மட்டும் கணக்கிட்டால் மொத்தத்தில் வாழ்நாளில் ஆறில் ஒரு பங்கு காலம் இதயத் துடிப்பு நிற்கிறது என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.
 -தொகுப்பு: ஆர்.மகாதேவன், திருநெல்வேலி.
-
நன்றி-தினமணி
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum