புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவின் கதை - Page 2 Poll_c10கருவின் கதை - Page 2 Poll_m10கருவின் கதை - Page 2 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
கருவின் கதை - Page 2 Poll_c10கருவின் கதை - Page 2 Poll_m10கருவின் கதை - Page 2 Poll_c10 
3 Posts - 8%
heezulia
கருவின் கதை - Page 2 Poll_c10கருவின் கதை - Page 2 Poll_m10கருவின் கதை - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கருவின் கதை - Page 2 Poll_c10கருவின் கதை - Page 2 Poll_m10கருவின் கதை - Page 2 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
கருவின் கதை - Page 2 Poll_c10கருவின் கதை - Page 2 Poll_m10கருவின் கதை - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவின் கதை


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:03 pm

First topic message reminder :

பெண்களே! நீங்கள் புதிதாக கர்ப்பம் தரித்தவரா? அல்லது கர்ப்பம் தரிக்க முயற்சி செய்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கும். கர்ப்பம் தரித்த முதல் வாரம் தொடங்கி 9 மாதம் வரை குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும்? அதற்கேற்ப உடலில் நிகழும் மாற்றங்கள் எவை? என்பது போன்ற கேள்வி களுக்கு திருப்தியான விடை கிடைக்காமல் தவிக்கலாம். இதுபோன்ற உங்களின் சந்தேகங்களுக்கு தெள்ளத் தெளிவான பதில்களையும், விளக்கங்களையும், ஒவ்வொரு வாரத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய மருத்துவ முறைகள் பற்றியும் இந்தப் பகுதியில் காணலாம்.


1 முதல் 4 வாரம் வரை


சினையுற்ற கருமுட்டைகள் வளரத் தொடங்குகின்றன. அதனை சுற்றி தண்ணீரால் சூழப்பட்ட ஒரு இறுக்கமான உறை இருக்கும். அந்த உறை முழுவதும் நீர்மத்தால் நிரம்பத் தொடங்கும். இந்த உறைக்கு அம்னியோடிக் சேக் என்று பெயர். வளருகின்ற கருவுக்கு இந்த உறை குஷன் போல அமைகிறது

நச்சுக்கொடி வளருகிறது. இதனை பிளசன்டா என்று சொல்கிறோம். இந்த நச்சுக் கொடிதான் தாய்க்கும், சேய்க்கும் இடையே பாலமாக செயல்படுகிறது. அதாவது குழந்தைக்கு தேவையான சத்துப் பொருட்களை தாயிடமிருந்து சேய்க்கு கடத்துகிறது. அதுபோல சேயிடமிருந்து வேண்டாத கழிவுகளை தாய்க்கு கடத்தி வெளியே அனுப்பும் வேலையை செய்கிறது. பிளசன்டா உருண்டையான குழாய் போல காணப்படும்.
.

முகம் தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்படும். முதல் கட்டமாக கண்களுக்காக இரண்டு பெரிய கருப்பு வளையங்கள் உருவாகும். வாய், கீழ்த்தாடை, தொண்டை வளரத் தொடங்கும். ரத்த செல்கள் குறிப்பிட்ட வடிவத்தை அடைய தொடங்கி, ரத்த ஓட்டம் தொடங்கும்.

முதல் மாதத்தின் முடிவில் உங்கள் குழந்தை வெறும் 1_4 இஞ்ச் நீளம் மட்டுமே இருக்கும். அதாவது ஒரு நெல்லின் அளவை விட சிறியதாக இருக்கும்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:28 pm

7-வது வாரம்

இந்த வாரத்தில் முதிர்வுறாத கரு வேகமாக வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும். அளவைப் பொறுத்தவரை தலையில் இருந்து பின்பாகம் வரை 0.44 இஞ்ச் முதல் 0.52 இஞ்ச் வரை ராஸ்ப்பெர்ரி போல இருக்கும். கால் மொட்டுக்கள் சிறிய இறக்கை போல வளர்ச்சி அடையும், கைகள், கால் பாதங்கள், விரல்களும் மெல்ல மெல்ல வளரும். இதயம், நுரையீரல், குடல்வால், நாசித்துவாரம், கண்கள், உள் உறுப்புகள் முன்பு இருந்ததை விட கூடுதலான வளர்ச்சியை பெறும். நரம்புக் குழாயில் இருந்து மூளை, மற்றும் தண்டு வடம் வளரத் தொடங்கும்.

நீங்கள் கர்ப்பம் தரித்திருப்பதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அறிகுறிகள் பலமாக தென்படும். கர்ப்பத்தின் தொடக்க கால அறிகுறிகளான மசக்கை உள்ளிட்ட சிரமங்கள் இந்த வாரத்திலும் காணப்படும். மார்பகங்களில் ஏதோ ஒரு உறுத்தல் இருப்பது போலவும், வழக்கத்துக்கு மாறhக பஞ்சு மாதிரி இருப்பது போலவும் உணர்வு இருக்கும்.

டிப்ஸ்

என்ன சாப்பிட்டாலும் வாந்தி எடுக்க வேண்டி இருக்கும். அதற்காக வயிற்றை வெறும் வயிறாக வைக்க வேண்டாம். வழக்கமான உணவு சாப்பிடுவதற்கு பதிலாக நிறைய பால் குடியுங்கள். பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொண்டு ஸ்நாக்ஸ் போல சாப்பிடலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவில் குறைவு எதுவும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் வெண்ணெய்ப் பொருட்களை மருத்துவர்கள் ஆலோசனையுடன் வேண்டிய அளவுக்கு சாப்பிடலாம்;.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:29 pm

8-வது வாரம்

உங்கள் கருப்பையில் இருக்கும் முதிர்வுறாத கரு 6-வது வார வளர்ச்சி நிலையில் ஒரு சின்ன திராட்சைப் பழம் போல காணப்படும். 0.56 தலை முதல் பின்பகுதி வரை இஞ்ச் முதல் 0.8 இஞ்ச் வரை நீளம் இருக்கும். கண் இமைகள், காதுகள் ஆகியவை உருவாகி கொண்டிருக்கும். இந்த வாரத்தில் குழந்தையின் மூக்கு நுனியை கூட காண முடியும். கைகள் நீளமான வளர்ந்து மூட்டுப் பகுதியில் வளைந்து இருக்கும். விரல்கள் இருக்க வேண்டிய இடங்களும், பாதங்களும் ஒரே சமயத்தில் வளர்ச்சி அடையும். இது பார்ப்பதற்கு வி வடிவில் காணப்படும்.

உங்களுடைய அடிவயிற்றிலோ, பக்கவாட்டிலோ திடீரென வலி அல்லது சுளுக்கு ஏற்படுவதை போன்று உணருவீர்கள். ஏனெனில் உங்களுடைய கருப்பை பிரசவ காலத்துக்கு தகுந்தாற் போல இறுக்கமாக மூடிக் கொள்வதால் இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கும். ஆனால் மேற்கண்ட நிகழ்வின் போது பிறப்புறுப்பில் ரத்தம் வடிதல் இருக்குமானால் உடனடியாக மருத்துவரைப் போய் பாருங்கள்.

டிப்ஸ்

இந்த வாரத்தில் மார்பகங்களுக்கு பொருத்தமான நல்ல பிரா போட்டுக் கொள்வது வசதியாக இருக்கும். மேலும் அதன் மூலம் எதிர்காலத்தில் மார்பகங்களில் தொய்வு ஏற்படுவதை தடுக்கவும் முடியும். சுலபமான உடற்பயிற்சிகள் செய்வதன் மார்பக தசைகளில் இறுக்க நிலை தளர்ந்து மிருதுவாகும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:30 pm

9 முதல்; 12-வது வாரம் வரை

3-வது மாதம் முடிந்த நிலையில் உங்களுடைய குழந்தை முழு வதுமாக உருவாகி இருக்கும். இப்போது உங்களுடைய குழந்தைக்கு கைகள், முன் கைகள், விரல்கள், கால் பாதம் ஆகியவை இருக்கும். உங்களுடைய அன்பின் சின்னம் தன்னுடைய பிஞ்சுக் கைகளையும், வாயையும் மூடி மூடி திறக்கும். விரல் நகங்களும், குதிங்கால் (கால் இன்னும் வளர்ச்சி அடைந்திருக்காது) நகங்களும் வளரத் தொடங்கும். அதே நேரம் வெளிப்புற காதுகள் உருவாகும். பற்கள் உண்டாவதற் கான வேலைகள் தொடங்கும். உங்களுடைய குழந்தையின் இனப்பெருக்க உறுப்பு கூட வளர்ச்சி அடையும். ஆனால் இப்போது அல்ட்ரா சவுன்ட் டெக்னிக்கை பயன்படுத்தி கூட என்னக் குழந்தை என்று கண்டுபிடிக்க முடியாது. ரத்த ஓட்ட மண்டலமும், சிறுநீரக மண்டலமும் வேலை செய்ய தொடங்கும். கல்லீரல் பித்த நீரை உற்பத்தி செய்யும்.

3-வது மாத இறுதியில் உங்களுடைய குழந்தை 1 இஞ்ச் நீளமும், சராசரியாக 1 அவுன்ஸ் எடையும் இருக்கும். உங்களுடைய குழந்தை யின் வளர்ச்சி முக்கியமான கட்டத்தில் இருக்கும். 3 மாதம் முடிந்த பிறகு கருக்கலையும் அபாயம் கணிசமான அளவுக்கு குறைந்து விடும்;.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:31 pm

9-வது வாரம்

உங்கள் வயிற்றில் வளரும் முதிர்வுறாத கரு ஒரு ஸ்ட்ராபெர்ரி பழம் அளவுக்கு இருக்கும். அதாவது 0.9 இஞ்ச் முதல் 1.2 இஞ்ச் வரையிலான நீளத்துக்கு வளர்ந்து இருக்கும். முன் கைகளும், கால்களும் நீளமாக இருக்கும். அதே நேரம் கை விரல்கள் சற்றே உள்ளடங்கி உள்ளங்கை உருவாக தொடங்கும். தலை நல்ல நிமிர்ந்த நிலையிலும், கழுத்து நன்றாக வளர்ந்தும் காணப்படும். இப்போது உங்களுடைய குழந்தை தன்னுடைய உடம்பையும், மூட்டுக்களையும் அசைக்கும். இதை அல்ட்ரா சவுன்ட் பரிசோதனையின் போது பார்க்க முடியும். ஆனால் வெளிப்படையாக எந்தவித மாற்றத்தையும் உணர முடியாது.

உங்களுடைய கருப்பை தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் உங்களுடைய இடுப்புப் பகுதி வலுவாக மாறிக் கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். ஆனால் நீங்கள் இந்த நல்ல செய்தியை உங்கள் வாயால் பிறருக்கு சொல்லும்வரை, நீங்கள் கர்ப்பமாகி இருக்கிறீர்கள் என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. உணவைக் கண்டாலே வெறுப்பு, நெஞ்செரிச்சல், உணவு செரிக்காமை, அருவருப்பு அல்லது வாந்தி, வயிற்றில் உப்புசம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதால் இந்த கால கட்டத்தில் உங்களுடைய எடை கொஞ்சமாக தான் அதிகரிக்கும். மெனோபாஸ் கால கட்டத்தின் போது சந்திப்பதை போல மனப் போராட்டம், அழுது புலம்புதல், கண்ணீர் விட்டு அழுதல் ஆகிய அனுபவங்கள் இருக்கும். இதற்காக நீங்கள் பயப்பட வேண்டாம். ஏனெனில் கர்ப்ப கால நிகழ்வுகளில் இவைகள் இயல்பானவைதான்.

டிப்ஸ்

உங்கள் குழந்தையின் பற்களும், எலும்புகளும் நன்றாக வளருவதற் காக நீங்கள் கால்சியம் சத்து அதிகம் நிறைந்த உணவுப் பொருட் களை நிறையச் சாப்பிட வேண்டும். பாலாடைக் கட்டி, சார்டைன்ஸ் எனப்படும் சிறுமீன்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் நிறைய கால்சியம் சத்துக் கிடைக்கும். இது தவிர மருத்துவரைப் போய் பார்க்கும்போது அவரும் தன் பங்குக்கு கால்சியம் சத்து நிறைந்த மருந்து-மாத்திரைகளை தருவார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:31 pm

10-வது வாரம்

வாழ்த்துக்கள்! இதுவரை முதிர்வுறாத கரு என்று அழைக்கப்பட்ட உங்களுடைய குழந்தை இந்த வாரம் முதல் அதிகாரப்பூர்வமாக பூரண வளர்ச்சி அடைந்த கரு அல்லது சிசு என்று அழைக்கப்படுகிறது. இப்போது உங்களுடைய கருவானது தலை முதல் பின்பகுதி வரை 1.25 முதல் 1.68 இஞ்ச் வரையிலான நீளத்தில் காணப்படும். பார்ப்பதற்கு ஒரு சித்திரக் குள்ளன் போல இருக்கும். எடையைப் பொறுத்தவரை ஒரு அவுன்சில் 10-ல் 2 பங்கு இருக்கும். இந்த வாரத்தின் முடிவில் குழந்தைக்கு உடல்பூர்வமாக அதி முக்கியமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும். இதை நீங்கள் உணர்ந்து அதற்கேற்றாற் போல நடந்து கொள்ள வேண்டும். ஆனால் மற்ற வளர்ச்சி முறைகள், மனநிலையை பாதிக்கும் எண்ணங்கள், அறிவுப்பூர்வமான விஷயங்கள், கர்ப்ப காலம் முழுவதும் அப்படியே தொடரும். கண்கள் தோலால் மூடப்பட்டு இமைகள் பிரியத் தொடங்கும்.

நீங்கள் நல்ல தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். பிரசவ கால உடைகள் தற்போதைக்கு உங்களுக்கு தேவைப்படாது என்றாலும் அவற்றை தேடி பத்திரப்படுத்தும் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். மிகவும் சோர்வாகவும் எப்போதும் எதையோ பறிகொடுத்தது போலவோ அல்லது சதா எதைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டோ இருப்பீர்கள். ஆனால் ஒன்றை மட்டும் மனத்தில் கட்டாயம் வைத்துக் கொள்ளுங்கள். இந்த அவஸ்தைகள் எல்லாம் கர்ப்ப காலம் முழுமைக்கும் அப்படியே இருக்காது. இன்னும் கொஞ்சம் நாளைக்கு தான் இப்படி இருக்கும். அதன்பிறகு எல்லாம் சரியாகி விடும் என்ற எண்ணத்தை வலுவாக வைத்துக் கொள்ளுங்கள். (இந்த இடத்தில் கர்ப்பம் தரித்துள்ள வீட்டில் இருக்கும் பெரியவர்கள், கர்ப்பிணி பெண்ணின் கணவன் ஆகியோர் பக்குவமாக, அனுசரணையாக, பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும்)

டிப்ஸ்

இந்த வாரத்தில் இருந்து சிவிஎஸ் எனப்படும் chorionic villus sampling பரிசோதனையை தொடங்க வேண்டும். இந்த சோதனையை 12-வது வாரம் வரை மேற்கொள்வார்கள். இந்த சோதனை மூலம் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பிறவிக் குறைபாடுகள், மரபியல் ரீதியிலான குறைகள் ஏதாவது இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க முடியும். ஆரம்பத்திலேயே இவற்றை கண்டுபிடித்து விடுவதால் அவற்றுக்கு தகுந்தாற் போல மருத்துவர்களால் சிகிச்சை அளித்து எளிதாக குணப்படுத்த முடியும்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:32 pm

11வது வாரம்

இந்த வாரத்தில் உங்களுடைய வயிற்றில் இருக்கும் கருவானது 1.75 இஞ்ச் முதல் 2.4 இஞ்ச் சைசுக்கு அதாவது கிட்டத்தட்ட ஒரு பெரிய எலுமிச்சம் பழம் அளவுக்கு காணப்படும். எடை 1 அவுன்சில் 10-ல் 3 பங்கு இருக்கும். இப்போது உங்களுடைய குழந்தையின் இதயத் துடிப்பை நவீன டோப்ளார் சவுண்ட்-வேவ் ஸ்டெத்தாஸ்கோப் உதவியுடன் கேட்க முடியும். வெளிப்புற வளர்ச்சியைப் பொறுத்த வரை கை விரல் நகங்களும், பிறப்புறுப்பு பகுதிகளும் குறிப்பிடத் தக்க அளவுக்கு வளர்ச்சி அடையும். இந்த வாரத்தின் போது உங்களுடைய குழந்தை உதைக்கும், பெரிதாக திரவங்களை, உணவுகளை விழுங்கும். ஆனால் இன்னும் உங்களால் எதையும் உணர முடியாது.

உங்கள் கரு இடுப்புபெலும்பு குழியை நிரப்பும் அளவுக்கு பெரிதாகி இருக்கும். அடிவயிற்றில் மாறுதல்கள் மூலம் இதை உங்களால் உணர முடியும். உங்களுடைய தலைமுடி, கால் நகங்கள், விரல் நகங்கள், தோல் ஆகியவற்றிலும் சில மாறுதல்கள் ஏற்படும்.

டிப்ஸ்

கர்ப்ப காலத்தின் போது உங்களுடைய பல்லை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். தினந்தோறும் நன்றாக தேய்த்து பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற நேரத்தில் பற்களில் ஈறுகளில் இருந்து ரத்தம் வடியத் தொடங்கும். இதைப் பார்த்து உடனே பயந்து விட வேண்டாம். ஏனெனில் பிரசவ காலத்தில் ஏற்படும் ஹர்மோன் மாற்றங்களும், ரத்த அளவு அதிகரிப்பதுமே இதற்கு காரணம். ஏதாவது பிரச்சினைகள் இருப்பது போல உணர்ந்தால் ஒரு பல் மருத்துவரை உடனே அணுகவும்;

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:32 pm

12-வது வாரம்

இந்த வாரத்தில் உங்களுடைய கருவானது தலை முதல் பின் பாகம் வரை 2.5 இஞ்ச் நீளம் இருக்கும். கருவின் எடை 1 அவுன்சில் 10ல் 3 பாகம் மற்றும் 1 அவுன்சில் பாதி ஆகியவற்றுக்கு இடையில் ஏதாவதொரு அளவில் இருக்கும். இந்த வாரத்தில் உங்களுடைய குழந்தை முழுமையாக உருவாகி இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வயிற்றில் குழந்தை என்ன வேலை செய்து கொண்டிருக்கும் தெரியுமா? இப்போது மட்டுமில்லாமல் பிரசவ காலத்தின் எஞ்சியுள்ள நாட்கள் முழுவதும் பெரிதாகவும், வலுவானதாகவும் மாறும் முக்கிய மான வேலையில் சீரியஸாக கவனம் செலுத்திக் கொண்டிருக்கும். குழந்தை கிட்டத்தட்ட முழுமையாக உருவாகி விட்டபடியினால் இந்த வாரம் கடந்து விட்டால் கருக்கலையும் அபாயம் கணிசமாக குறைந்து விடும்.

வாந்தி-மயக்கம், தலைசுற்றல் உள்ளிட்ட மசக்கை பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக மேம்படும். அதற்குப் பதிலாக எப்போதாவது தலைசுற்றல், தலைவலிகள், உடல் பருமனாதல் போன்ற இடையூறு கள் ஏற்படலாம். இது உங்களுடைய முதல் பிரசவமாக இருந்தாலும் சாp, 2-வது, 3-வது பிரசவமாக இருந்தாலும் சரி, தளர்வான உடையில் இருப்பது மிகவும் நல்லது. உங்களுடைய எடை 3 பவுண்டுகள் முதல் 5 பவுண்டுகள் வரை அதிகரிக்கலாம்.

டிப்ஸ்

இந்த வாரத்தில் பெரும்பாலான பெண்களுக்கு அடி வயிறு, மார்பகங்கள். இடுப்பு, பின்பாகம். ஆகியவை சற்றே பெரிதாகும். இதுபோன்ற பெரிதாகுதல்களை குறைக்கும் என்று கூறி பல்வேறு வகையான கிரீம்களும். ஆயில்களும் விற்கப்படுகின்றன. ஆனால் அவைகள் எதுவும் வேலைக்கு ஆகாது. அவைகளால் எந்த மாற்றத்தையும் உண்டு பண்ண முடியாது. ஆனால் இந்த மாற்றங்கள் வழக்கமாக பிரசவம் முடிந்ததும் மறைந்து பழைய நிலைக்கு வந்து விடும். அதுவரை தொடரும். எந்தளவுக்கு பழைய நிலைக்கு வரும் என்பது உங்களுடைய தோலின் மீட்சித் தன்மையை பொறுத்தே அமையும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:33 pm

உங்களுடைய குழந்தையின் நகங்களும், கால் பாதங்களும் நல்ல வடிவத்துக்கு வந்து இருக்கும். கண் இமைகள், அந்த இமைகளில் இருக்கும் முடிகள், புருவங்கள், நகங்கள், தலைமுடி ஆகியவை உருவாகும். எலும்பு மற்றும் பற்கள் அடர்த்தியாகும். குழந்தைகளிடம் கை சூப்பும் பழக்கம் இருந்தால் பெற்றோர் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படுவர். ஆனால் உண்மையில் இந்த கைசூப்பும் பழக்கம் கருவிலேயே தொடங்கி விடுகிறது. அதுவும் இந்த வாரங்களிலேயே ஆரம்பிக்கிறது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாங்க இந்த வாரங்களில் கருவில் இருக்கும் உங்கள் குழந்தை கை சூப்பும். வாயை அகலமாகத் திறந்து கொட்டாவி விடும். இதுபோன்ற செயல்கள் மூலம் முகம் பெரிதாகும். அதாவது முகம் ஒரு உருவத்தை நோக்கி விரைவாகச் செல்லும்.

நரம்பு மண்டலம் தன்னுடைய இயக்கத்தை ஆரம்பிக்கும். சந்ததியை உருவாக்கும் உறுப்புகளும், பிறப்புறுப்பு பகுதியும் முற்றிலுமாக உருவாகி விட்டிருக்கும். ஆகையினால் அல்ட்ரா சவுன்ட் ஸ்கேனர் பரிசோதனை மூலமாக நீங்கள் கருவில் சுமந்து கொண்டிருப்பது பையனா? பெண்ணா? என்பதை கண்டுபிடிக்க முடியும். முந்தைய வாரங்களை விட உங்களுடைய குழந்தையின் இதயம் துடிப்பதை டோப்ளார் கருவி உதவியுடன் இன்னும் தெளிவாக கேட்க முடியும்

4-வது மாதத்தின் முடிவில் உங்களுடைய குழந்தை 6 இஞ்ச் நீளமும், 4 அவுன்ஸ் எடையும் கொண்டிருக்கும்;.

இனி ஒவ்வொரு வாரமாக என்னென்ன மாற்றங்கள் நடை பெறுகின்றன? என்பது பற்றி பார்ப்போமா?

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:33 pm

13-வது வாரம்

முழுமையான வளர்ச்சி அடைந்துவிட்ட உங்களுடைய கரு பீச் பழம் போல 2.6 இஞ்ச் முதல் 3.1 இஞ்ச் நீளம் வரை இருக்கும். எடையைப் பொறுத்தவரை 1 அவுன்சில் 10-ல் 7 பங்கு மற்றும் 1 அவுன்சில் பாதி பங்கு ஆகியவற்றுக்கு இடையே இருக்கும். இப்போது உடம்பை விட தலை பெரிதாக காணப்படும். பயப்பட வேண்டாம். ஏனெனில் இனி வரும் நாட்களில் உடம்பும் தன்னுடைய வளர்ச்சியை எட்டிப்பிடித்து விடும். இதனால் இந்த நாட்களில் உங்களுடைய குழந்தை வேக வேகமாக வளரும். முகம் கிட்டத்தட்ட மனித உருவத்தை நெருங்கி வரும். கண்கள் நெருக்கமாக நகரும். கால் பாதங்களும், விரல்களும் நன்றாக பிரியும். முட்டுக்கள் மற்றும் மணிக்கட்டு ஆகியவை உருவாகி இருக்கும். பிறப்புறுப்பு பகுதியை தெளிவாக பார்க்க முடியும். உள்ளுறுப்புகள் அவற்றுக்கான இடத்துக்கு சென்று கொண்டிருக்கும்

இதுபோன்ற மாற்றங்களினால் உங்களுடைய கரு நிறையவே வளர்ந்து இருக்கும். இப்போது உங்களுடைய இடுப்பெலும்பு குழிக்குள் முழுவதுமாக நிரம்பி அடிவயிற்றில் மேல்நோக்கி வளர ஆரம்பிக்கும். இப்போது கருவை பார்ப்பதற்கு ஒரு மென்மையான, வழவழப்பான பந்து போல தெரியும். மசக்கை காரணமாக உங்களுடைய எடையில் அதிகரிப்பு எதுவும் இருக்காது. இந்த வாரத்தில் அந்த நிலைமையில் நல்ல மாற்றம் தெரியும்.

டிப்ஸ்

உங்களுடைய உடல் அமைப்பில் வெளிப்படையாக ஏற்படும் மாற்றங்கள் மூலம் நீங்கள் கர்ப்பம் தரித்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் கணவரால் புரிந்து கொள்ள முடியும். இதையடுத்து அதற்கேற்றவாறு அவர் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். இதனால் உங்களுடைய கவலைகள், இன்பங்களை அவரும் பகிர்ந்து கொள்ள முடியும். இதையடுத்து வயிற்றில் உள்ள குழந்தை எப்படி இருக்கிறது, வளர்ச்சி சரியாக இருக்கிறதா? என்றெல்லாம் அவர் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விடுவார். உங்களை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போய் வயிற்றில் உள்ள தன்னுடைய குழந்தையின் இதயத் துடிப்பு எப்படி இருக்கிறது என்று காதார கேட்டு மகிழ்வார். தன்னுடைய உணர்வுகளை உங்களுக்கும் சொல்லி உங்களையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:34 pm

14-வது வாரம்

உங்களுடைய குழந்தை 3.2 அவுன்சில் இருந்து 4.1 அவுன்ஸ் வரை நீளம் இருக்கும். எடையைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 1 அவுன்சை எட்டிப்பிடித்திருக்கும். இதுவரை கழுத்துப் பகுதியில் இருந்து வந்த காதுகள் நகன்று தலைப்பகுதியை நோக்கி செல்லும். அதே நேரம் கழுத்து நீளமாகும். கன்னங்களும் ஒரு அமைப்பை நோக்கி முன்னேறும். மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் உரித்தான பிரத்யேகமான கைரேகையும், முக அமைப்பு ஆகிய எல்லாமே உருவாகி இருக்கும். இப்போது வெளிப்புற தூண்டுதல்களுக்கு உங்களுடைய குழந்தை பதில் தர ஆரம்பிக்கும். அதாவது வெளிப்புற தூண்டுதல்கள் எப்படி எப்படி இருக்கின்றனவோ, அதற்கேற்றாற்போல குழந்தையின் உடல் இயங்கும். உதாரணமாக உங்களுடைய அடி வயிற்றில் இடையூறு கள் ஏதாவது ஏற்படுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது உள்ளே இருக்கும் குழந்தை மேற்படி இடையூறுக்கு தகுந்தாற் போல உடலை நெளித்துக் கொடுக்கும்.

இந்த வாரத்தில் நீங்கள் கட்டாயம் பிரசவ கால உடைகளை அணிய வேண்டும். உங்களுடைய குழந்தையின் வளர்ச்சிக்கு போதிய இடம் கிடைக்கும் வகையில் உங்களுடைய தோல், தசைகள் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போகும். இந்த நேரத்தில் உங்களுக்கு மலச்சிக்கல் வரலாம். இதற்கு பிரசவ கால ஹர்மோன்கள் மலக்குடல் சற்று தளர்வாக்குவதுதான் காரணம்.

டிப்ஸ்

மலச்சிக்கலை தவிர்ப்பதற்கு மிதமான உடற்பயிற்சிகள் செய்யலாம். நிறைய தண்ணீர் குடிக்கலாம். அதுபோல நிறைய காய்கறிகளையும், பழங்களையும் கூடுமானவரை பச்சையாக சாப்பிடலாம்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக