புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_m10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_m10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_m10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_m10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_m10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_m10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_m10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_m10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_m10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_m10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்


   
   
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 02, 2013 2:12 pm

அன்பு உறவுகளுக்கு வணக்கம்,

இது சௌபார்னிகா இன்னும் கதை தொடர்....
எனக்கு பிடித்த கதைகளின் வரிசையில் இதுவும் ஒன்று...
வித்தக கவிஞர் பா.விஜய் குங்குமம் இதழில் (4.1.2010) எழுதிய அழகிய தொடர்க்கதை...


கி.மு 110-ல் நடக்கும்  கதை


சல் சல் என்று முகில் புனைந்து கொண்டிருந்த அடர்த்தியான சாரல்..... மண்ணைக் கிளறி உள்ளே கை நுழைத்து குப் குப் என்று ஒரு வாசத்தை ஈரக்காற்றில் தடவுகின்ற பொழுது!

சௌபார்னிகா குளிக்கும் காட்சி !

(முதலிலேயே முன்மொழிந்து விடுகிறேன் சௌபார்னிகா கன்னி...
கனிகளால் ஆன கன்னி !)

ஏகாந்த காடு; எங்கும் சுழ்மாறங்கள்; மூங்கில் முரட்டுத்தனத்தோடு  முதிர்ந்த தேக்கு இலைகள்; துளசிச் செடிகள் நிரம்பிய கானகம்; மலைப்பாம்புகள் ஊர்ந்து ஊர்ந்து சென்ற தடங்களை பிரதிபலித்தது ஈரமான  சதுப்பு நீளம்; செஞ்சிவப்பு காப்பிய சேறு; அதை இன்னும் லிளப்பியது சாரல்! குளீருட்டும் காற்று ! காற்றின் முதுகில் ஏறிக்கொண்ட நெடிய பனைமரங்களின் கீற்றுகள்!

சூரிய அடுப்பில் நிலாவை தூள் தூளாக உடைத்து சாம்பிராணி போட்டது மாதிரி, அந்த மந்தார மலையின் கணவாயில் இருந்த பழைய வசமாடிக்கும் பச்சைப்பகுதி எங்கும் ஒரே வெண்பனி  புகை மூட்டம்!

ஆதவ ஒளியாலும் உல்புகமுடியா நெருக்கமான புகை. நெருக்கம் அதிகரித்துவிட்டால் நடுவே ஒலி-ஒளி எதுவும் புகாதோ!?

அப்பனிப் பிரதேசத்தை ரம்மிய குடிலாக்க இன்னும் கருவறை விட்டு கண் விழித்து மலரா மலர்கள்!

மலர்கள் என்றால் அசாதாரண மலர்ப்பிறவிகள்..... ஆம்பல், செங்கோடு, வேவி மணிச்சிகை, வெட்சி, உந்தூள், கூவிளம், பைநீ, பசும்பிடி,குறிஞ்சி, கலிமா, பல்லிளம், அராலி, மல்லிகை, பிடவம், முல்லை என அதீருப மலர்க் குவியலும் மலர்களுக்குத் தேவையான கொடிகளும் செடிகளும் அவற்றுக்கு ஆஸ்தியானா வேர்களும் விதைகளும், அவற்றுக்கும் அமையாததுமான மண்ணுன்னி புழுக்களும் உயிரணுக்களும் .... இன்னும் படலம் படலமாக படிந்து படிந்துருவான  பூமியின் சமத்கார மடியில் குடிக்கொண்ட ரசாயனக் கற்களும் திரவியங்களுமாக... ஒரே ஆபத்தான அழகுமாயம் அங்கே குடிகொண்டிருந்தது!

மந்தார மலை என்பது மிக பழமையான மலை அல்ல... இறுகி ஒரு படிவப்பாறையின் மேல் படிந்து படிந்து பல பாறைகளினால் அலுந்தி உட்கார அதுவே புதியதோர் மலை தான். தோன்றியே இருபதாம் ஆயிரம் ஆண்டுகளுக்குள் தான் ஆகியிருக்கும்! ஆனால், மந்தார மலையின் வேர் மிக ஆழமானது. அதன் தலை தான் வெளியே காட்டிக் கொண்டு இருக்கிறது. உடம்பு மொத்தமும் சயன நிலையில் உலக உருண்டைக்குள்ளே!

ஆறு அடுக்கு நிலங்கள் கொண்ட மத்தியஸ்த கோபுரம் மாதிரி தான் மந்தார மலையும்... பூமியை பொருத்தமட்டிலும் அது புதிய மலைத்தொடர் என்பதால், அதீத தாவர வகைகளும் அதிசய மூலிகை வாசங்களுமாகா சதா கமகமத்தது !

மலையின் இரண்டாம் தொடரின் கணவாயினுள் பனிபொசிவெல்லாம் கலந்து கலந்து துளித் துளியாய் சேர்ந்த பேரருவி ஒன்று அனுபவ ஞானிபோல்  வெள்ளை வெளேர் என்று உயரத்திலிருந்து இறங்கி கொண்டிருந்தது

அந்த அருவிக்கும் பெயர் உண்டு. பெயரில்லாதது எவ்வுலகில் ஏது?
பெயரில்லாதது ஒன்று உண்டெனில் அதற்கும் பெயர் வைப்பார்கள் பெயர் உள்ளவர்கள் ! ஒன்றுமில்லாத இடம் வெற்றிடம் எனலாம். அவ்வெற்றிடத்தின் உள்ளிலும்  உள்ளதல்லவா வெறுமை என்னும் ஒன்று!

மந்தார மலையின்  பச்சையைக் கிழித்தபடி தாய்ப்பாலின் தடிமனில் பொழிந்து கொண்டிருந்த அருவி குமுகியருவி. அதில் தான் குளித்துக் கொண்டிருக்கிறாள் சௌபார்னிகா..!

சௌபார்னிகா என்பவள் சௌந்தர்களின் மொத்தமான தவம்!

குளியலில் சிறந்தது நிர்வாணக் குளியலே! நிர்வாணமே நிஜத்தின் கரு என்பதால் தெளிவின் ஆதர்ஸம் என்பதால் யோகிகளின், 18 சித்தர்களின் ஆடையே நிர்வாணம்தான். நிர்வாணமாகத் தன்னைத்தானே காண தைரியம் உடைய மனம் அஞ்ஞானத்தை அடையாளம் காணும்!

குண்டலினி அடிவயிற்றை விட்டு உம்பி மேல் எழும்பி சிறகு சக்கரத்தில் நிலை வரும் போது ஆடையை ஆத்மா உதறி விடுகிறது அல்லவா? அந்த முக்தி நிலை பத்தாவது அடுக்கெனில் ஒன்பதாவது நிலை தான் நிர்வாணக் குளியல்!

சௌபார்னிகா எப்போதுமே அப்படி தான். தான் மீது சுற்றியிருந்த நிறம் தோய்ந்த துணியை சரசரவென உருவி, அருகே கைநீட்டிக் கொண்டுருந்த, ஆலங்கிளையில் விசிறினாள். அது மிகச்சரியாக கிளையில் தொற்றியதோடு கீழே ஈரம் சுட்டி தழைக்கும் வேப்பங்கொழுந்துகளின் மீதும் படிந்தது! வேப்பங்கொளுந்து தமது கசப்புத்தன்மையை சிறிது சிறிதாக இழக்க ஆரம்பித்தன!

இரு கைகளாலும் ஒடுங்கி தன் உடலை மறைத்த வண்ணம், சட்டென்று பேரிரைச்சலின்  மொழியாக பேசிக்கொட்டும் குமுகி அருவியினுள் குடியேறினாள்.

சற்று உயரத்திலிருந்து ஊற்றும் நீர் வருமென்பதால் வேகத்திம் வீச்சை ஒவ்வொரு துளியும் தாங்கி வந்தது. மட்..மட்... என மண்டையில் தெறித்து படபடவென தேகத்தை துவைத்தது. அப்படியே விழிகளை மூடிக்கொண்டாள். அருவி நீருக்குள் தியான நிலை, திவ்ய மனோநிலையினுள்  இதயம் உருண்டு ஓடிக்கொண்டே இருந்தது.

கருங்கூந்தல் பிய்த்துக்கொண்டு ஒடும்படி அதிர்ந்து முதுகு பகுதிப் பகுதி எங்கும் அருவி வழிந்தது. பேரருவிகள் எப்போதும் மலையை ஒட்டி விழுவதில்லை. உயரத்தில் இருந்து ஓர்  எடுப்பு மேலே எடுத்து துள்ளி விழுவதால், அருவிக்கும், மாலைசுவருக்கும் இடையே ஒரு சிறு இடைவெளி ஏற்படும். அந்த இடைவெளியினுள் உடல் ஊன்றி நின்று சிதறி வரும் சிலு சிலு துளியை உணர்வது, ஆஹா.. அருவியின் முதுகை காண்கிற தருணம் அது!

தன் முதுகு பகுதியை நன்கு அழுத்தி, பாசி கோர்த்துப் வழவழப்புக் காட்டிய மாலைச்சுவரில் படித்துக்  கொண்டு கொட்டும் நீர்த்தாண்டவத்தை ரசித்தாள். பிறகு விளையாட்டாக தலையை மட்டும் அருவியினுள் நீட்ட, தடதடவென யாரோ கல் கூடையை கொட்டி அடிப்பது மாதிரி வலிக்க ஆரம்பித்தது.

வெள்ளை வெளேர் என்று மயிர்க்கால்களே இல்லாத கால்களில் கெண்டைக்கால் வரை அறிவியினுள் நீட்ட பெரிதாக நோகவில்லை. கொஞ்சம் நேரம் குளித்து விளையாடியவள், பின்புறம் இருந்த பாறையின் மீது விரல் வைத்து தேய்த்தாள். பாசி உரித்துக் கொண்டு வந்தது. அதை நன்கு குதப்பி உடம்பு முழுக்க தடவி கொண்டாள்.மீண்டும் அருவியினுள் நிற்க, சுத்தமான சுகந்தமானாள்.

குளித்து முடிந்து பிறகு ஓட்டமும், நடையுமாய் காட்டினுள் இறங்கினால். ஏற்றமும் இறக்கமுமான மந்தாரமாலையில் ஓடியும் படுத்தும் இறங்கியவள், சற்று துரத்திலே தேடி வந்த ஜீவனை கண்டுகொண்டால்.

"ஏய் கிழவா..." என்று தனக்கு முதுகு காட்டி நின்ற ஒரு வயோதிக ஆத்மாவை அழைத்தால்.

ஒடிசலான தேகமும் கறுப்பை அப்பிய நிறமுமாக முதுகுத்தண்டு துருத்திக் கொண்டு வெளியே தெரியும் வண்ணம் நின்று கொண்டிருந்த அவ்வுருவம் திரும்பியது. முகமெங்கும் வெள்ளை, கருப்பு கலந்த முடி சதைபோட்டு தொங்கியது. தாடியும் மீசையும்  ஒன்றி கிடந்தன. இறுகி கிடந்த கேசமும் சடையும் அழுக்கு படிந்த கழுத்தில் புரள, ஒடுங்கிய முகமும், இடுங்கிய விழியும், ஆனால் சகக்கோடி பிரகாசம் கொண்ட கண்களுமாக அந்த உருவம் திரும்பி சௌபார்னிகாவை பார்த்தது...

முக்காலம் அறிந்த முனிவர் அவன்... ஆம் பெயர் விசாட  முனிபுங்கன்!

ஏதோ ஒன்றை கீழே தள்ளி என்னமோ செய்து கொண்டிருந்தது அந்த கிழம்!

"என்ன செய்கிறாய்?" என்று விசாட முனிபுங்கன் அருகே சென்றாள் சௌபார்னிகா

ஒரு முழு மனித உடம்பை போட்டு முக்கால் வாசிக்கு மேல் அந்த உடம்பின் தோலை உரித்து கொண்டிருந்தான் அம்முனிவன். தோல் உரித்த உடம்பு சொரணை மரத்துப் போயி சிவசிவப்புக வெளிறிக் கிடந்தது

கிழவன் உளறினான்.. " சௌபார்னிகா நீராடும்போது இந்த ஜந்து பார்த்து வந்தது சில நாளாக "
என்ற படி இறுகிய முகத்துடன் தொடர்ந்து அந்த வேலையை முடிக்க எத்தனித்து கீழே குனிந்தது அக்குறுமுனி உருவம்..

                                                                                                     
(சௌபார்னிகா வருவாள்)




சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Mசௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Aசௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Dசௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Hசௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  U



சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jul 02, 2013 5:49 pm

அட சௌபார்னிகா கலஞ்சர் கதை சாயலில் இருக்கே ! புன்னகை

அது சரி கலஞ்சரின் யூத் தானே இந்த விஜய் புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 02, 2013 5:53 pm

 
ராஜு சரவணன் wrote:அட சௌபார்னிகா கலஞ்சர் கதை சாயலில் இருக்கே ! புன்னகை

அது சரி கலஞ்சரின் யூத் தானே இந்த விஜய் புன்னகை
ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை



சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Mசௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Aசௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Dசௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Hசௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  U



சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக