ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேனு.... தேனு - கௌசிகன்

2 posters

Go down

தேனு.... தேனு - கௌசிகன் Empty தேனு.... தேனு - கௌசிகன்

Post by சிவா Mon Jul 01, 2013 5:02 pm


அன்று வழக்கம் போல காலையில் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தபோது, ஸ்ரீராமின் காதில் “தேனு, தேனு’ என்ற குரல் கேட்டது. ஓர் ஆசாமி மொபெட்டின் பின்னால் அலுமினியப் பாத்திரம் வைத்துக்கொண்டு வந்தான்.

“என்னப்பா இது?’ என்று வினவினான் ஸ்ரீராம்.

“தேனு, சாமி, தேனு, சுத்தமான மலைத்தேனு’

“எங்கிருந்து வர்றேப்பா?’

“பச்சைமலை சாமி, பெரம்பலூர பக்கம்’

அவன் சற்று சந்தேகத்துடன் பார்த்ததும், “சாமி, என்னை நம்புங்க. நான் கும்படற காளி ஆத்தாள் மேல சத்தியமா இது சுத்தமான தேனு தான். நாங்க, காட்டுல தேன் எடுக்க லைசன்ஸு வச்சுருக்கோம். பாருங்க, என் கையில பச்சை குத்தியிருக்கேன்.’ கையில் பச்சை குத்தப்பட்டிருந்தது. ஸ்ரீராமுக்குச் சற்று நம்பிக்கை வரத் தொடங்கியது. ஆனாலும் உள்ளூர சந்தேகம், அது தேன்தானா என்று.

ஸ்ரீராமின் முக பாவத்தை பார்த்த அந்த ஆசாமி, “சாமி, போய் ஒரு நியூஸ் பேப்பர் கொண்டு வாங்க’ என்றான்.

அவன் கொண்டு வந்த பேப்பரில், ஒரு தேக்கரண்டி அளவு தேனை ஊற்றினான். பின் பேப்பரைப் பொட்டலமாக மடித்தான். “இதை இன்னும் அச்சு நிமிஷம் கழிச்சுப் பாப்போம். சாமி, இப்ப ஒரு கிளாசில் தண்ணி கொண்டு வாங்க’ என்றான்.

ஆஃபீஸுக்கோ நேரம் ஆகிறது. இருந்தும், தேனின் கவர்ச்சியால் உந்தப்பட்டு, அந்த ஆசாமி கேட்டபடி, ஒரு எவர்சில்வர் தம்பளரில் தண்ணீர் கொண்டு வந்தான் ஸ்ரீராம்.

தேன் விற்பவன் “தண்ணீரைக் குடிச்சுப் பாருங்க’ என்றான். இதில் என் அதிசயம், வெறும் தண்ணீர் சுவைதானே என்று நினைத்துக் கொண்டு அருந்தினான். பிறகு, அந்த ஆசாமி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி அளவுதேனை ஊற்றினான். “இப்ப குடிங்க, என்ன டேஸ்ட் இருக்கு பாருங்க.’

தண்ணீர் தண்ணீராகத்தான் சுவைத்தது. தித்திப்பாக இல்லை.

“சரி சாமி, தீக்குச்சியும் பெட்டியும் கொண்டு வாங்க’ என்று மீண்டும் பணித்தான். ஆர்வத்தால் மீண்டு உள்ளே சென்று, தீப்பெட்டி கொண்டு வந்தான். தீக்குச்சி ஒன்றை தேனில் தோய்த்துப் பெட்டியின் பக்கவாட்டில் உரசினான். உடனேயே நெருப்புப் பற்றிக்கொண்டது.

“வெறும் வெல்லப்பாகானால் தீப்பற்றுங்களா?’ என்று கேட்டான்.

“அந்தப் பேப்பரைப் பாருங்க, இருக்கா.’

ஒரு துளி கூட உறிஞ்சவில்லை.

அறிவியலைப் பாடமாகப் படித்திருந்த ஸ்ரீராம், அதற்கு மேலும் சோதனை செய்ய நாட்டமில்லாதவனாய், “என்ன விலை’ என்றான்.

“நூறு மில்லி அறுபதுங்க. ஒரு லிட்டர் கொடுக்கட்டுமா?’

“ஒன்றரை லிட்டர் கொடப்பா.’

“நல்ல ஏனம் வேணும். ஒரு வருஷம் ஆனாலும் கெடாத பொருளுங்க.’

மீண்டும் ஒர நடை உள்ளே சென்று, ஒரு எவர்சில்வர் தூக்கைத் தேடி கண்டுபிடித்துக் கொண்டு வந்தான், வெளியே கடைக்குப் போன தன் மனைவி ஏன் இன்னமும் வரவில்லை என்று நினைத்துக் கொண்டே.
“இது மருந்து சாமி, காலைல வெறும் வயித்துல வெந்நீரோடு குடிச்சா ஒடம்பு இளைக்கும். ராத்திரி பாலோடு குடிச்சா ஒடம்பு பெருக்கும். நல்ல கரண்டியா உபயோகப்படுத்துங்க. கெடாது’

ஸ்ரீராம் கொடுத்த ஆயிரம் ரூபாய் நோட்டைப் பெற்றுக்கொண்டு, சரியாகக் கணக்குப் பார்த்து மீதி நூறு ரூபாயைத் திருப்பிக் கொடுத்தான். மலைவாழ் மக்களின் முன்னேற்றத்தைக்கண்டு அவன் வியந்து கொண்டிருக்கும்போது, அவன் மனைவி துளசி வந்தாள். அவளை பார்த்தவுடன், “அம்மா கொளந்தைக்குத் தூளி கட்டணும். ஏதாச்சும் பழைய நூல் சேலை இருந்தால் தாங்க’ என்றான். கணவனின் கண் ஜாடையின் அர்த்தத்தை உணர்ந்த அவள், இரண்டு பழைய, கிழியாத நூல் புடைவைகளைக் கொடுத்தாள்.

“மவராசியாய் இருங்க. சாமி, நான் நாலு மாசம் கழிச்சு வரேன்’ என மனமார வாழ்த்திவிட்டுப் போனான் அந்த மலை வாழ் ஆசாமி.

“சுத்தமான தேன்தானா? எவ்வளவு வாங்கினீங்க? என்ன விலை?’ சற்று அதட்டலாகக் கேட்டாள். சொன்னான்.

“ஆங்க். ஒண்ணரை லிட்டரா? யாருக்காவது தேனாபிஷேகமா? அதுவும் தொள்ளாயிரம் ரூபா கொடுத்து? தேனுன்னு நம்பி எதை வாங்கினீங்களோ! வயத்த என்ன பண்ணுமோ? அவ்வளவும் எப்படிச் செலவழியுமோ?’

“இங்க பார் துளசி, எங்கப்பா தேனை டெஸ்ட் பண்ணச் சில முறைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கார். அந்த ஆசாமி செஞ்சதெல்லாம் நான் கேள்விப்பட்டிருக்கேன். பயப்படாதே. நம்ம சொந்தக்காரங்க, ஃபிரெண்ட்ஸ் எல்லாருக்கும் வினியோகம் பண்ணினாப் போச்சு. தேனில், அன்னாசிப்பழம், பலாப்பழம், வாழைப்பழம் உறவச்சுச் சாப்பிடலாம். அம்மா, அப்பா ஸ்ராத்தத்தில் உபயோகப்படுத்தலாம். ஏன், நீ கூட உடம்பு இளைக்கச் சாப்பிடேன். அவன் சொன்ன மாதிரி’ என்றவன், அவளது கனலெனும் பார்வையைத் தவிர்த்து, தொடர்ந்தான்:

“நம்ப மாதிரி ஆட்களெல்லாம் பெரிய பெரிய மால்களிலும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் ஷாப்பிங் செய்து, பிராண்ட் நேமை நம்பி பொருளை வாங்கி ஏமாறுவோம். வயிற்றுப் பிழைப்புக்காக நல்ல பொருளை விற்கும் ஏழையைச் சந்தேகப்படுவோம். அவன் வறுமையைப் பார். அவன் விற்றது தேனாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஓர் ஏழையிடம் ஏமாந்து போறதுல எனக்குப் பெருமைதான்!’

என்னதான் துளசியிடம் வீராப்பாகப் பேசினாலும், ஸ்ரீராமுக்கு உள்ளூர சந்தேகம். மறுநாள் ஒரு சின்ன பாட்டிலில், அந்தத் தேனை ஊற்றி ஆஃபீஸுக்கு எடுத்துப் போனான். உணவு இடைவேளையில், சகாக்களுக்குக் கொடுத்தான். அனைவரும் அது சுத்தமான தேன்தான் என்று சான்றிதழ் கொடுத்தனர். சிலர், அந்த ஆசாமி மீண்டும் வந்தால் தத்தம் வீடுகளுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர்.

பின்னர், அவர்களது வீட்டுக்கு வந்த உறவினர்களும், நண்பர்களும் அவர்கள் அளித்தத் தேனின் இன்சுவையில் மயங்கினர். ஸ்ரீராம் தனது தந்தையையும் அடிக்கடி நினைத்துக்கொண்டான். எத்தனை நாள் தேனில் ஊறவைத்த அன்னாசிப்பழத்தை வாயில் ஊட்டிவிட்டிருக்கிறார்?

மறுமாதம் அப்பாவின் திவசம் பண்ணும்போது, பித்ரு ஸ்வரூபமாக வந்த வாத்தியார், கலத்தில் வாழைப்பழம் மீதுத் தேனை ஊற்றும்போது ஸ்ரீராமின் கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீரைக் கவனிக்கத் தவறவில்லை அவனது அன்பு மனைவி.

“தேனு... தேனு...’ வெகு தொலைவில் ஒரு குரல் மெலிதாக கேட்டது.



தேனு.... தேனு - கௌசிகன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேனு.... தேனு - கௌசிகன் Empty Re: தேனு.... தேனு - கௌசிகன்

Post by manikandan.dp Wed Jul 17, 2013 10:21 am

அருமையான பதிவு ....சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum