புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொடி’ப் பயலே! Poll_c10பொடி’ப் பயலே! Poll_m10பொடி’ப் பயலே! Poll_c10 
10 Posts - 71%
heezulia
பொடி’ப் பயலே! Poll_c10பொடி’ப் பயலே! Poll_m10பொடி’ப் பயலே! Poll_c10 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
பொடி’ப் பயலே! Poll_c10பொடி’ப் பயலே! Poll_m10பொடி’ப் பயலே! Poll_c10 
1 Post - 7%
viyasan
பொடி’ப் பயலே! Poll_c10பொடி’ப் பயலே! Poll_m10பொடி’ப் பயலே! Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொடி’ப் பயலே! Poll_c10பொடி’ப் பயலே! Poll_m10பொடி’ப் பயலே! Poll_c10 
202 Posts - 41%
heezulia
பொடி’ப் பயலே! Poll_c10பொடி’ப் பயலே! Poll_m10பொடி’ப் பயலே! Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
பொடி’ப் பயலே! Poll_c10பொடி’ப் பயலே! Poll_m10பொடி’ப் பயலே! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொடி’ப் பயலே! Poll_c10பொடி’ப் பயலே! Poll_m10பொடி’ப் பயலே! Poll_c10 
21 Posts - 4%
prajai
பொடி’ப் பயலே! Poll_c10பொடி’ப் பயலே! Poll_m10பொடி’ப் பயலே! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பொடி’ப் பயலே! Poll_c10பொடி’ப் பயலே! Poll_m10பொடி’ப் பயலே! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பொடி’ப் பயலே! Poll_c10பொடி’ப் பயலே! Poll_m10பொடி’ப் பயலே! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பொடி’ப் பயலே! Poll_c10பொடி’ப் பயலே! Poll_m10பொடி’ப் பயலே! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பொடி’ப் பயலே! Poll_c10பொடி’ப் பயலே! Poll_m10பொடி’ப் பயலே! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பொடி’ப் பயலே! Poll_c10பொடி’ப் பயலே! Poll_m10பொடி’ப் பயலே! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொடி’ப் பயலே!


   
   
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed Jul 03, 2013 12:06 pm

மக்களின் பழக்க வழக்கங்கள் காலங்காலமாக மாறிக் கொண்டே வருகின்றன. பழைய புத்தகங்களைப் படிக்கும் போதும் பழைய பாடல்களைக் கேட்கும் போதும் பழைய திரைப்பட்டங்களைப் பார்க்கும் போதும் அதைத் தெரிந்து கொள்ளலாம்.

மிகமிகப் பிரபலமாக இருந்த வழக்கம் பின்னாளில் முற்றிலும் இல்லாமலும் போகலாம். அப்படி வழக்கொழிந்த பழக்கம்தான் பொடி போடுவது.

பொடி போடுவதென்றால் இட்டிலிக்கும் தோசைக்கும் தொட்டுக் கொள்ள மிளகாய்ப் பொடி போடுவதல்ல. நான் சொல்வது மூக்குப்பொடி பற்றி. கட்டை விரலாலும் ஆள்காட்டி விரலாலும் சிறிது கிள்ளியெடுத்து மூக்கில் பொடி போடும் பெருசுகள் இப்போது மிகமிகக் குறைந்து போய் விட்டார்கள்.

ஒரு காலத்தில் இது மிகப்பிரபலமான பழக்கமாக இருந்திருக்கிறது. ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படத்தில் சந்தைக்குப் போகும் செம்பட்டையிடம் ஆப்பக்கடை பாட்டி பட்டியல் சொல்லும் போது அதில் மூக்குப்பொடி டப்பியும் இருக்கும். கங்கையமரன் அதைப் பாடல் வரிகளிலும் கொண்டு வந்திருப்பார்.

வெத்தல வெத்தல வெத்தலையோ
……………………………..
பாட்டியும் ஏலக்கா வேணும்னு கேட்டாங்க
பத்தமட பாயி வேணும்னு கேட்டாங்க
சின்ன கருப்பட்டி மூக்கு பொடி டப்பி வேணும்னு கேட்டாங்க
பாடல் வரிகள் – கங்கை அமரன்
பாடியவர் – மலேசியா வாசுதேவன்
இசை – இளையராஜா
படம் – ரோசாப்பூ ரவிக்கைக்காரி
பாடலின் சுட்டி – https://youtu.be/0VQ_2UaAmqA

இவ்வளவு பிரபலமாக இருந்த மூக்குப்பொடி எதிலிருந்து செய்யப்படுகிறது? புகையிலையைக் காய வைத்து அதைச் சுண்ணாம்போடு போட்டு இடிப்பார்கள். நன்கு மைய இடிக்க இடிக்க அதில் கார நெடி கிளம்பும். அதை அப்படியே பயன்படுத்தினால் மூக்கு அறுந்துவிடும் என்பதால் நெய்யும் சேர்த்து இடிப்பார்கள்.

இப்படி மைய இடித்த பொடிதான் மூக்குப்பொடி. அடர்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இந்தப் புகையிலைப் பொடி மூக்கு வழியாகச் சென்று மூளைக்கு ஒரு மந்தமான பரவச நிலையைக் கொடுக்குமாம். சிலர் பல்வலிக்கு மூக்குப்பொடி நல்ல மருந்தென்று சொல்வார்கள். மூக்குப்பொடியை எடுத்து வலிக்கின்ற பல்லில் வைத்தால் சற்று மரத்துப் போகும். அதைத்தான் மூக்குப் பொடி பல்வலியை நீக்குகிறது என்று தவறாக நினைக்கிறார்கள்.

பல்லில் வைக்கப்படும் மூக்குப் பொடி வாய் வழியாக உமிழ்நீரில் கலந்து வயிற்றுக்கும் செல்லும். இது கண்டிப்பாக கெடுதல்தான். மூக்குப்பொடியை எப்படிப் பயன்படுத்தினாலும் கெடுதல்தான். புற்றுநோயை உண்டாக்குவதில் மூக்குப்பொடியும் ஒரு முக்கிய காரணி என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பொதுவாகவே மூக்குப்பொடி வாங்குகின்றவர்கள் நிறைய வாங்க மாட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவார்கள். நிறைய வாங்கினால் நாட்பட நாட்பட அதில் காரலும் நெடியும் குறைந்து போய்விடுவாம். அதனால்தான் வேண்டிய போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிக் கொள்வார்கள்.

பொடி போட்டு வைப்பதற்கென்றே விதவிதமான சொப்புகள் செய்யப்பட்டன. வெள்ளிச் சொப்பில் பொடி போட்டு வைத்திருந்த பொடிப்பிரியர்களும் உண்டு. சொப்பு என்று நான் சொன்னாலும் பொடி டப்பா என்ற பெயர்தான் மிகப்பிரபலம்.

விதவிதமாகப் பொடி டப்பா வாங்க வசதியில்லாதவர்கள் வாழை மட்டையிலும் பாக்கு மட்டையிலும் மூக்குப்பொடியை வைத்திருப்பார்கள். அந்தப் பொடி மட்டை தொலைந்து விடாமல் இருக்க வேட்டியில் மடித்து வைத்துக் கொள்வார்கள்.

ஆண்கள் மட்டுமே மூக்குப்பொடி போடும் பழக்கத்தை பழகியிருக்கவில்லை. சில வயதான பெண்களும் மூக்குப்பொடி போட்டார்களாம். எங்கள் ஊரிலேயே மூக்குப்பொடி போட்ட ஒரு பாட்டியை நான் பார்த்திருக்கிறேன்.

புதிதாகப் பொடி போடுகின்றவர்களுக்குத் தும்மல் வரும். பழகப் பழக மூக்கின் தசைகள் மரத்துப் போய் தும்மல் வராமல் போய்விடும். எத்தனையோ பழைய திரைப்படங்களில் மூக்குப் பொடியைத் தூவியதும் அங்கிருக்கும் எல்லாரும் தும்முவது போன்ற நகைச்சுவைக் காட்சிகளும் வந்திருக்கின்றன.

இப்படியெல்லாம் பிரபலமான மூக்குப்பொடியைக் கண்டுபிடித்தது இந்தியர்கள் என்றா நினைக்கிறீர்கள்? இல்லவே இல்லை. ஐரோப்பாவில் அரசல்புரலசால இருந்த பழக்கம் பிரபலமாகி உலகம் முழுவதும் பரவியது. 17ம் நூற்றாண்டை மூக்குப்பொடி நூற்றாண்டு என்றே சொல்லலாம். அந்த அளவுக்குப் பிரபலமாக இருந்திருக்கிறது.. மூக்குப்பொடி போட்டவர்களை மதத்தை விட்டு விலக்குவேன் என்று போப் சொல்லியும் கேட்காமல் மக்கள் மூக்குப்பொடியில் மூழ்கியிருந்திருக்கிறார்கள்.

18ம் நூற்றாண்டில் பொடிப்பழக்கம் பெரும்பழக்கமாக ஐரோப்பாவில் நிலை பெற்றிருந்திருக்கிறது. நெப்போலியனுக்கும் பொடி போடும் பழக்கம் இருந்ததாம். அப்போதிருந்த போப் பெனிடிக்ட் XIII க்கும் பொடி போடும் பழக்கம் இருந்திருக்கிறது. ஒரு நூற்றாண்டில்தான் எத்தனை மாற்றங்கள்! 17ம் நூற்றாண்டில் மூக்குப்பொடி போட்டால் மதவிலக்கம் செய்யப்படும் என்று வாட்டிகன் சொல்லியிருக்கிறது. அடுத்த நூற்றாண்டில் போப்பாண்டவரே பொடி போட்டிருக்கிறார். என்னே பொடியின் மகிமை!

எது எப்படியோ… இன்று இந்தப் பழக்கம் குறைந்து போயிருப்பது நல்லதுதான். பலவிதமான உடல்நலக் கேடுகளை உண்டாக்கும் இது போன்ற புகையிலைப் பழக்கங்களை நாம் விலக்கவும் எதிர்க்கவும் வேண்டும்.

நன்றி
ஜிரா



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 03, 2013 12:37 pm

சூப்பருங்க  பேரறிஞர் அண்ணா அவர்கள் கூட இந்த மூக்குபொடி பழக்கத்தால் தான் புற்றுநோய் தாக்கி இறந்தார் என்று படித்ததாக ஞாபகம்.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Jul 03, 2013 2:24 pm

மூக்குப்பொடி பற்றி இவ்வளவு தகவல்களை இதுவரை அறிந்ததில்லை. அறியத் தந்தமைக்கு நன்றிகள்!மகிழ்ச்சி நன்றி 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக