ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவின் கதை

2 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

கருவின் கதை - Page 2 Empty கருவின் கதை

Post by Admin Sun Feb 15, 2009 2:03 pm

First topic message reminder :

பெண்களே! நீங்கள் புதிதாக கர்ப்பம் தரித்தவரா? அல்லது கர்ப்பம் தரிக்க முயற்சி செய்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கும். கர்ப்பம் தரித்த முதல் வாரம் தொடங்கி 9 மாதம் வரை குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும்? அதற்கேற்ப உடலில் நிகழும் மாற்றங்கள் எவை? என்பது போன்ற கேள்வி களுக்கு திருப்தியான விடை கிடைக்காமல் தவிக்கலாம். இதுபோன்ற உங்களின் சந்தேகங்களுக்கு தெள்ளத் தெளிவான பதில்களையும், விளக்கங்களையும், ஒவ்வொரு வாரத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய மருத்துவ முறைகள் பற்றியும் இந்தப் பகுதியில் காணலாம்.


1 முதல் 4 வாரம் வரை


சினையுற்ற கருமுட்டைகள் வளரத் தொடங்குகின்றன. அதனை சுற்றி தண்ணீரால் சூழப்பட்ட ஒரு இறுக்கமான உறை இருக்கும். அந்த உறை முழுவதும் நீர்மத்தால் நிரம்பத் தொடங்கும். இந்த உறைக்கு அம்னியோடிக் சேக் என்று பெயர். வளருகின்ற கருவுக்கு இந்த உறை குஷன் போல அமைகிறது

நச்சுக்கொடி வளருகிறது. இதனை பிளசன்டா என்று சொல்கிறோம். இந்த நச்சுக் கொடிதான் தாய்க்கும், சேய்க்கும் இடையே பாலமாக செயல்படுகிறது. அதாவது குழந்தைக்கு தேவையான சத்துப் பொருட்களை தாயிடமிருந்து சேய்க்கு கடத்துகிறது. அதுபோல சேயிடமிருந்து வேண்டாத கழிவுகளை தாய்க்கு கடத்தி வெளியே அனுப்பும் வேலையை செய்கிறது. பிளசன்டா உருண்டையான குழாய் போல காணப்படும்.
.

முகம் தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்படும். முதல் கட்டமாக கண்களுக்காக இரண்டு பெரிய கருப்பு வளையங்கள் உருவாகும். வாய், கீழ்த்தாடை, தொண்டை வளரத் தொடங்கும். ரத்த செல்கள் குறிப்பிட்ட வடிவத்தை அடைய தொடங்கி, ரத்த ஓட்டம் தொடங்கும்.

முதல் மாதத்தின் முடிவில் உங்கள் குழந்தை வெறும் 1_4 இஞ்ச் நீளம் மட்டுமே இருக்கும். அதாவது ஒரு நெல்லின் அளவை விட சிறியதாக இருக்கும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down


கருவின் கதை - Page 2 Empty Re: கருவின் கதை

Post by Admin Sun Feb 15, 2009 2:28 pm

7-வது வாரம்

இந்த வாரத்தில் முதிர்வுறாத கரு வேகமாக வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும். அளவைப் பொறுத்தவரை தலையில் இருந்து பின்பாகம் வரை 0.44 இஞ்ச் முதல் 0.52 இஞ்ச் வரை ராஸ்ப்பெர்ரி போல இருக்கும். கால் மொட்டுக்கள் சிறிய இறக்கை போல வளர்ச்சி அடையும், கைகள், கால் பாதங்கள், விரல்களும் மெல்ல மெல்ல வளரும். இதயம், நுரையீரல், குடல்வால், நாசித்துவாரம், கண்கள், உள் உறுப்புகள் முன்பு இருந்ததை விட கூடுதலான வளர்ச்சியை பெறும். நரம்புக் குழாயில் இருந்து மூளை, மற்றும் தண்டு வடம் வளரத் தொடங்கும்.

நீங்கள் கர்ப்பம் தரித்திருப்பதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அறிகுறிகள் பலமாக தென்படும். கர்ப்பத்தின் தொடக்க கால அறிகுறிகளான மசக்கை உள்ளிட்ட சிரமங்கள் இந்த வாரத்திலும் காணப்படும். மார்பகங்களில் ஏதோ ஒரு உறுத்தல் இருப்பது போலவும், வழக்கத்துக்கு மாறhக பஞ்சு மாதிரி இருப்பது போலவும் உணர்வு இருக்கும்.

டிப்ஸ்

என்ன சாப்பிட்டாலும் வாந்தி எடுக்க வேண்டி இருக்கும். அதற்காக வயிற்றை வெறும் வயிறாக வைக்க வேண்டாம். வழக்கமான உணவு சாப்பிடுவதற்கு பதிலாக நிறைய பால் குடியுங்கள். பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொண்டு ஸ்நாக்ஸ் போல சாப்பிடலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவில் குறைவு எதுவும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் வெண்ணெய்ப் பொருட்களை மருத்துவர்கள் ஆலோசனையுடன் வேண்டிய அளவுக்கு சாப்பிடலாம்;.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

கருவின் கதை - Page 2 Empty Re: கருவின் கதை

Post by Admin Sun Feb 15, 2009 2:29 pm

8-வது வாரம்

உங்கள் கருப்பையில் இருக்கும் முதிர்வுறாத கரு 6-வது வார வளர்ச்சி நிலையில் ஒரு சின்ன திராட்சைப் பழம் போல காணப்படும். 0.56 தலை முதல் பின்பகுதி வரை இஞ்ச் முதல் 0.8 இஞ்ச் வரை நீளம் இருக்கும். கண் இமைகள், காதுகள் ஆகியவை உருவாகி கொண்டிருக்கும். இந்த வாரத்தில் குழந்தையின் மூக்கு நுனியை கூட காண முடியும். கைகள் நீளமான வளர்ந்து மூட்டுப் பகுதியில் வளைந்து இருக்கும். விரல்கள் இருக்க வேண்டிய இடங்களும், பாதங்களும் ஒரே சமயத்தில் வளர்ச்சி அடையும். இது பார்ப்பதற்கு வி வடிவில் காணப்படும்.

உங்களுடைய அடிவயிற்றிலோ, பக்கவாட்டிலோ திடீரென வலி அல்லது சுளுக்கு ஏற்படுவதை போன்று உணருவீர்கள். ஏனெனில் உங்களுடைய கருப்பை பிரசவ காலத்துக்கு தகுந்தாற் போல இறுக்கமாக மூடிக் கொள்வதால் இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கும். ஆனால் மேற்கண்ட நிகழ்வின் போது பிறப்புறுப்பில் ரத்தம் வடிதல் இருக்குமானால் உடனடியாக மருத்துவரைப் போய் பாருங்கள்.

டிப்ஸ்

இந்த வாரத்தில் மார்பகங்களுக்கு பொருத்தமான நல்ல பிரா போட்டுக் கொள்வது வசதியாக இருக்கும். மேலும் அதன் மூலம் எதிர்காலத்தில் மார்பகங்களில் தொய்வு ஏற்படுவதை தடுக்கவும் முடியும். சுலபமான உடற்பயிற்சிகள் செய்வதன் மார்பக தசைகளில் இறுக்க நிலை தளர்ந்து மிருதுவாகும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

கருவின் கதை - Page 2 Empty Re: கருவின் கதை

Post by Admin Sun Feb 15, 2009 2:30 pm

9 முதல்; 12-வது வாரம் வரை

3-வது மாதம் முடிந்த நிலையில் உங்களுடைய குழந்தை முழு வதுமாக உருவாகி இருக்கும். இப்போது உங்களுடைய குழந்தைக்கு கைகள், முன் கைகள், விரல்கள், கால் பாதம் ஆகியவை இருக்கும். உங்களுடைய அன்பின் சின்னம் தன்னுடைய பிஞ்சுக் கைகளையும், வாயையும் மூடி மூடி திறக்கும். விரல் நகங்களும், குதிங்கால் (கால் இன்னும் வளர்ச்சி அடைந்திருக்காது) நகங்களும் வளரத் தொடங்கும். அதே நேரம் வெளிப்புற காதுகள் உருவாகும். பற்கள் உண்டாவதற் கான வேலைகள் தொடங்கும். உங்களுடைய குழந்தையின் இனப்பெருக்க உறுப்பு கூட வளர்ச்சி அடையும். ஆனால் இப்போது அல்ட்ரா சவுன்ட் டெக்னிக்கை பயன்படுத்தி கூட என்னக் குழந்தை என்று கண்டுபிடிக்க முடியாது. ரத்த ஓட்ட மண்டலமும், சிறுநீரக மண்டலமும் வேலை செய்ய தொடங்கும். கல்லீரல் பித்த நீரை உற்பத்தி செய்யும்.

3-வது மாத இறுதியில் உங்களுடைய குழந்தை 1 இஞ்ச் நீளமும், சராசரியாக 1 அவுன்ஸ் எடையும் இருக்கும். உங்களுடைய குழந்தை யின் வளர்ச்சி முக்கியமான கட்டத்தில் இருக்கும். 3 மாதம் முடிந்த பிறகு கருக்கலையும் அபாயம் கணிசமான அளவுக்கு குறைந்து விடும்;.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

கருவின் கதை - Page 2 Empty Re: கருவின் கதை

Post by Admin Sun Feb 15, 2009 2:31 pm

9-வது வாரம்

உங்கள் வயிற்றில் வளரும் முதிர்வுறாத கரு ஒரு ஸ்ட்ராபெர்ரி பழம் அளவுக்கு இருக்கும். அதாவது 0.9 இஞ்ச் முதல் 1.2 இஞ்ச் வரையிலான நீளத்துக்கு வளர்ந்து இருக்கும். முன் கைகளும், கால்களும் நீளமாக இருக்கும். அதே நேரம் கை விரல்கள் சற்றே உள்ளடங்கி உள்ளங்கை உருவாக தொடங்கும். தலை நல்ல நிமிர்ந்த நிலையிலும், கழுத்து நன்றாக வளர்ந்தும் காணப்படும். இப்போது உங்களுடைய குழந்தை தன்னுடைய உடம்பையும், மூட்டுக்களையும் அசைக்கும். இதை அல்ட்ரா சவுன்ட் பரிசோதனையின் போது பார்க்க முடியும். ஆனால் வெளிப்படையாக எந்தவித மாற்றத்தையும் உணர முடியாது.

உங்களுடைய கருப்பை தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் உங்களுடைய இடுப்புப் பகுதி வலுவாக மாறிக் கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். ஆனால் நீங்கள் இந்த நல்ல செய்தியை உங்கள் வாயால் பிறருக்கு சொல்லும்வரை, நீங்கள் கர்ப்பமாகி இருக்கிறீர்கள் என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. உணவைக் கண்டாலே வெறுப்பு, நெஞ்செரிச்சல், உணவு செரிக்காமை, அருவருப்பு அல்லது வாந்தி, வயிற்றில் உப்புசம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதால் இந்த கால கட்டத்தில் உங்களுடைய எடை கொஞ்சமாக தான் அதிகரிக்கும். மெனோபாஸ் கால கட்டத்தின் போது சந்திப்பதை போல மனப் போராட்டம், அழுது புலம்புதல், கண்ணீர் விட்டு அழுதல் ஆகிய அனுபவங்கள் இருக்கும். இதற்காக நீங்கள் பயப்பட வேண்டாம். ஏனெனில் கர்ப்ப கால நிகழ்வுகளில் இவைகள் இயல்பானவைதான்.

டிப்ஸ்

உங்கள் குழந்தையின் பற்களும், எலும்புகளும் நன்றாக வளருவதற் காக நீங்கள் கால்சியம் சத்து அதிகம் நிறைந்த உணவுப் பொருட் களை நிறையச் சாப்பிட வேண்டும். பாலாடைக் கட்டி, சார்டைன்ஸ் எனப்படும் சிறுமீன்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் நிறைய கால்சியம் சத்துக் கிடைக்கும். இது தவிர மருத்துவரைப் போய் பார்க்கும்போது அவரும் தன் பங்குக்கு கால்சியம் சத்து நிறைந்த மருந்து-மாத்திரைகளை தருவார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

கருவின் கதை - Page 2 Empty Re: கருவின் கதை

Post by Admin Sun Feb 15, 2009 2:31 pm

10-வது வாரம்

வாழ்த்துக்கள்! இதுவரை முதிர்வுறாத கரு என்று அழைக்கப்பட்ட உங்களுடைய குழந்தை இந்த வாரம் முதல் அதிகாரப்பூர்வமாக பூரண வளர்ச்சி அடைந்த கரு அல்லது சிசு என்று அழைக்கப்படுகிறது. இப்போது உங்களுடைய கருவானது தலை முதல் பின்பகுதி வரை 1.25 முதல் 1.68 இஞ்ச் வரையிலான நீளத்தில் காணப்படும். பார்ப்பதற்கு ஒரு சித்திரக் குள்ளன் போல இருக்கும். எடையைப் பொறுத்தவரை ஒரு அவுன்சில் 10-ல் 2 பங்கு இருக்கும். இந்த வாரத்தின் முடிவில் குழந்தைக்கு உடல்பூர்வமாக அதி முக்கியமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும். இதை நீங்கள் உணர்ந்து அதற்கேற்றாற் போல நடந்து கொள்ள வேண்டும். ஆனால் மற்ற வளர்ச்சி முறைகள், மனநிலையை பாதிக்கும் எண்ணங்கள், அறிவுப்பூர்வமான விஷயங்கள், கர்ப்ப காலம் முழுவதும் அப்படியே தொடரும். கண்கள் தோலால் மூடப்பட்டு இமைகள் பிரியத் தொடங்கும்.

நீங்கள் நல்ல தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். பிரசவ கால உடைகள் தற்போதைக்கு உங்களுக்கு தேவைப்படாது என்றாலும் அவற்றை தேடி பத்திரப்படுத்தும் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். மிகவும் சோர்வாகவும் எப்போதும் எதையோ பறிகொடுத்தது போலவோ அல்லது சதா எதைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டோ இருப்பீர்கள். ஆனால் ஒன்றை மட்டும் மனத்தில் கட்டாயம் வைத்துக் கொள்ளுங்கள். இந்த அவஸ்தைகள் எல்லாம் கர்ப்ப காலம் முழுமைக்கும் அப்படியே இருக்காது. இன்னும் கொஞ்சம் நாளைக்கு தான் இப்படி இருக்கும். அதன்பிறகு எல்லாம் சரியாகி விடும் என்ற எண்ணத்தை வலுவாக வைத்துக் கொள்ளுங்கள். (இந்த இடத்தில் கர்ப்பம் தரித்துள்ள வீட்டில் இருக்கும் பெரியவர்கள், கர்ப்பிணி பெண்ணின் கணவன் ஆகியோர் பக்குவமாக, அனுசரணையாக, பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும்)

டிப்ஸ்

இந்த வாரத்தில் இருந்து சிவிஎஸ் எனப்படும் chorionic villus sampling பரிசோதனையை தொடங்க வேண்டும். இந்த சோதனையை 12-வது வாரம் வரை மேற்கொள்வார்கள். இந்த சோதனை மூலம் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பிறவிக் குறைபாடுகள், மரபியல் ரீதியிலான குறைகள் ஏதாவது இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க முடியும். ஆரம்பத்திலேயே இவற்றை கண்டுபிடித்து விடுவதால் அவற்றுக்கு தகுந்தாற் போல மருத்துவர்களால் சிகிச்சை அளித்து எளிதாக குணப்படுத்த முடியும்
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

கருவின் கதை - Page 2 Empty Re: கருவின் கதை

Post by Admin Sun Feb 15, 2009 2:32 pm

11வது வாரம்

இந்த வாரத்தில் உங்களுடைய வயிற்றில் இருக்கும் கருவானது 1.75 இஞ்ச் முதல் 2.4 இஞ்ச் சைசுக்கு அதாவது கிட்டத்தட்ட ஒரு பெரிய எலுமிச்சம் பழம் அளவுக்கு காணப்படும். எடை 1 அவுன்சில் 10-ல் 3 பங்கு இருக்கும். இப்போது உங்களுடைய குழந்தையின் இதயத் துடிப்பை நவீன டோப்ளார் சவுண்ட்-வேவ் ஸ்டெத்தாஸ்கோப் உதவியுடன் கேட்க முடியும். வெளிப்புற வளர்ச்சியைப் பொறுத்த வரை கை விரல் நகங்களும், பிறப்புறுப்பு பகுதிகளும் குறிப்பிடத் தக்க அளவுக்கு வளர்ச்சி அடையும். இந்த வாரத்தின் போது உங்களுடைய குழந்தை உதைக்கும், பெரிதாக திரவங்களை, உணவுகளை விழுங்கும். ஆனால் இன்னும் உங்களால் எதையும் உணர முடியாது.

உங்கள் கரு இடுப்புபெலும்பு குழியை நிரப்பும் அளவுக்கு பெரிதாகி இருக்கும். அடிவயிற்றில் மாறுதல்கள் மூலம் இதை உங்களால் உணர முடியும். உங்களுடைய தலைமுடி, கால் நகங்கள், விரல் நகங்கள், தோல் ஆகியவற்றிலும் சில மாறுதல்கள் ஏற்படும்.

டிப்ஸ்

கர்ப்ப காலத்தின் போது உங்களுடைய பல்லை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். தினந்தோறும் நன்றாக தேய்த்து பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற நேரத்தில் பற்களில் ஈறுகளில் இருந்து ரத்தம் வடியத் தொடங்கும். இதைப் பார்த்து உடனே பயந்து விட வேண்டாம். ஏனெனில் பிரசவ காலத்தில் ஏற்படும் ஹர்மோன் மாற்றங்களும், ரத்த அளவு அதிகரிப்பதுமே இதற்கு காரணம். ஏதாவது பிரச்சினைகள் இருப்பது போல உணர்ந்தால் ஒரு பல் மருத்துவரை உடனே அணுகவும்;
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

கருவின் கதை - Page 2 Empty Re: கருவின் கதை

Post by Admin Sun Feb 15, 2009 2:32 pm

12-வது வாரம்

இந்த வாரத்தில் உங்களுடைய கருவானது தலை முதல் பின் பாகம் வரை 2.5 இஞ்ச் நீளம் இருக்கும். கருவின் எடை 1 அவுன்சில் 10ல் 3 பாகம் மற்றும் 1 அவுன்சில் பாதி ஆகியவற்றுக்கு இடையில் ஏதாவதொரு அளவில் இருக்கும். இந்த வாரத்தில் உங்களுடைய குழந்தை முழுமையாக உருவாகி இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வயிற்றில் குழந்தை என்ன வேலை செய்து கொண்டிருக்கும் தெரியுமா? இப்போது மட்டுமில்லாமல் பிரசவ காலத்தின் எஞ்சியுள்ள நாட்கள் முழுவதும் பெரிதாகவும், வலுவானதாகவும் மாறும் முக்கிய மான வேலையில் சீரியஸாக கவனம் செலுத்திக் கொண்டிருக்கும். குழந்தை கிட்டத்தட்ட முழுமையாக உருவாகி விட்டபடியினால் இந்த வாரம் கடந்து விட்டால் கருக்கலையும் அபாயம் கணிசமாக குறைந்து விடும்.

வாந்தி-மயக்கம், தலைசுற்றல் உள்ளிட்ட மசக்கை பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக மேம்படும். அதற்குப் பதிலாக எப்போதாவது தலைசுற்றல், தலைவலிகள், உடல் பருமனாதல் போன்ற இடையூறு கள் ஏற்படலாம். இது உங்களுடைய முதல் பிரசவமாக இருந்தாலும் சாp, 2-வது, 3-வது பிரசவமாக இருந்தாலும் சரி, தளர்வான உடையில் இருப்பது மிகவும் நல்லது. உங்களுடைய எடை 3 பவுண்டுகள் முதல் 5 பவுண்டுகள் வரை அதிகரிக்கலாம்.

டிப்ஸ்

இந்த வாரத்தில் பெரும்பாலான பெண்களுக்கு அடி வயிறு, மார்பகங்கள். இடுப்பு, பின்பாகம். ஆகியவை சற்றே பெரிதாகும். இதுபோன்ற பெரிதாகுதல்களை குறைக்கும் என்று கூறி பல்வேறு வகையான கிரீம்களும். ஆயில்களும் விற்கப்படுகின்றன. ஆனால் அவைகள் எதுவும் வேலைக்கு ஆகாது. அவைகளால் எந்த மாற்றத்தையும் உண்டு பண்ண முடியாது. ஆனால் இந்த மாற்றங்கள் வழக்கமாக பிரசவம் முடிந்ததும் மறைந்து பழைய நிலைக்கு வந்து விடும். அதுவரை தொடரும். எந்தளவுக்கு பழைய நிலைக்கு வரும் என்பது உங்களுடைய தோலின் மீட்சித் தன்மையை பொறுத்தே அமையும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

கருவின் கதை - Page 2 Empty Re: கருவின் கதை

Post by Admin Sun Feb 15, 2009 2:33 pm

உங்களுடைய குழந்தையின் நகங்களும், கால் பாதங்களும் நல்ல வடிவத்துக்கு வந்து இருக்கும். கண் இமைகள், அந்த இமைகளில் இருக்கும் முடிகள், புருவங்கள், நகங்கள், தலைமுடி ஆகியவை உருவாகும். எலும்பு மற்றும் பற்கள் அடர்த்தியாகும். குழந்தைகளிடம் கை சூப்பும் பழக்கம் இருந்தால் பெற்றோர் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படுவர். ஆனால் உண்மையில் இந்த கைசூப்பும் பழக்கம் கருவிலேயே தொடங்கி விடுகிறது. அதுவும் இந்த வாரங்களிலேயே ஆரம்பிக்கிறது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாங்க இந்த வாரங்களில் கருவில் இருக்கும் உங்கள் குழந்தை கை சூப்பும். வாயை அகலமாகத் திறந்து கொட்டாவி விடும். இதுபோன்ற செயல்கள் மூலம் முகம் பெரிதாகும். அதாவது முகம் ஒரு உருவத்தை நோக்கி விரைவாகச் செல்லும்.

நரம்பு மண்டலம் தன்னுடைய இயக்கத்தை ஆரம்பிக்கும். சந்ததியை உருவாக்கும் உறுப்புகளும், பிறப்புறுப்பு பகுதியும் முற்றிலுமாக உருவாகி விட்டிருக்கும். ஆகையினால் அல்ட்ரா சவுன்ட் ஸ்கேனர் பரிசோதனை மூலமாக நீங்கள் கருவில் சுமந்து கொண்டிருப்பது பையனா? பெண்ணா? என்பதை கண்டுபிடிக்க முடியும். முந்தைய வாரங்களை விட உங்களுடைய குழந்தையின் இதயம் துடிப்பதை டோப்ளார் கருவி உதவியுடன் இன்னும் தெளிவாக கேட்க முடியும்

4-வது மாதத்தின் முடிவில் உங்களுடைய குழந்தை 6 இஞ்ச் நீளமும், 4 அவுன்ஸ் எடையும் கொண்டிருக்கும்;.

இனி ஒவ்வொரு வாரமாக என்னென்ன மாற்றங்கள் நடை பெறுகின்றன? என்பது பற்றி பார்ப்போமா?
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

கருவின் கதை - Page 2 Empty Re: கருவின் கதை

Post by Admin Sun Feb 15, 2009 2:33 pm

13-வது வாரம்

முழுமையான வளர்ச்சி அடைந்துவிட்ட உங்களுடைய கரு பீச் பழம் போல 2.6 இஞ்ச் முதல் 3.1 இஞ்ச் நீளம் வரை இருக்கும். எடையைப் பொறுத்தவரை 1 அவுன்சில் 10-ல் 7 பங்கு மற்றும் 1 அவுன்சில் பாதி பங்கு ஆகியவற்றுக்கு இடையே இருக்கும். இப்போது உடம்பை விட தலை பெரிதாக காணப்படும். பயப்பட வேண்டாம். ஏனெனில் இனி வரும் நாட்களில் உடம்பும் தன்னுடைய வளர்ச்சியை எட்டிப்பிடித்து விடும். இதனால் இந்த நாட்களில் உங்களுடைய குழந்தை வேக வேகமாக வளரும். முகம் கிட்டத்தட்ட மனித உருவத்தை நெருங்கி வரும். கண்கள் நெருக்கமாக நகரும். கால் பாதங்களும், விரல்களும் நன்றாக பிரியும். முட்டுக்கள் மற்றும் மணிக்கட்டு ஆகியவை உருவாகி இருக்கும். பிறப்புறுப்பு பகுதியை தெளிவாக பார்க்க முடியும். உள்ளுறுப்புகள் அவற்றுக்கான இடத்துக்கு சென்று கொண்டிருக்கும்

இதுபோன்ற மாற்றங்களினால் உங்களுடைய கரு நிறையவே வளர்ந்து இருக்கும். இப்போது உங்களுடைய இடுப்பெலும்பு குழிக்குள் முழுவதுமாக நிரம்பி அடிவயிற்றில் மேல்நோக்கி வளர ஆரம்பிக்கும். இப்போது கருவை பார்ப்பதற்கு ஒரு மென்மையான, வழவழப்பான பந்து போல தெரியும். மசக்கை காரணமாக உங்களுடைய எடையில் அதிகரிப்பு எதுவும் இருக்காது. இந்த வாரத்தில் அந்த நிலைமையில் நல்ல மாற்றம் தெரியும்.

டிப்ஸ்

உங்களுடைய உடல் அமைப்பில் வெளிப்படையாக ஏற்படும் மாற்றங்கள் மூலம் நீங்கள் கர்ப்பம் தரித்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் கணவரால் புரிந்து கொள்ள முடியும். இதையடுத்து அதற்கேற்றவாறு அவர் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். இதனால் உங்களுடைய கவலைகள், இன்பங்களை அவரும் பகிர்ந்து கொள்ள முடியும். இதையடுத்து வயிற்றில் உள்ள குழந்தை எப்படி இருக்கிறது, வளர்ச்சி சரியாக இருக்கிறதா? என்றெல்லாம் அவர் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விடுவார். உங்களை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போய் வயிற்றில் உள்ள தன்னுடைய குழந்தையின் இதயத் துடிப்பு எப்படி இருக்கிறது என்று காதார கேட்டு மகிழ்வார். தன்னுடைய உணர்வுகளை உங்களுக்கும் சொல்லி உங்களையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

கருவின் கதை - Page 2 Empty Re: கருவின் கதை

Post by Admin Sun Feb 15, 2009 2:34 pm

14-வது வாரம்

உங்களுடைய குழந்தை 3.2 அவுன்சில் இருந்து 4.1 அவுன்ஸ் வரை நீளம் இருக்கும். எடையைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 1 அவுன்சை எட்டிப்பிடித்திருக்கும். இதுவரை கழுத்துப் பகுதியில் இருந்து வந்த காதுகள் நகன்று தலைப்பகுதியை நோக்கி செல்லும். அதே நேரம் கழுத்து நீளமாகும். கன்னங்களும் ஒரு அமைப்பை நோக்கி முன்னேறும். மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் உரித்தான பிரத்யேகமான கைரேகையும், முக அமைப்பு ஆகிய எல்லாமே உருவாகி இருக்கும். இப்போது வெளிப்புற தூண்டுதல்களுக்கு உங்களுடைய குழந்தை பதில் தர ஆரம்பிக்கும். அதாவது வெளிப்புற தூண்டுதல்கள் எப்படி எப்படி இருக்கின்றனவோ, அதற்கேற்றாற்போல குழந்தையின் உடல் இயங்கும். உதாரணமாக உங்களுடைய அடி வயிற்றில் இடையூறு கள் ஏதாவது ஏற்படுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது உள்ளே இருக்கும் குழந்தை மேற்படி இடையூறுக்கு தகுந்தாற் போல உடலை நெளித்துக் கொடுக்கும்.

இந்த வாரத்தில் நீங்கள் கட்டாயம் பிரசவ கால உடைகளை அணிய வேண்டும். உங்களுடைய குழந்தையின் வளர்ச்சிக்கு போதிய இடம் கிடைக்கும் வகையில் உங்களுடைய தோல், தசைகள் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போகும். இந்த நேரத்தில் உங்களுக்கு மலச்சிக்கல் வரலாம். இதற்கு பிரசவ கால ஹர்மோன்கள் மலக்குடல் சற்று தளர்வாக்குவதுதான் காரணம்.

டிப்ஸ்

மலச்சிக்கலை தவிர்ப்பதற்கு மிதமான உடற்பயிற்சிகள் செய்யலாம். நிறைய தண்ணீர் குடிக்கலாம். அதுபோல நிறைய காய்கறிகளையும், பழங்களையும் கூடுமானவரை பச்சையாக சாப்பிடலாம்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

கருவின் கதை - Page 2 Empty Re: கருவின் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum