புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:46 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியாரிசம்  Poll_c10பெரியாரிசம்  Poll_m10பெரியாரிசம்  Poll_c10 
56 Posts - 64%
heezulia
பெரியாரிசம்  Poll_c10பெரியாரிசம்  Poll_m10பெரியாரிசம்  Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
பெரியாரிசம்  Poll_c10பெரியாரிசம்  Poll_m10பெரியாரிசம்  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
பெரியாரிசம்  Poll_c10பெரியாரிசம்  Poll_m10பெரியாரிசம்  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பெரியாரிசம்  Poll_c10பெரியாரிசம்  Poll_m10பெரியாரிசம்  Poll_c10 
3 Posts - 3%
Guna.D
பெரியாரிசம்  Poll_c10பெரியாரிசம்  Poll_m10பெரியாரிசம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெரியாரிசம்  Poll_c10பெரியாரிசம்  Poll_m10பெரியாரிசம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பெரியாரிசம்  Poll_c10பெரியாரிசம்  Poll_m10பெரியாரிசம்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பெரியாரிசம்  Poll_c10பெரியாரிசம்  Poll_m10பெரியாரிசம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியாரிசம்  Poll_c10பெரியாரிசம்  Poll_m10பெரியாரிசம்  Poll_c10 
56 Posts - 66%
heezulia
பெரியாரிசம்  Poll_c10பெரியாரிசம்  Poll_m10பெரியாரிசம்  Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
பெரியாரிசம்  Poll_c10பெரியாரிசம்  Poll_m10பெரியாரிசம்  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பெரியாரிசம்  Poll_c10பெரியாரிசம்  Poll_m10பெரியாரிசம்  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பெரியாரிசம்  Poll_c10பெரியாரிசம்  Poll_m10பெரியாரிசம்  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
பெரியாரிசம்  Poll_c10பெரியாரிசம்  Poll_m10பெரியாரிசம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெரியாரிசம்  Poll_c10பெரியாரிசம்  Poll_m10பெரியாரிசம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பெரியாரிசம்  Poll_c10பெரியாரிசம்  Poll_m10பெரியாரிசம்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பெரியாரிசம்  Poll_c10பெரியாரிசம்  Poll_m10பெரியாரிசம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியாரிசம்


   
   
Alavandhan
Alavandhan
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 19/08/2013
http://alavandhan101.blogspot.in/

PostAlavandhan Tue Sep 17, 2013 8:56 pm

பெரியாரிசம் (பதிவு 1)

அன்பு நண்பர்களே பெரியாரிசத்தை விரிவாக அலசவேண்டும் என்று கருதினேன். எனவே இது மிக நீ......ண்ட பதிவாக அமைந்துவிட்டது. ஆகையால் பொறுமையுடன் (விருப்பப்பட்டால்) படித்து உங்களுக்கு தோன்றும் கருத்தை நீங்கள் விருப்பப்பட்டால் பின்னூட்டம் இடுங்கள்.

பெரியாரிசம் ; ஜாதிகள் ஒழிய வேண்டும், பெண் அடிமைத்தனம் ஒழிய வேண்டும், இதற்கு பெரியாரின் தீர்வு : ஜாதிகள் ஒழிய கடவுள் மறுப்புக் கொள்கையும், பெண் அடிமைத்தனம் ஒழிய ஆண்களைப்போல பெண்களும் கற்பு நெறியிலிருந்து வெளியே வரவேண்டும், ஆகியவை பெரியாரிசத்தின் கொள்கையின் சாராம்சம்.

ஜாதிகள் ஒழிய கடவுள் மறுப்புக்கொள்கை : ஜாதிகள் ஒழிய வேண்டும் என்ற கொள்கையை பெரியார் அவர்கள்தான் முதலில் வலியுறுத்திக் கூறினார் என்று இன்றைய பகுத்தறிவு ஜீவிகள் பிதற்றிக்கொண்டிருக்கின்றனர்.

மகா கவி பாரதியா “சாதிகள் இல்லையடி பாப்பா, குலம் உயர்த்தி தாழ்த்தி சொல்லல் பாவம்” என்று சொல்லியிருக்கிறானே?

சாதியாவது ஏதடா? சலம்திரண்ட நீரெல்லாம்
பூதவாசல் ஒன்றலோ பூதம்ஐந்தும் ஒன்றலோ?
காதில்வாளில் காரைகம்பி பாடகம்பொன் ஒன்றலோ?
சாதிபேதம் ஓதுகின்ற தன்மைஎன்ன தன்மையோ? – என்று சாதி பாகுபாட்டையும்,

பறைசியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ? பணத்திபோகம் வேறதோ?
பறைச்சியும் பணத்தியும் ப்குத்துப்பாரும் உம்முள்ளே. – என்று தீண்டாமையையும் சிவவாக்கியர் என்ற சித்தர் சாடவில்லையா?

சாதி இரண்டொழிய வேறில்லை ;சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் –மேதினியில்
இட்டார் பெரியோர் ;இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி - என்று ஔவையார் சாடவில்லையா?

இவர்கள் யாரும் சாதியை ஒழிக்க கடவுள் மறுப்புக் கொள்கையை கடைபிடிக்க வில்லையே...

மேற்படியாளர்கள் கடவுள் மறுப்புக் கொள்கையை கடைபிடிக்காததால்தான் சாதி ஒழியவில்லை, அதனால்தான் பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கையை கையில் எடுத்தார், என்று வைத்துக்கொண்டால் இப்பொழுது மட்டும் என்ன வாழுதாம்... தெருவுக்கு ஒரு சாதி, சாதிக்கு ஒரு கட்சி என்றல்லவா இருக்கிறது... கடவுளை ஒழித்தால் சாதி ஒழிந்துவிடுமா? சாதிக்கும் கடவுளுக்கும் என்ன சம்மந்தம்.

எந்த ஒரு நல்ல செய்தியையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பது மிக மிக மிக கடினம் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றே? ஆனால் எதை சொல்லவேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த செய்தியை எப்படி சொல்ல வேண்டும் எங்கு சொல்ல வேண்டும் என்று ஒரு வரைமுறை இருக்கிறது. அதாவது சொல்ல வேண்டிய செய்தியை மற்றவர் மனது புண்படாதபடியும், எளிமையாகவும், சொல்ல வேண்டும்.

உதாரணத்திற்கு கடவுளுக்கு பாலபிஷேகம் செய்வதால் பல லிட்டர் பால் வீணாகிறது, அந்தப் பாலை பசியால் வாடும குழந்தைகளுக்கு தானமாகக் கொடுத்தால் கடவுள் மிகவும் மகிழ்வார், அபிஷேகம் செயப்படும்ம்பால் யாருக்கும் பயன்படாமல் வீணாவதை அந்த கடவுளே விரும்பமாட்டார் என்று சொன்னால் 100 பேரில் 20 பேராவது சிந்தித்திருப்பார்கள்.

அதை விடுத்து “கடவுளை நம்புகிறவன் முட்டாள், கடவுளை கற்பிப்பவன் காட்டுமிராண்டி” என்றெல்லாம் கூறும்பொழுது “கடவுளை கற்பித்த சித்தர்களும், ஞானிகளும் காட்டு மிராண்டிகளா? என்ற ஒரு கேள்வி எழும. கடவுளை நம்புகிறவன் முட்டாள், கடவுளை கற்பிப்பவன் காட்டுமிராண்டி” என்று சொன்னவர்மீது வெறுப்புதான் வரும்.

தொடரும்....அடுத்த பதிவில்..



மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்
.


நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று
.
Alavandhan
Alavandhan
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 19/08/2013
http://alavandhan101.blogspot.in/

PostAlavandhan Tue Sep 17, 2013 8:56 pm

பெரியாரிசம் (பதிவு 2)

கடவுளை கற்பித்தவர்கள் ஆரியர்களாகிய பார்பனர்கள் என்ற காரணத்தை முன்வைத்து, பார்பனர்கள் கற்பித்த கடவுளை மறுக்கிறார்.

ஏன் திராவிடன் உருவ வழிபாடு செய்யவில்லையா? சூரியனையும், பசுவையும், சிவனையும், பாம்பையும், இயற்கையையும் வணங்கியதாக திராவிட வரலாறு கூறுகிறதே.

சரி, பார்ப்பனரே கடவுளை கற்பித்தனர் என்றே வைத்துக்கொள்வோம்,

“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”
இதன் பொருள் : எந்த ஒரு பொருளையும் (பருப்பொருள், கருப்பொருள்) அது எந்த தன்மையுடையதாக இருந்தாலும் சரி அதனுடைய உண்மைத்தன்மை, ஆழம், உள்ளார்ந்தக் கருத்து, போன்ற பல பரிமாணங்களில் ஆய்வு செய்வதே (பகுத்தறிவு) அறிவு.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”
இதன் பெருள் : எந்த ஒரு பொருளைப்பற்றியும் ஏதாவது தகவல்கள் இருக்கும். அந்த தகவல் யாரால் சொல்லப்பட்டது, சொன்னவர் படித்தவரா?, படிக்காதவரா? ஏழையா? பணக்காரனா? ஆட்சி அதிகாரத்தில் உள்ளவரா? சாதாரண குடிமகனா? முடவனா? ஆன்மீகவாதியா? பகுத்தறிவு வாதியா? விஞ்ஞானியா, ஆரியனா? (பார்ப்பனனா?), திராவிடனா? என்பதையெல்லாம் விடுத்து சொல்லப்பட்ட செய்தி அல்லது தகவலின் உண்மைத்தன்மை, ஆழம், உள்ளார்ந்த கருத்து, போன்ற பல பரிமாணங்களில் ஆய்வு செய்வதே (பகுத்தறிவு) அறிவு.

“குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்”
இதன் பொருள் : மேற்படி இரண்டு குறள்களின் படி ஆய்வு செய்தால் கிடைக்கும் வெளிப்பாடுகளில் நன்மைதீமைகளை ஆராய்ந்து நன்மைகளை எடுத்துக்கொண்டு, (முடிந்தால்) தீமைகளை நன்மைகளாக மாற்றுவது எப்படி என்று ஆய்வு செய் (பாம்பின் விஷத்திலிருந்து மருந்து கண்டு பிடித்ததுபோல, அளவிட முடியாத அழிவு சக்தியாகிய அணு சக்தியை பயன் படுத்தி ஆக்க சக்தியான மின்சாரம் தயாரிக்கப் படுவது போல)

கடவுள் என்ற ஒரு கருப்பொருளை அல்லது உருப்பொருளை கற்ப்பித்தது யார் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. அதனால் ஏற்படும் நண்மை என்ன? தீமை என்ன?

ஒரு சிறு செய்தியை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன், பள்ளியில் ஆசிரியர் அடிப்பார் அல்லது திட்டுவார் என்ற பயம் இருந்தால்தானே நம் பிள்ளைகள் வீட்டுப்பாடங்களை ஒழுங்காக செய்வார்கள். அம்மா அப்பா வருந்துவார்கள் என்ற பயம் இருந்தால்தானே நம் பிள்ளைகள் ஒழுக்கம் தவற மாட்டார்கள். பிள்ளைகளிடம் மேற்படி பயம் இல்லை என்றால் நிச்சயம் பிள்ளைகள் தடம் மாறுவது உறுதிதானே.

“குலம் உயர்த்தி தாழ்த்தி சொல்லல் பாவம்” என்ற வரியில் பாவம் என்ற சொல்லை பாரதியார் பயன் படுத்தியிருக்கிறார். கரணம் பாவம் செய்தவர்களை கடவுள் தண்டிப்பார், என்ற பய உணர்வு இருந்தால்தான் பின்தங்கிய சாதிகளை தாழ்த்தி பேச மாட்டார்கள் என்ற எண்ணம்தான்.

தீமை செய்தால் பாவம் சேரும், பாவம் சேர்ந்தால் கடவுள் தண்டிப்பார் என்ற பயஉணர்வு இருந்தால் யாரும் தவறு செய்ய பயப்படுவார்கள். மேற்படி பயஉணர்வு இல்லாததால்தானே இன்று லஞ்சம, ஊழல் யாராலும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வளர்ந்தோங்கி இருக்கிறது.

படிப்பறிவு இல்லாத காமராஜர் கல்விக்கே கண்கொடுத்தார். அதனால் இன்றளவிலும் பெருந்தலைவர் போற்றப்படுகிறார்.

ஆனால் பகுத்தறிவுப் பாசறையில் வளர்ந்த திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆண்டதால் இன்றைய நிலை என்ன? பொதுஉடமையாகிய கல்வி இன்று தனியார் மயம் ஆகி வியாபாரப் பொருளாக, ஆடம்பரப் பொருளாக சீரழிந்து நிற்கிறதே.

தொடரும்.....அடுத்தப் பதிவில்.....



மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்
.


நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று
.
Alavandhan
Alavandhan
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 19/08/2013
http://alavandhan101.blogspot.in/

PostAlavandhan Tue Sep 17, 2013 8:57 pm

பெரியாரிசம் (பதிவு 3)

மீண்டும் பார்ப்பணர் விஷயத்திற்கு வருவோம். கடவுளை வைத்து பார்ப்பணன் பிழைப்பு நடத்துகிறான். அல்லது பிழைப்பு நடத்துவதற்கு கடவுளை பயன்படுத்திக்கொண்டான். கடவுளிடம் பார்ப்பனரல்லாதவர்களை அனுமதிக்க மறுக்கிறான். அதனால் கடவுளை எதிர்க்கிறோம் என்று வைத்துக்கொண்டால்...

இந்த பகுத்தறிவு பாசறையில் வளர்ந்த இவர்கள் ஆட்சி காலத்தில் அரசியலை வைத்து கோடிக்கணக்கில் லஞ்ச லாவண்யங்களை வளர்த்து விட்டிருக்கிரார்களே. கோடிகோடியாக பணம் செலவு செய்பவர்களும், கோடிகோடியாக கட்சிக்கு நிதி தருபவர்களும் மட்டுமே அரசியலில் ஈடுபட முடியும், மற்ற சாமானிய திறமைசாலிகள் எவரும் அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள் என்ற நிலைக்கு காரணமான இவர்களின் அரசியலை எங்கு கொண்டு புதைப்பது? ;லட்சலட்சமாக கொட்டிக் கொடுத்தால்தான் வேலை. பணம் இல்லாவிட்டால் வேலை இல்லை என்ற அவல நிலைக்கு தள்ளிய இவர்களின் அரசியலை எங்கு கொண்டு எரிப்பது? பத்தாயிரம் இருபதாயிரம் என்று கொடுத்தால்தான் அடிப்படை கல்வியே கிடைக்கும் என்ற கேடுகெட்ட இந்த நிலைக்கு காரணமான அரசியலை புதைபதா? எரிப்பதா?

அரசியலை புதைப்பதிலோ, எரிப்பதிலோ எந்தவிதமான லாபமும் இல்லை, மாறாக தீமையே விளையும். அரசியலை அழிப்பதைவிட அரசியல் வாதிகள் திருந்த வேண்டும் என்பத்தானே சிறந்த வழி. அதேபோல கடவுளை மறுப்பதைவிட பார்ப்பனர்களை த்திருத்துவதுதான் சரியான வழி. கடவுளை மற மனிதனை நினை என்று கோஷமிடுவதைவிட, பார்ப்பனனும் திராவிடனைப்போல மனிதன்தானே என்பது பற்றி சிந்திக்குமா? இந்த பகுத்தறிவு, பார்ப்பனன் ஒழிவதைவிட பார்பனீயம் ஒழிய வேண்டும் என்பதே சரியானதாக இருக்கும்.

பெரியார் தன் கடவுள் மறுப்புக் கொள்கையை தன் குடும்பத்தினருக்கு அறிவுறுத்தி இருந்தாரா? அவருடைய குடும்பத்தில் மனைவி, உடன்பிறந்தோர், உற்றார், உறவினர்களிடம் தன் கடவுள் மறுப்புக் கொள்கையை அறிவுறுத்தினாரா? பெரியாரின் தொண்டர்களாகிய இன்றைய பகுத்தறிவு ஜீவிகள் தங்கள் குடும்பத்தாரிடம் பெரியாரின் கடவுள் மறுப்புக்கொள்கையை அறிவுறுத்தினர்களா?

இதற்கு பகுத்தறிவு ஜீவிகளின் பதில் என்ன, தெரியுமா? அது அவர்களுடைய தனிப்பட்ட சுதந்திரம், அதில் நாங்கள் தலையிடுவதில்லை, என்பார்கள்.

மக்கள் என்ன இளிச்சவாயர்களா? மக்களின் சுதந்திரத்தில் தலையிடுவதற்கு இவர்களுக்கு என்ன தகுதியிருக்கிறது? இவர்களுடைய பெண்டு பிள்ளைகள், குடும்பத்தார், உற்றார் உறவினர் இவர்களெல்லாம் சுதந்திரமாக கடவுளை ஏற்றுக் கொள்ளலாம். தங்களுடைய குடும்பத்தார் மட்டும் சுயமரியாதையுடன் இருக்கலாம். மற்றவர்கள் சுதந்திரத்திலும் சுயமரியாதையிலும் தலையிடுவதற்கு இவர்கள் யார்?

கடவுளை நம்புகிறவன் முட்டாள், என்று எங்களையும், கடவுளை கற்ப்பித்தவன் காட்டுமிராண்டி என்று எங்கள் சான்றோர்களையும் சாடுவதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

தொடரும்.......அடுத்தப் பதிவில்......



மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்
.


நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று
.
Alavandhan
Alavandhan
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 19/08/2013
http://alavandhan101.blogspot.in/

PostAlavandhan Tue Sep 17, 2013 9:00 pm

பெரியாரிசம் (பதிவு 4)

இவர்களுடைய கடவுள் மறுப்புக் கொள்கையினால் இன்னொரு இழப்பு என்ன?

சமஸ்கிருதம் என்ற ஒரு மொழியை இன்று இழந்து நிற்கிறோம். காரணம் சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் சொல்லி வழிபட்டால்தான், வழிபாடு கடவுளைச் சேரும். என்ற பார்ப்பனீயக் கொள்கை தான். நானும் கூட இதை மறுக்கிறேன். கடவுளை வழிபட சமஸ்கிருதம் தான் ஏற்ற மொழி என்பதை வன்மையாக கண்டிக்கிறேன். நான் எந்த ஆலையத்திலும் அர்ச்சனை செய்வதில்லை. இறை வழிபாட்டிற்கு மொழி ஏதும் தேவையில்லை. என்பதே சிறந்த கோட்பாடு. சமஸ்கிருதம் உனக்கு பிடிக்கவில்லையா? விட்டுவிடு, உனக்கு பிடித்த மொழியை வைத்து வழிபடு.

இவர்களால் இன்று சமஸ்கிருதம் மொழியில் இருந்த பல அறிய பொக்கிஷங்கள் அழிந்துவிட்டனவே? இவர்களால் அவற்றை மீட்டுத் தரமுடியுமா? எவ்வளவு அறிவியல் விஷயங்கள் சம்ஸ்கிருத நூல்களில் இருந்தது, கடவுள் மறுப்பு என்ற ஒன்றுமற்ற கொள்கையினால் ஒரு மொழியையும் அதில் உள்ள பல அறிய தகவல்களும் இன்று காணாமல் போய்விட்டதே!!

சமஸ்கிருதம் என்பது ஆரியர்களின் (பார்ப்பன) மொழி, எனவே அதை ஒழிக்கவேண்டும் என்ற மூடத்தனமான கொள்கையினால் இன்று அந்த மொழி செத்துவிட்டதே!! உன்னால் அதை மீண்டும் உயிர்ப்பித்து தர முடியுமா?

எந்த ஒரு விஷயமும் 100% தூய்மையானதும் இல்லை, 100% தீமையானதும் இல்லை. நண்மை தீமை இரண்டும் கலந்தே இருக்கும். நல்லவைகளை எடுத்துக்கொண்டு, தீயவைகளை எப்படி நன்மையாக மாற்றவேண்டும் என்பதை யோசிக்கவேண்டும். நான் முன்பே சொன்னதை இங்கு மீண்டு குறிப்பிட விரும்புகிறேன். மிகப்பெரிய அழிவு சக்தியாகிய அணுசக்தியை மின்சாரம் தயாரிக்கவும், பாம்பின் விஷத்தைக் கொண்டு மருந்து கண்டுபிடித்தது போல.

பார்ப்பனீயத்தையும், சமஸ்கிருதத்தையும் அப்படித்தான் அணுகியிருக்க வேண்டும், பார்ப்பனீயத்தை ஒழிப்பதைவிட திருத்தி அமைக்க வேண்டும் என்பதே சரியான கொள்கையாக கொள்கையாக இருக்கும்.

தனக்குப் பிடிக்காத, அல்லது தனக்குத்தெரியாத எதையும் ஒழிக்கவேண்டும் என்பதல்ல உண்மையான பகுத்தறிவு.

தனக்கு பிடிக்காதது மற்றவர்களுக்கு பிடிக்க்க்கூடும் அல்லது பயன்படக்கூடும் எனவே அதை பாதுகாக்கவேண்டும், அல்லது குறைந்தபட்சம் அழிக்கும் முயற்சியையாவது கைவிடவேண்டும்.
அதேபோல தனக்கு தெரியாத விஷயத்தை தெரியாது என்று ஒப்புக்கொண்டு, அதை தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து தெளிய வேண்டும். இதுதான் உண்மையான அல்லது சரியான பகுத்தறிவு.

தொடரும்..... அடுத்தப் பதிவில்.......



மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்
.


நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று
.
Alavandhan
Alavandhan
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 19/08/2013
http://alavandhan101.blogspot.in/

PostAlavandhan Tue Sep 17, 2013 9:00 pm

பெரியாரிசம் (பதிவு 5)

பெரியாரிசத்தின் கடவுள் மறுப்புக்கொள்கையின் இன்னொரு வெளிப்பாடு.. புராணங்களும், இதிகாசங்களும் பொய்யும், புனைசுருட்டும் கலந்தவைகள். இவைகள் மனிதர்களின் அறிவை மழுங்கடிக்கின்றன.

இந்த கருத்து மிகவும் அபத்தமானது, முட்டாள் தனமானது.

இதற்க்கு உதாரணமாக ஒரு புராணக் கதை ஒன்றை சுட்டிக் காண்பிக்க விரும்புகிறேன்.

ஒருமுறை நாரதர் ஒரு பழத்தைக் கொண்டு வந்து, "இது யாருக்குமே கிடைக்காத ஞானப்பழம், இதை நான் உண்பதை விட தாங்கள் உண்பது தான் சிறந்தது" என்று கூறி சிவபெருமானிடம் கொடுத்தார்.

சிவபெருமான், பார்வதி தேவியைப் பார்த்து "உமையவளே நீ என்னை இயக்கும் சக்தியாக, என்னில் சரிபாதியாக இருக்கிறாய், நம்மை அனைவரும் 'அம்மை அப்பன்' என்றுதான் அதாவது அம்மை என்று உன்னைத்தான் முதலில் நிறுத்தி அழைக்கிறார்கள். எனவே இந்தப் பழத்தை நான் உண்பதைவிட நீ உண்பதே மிகவும் சிறப்பு" என்று கூறி அம்மையிடம் தந்தார்.

அதற்க்கு அம்மையும்" நாம் அம்மை அப்பன் ஆகிவிட்டோம். இனி வருங்காலம் நம் பிள்ளைகளின் கையில் உள்ளது. எனவே இதை பிளைகளுக்கே தந்துவிடலாம்" என்று கூறுகிறாள்.

விநாயகன், முருகன் இருவரில் யாருக்குத் தருவது என்பதில் குழப்பம் வந்தபொழுது, சிவபெருமான் இருவரில் யார் உலகத்தை முதலில் சுற்றி வருகிராகளோ அவர்களுக்குத்தான் இந்த ஞானப்பழம்.
என்று கூறிவிட்டார்.

உடனே முருகனும் உலகை சுற்ற புறப்பட்டான், ஆனால் விநாயகனோ நாரதரைப் பார்த்து "நாரதரே, உலகம் என்றால் என்ன? அம்மையப்பன் என்றால் என்ன?" என்று கேட்டான்? நாரதரும் மற்றவர்களும்
விநாயகனின் கருத்தை ஆமோதித்தனர்.

விநாயகனும் அம்மை அப்பனை சுற்றிவந்து பழத்தைப் பெற்றுக்கொண்டான்.

இந்தக் கதையை இத்துடன் முடித்துக்கொள்ளலாம்.

இந்தக்கதையை ஏன் இவ்வளவு விரிவாக தந்தேன்? என்றால் இதில் மிக முக்கியமான வாழ்வியல் கோட்பாடு உள்ளது.

என்னவென்று யோசித்து வையுங்கள்.

மீண்டும் அடுத்தப் பதிவில் ....



மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்
.


நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று
.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக