புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_m10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10 
91 Posts - 61%
heezulia
கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_m10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_m10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_m10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_m10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10 
1 Post - 1%
viyasan
கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_m10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_m10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_m10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10 
283 Posts - 45%
heezulia
கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_m10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_m10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_m10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_m10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10 
19 Posts - 3%
prajai
கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_m10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_m10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_m10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_m10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_m10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 08, 2013 4:13 pm

தமிழில் ஒன்று,இரண்டு,மூன்று...என்று எண்ணுகிறோம்.பத்து பத்தாக எண்ணும் போது எண்பதுக்கு அடுத்து ஒன்பது என்று வராமல் ஏன் தொண்ணூறு என்று வருகிறது?நூறு நூறாக எண்ணும் போது எண்ணூறுக்கு அடுத்து தொண்ணூறு வராமல் தொள்ளாயிரம் என்று ஏன் வருகிறது?ஆயிரம் ஆயிரமாக எண்ணும் போது எட்டாயிரத்துக்கு அடுத்து தொள்ளாயிரம் என்று வராமல் ஒன்பதாயிரம் என்று ஏன் வருகிறது.பத்தாயிரம் பத்தாயிரமாக எண்ணும் போது எண்பதாயிரம் அடுத்து ஒன்பதாயிரம் என்று வராமல் ஏன் தொண்ணூறாயிரம் என்று வருகிறது.ஒன்று ஒன்றாக எண்ணும் போது எட்டுக்கு அடுத்து வர வேண்டிய உண்மையான எண் எது?

தொல்காப்பிய காலத்திலேயே இந்தக் குழப்பம் நடைபெற்று முடிந்துவிட்டது. எட்டுக்குப் பின் தொண்டு, எண்பதுக்குப் பின் தொன்னூறு, எண்ணூறுக்குப் பின் தொன்னூறு, எண்ணாயிரத்திற்குப்பின் தொள்ளாயிரம் இப்படித்தான் இருந்தது. (மேற்கோள் )
5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

`ஒன்பது' என்னும சொல்

445. 1ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்
முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும்
பஃதென் கிளவி யாய்தபக ரங்கெட
நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி
ஒற்றிய தகரம் றகாரம் ஆகும்.

இதுவும் இது.

ஒன்பான் ஒகர மிசை தகரம் ஒற்றும் (நிலைமொழியாகிய) ஒன்பது என்னும் சொல்லின் ஒகரத்திற்கு மேலாகத்தகரம் ஒற்றாய் மிக்கு வரும், முந்தை ஒற்று ணகாரம் இரட்டும்- முன் சொன்ன ஒகரத்தின் முன்னர் னகர ஒற்று இரண்டு ணகார ஒற்றாய் மிக்கு வரும், பத்து என் கிளவி பகரம் ஆய்தம் கெட ஊகாரக் கிளவி நிற்றல் வேண்டும் - ( வருமொழியாகிய) பத்து என்னும் சொல் தன்கண் பகரமும் ஆய்தமும் கெட ( நிலைமொழியில் இரட்டிய ணகரத்தின் பின்னர்) ஊகாரமாகிய எழுத்து நிற்றல் வேண்டும் ; ஒற்றிய தகரம் றகாரம் ஆகும். (வருமொழியாகிய பத்து என்பதன் ஈற்றதன்மேல் ஏறிய உகரம் கெடாது பிரிந்து நிற்ப) ஒன்றாய் நின்ற தகரம் றகார ஒற்றாகும் .

இஃது, ஒன்பதும் பத்தும் என நின்றால் முடியற்பால (இன்ன) வென்பது. பகர ஆய்தம் என்னாத முறையன்றிய கூற்றினான். நிலைமொழிக்கண் பகரக்கேடும் கொள்க. குற்றயலுகரமும் அஃது ஏறிய மெய்யும் முன்னர் மாட்டேற்றாற் கெட்டன.

எ - டு : தொண்ணூறு என வரும்.
(39)
1.இந்நூற்பா ஒன்பது + பஃது = தொன்னூறு என முடிக்கின்றது. இம் முடிவு எவ்வகையிலும் பொருந்தாத தொன்றாம். ஒன்பது என்னும் எண்ணுக்குப் பழம்பெயர் தொண்டு என்பது. ` தொண்டு தலையிட்ட ' (தொல். 1358) என்று ஆசிரியரும், தொண்டுபடு திவவு (மலைபடு. 21) என்று பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனாரும் கூறுதல் காண்க. தொண்டு என்னும் சொல் தொல்காப்பியர் காலத்திலேயே வழக்கற்றுப் போய் விட்டது. அவர் காலத்திற்குமுன் தொண்டு தொண்பது தொண்ணூறு தொள்ளாயிரம் என்பன முறையே, 9, 90, 900,9000 என்னும் எண்களைக் குறிக்கும் பெயர்களாயிருந்தன. தொண்டு என்னும் ஒன்றாமிடப்பெயர் வழக்கறவே, தொண்டு என்னும் பத்தாமிடப்பெயர் ஒன்றாமிடத்திற்கும் தொண்ணூறு என்னும் நூறாமிடப் பெயர் பத்தாமிடத்திற்கும் , தொள்ளாயிரம் என்னும் ஆயிரமிடாப் பெயர் நூறாமிடத்திற்குமாக வழங்கத் தலைப்பட்டன . தொண்பது என்னும் பெயர் முறையே தொன்பது ஒன்பது என மருவிற்று. ஆயிரத்தாமிடப்பெயர் நூறுமிடத்திற்கு வழங்கவே 9000 என்னும் எண்ணைக் குறிக்க ஒன்பது என்னும் பெயருடன் ஆயிரம் என்னும் பெயரைச் சேர்க்கவேண்டிய தாயிற்று. முதற் பத்து எண்ணுப்பெயர்களில் ஒன்பது என்பதைத் தவிர , மற்றவையெல்லாம் ஒரு சொல்லா யிருப்பதையும் , ஒன்பது என்பது இரு சொல்லாய்ப் பது (பத்து) என்று முடிவதையும் , தொண்ணூறு என்பது நூறு என்றும் தொள்ளாயிரம் என்பது ஆயிரம் என்றும் முடிவதையும் நோக்குக. தொண்பது என்பதின் திரிபான ஒன்பது என்னும் சொல்லுக்குப் பொருந்தப் புகலும் முறைபற்றி ஒன்று குறைந்த பத்து என்று பொருள் கூறுவர் சிலர். அதுவே அதன் பொருளாயின் தொண்ணூறு தொள்ளாயிரம் என்பனவற்றிற்கும் அப் பொருள் ஏற்கவேண்டும். அங்ஙனம் ஏலாமையின் அது போலியுரையென மறுக்க. ஆகவே தொண்டு + பத்து = தொண்பது ; தொண்டு + நூறு = தொண்ணூறு ; தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் என்று புணர்ப்பதே முறையென்றும் , தொண்டு என்னும் எண்ணுப் பெயர் வழக்கற்றதினால் அதன்மேலிடப் பெயர்கள் மூன்றும் ஒவ்வோரிடமாய்த் தாழ்ந்துவந்து வழங்கின என்றும் அறிந்து கொள்க. (பாவாணர்.)



1991 ஆம் ஆண்டு. மதுரை திருவேடகத்தில் உள்ள விவேகானந்தா குருகுலத்தில் நான் பதினோராம் வகுப்பு படிக்கும் போது, எனது கணித ஆசிரியர் - மரியாதைக்குரிய அய்யா திரு.கிருஷ்ணன் அவர்கள் "எண்பது, ஒன்பது... எண்ணூறு, தொண்ணூறு... எட்டாயிரம், தொள்ளாயிரம்... எண்பதினாயிரம், ஒன்பதினாயிரம்... இது தானே சரி. எப்படி எல்லாம் வரிசை மாறி வருகிறது?" என ஒரு கேள்வி கேட்டார்கள். சுமார் இருபது ஆண்டுகளாக எத்தனையோ கணித ஆசிரியர்கள் சொல்லாத பதிலை, நான் சற்றும் எதிர்பாராமல் என் தாய் தமிழ் சொன்னது. சுமார் இருபது ஆண்டு தேடல் இனிதே நிறைவடைந்தது. [என் கணித ஆசிரியர் அய்யா கிருஷ்ணன் அவர்கள் இந்த பதிலால் மகிழ்ந்தது என் மகிழ்ச்சிக்கு மகிழ்வளித்தது]

தமிழக அரசின் அரசவை புலவராக இருந்த திருக்குறளில் தோய்ந்த அனுபவம் உடைய பதின் கவனகர் அய்யா திரு.பெ.இராமையா அவர்களது மேடை நிகழ்வில் கேட்கப் பட்ட கேள்விகளும் அவரது பதில்களும் அடங்கிய புத்தகத்திலிருந்து...

......பண்டைய தமிழ் எண்ணியலில் ஒன்பது என்ற சொல்லே கிடையாது. பரிபாடலிலும் வேறு சில சங்க இலக்கியங்களிலும் எட்டிற்கு அடுத்து பயன்படுத்த பெற்றுள்ள சொல் "தொண்டு" என்பதாகும். தொண்டு என்றால் துளை. அதாவது ஓட்டை. நம் உடல் ஒன்பது ஓட்டைகளை கொண்டது.

இருநிழல் படாமை மூவே ழுலகமும்
ஒருநிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ
பாழெனக் காலென பாகென ஒன்றென
இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
ஆறென ஏழென எட்டெனத "தொண்டென"
- பரிபாடல் 3 , வரி 75 -79

"தொண்டு" தலையிட்ட பத்துக்குறை எழுநூற்று...
- தொல்காப்பியம், 1358

"தொண்டு" படு திவவின் முண்டக நல்யாழ்.
- மலைபடு கடாம் - 21

இந்த சொல் எப்படியோ தன் இடத்திலிருந்து வீழ்த்தப் பெற்றுவிட்டது. இந்த 'தொண்டு' என்ற சொல்லை அதற்குரிய இடத்தில் வைத்து எண்ணியலை வரிசையாக சொல்லிப் பாருங்கள். ஒரு பெரிய குழப்பமே தெளிவாகும். அதாவது,

எட்டு
தொண்டு (சறுக்கிய சொல்)
பத்து.

எண்பது
தொண்பது (இது தான் இன்றைய ஒன்பது)
நூறு

எண்ணூறு
தொண்ணூறு
ஆயிரம்

எண்ணாயிரம்
தொள்ளாயிரம்
பத்தாயிரம்

எண்பதினாயிரம்
தொண்பதினாயிரம்
இலட்சம்.

ஆக தொண்டு என்ற ஒரு சொல் வழக்கிலிருந்து எப்படியோ வீழ்ந்ததால் அதை நிரப்ப, எண்பதுக்கு அடுத்திருந்த தொண்பது, ஒன்பது என்ற பெயர் மாற்றத்துடன் எட்டிற்கு அடுத்தாற்போல் வந்து உட்கார்ந்து கொண்டது. அதை நிரப்ப எண்ணூறுக்கு அடுத்து இருந்த தொண்ணூறு என்பதிற்கு அடுத்து வந்து உட்கார்ந்து கொண்டது. இந்த சிக்கல் எண்ணியலின் இறுதி வரை பாதித்துள்ளது.

உங்களிடம் என் அன்பான வேண்டுகோள். இனிமேலாவது நம் தமிழ் மொழியின் சொற்களை காப்பாற்றுவதில் மிக எச்சரிக்கையாக இருங்கள். முடிந்த வரை தூய தமிழில் உரையாடும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். முடிந்தால் இந்த எண்ணியல் சறுக்கலை சரி செய்ய அரசின் மொழி வளர்ச்சித்துறை மூலம் முயற்சி செய்யுங்கள்.

நன்றி:டீச்சர்ஸ்ஆப்இந்தியாஆர்ஜி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Mon Jul 08, 2013 4:18 pm

சூப்பருங்க 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

[You must be registered and logged in to see this link.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 08, 2013 4:31 pm

தமிழின் பெருமையை சொல்லும், எண்களை அழைக்கும் விதம் பற்றிய உங்கள் கட்டுரை பகிர்வுக்கு நன்றி நண்பரே புன்னகை

ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய அவசியமான பதிவு புன்னகை

எனது விருப்பம் புன்னகை



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக