Latest topics
» நாவல்கள் வேண்டும்by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம்
4 posters
Page 1 of 1
கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம்
விவசாயிகளின் பல்லாண்டு கோரிக்கையான, நதிகளை இணைக்கும் திட்டத்தை, மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ள சூழ்நிலையில், அத்திட்டத்துக்கு முன்னோடியாக, மாநில நதிகள் இணைப்பு திட்டத்தை, தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதனால், தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில், வீணாக கடலில் கலக்கும் மழைநீர் சேகரிக்கப்படும். தமிழகத்தின் நிலத்தடி நீர் மட்டமும், உயர்வதற்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் உள்ள, ஆறுகளை இணைத்து, விவசாயம் மற்றும் இதர காரியங்களுக்கு நீரை பயன்படுத்த, மாநில ஆறுகள் இணைப்புத் திட்டத்தை, தமிழக அரசு கடந்தாண்டு கொண்டு வந்தது. தேசிய பொதுப்பணித் துறையின், 75 சதவீத பங்களிப்பு, மாநில அரசின், 25 சதவீத பங்களிப்புடன், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது.
அவற்றில், பெண்ணையாறு (சாத்தனூர் அணை) - பாலாறு இணைப்பு மற்றும் பெண்ணையாறு - பாலாறு இணைப்பு; காவேரி - வைகை - குண்டாறு இணைப்பு; காவேரி ( மேட்டூர் அணை ) - சரபங்கா இணைப்பு ஆகிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மத்திய அரசின், பொதுப்பணித்துறை அதிகாரிகள், இத்திட்டத்துக்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகின்றனர்.
ஆறுகள் இணைப்புத் திட்டத்தில், செயல்படுத்த உள்ள, ஆறுகள்:
1.பெண்ணையாறு ( சாத்தனூர் அணை ) - பாலாறு இணைப்பு:இந்த திட்டத்தில், பெண்ணையாற்றின் உபரி நீரை, பாலாற்று கிளை ஆறான, செய்யாற்றிற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. சாத்தனூர் அணை முழு நீர்மட்ட அளவில், தலை மதகிலிருந்து, 23.55 கி.மீ., நீளத்துக்கு, இணைப்பு கால்வாய் வெட்டி, செய்யாற்றில் உள்ள ஆலத்தூர் அணையின் மேற்புறம் இணைக்க, திட்டமிடப்பட்டு உள்ளது.இந்த இணைப்பு கால்வாயிலிருந்து, 38.72 கி.மீ., நீளத்துக்கு, வரத்து கால்வாய் அமைத்து, துரிஞ்சலாற்றுடன் இணைத்து, நந்தன் வாய்க்காலுக்கு, தண்ணீர் வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.இத்திட்டம் நிறைவேறினால், 5.69 டி.எம்.சி., உபரி நீர், பாலாறு வடி நிலத்திற்கு திருப்பப்படும். இதன் மூலம், திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு, போளூர், வந்தவாசி வட்டங்கள் மற்றும் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் ஆகியவற்றில், 46,069 ஏக்கர் நிலப்பரப்பு, பாசன வசதி பெறும் என்று, பொதுப் பணித் துறை மதிப்பிட்டு உள்ளது. திட்டத்தின் நேரடி பயன்கள் இவை.இது தவிர, இந்த பகுதியைச் சுற்றிலும் உள்ள நிலப்பரப்பில், நிலத்தடி நீர்மட்டம், வெகுவாக உயரும் வாய்ப்பு உள்ளதால், பலன் மேலும் அதிகரிக்கும். திட்டத்திற்கு, மத்திய அரசின் உதவியை பெறுவதில், தாமதம் ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசே செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக, 250 கோடி ரூபாய் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.
2.பெண்ணையாறு -பாலாறு இணைப்பு:கிருஷ்ணகிரி நீர்தேக்கத்திலிருந்து, 3.5 டி,எம்.சி., நீரை, அக்டோபர் மாதத்திலிருந்து, டிசம்பர் மாதம் வரை, மாதத்திற்கு, 5 நாட்கள் வீதம், 15 நாட்களுக்கு, பாலாற்றின் கிளை ஆறான கல்லாற்றுக்கு திருப்ப, முதலில், பொதுப்பணித் துறை உத்தேசித்திருந்தது. பெண்ணையாறு நெடுங்கல் அணைக்கட்டில் இருந்து, பாலாறை இணைப்பது, பெண்ணையாற்றில் கிருஷ்ணகிரி நீர்தேக்கத்தில் இருந்து, பாலாற்றை இணைப்பதை விட, தொழில்நுட்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏற்புடையது என தெரிவித்து, தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பு, ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேறினால், 29, 319 ஏக்கர் நிலம், பாசன வசதி பெறும்.
3.காவேரி - வைகை - குண்டாறு இணைப்பு:இத்திட்டத்தில், காவேரி ஆற்றிலிருந்து, 7 டி.எம்.சி., உபரி நீரை, கட்டளை கதவணையிலிருந்து, 258 கி.மீ., நீள இணைப்பு கால்வாய் அமைத்து, அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாற்றுக்குத் திருப்பி விட, திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான விரிவான மதிப்பீடு, 5,155 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் வெள்ள மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்படுத்த, பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
4.காவேரி ( மேட்டூர் அணை ) - சரபங்கா இணைப்பு:மேட்டூர் அணையிலிருந்து, 182 கி.மீ., நீள இணைப்பு கால்வாய் அமைத்து, 2 டி.எம்.சி., உபரி நீரை, சரபங்கா, திருமணி முத்தாறு மற்றும் ஏனைய சிறுவடி நிலங்களில் உள்ள, அணைக்கட்டுக்கள் மற்றும் ஏரிகளுக்கு கொண்டு சென்று, பாசன வசதியை உறுதிப்படுத்த, பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை, நிறைவேற்றுவதன் மூலம், சேலம், நாமக்கல், பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள, 30,430 ஏக்கர் நிலம் பயன்பெறும்.இத்திட்டத்திற்கான தோராய மதிப்பீடு, கடந்த நிதியாண்டின், விலை விகிதப்படி, 1,134 கோடி ரூபாய்க்கு தயாரிக்கப்பட்டது. திட்டத்திற்கான விரிவான, தள ஆய்வுகள் மேற்கொள்ளவும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும், 50 லட்சம் ரூபாய்க்கு , நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து, பொதுப்பணித்துறையின் உயர் அதிகாரிகள் கூறியதாவது: பெண்ணையாறு (சாத்தனூர் அணை) - பாலாறு இணைப்புத் திட்டத்துக்கு, மத்திய அரசின் உதவியை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால், அத்திட்டத்தை, 250 கோடி ரூபாயில் செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மற்ற திட்டங்கள் குறித்து, தேசிய பொதுப் பணித் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். சாத்தியக் கூறுகள் குறித்து, சாதகமான முடிவுகளை அறிவித்தால், உடனடியாக பணிகள் துவங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி
தினமலர்
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Re: கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம்
நல்ல படி நிறைவேற வாழ்த்துகள் இந்த அளவு வடக்கே சேதம் ஏற்பட்டும் அவங்களுக்கு புத்தி வரலையே........... கருமம் டா......
அங்கே வெள்ள நிவாரண நீதி... இங்கே நமக்கு வறட்சி நிவாரண நிதியா?
அங்கே வெள்ள நிவாரண நீதி... இங்கே நமக்கு வறட்சி நிவாரண நிதியா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம்
krishnaamma wrote:நல்ல படி நிறைவேற வாழ்த்துகள் இந்த அளவு வடக்கே சேதம் ஏற்பட்டும் அவங்களுக்கு புத்தி வரலையே........... கருமம் டா......
அங்கே வெள்ள நிவாரண நீதி... இங்கே நமக்கு வறட்சி நிவாரண நீதியா?
100% உண்மை அம்மா .....
வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற அண்ணா(தி .மு .க ) வின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது .......
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Re: கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம்
manikandan.dp wrote:krishnaamma wrote:நல்ல படி நிறைவேற வாழ்த்துகள் இந்த அளவு வடக்கே சேதம் ஏற்பட்டும் அவங்களுக்கு புத்தி வரலையே........... கருமம் டா......
அங்கே வெள்ள நிவாரண நீதி... இங்கே நமக்கு வறட்சி நிவாரண நீதியா?
100% உண்மை அம்மா .....
வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற அண்ணா(தி .மு .க ) வின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது .......
நிஜம்தான் மணி, வெளிநாடுகளில் நம்நாட்டைப்பற்றி கேவலமாகவும் கிண்டலாகவும் பேசராலாம். இந்தியர்களுக்கு பொறுப்பே இல்லையா ? இப்படியா பணத்தை வேஸ்ட் செய்வா என்று கிண்டல் அடிக்கராங்களாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம்
krishnaamma wrote:manikandan.dp wrote:krishnaamma wrote:நல்ல படி நிறைவேற வாழ்த்துகள் இந்த அளவு வடக்கே சேதம் ஏற்பட்டும் அவங்களுக்கு புத்தி வரலையே........... கருமம் டா......
அங்கே வெள்ள நிவாரண நீதி... இங்கே நமக்கு வறட்சி நிவாரண நீதியா?
100% உண்மை அம்மா .....
வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற அண்ணா(தி .மு .க ) வின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது .......
நிஜம்தான் மணி, வெளிநாடுகளில் நம்நாட்டைப்பற்றி கேவலமாகவும் கிண்டலாகவும் பேசராலாம். இந்தியர்களுக்கு பொறுப்பே இல்லையா ? இப்படியா பணத்தை வேஸ்ட் செய்வா என்று கிண்டல் அடிக்கராங்களாம்
ஆமாம் அம்மா ....நான் வெளிநாட்டில் தான் பணிபுரிகிறேன் .....இங்கு நம் நாட்டை பற்றி வளர்ந்த நாட்டை சேர்ந்தவர் கிண்டலாக பேசுவது குறைவு .....நமிடம் இருந்து பிரிந்த,அண்டை நாட்டை சேர்ந்தவன் கிண்டலாக பேசுவதுதான் தாங்க முடியவில்லை ......
இந்த மத்திய அரசின் திறமை இன்மையால் இந்தியன் தினமும் அசிங்கப்பட்டு போவது தான் மிச்சம் ......
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Re: கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம்
ஆமாம் மணி.....
என் மச்சினர் பெண் சிங்கப்பூரில் இருக்கா... அவ சொல்கிறா... " என்ன சித்தி இது.....இங்க ஸ்கூல் களில் கூட சக அம்மக்கள் நம் இந்தியாவின் தலையை உருட்டரா " என்கிறாள்
என் மச்சினர் பெண் சிங்கப்பூரில் இருக்கா... அவ சொல்கிறா... " என்ன சித்தி இது.....இங்க ஸ்கூல் களில் கூட சக அம்மக்கள் நம் இந்தியாவின் தலையை உருட்டரா " என்கிறாள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம்
என்ன அம்மா பண்றது ......
மாற்றம் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம் .......
மாற்றம் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம் .......
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Re: கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம்
தமிழக ஆறுகளை இணைத்து அம்மா சாதனை படைத்தால் மக்கள்:
ஆறு மனமே ஆறு
இது அம்மாவின் கட்டளை ஆறு ன்னு
நிம்மதியா இருப்பாங்க - வெற்றிபெற வாழ்த்துகள்.
ஆறு மனமே ஆறு
இது அம்மாவின் கட்டளை ஆறு ன்னு
நிம்மதியா இருப்பாங்க - வெற்றிபெற வாழ்த்துகள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம்
திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் முயர்ச்சியின்போது பலர் நீதிமன்றத்தில் தடையானை பெறுவார்கள். திட்டம் தொடக்க நிலையிலேயே நிற்கும். இதுதானே காலம் காலமாக நாம் பார்த்துக்கொண்டிருப்பது. அப்படியெல்லாம் இல்லாமல் திட்டம் நல்லபடியாக நிறைவேறினால் மகிழ்ச்சி! நிறைவேற வேண்டும்!
Similar topics
» தென்மாநில நதிகள் இணைப்பு திட்டம்: டில்லியில் முதற்கட்ட ஆலோசனை
» மத்திய அரசின் அறிவுறுத்தல்படியே ராணுவம் செயல்படும்: பிபின் ராவத்
» தமிழக அரசின் திட்டம்: கர்நாடகா முட்டுக்கட்டை
» மத்திய அரசின் 'இ-சஞ்சீவினி' திட்டம் : 'ஆன்லைன்' மூலம் மருத்துவ ஆலோசனை
» தமிழக அரசின் புதிய காப்பீட்டுத் திட்டம்-நாளை ஜெ தொடங்கி வைக்கிறார்
» மத்திய அரசின் அறிவுறுத்தல்படியே ராணுவம் செயல்படும்: பிபின் ராவத்
» தமிழக அரசின் திட்டம்: கர்நாடகா முட்டுக்கட்டை
» மத்திய அரசின் 'இ-சஞ்சீவினி' திட்டம் : 'ஆன்லைன்' மூலம் மருத்துவ ஆலோசனை
» தமிழக அரசின் புதிய காப்பீட்டுத் திட்டம்-நாளை ஜெ தொடங்கி வைக்கிறார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|