புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
91 Posts - 61%
heezulia
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
6 Posts - 4%
eraeravi
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
viyasan
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
283 Posts - 45%
heezulia
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
19 Posts - 3%
prajai
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?


   
   
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Sun Mar 17, 2013 10:19 pm

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.
கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில்
இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன்னமும் புரியாதவையாகவே உள்ளன.
இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின்


விளக்கங்கள் விவரம்:
பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.


சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.


அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.


கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.


கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.


இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.


விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.


ஷரத்து: பிரிவு.


இலாகா: துறை.


கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.


வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.


புல எண்: நில அளவை எண்.


இறங்குரிமை: வாரிசுரிமை.


தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.


ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.


அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.


சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.


நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.


புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.


குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.


இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்....

நன்றி .....

pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Postpon.sellamuththu Mon Mar 18, 2013 12:21 am

கிராமக் கணக்கு எண் 10 - பிரிவு1 என்பதே சிட்டா எனப்படும்.1முதல்
100 அல்லது 1000 என்றபடி கிராம பட்டாதாரர்கள் மற்றும் பட்டா நிலங்களின்
விஸ்தீரணத்தின் அளவின் அடிப்படையில் பட்டாஎண்கள் பதியப்படும்.
ஒவ்வொரு பக்கத்தின் தலைப்பிலும் ........பசலியாண்டில்,.....ஜில்லா,......தாலுக்கா,......கிராமத்தில்,.....பட்டா எண்ணில்,
பட்டாதாரர் பெயர்.............போன்ற பதிவுகள் செய்யப்பட்டிருக்கும்.

புல எண், உட் பிரிவு எண், விஸ்தீரணம், தீர்வை ஆகிய விபரங்கள்
புஞ்செய் - நஞ்செய் புல வாரியாக பதியப்பட்டிருக்கும்

இது 10-1 கிராமக் கணக்கின் நகல்தானே தவிர சான்று கிடையாது.
வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூபாய்கள் 20 பெற்றுக் கொண்டு
கணினி 10 -1 சிட்டா நகல் வழங்கப்படுகின்றது. பட்டாக்களின்
மொத்த தொகுப்பே சிட்டா என்பதாகும். பட்டாவும் சிட்டாவும்
ஒன்றேயாகும்.

(தொடரும்)

அன்பு தமிழ் நெஞ்சம் பொன். செல்லமுத்து


gmvkriskumar
gmvkriskumar
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 05/09/2012

Postgmvkriskumar Mon Mar 18, 2013 1:04 pm

நன்றி




என்றும் அன்புடன்
கிருஷ்ணகுமார் . மு
வாழ்க வளமுடன்+ நலமுடன்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 18, 2013 1:50 pm

nandri நண்பரே நல்ல pakirvu சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Mar 18, 2013 4:03 pm

மிகவும் பயனுள்ள தகவல்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Mar 18, 2013 6:42 pm

நல்ல உபயோகமான தகவல் அருமையிருக்கு



பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? 154550பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? 154550பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? 154550பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? 154550பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

PostSHANMUGHAM Sun Jul 07, 2013 5:44 pm

நாங்கள் நகரத்தில் சொந்த வீட்டில் இருக்கிறோம்.

பலரும் வீடு கட்டி வரும், எங்கள் நகரத்தை ஒட்டிய கிராமத்தில், ஒரு பிளாட் வாங்கினோம்.  அதை முறையாக விசாரித்து, வாங்கி, பத்திரப் பதிவுத் துறையில் பதிவு செய்துள்ளோம்.

எங்கள் பிளாட்டில் வேலி போடவில்லை.  பட்டா முதலிய விபரங்களின் முக்கியத்துவமும் தெரியவில்லை.  (அதுதான் பதிவுத் துறையில் நமது பெயரில் பதிவு செய்துள்ளோமே)

அந்த மொத்த இடத்தின் பூர்வீக உரிமையாளர், (பட்டா பெயர் மாறாததால் அவரின் தந்தையார் பெயரில் உள்ளது.) தனது தாத்தாவால் தனது அத்தைக்கு வாய்மொழியாக பாகம் செய்யப்பட்ட இடம் என்று கூறி, ஒரு ஆண்டுக்கு முன், அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்றுள்ளார்.  (அந்த மொத்த ஏரியாவையுமே, அவரது தகப்பனார் காலத்திலேயே விற்கப்பட்டு விட்டது.)

ஒரு ஆண்டுக்கு முன்பு வாங்கியவரும் வேலி போடவுமில்லை, பட்டா மாற்றவுமில்லை.

தற்போது மேற்படி வாங்கியவர், வீடு கட்டுவதற்காக, இடத்தில் வந்து பூஜை போட்டுள்ளார்.

விபரம் தெரிந்தவுடன் நாங்கள் சென்று வேலி போட்டுள்ளோம்.  காவல் நிலைய புகார் மற்றும் நீதிமன்ற வழக்கும் கொடுத்துள்ளோம்.

பட்டா மாற்றாத காரணத்தால் எங்களது உரிமை மறுக்கப்படுமா?

அரசாங்கத் துறைகளுக்குள் ஏன் இந்தத் தகவல் ஒருங்கிணைப்பு இல்லை?  


avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Jul 07, 2013 7:24 pm

இந்த தருணத்தில் நாம் அனைவரும் முகலாயர்களுக்கு நன்றி கூற கடமை பட்டிருக்கிறோம் நீல அளவை முறைகளை மிக தெளிவாக வரயறுத்து கொடுத்துள்ளார்கள். பிரிட்டிஷார் கூட அதை அப்படியே மெயின்டய்ன் செய்து தான் உள்ளார்கள். இனியும் கஸ்ரா பிற்கா என்ற முகலாய காலத்து வார்த்தைகள் உபயோகிக்கபட்டுக்கொண்டுதான் உள்ளது



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக